என் மலர்
நீங்கள் தேடியது "Surrender"
காட்பாடி:
காட்பாடி சேனூரை சேர்ந்தவர் கண்ணன் (வயது 57). சிக்கன் கடை வைத்திருந்தார். இவரது மனைவி நிர்மலா. மகன்கள் சுரேஷ், பிரபு (19).
கடந்த மாதம் நிர்மலா உடல் நலக்குறைவால் இறந்துவிட்டார். இதனையடுத்து கண்ணனுக்கு அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவருடன் கள்ளக்காதல் ஏற்பட்டது.
அந்த பெண்ணுடன் தனியாக வாடகை வீட்டில் வசித்து வந்ததாக கூறப்படுகிறது. நேற்று இரவு கண்ணன் வீட்டில் இருந்தார். அப்போது பிரபு கள்ளக்காதல் விவகாரம் குறித்து கேட்டுள்ளார்.
இதனால் தந்தை, மகன் இடையே தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த பிரபு கத்தியால் கண்ணண் கழுத்தை அறுத்தார். இதில் படுகாயமடைந்த கண்ணன் துடிதுடித்து இறந்தார்.
கொலை செய்ய பயன்படுத்திய கத்தியுடன் பிரபு விருதம்பட்டு போலீஸ் நிலையத்துக்கு சென்றார். தந்தையை கொலை செய்து விட்டதாக போலீசாரிடம் கூறி சரணடைந்தார்.
விருதம்பட்டு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று கண்ணன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக வழக்குபதிவு செய்து பிரபுவை கைது செய்தனர்.கள்ளக்காதல் விவகாரத்தில் கல்லூரி மாணவர் தந்தையை கழுத்தறுத்து கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி சுட்டுக்கொல்லப்பட்டதை தொடர்ந்து கடந்த 1984-ம் ஆண்டு ஏற்பட்ட கலவரத்தில் ஏராளமான சீக்கியர்கள் கொல்லப்பட்டனர். இதில் டெல்லியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் கொல்லப்பட்டது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சஜ்ஜன் குமார் (வயது 73) மீது வழக்கு தொடரப்பட்டது.
இதில் அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து கடந்த 17-ந்தேதி டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டது. தனது வாழ்நாள் முழுவதையும் அவர் சிறையில் கழிக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், இதற்காக வருகிற 31-ந்தேதிக்குள் சரணடைய வேண்டும் என தீர்ப்பளித்தனர்.
ஆனால் இந்த வழக்கில் சரணடைவதற்கு அடுத்த மாதம் (ஜனவரி) 31-ந்தேதி வரை கால அவகாசம் தருமாறு சஜ்ஜன் குமார் தரப்பில் ஐகோர்ட்டில் நேற்று மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யவும், தனது குடும்ப விவகாரங்கள் சிலவற்றை முடிப்பதற்கும் அவகாசம் தேவைப்படுவதாக அந்த மனுவில் சஜ்ஜன் குமார் குறிப்பிட்டு இருந்தார்.
இந்த மனு இன்று (வெள்ளிக்கிழமை) விசாரணைக்கு வரும் என தெரிகிறது.
இதற்கிடையே சீக்கிய கலவரம் தொடர்பான மற்றொரு வழக்கில் டெல்லியில் உள்ள கோர்ட்டு ஒன்றில் நேற்று சஜ்ஜன் குமார் ஆஜரானார். அந்த வழக்கு அடுத்த மாதம் 22-ந்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. #SajjanKumar #DelhiHighCourt #Surrender #AntiSikhRiotsCase
ஸ்ரீமுஷ்ணம்:
ஸ்ரீ முஷ்ணம் அருகே உள்ள மதகளிர் மாணிக்கம் கிராமத்தை சேர்ந்தவர் கொளஞ்சி (வயது48). தொழிலாளி.
இவரது தம்பி வீரமுத்துக்கும் அதே கிராமத்தை சேர்ந்த செல்வரங்கம் என்பவருக்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்தது.
