என் மலர்
நீங்கள் தேடியது "tag 101506"
- சர்வதேச அளவில் வெற்றி பெற படிப்பில் கவனம் செலுத்துவதுடன், உடற்கல்வியில் சிறப்பு பெற பயிற்சியும் விடா முயற்சியும் அவசியம் என்றார்.
- சீனியர், ஜூனியர், சூப்பர் ஜூனியர் பிரிவுகளில் 1500 மீட்டர், 500 மீட்டர், 300 மீட்டர் ஓட்டப் பந்தயம் நடைபெற்றது.
பேராவூரணி :
பேராவூரணி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆண்டு விளையாட்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் முதல்வன் தலைமை வகித்தார். மாவட்ட கல்வி அலுவலர் திராவிடச்செல்வம், பேரூராட்சி பெருந்தலைவர் சாந்தி சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விளையாட்டு போட்டிகளை அசோக்குமார் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். உடற்கல்வி ஆசிரியர் சோலை ஆண்டறிக்கை வாசித்தார். முன்னதாக ஆசிரியர் சோழப்பாண்டியன் அனை வரையும் வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக முன்னாள் மாணவரும், சர்வதேச போட்டிகளில் வெற்றி பெற்ற தமிழக வீரர் ஒலிம்பியான் சுப்பிரமணியன் கலந்து கொண்டு பேசியதாவது, நான் இந்த பேராவூரணி அரசு பள்ளியில் கல்வி பயின்று இதே மைதானத்தில் பயிற்சி பெற்றேன். உடற்கல்வி ஆசிரியர்கள் கிட்டப்பா, அப்பாத்துரை ஆகியோர் என்னை ஊக்கப்படுத்தினார்கள். நீங்களும் சர்வதேச அளவில் வெற்றி பெற படிப்பில் கவனம் செலுத்துவதுடன், உடற்கல்வியில் சிறப்பு பெற பயிற்சியும் விடா முயற்சியும் அவசியம் என்றார்.
விழாவில்முன்னாள் உடற்கல்வி ஆசிரிய ர்கள் கிட்டப்பா அப்பா த்துரை ஆகியோர் கவுரப்படு த்தப்பட்டனர். இதில் பல்வேறு பள்ளிகளை சேர்ந்த தலைமை ஆசிரி யர்கள் கலந்து கொண்டனர். சீனியர், ஜூனியர், சூப்பர் ஜூனியர் பிரிவுகளில் 1500 மீட்டர், 500 மீட்டர், 300 மீட்டர் ஓட்டப் பந்தயம் நடைபெற்றது. பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது. பரிசு பொருட்களை சமூக ஆர்வலர் சுப.நற்கிள்ளி நன்கொடையாக வழங்கினார்.

நீதிபதிகள் திலீப் பி.போஸ்லே, பி.கே.மொஹந்தி, அபிலாஷா குமாரி, ஏ.கே.திரிபாதி மற்றும் தினேஷ் குமார் ஜெயின், அர்ச்சனா ராமசுந்தரம், மகேந்தர் சிங், டாக்டர் ஐபி கவுதம் உள்ளிட்டோர் உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், புதிதாக அமைக்கப்பட்டுள்ள லோக்பால் அமைப்புக்கான பொது இலச்சினை (லோகோ) மற்றும் குறிக்கோளை விளக்கும் வாசகம் (ஸ்லோகன்) ஆகியவற்றை வடிவமைத்து / உருவாக்கி தருபவர்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் பரிசுத்தொகையாக வழங்கப்படும் என டெல்லியில் உள்ள லோக்பால் அலுவலகம் அறிவித்துள்ளது.
பரிசுக்கு தேர்ந்தெடுக்கப்படும் லோகோ மற்றும் ஸ்லோகன் எளிதாக விளங்கும் விதமாகவும் கருத்தை கவரும் வகையிலும் அமைந்திருக்க வேண்டும். ஸ்லோகனுக்கான வாசகம் 4 அல்லது 5 வார்த்தைகளுக்குள் ரத்தினச் சுருக்கமாக இருக்க வேண்டும் என்பது மட்டுமே நிபந்தனை.
குறிக்கோளை விளக்கும் வாசகங்களை இந்தி, சமஸ்கிருதம், ஆங்கிலம் என மூன்று மொழிகளிலும் தனித்தனியாக அனுப்பலாம். இவற்றை எல்லாம் டெல்லியில் உள்ள லோக்பால் அலுவலகத்துக்கு அனுப்பி வைக்க கடைசி தேதி ஜூன் 13 என அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்றைய நிலவரப்படி லோகோவுக்கு 1239 பேரும், வாசகத்துக்கு 365 பேரும் தங்களது படைப்புகளை அனுப்பி வைத்துள்ள நிலையில் தேர்வு குழுவினரால் தேர்ந்தெடுக்கப்படும் லோகோ மற்றும் வாசகங்களுக்கு முதல் பரிசாக 25 ஆயிரம் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
12-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் வருகிற 30-ந் தேதி தொடங்குகிறது. இதில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா, இந்தியா, பாகிஸ்தான், வெஸ்ட்இண்டீஸ், நியூசிலாந்து, இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய 10 அணிகள் கலந்து கொள்கின்றன. 46 நாட்கள் நடைபெறும் இந்த போட்டியில் ஒவ்வொரு அணியும், மற்ற அணியுடன் தலா ஒரு முறை லீக் ஆட்டத்தில் மோத வேண்டும். லீக் ஆட்டம் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும்.

சாம்பியன் பட்டம் வென்ற அணிக்கு கடந்த முறை (2015) ரூ.26 கோடியும், 2-வது இடம் பெற்ற அணிக்கு ரூ.12 கோடியும் வழங்கப்பட்டது. தற்போது இந்த இரண்டு தொகையும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
அரைஇறுதியில் தோல்வி பெறும் அணிகளுக்கு ரூ.5 கோடியே 61 லட்சம் பரிசாக கிடைக்கும். இந்த தொகையும் உயர்த்தப்பட்டு இருக்கிறது. கடந்த உலக கோப்பை போட்டியில் அரைஇறுதியில் தோல்வி கண்ட அணிகளுக்கு ரூ.4 கோடியே 20 லட்சம் பரிசாக வழங்கப்பட்டது.
லீக் சுற்றில் அணிகளின் ஒவ்வொரு வெற்றிக்கும் ரூ.28 லட்சம் கிடைக்கும். லீக் சுற்றுடன் வெளியேறும் அணிகளுக்கு ரூ.70 லட்சம் வழங்கப்படும்.
அமெரிக்காவில் ‘தி வேர்ல்ட்ஸ் பெஸ்ட்’ என்ற பொழுதுபோக்கு நிகழ்ச்சி நடந்து வருகிறது. இதை புகழ்பெற்ற ஹாலிவுட் தொகுப்பாளர் ஜேம்ஸ் கார்டன் தொகுத்து வழங்குகிறார். கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில் பல்வேறு நாடுகளில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
சென்னையை சேர்ந்த பியானோ கலைஞரான 13 வயது சிறுவன் லிடியன் நாதஸ்வரமும் கலந்து கொண்டார். தனது அசாத்திய திறமையால் பியானோ வாசித்த லிடியன், ஆரம்பத்தில் இருந்தே ரசிகர்களின் பேராதரவை பெற்று வந்தார்.
இந்தநிலையில் இந்த போட்டியின் இறுதிச்சுற்று நடைபெற்றது. இதில் லிடியன் வெற்றி பெற்றார். இதனால் அவருக்கு ‘தி வேர்ல்ட்ஸ் பெஸ்ட்’ என்ற பட்டம் வழங்கப்பட்டது. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த நடுவர்கள் பங்கேற்ற இறுதி நிகழ்ச்சியில், 2 பியானோக்களை ஒரே நேரத்தில் வாசித்து பட்டம் வென்ற லிடியனுக்கு ரூ.7 கோடி பரிசுத்தொகை வழங்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து சென்னையில் நடந்த பாராட்டு விழாவில், ‘தி வேர்ல்ட்ஸ் பெஸ்ட்’ பட்டம் வென்ற லிடியனை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் வாழ்த்தினார். பின்னர் லிடியனுடன் செல்பி எடுத்துக்கொண்டார்.
லிடியனின் தந்தை சதீஷ் வர்ஷன் ஒரு இசையமைப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
லிடியனுக்கு அ.ம.மு.க. துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன், நடிகர்கள் சூர்யா, மாதவன் உள்பட திரையுலகினர் பலரும் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.
உத்தரபிரதேச மாநிலம் ராம்பூரை சேர்ந்தவர் சனம் அலி கான் (37). இவர் முன்னாள் அரச குடும்பத்தை சேர்ந்தவர். அவர் கடந்த 9 ஆண்டுகளாக ஒரு பச்சைக் கிளி வளர்த்து வந்தார்.
நன்றாக பேசும் அந்த கிளிக்கு மித்து என்கிற பவுலி என பெயரிட்டு இருந்தார். அந்த கிளியை கடந்த சில நாட்களாக காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

எனவே, காணாமல் போன கிளியை கண்டுபிடித்து தருவோருக்கு ரூ.20 ஆயிரம் பரிசு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர ரிக்ஷாவில் ஒலி பெருக்கி கட்டி அதன் மூலம் மைக்கில் அறிவிப்புகள் வெளியிடப்படுகின்றன.
இந்த கிளி குறித்து சனம் அலிகான் கூறும்போது, 1998-ம் ஆண்டு வெளியான மவுலி என்ற இந்தி படத்தின் பெயரை இதற்கு சூட்டினேன். அது கிளி பற்றிய படமாகும். நாங்கள் டெல்லிக்கு சென்றிருந்தபோது அதை பராமரித்து வந்தவரின் கவனக்குறைவால் அது காணாமல் போய்விட்டது.
அது மிகவும் புத்திசாலி. கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லும். நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு ஸ்கைப் ஆக அதை பயன்படுத்தி வந்தோம். அதை கண்டுபிடித்து ஒப்படைப்பவர்களுக்கு ரூ.20 ஆயிரம் பரிசு வழங்கப்படும் என்றார்.
சனம் அலிகானின் சகோதரர் சகாப்சதா சல்மான் அலிகான் கூறும்போது, கிளி காணாமல் போனது எங்கள் குடும்பத்துக்கு பேரிழப்பு. கிளி மித்துவை மிகவும் அன்புடன் வளர்த்து வந்தோம். அது மீண்டும் திரும்பி வர வேண்டும் என பிரார்த்திக்கிறோம் என்றார். இவர் கடந்த 2014-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தவர். #Parrot

தமிழகத்தில் சிறந்த மருத்துவ சேவை, தூய்மை பராமரிப்புக்காக தேர்வு செய்யப்பட்ட 17 அரசு மருத்துவமனைகளுக்கு மத்திய அரசு ரூ.3 கோடி பரிசு வழங்கியது. அதை அதிகாரிகளிடம், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.
தேசிய தர உறுதித் திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் மேம்படுத்தப்பட்ட மருத்துவ சேவைகள், தரமான சுகாதார குறியீடு, முறையான பராமரிப்பு, மருத்துவமனை வழங்கும் சேவைகள் குறித்து நோயாளிகளின் கருத்துகள் ஆகியவை ஆய்வு செய்யப்பட்டு சிறந்த மருத்துவமனைகள் தேர்வு செய்யப்படுகின்றன. அவ்வாறு தேர்வு செய்யப்படும் அரசு மருத்துவமனைகளுக்கு, மருத்துவமனைகளில் ஒரு படுக்கைக்கு தலா ரூ.10 ஆயிரம் வீதமும், ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு தலா ரூ.3 லட்சம் வீதமும் பரிசுத் தொகையும், தர சான்றிதழும் மத்திய அரசு வழங்கி வருகிறது. இப்பரிசுத் தொகை 3 ஆண்டுகளுக்கு தொடர்ந்து வழங்கப்படும்.
தேசிய ஆய்வுக் குழுவால் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் 17 பிரிவுகளும், மாவட்ட துணை மருத்துவமனைகள் மற்றும் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில் 12 பிரிவுகளும், கூடுதல் ஆரம்ப சுகாதார நிலையங்களில் 6 பிரிவுகளும் ஆய்வு செய்யப்படுகிறது.
2017-18-ம் ஆண்டில், மத்திய அரசால் அனுப்பப்பட்ட 3 உறுப்பினர்கள் அடங்கிய தேசிய ஆய்வுக் குழு, தமிழ்நாடு அரசால் பரிந்துரைக்கப்பட்ட 7 அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைகளையும், 6 ஆரம்ப சுகாதார நிலையங்களையும் ஏப்ரல், மே மாதங்களில் 3 நாட்கள் ஆய்வு செய்தது.
அதன்படி மதுரை மாவட்டம் உசிலம்பட்டி, தர்மபுரி மாவட்டம் பென்னாகரம், கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம், ஈரோடு, கடலூர், நாமக்கல், நீலகிரி மாவட்டம் ஊட்டி ஆகிய 7 அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைகள் மற்றும் தர்மபுரி மாவட்டம் பாளையம்புதூர், மொரப்பூர், ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி, கடலூர் மாவட்டம் வடலூர், விழுப்புரம் மாவட்டம் முகையூர், சேலம் மாவட்டம் மேச்சேரி ஆகிய 6 மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன. இதற்கு தேசிய தர சான்றிதழ்களுடன் ரூ.2 கோடியே 7 லட்சத்து 70 ஆயிரத்து 666 பரிசுத்தொகை வழங்கப்பட்டது.
இதேபோல் மருத்துவமனை தூய்மை மற்றும் சுற்றுப்புற சுகாதாரம், நோய்த்தொற்று தடுப்பு ஆகியவற்றில் சிறந்து விளங்கும் அரசு மருத்துவமனைகளை மாநில அளவில் ஆண்டுதோறும் 3 கட்டமாக ஆய்வு செய்து முதல் இரு இடங்களை பெறும் மாவட்ட தலைமை மருத்துவமனைகளுக்கு மத்திய அரசால் காயகல்ப் விருதும், முறையே ரூ.50 லட்சமும், ரூ.20 லட்சமும் பரிசாக வழங்கப்படுகிறது. வட்ட மருத்துவமனை மற்றும் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு முதல் பரிசாக தலா ரூ.15 லட்சம் வழங்கப்படும்.
அதன்படி மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் சிறந்து விளங்கிய கடலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை முதல் பரிசையும், திருச்சி மாவட்டம் மணப்பாறை, அரசு தலைமை மருத்துவமனை 2-ம் பரிசையும் பெற்றது. வட்ட மருத்துவமனையில் சிறந்து விளங்கிய விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையும், மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிறந்து விளங்கிய விழுப்புரம் மாவட்டம் முகையூர் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையமும் முதல் பரிசுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டன. இந்த மருத்துவமனைகளுக்கு மத்திய சுகாதார துறையால் காயகல்ப் விருதுகளும், பரிசுத்தொகையாக ரூ.1 கோடி பரிசுத்தொகையும் வழங்கப்பட்டது.
சென்னை தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, 13 அரசு மருத்துவமனைகளுக்கு மத்திய சுகாதார துறையால் வழங்கப்பட்ட தர சான்றிதழ்கள், ரூ.2 கோடியே 7 லட்சத்து 70 ஆயிரத்து 666-க்கான காசோலைகளையும், தூய்மை பராமரிப்பிற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட 4 அரசு மருத்துவமனைகளுக்கு வழங்கப்பட்ட காயகல்ப் விருதுக்கான கேடயம், பாராட்டு சான்றிதழ், ரூ.1 கோடிக்கான காசோலைகளையும் மாவட்ட இணை இயக்குனர்கள் (மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள்), துணை இயக்குனர்கள் (சுகாதார பணிகள்) ஆகியோரிடம் வழங்கினார். முன்னதாக இந்த விருது, பாராட்டு சான்றிதழை எடப்பாடி பழனிசாமியிடம், சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் காண்பித்து வாழ்த்து பெற்றார்.
நிகழ்ச்சியில் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், மாநில நலவாழ்வு குழுமத்தின் குழும இயக்குனர் டாக்டர் தரேஸ் அகமது, தமிழ்நாடு சுகாதார திட்ட இயக்குனர் உமா மகேஸ்வரி, பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவ இயக்குனர் டாக்டர் குழந்தைசாமி, மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குனர் (பொறுப்பு) டாக்டர் ருக்மணி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் பங்கேற்றனர். #BestMedicalService #TamilNadu #CentralGovernment #Hospital

அதன்படி இன்று தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 12 விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு 3 கோடியே 70 லட்சம் ரூபாய் உயரிய ஊக்கத்தொகையாகவும், பதக்கங்களை வென்ற விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளின் 11 பயிற்றுநர்களுக்கு 51 லட்சம் ரூபாயும், என மொத்தம் 4 கோடியே 21 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார். #AsianGames2018 #edappadipalanisamy
வடகிழக்கு பருவமழை அடுத்த மாதம் தொடங்க இருக்கிறது. பருவமழையினால் கிடைக்கும் மழை நீரை வீணாக்காமல் வீடுகளில் மழை நீர் சேகரிப்பு தொட்டி மூலம் சேமிக்க வேண்டும் என சென்னை குடிநீர் வாரியம் முன் ஏற்பாடுகளை செய்யும் வகையில் பொதுமக்களை தயார் படுத்தி வருகிறது.
வீடுகளில் உள்ள மழைநீர் சேகரிப்பு மையங்கள் மூலம் நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்த வேண்டும் என்ற நோக்கத்தில் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துகிறது.

இதுகுறித்து குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறியதாவது:-
பருவ மழை தொடங்க இருக்கின்ற இக்கால கட்டத்தில் வீடுகளில் மழை சேமிப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வையும் ஆர்வத்தையும் ஏற்படுத்தும் வகையில் மழை நீர் கட்டமைப்பு மற்றும் சீரமைக்கும் பணிகளை புகைப்படம் எடுத்து பேஸ்புக் மற்றும் சமூக வலைதளங்களில் போட வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளோம்.
சிறந்த புகைப்படங்களுக்கு பரிசு வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை மக்கள் தங்கள் வீடுகளில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு படத்தினை எடுத்து வெளியிடலாம்.
இதில் 25 அயிரம் பேர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கிறோம். சிறந்த புகைப்படத்திற்கு சாம்பியன் பேட்ஜ் வழங்கப்படும்.
இது தவிர குடிநீர் வாரிய என்ஜினீயர்கள், ஊழியர்கள் வீடு வீடாக சென்று மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பினை பார்வையிடுகிறார்கள். தினமும் 10 முதல் 20 வீடுகளை ஆய்வு செய்து மழை நீர் சேகரிப்பு குறித்த விதிமுறைகளை விளக்கி கூறுகிறார்கள். 325 குடிநீர் வாரிய அலுவலகங்கள், 2 ஆயிரம் அரசு அலுவலகங்கள் ஆகியவற்றையும் ஆய்வு செய்கிறார்கள்.
மேலும் கோயம்பேட்டில் மழை நீர் சேகரிப்பு குறித்த ஓவியப்போட்டியும் நடத்தப்படுகிறது. மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பற்றி பெயிண்டிங் போட்டி நடத்தி பரிசுகள் வழங்கப்படுகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர். #ChennaiMetroWater
தூத்துக்குடி மாநகராட்சியை அடுத்த மாதம் 15-ந் தேதி முதல் ஒரு முறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு இல்லாத நகரமாக அறிவிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக பொதுமக்கள் தாங்கள் பயன்படுத்தும் மளிகை பொருட்கள், பிஸ்கட், சாக்லெட் போன்றவற்றின் கவர்களை தனியாக பிரித்து, அவற்றை சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு திருப்பி அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதனால் பிளாஸ்டிக்கை கொடுங்கள் - பரிசை பெறுங்கள் என்ற புதிய திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது. இந்த திட்டத்தின்படி பயன்படுத்திய 10 பிளாஸ்டிக் கவர்களை சேகரித்து கடைகளில் வழங்குபவர்களுக்கு ஒரு பரிசு கூப்பன் வீதம் வழங்கப்படும். அதில் உள்ள பரிசுத் தொகையை பொருட் கள் வாங்கும் தொகையில் இருந்து கழித்துக் கொள்ளலாம். இதற்காக கடைகளில் தனியாக பெட்டி வைக்கப்பட்டு உள்ளது. இது தூத்துக்குடி மாநகராட்சியால் முதன் முதலாக செயல்படுத்தப்படும் முன்னோடி திட்டம் ஆகும்.
இந்த திட்டம் தொடக்க நிகழ்ச்சி சுடலை காலனியில் நடந்தது. நிகழ்ச்சியை மாநகராட்சி ஆணையாளர் ஆல்பிஜான் வர்க்கீஸ் தொடங்கி வைத்தார். மத்திய வியாபாரிகள் சங்க தலைவர் விநாயகமூர்த்தி முன்னிலை வகித்தார்.
நிகழ்ச்சியில் ஆணையாளர் ஆல்பிஜான் வர்க்கீஸ் கூறும் போது, பொதுமக்கள் இந்த பரிசுப் போட்டியில் ஆர்வமுடன் பங்கேற்க வேண்டும். கடைகளுக்கு செல்லும் போது துணிப்பை மற்றும் பாத்திரங்களை கொண்டு சென்று சுற்றுச்சூழலை பாதுகாக்க உதவ வேண்டும். ஒரு முறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக் அற்ற மாநகராட்சியாக தூத்துக்குடியை உருவாக்க ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று கூறினார். நிகழ்ச்சியில் வியாபாரிகள் திரளாக கலந்து கொண்டனர்.
முன்னதாக பாத்திரங்களை கொண்டு வந்து உணவு வாங்கும் நபர்களுக்கு இலவசமாக சாம்பார் தூக்குவாளி வழங்கும் நிகழ்ச்சி தென்பாகம் போலீஸ் நிலையம் அருகே உள்ள ஒரு ஓட்டலில் தொடங்கி வைக்கப்பட்டது.