என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மரம்"

    • மரம் விழுந்து லாரி ஓட்டுநர் உயிரிழப்பு
    • மரத்தின் அருகில் நின்று கொண்டிருந்த போது நடந்த சம்பவம்

    அரியலூர்:

    திண்டுக்கல் மாவட்டம், கொடைரோட்டைச் சேர்ந்தவர் அரோக்கியம் மகன் செல்வம்(வயது54). இவர், திண்டுக்கல்லிலிருந்து அரியலூருக்கு லாரியில் ஜெனரேட்டர் ஏற்றி வந்துள்ளார்.ெஜயங்கொண்டம் சாலையில், ஜெனரேட்டரை பொக்லைன் இயந்திரம் மூலம் கீழே இறக்கும் போது, அருகிலிருந்து புளிய மரத்தில் பொக்லைன் இயந்திரம் எதிர்பாராத விதமாக மோதியுள்ளது. இதில், புளியமரம் வேரோடு சாய்ந்தது. அப்போது, மரத்தின் அருகில் நின்று கொண்டிருந்த செல்வம் மரத்தின் இடிபாடுகளில் சிக்கி அதேயிடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து வந்த அரியலூர் தீயணைப்புத்துறை வீரர்கள் மற்றும் கயர்லாபாத் காவல் துறையினர், மரத்தை அகற்றி செல்வத்தின் சடலத்தை மீட்டு அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதனால், அரியலூர்} ஜயங்கொண்டம் சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • மரம் இறந்த பிறகும் நாற்காலி, மேசை, பீரோவாகி உதவுகிறது. குறைந்த அளவில் எரிக்க விறகாகவாவது பயன்படுகிறது.
    • மனிதனால் உயிரோடு இருக்கும்போது மட்டுமே பிறர்க்கு உதவ இயலும்.

    திருவள்ளுவர் ஓரிடத்தில் மனிதனை மரத்துக்கு ஒப்பிடுகிறார். பண்பில்லாதவனை மரத்துக்குச் சமமானவன் என்கிறார்.

    "அரம்போலும் கூர்மையரேனும், மரம்போல்வர்

    மக்கட்பண் பில்லா தவர்"

    அரம் இரும்பையும் அராவி அழிக்கும் கருவி. அதைப் போன்ற கூர்மையான அறிவுடையவராக இருந்தாலும், பண்பில்லாததவர்களாக இருந்தாலும், அவர்கள் மரத்துக்குச் சமமானவர்கள் என்கிறார்.

    அறிவில்லாதது என்பதற்காக மரத்தைக் கூறுகிறாரே ஒழிய, மற்ற எல்லாவகையிலும் மரம் மனிதனிலும் சிறந்தே விளங்குகிறது.

    மரம் உயிரோடு இருக்கும்போது இலை, பூ, காய், கனி என்று பல வகைகளில் உதவுகிறது. நிழல் தருகிறது, தூய காற்று வழங்குகிறது, மழை தருகிறது.

    மரம் இறந்த பிறகும் நாற்காலி, மேசை, பீரோவாகி உதவுகிறது. குறைந்த அளவில் எரிக்க விறகாகவாவது பயன்படுகிறது.

    ஆனால், மனிதனால் உயிரோடு இருக்கும்போது மட்டுமே பிறர்க்கு உதவ இயலும். அதனால்தான் வள்ளுவர்,

    "அன்றறிவாம் என்னாது அறம்செய்க"

    என்கிறார். எதையும் அன்றைக்குப் பார்த்துக் கொள்வோம் என்று ஒத்திவைக்காதே என்று அறிவுறுத்துகிறார்.

    இறந்தபின் கண்தானம், உடல்தானம், அறக்கட்டளை அமைத்து உதவுதல் போன்று உதவமுடியுமே என நினைக்கலாம்.

    நம் பின்னோர் அதனை நிறைவேற்றுவதைப் பொறுத்து அது நிகழலாம், நிகழாமலும் போகலாம். வீட்டில் உள்ளோர் அதனை வழங்க மறுத்தால் நிகழமுடியாது.

    மரம் இருந்தும் கொடுக்கும், இறந்தும் கொடுக்கும்.

    எனக்குத் தெரிந்த ஒருவர், எப்போதும் யாருக்காவது கெடுதல் செய்தல் கொண்டே இருப்பார்.

