என் மலர்
நீங்கள் தேடியது "special train"
- மதுரையில் இருந்து புறப்பட்டு காச்சிகுடா செல்லும் சிறப்பு ரெயில், வரும் ஏப்ரல் 9-ந்தேதி முதல் மே 7-ந்தேதி வரையிலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
- விழுப்புரத்தில் இருந்து புறப்பட்டு சார்லபள்ளி செல்லும் சிறப்பு ரெயில், வரும் ஏப்ரல் 4-ந்தேதி முதல் மே 2-ந்தேதி வரையிலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
சென்னை:
கோடை காலத்தை முன்னிட்டு பயணிகள் வசதிக்காகவும், கூட்ட நெரிசலை தவிர்க்கவும் ஏற்கனவே இயக்கப்பட்டு வந்த சிறப்பு ரெயில்கள் சேவை நீட்டிக்கப்படுவதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
* தெலுங்கானா மாநிலம் காச்சிகுடாவில் இருந்து புறப்பட்டு மதுரை வரும் சிறப்பு ரெயில் (வண்டி எண்.07191), வரும் ஏப்ரல் 7-ந்தேதி முதல் மே 5-ந்தேதி வரையிலும் (திங்கட்கிழமை மட்டும்), மறுமார்க்கமாக, மதுரையில் இருந்து புறப்பட்டு காச்சிகுடா செல்லும் சிறப்பு ரெயில் (07192), வரும் ஏப்ரல் 9-ந்தேதி முதல் மே 7-ந்தேதி வரையிலும் (புதன்கிழமை மட்டும்) நீட்டிக்கப்பட்டுள்ளது.
* மகாராஷ்டிர மாநிலம் நாந்தேட்டில் இருந்து புறப்பட்டு ஈரோடு வரும் சிறப்பு ரெயில் (07189), வரும் ஏப்ரல் 4-ந்தேதி முதல் மே 2-ந்தேதி வரையிலும் (வெள்ளிக்கிழமை மட்டும்), மறுமார்க்கமாக, ஈரோட்டில் இருந்து புறப்பட்டு நாந்தேட் செல்லும் சிறப்பு ரெயில் (07190), வரும் ஏப்ரல் 6-ந்தேதி முதல் மே 4-ந்தேதி வரையிலும் (ஞாயிற்றுக்கிழமை மட்டும்) நீட்டிக்கப்பட்டுள்ளது.
* காச்சிக்குடாவில் இருந்து புறப்பட்டு நாகர்கோவில் வரும் சிறப்பு ரெயில் (07435), வரும் ஏப்ரல் 4-ந்தேதி முதல் மே 2-ந்தேதி வரையிலும் (வெள்ளிக்கிழமை மட்டும்), மறுமார்க்கமாக, நாகர்கோவிலில் இருந்து புறப்பட்டு காச்சிக்குடா செல்லும் சிறப்பு ரெயில் (07436), வரும் ஏப்ரல் 6-ந்தேதி முதல் மே 4-ந்தேதி வரையிலும் (ஞாயிற்றுக்கிழமை) நீட்டிக்கப்பட்டுள்ளது.
* ஐதராபாத் சார்லபள்ளியில் இருந்து புறப்பட்டு விழுப்புரம் வரும் சிறப்பு ரெயில் (07601), வரும் ஏப்ரல் 3-ந்தேதி முதல் மே 1-ந்தேதி வரையிலும் (வியாழக்கிழமை மட்டும்), மறுமார்க்கமாக, விழுப்புரத்தில் இருந்து புறப்பட்டு சார்லபள்ளி செல்லும் சிறப்பு ரெயில் (07602), வரும் ஏப்ரல் 4-ந்தேதி முதல் மே 2-ந்தேதி வரையிலும் (வெள்ளிக்கிழமை மட்டும்) நீட்டிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- திருச்சி-தாம்பரம் இடையே 29-ந்தேதி முதல் 31-ந்தேதி வரை சிறப்பு ரெயில்
- படுக்கை வசதி கொண்ட 14 பெட்டிகள், இரு பொதுப்பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும்.
சென்னை:
தெற்கு ரெயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ரம்ஜான் பண்டிகையை யொட்டி தாம்பரத்தில் இருந்து மாா்ச் 28-ந்தேதி மாலை 6 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (எண்: 06037) மறுநாள் காலை 8 மணிக்கு கன்னியாகுமரி சென்றடையும்.
