என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "suspension"

    • 15 மாதத்துக்கு பிறகு இந்திய மல்யுத்த சம்மேளனம் மீதான இடைநீக்கத்தை மத்திய விளையாட்டு அமைச்சகம் திரும்ப பெற்றுள்ளது.
    • இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் சஞ்சய் சிங் தடையை நீக்கியதற்கு மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

    புதுடெல்லி:

    இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவராக இருந்த முன்னாள் எம்.பி. பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது வீராங்கனைகள் பாலியல் புகார் அளித்ததுடன், அவருக்கு எதிராக போராட்டமும் வலுத்ததால் அந்த பதவியில் இருந்து விலகினார். இதைத்தொடர்ந்து இந்திய மல்யுத்த சம்மேளன நிர்வாகிகள் தேர்தல் கடந்த 2023-ம் ஆண்டு டிசம்பர் மாதம் நடந்தது.

    புதிய தலைவராக பிரிஜ் பூஷன் சரண் சிங்குக்கு மிகவும் நெருக்கமான சஞ்சய் சிங் தேர்வானார். இதனால் சர்ச்சை தொடர்ந்தது. அத்துடன் புதிய நிர்வாகிகள் தேர்தல் முடிந்த சில நாட்களில் 15 மற்றும் 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான தேசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி பிரிஜ் பூஷனின் சொந்த மாநிலமான உத்தரபிரதேசத்தில் நடத்தப்படும் என்று புதிய நிர்வாகிகள் அறிவித்ததால் பிரச்சினை வெடித்தது. இதையடுத்து புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்ட 3 நாளிலேயே இந்திய மல்யுத்த சம்மேளனத்தை, மத்திய விளையாட்டு அமைச்சகம் அதிரடியாக இடைநீக்கம் செய்து உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து மறு உத்தரவு வரும் வரை மல்யுத்த சம்மேளனத்தின் அன்றாட பணிகளை கவனிக்க பூபிந்தர் சிங் பாஜ்வா தலைமையிலான இடைக்கால கமிட்டியை இந்திய ஒலிம்பிக் சங்கம் நியமித்தது.

    இந்த நிலையில் 15 மாதத்துக்கு பிறகு இந்திய மல்யுத்த சம்மேளனம் மீதான இடைநீக்கத்தை மத்திய விளையாட்டு அமைச்சகம் திரும்ப பெற்றுள்ளது. இதனால் மல்யுத்த சம்மேளனம், தேசிய விளையாட்டு சம்மேளனத்துக்கான அந்தஸ்தை மீட்டெடுத்துள்ளது. விளையாட்டு மற்றும் வீரர்களின் நலன் கருதி இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ள மத்திய விளையாட்டு அமைச்சகம், புதிய நிர்வாகிகள் இடையே அதிகார சமநிலை இருப்பதை உறுதி செய்ய வேண்டும். சர்வதேச போட்டிக்கான வீரர், வீராங்கனைகள் தேர்வில் வெளிப்படை தன்மையுடன் நடந்து கொள்ள வேண்டும் என்பது உள்பட பல்வேறு அறிவுரைகளை வழங்கி இருக்கிறது.

    'மத்திய விளையாட்டு அமைச்சகத்தின் அறிவுரையை பின்பற்றுவதில் எங்களுக்கு எந்தவித பிரச்சினையும் இல்லை என்று குறிப்பிட்டுள்ள இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் சஞ்சய் சிங் தடையை நீக்கியதற்கு மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

    • வட்டாட்சியரை இடைநீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து போராட்டம் நடைபெற்றது.
    • ஊழியர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    பாபநாசம்:

    தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் வட்டாட்சியர் அலுவலகத்தில் கள்ளக்கு றிச்சி வட்டாட்சியர் இடைநீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.

