என் மலர்
நீங்கள் தேடியது "Success"
- 12-ம் வகுப்பு படித்து முடித்து நீட் தேர்வு எழுதி அதில் வெற்றி பெற்றார்.
- பள்ளி சார்பிலும், கிராம மக்கள் சார்பிலும் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் கீழ்வேளூர் அடுத்த ஆந்தக்குடி கிராமத்தைச் சேர்ந்த குமார்- பவானி தம்பதியினர்.
விவசாயக் கூலிகளான இவரது மகள் ராஜேஸ்வரி.
இவர் ஆந்தக்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து முடித்து இந்த ஆண்டு நீட் தேர்வு எழுதி அதில் வெற்றிப் பெற்றார்.
அவருக்கு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது.
அவருக்கு அவர் படித்த பள்ளியின் சார்பாக பாராட்டு விழா நடைப்பெற்றது.
பள்ளியின் தலைமையாசிரியர் துரைமுருகு தலைமையில் நடைப்பெற்ற நிகழ்ச்சியில் பள்ளியின் சார்பிலும் கிராம மக்களின் சார்பில் கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினர், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் மற்றும் கிராம மக்கள் மாணவி ராஜேஸ்வரியை வெகுவாக பாராட்டினர்.
- கோடியக்காடு ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்மணி சுகாதார ஓட்டத்தை தொடங்கி வைத்தார்.
- வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாட குறிப்பேடு மற்றும் எழுதுபொருட்கள் வழங்கல்.
வேதாரண்யம்:
தூய்மை பாரத இயக்கம் சார்பில் வேதாரண்யம் அடுத்த கோடியக்காடு ஊராட்சியில் உலக கழிவறை தின சுகாதார ஓட்டம் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு கோடியக்காடு ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்மணி தலைமை வகித்து சுகாதார ஒட்டத்தை துவக்கிவைத்தார்.
நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் சரவணன், ஊராட்சியின் வார்டு உறுப்பினர்கள், ஊராட்சி செயலாளர் சுபா, கிராம நிர்வாக அலுவலர் இளங்கோவன், அஞ்சலக அலுவலர், மகளிர் குழுக்கள், தூய்மை பணியாளர்கள், சுந்தரம் அரசு உதவி தொடக்கப் பள்ளியின் தலைமையாசிரியர் நீலமேகம் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர். இதைத் தொடர்ந்து விழிப்புணர்வு உறுதிமொழியும், எடுத்துக்கொண்டனர்.
உலக கழிவறை தினம் நிகழ்வில் கலந்து கொண்ட பள்ளி மாணவர்களுக்கும், வெற்றி பெற்ற மாணவர்களுக்கும் ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்மணி பாட குறிப்பேடு மற்றும் எழுதுபொருட்களை வழங்கினர்.
- தொழில்நுட்பம் சார்ந்தவற்றை அதிகமாக பேசக்கூடாது.
- ஒருவரிடம் பேசும் போது கண்ணை பார்த்து தான் பேசவேண்டும்.
பேச்சுத்திறமை பெற்றவர்கள் மட்டுமே இன்று உள்ள சூழ்நிலையில் தொழிலை வெற்றிகரமாக நடத்தி செல்லமுடியும். பெரும்பாலான வாடிக்கையாளர்கள் விவரமானவர்களாக இருக்கின்றனர். எனவே, பேச்சுத்திறமை முக்கியத்துவம் பெறுகிறது. பேசத்தெரிந்தால் மட்டுமே வாடிக்கையாளர்கள் கேட்கும் கேள்விகளுக்கு சரியான பதில் கொடுக்கமுடியும். பொதுவாக பெரும்பாலான தொழில்முனைவோர் வாடிக்கையாளர்களிடம் பேசுவதற்கு அதிக நேரம் ஒதுக்க முடியாது. அதே போல் வாடிக்கையாளர்களும் யாருடைய பேச்சையும் கேட்க அதிக நேரம் செலவிட தயாராக இல்லை. எனவே சாதுர்யமான பேச்சின் மூலமே பொருட்களை அதிக அளவில் விற்பனை செய்ய முடியும்.
அண்மையில் நடத்திய ஒரு ஆய்வில் சொல்லக்கூடிய கருத்தில் 7 சதவீதம் மட்டுமே நேரடியாக கேட்பவர்களுக்கு சென்றடைவதாகவும், 55 சதவீதம் சொல்பவரின் அங்க அசைவுகளின் மூலமாகவும், மீதமுள்ள 38 சதவீதம் கருத்து சொல்பவரின் பேச்சு திறமைக்கு ஏற்றவாறு சென்றடைவதாகவும் தெரிய வருகிறது.
சரியான முறையில் திட்டமிட்டு என்ன பேச வேண்டும்? எப்படி பேச வேண்டும்? எப்படியெல்லாம் பேசக்கூடாது என்பதை முன்கூட்டியே முடிவு செய்ய வேண்டும். புள்ளி விவரங்கள், மற்றவர்களின் அனுபவங்கள், தாம் பெற்ற அனுபவங்கள் இவைகளை கலந்து பேசும்போது பேச்சின் சுவை அதிகரிக்கும். கேட்பவர்களும் ஆர்வமாக கேட்பார்கள். தொழில்நுட்பம் சார்ந்தவற்றை அதிகமாக பேசக்கூடாது.
