என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "surveillance"

    • கேரள அரசு மாநிலம் முழுவதும் டிஜிட்டல் ரிசர்வே செய்து வருகிறது.
    • எல்லைப்பகுதியில் டிரோன்கள் பறக்கவிடப்பட்டு எந்தெந்த இடங்களில் இதுபோன்ற பணிகள் நடைபெறுகிறது எனவும் கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

    கூடலூர்:

    கேரள அரசு மாநிலம் முழுவதும் டிஜிட்டல் ரிசர்வே செய்து வருகிறது. கடந்த 1-ந்தேதி முதல் நடந்து வரும் இப்பணியில் ஆக்கிரமிப்பு அகற்றம், நிலம் வரையறை, இடங்களை வகைப்படுத்துதல் ஆகியவற்றுக்கான பணிகள் மேற்கொள்வதாக அம்மாநில முதல்-மந்திரி பிணராயிவிஜயன் தெரிவித்துள்ளார். இதில் 1500 சர்வேயர்கள் மற்றும் 3000-க்கும் மேற்பட்ட உதவியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

    இப்பணியை 4 ஆண்டுகளுக்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மறு அளவீடு செய்ய வேண்டுமானால் முதலில் தமிழக-கேரள எல்லையை அளவிட வேண்டும். அப்போதுதான் இப்பணி முழுமைபெறும். இதைச்செய்யாமல் வருவாய் நிலங்களை கேரள அரசு மறுஅளவீடு செய்வதன்மூலம் தமிழக வருவாய் நிலங்கள் பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது.

    மொழிவாரி மாநிலம் பிரிக்கப்பட்டபோது கேரள அரசு இடுக்கி மாவட்டத்தில் உள்ள தேவிகுளம், பீர்மேடு, உடும்பன்சோலை ஆகிய பகுதிகள் 1956-ம் ஆண்டு முதலே ஆக்கிரமிக்கப்பட்டது. பின்னர் அங்கிருந்த தமிழக வனநிலங்கள் வருவாய் நிலங்களாகவும், பட்டா நிலங்களாகவும் மாநில அரசு மாற்றுவிட்டது.

    இதனை தமிழக அரசு ஆரம்பத்திலேயே எச்சரித்து தடுத்து நிறுத்த வேண்டும் என விவசாயிகள், சமூகஆர்வலர்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினரும் கோரிக்கை விடுத்தனர். ஏற்கனவே தமிழக எல்லை பகுதியில் உள்ள கண்ணகி கோவிலுக்கு தமிழர்களால் சென்று வழிபாடு செய்ய முடியவில்லை.

    குமுளி சோதனைச்சாவடியில் தமிழக பகுதி ஆக்கிரமிக்கப்பட்டு கபளிகரம் செய்யப்பட்டது. இதேபோன்று இருமாநில எல்லை பகுதியில் அமைந்துள்ள வருவாய் நிலங்கள் ஆக்கிரமிக்கப்படுவதாக பல்வேறு தரப்பினர் புகார் தெரிவித்தனர். இதுகுறித்து தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதியிடம் கேட்டபோது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிககை எடுக்கப்படும் என்றார்.

    இதனைதொடர்ந்து தேனி மாவட்ட நிர்வாகத்திற்கு தமிழக அரசு சார்பில் அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இதில் ஏற்கனவே தமிழக பகுதிகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தால் அதன்விபரம் மற்றும் கேரள அதிகாரிகள் சார்பில் வைக்கப்பட்டுள்ள அறிவிப்பு பலகை போன்றவற்றை தெரிவிக்குமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

    மேலும் எல்லைப்பகுதியில் டிரோன்கள் பறக்கவிடப்பட்டு எந்தெந்த இடங்களில் இதுபோன்ற பணிகள் நடைபெறுகிறது எனவும் கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. விரைவில் தமிழக மற்றும் கேரள அதிகாரிகள் இணைந்து பேச்சுவார்த்தை நடத்தி இப்பிரச்சினைக்கு தீர்வு காணவேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

    • மதுரையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வழிபாட்டுத்தலங்கள் மற்றும் முக்கிய இடங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
    • தமிழகத்தில் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையில் இந்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    மதுரை

    மதுரையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வழிபாட்டுத்தலங்கள் மற்றும் முக்கிய இடங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    கோவை கார் வெடிப்பு மற்றும் மங்களூரு குண்டு வெடிப்பு சம்பவங்களை அடுத்து தமிழகத்தில் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு கட்டுப்பாடுகளை போலீசார் தீவிர படுத்தி உள்ளனர்.

    24 மணி நேர வாகன சோதனை மற்றும் ரோந்து பணிகளையும் முடுக்கி விட்டுள்ள போலீசார் முன்னே எச்சரிக்கை நடவடிக்கைகளில் தீவிரங்காட்டி வருகிறார்கள்.

    மதுரை மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மக்கள் கூடும் இடங்களான பஸ் நிலையங்கள், ரயில் நிலையங்கள் மற்றும் அரசு அலுவலகங்கள், மார்க்கெட்டுகள் வழிபா ட்டுத் தலங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். முக்கிய இடங்களில் நீண்ட நேரமாக நிறுத்தப்படும் வாகனங்களையும் போலீசார் கண்காணித்து வருகிறார்கள்.

    அழகர் கோவில், ஒத்தக்கடை, திருமங்கலம், கப்பலூர், உசிலம்பட்டி, வடக்கம்பட்டி, அலங்காநல்லூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மாவட்ட போலீஸ்சூப்பிரண்டு சிவபிரசாத் உத்தரவின் பேரில் சி.ஆர்.பி.எப். போலீ சார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    நகர் பகுதியில் போலீஸ் கமிஷன் செந்தில்குமார் உத்தரவின் பேரில் தனிப்படையினர் அனைத்து பகுதிகளிலும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் சோதனை சாவடிகளில் வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சந்தேகத்துக்கிடமான வாகனங்களும் சோதனை நடத்தப்படுகிறது. போலீசார் 24 மணி நேரமும் விழிப்புடன் இருக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

    • குற்ற தடுப்பு நடவடிக்கையாக கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது.
    • பனியன் கம்பெனிகள், அதிகமான மக்கள் குடியிருக்கும் பகுதியாகும்.

     பெருமாநல்லூர் : 

    திருப்பூரில் இருந்து பெருமாநல்லூர் செல்லும் சாலையில் அமைந்துள்ளது கணக்கம்பாளையம். இந்த நால் ரோடு சாலை மிகவும் முக்கியமான சந்திப்பு இடமாகும். பல பனியன் கம்பெனிகள், அதிகமான மக்கள் குடியிருக்கும் பகுதியாகும். இதை கருத்தில் கொண்டு குற்ற தடுப்பு நடவடிக்கையாக சுமார்ரூ .1 லட்சம் மதிப்புள்ள கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் போக்குவரத்து சீரமைப்பு மற்றும் குற்ற தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கு மிகுந்த பயனுள்ளதாக உள்ளதாக பெருமாநல்லூர் போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் முருகன் தெரிவித்துள்ளார்.

    • காவல்துறை துணை கண்காணிப்பாளர் அறிவுறுத்தலின்படி , 3 புதிய கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.
    • குற்ற தடுப்பு நடவடிக்கைகளையும், போக்குவரத்து விதிமீறல்களையும் கண்காணிக்க மிகுந்த பயனுள்ளதாக இருக்கும் என்று தெரிவித்தார்.

    பெருமாநல்லூர் : 

    பெருமாநல்லூரில் இருந்து திருப்பூர் செல்லும் சாலையில் உள்ளது அய்யம்பாளையம். முக்கிய சந்திப்பு பகுதியான இங்கு திருப்பூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் அவிநாசி உட்கோட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் அறிவுறுத்தலின்படி , 3 புதிய கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.