    இப்போ ராட்டத்தில் பாபநாசம் வட்டாட்சியர் அலுவலக ஊழியர்கள், தனித்துணை வட்டாட்சியர், சமூக பாதுகாப்பு திட்டம், வட்ட வழங்கல் அலவலகம், உள்ளிட்ட அனைத்து வரு வாய் துறை அலுவலர்களும் கலந்து கொண்டனர்.

    • காவலர் பொது நல இயக்கம் வலியுறுத்தல்
    • அதிகாரத்தை பயன்படுத்துவது போலீஸ் சூப்பிரண்டு வேலை தான். எனவே இந்த சம்பவத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணனை சஸ்பெண்டு செய்தது கண்டிக்கத்தக்கது.

    புதுச்சேரி:

    புதுவை காவலர் பொது நல இயக்க பொதுச்செயலாளர் கணேசன் புதுவை கவர்னர், உள்துறை அமைச்சர் மற்றும் போலீஸ் டி.ஜி.பி. ஆகியோருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    புதுவை ஒதியஞ்சாலை போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த கண்ணன் கடந்த சில நாட்களுக்கு முன்பு கம்பன் கலையரங்கில் முதல்-அமைச்சர் மற்றும் தலைமைச்செயலாளர் பங்கேற்ற நிகழ்ச்சியின் போது உருளையன் பேட்டைதொகுதி எம்.எல்.ஏ. நேரு உள்ளே செல்ல முயன்றார். இன்ஸ்பெக்டர் கண்ணன் அவரை தடுத்து நிறுத்த முயன்ற போதும் போலீசாரை மீறி அவர் நிகழ்ச்சி நடந்த இடத்துக்கு சென்றார்.

    இந்த சம்பவத்தில் நேரு எம்.எல்.ஏ.வை உள்ளே விடக்கூடாது என்ற எந்த வாய்மொழி உத்தரவும் போலீசாருக்கு பிறப்பிக்கப்பட வில்லை.

    அதே வேளையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு எம்.எல்.ஏ.வை இன்ஸ்பெக்டர் தடுத்து நிறுத்த அதிகாரம் இல்லை.

    இந்த அதிகாரத்தை பயன்படுத்துவது போலீஸ் சூப்பிரண்டு வேலை தான். எனவே இந்த சம்பவத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணனை சஸ்பெண்டு செய்தது கண்டிக்கத்தக்கது.

    சபாநாயகர் ஏம்பலம் செல்வம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்டு உத்தரவு பிறப்பித்தார். அவரது உத்தரவு வானளாவிய அதிகாரம் படைத்தவை. ஆனால் அவரது உத்தரவு இதுவரை அமல்படுத்தப்பட வில்லை.

    எனவே இன்ஸ்பெக்டர் கண்ணனுக்கு அளிக்கப்பட்ட சஸ்பெண்டு உத்தரவை ரத்து செய்து உடனே அவரை மீண்டும் பணியில் அமர்த்த வேண்டும். மேலும் காவல் துறையில் நீண்ட நாட்களாக போலீஸ் சூப்பிரண்டு பதவிகள் சீனியாரிட்டி அடிப்படையில் நிரப்பப்படாமல் உள்ளது.

    எனவே அதனை உடனடியாக நிரப்ப வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கடந்த ஆண்டு ஆகஸ்டு 23-ந்தேதி இந்திய மல்யுத்த சம்மேளனத்தை இடைநீக்கம் செய்தது.
    • இந்திய மல்யுத்த சம்மேளம் மீதான இடைநீக்க நடவடிக்கையை உலக மல்யுத்த சங்கம் நேற்று தளர்த்தியது.

    புதுடெல்லி:

    இந்திய மல்யுத்த சம்மேளன நிர்வாகிகள் தேர்தலை குறிப்பிட்ட காலத்திற்குள் நடத்தாமல் பலமுறை தள்ளிவைக்கப்பட்டதால் அதிருப்தி அடைந்த உலக மல்யுத்த சங்கம், கடந்த ஆண்டு ஆகஸ்டு 23-ந்தேதி இந்திய மல்யுத்த சம்மேளனத்தை இடைநீக்கம் செய்தது.