இந்த நிலையில் வீரமுத்துவிடம், முன்விரோதம் காரணமாக செல்வரங்கம், அவரது மகன்கள் செல்வமணி, ஞானகுரு மற்றும் உறவினர்கள் சுரேஷ், கல்யாணசுந்தரம், ராஜேஷ் ஆகிய 6 பேர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வாக்குவாதம் முற்றி அவர்கள் வீரமுத்துவை தாக்கினர். இதை பார்த்த கொளஞ்சி ஏன் என் தம்பி வீரமுத்துவை தாக்குகிறீர்கள் என தட்டிக்கேட்டார். இதில் ஆத்திரம் அடைந்த செல்வரங்கம் உள்பட 6 பேரும் சேர்ந்து கொளஞ்சியை உருட்டுகட்டையால் தாக்கி கொலை செய்தனர்.
இது குறித்து ஸ்ரீமுஷ்ணம் போலீசார் செல்வரங்கம் உள்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து சேத்தியாதோப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர்லால் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன், சப்-இன்ஸ்பெக்டர் பாரதி ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. அந்த தனிப்படையினர் கொலையாளிகளை பல்வேறு இடங்களில் தேடி வந்தனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு கொலை வழக்கில் தொடர்புடைய ராஜேசை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
மற்ற 5 பேரை தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று செல்வரங்கம், செல்வமணி, ஞானகுரு, சுரேஷ் ஆகிய 4 பேர் சிதம்பரம் கோர்ட்டில் சரண் அடைந்தனர். இதையடுத்து நீதிபதி உத்தரவுப்படி அவர்கள் 4 பேரும் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் கொலை வழக்கில் தொடர்புடைய வாலிபர் கல்யாணசுந்தரத்தை போலீசார் தேடி வருகின்றனர்.
மேலாதிக்கவாதிகளின் அடக்குமுறைகளால் பாதிக்கப்படும் கீழ்த்தட்டு மக்களில் சிலர் இருவர்க்கத்துக்கும் இடையிலான இடைவெளியை குறைப்பதற்கு ஆயுத வன்முறையே சிறந்த தீர்வென கருதுகின்றனர்.

இவர்களில் சிலர் வன்முறையை கைவிட்டு நன்முறை பாதைக்கு திரும்புகின்றனர். அவ்வகையில், ஒடிசா மாநிலம், மல்லாங்கிரி மாவட்டத்தில் தலைக்கு ஒரு லட்சம் ரூபாய் சன்மானம் அறிவிக்கப்பட்ட பெண் மாவோயிஸ்ட் இடி மடி(23) இன்று அம்மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் ஜக்மோகன் மீனா முன்னிலையில் இன்று சரண் அடைந்தார்.
கொலை உள்ளிட்ட பல வழக்குகளில் போலீசாரால் தேடப்பட்டு வந்த இவருக்கு ஒடிசா மாநில அரசின் அறிவிப்பின்படி வீடு கட்ட நிதியுதவி, கல்வி கற்க விரும்பினால் அதற்கான நிதி அல்லது விரும்பிய தொழில் செய்வதற்கான பயிற்சி அளிக்கப்படும் என போலீஸ் சூப்பிரண்ட் தெரிவித்தார். #WomanMaoist #OdishaMaoist #Maoistsurrenders
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே பேட்மாநகரம் வீரன் சுந்தரலிங்கம் நகர் நடுத்தெருவைச் சேர்ந்தவர் வினோத் (வயது 28). பிரபல ரவுடியான இவர் கடந்த 23-ந்தேதி இரவில் ஏரல் அருகே மேலமங்களகுறிச்சி தாமிரபரணி ஆற்றங்கரையில் உள்ள சுடுகாட்டு பகுதியில் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து ஏரல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில் வினோத் கொலை செய்யப்பட்டு கிடந்த இடத்தின் அருகில் தாமிரபரணி ஆற்றில், நேற்று முன்தினம் குரும்பூர் அருகே கல்லாம்பாறையைச் சேர்ந்த ராமச்சந்திரன் (22) உடலில் பலத்த வெட்டுக்காயங்களுடன் பிணமாக மிதந்தார். இவரும், வினோத்தும் நண்பர்கள்.
