என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போலீஸ்"

    • காவலரை நடனமாடுமாறு முன்னாள் அமைச்சர் தேஜ் பிரதாப் வற்புறுத்தியுள்ளார்.
    • நடனம் ஆட காவலர் மறுப்பு தெரிவித்துள்ளார்.

    மார்ச் 14 அன்று இந்தியாவில் ஹோலி பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது. குறிப்பாக பீகாரில் ஹோலி கொண்டாட்டங்கள் களைகட்டியது.

    பீகாரில் முன்னாள் அமைச்சர் தேஜ் பிரதாப் யாதவ் தனது வீட்டில் தொண்டர்களுடன் ஹோலி கொண்டாட்டத்தில் ஈடுபட்டார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த காவலரை நடனமாடுமாறு தேஜ் பிரதாப் வற்புறுத்தியுள்ளார்.

    நடனம் ஆட காவலர் மறுக்கவே, நடனம் ஆடுகிறாயா? இல்லை உன்னை சஸ்பெண்ட் செய்யவா? என அமைச்சர் மிரட்ட, வேறு வழியில்லாமல் காவலர் நடனம் ஆடியுள்ளார்.

    அமைச்சரின் வற்புறுத்தலால் காவலர் நடனம் ஆடியுள்ளார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், சீருடையில் நடனமாடிய காவலர் முன்னாள் அமைச்சரின் பாதுகாப்பு பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

    அவருக்கு பதிலாக வேறொரு காவலர் முன்னாள் அமைச்சரின் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார் என்று காவல்துறை தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • பசும்பொன் கிராமத்தில், முத்துராமலிங்கத் தேவர் குரு பூஜை மற்றும் ஜெயந்தி விழா வருகிற 30-ந் தேதி கொண்டாடப்படுகிறது.
    • தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான போலீசார் அங்கு பாதுகாப்புக்காக வருகின்றனர்.

    திருப்பூர் :

    ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே பசும்பொன் கிராமத்தில், முத்துராமலிங்கத் தேவர் குரு பூஜை மற்றும் ஜெயந்தி விழா வருகிற 30-ந் தேதி கொண்டாடப்படுகிறது.

    விழாவிற்கு தமிழகம் முழுவதும் இருந்து அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் அமைப்பு நிர்வாகிகள் தொண்டர்கள் தேவரின் முழு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவது வழக்கம்.

    இதனையடுத்து அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான போலீசார் அங்கு பாதுகாப்புக்காக வருகின்றனர்.

    இந்த பாதுகாப்பு பணிக்காக திருப்பூர் மாவட்டத்தில் இருந்து 315 போலீசார் ராமநாதபுரம் சென்றுள்ளனர். அதன்படி திருப்பூர் மாநகரில் இருந்து 135 போலீசார், மாவட்டத்திலிருந்து 180 போலீசார் என மொத்தம் 315 பேர் ராமநாதபுரத்திற்கு பாதுகாப்பு பணிக்காக சென்று உள்ளனர்.

    • வெங்கடேசன் 4 குழந்தைகளையும் விவசாய கூலி வேலை செய்து படிக்க வைத்தார்.
    • எனது மகனுக்கும் போலீஸ் வேலைக்காக பயிற்சி கொடுத்து வருகிறேன்.

    ராணிப்பேட்டை :

    ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தை அடுத்த அன்வர்திகன்பேட்டை அருகே உள்ள கீழ் ஆவதம் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன். விவசாய கூலி வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ஷகிலா. இந்த தம்பதியருக்கு மூன்று மகள்கள், ஒரு மகன் உள்ளனர். இவர்கள் குழந்தைகளாக இருந்தபோது தாய் ஷகிலா இறந்து விட்டார். வெங்கடேசன் 4 குழந்தைகளையும் விவசாய கூலி வேலை செய்து படிக்க வைத்தார்.