    இதற்கிடையே, பல்வேறு சலசலப்புக்கு மத்தியில் இந்திய மல்யுத்த சம்மேளன நிர்வாகிகள் தேர்தல் கடந்த டிசம்பர் மாதம் நடந்தது. புதிய தலைவராக சஞ்சய் சிங் தேர்வு செய்யப்பட்டார். ஆனால் அவருக்கு மல்யுத்த வீரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அத்துடன் அவர் விதிமுறைக்கு புறம்பாக தேசிய போட்டிகளை நடத்த முயற்சித்ததால் உடனடியாக புதிய நிர்வாகத்தை மத்திய விளையாட்டு அமைச்சம் இடைநீக்கம் செய்தது. இந்திய ஒலிம்பிக் சங்கத்தால் நியமிக்கப்பட்ட தற்காலிக கமிட்டி மல்யுத்த பணிகளை கவனிக்கிறது. ஆனாலும் புதிய நிர்வாகம், விளையாட்டு அமைச்சகத்தின் நடவடிக்கையை ஏற்றுக்கொள்ளவில்லை.

    இந்த நிலையில் இந்திய மல்யுத்த சம்மேளம் மீதான இடைநீக்க நடவடிக்கையை உலக மல்யுத்த சங்கம் நேற்று தளர்த்தியது. அதே சமயம் முன்னாள் மல்யுத்த சம்மேளன தலைவருக்கு எதிராக பல மாதங்கள் போராடிய பஜ்ரங் பூனியா, வினேஷ் போகத், சாக்ஷி மாலிக் போன்ற வீரர், வீராங்கனைகளை சர்வதேச போட்டிக்கு பரிசீலனை செய்யும் போது எந்தவித பாகுபாடும் காட்டமாட்டோம் என்று இந்திய மல்யுத்த சம்மேளனம் எழுத்துபூர்வமாக உத்தரவாதம் தர வேண்டும் என்றும் உலக சங்கம் அறிவுறுத்தியுள்ளது.

    • பொன்முடி மனைவி விசாலாட்சிக்கு ஜாமின் வழங்கிய உத்தரவு.
    • திருக்கோவிலூர் சட்டப்பேரவைக்கு இடைத்தேர்தல் நடக்க வாய்ப்பில்லை.

    சொத்துக்குவிப்பு வழக்கில் தனக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டு சிறை தண்டனையை எதிர்த்து முன்னாள் அமைச்சர் பொன்முடி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்.

    இந்நிலையில், சொத்துக்குவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் பொன்முடியை குற்றவாளி என சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை நிறுத்தி வைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

    மேலும், முன்னாள் அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சிக்கு ஜாமின் வழங்கியும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    முன்னாள் அமைச்சர் பொன்முடி மீண்டும் சட்டப்பேரவை உறுப்பினராக தொடர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

    திருக்கோவிலூர் சட்டப்பேரவைக்கு இடைத்தேர்தல் நடக்க வாய்ப்பில்லை.

    இதுகுறித்து கருத்து தெரிவித்து ஆர்.எஸ்.பாரதி, "பொன்முடி வழக்கில் இது முதற்கட்ட வெற்றி, இறுதி வெற்றியை பொன்முடி பெறுவார். இந்த வழக்கில் பொன்மடி குற்றமற்றவர் னெ நிச்சயம் தீர்ப்பு வரும் என நம்புகிறோம்" என குறிப்பிட்டார்.

    • குழந்தையின் கையில் அறுவை சிகிச்சை செய்வதற்கு பதிலாக நாக்கில் அறுவை சிகிச்சை செய்ததால் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சர்ச்சையில் சிக்கியது.
    • இந்த சம்பவம் நிகழ்ந்து சில நாட்களே ஆகியுள்ள நிலையின் கேரள அரசு மருத்துவமனை மீண்டும் தவறான அறுவை சிகிச்சை செய்ததாக புகார் எழுந்துள்ளது.