மறுமாா்க்கமாக கன்னியாகுமரியில் இருந்து 31-ந் தேதி இரவு 8.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (எண்: 06038) மறுநாள் காலை 8.55 மணிக்கு தாம்பரம் வந்தடையும். இதில் படுக்கை வசதி கொண்ட 14 பெட்டிகள், இரு பொதுப்பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும்.
இந்த ரெயில் செங்கல்பட்டு, மேல்மருவத்தூா், விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகா், சாத்தூா், கோவில்பட்டி, நெல்லை, வள்ளியூா், நாகா்கோவில் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.
திருச்சி-தாம்பரம் இடையே 29-ந்தேதி முதல் 31-ந்தேதி வரை சிறப்பு ரெயில் இயக்கப்படும். திருச்சியில் இருந்து காலை 5.35 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (எண்: 06048) பகல் 12.30 மணிக்கு தாம்பரம் சென்றடையும்.
மறுமாா்க்கமாக தாம்பரத்தில் இருந்து பிற்பகல் 3.45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (எண்: 06047) இரவு 10.40 மணிக்கு திருச்சி சென்றடையும். இதில் இருக்கை வசதி கொண்ட இரு ஏசி வகுப்பு பெட்டிகள் மற்றும் 10 சாதாரண பெட்டிகள், 6 பொதுப் பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும்.
இந்த ரெயில் தஞ்சாவூா், பாபநாசம், கும்பகோணம், மயிலாடுதுறை, சீா்காழி, சிதம்பரம், திருப்பாதிரிப்பு லியூா், பண்ருட்டி, விழுப்புரம், திண்டிவனம், மேல்மரு வத்தூா், செங்கல்பட்டு ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.
சென்னை-பெங்களூரு
பெங்களூரில் இருந்து 28-ந்தேதி முதல் காலை 8.05 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (எண்: 07319) பிற்பகல் 2.40 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும். மறுமாா்க்கமாக சென்னை சென்ட்ரலில் இருந்து பிற்பகல் 3.40 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (எண்: 07320) இரவு 10.50 மணிக்கு பெங்களூரு சென்றடையும்.
இதில் 3 ஏசி வகுப்பு பெட்டிகள், படுக்கை வசதி கொண்ட 11 பெட்டிகள், 4 பொதுப் பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும். இந்த ரெயில் யஷ்வந்த்பூா், கிருஷ்ணராஜபுரம், பங்காருப்பேட்டை, ஜோலார் பேட்டை, ஆம்பூா், குடியாத்தம், காட்பாடி, சோளிங்கபுரம், அரக்கோணம், திருவள்ளூா், பெரம்பூா் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- மைசூருவில் இருந்து கார்வாருக்கும் சிறப்பு ரெயில்கள் இயக்க தென்மேற்கு ரெயில்வே முடிவு செய்துள்ளது.
- ரெயில்கள் இருமார்க்கமாகவும் மண்டியா, யஷ்வந்தபுரம், குனிகல், ஹாசன், ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.
யுகாதி, ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் பெங்களூருவில் இருந்து சென்னை, கலபுரகிக்கும், மைசூருவில் இருந்து கார்வாருக்கும் சிறப்பு ரெயில்கள் இயக்க தென்மேற்கு ரெயில்வே முடிவு செய்துள்ளது. இதுகுறித்து தென்மேற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
* கே.எஸ்.ஆர். பெங்களூரு-டாக்டர் எம்.ஜி.ஆர். சென்னை சென்டிரல் சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்: 07319) வருகிற 28-ந்தேதி காலை 8.05 மணிக்கு பெங்களூருவில் இருந்து புறப்பட்டு மதியம் 2.40 மணிக்கு சென்னையை சென்றடையும்.
* டாக்டர் எம்.ஜி.ஆர். சென்னை சென்டிரல்-கே.எஸ்.ஆர். பெங்களூரு சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் (07320) அதே நாளில் பகல் 3.40 மணிக்கு சென்னையில் இருந்து புறப்பட்டு இரவு 10.50 மணிக்கு பெங்களூருவை வந்தடையும். இந்த ரெயில்கள் இருமார்க்கமாகவும் யஷ்வந்தபுரம், கே.ஆர்.புரம், பங்காருபேட்டை, ஜோலார்பேட்டை, ஆம்பூர், குடியாத்தம், காட்பாடி, சோளிங்கர், அரக்கோணம், திருவள்ளூர், பெரம்பூர் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.
