என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "tag 101506"

    10 லட்சம் பரிசு விழுந்திருப்பதாக கூறி எல்.ஐ.சி. முகவரிடம் 1 லட்சம் மோசடி செய்த கும்பலை பற்றி சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ராமநாதபுரம்

    பரமக்குடி அருகே  உள்ள என்.வள்ளியனேந்தல் கிராமத்தை சேர்ந்தவர் கரிசாமி (வயது 34). இவர் 10ம் வகுப்பு படித்துவிட்டு பரமக்குடியில்எ ல். ஐ.சி. முகவராக பணியாற்றி வருகிறார். 

    கடந்த சில வாரங்களுக்கு முன்பு டி.வி.யில் வந்த ஆன்லைன் நிறுவனத்தின் விளம்பரத்தினை பார்த்த கரிசாமி அதில் காலணி மற்றும் வாட்ச் பொருட்களை ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்துள்ளார். 

    இந்த நிலையில் கடந்த  16-ந்தேதி பிரபல நிறுவனத்தின் பேரில் கரிசாமிக்கு ஒரு தபால் வந்தது. அதில் இருந்த பரிசு கூப்பனை பிரித்து பார்த்தபோது, அதில் 9 லட்சத்து 50 ஆயிரம் பரிசு விழுந்திருப்பதாகவும்,  அந்த பரிசு தொகையை பெற   விபரங்களை அனுப்புமாறு குறிப்பிடப்பட்டிருந்தது.  அதன்படி அவர் தனத வங்கி எண் விவரங்களை குறிப்பிட்ட செல்வேபோன் எண்ணுக்கு அனுப்பினார்.

    கடந்த 19-ந் தேதி கரிசாமியி டம் பேசிய மர்ம நபர் பரிசுத்தொகையை பெற குறிப்பிட்ட தொகையை டெபாசிட் செய்ய வேண்டுமென கூறியிருந்தார். இதனை நம்பி ரூ. 97 ஆயிரத்து 700 யை மோசடி கும்பல் கொடுத்த வங்கி கணக்கிற்கு அனுப்பி உள்ளார்.

    பணத்தை பெற்றுக் கொண்ட பின் அந்த கும்பல் தொடர்பை துண்டித்துக் கொண்டது. தன் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த கரிசாமி இது குறித்து  ராமநாதபுரம் சைபர்கிரைம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • சர்வதேச அளவில் வெற்றி பெற படிப்பில் கவனம் செலுத்துவதுடன், உடற்கல்வியில் சிறப்பு பெற பயிற்சியும் விடா முயற்சியும் அவசியம் என்றார்.
    • சீனியர், ஜூனியர், சூப்பர் ஜூனியர் பிரிவுகளில் 1500 மீட்டர், 500 மீட்டர், 300 மீட்டர் ஓட்டப் பந்தயம் நடைபெற்றது.

    பேராவூரணி :

    பேராவூரணி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆண்டு விளையாட்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் முதல்வன் தலைமை வகித்தார். மாவட்ட கல்வி அலுவலர் திராவிடச்செல்வம், பேரூராட்சி பெருந்தலைவர் சாந்தி சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விளையாட்டு போட்டிகளை அசோக்குமார் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். உடற்கல்வி ஆசிரியர் சோலை ஆண்டறிக்கை வாசித்தார். முன்னதாக ஆசிரியர் சோழப்பாண்டியன் அனை வரையும் வரவேற்றார்.

    சிறப்பு அழைப்பாளராக முன்னாள் மாணவரும், சர்வதேச போட்டிகளில் வெற்றி பெற்ற தமிழக வீரர் ஒலிம்பியான் சுப்பிரமணியன் கலந்து கொண்டு பேசியதாவது, நான் இந்த பேராவூரணி அரசு பள்ளியில் கல்வி பயின்று இதே மைதானத்தில் பயிற்சி பெற்றேன். உடற்கல்வி ஆசிரியர்கள் கிட்டப்பா, அப்பாத்துரை ஆகியோர் என்னை ஊக்கப்படுத்தினார்கள். நீங்களும் சர்வதேச அளவில் வெற்றி பெற படிப்பில் கவனம் செலுத்துவதுடன், உடற்கல்வியில் சிறப்பு பெற பயிற்சியும் விடா முயற்சியும் அவசியம் என்றார்.

    விழாவில்முன்னாள் உடற்கல்வி ஆசிரிய ர்கள் கிட்டப்பா அப்பா த்துரை ஆகியோர் கவுரப்படு த்தப்பட்டனர். இதில் பல்வேறு பள்ளிகளை சேர்ந்த தலைமை ஆசிரி யர்கள் கலந்து கொண்டனர். சீனியர், ஜூனியர், சூப்பர் ஜூனியர் பிரிவுகளில் 1500 மீட்டர், 500 மீட்டர், 300 மீட்டர் ஓட்டப் பந்தயம் நடைபெற்றது. பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது. பரிசு பொருட்களை சமூக ஆர்வலர் சுப.நற்கிள்ளி நன்கொடையாக வழங்கினார்.

    உயர் பதவி வகிப்பவர்கள் மீதான ஊழல் வழக்குகளை விசாரிக்கும் அதிகாரம் படைத்த லோக்பால் அமைப்புக்காக இதை செய்து தருபவர்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் பரிசாக கிடைக்கும்.
    புதுடெல்லி:

    உயர் பதவி வகிப்பவர்கள் மீதான ஊழல் வழக்குகளை விசாரிக்கும் அதிகாரம் படைத்த இந்தியாவின் முதல் லோக்பால் நீதிபதியாக பினாக்கி சந்திரா கோஸ்(66) நியமனத்துக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் 19-5-2019 அன்று ஒப்புதல் அளித்தார். அவருடன் மேலும் 9 உறுப்பினர்களும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

    பினாக்கி சந்திரா கோஸ்

    நீதிபதிகள் திலீப் பி.போஸ்லே, பி.கே.மொஹந்தி, அபிலாஷா குமாரி, ஏ.கே.திரிபாதி மற்றும் தினேஷ் குமார் ஜெயின், அர்ச்சனா ராமசுந்தரம், மகேந்தர் சிங், டாக்டர் ஐபி கவுதம் உள்ளிட்டோர் உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில், புதிதாக அமைக்கப்பட்டுள்ள லோக்பால் அமைப்புக்கான பொது இலச்சினை (லோகோ) மற்றும் குறிக்கோளை விளக்கும் வாசகம் (ஸ்லோகன்) ஆகியவற்றை வடிவமைத்து / உருவாக்கி தருபவர்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் பரிசுத்தொகையாக வழங்கப்படும் என டெல்லியில் உள்ள லோக்பால் அலுவலகம் அறிவித்துள்ளது.

    பரிசுக்கு தேர்ந்தெடுக்கப்படும் லோகோ மற்றும் ஸ்லோகன் எளிதாக விளங்கும் விதமாகவும் கருத்தை கவரும் வகையிலும் அமைந்திருக்க வேண்டும். ஸ்லோகனுக்கான வாசகம் 4 அல்லது 5 வார்த்தைகளுக்குள் ரத்தினச் சுருக்கமாக இருக்க வேண்டும் என்பது மட்டுமே நிபந்தனை.

    குறிக்கோளை விளக்கும் வாசகங்களை இந்தி, சமஸ்கிருதம், ஆங்கிலம் என மூன்று மொழிகளிலும் தனித்தனியாக அனுப்பலாம். இவற்றை எல்லாம் டெல்லியில் உள்ள லோக்பால் அலுவலகத்துக்கு அனுப்பி வைக்க கடைசி தேதி ஜூன் 13 என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இன்றைய நிலவரப்படி லோகோவுக்கு 1239 பேரும், வாசகத்துக்கு 365 பேரும் தங்களது படைப்புகளை அனுப்பி வைத்துள்ள நிலையில் தேர்வு குழுவினரால் தேர்ந்தெடுக்கப்படும் லோகோ மற்றும் வாசகங்களுக்கு முதல் பரிசாக 25 ஆயிரம் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

    இங்கிலாந்தில் நடைபெற இருக்கும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் சாம்பியன் பட்டத்தை வெல்லும் அணிக்கு ரூ.28 கோடி பரிசாக வழங்கப்படும் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது.
    துபாய்:

    12-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் வருகிற 30-ந் தேதி தொடங்குகிறது. இதில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா, இந்தியா, பாகிஸ்தான், வெஸ்ட்இண்டீஸ், நியூசிலாந்து, இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய 10 அணிகள் கலந்து கொள்கின்றன. 46 நாட்கள் நடைபெறும் இந்த போட்டியில் ஒவ்வொரு அணியும், மற்ற அணியுடன் தலா ஒரு முறை லீக் ஆட்டத்தில் மோத வேண்டும். லீக் ஆட்டம் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும்.

    இந்த போட்டிக்கான பரிசுத் தொகையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நேற்று அறிவித்தது. உலக கோப்பை போட்டியின் மொத்த பரிசுத் தொகை ரூ.70 கோடியாகும். சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.28 கோடியும், 2-வது இடம் பெறும் அணிக்கு ரூ.14 கோடியும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.



    சாம்பியன் பட்டம் வென்ற அணிக்கு கடந்த முறை (2015) ரூ.26 கோடியும், 2-வது இடம் பெற்ற அணிக்கு ரூ.12 கோடியும் வழங்கப்பட்டது. தற்போது இந்த இரண்டு தொகையும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

    அரைஇறுதியில் தோல்வி பெறும் அணிகளுக்கு ரூ.5 கோடியே 61 லட்சம் பரிசாக கிடைக்கும். இந்த தொகையும் உயர்த்தப்பட்டு இருக்கிறது. கடந்த உலக கோப்பை போட்டியில் அரைஇறுதியில் தோல்வி கண்ட அணிகளுக்கு ரூ.4 கோடியே 20 லட்சம் பரிசாக வழங்கப்பட்டது.

    லீக் சுற்றில் அணிகளின் ஒவ்வொரு வெற்றிக்கும் ரூ.28 லட்சம் கிடைக்கும். லீக் சுற்றுடன் வெளியேறும் அணிகளுக்கு ரூ.70 லட்சம் வழங்கப்படும். 
    அமெரிக்காவில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் ‘தி வேர்ல்ட்ஸ் பெஸ்ட்’ பட்டத்துடன், 7 கோடி ரூபாய் பரிசு வென்ற சென்னை சிறுவனை, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் வாழ்த்தினார்.
    சென்னை:

    அமெரிக்காவில் ‘தி வேர்ல்ட்ஸ் பெஸ்ட்’ என்ற பொழுதுபோக்கு நிகழ்ச்சி நடந்து வருகிறது. இதை புகழ்பெற்ற ஹாலிவுட் தொகுப்பாளர் ஜேம்ஸ் கார்டன் தொகுத்து வழங்குகிறார். கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில் பல்வேறு நாடுகளில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    சென்னையை சேர்ந்த பியானோ கலைஞரான 13 வயது சிறுவன் லிடியன் நாதஸ்வரமும் கலந்து கொண்டார். தனது அசாத்திய திறமையால் பியானோ வாசித்த லிடியன், ஆரம்பத்தில் இருந்தே ரசிகர்களின் பேராதரவை பெற்று வந்தார்.

    இந்தநிலையில் இந்த போட்டியின் இறுதிச்சுற்று நடைபெற்றது. இதில் லிடியன் வெற்றி பெற்றார். இதனால் அவருக்கு ‘தி வேர்ல்ட்ஸ் பெஸ்ட்’ என்ற பட்டம் வழங்கப்பட்டது. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த நடுவர்கள் பங்கேற்ற இறுதி நிகழ்ச்சியில், 2 பியானோக்களை ஒரே நேரத்தில் வாசித்து பட்டம் வென்ற லிடியனுக்கு ரூ.7 கோடி பரிசுத்தொகை வழங்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து சென்னையில் நடந்த பாராட்டு விழாவில், ‘தி வேர்ல்ட்ஸ் பெஸ்ட்’ பட்டம் வென்ற லிடியனை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் வாழ்த்தினார். பின்னர் லிடியனுடன் செல்பி எடுத்துக்கொண்டார்.

    லிடியனின் தந்தை சதீஷ் வர்ஷன் ஒரு இசையமைப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

    லிடியனுக்கு அ.ம.மு.க. துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன், நடிகர்கள் சூர்யா, மாதவன் உள்பட திரையுலகினர் பலரும் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.

    உத்தரபிரதேச முன்னாள் அரச குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் காணாமல் போன தனது கிளியை கண்டுபிடித்து தருவோருக்கு ரூ.20 ஆயிரம் பரிசு தரப்படும் என்று அறிவித்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது. #Parrot
    ராம்பூர்:

    உத்தரபிரதேச மாநிலம் ராம்பூரை சேர்ந்தவர் சனம் அலி கான் (37). இவர் முன்னாள் அரச குடும்பத்தை சேர்ந்தவர். அவர் கடந்த 9 ஆண்டுகளாக ஒரு பச்சைக் கிளி வளர்த்து வந்தார்.

    நன்றாக பேசும் அந்த கிளிக்கு மித்து என்கிற பவுலி என பெயரிட்டு இருந்தார். அந்த கிளியை கடந்த சில நாட்களாக காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

    காணாமல் போன கிளியின் போட்டோ 'வாட்ஸ் அப்'பில் வெளியிடப்பட்டது. நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இருந்தும் எந்த தகவலும் இல்லை.



    எனவே, காணாமல் போன கிளியை கண்டுபிடித்து தருவோருக்கு ரூ.20 ஆயிரம் பரிசு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர ரிக்‌ஷாவில் ஒலி பெருக்கி கட்டி அதன் மூலம் மைக்கில் அறிவிப்புகள் வெளியிடப்படுகின்றன.

    இந்த கிளி குறித்து சனம் அலிகான் கூறும்போது, 1998-ம் ஆண்டு வெளியான மவுலி என்ற இந்தி படத்தின் பெயரை இதற்கு சூட்டினேன். அது கிளி பற்றிய படமாகும். நாங்கள் டெல்லிக்கு சென்றிருந்தபோது அதை பராமரித்து வந்தவரின் கவனக்குறைவால் அது காணாமல் போய்விட்டது.

    அது மிகவும் புத்திசாலி. கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லும். நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு ஸ்கைப் ஆக அதை பயன்படுத்தி வந்தோம். அதை கண்டுபிடித்து ஒப்படைப்பவர்களுக்கு ரூ.20 ஆயிரம் பரிசு வழங்கப்படும் என்றார்.

    சனம் அலிகானின் சகோதரர் சகாப்சதா சல்மான் அலிகான் கூறும்போது, கிளி காணாமல் போனது எங்கள் குடும்பத்துக்கு பேரிழப்பு. கிளி மித்துவை மிகவும் அன்புடன் வளர்த்து வந்தோம். அது மீண்டும் திரும்பி வர வேண்டும் என பிரார்த்திக்கிறோம் என்றார். இவர் கடந்த 2014-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தவர். #Parrot
    ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் கீழ் திருப்பத்தூர் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான விளையாட்டுப் போட்டி நடைபெற்றது.
    திருப்பத்தூர்:

    ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் கீழ் திருப்பத்தூர் வட்டார வளமையம் சார்பில் உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி திருப்பத்தூர் ஆர்.சி.பாத்திமா பள்ளியில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான விளையாட்டுப் போட்டி நடைபெற்றது. இந்த போட்டிக்கு வட்டார கல்வி அலுவலர் சாந்தி தலைமை வகித்தார்.

    கூடுதல் வட்டாரக்கல்வி அலுவலர் மூர்த்தி முன்னிலை வகித்தார். வட்டார வளமைய மேற்பார்வையாளர் பழனியப்பன் விழாவை தொடங்கி வைத்தார்.

    இதில் மாற்றுத்திறனாளி மாணவர்கள் பங்கு கொண்ட விளையாட்டுப் போட்டிகள் மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. பங்கு பெற்ற அனைத்து மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கும் பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

    மேலும் தேநீர், மதிய உணவு வழங்கப்பட்டது. முன்னதாக வட்டார ஒருங்கிணைப்பாளர் செல்லக்கண்ணு அனைவரையும் வரவேற்றார். விழா ஏற்பாடுகளை சிறப்பாசிரியர்கள் பிரியா, மார்‌ஷல், பிரகாஷ் மற்றும் ஆசிரியப் பயிற்றுனர்கள் செய்திருந்தனர்.
    அமெரிக்காவில் 2 டாலருக்கு ஒரு அதிர்ஷடசாலி வாங்கிய ஸ்பெஷல் மெகாபால் லாட்டரி சீட்டுக்கு 160 கோடி டாலர் பரிசு கிடைத்துள்ளது. #USlottojackpot
    நியூயார்க்:

    அமெரிக்காவில் உள்ள மெகா மில்லியன்ஸ் நிறுவனம் ஸ்பெஷல் மெகா பால் லாட்டரி சீட்டுகளை இந்த மாதம் விற்பனை செய்தது. இன்றிரவு அங்கு நடந்த குலுக்கலில் 5, 28, 62, 65, 70, 5 என்ற எண்ணுக்கு இந்த ஜாக்பாட் பரிசு விழுந்துள்ளது.

    தெற்கு கரோலினாவில் விற்பனையான இந்த பரிசு சீட்டுக்கான உரிமையாளர் யார்? என்று இன்னும் தெரியவில்லை. 

    பரிசுக்குரிய நபருக்கு முதல் தவணையாக 91 கோடியே 30 லட்சம் டாலர்கள் முதல் தவணையாக அளிக்கப்படும். மீதியுள்ள தொகை 29 ஆண்டுகளுக்கு பகிர்ந்தளிக்கப்படும்.

    கடந்த ஜூலை மாதத்தில் இருந்து யாரும் பரிசுக்குரிய சரியான எண்ணை குறிப்பிட்டு லாட்டரி சீட்டு வாங்காததால் சிறுகச்சிறுக சேர்ந்திருந்த ஜாக்பாட் பரிசுத்தொகை தற்போது 160 கோடி டாலர்கள் அளவுக்கு குவிந்துள்ளது. அமெரிக்க லாட்டரி உலகில் இதுதான் மிகப்பெரிய பரிசு குலுக்கலாக கருதப்படுகிறது.

    கடந்த 2016-ம் ஆண்டில் 150 கோடியே 86 லட்சம் டாலர்கள் கொண்ட பவர்பால் ஜாக்பாட் தொகையை இதுவரை மூன்று அதிர்ஷ்டசாலிகள் சரிசமமாக பகிர்ந்து கொண்டதுதான் அமெரிக்க வரலாறில் மிகப்பெரிய பரிசாக கருதப்படுவது குறிப்பிடத்தக்கது. #$1.6blnjackpot #USlottojackpot
    தமிழகத்தில் சிறந்த மருத்துவ சேவை, தூய்மை பராமரிப்புக்காக தேர்வு செய்யப்பட்ட 17 அரசு மருத்துவமனைகளுக்கு மத்திய அரசு ரூ.3 கோடி பரிசு வழங்கியது. #BestMedicalService #TamilNadu #CentralGovernment #Hospital
    சென்னை:

    தமிழகத்தில் சிறந்த மருத்துவ சேவை, தூய்மை பராமரிப்புக்காக தேர்வு செய்யப்பட்ட 17 அரசு மருத்துவமனைகளுக்கு மத்திய அரசு ரூ.3 கோடி பரிசு வழங்கியது. அதை அதிகாரிகளிடம், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

    தேசிய தர உறுதித் திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் மேம்படுத்தப்பட்ட மருத்துவ சேவைகள், தரமான சுகாதார குறியீடு, முறையான பராமரிப்பு, மருத்துவமனை வழங்கும் சேவைகள் குறித்து நோயாளிகளின் கருத்துகள் ஆகியவை ஆய்வு செய்யப்பட்டு சிறந்த மருத்துவமனைகள் தேர்வு செய்யப்படுகின்றன. அவ்வாறு தேர்வு செய்யப்படும் அரசு மருத்துவமனைகளுக்கு, மருத்துவமனைகளில் ஒரு படுக்கைக்கு தலா ரூ.10 ஆயிரம் வீதமும், ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு தலா ரூ.3 லட்சம் வீதமும் பரிசுத் தொகையும், தர சான்றிதழும் மத்திய அரசு வழங்கி வருகிறது. இப்பரிசுத் தொகை 3 ஆண்டுகளுக்கு தொடர்ந்து வழங்கப்படும்.

    தேசிய ஆய்வுக் குழுவால் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் 17 பிரிவுகளும், மாவட்ட துணை மருத்துவமனைகள் மற்றும் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில் 12 பிரிவுகளும், கூடுதல் ஆரம்ப சுகாதார நிலையங்களில் 6 பிரிவுகளும் ஆய்வு செய்யப்படுகிறது.

    2017-18-ம் ஆண்டில், மத்திய அரசால் அனுப்பப்பட்ட 3 உறுப்பினர்கள் அடங்கிய தேசிய ஆய்வுக் குழு, தமிழ்நாடு அரசால் பரிந்துரைக்கப்பட்ட 7 அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைகளையும், 6 ஆரம்ப சுகாதார நிலையங்களையும் ஏப்ரல், மே மாதங்களில் 3 நாட்கள் ஆய்வு செய்தது.

    அதன்படி மதுரை மாவட்டம் உசிலம்பட்டி, தர்மபுரி மாவட்டம் பென்னாகரம், கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம், ஈரோடு, கடலூர், நாமக்கல், நீலகிரி மாவட்டம் ஊட்டி ஆகிய 7 அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைகள் மற்றும் தர்மபுரி மாவட்டம் பாளையம்புதூர், மொரப்பூர், ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி, கடலூர் மாவட்டம் வடலூர், விழுப்புரம் மாவட்டம் முகையூர், சேலம் மாவட்டம் மேச்சேரி ஆகிய 6 மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன. இதற்கு தேசிய தர சான்றிதழ்களுடன் ரூ.2 கோடியே 7 லட்சத்து 70 ஆயிரத்து 666 பரிசுத்தொகை வழங்கப்பட்டது.

    இதேபோல் மருத்துவமனை தூய்மை மற்றும் சுற்றுப்புற சுகாதாரம், நோய்த்தொற்று தடுப்பு ஆகியவற்றில் சிறந்து விளங்கும் அரசு மருத்துவமனைகளை மாநில அளவில் ஆண்டுதோறும் 3 கட்டமாக ஆய்வு செய்து முதல் இரு இடங்களை பெறும் மாவட்ட தலைமை மருத்துவமனைகளுக்கு மத்திய அரசால் காயகல்ப் விருதும், முறையே ரூ.50 லட்சமும், ரூ.20 லட்சமும் பரிசாக வழங்கப்படுகிறது. வட்ட மருத்துவமனை மற்றும் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு முதல் பரிசாக தலா ரூ.15 லட்சம் வழங்கப்படும்.

    அதன்படி மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் சிறந்து விளங்கிய கடலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை முதல் பரிசையும், திருச்சி மாவட்டம் மணப்பாறை, அரசு தலைமை மருத்துவமனை 2-ம் பரிசையும் பெற்றது. வட்ட மருத்துவமனையில் சிறந்து விளங்கிய விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையும், மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிறந்து விளங்கிய விழுப்புரம் மாவட்டம் முகையூர் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையமும் முதல் பரிசுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டன. இந்த மருத்துவமனைகளுக்கு மத்திய சுகாதார துறையால் காயகல்ப் விருதுகளும், பரிசுத்தொகையாக ரூ.1 கோடி பரிசுத்தொகையும் வழங்கப்பட்டது.

    சென்னை தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, 13 அரசு மருத்துவமனைகளுக்கு மத்திய சுகாதார துறையால் வழங்கப்பட்ட தர சான்றிதழ்கள், ரூ.2 கோடியே 7 லட்சத்து 70 ஆயிரத்து 666-க்கான காசோலைகளையும், தூய்மை பராமரிப்பிற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட 4 அரசு மருத்துவமனைகளுக்கு வழங்கப்பட்ட காயகல்ப் விருதுக்கான கேடயம், பாராட்டு சான்றிதழ், ரூ.1 கோடிக்கான காசோலைகளையும் மாவட்ட இணை இயக்குனர்கள் (மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள்), துணை இயக்குனர்கள் (சுகாதார பணிகள்) ஆகியோரிடம் வழங்கினார். முன்னதாக இந்த விருது, பாராட்டு சான்றிதழை எடப்பாடி பழனிசாமியிடம், சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் காண்பித்து வாழ்த்து பெற்றார்.

    நிகழ்ச்சியில் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், மாநில நலவாழ்வு குழுமத்தின் குழும இயக்குனர் டாக்டர் தரேஸ் அகமது, தமிழ்நாடு சுகாதார திட்ட இயக்குனர் உமா மகேஸ்வரி, பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவ இயக்குனர் டாக்டர் குழந்தைசாமி, மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குனர் (பொறுப்பு) டாக்டர் ருக்மணி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் பங்கேற்றனர்.  #BestMedicalService #TamilNadu #CentralGovernment #Hospital 
    ஆசிய போட்டியில் பதக்கம் வென்ற தமிழக வீரர்-வீராங்கனைகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ரூ.4 கோடி ரூபாய்க்கான காசோலைகளை வழங்கினார். #AsianGames2018 #edappadipalanisamy
    சென்னை:

    இந்தோனேஷியா தலைநகர் ஜகர்த்தா மற்றும் பிளமிங் நகரங்களில் நடைபெற்ற 18-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த 16 விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு 5 கோடியே 20 லட்சம் ரூபாய் மற்றும் அவ்வீரர்களின் 16 பயிற்றுநர்களுக்கு 78 லட்சம் ரூபாய் அரசின் உயரிய ஊக்கத் தொகையாக வழங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.



    அதன்படி இன்று தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 12 விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு 3 கோடியே 70 லட்சம் ரூபாய் உயரிய ஊக்கத்தொகையாகவும், பதக்கங்களை வென்ற விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளின் 11 பயிற்றுநர்களுக்கு 51 லட்சம் ரூபாயும், என மொத்தம் 4 கோடியே 21 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார். #AsianGames2018 #edappadipalanisamy
    கிகி விளையாட்டை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் போடுவது போல சென்னை மக்கள் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை எடுத்து போட்டால் சிறந்த கட்டமைப்புகளுக்கு பரிசு வழங்க குடிநீர் வாரியம் முடிவு செய்துள்ளது. #ChennaiMetroWater
    சென்னை:

    வடகிழக்கு பருவமழை அடுத்த மாதம் தொடங்க இருக்கிறது. பருவமழையினால் கிடைக்கும் மழை நீரை வீணாக்காமல் வீடுகளில் மழை நீர் சேகரிப்பு தொட்டி மூலம் சேமிக்க வேண்டும் என சென்னை குடிநீர் வாரியம் முன் ஏற்பாடுகளை செய்யும் வகையில் பொதுமக்களை தயார் படுத்தி வருகிறது.

    வீடுகளில் உள்ள மழைநீர் சேகரிப்பு மையங்கள் மூலம் நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்த வேண்டும் என்ற நோக்கத்தில் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துகிறது.

    கிகி விளையாட்டை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் போடுவது போல சென்னை மக்கள் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை எடுத்து போட்டால் சிறந்த கட்டமைப்புகளுக்கு பரிசு வழங்க குடிநீர் வாரியம் முடிவு செய்துள்ளது. மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பை சீர் செய்தல், மாடிகளை சுத்தம் செய்தல், கூழாங்கல் அமைத்தல் போன்ற பணிகளை மேற்கொள்வது போன்ற புகைப்படங்களை எடுத்து பேஸ்புக், வாட்ஸ் அப், மற்றும் சென்னை குடிநீர் வெப்சைட் ஆகியவற்றில் போடலாம் என்று குடிநீர் வாரியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.


    சென்னையில் 8 லட்சத்து 93 ஆயிரம் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு வீடுகளில் உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. அவற்றை பருவ மழைக்கு முன்பாக சீரமைத்து மழை நீர் வீணாக்காமல் சேமித்தாலே நகரின் குடிநீர் பிரச்சனையை சமாளிக்க முடியும்.

    இதுகுறித்து குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறியதாவது:-

    பருவ மழை தொடங்க இருக்கின்ற இக்கால கட்டத்தில் வீடுகளில் மழை சேமிப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வையும் ஆர்வத்தையும் ஏற்படுத்தும் வகையில் மழை நீர் கட்டமைப்பு மற்றும் சீரமைக்கும் பணிகளை புகைப்படம் எடுத்து பேஸ்புக் மற்றும் சமூக வலைதளங்களில் போட வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளோம்.

    சிறந்த புகைப்படங்களுக்கு பரிசு வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை மக்கள் தங்கள் வீடுகளில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு படத்தினை எடுத்து வெளியிடலாம்.

    இதில் 25 அயிரம் பேர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கிறோம். சிறந்த புகைப்படத்திற்கு சாம்பியன் பேட்ஜ் வழங்கப்படும்.

    இது தவிர குடிநீர் வாரிய என்ஜினீயர்கள், ஊழியர்கள் வீடு வீடாக சென்று மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பினை பார்வையிடுகிறார்கள். தினமும் 10 முதல் 20 வீடுகளை ஆய்வு செய்து மழை நீர் சேகரிப்பு குறித்த விதிமுறைகளை விளக்கி கூறுகிறார்கள். 325 குடிநீர் வாரிய அலுவலகங்கள், 2 ஆயிரம் அரசு அலுவலகங்கள் ஆகியவற்றையும் ஆய்வு செய்கிறார்கள்.

    மேலும் கோயம்பேட்டில் மழை நீர் சேகரிப்பு குறித்த ஓவியப்போட்டியும் நடத்தப்படுகிறது. மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பற்றி பெயிண்டிங் போட்டி நடத்தி பரிசுகள் வழங்கப்படுகிறது.

    இவ்வாறு அவர்கள் கூறினர். #ChennaiMetroWater
    தூத்துக்குடி மாநகராட்சியில் பிளாஸ்டிக்கை கொடுங்கள் - பரிசை பெறுங்கள் என்னும் புதிய திட்டத்தை ஆணையாளர் ஆல்பிஜான் வர்க்கீஸ் தொடங்கி வைத்தார்.
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாநகராட்சியை அடுத்த மாதம் 15-ந் தேதி முதல் ஒரு முறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு இல்லாத நகரமாக அறிவிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக பொதுமக்கள் தாங்கள் பயன்படுத்தும் மளிகை பொருட்கள், பிஸ்கட், சாக்லெட் போன்றவற்றின் கவர்களை தனியாக பிரித்து, அவற்றை சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு திருப்பி அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    இதனால் பிளாஸ்டிக்கை கொடுங்கள் - பரிசை பெறுங்கள் என்ற புதிய திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது. இந்த திட்டத்தின்படி பயன்படுத்திய 10 பிளாஸ்டிக் கவர்களை சேகரித்து கடைகளில் வழங்குபவர்களுக்கு ஒரு பரிசு கூப்பன் வீதம் வழங்கப்படும். அதில் உள்ள பரிசுத் தொகையை பொருட் கள் வாங்கும் தொகையில் இருந்து கழித்துக் கொள்ளலாம். இதற்காக கடைகளில் தனியாக பெட்டி வைக்கப்பட்டு உள்ளது. இது தூத்துக்குடி மாநகராட்சியால் முதன் முதலாக செயல்படுத்தப்படும் முன்னோடி திட்டம் ஆகும்.

    இந்த திட்டம் தொடக்க நிகழ்ச்சி சுடலை காலனியில் நடந்தது. நிகழ்ச்சியை மாநகராட்சி ஆணையாளர் ஆல்பிஜான் வர்க்கீஸ் தொடங்கி வைத்தார். மத்திய வியாபாரிகள் சங்க தலைவர் விநாயகமூர்த்தி முன்னிலை வகித்தார்.

    நிகழ்ச்சியில் ஆணையாளர் ஆல்பிஜான் வர்க்கீஸ் கூறும் போது, பொதுமக்கள் இந்த பரிசுப் போட்டியில் ஆர்வமுடன் பங்கேற்க வேண்டும். கடைகளுக்கு செல்லும் போது துணிப்பை மற்றும் பாத்திரங்களை கொண்டு சென்று சுற்றுச்சூழலை பாதுகாக்க உதவ வேண்டும். ஒரு முறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக் அற்ற மாநகராட்சியாக தூத்துக்குடியை உருவாக்க ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று கூறினார். நிகழ்ச்சியில் வியாபாரிகள் திரளாக கலந்து கொண்டனர்.

    முன்னதாக பாத்திரங்களை கொண்டு வந்து உணவு வாங்கும் நபர்களுக்கு இலவசமாக சாம்பார் தூக்குவாளி வழங்கும் நிகழ்ச்சி தென்பாகம் போலீஸ் நிலையம் அருகே உள்ள ஒரு ஓட்டலில் தொடங்கி வைக்கப்பட்டது. 
    ×