    குழந்தையின் கையில் அறுவை சிகிச்சை செய்வதற்கு பதிலாக நாக்கில் அறுவை சிகிச்சை செய்ததால் கோழிக்கோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சர்ச்சையில் சிக்கியது. இந்த சம்பவத்துக்கு கண்டனங்கள் வலுத்த நிலையில் அலட்சியமாக செயல்பட்ட மருத்துவரை மருத்துவமனை நிர்வாகம் பணியிடை நீக்கம் செய்தது.

     

    இந்த சம்பவம் நிகழ்ந்து சில நாட்களே ஆகியுள்ள நிலையின் கேரள அரசு மருத்துவமனை மீண்டும் தவறான அறுவை சிகிச்சை செய்ததாக புகார் எழுந்துள்ளது. சாலை விபத்தில் சிக்கிய அந்த நபர் கோழிக்கோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அறுவை சிகிச்சைக்குப் பிறகு எடுக்கப்பட்ட எக்ஸ்ரேயில் சிகிச்சையில் நடந்த பிழை கண்டறியப்பட்டுள்ளது. தனது கையில் மர்மமான பொருளை வைத்து மருத்துவர்கள் தைத்துள்ளதாக அந்த குற்றம் சாட்டியுள்ளார்.

    தனது கையை எக்ஸ்ரே எடுத்துப் பார்க்கும்பொழுது அதில் மர்மமான வடிவத்தில் பொருள் ஒன்று இருப்பதாக சந்தேகம் தெரிவித்துள்ள அவர், இதுதொடர்பாக போலீசில் புகார் அளிக்கப்பபோவதாகவும் தெரிவித்துள்ளார். இந்த குற்றச்சாட்டை மருத்துவமனை நிர்வாகம் மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

    • வெள்ளதுரை இன்று ஓய்வு பெறும் நிலையில் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார்.
    • வெள்ளதுரை திருவண்ணாமலை மாவட்ட குற்ற ஆவண காப்பக கூடுதல் கண்காணிப்பாளராக தற்போது பணிபுரிந்து வந்தார்.

    சென்னை:

    தமிழக காவல் துறையின் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்டாக இருந்த கூடுதல் சூப்பிரண்டு வெள்ளதுரை சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார். முதன்மைச் செயலாளர் அமுதா இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளார்

    வெள்ளதுரை இன்று ஓய்வு பெறும் நிலையில் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார்.

    1997-ம் ஆண்டு சப்-இன்ஸ்பெக்டராக பணியில் சேர்ந்த என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் வெள்ளதுரை சந்தன கடத்தல் மன்னன் வீரப்பனை சுட்டுக்கொன்ற குழுவில் இடம் பெற்றிருந்தார். அப்போதுதான் அவருக்கு இரட்டை பதவி உயர்வு வழங்கப்பட்டது.

    அதன்பிறகு சென்னையை கலக்கி வந்த பிரபல ரவுடி அயோத்தி குப்பம் வீரமணி பிரபல ரவுடிகள் கொள்ளையர்கள் என 12-க்கும் மேற்பட்டவர்களை என்கவுண்டர் செய்துள்ளார்.

    வெள்ளதுரை திருவண்ணாமலை மாவட்ட குற்ற ஆவண காப்பக கூடுதல் கண்காணிப்பாளராக தற்போது பணிபுரிந்து வந்தார்.

    கடந்த 2013-ம் ஆண்டு சிவகங்கையில் ராமு என்கிற கொக்கி குமார் போலீஸ் காவலில் மரணம் அடைந்த வழக்கில் வெள்ளதுரைக்கு தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டது.

    அந்த வழக்கில்தான் தற்போது சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார்.

    • வெள்ளத்துரையின் சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்து அறிவிக்கப்பட்டுள்ளது.
    • சந்தன கடத்தல் வீரப்பன் முதல் 12க்கும் மேற்பட்டோரை வெள்ளத்துரை என்கவுன்ட்டர் செய்துள்ளார்.