* எஸ்.எம்.வி.டி. பெங்களூரு-கலபுரகி சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் (06519) வருகிற 28-ந்தேதி இரவு 9.15 மணிக்கு பெங்களூருவில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 7.40 மணிக்கு கலபுரகியை சென்றடையும்.
* கலபுரகி-எஸ்.எம்.வி.டி. பெங்களூரு சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் (06520) வருகிற 29-ந்தேதி காலை 9.35 மணிக்கு கலபுரகியில் இருந்து புறப்பட்டு அதே நாள் இரவு 8 மணிக்கு பெங்களூருவை வந்தடையும்.
இந்த ரெயில்கள் இருமார்க்கமாகவும் எலகங்கா, தர்மாவரம், அனந்தபூர், குண்டக்கல், அதோனி, மந்த்ராலயம் ரோடு, ராய்ச்சூர், கிருஷ்ணா, யாதகிரி, சகாபாத் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.
* மைசூரு-கார்வார் சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் (06203) வருகிற 28-ந்தேதி இரவு 9.35 மணிக்கு மைசூருவில் இருந்து புறப்பட்டு மறுநாள் மாலை 4.15 மணிக்கு கார்வாரை சென்றடையும்.
* கார்வார்-மைசூரு சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் (06204) வருகிற 29-ந்தேதி இரவு 11.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் மாலை 4.40 மணிக்கு மைசூருவுக்கு செல்லும்.
இந்த ரெயில்கள் இருமார்க்கமாகவும், மண்டியா, கே.எஸ்.ஆர். பெங்களூரு, யஷ்வந்தபுரம், குனிகல், ஹாசன், சக்லேஷ்புரா, சுப்பிரமணியா ரோடு, கபகாபுத்தூர், பண்ட்வால், சூரத்கல், முல்கி, உடுப்பி, பர்கூர், குந்தாபுரா, பைந்தூர், பட்கல், முருடேஸ்வர், ஒன்னாவர், குமட்டா, கோகர்ணா, அங்கோலா ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- சென்னை சென்ட்ரலில் இருந்து வரும் 22, 26, 29, ஏப்ரல் 2 ஆகிய தேதிகளில் இரவு 11.45 மணிக்கு சிறப்பு ரெயில் புறப்படும்.
- ஷாலிமரில் இருந்து சென்னைக்கு வருகிற 31-ந்தேதி, எப்ரல் 7-ந்தேதிகளில் பிற்பகல் 2.20 மணிக்கு சிறப்பு ரெயில் இயக்கப்படும்.
ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு பயணிகள் கூட்ட நெரிசலை குறைக்க சென்னை சென்ட்ரல் - போத்தனூர் இடையே சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது.
இந்த ரெயில் வருகிற 30-ந்தேதி இரவு 11.20 மணிக்கு புறப்பட்டு பெரம்பூர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர் வழியே மறுநாள் காலை 8 மணிக்கு போத்தனுாரை அடையும். மறுமார்க்க ரெயில் வருகிற 31-ந்தேதி இரவு 11.20 மணிக்கு புறப்பட்டு அடுத்த நாள் காலை 8.20 மணிக்கு சென்னையை வந்தடையும்.
சென்னை சென்ட்ரலில் இருந்து வரும் 22, 26, 29, ஏப்ரல் 2 ஆகிய தேதிகளில் இரவு 11.45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில், அடுத்த 3-வது நாளில் காலை 7.15 மணிக்கு மேற்கு வங்காள மாநிலம் சந்திரகாச்சிக்கு செல்லும்.
சந்திரகாச்சியில் இருந்து வருகிற 24, 28, 31, ஏப்ரல் 4-ந்தேதிகளில் காலை 9 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில், மறுநாள் மாலை 3.30 மணிக்கு சென்னை சென்ட்ரல் வரும்.
இதேபோல் ஷாலிமரில் இருந்து சென்னைக்கு வருகிற 31-ந்தேதி, எப்ரல் 7-ந்தேதிகளில் பிற்பகல் 2.20 மணிக்கு சிறப்பு ரெயில் இயக்கப்படும்.
