என் மலர்
நீங்கள் தேடியது "எலி"
- ஒரு நாளைக்கு 3 மணி நேரத்திற்கு ஒருமுறை டீ, காபி, குளிர்பானம் வழங்கப்பட்டது.
- குளிர்பானங்களை அறவே தவிர்ப்பது நல்லது என தெரிவித்தனர்.
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள டாட்டா இன்ஸ்டியூட் ஆப் பண்டமென்டல் ரிசர்ச் நிலைய ஆராய்ச்சியாளர்கள் சில எலிகள் மூலம் சர்க்கரை நோய் குறித்து ஆராய்ச்சி செய்தனர்.
அப்போது சில எலிகளுக்கு ஒரு நாளைக்கு 4 முதல் 5 தடவை 100 மில்லி லிட்டர் அளவுள்ள சர்க்கரை கலந்த இனிப்பான டீ, காபி மற்றும் குளிர்பானங்களை கொடுத்தனர்.
ஒரு நாளைக்கு 3 மணி நேரத்திற்கு ஒருமுறை டீ, காபி, குளிர்பானம் வழங்கப்பட்டது. 2 ஆண்டுகள் நடந்த ஆராய்ச்சி முடிவில் அனைத்து எலிகளுக்கும் சர்க்கரை நோய் மற்றும் உடல் பருமன் ஏற்பட்டது தெரியவந்தது.
இதன் மூலம் ஒரு நாளைக்கு தினமும் 2 வேளை இனிப்பான டீ காபி குடிப்பவர்களுக்கு டைப்-2 சக்கரை வியாதி வருவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
எங்களுடைய ஆராய்ச்சி அமெரிக்கா தேசிய சுகாதார நிறுவன ஆய்வு மூலம் உலகளாவிய உணவு முறை தளர்வுகளுடன் ஒப்பிடப்பட்டன. டீ, காபியில் உள்ள சுக்ரோஸ் என்ற அமிலம் கல்லீரல் தசைகள் மற்றும் சிறுகுடல்களில் கடுமையான விளைவுகள் ஏற்படுத்துவதாக கண்டறியப்பட்டுள்ளது.
சர்க்கரை இல்லாத டீ, காபி குடிக்க முயற்சி செய்யுங்கள். குளிர்பானங்களை அறவே தவிர்ப்பது நல்லது என அவர்கள் தெரிவித்தனர்.
- இரவு நேரங்களில் தான் வைத்து செல்லும் பணம் காலை இல்லாமல் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
- பணத்தை திருடி உரிமையாளரை எலி ஒன்று பாடாய்ப்படுத்திய சம்பவம் பொதுமக்கள் மத்தியில் நகைச்சுவையை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர்:
திருப்பூர் பழைய பேருந்து நிலையத்தில் மகேஷ் என்பவர் பழக்கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது கடையில் தினசரி பணம் காணாமல் போவது வாடிக்கையாக இருந்துள்ளது. இரவு நேரங்களில் தான் வைத்து செல்லும் பணம் காலை இல்லாமல் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். ஒவ்வொரு நாளும் இதே நிலை நீடித்தது. இதனால் ரூ.100, 50 என வைத்து சோதித்து பார்த்த போதும் பணம் மட்டும் காணாமல் போவது தொடர்ந்துள்ளது.
இதையடுத்து பணம் காணாமல் போவதை கண்டுபிடிக்க கடையில் சிசிடிவி., கேமராக்களை பொருத்தி கண்காணித்து வந்தார். இன்று காலை கடைக்கு வந்து பார்த்தபோது கல்லாவில் வைத்திருந்த பணம் காணாமல் போனது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து சிசிடிவி., காட்சிகளை பார்த்த போது அவர் மேலும் அதிர்ச்சிக்குள்ளானார்.