    இதன் மூலம் குற்ற தடுப்பு நடவடிக்கைகளையும், போக்குவரத்து விதிமீறல்களையும் கண்காணிக்க மிகுந்த பயனுள்ளதாக இருக்கும் என்று பெருமாநல்லூர் போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் முருகன் தெரிவித்தார்.

    • போதைப் பொருள் கடத்தல், கடல்சார் தீவிரவாத ஊடுருவலை தடுக்க நடவடிக்கை.
    • இந்தியா சார்பில், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட கடற்படை கப்பல்கள் பங்கேற்பு

    இந்தியப் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள நாடகளுடன் இணைந்து, சர்வதேச கடல்சார் பாதுகாப்பை இந்தியா மேற்கொண்டு வருகிறது. அனைத்து பிராந்தியங்களிலும் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி என்ற தொலைநோக்கு பார்வையின் அடிப்படையில் இந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக இந்தியா – இந்தோனேஷியா கடற்படைகள் ஒருங்கிணைந்த ரோந்து மற்றும் கண்காணிப்பு பணி கடந்த 8ம் தேதி தொடங்கியது.

    வரும் 19ம் தேதி வரை நடைபெறும் இந்த ரோந்து பணியின்போது, கடல் பகுதிகளில் சட்டவிரோத மீன்பிடிப்பு, போதைப்பொருள் கடத்தல், கடல்சார் தீவிரவாதம், ஊடுருவல், போன்றவற்றைத் தடுத்து நிறுத்தும் பணியில் இரு நாட்டு கடற்படைகளும் இணைந்து மேற்கொண்டு வருகின்றன. மேலும், கடற்கொள்ளையர்கள் மற்றும் சட்டவிரோத அகதிகள் குடியேற்றம் ஆகியவற்றைத் தடுக்கவும் இந்த ரோந்து பணி உதவிகரமாக இருக்கும் என்று மத்திய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


    சர்வதேச கடல்சார் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு அருகே நடைபெற்று வரும் இந்த பணியில் இந்தியா சார்பில், உள்நாட்டிலேயேத் தயாரிக்கப்பட்ட கடற்படை கப்பலான ஐஎன்எஸ் கர்முக், எல்-58 கப்பல் உள்ளிட்டவை ஈடுபடுத்தப்படுகின்றன. இந்தோனேஷியா சார்பில் கேஆர்ஐ கட் நியாக் டைன், கபிடன் படிமுரா கிளாஸ் கேர்வீட் உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன. 

    • ஆங்கிலப் புத்தாண்டையொட்டி அசம்பாவித சம்பவங்களை தடுக்க சேலம் மாநகரில் உள்ள அனைத்துப் பகுதிகளிலும் பலத்த பாதுகாப்பு செய்யப்பட்டுள்ளது.
    • 1000- க்கும் மேற்பட்ட போலீசார், கிறிஸ்தவ தேவாலயங்கள், பழைய பஸ் நிலையம், 4 ரோடு, புதிய பஸ்நிலையம், 5 ரோடு, ரயில் நிலையம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் தீவிர கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    அன்னதானப்பட்டி:

    கிறிஸ்துமஸ், ஆங்கிலப் புத்தாண்டையொட்டி அசம்பாவித சம்பவங்களை தடுக்க சேலம் மாநகரில் உள்ள அனைத்துப் பகுதிகளிலும் பலத்த பாதுகாப்பு செய்யப்பட்டுள்ளது. மாநகர போலீஸ் கமிஷனர் நஜ்முல் ஹோடா உத்தரவின் பேரில், துணை கமிஷனர்கள் லாவண்யா, மாடசாமி தலைமையில், 1000- க்கும் மேற்பட்ட போலீசார், கிறிஸ்தவ தேவாலயங்கள், பழைய பஸ் நிலையம், 4 ரோடு, புதிய பஸ்நிலையம், 5 ரோடு, ரயில் நிலையம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் தீவிர கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    இது குறித்து போலீசார் கூறுகையில், "கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகையையொட்டி, ஒவ்வொரு போலீஸ் நிலையத்தில் இருந்து, 3 பிரிவாக பிரிந்து, இன்ஸ்பெக்டர் தலைமையில் ரோந்து பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். மேலும் போலீசாருடன் ஆயுதப்படை போலீசார், போலீஸ் நண்பர்கள் குழுவினர் சேர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு தினங்களில், நள்ளிரவு நேரங்களில், 18 வயதுள்ள சிறுவர்கள் மோட்டார் சைக்கிளில் செல்வதை போலீசார் தொடர்ந்து கண்காணிப்பு செய்ய உள்ளனர். ஓட்டுநர் உரிமம் இல்லாமல், சிறுவர்கள் வாகனங்கள் ஓட்டினால், அந்த வாகனங்களின் உரிமையாளர் மீது சட்டப்படி நடவடிக்கைகள் எடுக்கப்படும். 18 வயது முடிவடையாத தங்கள் மகன்களுக்கு எக்காரணம் கொண்டும், மோட்டார் சைக்கிள் ஓட்ட பெற்றோர் அனுமதிக்கக் கூடாது.

    அதேபோல், செல்போன்கள் மூலம் சைபர் கிரைம் மோசடிகள் தற்போது அதிகரித்து வருவதால், தங்களது குழந்தைகளை பெற்றோர் கண்காணித்து, அவர்களின் செல்போன் பயன்பாட்டை குறைக்க வேண்டும். உடற்பயிற்சி, விளையாட்டுகள், புத்தகங்கள் படிப்பது உள்ளிட்ட பயனுள்ள செயல்களில் குழந்தைகள் ஈடுபட பெற்றோர் தகுந்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் ". இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • நள்ளிரவு 2 மணியளவில் சேலம் கொண்டலாம்பட்டி பட்டர் பிளை மேம்பாலம் அருகே லாரிகள் வந்த போது, ஒரு லாரி பழுதாகி நின்று விட்டது. அவர்களில் ஒருவர் திடீரென காரை எடுத்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச் செல்ல, அவரை பின் தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த இருவரும் மின்னல் வேகத்தில் அங்கிருந்து சென்று விட்டனர்.
    • சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமரா பதிவுகளை கைப்பற்றி அதனடிப்படையில் ஆய்வு செய்தனர். அதில் அங்குள்ள கேமரா பதிவில் சிலர் மோட்டார் சைக்கிள் மற்றும் காரில் வேகமாக தப்பிச் செல்லும் காட்சிகள் பதிவாகி உள்ளது.

    அன்னதானப்பட்டி:

    திருச்சியில் இருந்து பெங்களூருவுக்கு சேலம் வழியாக காற்றாலை மின்சாரம் தயாரிக்க பயன்படுத்தப்படும் இறக்கைகளை ஏற்றிக் கொண்டு 2 லாரிகள் சென்று கொண்டிருந்தன. இந்த லாரிகளை கர்நாடகா மாநிலம், ஹசன் மாவட்டம், சென்னார்யாப்பட்டணம் பகுதியைச் சேர்ந்த டிரைவர் மோகன் (35) என்பவர் காரில் கண்காணித்த படி பின்னால் சென்றார். நள்ளிரவு 2 மணியளவில் சேலம் கொண்டலாம்பட்டி பட்டர் பிளை மேம்பாலம் அருகே லாரிகள் வந்த போது, ஒரு லாரி பழுதாகி நின்று விட்டது.

    இதையடுத்து 2 லாரிக–ளையும் சாலையோரமாக நிறுத்தி பழுதை சரி செய்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த 3 நபர்கள் கார் டிரைவர் மோகனிடம் குடிக்க தண்ணீர் கேட்டதாக கூறப்படுகிறது. அவர் லாரியில் தண்ணீர் இருக்கி–றது, எடுத்து வருகிறேன் என்று கூறிவிட்டுச் சென்றார்.