    மூத்த மகள் பிரீத்தியை (வயது 27) பிளஸ்-2 வரை படிக்க வைத்து திருமணம் செய்து வைத்துள்ளார். 2-வது மகள் வைஷ்ணவி (25) பி.ஏ. பட்டப்படிப்பும், மூன்றாவது மகள் நிரஞ்சனி (22) பி.எஸ்சி. பட்டப்படிப்பும் படிக்க வைத்துள்ளார். சகோதரிகள் 3 பேரும் போலீஸ் வேலையில் சேருவதற்காக பயிற்சி எடுத்து வந்தனர்.

    அதன்படி அவர்கள் ராணிப்பேட்டை மாவட்டத்தில் நடந்த போலீஸ் தேர்வில் கலந்துகொண்டு 3 பேரும் தேர்வாகி உள்ளனர். அவர்கள் மூவரும் திருவள்ளூரில் உள்ள போலீஸ் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்று வந்தனர். இதனைத்தொடர்ந்து பயிற்சி முடித்து தமிழ்நாடு காவல்துறையில் பணியில் சேர்ந்தனர். ஒரே குடும்பத்தில் இருந்து அக்காள், தங்கைகள் என மூவரும் ஒரே நேரத்தில் போலீஸ் பணிக்கு சேர்ந்ததால் குடும்பத்தில் உள்ளவர்களும், கிராம பொதுமக்களும் அவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

    மகள்கள் போலீஸ் வேலையில் சேர்ந்தது குறித்து வெங்கடேசன் கூறியதாவது:-

    எனக்கு 3 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. அதில் விளைச்சல் இல்லாததால் விவசாய கூலி வேலை செய்து வருகிறேன். இதனிடையே பிளஸ்-2 வரை படிக்க வைத்த முதல் மகள் பிரீத்தியை குடும்ப உறவில் ராஜீவ் காந்தி என்பவருக்கு திருமணம் செய்து வைத்தேன். அவர்களுக்கு 7 வயதிலும், 6 வயதிலும் இரண்டு மகன்கள் உள்ளனர். 2-வது மகள் வைஷ்ணவி சென்னை வண்ணார பேட்டையில் உள்ள அரசு மகளிர் கல்லூரியில் பி.ஏ.வும், 3-வது மகள் நிரஞ்சனி அரக்கோணம் அரசு கல்லூரியில் பி.எஸ்சி.யும் படிக்க வைத்தேன்.

    போலீஸ் வேலையில் சேர்ப்பதற்காக 3 மகள்களுக்கும் எழுத்து தேர்வுக்கான பயிற்சி மற்றும் என்னுடைய நிலத்திலேயே நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் மற்றும் குறிப்பிட்ட நேரத்தில் இலக்கை அடைவதற்கான ஓட்ட பயிற்சி உள்ளிட்ட பல பயிற்சிகளை அவர்களுக்கு கொடுத்து வந்தேன். அதன் பயனாக இன்று 3 பேரும் போலீஸ் தேர்வில் கலந்து கொண்டு தேர்ச்சி பெற்று பயிற்சியை முடித்து வேலையில் சேர்ந்துள்ளனர்.

    நான் பிளஸ்-2 வரை படித்து போலீஸ் வேலையில் சேர முயற்சித்து கிடைக்காததால், எனது கனவினை நிறைவேற்றுவதற்காக பிள்ளைகளிடம் தாய் இல்லாததையும், குடும்ப சூழ்நிலையையும் அவர்களுக்கு எடுத்து சொல்லி கடினமாக பயிற்சி பெற தெரிவித்தேன். அதன்படி போலீஸ் வேலையில் சேர வேண்டும் என்ற எனது கனவினை எனது 3 மகள்களும் நிறைவேற்றியுள்ளனர். எனது மகனுக்கும் போலீஸ் வேலைக்காக பயிற்சி கொடுத்து வருகிறேன். அடுத்த மாதம் நடக்க இருக்கும் போலீஸ் தேர்விற்கு விண்ணப்பித்துள்ளார். அந்த தேர்வில் கலந்து கொண்டு என் மகன் நிச்சயம் தேர்ச்சி பெற்று போலீஸ் வேலையில் சேருவான்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • சட்டம் - ஒழுங்கு பிரச்சினை காரணமாக பல மாவட்டங்களில் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்திற்கு போலீசார் அனுமதி மறுத்தனர்.
    • சட்டம் ஒழுங்கு பிரச்சினையை கருத்தில் கொண்டு அனுமதி அளிக்குமாறு மாவட்ட எஸ்.பி.க்களுக்கு தமிழக டி.ஜி.பி. அறிவுறுத்தி உள்ளார்.