- கோடை விடுமுறை கூட்ட நெரிசலை சமாளிக்க சரலபள்ளியில் இருந்து மதுரை வழியாக கன்னியாகுமரிக்கு வாராந்திர சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.
- ஜூன் மாதம் 6, 13, 20, 27-ந் தேதிகளில் வெள்ளிக்கிழமை தோறும் அதிகாலை 5.15 மணிக்கு புறப்பட்டு காலை 9.50 மணிக்கு மதுரை ரெயில் நிலையம் வந்தடைகிறது.
மதுரை:
தென்மத்திய ரெயில்வே மண்டலம் சார்பில், கோடை விடுமுறை கூட்ட நெரிசலை சமாளிக்க தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத் அருகில் உள்ள சரலபள்ளியில் இருந்து மதுரை வழியாக கன்னியாகுமரிக்கு வாராந்திர சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. அதன்படி, இந்த ரெயில் (வ.எண்.07230) சரலபள்ளியில் இருந்து அடுத்த மாதம் 2-ந் தேதி, 9, 16, 23, 30-ந் தேதி, மே மாதம் 7-ந் தேதி, 14, 21, 28-ந் தேதி, ஜூன் மாதம் 4, 11, 18, 25-ந் தேதிகளில் புதன்கிழமை தோறும் இரவு 9.50 மணிக்கு புறப்பட்டு வியாழக்கிழமை இரவு 9.45 மணிக்கு மதுரை ரெயில் நிலையம் வருகிறது.
நள்ளிரவு 2.30 மணிக்கு கன்னியாகுமரி சென்றடைகிறது. மறுமார்க்கத்தில் இந்த சிறப்பு ரெயில் (வ.எண்.07229) கன்னியாகுமரியில் இருந்து அடுத்த மாதம் 4, 11, 18, 25-ந் தேதி, மே மாதம் 2, 9, 16, 23, 30-ந் தேதி, ஜூன் மாதம் 6, 13, 20, 27-ந் தேதிகளில் வெள்ளிக்கிழமை தோறும் அதிகாலை 5.15 மணிக்கு புறப்பட்டு காலை 9.50 மணிக்கு மதுரை ரெயில் நிலையம் வந்தடைகிறது. சனிக்கிழமை பகல் 11.40 மணிக்கு சரலப்பள்ளி சென்றடைகிறது.
இந்த ரெயில்கள் நளகொண்டா, மிரியால்குடா, நடிக்குடே, சட்டெனபள்ளி, குண்டூர், தெனாலி, சிராலா, ஓங்கோல், நெல்லூர், ரேணிகுண்டா, திருத்தணி, காட்பாடி, திருவண்ணாமலை, விழுப்புரம், திருப்பாதிரிப்புலியூர் (கடலூர்), சிதம்பரம், மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி, திண்டுக்கல், கொடைக்கானல் ரோடு, மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, நெல்லை, வள்ளியூர், நாகர்கோவில் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். இதில் ஒரு 2-அடுக்கு குளிரூட்டப்பட்ட பெட்டி, 5 மூன்றடுக்கு குளிரூட்டப்பட்ட பெட்டிகள், 10 இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகள், 2 பொது பெட்டிகள், 2 மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டிகள் இணைக்கப்பட்டு இருக்கும்.
- சனிக்கிழமைதோறும் புறப்படும் இந்த ெரயில் திங்கட்கிழமை சென்று சேரும். முன்னதாக நவம்பர் 4-ந் தேதி, ஹஸூர்
- நடப்பாண்டு டிசம்பர் 30-ந் தேதி வரை இரு மார்க்கத்திலும் இந்த ெரயில் இயக்கம் தொடருமென அறிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர்:
பயணிகள் கூட்ட நெரிசலை சமாளிக்க எர்ணாகுளம் - ஹஸூர் சாஹிப் நாந்தேட் இடையே வாராந்திர சிறப்பு ெரயில் அறிவிக்கப்பட்டுள்ளது.
நவம்பர் 5-ந் தேதி கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் இருந்து மகாராஷ்டிரா மாநிலம் ஹஸூர் சாஹிப் நாந்தேட்க்கு சிறப்பு ெரயில் புறப்படுகிறது. எர்ணாகுளத்தில் புறப்படும் ெரயில் ஆலுவா, திருச்சூர், பாலக்காடு, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், ரேணிகுண்டா, குண்டூர், நெல்லூர் உள்ளிட்ட ெரயில் நிலையங்களில் நின்று வடமாநிலங்கள் வழியாக பயணித்து, மகாராஷ்டிரா மாநிலம் ஹஸூர் சாஹிப் நாந்தேட் சென்றடையும். சனிக்கிழமைதோறும் புறப்படும் இந்த ெரயில் திங்கட்கிழமை சென்று சேரும்.