அதிகாலை 4 மணி அளவில் பழங்களுக்கு இடையே புகுந்து வந்த எலி ஒன்று கல்லா பெட்டியில் பிளாஸ்டிக் கூடையில் இருந்த பணத்தை எடுத்து செல்லும் காட்சி பதிவாகி இருந்தது. இதனைத்தொடர்ந்து கடையில் இருந்த பொருட்களை வெளியேற்றி பார்த்த போது எலி தங்கியிருந்த இடத்தை கண்டறிந்தார். அதில் இது நாள் வரையில் எலி திருடிய பணம் அனைத்தும் எந்தவித சேதமும் இன்றி அங்கு கிடந்துள்ளது. அதனை எண்ணி பார்த்த போது 1500 ரூபாய் இருந்துள்ளது. எல்லோரும் பழத்தை திருடும் எலியை தான் பார்த்திருப்போம். ஆனால் திருப்பூர் பழக்கடையில் எலி பணத்தை திருடி சேதப்படுத்தாமல் பதுக்கி வைத்த சம்பவம் பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர்கள் முரளி, வடிவேல் நடித்த சுந்தரா டிராவல்ஸ் படத்தில் எலியின் சேட்டைகளால் முரளியும் வடிவேலும் படாதபாடுபடுவார்கள். அது போல் திருப்பூர் பழக்கடையில் தினமும் பணத்தை திருடி உரிமையாளரை எலி ஒன்று பாடாய்ப்படுத்திய சம்பவம் பொதுமக்கள் மத்தியில் நகைச்சுவையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் எலி பணத்தை திருடும் சி.சி.டி.வி. கேமரா காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
- வங்கி அதிகாரி சிக்கன் கிரேவியை ஓரிரு வாய் சாப்பிட்ட பிறகே கண்டுபிடித்தார்.
- உணவகம் மீது வங்கி அதிகாரி பந்த்ரா காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள உணவகம் ஒன்றில் வாடிக்கையாளர் ஒருவருக்கு பரிமாறப்பட்ட உணவில் செத்த எலி இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மும்பை நகரில் வங்கி அதிகாரி ஒருவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு ஷாப்பிங் முடித்துவிட்டு சபர்பன் பந்த்ரா பகுதியில் உள்ள உணவகத்திற்கு உணவு சாப்பிட வந்துள்ளார்.
அப்போது அவர், சிக்கன் கிரேவி உணவை ஆர்டர் செய்தார். உணவகத்தில் அவருக்கு பரிமாறப்பட்ட கிக்கன் உணவில் சிக்கனுடன் சேர்ந்து செத்த எலியும் இருந்தது. இதைக்கண்டு வங்கி அதிகாரி அதிர்ச்சி அடைந்தார்.
ஆனால் வங்கி அதிகாரி சிக்கன் கிரேவியை ஓரிரு வாய் சாப்பிட்ட பிறகே கண்டுபிடித்தார். சிக்கன் துண்டு என்று நினைத்து கடித்த வங்கி அதிகாரிக்கு வித்தியாசம் தெரியவே அதனை உன்னிப்பாக கவனித்தார். அப்போதுதான் அது சிக்கன் துண்டு அல்ல.. சுண்டெலி என்று தெரியவந்தது.
இதனை உணவக ஊழியர்களிடம் காண்பித்தபோது அது எலிதான் என்பது நிரூபணமானதை அடுத்து, வங்கி அதிகாரியிடம் மன்னிப்பு கேட்டனர்.
சிறுது நேரத்தில் வங்கி அதிகாரிக்கு உடல் நிலை சரியில்லாமல் போனதை அடுத்து மருத்துமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டார்.
இதைதொடர்ந்து, உணவகம் மீது வங்கி அதிகாரி பந்த்ரா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதை அடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பந்தப்பட்ட உணவக மேலாளர் மற்றும் ஊழியர்கள் இருவரை கைது செய்தனர்.
- குழந்தையின் மூக்கில் இருந்து ரத்தம் நிற்காமல் வந்தது.
- ஐதராபாத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
தெலுங்கானா மாநிலம் நாகர் கர்னூல் மாவட்டத்தைச் சேர்ந்த பெண்ணுக்கு கடந்த 40 நாட்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது. நேற்று வீட்டில் இருந்த போது குழந்தையை படுக்க வைத்து விட்டு தாயார் குளிக்கச் சென்றார்.
அந்த நேரத்தில் வீட்டில் இருந்த எலி ஒன்று குழந்தை அருகில் வந்தது. திடீரென குழந்தையின் மூக்கை எலி கடித்தது.
இதனால் குழந்தை கதறி அழுதது. சத்தம் கேட்டு குழந்தையின் தாய் மற்றும் குடும்பத்தினர் வந்து பார்த்தனர்.
அப்போது குழந்தையின் மூக்கில் இருந்து ரத்தம் நிற்காமல் வந்தது. இதனை தொடர்ந்து குழந்தையை ஐதராபாத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி குழந்தை பரிதாபமாக இறந்தது.
இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
எலி இருக்கும் வீடுகளில் குழந்தையை தரையில் படுக்க வைக்க வேண்டாம் என சுகாதாரத் துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.
- வீடியோக்களுடன் ஜாஸ்மிதாவின் பதிவில், ரெயிலில் தூய்மையற்ற நிலை மற்றும் எலிகள் சுற்றித்திரிவதை பார்க்கும் போது அதிர்ச்சியாக உள்ளது.
- அடுத்த சில நிமிடங்களில் பயணிகளுக்கு உதவி அளிக்கும் அதிகாரப்பூர்வ ரெயில்வே சேவா சங்கம் ஜாஸ்மிதாவின் புகாருக்கு பதில் அளித்தது.
ஓடும் ரெயிலில் ஏ.சி. பெட்டியில் எலி சுற்றித்திரிந்த வீடியோவை பெண் பயணி ஒருவர் எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார். ஜாஸ்மிதா பதி என்ற அந்த பயணி 2 வீடியோக்களை பதிவிட்டுள்ளார். அதில், ஒரு வீடியோவில் ரெயில் பெட்டியில் இருக்கைகளுக்கு கீழே எலி சுற்றித்திரியும் காட்சிகளும், மற்றொன்றில் தூசி படிந்த கண்ணாடி மற்றும் பெட்டியின் மேல்புறமும் காட்டப்பட்டுள்ளது.
வீடியோக்களுடன் ஜாஸ்மிதாவின் பதிவில், ரெயிலில் தூய்மையற்ற நிலை மற்றும் எலிகள் சுற்றித்திரிவதை பார்க்கும் போது அதிர்ச்சியாக உள்ளது. இந்த பிரச்சனைக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும் என குறிப்பிட்டு ரெயில்வே அமைச்சகத்தின் பக்கங்களை டேக் செய்திருந்தார். இதைத்தொடர்ந்து அடுத்த சில நிமிடங்களில் பயணிகளுக்கு உதவி அளிக்கும் அதிகாரப்பூர்வ ரெயில்வே சேவா சங்கம் ஜாஸ்மிதாவின் புகாருக்கு பதில் அளித்தது.
அதில், உங்களது பயணச்சீட்டின் பி.என்.ஆர். எண் மற்றும் செல்போன் எண் ஆகியவற்றை பகிர்ந்தால் மண்டல மேலாளர் வழியாக உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டிருந்தது.
Shocked by the sight of rats scurrying around and the appalling cleanliness conditions on this train ride. Something urgently needs to be done to address this issue. @RailMinIndia @Central_Railway @RailwaySeva pic.twitter.com/czRqpMGYUW
— Jasmita Pati (@JasmitaPati) March 19, 2024
- இது தொடர்பான தகவலை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளனர்.
- எலி இறந்து கிடந்தது அவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
ஐஸ் கிரீமில் மனித விரல், பூரான், துவங்கி உணவில் இறந்து கிடந்த பாம்பு, பிளேடு என இந்தியாவில் உணவுத்துறை சார்ந்த அலட்சிய சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இந்த வரிசையில், தற்போது சாக்லேட் சிரப் புதிதாக இணைந்துள்ளது.
பிரபல ஆன்லைன் டெலிவரி நிறுவனமான செப்டோவில் குடும்பத்தார் ஆர்டர் செய்து வாங்கிய சாக்லேட் சிரப்-இல் எலி இறந்து கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. சாக்லெட் சிரப்-ஐ வாங்கிய குடும்பத்தார், இது தொடர்பான தகவலை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளனர்.

அதில், சாக்லெட் சிரப்-ஐ தனது குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் உட்கொண்டதாகவும், அவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும், பிரவுனி கேக்-இல் சிரப்-ஐ ஊற்ற முற்படும் போது சாக்லெட் சிரப் வழக்கத்தை விட தடிமனாக இருந்ததையும், அதில் முடி இருந்ததையும் குடும்பத்தினர் கண்டுபிடித்தனர். இதைத்தொடர்ந்து பாட்டிலை முழுமையாக காலி செய்த போது, அதில் எலி ஒன்று இறந்து கிடந்தது அவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இந்த விவகாரம் தொடர்பாக ஹெர்ஷிஸ் நிறுவனத்திடம் புகார் தெரிவிக்கப்பட்டது. புகாருக்கு பதில் அளித்த ஹெர்ஷிஸ், "இந்த சம்பவத்திற்கு மன்னித்து விடுங்கள். தயவு செய்து UPC மற்றும் பாட்டிலில் உள்ள உற்பத்தி குறியீட்டை எங்களது நுகர்வோர் குறைதீர்ப்பு சேவைக்கு அனுப்பி வையுங்கள். எங்களது குழுவை சேர்ந்தவர்கள் உங்களுக்கு உதவலாம்," என்று தெரிவித்தது.
- ஓட்டலுக்குள் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து ஓட்டல் உரிமையாளருக்கு நோட்டீஸ் அனுப்பினர்.
- பயனர்கள் பலரும் தங்கள் பகுதிகளிலும் ஓட்டல்களில் இதுபோன்று சுகாதாரமற்ற உணவுகள் வினியோகம் செய்யப்பட்டது குறித்து பதிவிட்டு வருகின்றனர்.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தை சேர்ந்தவர் அபினாஸ்-தேவி தம்பதியினர் அப்பகுதியில் உள்ள ஒரு பிரபல ஓட்டலுக்கு சாப்பிட சென்றனர். அப்போது அந்த தம்பதி தங்களுக்கு தோசை ஆர்டர் செய்துள்ளனர். அதன்படி ஊழியர் ஒருவர் தோசை கொண்டுவந்து கொடுத்துள்ளார்.
தோசையுடன் வழங்கப்பட்ட சாம்பாரில் ஒரு இறந்த எலி கிடந்துள்ளது. இதைப்பார்த்து அந்த தம்பதியினர் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக உணவக ஊழியர்களிடம் புகார் அளித்துள்ளனர். ஆனால் அவர்கள் இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த தம்பதியினர் மாநகராட்சி அதிகாரிகளிடமும், சுகாதாரத்துறையிடமும் புகார் அளித்தனர்.
அதன் பேரில் ஓட்டலுக்குள் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து ஓட்டல் உரிமையாளருக்கு நோட்டீஸ் அனுப்பினர். மேலும் அந்த உணவகத்தை சுகாதாரத்துறை அதிகாரிகள் மூடி சீல் வைத்தனர். இது தொடர்பான செய்திகள் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் பயனர்கள் பலரும் தங்கள் பகுதிகளிலும் ஓட்டல்களில் இதுபோன்று சுகாதாரமற்ற உணவுகள் வினியோகம் செய்யப்பட்டது குறித்து பதிவிட்டு வருகின்றனர்.
- கடைகளில் விற்கப்படும் உணவையே வாங்கி உண்ணும் கட்டாயம் ஏற்படுகிறது
- இந்தியாவிலேயே மிகப்பெரிய ரயில் நிலையமாக விளங்கும் கல்கத்தாவில் உள்ள ஹவுரா ரயில் நிலையத்தில் உள்ள உணவகம் ஒன்றில் இது படம்பிடிக்கப்பட்டுள்ளது
ஐஸ்கிரீமில் மனித விரல், குளோப்ஜாமுனில் கரப்பான் பூச்சி, மெஸ் உணவில் பாம்பு என சமீப காலங்களாக இந்தியாவில் ஹோட்டல்கள், ரயில்வே உணவுகளின் தரம் கீழிறங்கிக்கொண்டே வருவதாக பொதுமக்கள் வருத்தத்தில் உள்ளனர். இந்த சூழ்நிலையில் தான் மக்களின் பொறுமையை சோதிக்கும் வகையில் மற்றொரு வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரயிலில் பயணிக்கும்போது மக்கள் பெருமபாலும் ஐஆர்சிடிசி தயாரிக்கும் உணவையும், ரயில் நிலையங்களின் உள்ளே உள்ள கடைகளில் விற்கப்படும் உணவையே வாங்கி உண்ணும் கட்டாயம் ஏற்படுகிறது. அந்த வகையில் பப்ஸ் இந்தியர்களின் நொறுக்குத் தீனி உணவுகளில் முன்னிலையில் உள்ளது. அந்த பப்சுக்கே இப்போது வந்துள்ள சோதனையை யாரிடம் சொல்வது என இணயவாசிகள் நொந்துகொள்கின்றனர்.