    ஓய்வு பெற ஒருநாள் முன்னதாக ஏடிஎஸ்பி வெள்ளத்துரையை சஸ்பெண்ட் செய்து உள்துறை செயலாளர் அமுதா உத்தரவிட்டிருந்தார்.

    2013ம் ஆண்டு சிவகங்கையில் காவல் நிலைய மரண வழக்கில் விசாரிக்கப்பட்ட நிலையில் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக தகவல் வெளியானது.

    சிபிசிஐடி விசாரணையில் தன் மீது தவறு ஏதும் இல்லை என அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதாக வெள்ளத்துரை தரப்பு விளக்கம் அளிக்கப்பட்டது. சந்தன கடத்தல் வீரப்பன் முதல் 12க்கும் மேற்பட்டோரை வெள்ளத்துரை என்கவுன்ட்டர் செய்துள்ளார்.

    இந்நிலையில், வெள்ளத்துரையின் சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்து அறிவிக்கப்பட்டுள்ளது.

    தொடர்ந்து, வெள்ளத்துரையின் சஸ்பெண்ட் உத்தரவு தொடர்பாக உள்துறை செயலாளர் அமுதா மீது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

    என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட் வெள்ளத்துரையை அமுதா தன்னிச்சையாக பணியிடை நீக்கம் செய்துள்ளதாக புகார்.

    ஏடிஎஸ்பி வெள்ளத்துரை பணியிடை நீக்கம் உத்தரவை முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லவில்லை எனவும் இதுதொடர்பாக உள்துறை செயலாளர் அமுதாவை முதலமைச்சர் கண்டித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

    • மாணவர்களிடம் தவறாக ஈடுபட்ட ஆசிரியர்களின் பட்டியல் சேகரிக்கப்பட்டுள்ளன.
    • துறைரீதியான நடவடிக்கைகளை கடுமையாக்க முடிவு.

    சென்னை:

    தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவிகளுக்கு ஒருசில ஆசிரியர்கள் பாலியல் தொந்தரவு செய்யும் சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.

    இதில் பாதிக்கப்படும் மாணவிகள் மற்றும் ஆசிரியைகளில் ஒருசிலர்தான் புகார் தெரிவிக்கின்றனர். பாலியல் தொல்லை தொடர்பான புகார்களில் உண்மை இருக்கும் பட்சத்தில் போலீசில் புகார் செய்யப்படுகிறது. அதன்பிறகு போலீசார் கைது செய்கின்றனர்.

    இதனால் எந்தெந்த பள்ளிகளில் பாலியல் புகார்கள் உள்ளன. அதில் சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் யார் யார்? என்ற பட்டியலை மாநிலம் முழுவதும் பள்ளிக் கல்வித்துறை சேகரித்து வருகிறது.

    இதுகுறித்து கல்வித் துறை அதிகாரிகள் கூறியதாவது:-

    பள்ளி மாணவிகளுக்கு, கல்வியை கற்றுத்தரும் ஆசிரியர்களே பாலியல் தொந்தரவு கொடுக்கும் நிகழ்வுகள் அவ்வப்போது நடைபெற்று வருகின்றன. இத்தகைய போக்குகள் சரியானதல்ல.

    இதற்கு சரியான நடவடிக்கை எடுத்து இந்த நிகழ்வுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். அதற்கு துறைரீதியான நடவடிக்கைகளை கடுமையாக்க முடிவு செய்யப்பட்டது.

    இத்தகைய சம்பவங்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கான அரசாணை (121) 2012-ம் ஆண்டிலேயே வெளியிடப்பட்டது. அதில் தவறான நடவடிக்கைகளில் ஈடுபடும் ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்து கட்டாய ஒய்வு அல்லது பணிநீக்கம் போன்ற கடும் தண்டனைகள் வழங்கப்படும்.