ஒரே நேரத்தில் இரண்டு ஆட்களிடம் பேசுவதை தவிர்க்க வேண்டும். சில ஆட்கள் தொலைபேசியில் பேசிக்கொண்டே எதிரில் உள்ளவர்களிடம் பேசுவார். தொழிலையும் கவனிப்பார். இம்மாதிரியான செயல்முறைகளை தவிர்க்க வேண்டும். ஒரு நேரத்தில் ஒருவரிடம் தான் பேசவேண்டும். ஒருவரிடம் பேசும் போது கண்ணை பார்த்து தான் பேசவேண்டும். தொடர்ந்து பேசிக்கொண்டே இல்லாமல் நாம் சொல்வதற்கு எந்த அளவிற்கு பதில் உள்ளது அல்லது நாம் சொல்வதில் கேட்பவர்கள் எந்த அளவுக்கு புரிந்து கொண்டுள்ளார்கள் என்பதை அறிந்து பேசவேண்டும். எக்காரணத்தை முன்னிட்டும் வாடிக்கையாளர்களை மட்டம் தட்டி பேசக்கூடாது. பேச்சில் கோபமூட்டும் சொற்களையோ, தன்மான உணர்வுகளை தூண்டும் சொற்களையோ பயன்படுத்தக்கூடாது.
பேச்சில் எந்த அளவுக்கு நியாயம் உள்ளதோ, அந்த அளவுக்கு பேசுபவர்களின் மதிப்பு உயரும். கைகளை கட்டிக்கொண்டோ அல்லது கைகளை பிசைந்து கொண்டோ பேசக்கூடாது. வாடிக்கையாளர்கள் பெயர் தெரிந்தால் பெயரை குறிப்பிட்டு பேசுவதில் தவறில்லை. முடிந்த அளவுக்கு வாடிக்கையாளர்களின் பெயர்களை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.
- தற்போதைய கால சூழ்நிலைக்கு ஏற்ப திட்டங்களை தீட்டி செயல்படுங்கள்.
- தோல்வியை ஒரு பாடமாக, அனுபவமாக எடுத்து கொள்ளுங்கள்.
உழைப்பு, கல்வி, விளையாட்டு என எதுவாக இருந்தாலும் அனைவரும் விரும்புவது வெற்றியை தான். இந்த வெற்றியை மிகவும் எளிதாக நாம் பெற்று விடலாம்.
முயன்றால் முடியாதது எதுவும் இல்லை. மிக கடுமையாக உழைப்பவர்கள் கூட சில நேரங்களில் தோல்வியை சந்திக்க நேரிடும். தோல்வியை கண்டு துவண்டு விட கூடாது. தோல்வி ஏற்பட்டால் அது எதனால் ஏற்பட்டது, அதில் இருந்து விடுபட என்ன வழி? என தான் ஆராய வேண்டும். மற்றவர்களின் வெற்றியை கண்டு பொறாமை படுவதை காட்டிலும், அவர் எவ்வாறு வெற்றி பெற்றார் என ஆராய்ந்தால் நாமும் வெற்றி பெறலாம்.
ஏமாற்றம்
எவ்வளவு பெரிய மனிதராக இருந்தாலும் பணபலம், ஆள் பலம் உள்ளவராக இருந்தாலும் அவருக்கும் ஏதாவது ஒரு இடத்தில் தோல்வி, ஏமாற்றம் இருக்க தான் செய்யும். எனவே தோல்வி ஏற்பட்டால் அதற்கான காரணம் என்ன என்று தீவிரமாக யோசிக்க வேண்டும். எங்கே தவறு நடந்துள்ளது என்பதை கண்டுபிடித்து தோல்வியை வெற்றியாக மாற்றுவதற்கான வழிகளை உருவாக்க வேண்டும். தோல்வியை ஒரு பாடமாக, அனுபவமாக எடுத்து கொள்ளுங்கள். ஒரு தடவை தோல்வி ஏற்பட்டது என்பதற்காக அந்த செயலை விட்டு ஒதுங்குவது தவறு. தோல்விக்கான காரணத்தை ஆராய்ந்து, இனி அதை வெற்றியாக மாற்றுவதற்கு என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்பதை திட்டமிட்டு கொள்ள வேண்டும்.
வெற்றி தேவதை
எதிர்கால வெற்றியை இலக்காக வைத்து உழைத்தால் தோல்விகள் தோற்றுப்போகும். வெற்றி தேவதை தேடி வந்து மாலையிடும். வெற்றி மற்றும் தோல்வியை சமமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
கல்வி, அனுபவம், அணுகுமுறை போன்ற காரணத்தாலும் தோல்வி ஏற்படலாம். எனவே உங்களிடம் உள்ள குறைகளை போக்கி வெற்றி வரும் வகையில் தகுதிகளை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
ஒவ்வொரு முறையும் உங்கள் திட்டங்களை நன்கு ஆராய்ந்து பாருங்கள். தற்போதைய கால சூழ்நிலைக்கு ஏற்ப திட்டங்களை தீட்டி செயல்படுங்கள்.