    ஒருவர் வசதியாக வாழ்வதைப் பார்த்துவிட்டால் அவருக்குத் தாங்காது. காவல்துறைக்கு மொட்டைக் கடிதம் போடுவார். அவர் கள்ளநோட்டு வீட்டில் அடிக்கிறார் என்று, வீடு முழுவதையும் காவலர்கள் இடித்துப் போட்டுத் தேடிவிட்டு பொய்ப்புகார் என்று முடிவுகட்டுவார்கள். ஆனாலும் இடித்ததைக் கட்டுவது வீட்டுக்காரர் பொறுப்புதானே!

    திருடுபோன சாமி சிலைகள் ஒருவர் வீட்டில் ஒளித்துவைத்திருப்பதாக எழுதி அவருக்குத் தொல்லை தருவார்.

    'மொட்டை பெட்டிஷன் மேதாவி' என்றே ஊரில் அவருக்குப் பெயர். அந்த மேதாவியின் இறுதிக்காலம் உடல் நலம் குன்றிப் படுக்கையில் கிடந்தார். ஊர்ப் பெரியவர்கள் வந்து சுற்றிலும் அமர்ந்து உடல் நலம் விசாரிக்கிறார்கள்.

    அந்த மேதாவி, எல்லோரிடமும் தான் செய்த தவறுகளைக்கூறிவிட்டு "என்னைப் போன்று இனி ஒருவன் இப்படிப்பட்ட குற்றத்தைச் செய்யாமல் இருக்க வேண்டுமானால், நாளை நான் இறந்ததும் என் உடலை காலில் கயிறுகட்டித் தெருவில் போட்டுச் சுடுகாட்டுக்கு இழுத்துப் போகவேண்டும். இழுத்துப் போகும்போதே எல்லோரும் இறந்த உடம்பைச் செருப்பால் அடித்தபடியே போகவேண்டும்.

    இதனைச் செய்வதாக உறுதிமொழி கொடுத்தால்தான் நான் நிம்மதியாகச் சாவேன்" என்று பாவ மன்னிப்பு போலக் கேட்டார்.

    எல்லோரும் சாவை ஆவலுடன் எதிர்பார்த்தனர். எதிர்பார்த்தபடியே மறுநாள் மேதாவி இறந்துவிட்டார்.

    சொன்னபடியே எல்லோரும் மேதாவியின் உடலைக் தெருவில் போட்டு இழுத்தனர். செருப்பால் அடித்தனர். ஆசை ஆசையாக அதனைச் செய்தார்கள்.

    திடீரென்று போலீஸ் லாரி வந்து நின்றது, காவலர்கள் குதித்து ஓடிவந்தனர். இவர்களைப் பிடித்து உதைத்து லாரியில் ஏற்றிக் காவல் நிலையம் கொண்டுபோய் அங்கும் லத்திக் கம்பால் 'பூசை' போட்டனர்.

    அப்போது அங்கிருந்த ஆய்வாளர், 'அந்த ஆளு சரியாத்தான் தந்தி குடுத்திருக்காரு' என் உடம்பை அவமானப்படுத்தனும்னு பேசிக்கிறாங்க, போலீஸ்காரங்கதான் உடம்புக்கு அவமானம் உண்டாகாமே காப்பத்தனும்னு, அவர் நினைத்தபடியேதான் இவனுங்களும் செய்றாங்க. நல்லா அடிங்கப்பா' என்று ஆவேசமாகக் கூறினார்.

    அடிவாங்கியபடியே எல்லோரும் சொன்னார்கள். 'அவன் இருந்தும் கெடுத்தான்' செத்தும் கெடுத்தான்' என்று.

    மரம் இருக்கும்போதும் கொடுக்கிறது!

    உயிர்போன பிறகும் கொடுத்து உதவுகிறது.

    சில மனிதர்கள், இருந்தும் கெடுக்கிறார்கள், இறந்தும் கெடுக்கிறார்கள்.

    -புலவர் சண்முகவடிவேல்

    • ஆற்றை ஆக்கிரமித்துள்ள
    • கருவேல மரங்களை அகற்ற வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

    அரியலூர்

    மழவராயநல்லூர் மருதையாற்று படுகை பகுதிகளில் வன விலங்குகள் தொல்லை காரணமாக கடந்த சில ஆண்டுகளாக நாங்கள் விவசாயம் செய்ய முடியாத சூழ்நிலை உள்ளது. மேலும் மருதையாறு தூர்ந்து போன நிலையில் முட்புதர்கள் மண்டி கிடப்பதால், மழை பெய்யும்போது வெள்ள நீர் விவசாய நிலத்தில் புகுந்து சேதம் ஏற்படுத்துகிறது. இதுவும் எங்களுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தி விடுகிறது. எனவே இதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனத்தில் கொண்டு, ஆற்றை ஆக்கிரமித்துள்ள கருவேல மரங்களை அகற்றினால் விவசாயம் செய்வதற்கு ஏதுவாக இருக்கும். 