முன்னதாக நவம்பர் 4-ந் தேதி, ஹஸூர் சாஹிப் நாந்தேட்டில் இருந்து எர்ணாகுளத்துக்கு சிறப்பு ெரயில் புறப்படும். நடப்பாண்டு டிசம்பர் 30-ந் தேதி வரை இரு மார்க்கத்திலும் இந்த ெரயில் இயக்கம் தொடருமென அறிவிக்கப்பட்டுள்ளது. சிறப்பு ெரயிலில்7 ஏ.சி., 7படுக்கை வசதி, இரண்டு பொது பெட்டி உள்ளிட்ட 20 பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும் என சேலம் கோட்ட ெரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
- மதுரை, விருதுநகர் கோவில்பட்டி வழியாக மைசூர்-தூத்துக்குடி இடையே சிறப்பு ெரயில் 4-ந் தேதி முதல் இயக்கப்படுகிறது.
- மைசூர்- தூத்துக்குடி இடையே சிறப்பு ரெயிலை இயக்க தென்மேற்கு ரெயில்வே முடிவு செய்து உள்ளது.
மதுரை
மைசூர்- தூத்துக்குடி இடையே சிறப்பு ரெயிலை இயக்க தென்மேற்கு ரெயில்வே முடிவு செய்து உள்ளது. அதன்படி மைசூர் - மைசூரில் இருந்து வருகிற 4, 11, 18-ந் தேதி வரும் வெள்ளிக்கிழமைகளில் மதியம் 12.05 மணிக்கு புறப்படும் ரெயில், அடுத்தநாள் அதிகாலை 5 மணிக்கு தூத்துக்குடியை சென்றடையும்.
மறுமார்க்கத்தில் தூத்துக்குடியில் இருந்து வருகிற 5, 12, 19-ந் தேதி சனிக்கிழமைகளில் மாலை 3 மணிக்கு புறப்படும் ரெயில், அடுத்தநாள் காலை 8.30 மணிக்கு மைசூரை சென்றடையும். இந்த ரெயில்கள் யெலியூர், மாண்டியா, பெங்களூர், பெங்களூர் கண்டோன்மென்ட், ஓசூர், தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், கோவில்பட்டி ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த தகவலை மதுரை கோட்ட ரெயில்வே செய்தி தொடர்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.
- சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, பாலக்காடு, திருச்சூர் உள்ளிட்ட நிலையங்கள் வழியாக ரெயில் இயக்கப்படும்.
- வருகிற 8, 15-ந் தேதிகளில் இச்சிறப்பு ெரயில் இயக்கப்படும்.
திருப்பூர்:
வடமாநிலங்களில் தொடர் பண்டிகை எதிரொலியாக வருகிற 6, 13, 20 ஆகிய தேதிகளில், கன்னியாகுமரியில் இருந்து அசாம் மாநிலம் திப்ருகருக்கு வாராந்திர சிறப்பு ெரயில் இயக்கப்படுகிறது. கன்னியாகுமரியில் இருந்து ஞாயிற்றுக்கிழமை மாலை 5:20 மணிக்கு புறப்படும் ரெயில் (வ.எண்:05905), புதன்கிழமை இரவு 8:50 மணிக்கு திப்ருகர் சென்றடையும்.
மறுமார்க்கத்தில் செவ்வாய்கிழமைகளில் திப்ருகரில் இருந்து இரவு 7:25மணிக்கு புறப்படும் ெரயில்(05906) வெள்ளிக்கிழமை இரவு 10மணிக்கு கன்னியாகுமரி சென்றடையும். வருகிற 8, 15-ந் தேதிகளில் இச்சிறப்பு ெரயில் இயக்கப்படும். இந்த ெரயிலில், ஏ.சி., இரண்டடுக்கு 1, மூன்றடுக்கு 5, படுக்கை வசதி 11, பொது இரண்டாம் வகுப்பு 3, சரக்கு பெட்டி ஒன்று என 21 பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும்.
சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, பாலக்காடு, திருச்சூர் உள்ளிட்ட நிலையங்கள் வழியாக ெரயில் இயக்கப்படும். கன்னியாகுமரி-திப்ருகர் ரெயில், திங்கட்கிழமை காலை 4:12 மணிக்கு கோவை ரெயில் நிலையம், காலை, 5:03மணிக்கு திருப்பூர் வந்து செல்லும். திப்ருகர்-கன்னியாகுமரி ரெயில் வெள்ளிக்கிழமை அன்று திருப்பூருக்கு காலை 9:43மணிக்கும் கோவைக்கு காலை 10:42மணிக்கும் வந்து செல்லும் என ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
- எர்ணாகுளத்தில் இருந்து தென்காசிக்கு இரவு 8.15 மணிக்கு வந்து மறுநாள் அதிகாலை 5.45 மணிக்கு வேளாங்கண்ணி சென்று சேரும்.
- வேளாங்கண்ணியில் இருந்து புறப்பட்டு தென்காசிக்கு திங்கள் கிழமை அதிகாலை வந்து சேரும்
தென்காசி:
தென்காசி வழியாக எர்ணாகுளம் - வேளாங்கண்ணி ரெயில் நிலையங்களுக்கிடையே இயக்கப்பட்டு வரும் வாராந்திர சிறப்பு ரெயிலின் சேவை நவம்பர் மாதம் வரை இயங்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது இந்த ரெயிலின் சேவை டிசம்பர் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
அதன்படி எர்ணாகுளம் - வேளாங்கண்ணி வாராந்திர சிறப்பு கட்டண ரெயில் (06035) எர்ணாகுளத்தில் இருந்து நவம்பர் 19-ந்தேதி முதல் டிசம்பர் 31-ந்தேதி வரை சனிக்கிழமைகளில் மதியம் 12.35 மணிக்கு புறப்பட்டு தென்காசிக்கு இரவு 8.15 மணிக்கு வந்து மறுநாள் அதிகாலை 5.45 மணிக்கு வேளாங்கண்ணி சென்று சேரும்.
மறு மார்க்கத்தில் வேளாங்கண்ணி - எர்ணாகுளம் வாராந்திர சிறப்பு ரெயில் (06036) வேளாங்கண்ணியில் இருந்து நவம்பர் 20-ந்தேதி முதல் ஜனவரி 1-ந்தேதி வரை ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை 6.35 மணிக்கு புறப்பட்டு தென்காசிக்கு திங்கள் கிழமை அதிகாலை 3.50 மணிக்கு வந்து மதியம் 12.00 மணிக்கு எர்ணாகுளம் சென்றடையும் .
இந்த ரெயில்கள் கோட்டயம், செங்கனாச்சேரி, திருவல்லா, செங்கனூர், மாவேலிக்கரா, காயங்குளம், கருநாகப்பள்ளி, சாஸ்தான்கோட்டா, கொல்லம், குண்டரா, கொட்டாரக்கரா, அவனீஸ்வரம், புனலூர், தென்மலை, செங்கோட்டை, தென்காசி, கடையநல்லூர், சங்கரன்கோவில், ராஜபாளையம், சிவகாசி, விருதுநகர், அருப்புக்கோட்டை, மானாமதுரை, காரைக்குடி, அறந்தாங்கி, பேராவூரணி, பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம், திருத்துறைப்பூண்டி, திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த நீட்டிக்கப்பட்ட சிறப்பு ரெயிலுக்கான முன்பதிவு தொடங்கிவிட்டது.
ஜூன் 4-ந்தேதி முதல் ஆகஸ்ட் 6-ந்தேதி வரை இந்த எர்ணாகுளம் வேளாங்கண்ணி வாராந்திர சிறப்பு ரெயில் அறிவிக்கப்பட்டு பின் ஆகஸ்ட் 13-ந்தேதி முதல் நவம்பர் 12-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டு இயக்கப்பட்டது. தற்போது ஜனவரி 01 வரை இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது பயணிகள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து பயணிகள் கூறுகையில், தென்காசி யிலிருந்து கிழக்கு டெல்டா மாவட்ட பகுதிகளான திருவாரூர், நாகை, வேளாங்கண்ணி உள்ளிட்ட ஆன்மீக தலங்களுக்கு செல்வதற்கு இந்த சிறப்பு ரெயில் மிகவும் உதவிகரமாக உள்ளது.