எதிர்கால திட்டம்
தோல்வியில் இருந்து பாடங்களை கற்றுக் கொள்ள மறக்க வேண்டாம்.
தோல்விக்கான காரணங்களை அலசி ஆராயும் போது நடுநிலையுடன் செயல்படுங்கள். உங்கள் மீதும், உங்களின் செயல்பாடுகள் மீதும், எதிர்கால திட்டத்திலும் ஏதேனும் குறைகள் இருந்தால் மறைக்காமல் ஒப்புக் கொள்ளுங்கள்.
தோல்விகளை அனுபவமாக எடுத்துக் கொண்டு அதிலிருந்து பாடம் கற்று கொள்ள தயங்க வேண்டாம். ஒரு முறை செய்த தவறை மீண்டும் செய்யக்கூடாது என்பதில் உறுதியாக இருப்பது அவசியம். தோல்வி நமக்கு கற்று தந்த பாடத்தை என்றும் நாம் மறந்து விட கூடாது. அவ்வாறு மறக்காமல் செயல்பட்டால் தான் வெற்றி பெற முடியும். எதிலும் விடாமுயற்சியுடன் செயல்படுங்கள். வெற்றியை என்றும் உங்கள் பக்கம் தக்க வைத்துக்கொள்ளுங்கள்.
திவ்ய பிரபா, 10-ம் வகுப்பு,
அரசு பள்ளி, மதுரை.
- வரும் நாடாளுமன்ற தேர்தலில் மயிலாடுதுறை தொகுதியை தி.மு.க. வெற்றி பெறபாடுபட வேண்டும்.
- மயிலாடுதுறை மாவட்டத்தில் உறுப்பினர் சேர்க்கையை நிர்வாகிகள், தொண்டர்கள் தீவிரப்படுத்த வேண்டும்.
சீர்காழி;
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருவெண்காட்டில் ஒரு தனியார் திருமண மண்டபத்தில் சீர்காழி கிழக்கு ஒன்றிய தி.மு.க. பொது உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. ஒன்றிய அவைத் தலைவர் நெடுஞ்செழியன் தலைமை வைத்தார்.
தி.மு.க. உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினர் குத்தாலம் கல்யாணம், சீர்காழி எம்.எல்.ஏ. பன்னீர்செல்வம், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் முத்துமகேந்திரன், ஜி. என்.ரவி, தலைமை பொதுக்குழு உறுப்பினர் சாமிநாதன், ஒன்றிய குழு தலைவர் கமலஜோதி தேவேந்திரன் முன்னிலை வகித்தனர்.
தி.மு.க. ஒன்றிய செயலாளர் பஞ்சு குமார் வரவேற்றார். மயிலாடுதுறை மாவட்ட செயலாளரும் பூம்புகார் எம்.எல்.ஏ.வுமான நிவேதா முருகன் கலந்து கொண்டு பேசுகையில், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மயிலாடுதுறை தொகுதியை தி.மு.க. வெற்றி பெறபாடுபட வேண்டும். மயிலாடுதுறை மாவட்டத்தில் உறுப்பினர் சேர்க்கையை நிர்வாகிகள், தொண்டர்கள் தீவிர படுத்த வேண்டும் என்றார்
கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. மூர்த்தி மாவட்ட அவைத் தலைவர் சீனிவாசன் ஒன்றிய செயலாளர்கள் பிரபாகரன் மலர்விழி திருமாவளவன்,ரவிக்குமார் ரவிக்குமார் மாவட்டத் துணைச் செயலாளர் ஞானவேலன், முன்னாள் ஒன்றிய குழு தலைவர் ரவி, மாவட்ட கவுன்சிலர்கள் ஆனந்தன், இளைஞர் அணி துணை அமைப்பாளர் ஜிபையர் அகமது, நிர்வாகிகள் துரைராஜன், சசிகுமார், குலோத்துங்கன், ரவிச்சந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- பெண்களை குறி வைத்து அரங்கேறும் கிண்டல், கேலி அத்துமீறல் அதிகமாக இருக்கிறது.
- வார்த்தை, சைகை என்று எந்த வடிவத்திலும் கேலி, கிண்டல் செய்ய கூடாது.
ஒருவர் குண்டாக இருக்கிறாரா? அல்லது ஒல்லியாக இருக்கிறாரா? என்பது முக்கியம்இல்லை. ஆரோக்கியமாக இருக்கிறாரா? என்பது தான் முக்கியம். அது போல் கருப்பாக இருக்கிறாரா? அல்லது சிவப்பாக இருக்கிறாரா? என்பது அவசியம் இல்லை. நல்ல மனநிலையில் இருக்கிறாரா? என்பதே முக்கியம். இனம், மொழி, உருவம், நிறம் போன்றவற்றை வைத்து யாரையும் எடை போட கூடாது. மேலும் அதை அளவீடாக கொண்டு கேலி, கிண்டல் செய்வதை எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ளவும் முடியாது.