    அந்த சமயத்தில், அவர்களில் ஒருவர் திடீரென காரை எடுத்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச் செல்ல, அவரை பின் தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த இருவரும் மின்னல் வேகத்தில் அங்கிருந்து சென்று விட்டனர். இது குறித்த புகாரின் பேரில் அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமரா பதிவுகளை கைப்பற்றி அதனடிப்படையில் ஆய்வு செய்தனர். அதில் அங்குள்ள கேமரா பதிவில் சிலர் மோட்டார் சைக்கிள் மற்றும் காரில் வேகமாக தப்பிச் செல்லும் காட்சிகள் பதிவாகி உள்ளது. இது குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

    • காட்டுப்பகுதியை ட்ரோன் கேமரா மூலம் முதலில் சுற்றி வளைத்தனர்.
    • காவல் துறையினர் சுமார் 8 பேரையும் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகர் பகுதியில் நடக்கும் குற்ற சம்பவங்களை தடுக்கவும் குற்றவாளிகளை கண்காணிக்கும் வகையிலும் பிரத்யேகமாக அதிநவீன தொழில் நுட்பங்களுடன் கூடிய ட்ரோன் கேமரா வரவழைக்கப்பட்டு அதன் மூலம் மாநகரின் முக்கிய பகுதிகளில் கூட்ட நெரிசல் மிகுந்த பகுதிகளை தேர்வு செய்து கண்காணித்து வருகின்றனர்.

    இந்த கேமரா மூலம் கண்காணிக்கப்படும் பொழுது சந்தேகப்படும் நபர்களின் புகைப்படங்கள் இந்த கேமராவில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதால் அவர்களை அடையாளம் கண்டு அந்த குற்றவாளி எங்கு இருக்கிறார் என்பதை துல்லியமாக பதிவு செய்து கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுக்கும் அதி நவீன தொழில்நுட்பம் உள்ளது.

    திருப்பூர் மாநகரத்திற்கு உட்பட்ட மாஸ்கோ நகர், பவானி நகர், பாளையக்காடு, எம். எஸ். நகர், உள்ளிட்ட பகுதியில் கஞ்சா , போதை ஊசி மற்றும் போதை மாத்திரை புழக்கத்தில் இருப்பதால் மாநகர போலீசார் கடந்த சில மாதங்களாக பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். இருப்பினும் திருப்பூர் மாநகர பகுதியில் ஒரு சில இடங்களில் இன்னும் இந்த தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் புழக்கத்தில் இருந்து வருவதை ரகசிய தகவல் மூலம் அறிந்த காவல் துறையினர் திருப்பூர் வடக்கு உதவி ஆணையர் அனில்குமார், வடக்கு காவல் நிலையம் இன்ஸ்பெக்டர்கள் உதயகுமார் மற்றும் ராஜசேகர் மற்றும் போலீசார் குழுவாக சென்று ஊத்துக்குளி சாலை பவானி நகர் பகுதியில் உள்ள காட்டுப்பகுதியை ட்ரோன் கேமரா மூலம் முதலில் சுற்றி வளைத்தனர்.

    குறிப்பாக இந்த டிரோன் மற்ற டிரோன்களை போல் இல்லாமல் டார்ச் லைட் இருந்ததும் அதை கண்ட இளைஞர்கள் தலைதெறிக்க ஓடினர். ஒருசிலர் வந்த இருசக்கர வாகனத்தில் எங்கு செல்வது என்று தெரியாமல் காட்டுக்குள் தப்பி சென்றனர். ஆனாலும் காவல் துறையினர் விரட்டி சென்று சுமார் 8 பேரையும் இரண்டு இருசக்கர வாகனங்களை பிடித்து திருப்பூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 70-க்கு மேல் பதிவாகியுள்ளது.
    • கடந்த வாரத்தில் ஒரு தொழிற்சாலையில் புதிய கொரோனா தொகுப்பு கண்டறியப்பட்டது