    • நடவடிக்கை எடுக்க இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையருக்கு உத்தரவு
    • வெட்டி விற்க முயன்ற கோவில் மரங்கள் பறிமுதல் ெசய்யப்பட்டது.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம், 0.90 செண்டு நிலம் வேலூர் சுப்ரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு சொந்தமானதாகும். இந்த நிலத்தில் வளர்ந்திருந்த வதனாரை மரங்களை வேலூர் கிராமத்தைச் சேர்ந்த முத்துசாமி மகன் அசோக் (வயது40) என்பவர் வெட்டி தனி நபருக்கு விற்பனை செய்ய திட்டமிட்டிருந்தார்.இது பற்றி வந்த தகவலின்பேரில் தனி தாசில்தார் பிரகாசம் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு மரங்களை கைப்பற்றினார். சட்ட விரோதமாக கோயில் நிலங்களிலிருந்த மரங்களை வெட்டி விற்பனையில் ஈடுபட முயன்ற அசோக் மீது மேல் நடவடிக்கை எடுக்க இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் அரவிந்தனுக்கு பரிந்துரை செய்துள்ளார்.

    • தீயணைக்கும் படையினர் போராடி அகற்றினர்
    • நேற்று மாலை “திடீர்” என்று சூறாவளி காற்று வீசியது

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி அருகே உள்ள கொட்டாரம் சந்திப்பில் இருந்து வட்டக்கோட் டைக்கு செல்லும் சாலையில் உள்ள லெட்சுமிபுரம் சந்திப்பில் 100ஆண்டு பழமை வாய்ந்த நாவல்மரம் ஒன்று உள்ளது.

    இந்த மரத்தில் உள்ள ராட்சத மரக்கிளை நேற்று மாலை "திடீர்" என்று வீசிய சூறாவளி காற்றில் நடுரோட்டில் முறிந்து விழுந்தது. இந்த மரக்கிளை கொட்டாரம் சந்திப்பில் இருந்து வட்டகோட்டை செல்லும் சாலையும் கொட்டாரம் பெருமாள் புரம் வெட்டி முறிச்சான் இசக்கி அம்மன் கோவில் முன்புஇருந்து பொட்டல் குளம் செல்லும் சாலையும் சந்திக்கும் நான்கு முக்கு ரோடு சந்திப்பில் முறிந்து விழுந்ததால் அந்தப் பகுதியில் போக்கு வரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

    ஆனால் அந்தப் பகுதியில் மரம் முறிந்து விழும்போது எந்தவித வாகனங்களும் செல்லாததால்பெரும்உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. இதுபற்றி தகவல்அறிந்ததும் கன்னியாகுமரிதீயணைக் கும்படைவீரர்கள்சம்பவ இடத்துக்குவிரைந்து சென்று பல மணி நேரம்போராடி அந்த ராட்சத மரக்கிளை களை உடனடியாகவெட்டிஅப்புறப்படுத்தினார்கள்.

    அதன் பிறகு அந்த பகுதியில் போக்குவரத்து சரி செய்யப்பட்டது.

    • 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த வேப்ப மரங்களை தேவையில்லாமல் வெட்டிவிட்டனர்.
    • மரங்களை வெட்டியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    வண்டலூர்:

    கூடுவாஞ்சேரியில் அரசு பயணியர் விடுதி வளாகத்தில் இருந்த 100 ஆண்டுகால மரங்களை வெட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் பா.ம.க, பா.ஜனதா கட்சியினர் புகார் செய்துள்ளனர்.