சாமுத்திரிகா லட்சணம்
உச்சி முதல் பாதம் வரை ஆண் மற்றும் பெண்ணின் உடல் உறுப்புகள் எப்படி இருக்க வேண்டும் என்று சாமுத்திரிகா லட்சணம் கூறுகிறது. ஆனால் ஒவ்வொரு மனிதரும் உடல் ரீதியாக தனித்தன்மை கொண்டவர்களாக இருக்கிறார்கள். ஒருவரை போல் மற்றொருவர் இருக்கு முடியாது. இதை ஒவ்வொருவரும் புரிந்து கொள்ள வேண்டும்.
ஆனாலும் குடும்பங்கள், பள்ளிக்கூடங்கள், பணியிடங்கள் என அனைத்து இடங்களிலும் உருவக்கேலி செய்வது தொடர்கிறது. மேலும் ஒருவரின் உருவம், நடை, உடை, பாவனை போன்றவற்றை பார்த்து உருவக்கேலி செய்வது இன்றளவும் நீடித்து கொண்டு இருக்கிறது. இதனால் சம்மந்தப்பட்ட நபரின் உள்ளார்ந்த மன உணர்வு மற்றும் செயல்திறனை கூட முடக்கி விடுகிறது. அதோடு கேலி செய்பவரின் மனநிலை எந்த அளவில் இருக்கிறது என்பதையும் பிரதிபலிக்கும்.
வார்த்தை, சைகை என்று எந்த வடிவத்திலும் கேலி, கிண்டல் செய்ய கூடாது. ஏன் என்றால் கேலி, கிண்டலுக்கு ஆளாகும் மாணவர்கள் படிப்பை பாதியில் விடுதல், தொழிலாளர்கள் பணியில் இருந்து விலகுதல் போன்ற முடிவுகளை எடுக்கும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். சிலர் கேலி, கிண்டல் அவமானத்தால் ஏற்படும் வலியில் வாழ்வை முடித்துக் கொள்ளும் தவறான முடிவை எடுக்க கூடிய நிலைக்கு கூட தள்ளப்படுகின்றனர். எனவே உருவக்கேலி என்பது மனித உரிமை மீறல் ஆகும்.
தன்னம்பிக்கையை இழக்க கூடாது
ஒருவரின் நிறம், உயரம், எடை, கண் பார்வை, முடி என உருவத்தை பார்த்து யார் கேலி கிண்டல் செய்தாலும் கவலைப்பட தேவை இல்லை. எது பலவீனம் என்று கூறுகிறார்களோ அதையே பலமாக்கி முன்னேறியவர்கள் அதிகம் உள்ளனர். எனவே எந்த நிலையிலும் தன்னம்பிக்கையை இழந்து விடக்கூடாது.
ஒரு மாணவருக்கு உடல் அல்லது மனதளவில் கேடு, அவமானம் அல்லது குழப்பத்தை ஏற்படுத்துவது கேலி வதை என்று கூறப்படுகிறது. எனவே தான் கல்வி நிறுவனத்துக்கு உள்ளேயோ அல்லது வெளியேயோ, நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ கேலி செய்வது, உடந்தையாக இருப்பது போன்றவை தண்டனைக்குரிய குற்றமாக கருதப்படுகிறது.
எனவே கேலி வதை தொடர்பாக புகார் தெரிவிக்கப்பட்டால் உடனடியாக கல்வி நிறுவன நிர்வாகத்தினர் விசாரணை நடத்த வேண்டும். அது போன்ற குற்றங்களில் ஈடுபடும் மாணவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விதிகள் வகுக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக குழந்தைகளுக்கு எதிரான கேலி, கிண்டல் என்பது அவர்களை துன்புறுத்துவதாக கருதப்படுகிறது. அந்த பாதிப்புக்கு ஆளாகும் குழந்தைகளை மீட்டு சரி செய்ய வேண்டியது பெற்றோர் மற்றும் ஆசிரியரின் கடமை ஆகும்.
கேலி, கிண்டல்
இது போல் இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் ஆண்டுக்கு 12 சதவீதம் அதிகரித்து வருவதாக தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. அதில் ஈவ் டீசிங் எனப்படும் பெண்களை குறி வைத்து அரங்கேறும் கிண்டல், கேலி அத்துமீறல் அதிகமாக இருக்கிறது. அது சில நேரங்களில் பெண்களின் உயிரை பறிக்கும் அளவுக்கு சென்று விடுகிறது. ஈவ்டீசிங் குற்றங்கள் நிகழ ஆணாதிக்க மனோபாவமே காரணம் என்ற குற்றச்சாட்டு உள்ளது.