    தமிழ்நாடு முழுவதும் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் அக்டோபர் 2-ந் தேதியன்று ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் சார்பில் அணிவகுப்பு ஊர்வலம் நடத்த அனுமதி கோரி டி.ஜி.பி. உள்ளிட்டோரிடம் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    எனவே அணிவகுப்பு ஊர்வலம் நடத்த அனுமதி வழங்க போலீசாருக்கு உத்தரவிட வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் சென்னை சுப்பிரமணியன், கடலூர் சண்முகசுந்தரம், ஈரோடு செந்தில்நாதன் உள்ளிட்ட 9 பேர் மனுக்கள் தாக்கல் செய்தனர்.

    இந்த வழக்கு கடந்த செப்டம்பர் 22-ம் தேதி நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன், அக்டோபர் 2-ந்தேதி ஆர்.எஸ்.எஸ். சார்பில் அணிவகுப்பு ஊர்வலம் நடத்த நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.

    ஆனால், சட்டம் - ஒழுங்கு பிரச்சினை காரணமாக பல மாவட்டங்களில் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்திற்கு போலீசார் அனுமதி மறுத்தனர். இது தொடர்பான வழக்கு இன்று பிற்பகல் மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

    இந்தநிலையில், தமிழகத்தில் வருகிற நவம்பர் 6-ந் தேதி ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம் நடத்த போலீசார் அனுமதி அளித்துள்ளனர்.

    அந்தந்த மாவட்டத்தில் உள்ள சட்டம் ஒழுங்கு பிரச்சினையை கருத்தில் கொண்டு அனுமதி அளிக்குமாறு மாவட்ட எஸ்.பி.க்களுக்கு தமிழக டி.ஜி.பி. அறிவுறுத்தி உள்ளார்.

    • மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அறிவுரை
    • வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்க ளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்திலுள்ள போலீஸ் நிலையங்களில் மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு ஹரிகிரண் பிரசாத் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். நித்திரவிளை, சுசீந்திரம், வடசேரி, நேச மணி நகர் உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் அவர் ஆய்வு மேற்கொண்டு இருந்தார்.

    இந்த நிலையில் நாகர்கோவில் மகளிர் போலீஸ் நிலையத்தில் மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு ஹரிகிரண் பிரசாத் திடீர் ஆய்வு மேற்கொண் டார். அப்போது போலீ சார் அவருக்கு அணி வகுப்பு மரியாதை அளித்த னர். அணிவகுப்பு மரியா தையை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பார்வையிட் டார்.

    இதை தொடர்ந்து போலீஸ் நிலையத்தில் பரா மரிக்கப்பட்டு வரும் வழக்கு தொடர்பான ஆவணங்கள் வருகை பதிவேடு ஆகிய வற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தார். முதல் தகவல் அறிக்கை புகார் மனு அளிக்க வந்தவர்களின் விபரங்கள் ஆகியவற்றையும் ஆய்வு செய்தார். இந்த ஆண்டு இதுவரை எத்த னை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.அந்த வழக்குகளில் எத்தனை குற்றவாளிகள் கைது செய் யப்பட்டுள்ளனர். குற்றப் பத்திரிகைகள் அனைத்து வழக்குகளி லும் தாக்கல் செய்யப்பட்டுள்ளதா என் பது குறித்த விவரங்களை கேட்டறிந்தார்.வழக்கு களை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண் டும் என்று போலீசாருக்கு அவர் உத்தரவிட்டார்.