    கோவை,

    கோவையில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதையடுத்து தொழிற்சாலைகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

    கோவை மாவட்டத்தில் கடந்த ஒரு மாத காலமாக தொடர்ந்து கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. குறிப்பாக மாநகராட்சிப் பகுதிகளில் நோய்த் தொற்று பாதிப்பு அதிக அளவில் காணப்படுகிறது. மாவட்டத்தில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 70-க்கு மேல் அதிகரித்துள்ளதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர். இதில், மாநகராட்சியில் மட்டும் 50-க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    அண்மையில் தனியார் தொழிற்சாலையில் கொரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில் தொழிற்சாலைகளில் கண்காணிப்பு சுகாதாரத்துறையினர் தீவிரப்படுத்தியுள்ளனர்.

    இது தொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:- கோவையில் கடந்த வாரத்தில் ஒரு தொழிற்சாலையில் புதிய கொரோனா தொகுப்பு கண்டறியப்பட்டது. இதனையடுத்து, அனைத்து தொழிற்சாலைகளும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    சுகாதார ஆய்வாளர்கள் மூலம் தொடர்ந்து தொழிற்சாலைகளில் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. அதன்பின் வேறு எந்த கொரோனா தொகுப்பும் ஏற்படவில்லை. மாவட்டம் முழுவதும் பரவலாக தொற்று பாதிப்பு காணப்படுகிறது. குறிப்பாக மாநகராட்சியில் அதிக அளவில் காணப்படுகிறது. நோய்த் தொற்று பாதிப்பை தவிர்க்க பொதுமக்கள் அனைவரும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • சாதி மோதல்களை முதல்-அமைச்சர் கண்காணிக்க வேண்டும் என்று ஜான் பாண்டியன் கூறினார்.
    • தேர்தல் ஆணையம் அங்கீகாரம் அளித்து விட்டது.

    மதுரை

    மதுரை தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஜான் பாண்டியன் மதுரையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    பட்டியல் இனத்தில் இருந்து தேவேந்திர குல வேளாளர்களை விடுவிக்க வேண்டும் என்று 40 ஆண்டுகளாக நீண்ட போராட்டம் நடத்தி வருகிறோம். விரைவில் அதற்கான சூழல் வரும் என்று நம்புகிறோம்.

    மேலும் அ.தி.மு.க. பொதுக்குழு கூடி எடப்பாடி பழனிசாமியை பொதுச் செயலாளராக தேர்ந்தெடுத்து விட்டது. தேர்தல் ஆணையம் அங்கீகாரம் அளித்து விட்டது.

    எனவே தற்போதைய சூழ்நிலையில் எடப்பாடி தான் பழனிசாமி தான்

    தமிழக அரசு தொழிலாளர்களின் வேலை நேரத்தை 8 மணி நேரத்தில் இருந்து 12 மணி நேரமாக உயர்த்தும் தீர்மானத்தை நிறைவேற்றி உள்ளது. இது தொழிலாளர்களுக்கு எதிரான செயல்.

    தமிழகத்தில் ஜாதி மோதல் இருக்கிறது. சமீபத்தில் பரமக்குடியில் நடந்த கல்லூரி விழாவில் தாழ்த்தப்பட்ட மாணவன் மீது பிற மாணவர்கள்-ஆசிரியர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

    மேலும், கடலாடியில் பள்ளி ஆசிரியரை அதிகாரிகள் தாக்கியுள்ளனர். அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் யாரையும் கைது செய்யவில்லை.