ஒரு ஆணின் முறை தவறிய நடத்தை அல்லது செயலால் ஒரு பெண்ணுக்கு அச்சம், பயம், அவமானம், தொல்லை மற்றும் உடல்ரீதியான தாக்குதலுக்கு உள்ளாவது ஈவ்டீசிங் என்று கூறப்படுகிறது. இந்த குற்றங்களில் ஈடுபடும் நபர்களுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை, ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கலாம் என்று சட்டம் கூறுகிறது. செல்போன்கள், இணையதளம் மூலமாக பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகிறது. எனவே பெண்களுக்கு ஆபாச குறுஞ்செய்தி, உருவப்படத்தை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைத்தளத்தில் வெளியிடும் நபர்களுக்கு தண்டனையை கடுமையாக்க பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சரகம் பரிந்துரை செய்து உள்ளது.
நாகரிக சமுதாயம்
ஒருவரை கேலி, கிண்டல், அவமதிப்பு செய்வதில் ஈடுபடுபவர்களை தண்டிக்க சட்டங்கள் உள்ளன. ஆனால் அதையும் தாண்டி கேலி, கிண்டல்களை தைரியமாக எதிர் கொள்ள வேண்டும். அது ஒன்று தான் எந்த அவமதிப்பில் இருந்தும் நம் வாழ்வை காத்துக்கொள்ளும் ஒரே வழியாக இருக்கும்.
மேலும் ஒவ்வொருவரும் மனரீதியாக தங்களை உயர்ந்த சிந்தனையுடன் மேம்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும் கேலி கிண்டலால் அடுத்தவர்களுக்கு ஏற்படும் வலியை நாம் புரிந்து கொண்டால் அவர்களுக்கு மதிப்பளிக்க கற்றுக் கொள்வோம். அதை நோக்கி செல்வது தான் நாம் நாகரிக சமுதாயத்தில் வாழ்கிறோம் என்பதற்கு சான்றாக இருக்கும்.
- பைங்காட்டூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தேசிகா என்ற மாணவி 8-ம் வகுப்பு படித்து வருகிறார்.
- ஆசிரியர்களை பள்ளி மேலாண்மை குழு மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் பாராட்டினர்.
மன்னார்குடி:
மன்னார்குடி அருகே பைங்காட்டூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தேசிகா என்ற மாணவி 8-ம் வகுப்பு படித்து வருகிறார்.
இவர் தேசிய வருவாய் வழி திறனாய்வு தேர்வில் வெற்றி பெற்றுள்ளார்.
வெற்றிபெற்ற மாணவியையும், பயிற்றுவித்த தலைமை யாசிரியர் மற்றும் ஆசிரியர்களை பள்ளி மேலாண்மை குழு மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் பாராட்டினர்.
- . வள்ளலார் பள்ளியில் இந்த ஆண்டு 247 மாணவ, மாணவியர் பிளஸ்-2 பயின்று வந்தனர்..பிளஸ்-2 தேர்வுக்கான முடிவுகள் இன்று காலையில் வெளியிடப்பட்டது. இதில் வள்ளலார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் படித்து தேர்வெழுதிய 247 மாணவர்களும் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றனர்.
- . இதில் சுவாதி என்ற மாணவி பள்ளி அளவில் முதலிடம் பெற்றதோடு, உயிரியல் குரூப்பில் மாநில அளவில் 2-ம் இடம் பிடித்துள்ளார். இவர் இயற்பியல், வேதியியல் பாடத்தில் 100-க்கு 100 மதிப்பெண்ணும், தமிழ், ஆங்கிலம், கணிதம், உயிரியல் பாடங்களில் 100-க்கும் 99 மதிப்பெண்களும் பெற்று 600-க்கு 596 மதிப்பெண்ணுடன் மாநில அளவில் 2-ம் இடமும் பள்ளி அளவில் முதலிடமும் பெற்றுள்ளார்.
கடலூர்:
பண்ருட்டி கொள்ளுக்காரன்குட்டையில் வள்ளலார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் இந்த ஆண்டு 247 மாணவ, மாணவியர் பிளஸ்-2 பயின்று வந்தனர். கடந்த மாதம் நடைபெற்ற பொதுத் தேர்வில் 247 மாணவர்களும் தேர்வெழுதினர்.பிளஸ்-2 தேர்வுக்கான முடிவுகள் இன்று காலையில் வெளியிடப்பட்டது. இதில் வள்ளலார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் படித்து தேர்வெழுதிய 247 மாணவர்களும் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றனர். இதில் சுவாதி என்ற மாணவி பள்ளி அளவில் முதலிடம் பெற்றதோடு, உயிரியல் குரூப்பில் மாநில அளவில் 2-ம் இடம் பிடித்துள்ளார். இவர் இயற்பியல், வேதியியல் பாடத்தில் 100-க்கு 100 மதிப்பெண்ணும், தமிழ், ஆங்கிலம், கணிதம், உயிரியல் பாடங்களில் 100-க்கும் 99 மதிப்பெண்களும் பெற்று 600-க்கு 596 மதிப்பெண்ணுடன் மாநில அளவில் 2-ம் இடமும் பள்ளி அளவில் முதலிடமும் பெற்றுள்ளார். மாணவி அட்சயா 584மதிப்பெண் பெற்று பள்ளி அளவில் 2-ம் இடமும், மாணவன் அண்புமணி 583 மதிப்பெண் பெற்று பள்ளி அளவில் 3-ம் இடமும் பிடித்துள்ளார். மேலும், இந்த பள்ளி கடலூர் மாவட்ட அளவில் தேர்ச்சி விகிதத்தில் முதலிடம் பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும். தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு பள்ளி தலைவர் திருமால்வளன், தாளாலர் கே. நடராஜன், வள்ளலார் கிட்ஸ் பள்ளி தாலாளர் மற்றும் செயலாளர் சக்கரவர்த்தி, பொருளாலர் ராஜா, கண்ணன், சுப்பிரமணி, ஜனார்த்தனன், மணிவாசகம், சாரங்கபாணி, செல்வராஜ், சரவணன், திருவேங்கடம், சண்முகம், சரோஜாம்மாள், வள்ளலார் கல்வியியல் கல்லூரி ராஜேந்திரன் ஆகியோர் வாழ்த்துக்களை கூறினர். மேலும், தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு சால்வை அணிவித்தும், இனிப்பு வழங்கியும், கேக் வெட்டியும் கொண்டாடினார்கள்.