அதேபோல் திங்கள் கிழமை அதிகாலை கொல்லம், கோட்டயம், எர்ணாகுளம் போன்ற பகுதிகளுக்கும் செல்வதற்கு இந்த ரெயில் திங்கள் கிழமை மதியம் 12 மணிக்கு எர்ணாகுளத்தை சென்றடைந்த பின் சனிக்கிழமை மதியம் 12.35 வரை காலியாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. எனவே காலியாக நிறுத்தி வைக்கப்படும் இந்த ரெயில் பெட்டிகளை கொண்டு எர்ணாகுளம் - வேளாங்கண்ணி வாரம் இருமுறை ரெயிலாக இயக்க வேண்டும் என அவர்கள் கூறினர்.
கடந்த 2 ஆண்டுகளாக ரெயில்வே கால அட்டவணை சந்திப்பின்போது இந்த எர்ணாகுளம் வேளாங்கண்ணி வாரம் இரு முறை இயங்கும் வகையில் முன்மொழியப்பட்டு ரெயில்வே வாரிய ஒப்புதலுக்காக காத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
- ரெயிலுக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கி நடந்து வருகிறது.
- ெரயிலுக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கி நடந்து வருகிறது.
திருப்பூர்:
ஆலப்புழா, மங்களூரு ரெயில்கள் புறப்படும், சென்று சேரும் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.தினமும் மாலை 4:05 மணிக்கு கேரள மாநிலம், ஆலப்புழாவில் இருந்து புறப்படும் ரெயில் மறுநாள் காலை 5:50 மணிக்கு சென்னை சென்று சேரும். இன்று முதல் இந்த ரெயில் மாலை 3:40 க்கு ஆலப்புழாவில் இருந்து புறப்படும். 20 நிமிடம் முன்பாக காலை 5:30 மணிக்கு சென்று சேரும். இந்த ெரயில் திருப்பூருக்கு இரவு 11 மணிக்கு பதிலாக இரவு 10:33 க்கே வந்து விடும்.இதுவரை மதியம் 1:30 க்கு மங்களூருவில் புறப்பட்ட எக்ஸ்பிரஸ் ெரயில் (12602) இனி மதியம் 1:55க்கு புறப்படும். சென்னைக்கு மறுநாள் காலை 5:35மணிக்கு பதில் மாலை 6:10மணிக்கு சென்று சேரும். இந்த ெரயில் திருப்பூருக்கு இரவு 10:30மணிக்கு பதிலாக10:45 மணிக்கு வரும்.
ெரயில் பயணிகள் கூட்ட நெரிசலை சமாளிக்க, ஜார்கண்ட் மாநிலம் ஹட்டியாவில் இருந்து எர்ணாகுளத்துக்கு நவம்பர் 14, 21, 28ந் தேதி சிறப்பு ெரயில் இயக்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. மறுமார்க்கமாக நவம்பர் 17, 24, டிசம்பர் 1ம் தேதி எர்ணாகுளத்தில் இருந்து ஹட்டியாவுக்கு ெரயில் இயக்கப்படும். இந்த ெரயில் அலுவா, திருச்சூர், பாலக்காடு, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் வழியாக பயணித்து ஆந்திரா, ஒடிசா மாநிலங்களை கடந்து ஜார்கண்ட் மாநிலம் ஹட்டியா சென்று சேர்கிறது. 5 ஏ.சி., 11 படுக்கை வசதி, 3 பொது பெட்டி உள்ளிட்ட 22 பெட்டிகளை கொண்டதாக இந்த ெரயில் இருக்கும். ெரயிலுக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கி நடந்து வருகிறது.
கேரள மாநிலம், கோழிக்கோடு - கண்ணனூர் வழித்தடத்தில், தலசேரி - எடக்கோடு இடையே மின்வழித்தடம் சிக்னல் பராமரிப்பு மேலாண்மை பணி நடக்கிறது. இதனால் சென்னை எழும்பூரில் இருந்து மங்களூரு இயக்கப்படும் ெரயில் இயக்கம் மாற்றப்பட்டுள்ளது. நேற்றிரவு சென்னை எழும்பூரில் இருந்து புறப்பட்ட மங்களூரு எக்ஸ்பிரஸ் ெரயில் இன்று கோழிக்கோடு வரை மட்டும் இயக்கப்படும். வடகரா, தலச்சேரி, கண்Èர், கண்ணபுரம், பையனூர்,கொடிகுலம், காசர்கோடு வழியாக மங்களூரு செல்லாது. அதே நேரம், மங்களூரில் இருந்து சென்னை எழும்பூருக்கு இயக்கப்படும் ெரயில் இயக்கத்தில் மாற்றமில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
- சபரிமலை பக்தர்கள் வசதிக்காக ரெயில் இயக்கப்படுகிறது.