    இதை தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு ஹரிகிரண் பிரசாத் கூறியதாவது:-

    மகளிர் போலீஸ் நிலை யங்களுக்கு குடும்ப பிரச்சி னைகள் பெண்கள் மீதான தொந்தரவுகள் தொடர்பான புகார் மனுக்கள் வரும்.அவ்வாறு வரும் மனுக்கள் மீது உடனுக்குடன் நடவ டிக்கை எடுக்க வேண்டும். போலீசார் அனைவரும் நேர்மையாக நடந்து கொள்ள வேண்டும். உங்களுக்கு ஏதாவது பிரச்சினைகள் இருந்தால் அதை தெரிவிக்க மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு அலுவலகத்தில் புகார் பெட்டி வைக்கப் பட்டுள்ளது.

    உங்களது பிரச்சினை களை புகார் பெட்டியில் போட்டால் அதை தீர்க்க உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். போலீஸ் நிலையங்களுக்கு புகார் அளிக்க வரும் பெண்களிடம் கனிவாக நடந்து கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதைத் தொடர்ந்து வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்க ளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    • புதிய போலீஸ் துணை சூப்பிரண்டு பொறுப்பேற்றுக்கொண்டார்.
    • போலீசார் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்

    அரியலூர்

    அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டாக பதவி வகித்து வந்த கலைக்திரவன் மயிலாடுதுறை போலீஸ் துணை சூப்பிரண்டாக பணி மாறுதல் பெற்று சென்றார். இதனையடுத்து தர்மபுரி போலீஸ் துணை சூப்பிரண்டாக பதவி வகித்து வந்த ராஜா சோமசுந்தரம் ஜெயங்கொண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டாக நேற்று பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு போலீசார் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்."

    • போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் திருச்சி டி.ஐ.ஜி. சரவணசுந்தர் ஆய்வு மேற்கொண்டார்
    • போலீசாரிடம் குறைகளை கேட்டறிந்தார்

    பெரம்பலூர்

    பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் திருச்சி சரக டி.ஐ.ஜி. சரவணசுந்தர் எஸ்.பி. அலுவலக வருடாந்திர ஆய்வினை மேற்கொண்டார். அங்கு பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக நிர்வாகம் தொடர்பான பணிகள், பராமரிக்கப்படும் ஆவணங்கள், அமைச்சு பணியாளர்கள் விபரம், வருகைப் பதிவேடு போன்றவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பின்னர் அலுவலகத்திற்கு தேவையான அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் அவர்களுக்கு தேவையான வசதிகள் குறித்து அமைச்சு பணியாளர்களிடம் கேட்டறிந்தார்.

    பின்னர் அமைச்சு பணியாளர்கள் மற்றும் போலீசாரிடம் குறைகளை கேட்டறிந்தார். இந்த ஆய்வின்போது பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணி, கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் மதியழகன், பாண்டியன், மாவட்ட குற்றப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு தங்கவேல், தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் வெங்கடேஷ்வரன் ஆகியோர் உடனிருந்தனர்.

    • காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார்.
    • எர்ணாகுளம் முதல் பாட்னா வரை செல்லும் ரெயிலில் 3பெட்டிகள் இணைக்கப்பட்டு சிறப்பு ரெயில் இயக்கப்பட்டது.

    திருப்பூர் :

    உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள பனாரஸ் பல்கலைக் கழக வளாகத்தில் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார். இதில், தமிழகத்தில் இருந்து ரெயில் மூலம் பலர் செல்கின்றனர். இந்த நிலையில் கோவையில் இருந்து காசி தமிழ் சங்கத்தினர் வாரணாசியில் நடைபெறும் காசி தமிழ் சங்கமம் கலைபண்பாட்டு, இலக்கிய விழாவில் கலந்து கொள்ள செல்வதற்கு எர்ணாகுளம் முதல் பாட்னா வரை செல்லும் ரெயிலில் 3பெட்டிகள் இணைக்கப்பட்டு சிறப்பு ரெயில் இயக்கப்பட்டது. இந்த ரெயில் திருப்பூர் ரெயில் நிலையத்தில்2 நிமிடம் நின்று செல்கிறது.

    இந்தநிலையில் மங்களூர் குண்டு வெடிப்பு சம்பவம் மற்றும் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியையொட்டி திருப்பூர் ரெயில் நிலையத்தில் ரெயில்களில் போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். மாநகர காவல் துணை ஆணையர் தலைமையில் 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் மூலம் ரெயிலில் சோதனை நடத்தப்பட்டது. பயணிகளின் உடைமைகளை போலீசார் மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை செய்து உள்ளே அனுப்புகின்றனர்.

    • குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய தீவிரம்
    • கவுதமை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் கணேசபுரத்தை சேர்ந்தவர் காசி. இவர் மீது சென்னையை சேர்ந்த பெண் டாக்டர் கொடுத்த பாலியல் புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதைத் தொடர்ந்து காசியை போலீசார் கைது செய்தனர்.

    கைது செய்யப்பட்ட காசி மீது மேலும் பல பெண்கள் பாலியல் புகார் அளித்தனர். இது தொடர்பாகவும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். காசி மீது பாலியல் புகார் உள்பட 8 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.

    இதையடுத்து வழக்கானது சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டது. சி.பி.சி.ஐ.டி. போலீசார் காசி மீதான வழக்குகள் தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர். இந்த வழக்கில் ஆதாரத்தை அழித்ததாக கூறி அவரது தந்தை தங்கபாண்டியன் கைது செய்யப்பட்டார். மேலும் அவரது நண்பர்கள் 2 பேரும் கைது செய்யப்பட்டனர்.

    அதே சமயம் அஞ்சுகிராமம் அருகே கண்ணன்குளத்தை சேர்ந்த கவுதம் என்பவர் தலைமறைவாக இருந்தார். போலீசார் அவரை தேடி வந்த நிலையில் அவர் வெளிநாட்டில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை பிடிக்க விமான நிலையங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருந்தது. இந்த 8 வழக்குகளில் 6 வழக்குகளுக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசார் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர். 2 வழக்குகளில் கவுதமுக்கு தொடர்பிருந்ததால் அந்த வழக்குகளில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்வதில் தாமதம் ஏற்பட்டது.

    இந்த நிலையில் காசி மற்றும் அவரது தந்தை தங்கபாண்டியன் ஆகியோர் ஜாமீன் கேட்டு விண்ணப்பித்தனர். இதில் தங்கபாண்டியனுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. காசிக்கு ஜாமீன் மறுக்கப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் தலைமறைவாக இருந்த கவுதம் வெளிநாட்டில் இருந்து குமரி மாவட்டத்திற்கு வந்தார். இதுதொடர்பாக திருவனந்தபுரம் விமான நிலையத்தில் இருந்து சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் திருவனந்தபுரம் சென்று விமான நிலையத்தில் இருந்த கவுதமை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    இதைத்தொடர்ந்து 2 வழக்குகளிலும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டனர். இதையடுத்து கவுதமை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நாகர்கோவில் ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு 1-வது கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தனர்.

    இதனையடுத்து கவுதமனை ஒரு நாள் காவலில் எடுத்து விசாரிக்க கோர்ட்டு அனுமதி அளித்தது. அதன்படி போலீசார் கவுதமை ஒரு நாள் காவலில் எடுத்து விசாரித்தனர். காசிக்கும், கவுதமுக்கும் உள்ள தொடர்பு குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

    அப்போது அவர்கள் இருவரும் உறவினர்கள் என்பது தெரிய வந்தது. மேலும் காசிக்கு உதவியாக பெண்களுக்கு ஆபாச படங்களை அனுப்பியதும் தெரியவந்துள்ளது.

    இதைத் தொடர்ந்து மீண்டும் கவுதமை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர். இதைத் தொடர்ந்து போலீசார் மேலும் 2 வழக்குகளிலும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். இன்னும் ஒரு வார காலத்திற்குள் அந்த வழக்குகளிலும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்று போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

    • பேரூராட்சி நிர்வாகம் “திடீர்” நடவடிக்கை
    • கன்னியா குமரி பேரூராட்சி நிர்வாகம் சார்பில் வருகிற 28-ந்தேதி சீசன் கடைகள் ஏலம் விடப்படுகிறது.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரியில் தற்போது சபரிமலை அய்யப்ப பக்தர்கள் சீசன் தொடங்கி உள்ளது.