வினோத் கொலை செய்யப்பட்ட நாளில் இருந்து ராமச்சந்திரனும் மாயமானது தெரியவந்தது. வினோத்தும், ராமச்சந்திரனும் ஒரே நாளில் கொலை செய்யப்பட்டது, போலீசாரின் விசாரணையில் தெரிந்தது. இதையடுத்து இரட்டைக்கொலை வழக்காக போலீசார் மாற்றி பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
இந்த நிலையில் வினோத், ராமச்சந்திரன் ஆகிய 2 பேரையும் கொலை செய்ததாக, மேலமங்களகுறிச்சி விநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்த துரைமுத்து என்ற ராஜா (26), அவருடைய மைத்துனர் முத்துமுருகன் (26) ஆகிய 2 பேரும் ஸ்ரீவைகுண்டம் கிராம நிர்வாக அலுவலர் பாலசுப்பிரமணியத்திடம் சரண் அடைந்தனர்.
2 பேரையும் அவர் ஏரல் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். இதையடுத்து ராஜா, முத்துமுருகன் ஆகிய 2 பேரையும் போலீசார் நேற்று கைது செய்தனர்.
கைதான ராஜா, முத்துமுருகன் ஆகிய 2 பேரையும் போலீசார் ஸ்ரீவைகுண்டம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, பேரூரணியில் உள்ள மாவட்ட சிறையில் அடைத்தனர். இரட்டைக்கொலைக்கு பயன்படுத்திய 2 அரிவாள்களையும் போலீசார் கைப்பற்றினர்.
இரட்டை கொலையில் தலைமறைவான தனுஷ்கோடி, கண்ணன் ஆகிய 2 பேரையும் வலைவீசி தேடி வந்தனர். இந்நிலையில் தேடப்பட்டு வந்த கண்ணன், தனுஷ்கோடி ஆகிய இரண்டு பேரும் நேற்று மாலை ஏரல் சிறுதொண்டநல்லூர் கிராம நிர்வாக அதிகாரியிடம் சரணடைந்தனர். இதையடுத்து சரணடைந்த 2 பேரையும் ஏரல் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். பின்னர் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். #tamilnews
டெல்லியில் உள்ள பிரபல பைவ் ஸ்டார் ஓட்டலுக்கு சென்ற ஆஷிஷ் பாண்டே என்பவர் துப்பாக்கியுடன் சென்று, அங்கு இருந்தவர்களை மிரட்டிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதையடுத்து இந்த வழக்கு குறித்து டெல்லி ஆர்.கே புரம் பகுதியில் உள்ள காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.

இந்த வழக்கில் அவரை 4 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க கோரிக்கை விடுக்கப்பட்டு இருந்த நிலையில், அதற்கு அவசியம் இல்லை என ஆஷிஷ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதிட்டார்.
இருதரப்பு வாதங்களையும் முழுமையாக விசாரித்த நீதிமன்றம், ஆஷிஷ் பாண்டேவை ஒருநாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க உத்தரவிட்டுள்ளது. #AshishPandey #DelhiCourt #PoliceCustody
தருமபுரி:
தருமபுரி மாவட்டம் இண்டூர் அருகே உள்ள கூலிக்கொட்டாய் கிராமத்தை சேர்ந்தவர் துரைசாமி (வயது 53).
விவசாயியான இவர் தமிழக வாழ்வுரிமை கட்சியில் விவசாய அணி ஒன்றிய செயலாளராக இருந்து வந்தார். இவருக்கும் அதேபகுதியை சேர்ந்த விவசாயியான கிருஷ்ணன்(55). என்பவருக்கும் நிலத்தகராறு காரணமாக முன்விரோதம் இருந்தது.
நேற்று முன்தினம் கிருஷ்ணன், தனது மனைவி ராணியுடன் தனது நிலத்திற்கு சென்றார். அப்போது வீட்டுக்கு அருகில் இருந்த துரைசாமி மற்றும் அவருடைய மனைவி முத்து ஆகிய 2 பேரும், தங்களது நிலத்தில் உள்ள பாதையில் செல்லக்கூடாது மீண்டும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. உடனே துரைசாமி வீட்டுக்கு அருகில் கிடந்த தடியால் கிருஷ்ணனை தாக்கினார்.