- வெள்ளிக்கிழமைகளில் காலை 5 மணிக்குப் புறப்படும் சிறப்பு ெரயில் மறுநாள் காலை 5.30 மணிக்கு கோட்டயத்தை சென்றடையும்.
கோவை,
சபரிமலை செல்லும் பக்தர்கள் வசதிக்காக ஆந்திர மாநிலம் நரசாபூர், கேரள மாநிலம் கோட்டயம் இடையே கோவை வழியாக சிறப்பு ெரயில் இயக்கப்படுவதாக ெரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சேலம் கோட்ட ெரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ஆந்திர மாநிலம் நரசாபூரில் இருந்து நவம்பா் 18, 25 ஆகிய தேதிகளில் வெள்ளிக்கிழமைகளில் காலை 5 மணிக்குப் புறப்படும் சிறப்பு ெரயில் (எண்:07119) மறுநாள் காலை 5.30 மணிக்கு கோட்டயத்தை சென்றடையும்.
நவம்பா் 19 மற்றும் 26 ஆகிய தேதிகளில் சனிக்கிழமைகளில் கோட்டயத்தில் இருந்து காலை 9.30 மணிக்குப் புறப்படும் சிறப்பு ெரயில் (எண்: 07120) மறுநாள் மாலை 4 மணிக்கு நரசாபூரை சென்றடையும்.
இந்த சிறப்பு ெரயிலில், ஏ.சி. இரண்டடுக்கு பெட்டி 2, மூன்றடுக்கு பெட்டி 1, படுக்கை வசதி பெட்டிகள் 11, இரண்டாம் வகுப்பு பெட்டிகள் 6, என, 22 பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளது.
ெரயிலானது, எா்ணாகுளம் டவுன், ஆலுவா, திருச்சூா், பாலக்காடு, கோவை, திருப்பூா், ஈரோடு, சேலம், ஜோலாா்பேட்டை, காட்பாடி, சித்தூா், திருப்பதி, ரேணிகுண்டா உள்ளிட்ட ெரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
நரசாபூர்-கோட்டயம் ெரயில் வெள்ளி அன்று இரவு 10.12-க்கும், கோட்டயம்-நரசாபூர் ெரயில் சனிக்கிழமை இரவு 10.30-க்கும் கோவை வந்தடையும் .
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இரவு 8:45 மணிக்கு கொல்லத்தில் புறப்படும் ரெயில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு 1:30 க்கு ைஹதாரபாத் சென்று சேரும்.
- ெரயிலுக்கான டிக்கெட் முன்பதிவு துவங்கி நடந்து வருகிறது என தெற்கு ரெயில்வே சேலம் கோட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.
திருப்பூர்:
சபரிமலை செல்லும் பக்தர்கள் வசதிக்காக, ைஹதராபாத் - கொல்லம் இடையே சிறப்பு ெரயில் அறிவிக்கப்பட்டுள்ளது.
வருகிற 22 மற்றும், 29ந் தேதி மதியம் 12 மணிக்கு ைஹதராபாத்தில் புறப்படும் சிறப்பு ெரயில், மறுநாள் மாலை 6 மணிக்கு சென்று சேரும். மறுமார்க்கமாக நவம்பர் 16, 23 மற்றும் 30-ந் தேதி (புதன்கிழமை) இரவு 8:45 மணிக்கு கொல்லத்தில் புறப்படும் ரெயில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு 1:30 க்கு ைஹதாரபாத் சென்று சேரும்.
இந்த சிறப்பு ெரயில் காயன்குளம், மாவேலிக்கரா, செங்கனூர், திருவல்லா, செங்கனஞ்சேரி, கோட்டயம், எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ெரயிலுக்கான டிக்கெட் முன்பதிவு துவங்கி நடந்து வருகிறது என தெற்கு ரெயில்வே சேலம் கோட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.