    இந்த சீசனை முன்னிட்டு கன்னியாகுமரி கடற்கரை சாலை மெயின் ரோடு போன்ற பகுதிகளில் நடை பாதைகளை ஆக்கிரமித்து தள்ளுவண்டி மற்றும் உருட்டு வண்டி கடைகள் அமைக்கப்பட்டுஉள்ளன.இதற்கிடையில் கன்னியா குமரி பேரூராட்சி நிர்வாகம் சார்பில் வருகிற 28-ந்தேதி சீசன் கடைகள் ஏலம் விடப்படுகிறது.

    இதைத்தொடர்ந்து கன்னியாகுமரி கடற்கரை சாலை, காந்தி மண்டபம் பஜார், மெயின் ரோடு, பழைய பஸ் நிலைய ரவுண் டானா சந்திப்பு, போன்ற பகுதி களில் நடைபாதை களை ஆக்கிரமித்து வைக் கப்பட்டிருந்த 150-க்கும் மேற்பட்ட தள்ளுவண்டி மற்றும் உருட்டு வண்டி கடைகளை பேரூராட்சி ஊழியர்கள் இன்று காலை அதிரடியாக அகற்றினார்கள்.

    கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி செயல் அலுவலர் ஜீவநாதன் தலைமையில் பேரூராட்சி சுகாதார அதிகாரி முருகன் சுகாதார மேற்பார்வை யாளர் பிரதீஸ் ஆகியோர் முன்னிலையில் இந்த ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றும் பணி நடந்தது. இந்த ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் பேரூராட்சி தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டனர்.

    கன்னியாகுமரி போலீஸ் டி.எஸ்.பி. ராஜா தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டிருந்தனர். பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இந்த ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடந்தது.

    • 10 மையங்களில் நடக்கிறது
    • விவரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்-04652 220167 ஆகும்.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    2022-க்கான 3,552 இரண் டாம் நிலை காவலர் ஆண் மற் றும் பெண் (ஆயுதப்படை மற்றும் தமிழ்நாடு சிறப்பு காவல் படை) இரண்டாம் நிலை சிறைத்துறை காவலர் மற்றும் தீயணைப்பாளர் பதவிகளுக்கான நேரடி தேர்வுக்கான அறிக்கை வெளியிடப்பட்டிருந்தது.

    எழுத்து தேர்வு வரும் நவம் பர் 27-ந்தேதி தமிழ் மொழி தகுதி தேர்வு, முதன்மை எழுத்து தேர்வு நடக்கிறது. அன்று காலை 8.30 மணிக்கு தேர்வு நடைபெறும் மையத்திற்கு அனைவரும் வர வேண்டும். தேர்வு நேரம் காலை 10 மணிக்கு தொடங்கி பகல் 12.40 மணி வரை நடைபெறும். குமரி மாவட்டத்தில் 10 மையங்களில் தேர்வுகள் நடக் கிறது. ஆரல்வாய்மொழி ஜெய மாதா பொறியியல் கல்லூரி யில் 1000 பேரும், தோவாளை லயோலா பொறியியல் கல்லூரியில் 1100, தோவாளை சிஎஸ்ஐ பொறியியல் கல்லூரியில் 1000, ஆரல்வாய்மொழி டிஎம்ஐ கல் லூரியில் 800, அஞ்சுகிராமம் ரோகிணி பொறியியல் கல்லூரியில் 1000, சுங்கான்கடை புனித சேவியர் பொறியியல் கல்லூரியில் 1000, நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ் தவ கல்லூரியில் 1000, நாவல்காடு ஜேம்ஸ் பொறியியல் கல்லூரியில் 1500, இறச்சகுளம் அமிர்தா பொறி யியல் கல்லூரியில் 1711, பார்வதிபு ரம் பொன் ஜெஸ்லி பொறியியல் கல்லூ ரியில் 1756 என்று மொத்தம் 11 ஆயிரத்து 907 பேர் தேர் எழுத நுழைவு சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளது.