- பிளஸ்-2 தேர்–வில் மாணவி கே. சவுந்–தர்–ய–லட்–சுமி 600-க்கு 594 மதிப்–பெண்–கள் பெற்று கட–லூர் மாந–கர அள–வில் முதல் இடத்–தைப் பெற்றுள்ளார்.
- பள்–ளி–யின் தாளா–ளர் டி.மாவீ–ர்மல் சோர–டியா, முதல்–வர் எம்.சந்–தோஷ்–மல் சோர–டியா ஆகி–யோர் பாராட்டி இனிப்பு மற்–றும் பரிசு வழங்கினர்.
கடலூர்:
கட–லூர் லட்–சுமி சோர–டியா நினைவு மெட்–ரிக் மேல்– நி–லைப்–பள்–ளி–யில் 2022-23-ம் க ல்– வி– ய ாண்– டு க்– க ா ன பிளஸ்-2 தேர்–வில் மாணவி கே. சவுந்–தர்–ய–லட்–சுமி 600-க்கு 594 மதிப்–பெண்–கள் பெற்று கட–லூர் மாந–கர அள–வில் முதல் இடத்–தை–யும், மாவட்ட அள–வில் 2-ம் இடத்–தை–யும் பெற்று சாதனை படைத்–துள்–ளார். வி. ஸ்ரீஹ–ரிணி 600-க்கு 591 மதிப்–பெண் பெற்று பள்–ளி–யில் 2-ம் இடம் பெற்–றுள்–ளார். இந்த 2 மாண–வி–களும் வணி–க–வி–யல், கணக்கு பதி–வி–யல் மற்–றும் கணினி பயன்–பாட்–டில் முழு மதிப்–பெண் பெற்–றும் சாதனை படைத்–துள்–ள–னர்.
மேலும் எம்.திவ்யா 600-க்கு 580 மதிப்–பெண் பெற்று 3-ம் இடம் மற்–றும் வேதி–யி–யல் மற்–றும் கணினி அறி–வி–யல் பாடத்–தில் முழு மதிப்–பெண்–ணும் பெற்–றுள்–ளார். எஸ். நந்–திதா 600-க்கு 572 மதிப்–பெண் பெற்று 4-ம் இடத்–தி–லும், சி.யுவ–ஸ்ரீ 600-க்கு 566 மதிப்–பெண் பெற்று 5-ம் இடத்–தை–யும் பெற்று சாதனை படைத்–துள்–ள–னர். பாட–வா–ரி–யாக முழு–மதிப்–பெண் பெற்–ற–வர்–கள் 8 மாண–வர்–களும், 500-க்கு மேற்–பட்ட மதிப்–பெண் பெற்–ற–வர்–கள் 26 மாண–வர்–களும், 450-க்கும் மேற்–பட்டமதிப்–பெண் பெற்–ற–வர்–கள் 21 மாண–வர்–களும் உள்–ள–னர்.
வெற்றி பெற்ற மாண–வர்–க–ளுக்கு பள்–ளி–யின் தாளா–ளர் டி.மாவீ–ர்மல் சோர–டியா, முதல்–வர் எம்.சந்–தோஷ்–மல் சோர–டியா மற்–றும் உதவி தலைமை ஆசி–ரி–யர் பத்–தா–கான் ஆகி–யோர் பாராட்டி இனிப்பு மற்–றும் பரிசு வழங்கினர்.
- எந்த செயலையும் தள்ளி போடுவதற்கு நம்மிடம் காரணங்கள் இருக்கும்.
- கேள்விகள் கேட்பதை என்றுமே நிறுத்திக்கூடாது என்று ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் கூறியுள்ளார்.