அப்போது ஆத்திரமடைந்த கிருஷ்ணன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் துரைசாமியின் மார்பில் குத்தினார். ரத்த வெள்ளத்தில் அவர் சரிந்து விழுந்தார்.
அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து துரைசாமியை மீட்டு தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். டாக்டர்கள் பரிசோதித்த போது துரைசாமி வழியிலேயே இறந்து விட்டது தெரிவித்தனர்.
இதுகுறித்து இண்டூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர்.
அப்போது துரைசாமியின் உறவினர்கள் நிலத்தகராறு காரணமாக துரைசாமியை பக்கத்து நிலத்துக்காரர் கிருஷ்ணன் குத்தி கொலை செய்து விட்டு தப்பி ஓடிவிட்டார். என்பது தெரியவந்தது. உடனே போலீசார் துரைசாமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
பின்னர் துரைசாமியின் உறவினர்களும், தமிழக வாழ்வுரிமை கட்சியினரும் உடலை வாங்க மறுத்து போராட்டம் நடத்தினர். அப்போது அங்கு வந்த போலீசார் சமாதானம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். விரைவில் கொலையாளி கிருஷ்ணனை விரைவில் கைது செய்து விடுவதாக கூறினர். இதையடுத்து அவர்கள் துரைசாமி உடலை பெற்று கொண்டு அங்கிருந்து சென்றுவிட்டனர்.
இதுகொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான கிருஷ்ணனை தேடி வந்தனர்.
இந்த நிலையில் தேடப்பட்டு வந்த கிருஷ்ணன் நேற்று இண்டூர் போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார். போலீசார் அவரை கைது செய்தனர்.
வாலாஜா:
ராணிப்பேட்டை சாமிநாதன் தெருவை சேர்ந்தவர் அக்பர் (வயது 31). மாட்டு வியாபாரி. இவரது மனைவி ரிகானாபேகம் (27). இவர்களுக்கு அப்துல்வாஹித் (3) என்ற ஒரு ஆண் குழந்தை உள்ளது. கடந்த மாதம் 7-ந் தேதி அக்பர் ராணிப்பேட்டை வாரச்சந்தைக்கு வீட்டில் இருந்து பைக்கில் சென்றார்.
அப்போது அவர், வன்னிவேடு அருகே கொல்லப்பட்ட நிலையில் பிணமாக மீட்கப்பட்டார். வாலாஜா போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அக்பரின் மனைவி ரிகான பேகத் தனது கள்ளக்காதலன் காலித் அகமதுடன் சேர்ந்து திட்டமிட்டு கூலிப்படையை ஏவி தீர்த்துக்கட்டியது தெரியவந்தது.
கொலையில் தொடர்புடைய அக்பரின் மனைவி ரிகானா பேகம் மற்றும் கூலிப்படை கும்பல் விவேக், சதீஷ், லோகநாதன், கிருபாகரன் ஆகிய 5 பேரை வாலாஜா போலீசார் கைது செய்தனர். மேலும், முக்கிய குற்றவாளியான கள்ளக்காதலன் காலித்அகமது, சின்ன குட்டி, ராஜூ ஆகிய 3 பேரை தனிப்படை போலீசார் தேடி வந்தனர்.
இந்நிலையில் காஞ்சீபுரம் மாவட்டம் உத்தரமேரூர் கோர்ட்டில் கள்ளக்காதலன் காலித்அகமது சரணடைந்தார். பின்னர் அவர், வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டார். மேலும், சின்ன குட்டி, ராஜூ ஆகிய 2 குற்றவாளிகளை பிடிக்க தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
கேரள மாநிலம் கொள்ளம் பகுதியில் தனது கடந்த கால வாழ்க்கையில் நடந்த தவறு குறித்து பாவ மன்னிப்பு கேட்பதற்காக சென்ற பெண்ணை, அவர் கூறிய தகவலை வைத்துக் கொண்டு அந்த பாதிரியார் பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். அதுமட்டுமின்றி, அந்த தகவலை இன்னும் சில பாதிரியார்களுக்கும் பகிர்ந்து அவர்களும் அந்த பெண்ணை பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்துள்ளனர்.