    ஆசிரியர்களை பொருத்த வரை தமிழ்நாடு அரசுப் பணியாளர் நடத்தை விதி 19(2) இதற்கு பொருந்தும். அதேபோல், சம்மந்தப்பட்ட ஆசிரியர்கள் கல்விச் சான்றி தழ்களை ரத்து செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்பன போன்று பல்வேறு அம்சங்கள் உள்ளன. ஆனால், பல்வேறு காரணங்களால் அந்த அரசாணை முழுமையான செயல்பாட்டுக்கு வர வில்லை.

    தற்போது அதை மீண்டும் அமலுக்கு கொண்டு வரு வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில் மாநிலம் முழுவதும் கடந்த 10 ஆண்டுகளில் மாணவர்களிடம் தவறான செயல்களில் ஈடுபட்ட ஆசிரியர்களின் பட்டியல் சேகரிக்கப்பட்டுள்ளன.

    அதாவது, ஆசிரியர்கள் மீதான புகார், அதன் உண்மைத்தன்மை, துறைரீதி யான நடவடிக்கை, காவல் துறை நடவடிக்கை, விசாரணைக்குழு அறிக்கை, வழங்கப்பட்ட தண்டனை, நிலுவையில் உள்ளவை, பணியில் இருப்பவர்கள், ஓய்வு பெற்றவர்கள், தவறு நிரூபணமானவர்கள், பொய் புகார்கள் உட்பட அனைத்து விவரங்களும் அறிக்கையாக தயாரிக்கப்பட்டு வருகின்றன.

    அதன்படி தொடக்கக் கல்வித் துறையில் 80, பள்ளிக்கல்வித் துறையில் 175 என மொத்தம் 255 ஆசிரியர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் தவறிழைத்த ஆசிரி யர்கள் மீது அரசாணை 121-ன் படி துறைரீதியாக பணிநீக்கம் போன்ற நட வடிக்கைகள் எடுக்கப்படும். மேலும், கல்விச் சான்றிதழ் களும் ரத்து செய்யப்படும்.

    விரைவில் அமைச்சர் தலைமையில் நடைபெற உள்ள ஆய்வுக் கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் பெறப்பட்டு மார்ச் மாதமே இது அமலுக்கு கொண்டுவரப் படும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • திண்டுக்கல் கிளை சிறைச்சாலையில் பொறுப்பு கண்காணிப்பாளராக பணியாற்றிய அதிகாரி கைதிகளை பார்க்க வரும் உறவினர்களிடம் பணம் மற்றும் பொருட்கள் கேட்பதாக தொடர்ந்து புகார்கள் வந்தன.
    • தற்போது அவரை பணியிடை நீக்கம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இவர் வருகிற 2025-ம் ஆண்டு ஓய்வுபெற உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    குள்ளனம்பட்டி:

    மதுரை மாவட்டம் சமயநல்லூரை சேர்ந்தவர் ராஜேந்திரன்(55). இவர் திண்டுக்கல் கிளை சிறைச்சாலையில் பொறுப்பு கண்காணிப்பாளராக பணியாற்றி வந்தார். இவர் சிறையில் உள்ள கைதிகளை பார்க்க வரும் உறவினர்களிடம் பணம் மற்றும் பொருட்கள் கேட்பதாக ெதாடர்ந்து புகார்கள் வந்தன.

    கடந்த 2 வருடத்திற்கு முன்பு மதுரையை சேர்ந்த பிரபல ரவுடி திண்டுக்கல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அவரை பார்க்க அவரது மனைவி வந்தபோது அவரிடமும் பணம் கொடுத்தால்தான் உனது கணவரை பார்க்க முடியும் என கூறினார். இதனால் ஆத்திரமடைந்த ரவுடியின் மனைவி கிளை சிறைச்சாலை முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

    இதனைதொடர்ந்து போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். இதில் ராஜேந்திரன் லஞ்சம் வாங்கியது உறுதியானது. இதனைதொடர்ந்து திருச்சியில் சிறைக்காவலர் பயிற்சி பள்ளிக்கு காத்திருப்போர் பட்டியலுக்கு அனுப்பப்பட்டார்.