மனிதராய் பிறந்த எல்லோரிடத்திலுமே ஆற்றலும், அறிவும்,திறமையும் உண்டு. பலர் தங்களது தகுதியையும், திறமையையும் அறியாமல் கிடைக்கும் வாய்ப்புகளை நழுவ விடுகிறார்கள். நம்மை நாமே கேள்வி கேட்பதன் மூலமாக நமக்குள் மறைந்துள்ள திறமைகளை கண்டறிந்து அவற்றின் மூலம் வாழ்வில் உயர முடியும்.
பலம்என்ன ?
தங்களுடைய குறைகளையும் பலவீனங்களையும் எளிதாக அறிந்து கொள்ளும் பலர் பலம் என்னவென்று அறிவதற்கு சிரமப்படுவார்கள். நம்மிடம் இருக்கும் திறமைகள் என்னென்ன? நாம் எதில் சிறப்பாக செயல்படுகிறோம்? எவற்றில் எல்லாம் மற்றவர்களிடமிருந்து வேறுபடுகிறோம்? என்பது போன்ற கேள்விகளை நம்மிடம் நாமே கேட்பதன் மூலம் நம்முடைய பலம் என்ன என்பதை எளிதாக கண்டறியலாம்.
பிறரிடம் கேட்டறிதல்
எதிர்மறையான சூழ்நிலையில் சிக்கி இருக்கும் போது நமது பலம் என்னவென்று தெரியாமல் போக வாய்ப்பு உண்டு. அந்த சமயங்களில் பெற்றோர் ஆசிரியர், நெருங்கிய நண்பர் போன்றவர்களிடம் நாம் எதில் சிறப்பாக செயல்படுகிறோம்? என கேட்டறிந்து அந்த திறமைகளை மெருகேற்றிக்கொள்ளலாம்.
தள்ளிப்பபோடுவது கூடாது
நமது கேள்விகளுக்கு விடை கிடைத்து திறமைகளை அறிந்த பிறகு அவற்றை வளர்த்து கொள்வதற்கான முயற்சிகளில் ஈடுபட வேண்டும். எந்த செயலையும் தள்ளி போடுவதற்கு நம்மிடம் காரணங்கள் இருக்கும். அவற்றை ஒதுக்கிவைத்துவிட்டு நம்மைவளர்ச்சி பாதையில் கொண்டு செல்வதற்கான செயல்களில் ஈடுபட வேண்டும்.
தயக்க வேண்டாம்
திறமைகளை மேம்படுத்தி கொள்ளும் முயற்சியின்போது நமக்குள் பல சந்தேகங்கள் எழலாம். எந்த தயக்கமும இல்லாமல் அவற்றுக்கான விடைகளை நமது முன்னேற்றத்தில் அக்கறை கொண்டவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம். புதிதாக ஒரு செயலை செய்யும் போதோ ஒரு விஷயத்தை கற்கும்போதோ மனதில் கேள்விகள் உருவாகும். அவற்றுக்கான விடைகளை கேட்டறிந்து அதற்கேற்ப செயல்பட்டு முன்னேறலாம்.
முக்கியமான கேள்வி
முன்னேற நினைக்கும் ஒவ்வொருவரும் நிச்சயமாக ஒரு கேள்வியை தினந்தோறும் தங்களிடம் கேட்டுக்கொள்ள வேண்டும். அன்றைய நாள் முடிந்த பிறகு தாங்கள் செய்த செயல்களை ஆராய்ந்து இதுதான் என்னுடைய சிறப்பான செயலா? என கேட்டு கொள்ளும் போது நாம் செய்த தவறுகள் நமக்கு தெரியவரும் அவற்றை திருத்திக்கொண்டு ஒவ்வொரு நாளையும் சிறப்பான நாளாக மாற்றி அமைக்க வேண்டும்.
கேள்விகள் கேட்பதை என்றுமே நிறுத்திக்கூடாது என்று ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் கூறியுள்ளார். நம்மிடம் நாம் கேட்கும் கேள்விகளும், அதற்கு பெறுகிற பதில்களும் நமது முயற்சிக்கும் வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருக்கும்.
- விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு கேடயம், கோப்பைகள் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டது.
- விழாவிற்கு கல்லூரி முதல்வர் தமிழரசி தலைமை தாங்கினார்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் விளையாட்டு போட்டிகள் மற்றும் கவின் கலை மன்ற விழா நடைபெற்றது. விழாவிற்கு கல்லூரி முதல்வர் தமிழரசி தலைமை தாங்கினார். இன்ஸ்பெக்டர் செல்வராஜ், வரலட்சுமி, லலிதா, இந்திரா, முப்பாலிகை ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்திரா வரவேற்றார். விழாவிற்கு விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா கலந்து கொண்டு விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு கேடயம், கோப்பைகள் மற்றும் பரிசுகளை வழங்கும் விழாவில் பேசிய ஸ்ரீநாதா போதை பழக்கத்தால் ஏற்படும் தீய விளைவுகள் குறித்து மாணவ-மாணவிகளிடம் போதைப் பொருள் பற்றி விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். முன்னாள் முதல்வர் நாகலட்சுமி நன்றி கூறினார். இதில் சண்முகம், அருண், புவனேஸ்வரி, தயாளமூர்த்தி, சண்முகசுந்தரம், பாலகுமார், விஜயகுமாரி உள்ளிட்ட ஆசிரியர்கள் மற்றும் 700-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.