    இந்தச் சம்பவங்கள் தொடர்பாக காவல்துறை துரிதமாக செயல்பட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் இதுபோன்ற சம்பவங்களை முதல்-அமைச்சர் கண்காணிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கள்ளச்சாராயம் காய்ச்சி பல்வேறு மாவட்டங்களுக்கு கடத்திச் சென்று விற்பனை செய்து வருகின்றனர்.
    • போலீசார் முகாமிட்டு கள்ளச்சாராய ஊறல்களை கண்டுபிடித்து அழித்து வருகின்றனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலை பகுதியில் 171 மலை கிராமங்களும் 75 ஆயிரத்திற்கு மேற்பட்ட மலைவாழ் மக்களும் வசித்து வருகிறார்கள். இப்பகுதி சேலம் தர்மபுரி திருவண்ணா மலை கள்ளக்குறிச்சி ஆகிய 4 மாவட்டங்களை இணை க்கும் ஒரு அடர்ந்த வனப்பகு தியாக உள்ளது. மலையில் உள்ள நீர்ஓடைகளில் வரும் தண்ணீரை பயன்படுத்தி சில சமூக விரோதிகள் கள்ளச்சாராயம் காய்ச்சி பல்வேறு மாவட்ட ங்களுக்கு கடத்திச் சென்று விற்பனை செய்து வருகின்றனர். இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் கள்ளச்சாராயம் குடித்து பல பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தை பெரும் பரபரப்பாக்கியது.

    இந்த நிலையில் கள்ளச்சாராயத்தை கட்டுப்படுத்த தமிழக அரசு பல முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது அதன் எதிரொ லியாக கல்வராய ன்மலையில் சென்னை வடக்கு மண்டல போலீஸ் சூப்பிரண்டு சக்திவேல் தலைமையிலான மதுவிலக்கு போலீசார் முகாமிட்டு கள்ளச்சாராய ஊறல்களை கண்டுபிடித்து அழித்து வருகின்றனர். இந்த நிலையில் கல்வராயன் மலையில் இருந்து கள்ளச்சாராயம் காய்ச்சி மலை அடிவாரம் பகுதி வழியாக கள்ளச்ச ராயம் கடத்தி வருவது தடுக்கும் விதமாக கல்வராயன்மலையில் உள்ள 4 புறங்களிலும் குறிப்பாக மூலக்காடு லக்கிநாயக்கன்பட்டி மாயம்பாடி துருர் ஆகிய பகுதிகளில் சோதனை சாவடிகள் அமைத்து தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இந்த நிலையில் சோதனை சாவடிகளை சென்னை வடக்கு மண்டல போலீஸ் சூப்பிரண்டு சக்திவேல் ஆய்வு செய்து கள்ளச்சா ராயத்தை கடத்தி வருவதை தடுக்கும் விதமாக நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.

    • சாப்டூர் வனப்பகுதியில் மதுவிலக்கு போலீசார் தொடர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 100 லிட்டர் சாராய ஊறல் அழிக்கப்பட்டது.
    • அந்தப் பகுதியில் டிரம்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் சாப்டூர் வனப் பகுதியில் கள்ளச்சாராய விற்பனை தொடர்பாக மதுவிலக்கு போலீசார் ரோந்து சென்று தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். சாப்டூர் கும்பமலை வனப் பகுதியில் சாராய விற்பனை நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அதன் பேரில் திருமங்கலம் மதுவிலக்கு துணை போலீஸ் சூப்பிரண்டு இளவரசன் இன்ஸ்பெக்டர் மரிய பாக்கியம் மற்றும் போலீசார் அந்தப் பகுதியில் ரோந்து சென்று கண்காணித்தனர். அப்போது அந்தப் பகுதியில் டிரம்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன. போலீசார் அவற்றை சோதனை இட்டபோது டிரம்களில் சாராய ஊறல் வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. இதையடுத்து

    அந்த டிரம்களில் இருந்த சுமார் 100 லிட்டர் சாராய ஊறலை போலீசார் கீழே கொட்டி அழித்தனர். மேலும் அந்தப் பகுதியில் சாராய ஊறல்களை பதுக்கி வைத்த நபர்கள் யார் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அந்தப் பகுதியில் கள்ளச்சாராய புழக்கத்தை தடுப்பதற்காக அந்த பகுதியில் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ×