என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "துப்பாக்கிச்சூடு"

    • சுமார் 20,000 டாலர்கள் பரிசுத் தொகையைத் திருடிச் சென்றனர்.
    • குற்றக் கும்பல்களுடன் தொடர்புடையதாக போலீசார் சந்தேகிக்கின்றனர்.

    ஈக்வடார் நாட்டில் சேவல் சண்டையின்போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் கொல்லப்பட்டனர். ஒன்பது பேர் காயமடைந்தனர்.

    மனாபி மாகாணத்தில் வலென்சியாவில் உள்ள சேவல் சண்டை அரங்கில் கடந்த வியாழக்கிழமை இரவு 11:30 மணியளவில் இந்த சம்பவம் நிகழ்ந்தது. சண்டையை பார்க்க மக்கள் கூடியிருந்த நிலையில் துப்பாக்கியுடன் நுழைந்த மர்ம நபர்கள் சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

    தாக்குதல் நடத்தியவர்கள் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் செல்வதற்கு முன்பு சுமார் 20,000 டாலர்கள் பரிசுத் தொகையைத் திருடிச் சென்றனர்.

    காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு டொமிங்கோவில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். காயமடைந்தவர்களில் 12 பேர் இறந்தது உறுதி செய்யப்பட்டது.

    இந்த தாக்குதல் குற்றக் கும்பல்களுடன் தொடர்புடையதாக போலீசார் சந்தேகிக்கின்றனர். இதுகுறித்த விசாரணை நடந்து வரும் சூழலில் தாக்குதல் தொடர்பான வீடியோ வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. 

    • அதிபர் டொனால்டு டிரம்ப், துப்பாக்கிக்கள் சுடுவதல்ல, மனிதர்கள் தான் சுடுகிறார்கள் என்று கூறினார்.
    • சம்பவத்தின் பின் அவரை போலீசார் சுட்டுப் பிடித்தினர்.

    அமெரிக்காவின் புளோரிடா மாகாண பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மீது நடந்த துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 6 பேர் படுகாயமடைந்தனர்.

    துப்பாக்கிச்சூடு நடத்தியவர் 20 வயதான போனிக்ஸ் சின்கர் என்று கண்டறியப்பட்டுள்ளது. சம்பவத்தின் பின் அவரை போலீசார் சுட்டுப் பிடித்தினர்.

    போனிக்ஸ் சின்கர் அதே பல்கலைக்கழகத்தில் பயின்று வந்த மாணவர் ஆவார். உள்ளூர் துணை ஷெரீப் ஆன அவரது தந்தையின் துப்பாக்கியை கொண்டு அவர் இந்த வெறிச்செயலில் ஈடுபட்டுள்ளார்.

    போலீஸ் சுட்டதில் காயமடைந்த போனிக்ஸ் சின்கர்க்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரால் சுடப்பட்டு காயமடைந்த 6 பேரும் மருத்துவ சிகிச்சையில் உள்ளனர்.

    இந்த துப்பாக்கிச்சூடு குறித்து பேசிய அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், துப்பாக்கிக்கள் சுடுவதல்ல, மனிதர்கள் தான் சுடுகிறார்கள் என்று கூறினார். சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

    • பாஸ்சா பகுதியில் உள்ள ஜிக் சமூகத்தினரின் வீடுகளை அழித்து சூறையாடினர்.
    • நைஜீரியா அதிபர் போலா டினுபு இரங்கல் தெரிவித்துள்ளார்.

    நைஜீரியாவின் வடமேற்கு மற்றும் மத்திய பிராந்தியங்களில் இரு குழுக்கள் இடையே நீண்ட காலமாக மோதல் இருந்து வருகிறது. இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு ஒரு கிராமத்துக்குள் துப்பாக்கிகளுடன் புகுந்த  கும்பல் ஒன்று ஜைகே (ZIKE) எனப்படும் கிறிஸ்தவ விவசாய சமூகத்தினரை குறிவைத்து துப்பாக்கி சூடு நடத்தியது.

    இதில் 40 பேர் பலியானார்கள். மேலும் பாஸ்சா பகுதியில் உள்ள ஜிக் சமூகத்தினரின் வீடுகளை அழித்து சூறையாடினர்.

    இதுதொடர்பாக நைஜீரியா அதிபர் போலா டினுபு கூறும்போது, இந்த நெருக்கடியை முழுமையாக விசாரித்து, வன்முறைச் செயல்களைத் திட்டமிட்டதற்குப் பொறுப்பானவர்களை அடையாளம் காணுமாறு பாதுகாப்பு நிறு வனங்களுக்கு நான் அறிவுறுத்தியுள்ளேன் என்றார்.

    கிறிஸ்தவ சமூகத்தினர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள் மேய்ப்பர்கள் என நம்பப்படும் இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்த ஆயுதமேந்தியவர்கள் என்று கூறப்படுகிறது. அப்பகுதியில் உள்ள பாதுகாப்பு குறைபாடுகளை பயன்படுத்தி இவர்கள் அடிக்கடி தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். 

     

    • 7 ஆம் வகுப்பு படிக்கும் 12 வயது சிறுவன் விளையாட்டுத்தனமாக தனது தாத்தாவின் உரிமம் பெற்ற துப்பாக்கியை எடுத்துச் சென்றான்.
    • ஓடி வந்து பார்த்த பொது சிறுவன் அதிர்ச்சியில் மயங்கிய நிலையிலும், இளைஞன் உயிரிழந்த நிலையிலும் இருப்பதை கண்டனர்.

    உத்தரப் பிரதேசத்தில் 13 வயது சிறுவன் ஒருவன் 18 வயது இளைஞனை தவறுதலாக துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற சம்பவம் அரங்கேறி உள்ளது.

    உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில் உள்ள கஜூரி கிராமத்தில் 7 ஆம் வகுப்பு படிக்கும் 12 வயது சிறுவன் விளையாட்டுத்தனமாக தனது தாத்தாவின் உரிமம் பெற்ற துப்பாக்கியை எடுத்துக்கொண்டு தனது பக்கத்து வீட்டுக்கு சென்றுள்ளான்.

    பெற்றோர் திருமண நிகழ்ச்சி ஒன்றுக்கு சென்ற நிலையில் அங்கு வீட்டில் தனியாக தொலைக்காட்சியில் ஐபிஎல் போட்டியை பார்த்துகொண்டுருந்த 18 வயது இளைஞன் முகமது கைஃப்பை நோக்கி துப்பாக்கியை நீட்டியுள்ளான்.

    அப்போது சிறுவனின் விரல் தவறுதலாக துப்பாக்கி டிரகரில் பட்டு இளைஞன் மீது குண்டு பாய்ந்துள்ளது. இதில் அந்த இளைஞன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான். துப்பாக்கி சுடப்பட்ட சத்தம் கேட்டு அக்கபக்கத்தினர் ஓடி வந்து பார்த்த போது சிறுவன் அதிர்ச்சியில் மயங்கிய நிலையிலும், இளைஞன் உயிரிழந்த நிலையிலும் இருப்பதை கண்டனர்.

    தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலீஸ் துப்பாக்கியை கைப்பற்றி இளைஞனின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மயக்கம் தெளிந்தபின் சிறுவனை போலீசார் காவலில் எடுத்துள்ளனர். 

    • கேளிக்கை நிகழ்ச்சியின்போது ஒரு சிறுவன் துப்பாக்கிச்சூடு நடத்தினான்.
    • இந்தத் துப்பாக்கிச் சூடு சம்ப்வத்தில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் உள்ள வாஷிங்டன் மாகாணத்தில் அமைந்துள்ள சியாட்டில் நகரின் டகோமா பகுதியில் உள்ள வீட்டில் இரவுநேர கேளிக்கை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 50-க்கும் மேற்பட்ட இளைஞர்கள், இளம்பெண்கள் பங்கேற்றனர்.

    இந்நிலையில், இரவு 12 மணியளவில் (உள்நாட்டு நேரப்படி) கேளிக்கை நிகழ்ச்சி நடந்தபோது திடீரென அங்கிருந்தவர்கள் மீது ஒரு சிறுவன் துப்பாக்கிச்சூடு நடத்தினான்.

    இந்த துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

    தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார் காயம் அடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

    துப்பாக்கிச்சூடு நடத்திய சிறுவனை கைதுசெய்த போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

    • சாஹூர் (ரம்ஜான் நோன்புக்கு முன் முஸ்லிம்கள் சாப்பிடும் அதிகாலை உணவு) சாப்பிட காத்துக்கொண்டு நின்றார்.
    • கட்டாவுடன் இருந்த மற்றொரு நபர் ஓடிவிட்டார்.

    உத்தரப் பிரதேசத்தில் இஸ்லாமியர் ஒருவர் அதிகாலையில் வீட்டு வசாலில் வைத்து மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

    அலிகரின் ரோராவரில் உள்ள தெலிபாடாவில் வசிப்பவர் ஹரிஸ் என்ற கட்டா (25 வயது). வெள்ளிக்கிழமை இரவு நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடிவிட்டு தனது வீட்டுக்கு வந்த கட்டா அதிகாலை 3.15 மணியளவில் தனது வீட்டின் அருகே சேஹ்ரி (சஹுர்) (ரம்ஜான் நோன்புக்கு முன் முஸ்லிம்கள் சாப்பிடும் அதிகாலை உணவு) சாப்பிட காத்துகொண்டு நின்றார். மற்றொரு நபர் ஒருவருடன் பேசிக்கொண்டிருந்த கட்டாவை நோக்கி இரண்டு பைக்குகளில் வந்த நால்வர் வந்தனர்.

    அவர்களில் ஒருவன் கட்டா மீது துப்பாக்கிசூடு நடத்தினான். இதில் கட்டா சரிந்து கீழே விழுந்தார். கட்டாவுடன் இருந்த மற்றொரு நபர் ஓடிவிட்டார். தொடர்ந்து, பைக்கில் இருந்து இறங்கிய மற்றொருவன் கட்டா இறந்துவிட்டதை உறுதி செய்ய மேலும் பல முறை அவரை நோக்கி சுட்டான். பின் நால்வரும் பைக்கில் ஏறி தப்பினர். அவர்களை மற்றொரு நபர் துரத்திக்கொண்டு ஓடினார்.

    இந்த சம்பவம் அனைத்தும் அங்கிருந்த சிசிடிவியில் பதிவாகியது.  இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். முன் விரோதம் காரணமாக இந்த கொலை நடந்துள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.

    • மெக்சிகோவில் உள்ள மதுபான விடுதியில் துப்பாக்கிச் சூடு நடந்தது.
    • இந்த துப்பாக்கிச் சூட்டில் 9 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

    மெக்சிகோ சிட்டி:

    மெக்சிகோவின் தொழில்துறை மையமான குவானாஜுவாடோ பகுதியில், சமீபத்திய ஆண்டுகளில் கும்பல் வன்முறை அதிகரித்துள்ளது.

    மத்திய மெக்சிகோவில் குவானாஜுவாடோ மாகாணத்தில் அபாசியோ எல் ஆல்டோ நகரில் மதுபான விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது.

    இந்நிலையில், அந்த மதுபான விடுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 9 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 2 பேர் காயமடைந்தனர்.

    இந்நிலையில், கடந்த புதன்கிழமை இரவு 9 மணியளவில் ஆயுதம் ஏந்திய கும்பல் ஒன்று திடீரென புகுந்து, உள்ளே இருந்தவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது.

    இதில் மதுபான விடுதியில் 4 பெண்கள் உள்பட 9 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 2 பெண்கள் காயமடைந்தனர். காயமடைந்த பெண்களின் உடல் நிலை தற்போது சீராக உள்ளது.

    கடந்த மாதம் இரபுவாடோ நகரில் உள்ள மதுபான விடுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • அமெரிக்காவின் விர்ஜீனியா பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் உயிரிழந்தனர்.
    • அனைத்து வகுப்புகளும் தற்போதைக்கு நிறுத்தப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    விர்ஜீனியா:

    அமெரிக்காவின் விர்ஜீனியா பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 2 பேர் காயமடைந்தனர் என விர்ஜீனியா பல்கலைக்கழக காவல்துறை தெரிவித்துள்ளது.

    நேற்றிரவு நடந்த இந்தத் தாக்குதலை நடத்தியவர் பல்கலைக்கழக மாணவர் கிறிஸ்டோபர் டார்னெல் ஜோன்ஸ் என பல்கலைக்கழக நிர்வாக தலைவர் ஜிம் ரியான் தெரிவித்தார்.

    சந்தேகிக்கப்படும் குற்றவாளியான அவரது புகைப்படத்தை போலீசார் வெளியிட்டு, தேடி வருகின்றனர். அனைத்து வகுப்புகளும் தற்போதைக்கு நிறுத்தப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    • அமெரிக்காவின் நைட் கிளப்பில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் கொல்லப்பட்டனர்.
    • துப்பாக்கிச் சூடு நடத்திய நபரை போலீசார் பிடித்து விசாரித்து வருவதாக சொல்லப்படுகிறது.

    வாஷிங்டன்:

    டிரான்ஸ்போபியா என்று சொல்லப்படும் பாலியல் அடையாளம் காரணமாக கொல்லப்படுபவர்களை நினைவு கூரும் வகையில் ஆண்டுதோறும் நவம்பர் 20-ம் தேதி மூன்றாம் பாலினத்தவர்களின் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது.

    இந்நிலையில், அமெரிக்காவின் கொலோரடா மாகாணத்தில் உள்ள கொலோராடா ஸ்பிரிங்ஸ் நகரத்தில் கே நைட் கிளப் ஒன்று செயல்பட்டு வருகிறது.

    இந்த நைட் கிளப்பிற்குள் நேற்று நுழைந்த மர்ம நபர் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினார். இந்த துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் பலியானதாகவும் 18 பேர் காயம் அடைந்ததாகவும் முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

    துப்பாக்கிச் சூடு நடத்திய நபரை போலீசார் பிடித்து விசாரித்து வருவதாக சொல்லப்படுகிறது. துப்பாக்கிச்சூட்டிற்கான நோக்கம் குறித்து இன்னும் கண்டறியப்படவில்லை.

    • துப்பாக்கியை எடுத்த மிக்கேல் மனைவி, குழந்தைகள் என பாராமல் மனதை கல்லாக்கி கொண்டு சரமாரியாக துப்பாக்கியால் சுட்டார்.
    • யாராவது அவர்களை சுட்டுக்கொன்று இருக்கலாம் என போலீசார் முதலில் சந்தேகம் அடைந்தனர்.

    அமெரிக்காவில் உதா மாகாணம் சால்ட் வேல் சிட்டி என்ற பகுதியில் உள்ள ஒரு வீட்டில் 8 பேர் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கு சென்றனர்.

    அப்போது 5 குழந்தைகள் உள்பட 8 பேர் துப்பாக்கியால் சுடப்பட்ட நிலையில் இறந்து கிடந்தது தெரியவந்தது. இதில் 2 பேர் பெண்கள். மற்றவர்கள் 4 வயது முதல் 17 வயது வரை உடைய குழந்தைகள் ஆவார்கள்.

    யாராவது அவர்களை சுட்டுக்கொன்று இருக்கலாம் என போலீசார் முதலில் சந்தேகம் அடைந்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் 42 வயதான மிக்கேல் கெயில் என்பவர் தனது மனைவி மாமியார் மற்றும் 3 மகள்கள், 2 மகன்கள் ஆகியோரை கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்தது தெரிந்தது.

    இந்த கொடூர செயலில் ஈடுபட்ட மிக்கேலுக்கும் அவரது மனைவிக்கும் இடையே சமீபகாலமாக கருத்து வேறுபாடு நிலவி வந்தது. இதனால் கணவரை பிரிய மனைவி முடிவு செய்தார். இதையடுத்து கடந்த டிசம்பர் மாதம் அவர் அமெரிக்கா கோர்ட்டில் விவாகரத்து கேட்டு வழக்கு தொடர்ந்தார்.

    இதையறிந்த மிக்கேல் அதிர்ச்சி அடைந்தார். மனைவியை எவ்வளவோ சமாதானம் செய்ய முயன்றார். ஆனாலும் மனைவி தனது முடிவை கைவிடவில்லை. இதனால் அவர் மனவேதனை அடைந்தார். மனைவி மீதான ஆத்திரத்தில் குடும்பத்தில் உள்ள அனைவரையும் கொல்ல முடிவு எடுத்தார். சம்பவத்தன்று இரவு வீட்டில் உள்ள அனைவரும் தூங்கி கொண்டு இருந்தனர். அந்த சமயம் துப்பாக்கியை எடுத்த மிக்கேல் மனைவி, குழந்தைகள் என பாராமல் மனதை கல்லாக்கி கொண்டு சரமாரியாக துப்பாக்கியால் சுட்டார். இதில் குண்டு பாய்ந்து 7 பேரும் வீட்டுக்குள்யே இறந்தனர்.

    குடும்பத்தில் உள்ள அனைவரும் இறந்த பிறகு தான் மட்டும் இருந்து என்ன பயன் என நினைத்த மிக்கேல் தானும் அதே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த விவரங்கள் அனைவரும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் அக்கம் பக்கத்தில் வசித்து வருபவர்கள் மத்தியில் பெரும்சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    இதுகுறித்து பக்கத்து வீட்டில் வசித்து வருபவர்கள் கூறும்போது மிக்கேல் குழந்தைகள் எங்கள் குழந்தைகளுடன் தான் தினமும் விளையாடுவார்கள். அவர்கள் அனைவரும் எல்லோருடனும் பாசமாக பழகுவார்கள்.

    இப்போது அவர்கள் இல்லாததை நினைக்கும்போது மனதுக்கு ரொம்ப கஷ்டமாக உள்ளது என்று தெரிவித்தனர். போலீசார் 8 பேர் உடல்களையும் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • புத்தாண்டு கொண்டாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் மீது மர்ம நபர்கள் சிலர் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
    • சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

    சீன நாட்காட்டியின்படி இன்று புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. சீனா மட்டுமின்றி உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் வாழும் சீனர்கள் தங்கள் புத்தாண்டு பிறப்பை கொண்டாடி வருகின்றனர்.

    இந்நிலையில், அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் மாண்டெரி பார்க் பகுதியில் உள்ள ஒரு கேளிக்கை விடுதியில் இன்று சீன புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டனர். அப்போது, புத்தாண்டு கொண்டாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் மீது மர்ம நபர்கள் சிலர் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

    இந்த துப்பாக்கிச்சூடில் 9 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

    இந்த துப்பாக்கிச்சூடு நடத்தியது யார்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • புத்தாண்டு கொண்டாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் மீது மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
    • சம்பவ இடம் விரைந்து சென்ற போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

    வாஷிங்டன்:

    சீன நாட்காட்டியின்படி நேற்று முன்தினம் புத்தாண்டு கொண்டாடப்பட்டது. சீனா மட்டுமின்றி உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் வாழும் சீனர்கள் தங்கள் புத்தாண்டு பிறப்பை கொண்டாடினர்.

    அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் மாண்டெரி பார்க் பகுதியில் உள்ள ஒரு கேளிக்கை விடுதியில் சீன புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டனர். அப்போது, புத்தாண்டு கொண்டாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் மீது மர்ம நபர்கள் சிலர் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

    இந்த துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்தனர்.

    தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

    துப்பாக்கிச்சூடு குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் ஈடுபட்ட நபர் ஹூ கேன் திரான் (72) என்ற முதியவர் என தெரிய வந்தது. வேன் ஒன்றில் பதுங்கி இருந்த அவரை போலீசார் சுற்றி வளைத்ததும் திரான் துப்பாக்கியால் தன்னை சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இந்நிலையில், படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வந்த 4 பேரில் ஒருவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதையடுத்து துப்பாக்கிச் சூட்டில் பலியானோர் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது.

    ×