இந்த சம்பவம் அவரது கணவரின் மூலமாக வெளிவந்ததை அடுத்து மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் குற்றவாளிகளை காப்பாற்ற கேரளாவின் சில பாதிரியார்கள் முயற்சி செய்த தகவலும் அம்பலமானது.
இதையடுத்து, இந்த சம்பவம் குறித்து 4 பாதிரியார்கள் மீது கிரிமினல் வழக்குப்பதிவு செய்தனர். அதன்பின்னர் ஜாப் மேத்யூ, ஜான்சன் மேத்யூ ஆகிய இரண்டு பாதிரியார்களும் தாமாக முன்வந்து சரணடைந்தனர். அதன்பிறகு அவர்களுக்கு ஜாமின் அளிக்கப்பட்டது.
இதேபோல், தலைமறைவாக இருந்த 2 பாதிரியார் ஆப்ரகாம் வர்கீஸ் மற்றும் ஜெய்ஸ் கே.ஜார்ஜ் ஆகியோர் முன்ஜாமின் கோரி கேரள உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். ஆனால் அவர்களின் மனு நிராகரிக்கப்படவே உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.
அந்த மனுவை விசாரித்த அமர்வு, அவர்களின் மனுவை நிராகரித்து சரணடையும்படி உத்தரவிட்டது. இதையடுத்து, பாதிரியார் ஆப்ரகாம் வர்கீஸ் திருவல்லா நீதிமன்றத்தின் முன்பும், பாதிரியார் ஜெய்ஸ் கே.ஜார்ஜ் போலீசாரிடமும் சரணடைந்தனர்.
உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படி இருவரும் சரணடைந்ததால், விரைவில் இவர்கள் ஜாமினில் வெளிவருவார்கள் என தெரிகிறது. #Kerala #PriestRapeCase
ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பு படைகளுக்கும், தலீபான்களுக்கும் இடையே நடந்து வரும் உள்நாட்டுப்போரை பயன்படுத்தி ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பினர் அங்கு கால் பதித்து ஆதிக்கம் செலுத்தத் தொடங்கினர். ஆனால் அவர்களுக்கும் தலீபான்களுக்கும் இடையே மோதல்கள் நடந்து வந்தன.
குறிப்பாக ஆப்கானிஸ்தானின் வடக்கு மாகாணமான ஜோஸ்ஜான் மாகாணத்தில் இரு தரப்பினருக்கும் இடையே கடும் சண்டை நடந்து வந்தது. இன்னொரு பக்கம் ஆப்கானிஸ்தான் மற்றும் அமெரிக்க படைகளிடம் இருந்தும் ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு அழுத்தம் வந்தது. இந்த நிலையில் அங்கு 150-க்கும் மேற்பட்ட ஐ.எஸ். பயங்கரவாதிகள், ஆப்கானிஸ்தான் படைகளிடம் சரண் அடைந்தனர்.
இதுபற்றி வட பகுதி ராணுவ தளபதி முகமது ஹனிப் ரெஸாயீ கூறும்போது, “கடந்த காலத்திலும் இப்படி ஐ.எஸ். பயங்கரவாதிகள் சரண் அடைந்தது உண்டு. ஆனால் இந்த முறை அதன் தலைவர்களில் ஒருவரும், துணைத்தலைவரும் 150-க்கும் மேற்பட்டோருடன் சரண் அடைந்து இருப்பது குறிப்பிடத்தக்கது” என்றார்.