    இதுகுறித்து பா.ம.க. நகர செயலாளர் அண்ணாமலை, பா.ஜ.க. நகர செயலாளர் லட்சுமி நாராயணன் ஆகியோர் சென்னை, அரும்பாக்கத்தில் உள்ள தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் புகார் தெரிவித்து உள்ளனர். அந்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:

    கூடுவாஞ்சேரியில் உள்ள அரசு பயணியர் விடுதி வளாகத்தில் இருந்த பாழடைந்த பழைய விடுதியை இடித்துவிட்டு நகராட்சி அலுவலகம் மற்றும் வண்டலூர் வட்டாட்சியர் அலுவலகம் கட்டுவதற்காக நகராட்சி நிர்வாகம் மற்றும் பொதுப்பணித்துறை சார்பில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது.

    இதில் அரசு கட்டிடங்கள் கட்டுவதற்காக போதுமான இடவசதி இருந்தும் அரசு பயணியர் விடுதி வளாகத்தில் 100 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து வந்த பழமை வாய்ந்த வேப்ப மரங்களை தேவையில்லாமல் வெட்டிவிட்டனர். இந்த மரங்கள் இருந்திருந்தால் அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள் மற்றும் வாகனங்கள் மரங்களின் நிழலை பயன்படுத்த ஏதுவாக இருந்திருக்கும்.

    தற்போது அரசு அனுமதியின்றி இந்த வளாகத்தில் இருந்த மரங்களை வெட்டிவிட்டதால் கோடை காலங்களில் பொதுமக்கள் ஒதுங்க கூட இடமில்லாமல் கடும் அவதிப்பட வேண்டிய நிலை ஏற்படும். எனவே மரங்களை வெட்டியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

    • புளி பறிக்க ஏறியபோது பரிதாபம்
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை

    கன்னியாகுமரி:

    குளச்சல் அருகே பனவிளை தாறாவிளையை சேர்ந்தவர் மிக்கேல் ராஜ் (வயது52). கொத்தனாராக வேலை பார்த்து வந்தார்.நேற்று மதியம் இவர் தனது வீட்டில் நின்ற புளிய மரத்தில் புளி பறிக்க மரத்தில் ஏறினார்.அப்போது எதிர்ப்பாராமல் தவறி கீழே விழுந்தார்.

    இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அப்பகுதியினர் அவரை மீட்டு குளச்சலில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் அவர் இறந்து விட்டார் என தெரிவித்தனர். இது குறித்து மிக்கேல் ராஜின் மனைவி லதா குளச்சல் போலீசில் புகார் செய்தார்.போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 40 வயதான அரசமரம் - வேப்பமரம் ஆகிய 2 மரங்களும் அருகருகே வளர்ந்து உள்ளன.
    • மக்கள் கடவுளாக பாவித்து செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் வழிபாடு நடத்தி வருகின்றனர்.

    பல்லடம் :

    பல்லடம் ஜே.கே.ஜே. காலனி பகுதியில், சுமார் 40 வயதான அரசமரம்- வேப்பமரம் ஆகிய 2 மரங்க ளும் அருகருகே வளர்ந்து உள்ளன. இதனை அங்குள்ள மக்கள் கடவு ளாக பாவித்து செவ்வாய், வெள்ளிக்கி ழமை களில் வழிபாடு நடத்தி வரு கின்றனர். இந்த நிலையில், உலக நன்மைக்காகவும், மழை வேண்டியும் அரசு -வேம்பு மரங்களுக்கு திருமணம் செய்ய அந்தப் பகுதி மக்கள் முடிவெ டுத்தனர். இதை யடுத்து அரச மரத்துக்கும், வேப்ப மரத்துக்கும் திருமணம் நடத்தப்பட்டது. முன்னதாக அரச மரத்துக்கு வேட்டியும், வேப்ப மரத்துக்கு சேலையும் கட்டப்பட்டது. பின்னர் திருமண சடங்கு கள் நடந்தன. மேலும் 2 மரங்களுக்கும் மாலைகள் அணிவிக்கப்பட்டது.

    அதை த்தொடர்ந்து தீபாராதனை காட்டப்பட்டு, மந்திரங்கள் ஓதி, பொது மக்கள் புடை சூழ வேப்ப மரத்துக்கு தாலி கட்டி ,அரசமரத்துக்கும், வேப்பமரத்துக்கும் திருமணம் நடைபெற்றது. இந்தத் திருமணத்தை தண்டபாணி கோவில் அர்ச்சகர் நாகராஜ குருக்க ள் நடத்தி வைத்தார். அப்பகுதி பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டு வழிபட்டனர்.அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

    • 5 வயதுடைய சீனி புளிய மரம் வளர்ந்து இருந்தது.
    • பல்லடம் போலீசாரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பல்லடம் :

    பல்லடம் ஜே.கே.ஜே.காலனி முதலாவது வீதி அருகே, சுமார் 5 வயதுடைய சீனி புளிய மரம் வளர்ந்து இருந்தது. இதனை நேற்று சிலர் வெட்டுவதாக வரு வாய்த் துறையினருக்கு புகார் வந்தது.