    தேர்வு எழுதுபவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. காலை 8.30 மணி முதல் 10 மணி வரை மட்டுமே தேர்வு மையத்திற்குள் செல்ல அனுமதிக்கப்படுவார்கள். 10 மணிக்கு மேல் வருப வர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். விண்ணப்பதா ரர் தேர்வுக்கூட அனுமதிச் சீட்டில் குறிப்பிட்டுள்ள தேர்வு மையத்தில் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். தேர்வு மையத்தினை மாற்றம் ஏதும் செய்ய இயலாது.

    தேர்வுக்கூட அனுமதிச் சீட்டினை கொண்டுவராத தேர்வு மையத்திற்குள் விண்ணப்பதாரர் அனுமதிக்கப்படமாட்டாது. விண்ணப்பதாரர் புகைப்ப டத்துடன் கூடிய வேறு அடையாள அட்டையினை கொண்டு வருவது உகந்தது. செல்போன், கால்குலேட்டர் மற்றும் பிற எலக்ட்ரானிக் உபகரணங்கள் தேர்வு எழுதும் அறைக்குள் கண்டிப் பாக அனுமதிக்கப்பட மாட்டாது.

    எழுத்து தேர்வுக்கு வரும்போது கறுப்பு அல்லது நீல நிற பந்து முனை பேனா கொண்டு வர வேண்டும். பென்சில் கொண்டு வரக் கூடாது. அழைப்புக் கடிதம் கிடைக்கப்பெறாத விண்ணப்பதாரர்கள் தமிழ் நாடு சீருடை பணியா ளர் தேர்வாணைய இணைய தளம் (www.tn.gov.in/tnusrb.com) லிருந்து அழைப்புக் கடித நகல் எடுத்து தேர்வு மையத்திற்கு கொண்டு வர வேண்டும்.

    இத்தேர்வுக்கூட நுழைவுச் சீட்டில் விண்ணப்பதாரரின் புகைப்படம் இல்லாமல் இருந்தாலோ அல்லது தெளிவாக இல்லாமல் இருந்தாலோ விண்ணப்ப தாரர் தங்களது புகைப்ப டத்தினை ஒட்டி அதில் "A" அல்லது "B" பிரிவு அலுவலரிடம் சான்றொப் பம் பெற்று வர வேண்டும். மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்-04652 220167 ஆகும்.

    இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

    • போலீசார் தங்களது குறைகளை மனுவாக அளித்தனர்.
    • அதிகமானோர் பணி மாறுதல் கேட்டு கோரிக்கை வைத்தனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகர போலீசாரின் ரோந்து மோட்டார் சைக்கிள், மற்றும் கார்களை பரிசோதனை செய்வதற்கான வருடாந்திர ஆய்வு இன்று காலை திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி மைதானத்தில் நடந்தது.

    இதில் நூற்றுக்கும் மேற்பட்ட இரண்டு சக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களை மாநகர போலீஸ் கமிஷனர் பிரபாகரன் ஆய்வு செய்தார். மேலும் ஆயுதப்படை போலீசாரின் அணிவகுப்பை பார்வையிட்டார்.

    அதைத்தொடர்ந்து போலீசாரின் குறைகளை கேட்டு அறிந்தார். அப்போது போலீசார் தங்களது குறைகளை மனுவாக அளித்தனர். அதிகமானோர் பணி மாறுதல் கேட்டு கோரிக்கை வைத்தனர். மனுவை பெற்றுக் கொண்ட கமிஷனர் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

    பின்னர் போலீசாரின் ரோந்து வாகனம் ஓட்டும் போலீசாரிடம் வாகனத்தை அரசு வாகனம் தானே என்று கருதாமல் தனது சொந்தம் வாகனத்தை போல் பராமரிக்க வேண்டும். அதேபோல் எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். வாகனம் ஓட்டுபவர்கள் மிகவும் கவனமாக இயக்க வேண்டும். ஒரு சிறு விபத்து கூட ஏற்படாத வகையில் வாகனங்களை இயக்க வேண்டும் என அறிவுரைகள் வழங்கினார்.

    இந்த ஆய்வு நிகழ்ச்சியில் கூடுதல் துணை கமிஷனர் மனோகரன், துணை கமிஷனர் வனிதா, உதவி கமிஷனர் ராஜன், ஆயுதப்படை இன்ஸ்பெக்டர் பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×