இதன்மூலம் வட பகுதியில் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் ஆதிக்கம் முடிவுக்கு வருவதாகவும் அவர் கூறினார். #Afghanistan #tamilnews
சிவகாசி விவேகானந்தர் காலனியை சேர்ந்த பழனிசாமி மகன் பாலமுருகன் (வயது 25). இவர் சிவகாசியில் உள்ள ஒரு தனியார் வங்கியில் கடன் வசூல் செய்யும் பிரிவில் வேலை செய்து வந்தார். இந்த நிலையில் நேற்றுமுன்தினம் காலையில் தனது நண்பர் சதீஷ்குமார் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் சென்றார். ஆலமரத்துப்பட்டி அருகே அவர்களை 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த கும்பல் வழிமறித்து பாலமுருகனை கடத்தி சென்றது. இந்த சம்பவம் குறித்து சிவகாசி கிழக்கு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இந்தநிலையில் செங்மலப்பட்டியில் உள்ள பட்டாசு ஆலை அருகில் பாலமுருகன் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். இதுபற்றிய தகவலின்பேரில் அவரது உடலை போலீசார் கைப்பற்றினர். பின்னர் அவரை கடத்தி சென்றது யார் என்பது குறித்து சதீஷ்குமார் கொடுத்த புகாரின் பேரில் முத்துராமலிங்கபுரம்காலனியை சேர்ந்த சித்திரைவேல், மணி என்ற பள்ளமணி, ஜோதி, கார்த்திக் என்ற குட்டைகார்த்திக் உள்பட சிலர் மீது சிவகாசி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் பாலமுருகன் கொலை வழக்கில் தொடர்புடைய சிவகாசி விவேகானந்தர்காலனியை சேர்ந்த ராஜபாண்டி மகன் சிவசக்திபாண்டியன்(23), சர்க்கரை மகன் கிருஷ்ணன் (25), முருகன் மகன் பாலமுருகன் (24), ராமசாமி மகன் சித்திரைவேல் (30) ஆகிய 4 பேரும் நேற்று மதுரை 4-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் சரணடைந்தனர். அவர்களை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்கும்படி மாஜிஸ்திரேட்டு கவுதமன் உத்தரவிட்டார். அதன்பேரில் போலீசார் அவர்களை மதுரை சிறையில் அடைத்தனர்.
தஞ்சையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக கடந்த மாதம் 19-ந்தேதி ம.தி.மு.க.பொது செயலாளர் வைகோ, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி விமான நிலையத்திற்கு வந்தனர். அப்போது அவர்களை வரவேற்க இரு கட்சிகளை சேர்ந்த தொண்டர்களும் அங்கு குவிந்திருந்தனர்.
அப்போது நாம் தமிழர் கட்சி தொண்டர் ஒருவர் , வைகோ குறித்து தெரிவித்த கருத்தால் இரு தரப்பினருக்கும் மோதல் ஏற்பட்டது. ஒருவருக்கொருவர் கொடி கம்பத்தால் தாக்கி மோதிக்கொண்டனர். இதில் ம.தி.மு.கவை சேர்ந்த 2பேர் காயமடைந்தனர்.
இந்த சம்பவம் குறித்து ம.திமு.க.வின் திருச்சி மாநகர் மாவட்ட பொறுப்பாளர் வெல்லமண்டி சோமு ஏர்போர்ட் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் சீமான், நாம் தமிழர் கட்சியை சேர்ந்த பிரபு உள்ளிட்ட 12 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதில் 5பேர் கைது செய்யப்பட்டனர். சீமான் மதுரை ஐகோர்ட்டில் முன்ஜாமீன் பெற்றார்.
இதனிடையே ஏர்போர்ட் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ், பொது சொத்துக்கு சேதம் விளைவித்ததாகவும், போலீஸ் வாகனங்களை சேதப்படுத்தியதாகவும் ம.தி.மு.க. மற்றும் நாம் தமிழர் கட்சியினர் மீது புகார் செய்தார். அதன் பேரில் சீமான் மற்றும் ம.தி.மு.க. மாநகர் மாவட்ட பொறுப்பாளர் வெல்லமண்டி சோமு உள்பட இரு தரப்பினரை சேர்ந்த பலர் மீது 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர்.
இந்தநிலையில் இந்த வழக்கு தொடர்பாக திருச்சி மாநகர் மாவட்ட ம.தி.மு.க. பொறுப்பாளர் வெல்ல மண்டி சோமு, நிர்வாகிகள் ராஜமாணிக்கம், சுப்பிரமணி உள்பட 6 பேர் திருச்சி மாஜிஸ்திரேட் கோர்ட்டு எண் 6 ல் சரணடைந்தனர். அவர்களுக்கு நீதிபதி நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். #tamilnews