    இதையடுத்து சம்பவ இடத்திற்கு அவர்கள் சென்ற போது அங்கு அந்த மரத்தை சிலர் முழுமையாக வெட்டி விட்டனர். உரிய அனுமதியின்றி மரம் வெட்டியது குறித்து வருவாய்த்துறையினர் விசாரணை மேற்கொண்டு உள்ளனர். இது குறித்து பல்லடம் போலீசாரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மனித - விலங்கு மோதல், பிரச்னை சமீப காலமாக விஸ்வரூபம் எடுத்துள்ளது.
    • வெளிநாடுகளில் மரத்தை வெட்ட கடும் கட்டுப்பாடு உள்ளது. இந்தியாவில் இல்லை.

    திருப்பூர்:

    பல்லடம் திருச்சி ரோடு வனாலயத்தில் வான்மழை கருத்தரங்கம் நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற கோவை வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி பேசியதாவது:-

    வெளிநாடுகளில் மரத்தை வெட்ட கடும் கட்டுப்பாடு உள்ளது. இந்தியாவில் இல்லை. மனித - விலங்கு மோதல், பிரச்னை சமீப காலமாக விஸ்வரூபம் எடுத்துள்ளது. ஒரு நாடு நன்றாக இருக்க 33 சதவீதம் காடுகள் இருக்க வேண்டும். ஆனால் நம்மிடம் 24 சதவீதம் மட்டுமே உள்ளன. மரங்களை விரைவாக வளர வைப்பது, பயன்படுத்துதல் என்பதை ஆராய்ந்து வருகிறோம். வளர்ச்சி அடையும் நாடுகளில் இருந்த இந்தியா தற்போது வளர்ந்த நாடுகளில் ஒன்றாக உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

    • கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு, பலத்த காற்றால் சாய்ந்து விழுந்தது.
    • துணை ஆட்சியருக்கு கடிதம் அனுப்பி தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள கரைப்புதூர் ஊராட்சி அல்லாளபுரம் குட்டை அருகே தைல மரம் ஒன்று கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு, பலத்த காற்றால் சாய்ந்து விழுந்தது. இதனை வருவாய்த்துறையினர் அகற்றவில்லை. இதுகுறித்து கரைப்புதூர் கிராம நிர்வாக அலுவலரிடம் கேட்டபோது மரம் சாய்ந்து விழுந்தது குறித்து துணை ஆட்சியருக்கு கடிதம் அனுப்பி தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அவர்கள் அனுமதி கொடுத்த பின்பு தான் மரத்தை ஏலம் விட்டு அகற்றப்படும் என்றனர். 

    • மரத்தின் சுற்றி குப்பை கொட்டப்பட்டு குப்பை மேடாக காட்சியளித்தது.
    • புளியமரத்தில் தீப்பிடித்து கொழுந்து விட்டு எரிய தொடங்கியது.

    தென்காசி:

    பாவூர்சத்திரம் அருகே அரியப்பபுரம் ரெயில்வே கேட்டின் கீழ்புறம் மிகவும் பழமை வாய்ந்த புளியமரம் ஒன்று உள்ளது. இந்த மரத்தின் சுற்றிலும் குப்பைகள் கொட்டப்பட்டு குப்பை மேடாக காட்சி அளித்தது. இந்நிலையில் நேற்று மாலை மர்ம நபர்கள் குப்பைகளுக்கு தீ வைத்துள்ளனர். இதில் தீ வேகமாக பரவி பழமை வாய்ந்த புளியமரத்தில் தீப்பிடித்து கொழுந்து விட்டு எரிய தொடங்கியது.

    இது குறித்து சுரண்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு நிலைய போக்குவரத்து அதிகாரி பாலச்சந்தர் தலைமையில் சிறப்பு அலுவலர் ரவீந்திரன் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சாமி, ராஜேந்திரன், விவேகானந்தன் மற்றும் உதய பிரகாஷ் ஆகியோர் விரைந்து வந்து பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இதனால் அந்தப் பகுதியில் முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது.

    ×