- சின்ன சின்ன சந்தோஷத்திற்கு தடை போடாதீர்கள்.
- மற்றவர்கள் உங்களை எப்படிப் பார்க்கிறார்கள் என்பதைப் பற்றி கவலைப்படாதீர்கள்.
வாழ்க்கை எனும் அழகான பயணத்தில் பொருளாதாரம், குடும்பம் அல்லது சூழ்நிலையின் காரணமாக நாம் விரும்பிய செயலையோ அல்லது வேலையையோ செய்ய முடியாமல் போகலாம். பலர் பொருளாதார மேம்பாட்டிற்காக தனக்கு பிடித்த, இயல்பாக வரக்கூடிய வேலையை செய்யாமல், வேறு வேலையை முழுமனம் இல்லாமல் செய்து கொண்டு இருக்கிறோம்.
பல வருடங்கள் கழித்து, நாம் வாழ்ந்த வாழ்க்கையை யோசித்துப் பார்த்தால், நமக்கு பிடித்ததை செய்யவில்லையே, வாழ்க்கையில் சின்ன சின்ன விஷயங்களையும் அனுபவிக்காமல் இருந்துவிட்டோமே என்ற கவலை ஏற்படும்.
ஒருசில நேரங்களில் பொருளாதாரம் அல்லது சூழ்நிலைக்காக சில விஷயங்களை செய்யாமல் இருப்பதோ அல்லது தள்ளிப்போடுவதோ நல்லதுதான், ஆனால் எல்லா நேரத்திலும் அவ்வாறு செய்தால், ஒரு கட்டத்தில் 'ஏன் இந்த வாழ்க்கையை வாழ்ந்தோம்? யாருக்காக வாழ்ந்தோம்? என்ற கேள்வி தோன்ற ஆரம்பிக்கும்.
வாழ்க்கையை உங்களுக்காக வாழ்வதற்குக் கற்றுக் கொள்ளுங்கள். அடுத்தவர்கள் செய்கிற வேலையை செய்தால், நாமும் அவர்களைப் போல மகிழ்ச்சியாக இருக்கலாம் என்று நினைப்பதை நிறுத்துங்கள். உங்களுடைய மகிழ்ச்சியை வேறு யாராலும் வரையறுக்க முடியாது.
எது உங்களுக்கு திருப்தியானது அல்லது நிறைவானது என்று யாராலும் சொல்ல முடியாது. அதை உங்களால் மட்டுமே தெரிந்து கொள்ள முடியும். உங்களுக்கு எந்த வேலை பிடித்து இருக்கிறதோ, அந்த வேலையை தேர்ந்தெடுத்து முழுமையாக மன நிம்மதியுடன் செய்யுங்கள்.
மற்றவர்கள் உங்களை எப்படிப் பார்க்கிறார்கள் என்பதைப் பற்றி கவலைப்படாதீர்கள்.
எப்போதாவது மற்றவர்கள் உங்களை எப்படிப் பார்க்கிறார்கள் என்பதைப் பற்றி சிந்திப்பது நல்லது. ஆனால் மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதைப் பற்றி தொடர்ந்து யோசிக்கக்கூடாது. நீங்கள் எப்படி இருந்தாலும், எவ்வளவு விசித்திரமாக இருந்தாலும், உங்களை நீங்களே பாராட்டுங்கள்! ஒவ்வொரு நபரும் தனித்துவமானவர்.
பெண்களே உங்களுக்கு இருக்கும் தனித்துவத்தை முழுமையாக பயன்படுத்துங்கள். அவ்வப்போது பிடித்தவற்றை வாங்குங்கள். பிடித்த இடத்திற்கு சென்று வாருங்கள். பிடித்த உணவை பிடித்த இடத்தில் சாப்பிடுங்கள். இது போன்ற சின்ன சின்ன சந்தோஷத்திற்கு தடை போடாதீர்கள்.
நீங்கள் இதுவரை பிடிக்காத வேலையை செய்து கொண்டிருந்தால், இனி உங்களுக்கு பிடித்தவாறு அதை எப்படி மாற்றிக்கொள்ளலாம் என்று யோசியுங்கள். இடைவேளை நேரத்தில் உங்களுக்கு பிடித்த செயலில் உங்களை ஈடுபடுத்துங்கள். புதிய வேலையை செய்யத் தோன்றினால் தயக்கமின்றி செய்யுங்கள்.
'வயதாகி விட்டது, இனி நாம் என்ன செய்து என்ன நடக்கப் போகிறது?' என்று எண்ணாதீர்கள். இதுவரை உங்கள் வாழ்க்கையை எப்படி வாழ்ந்தீர்கள் என்பதை பற்றி யோசிப்பதை விடுத்து, இனி உங்களுக்கு பிடித்தவாறு எப்படி வாழலாம் என்று யோசியுங்கள்.