    தற்போது அவரை பணியிடை நீக்கம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இவர் வருகிற 2025-ம் ஆண்டு ஓய்வுபெற உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • வன்கொடுமை தடுப்புச்சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
    • சங்க துணை தலைவருக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டது.

    அவிநாசி :

    அவிநாசி ஊராட்சி ஒன்றியம் புஞ்சை தாமரைக்குளம் ஊராட்சி தலைவராக உள்ளவர் சரவணக்குமார். வடுகபாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவராகவும் இருந்தார். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனை விமர்சித்து, சமூக வலைதளத்தில் வந்த ஒரு பதிவை பரப்பியதாக, அக்கட்சி நிர்வாகிகள் அளித்த புகாரின் பேரில் போலீசார் இவர் மீது வன்கொடுமை தடுப்புச்சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

    இதை காரணம் காட்டி வடுகபாளையம் கூட்டுறவு கடன் சங்க தலைவர் பதவியில் இருந்து சரவணக்குமார் தற்காலிகமாக சஸ்பெண்டு செய்யப்பட்டார். சங்க துணை தலைவருக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டது. இந்தநிலையில் ஜாமீனில் வந்த சரவணக்குமார், சஸ்பெண்டு நடவடிக்கைக்கு எதிராக வழக்கு தொடுத்ததில், சஸ்பெண்டு நடவடிக்கைக்கு சென்னை ஐகோர்ட்டு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. இதையடுத்து சரவணகுமார் கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், 'என் சஸ்பெண்டு நடவடிக்கைக்கு கோர்ட்டு இடைக்கால தடை விதித்துள்ளதால், பொறுப்பு தலைவரை உடனடியாக விலக உத்தரவிட்டு என்னை மீண்டும் தலைவராக பணியாற்றிட வழிவகை ஏற்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.

    • முறைகேடு செய்த ரேசன்கடை விற்பனையாளர் சஸ்பெண்டு செய்யப்பட்டது.
    • முறைகேடு செய்த கொண்டையம்பட்டி நியாயவிலைக்கடை விற்பனையாளர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

    மதுரை

    மதுரை மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் குருமூர்த்தி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மதுரை மாவட்டத்தில் கூட்டுறவுத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள நியாயவிலைக்கடைகளை ஜூன் மாதத்தில் மதுரை மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் தலைமையிலான பறக்கும்படையினர் திடீர் ஆய்வு செய்தனர்.

    அப்போது வேலை நேரத்தில் கடை திறக்காமல், ரேசன் பொருட்களை முறையாக விநியோகம் செய்யாமலும், இருப்புக் குறைவு மற்றும் இருப்பு கூடுதல் இருந்தது கண்டறியப்பட்டது.

    இதையடுத்து சம்பந்தப்பட்ட கடை விற்பனையாளர்களுக்கு ரூ.1 லட்சத்து 90 ஆயிரத்து 700 அபராதம் விதிக்கப்பட்டது. இவற்றில் கடுமையான முறைகேடு செய்த அலங்காநல்லூர் அருகே உள்ள கொண்டையம்பட்டி நியாயவிலைக்கடை விற்பனையாளர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இவர் மீது குடிமைப்பொருள் குற்றப்புல னாய்வுத்துறையில் வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    இது போன்று நியாயவிலைக் கடையை குறித்த நேரத்தில் திறக்காமல் இருப்பது, ரேசன் பொருட்கள் முறையாக விநியோகம் செய்யாமல் இருப்பது போன்ற முறைகேடுகளில் ஈடுபடும் நியாயவிலைக்கடையின் விற்பனையாளர்கள் மீது மிகக் கடுமையான ஒழுங்கு நடவடிக்கை மற்றும் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×