இந்தியாவிலேயே மிகப்பெரிய ரயில் நிலையமாக விளங்கும் கல்கத்தாவில் உள்ள ஹவுரா ரயில் நிலையத்தில் உள்ள உணவகம் ஒன்றில் கண்ணாடி பெட்டிக்குள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த சிக்கன்பப்ஸுகளுக்கு மத்தியில் உயிருள்ள எலி ஒன்று ஊர்ந்து கொண்டிருப்பதை படப்பிடித்து ஒருவர் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி கண்டனங்களை குவித்து வருகிறது.
Saw a Rat Nesting on Chicken Puffs at the Mio Amore Counter at Howrah Station ? byu/Aggressive_Basil923 inkolkata
- பணியாளர்களின் சுகாதார பராமரிப்பில் குளறுபடி உள்ளது என்று தலைப்பில் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.
- வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் தங்களை கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
தெலுங்கானா மாநிலம் சுல்தான்பூரில் உள்ள ஜேஎன்டியூஎச் பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி மாணவர்களால் பதிவு செய்யப்பட்ட ஒரு வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
லட்சுமி காந்த் என்ற பயனர் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள அதிர்ச்சியூட்டும் வீடியோவில், விடுதியில் உள்ள கேன்டினில் சட்னி நிறைந்த பெரிய பாத்திரத்தின் உள்ளே எலி ஒன்று நீந்துவதைக் காணமுடிகிறது.
ஜேஎன்டியூஎச் சுல்தான்பூரில் "சட்னி"யில் எலி. பணியாளர்களின் சுகாதார பராமரிப்பில் குளறுபடி உள்ளது என்று தலைப்பிட்டு வெளியிடப்பட்ட வீடியோ தற்போது சுமார் 75K பார்வைகளை கடந்துள்ளது. வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் தங்களை கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
அதில் ஒரு பயனர், "ஜேஎன்டியூ சுல்தான்பூரில் இந்த நிலை புதிதல்ல. 2016 முதல் 2020 வரையில் தரமான உணவை எங்களுக்கு வழங்குவதற்காக ஒவ்வொரு நாளும் நாங்கள் மெஸ் நிர்வாகத்திடம் வாதிட வேண்டியிருந்தது. இன்றும் இது தொடர்வதைப் பார்க்க வருத்தமாக இருக்கிறது" என கூறியிருந்தார்.
இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த சுகாதார அமைச்சர் தாமோதர் ராஜா நரசிம்ஹா உத்தரவிட்டுள்ளார்.
- ராஜஸ்தானில் அமைக்கபட்டுள்ள சாலையின் பல இடங்களில் பள்ளங்கள் ஏற்பட்டது.
- எலிகள் ஓட்டை போட்டதால் தான் இந்த பள்ளம் உருவானது என்று ஊழியர் ஒருவர் தெரிவித்தார்
டெல்லி-மும்பைக்கு இடையே 1,386 கிலோமீட்டர் தொலைவிற்கு நெடுஞ்சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இந்த நெடுஞ்சாலை போடப்பட்டால் டெல்லி-மும்பைக்கு இடையேயான பயண நேரம் 24 மணி நேரத்திலிருந்து 12-13 மணிநேரமாக குறையும் என்று சொல்லப்படுகிறது.
ஹரியானா, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், குஜராத் மற்றும் மகாராஷ்டிரா உட்பட பல மாநிலங்களில் இந்த விரைவுச் சாலை பயணிக்கிறது. இந்த நெடுஞ்சாலை அமைப்பதற்கான 80% பணிகள் முடிந்து விட்டதாகவும் இன்னும் 1 வருடத்தில் அனைத்து பணிகளும் முடிந்து சாலை பயன்பாட்டுக்கு வரும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த நெடுஞ்சாலையின் ஒரு பகுதியாக ராஜஸ்தானின் தௌசா மாவட்டத்தில் அமைக்கபட்டுள்ள சாலையின் பல இடங்களில் பள்ளங்கள் ஏற்பட்டது.
இந்த பள்ளங்கள் குறித்து பேசிய ஊழியர் ஒருவர், எலிகள் ஓட்டை போட்டதால் தான் இந்த பள்ளம் உருவானது என்று தெரிவித்தார். ஊழியரின் இந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனையடுத்து அந்த ஊழியர் பணிநீக்கம் செய்யப்பட்டார்.
இதனையடுத்து, தண்ணீர் கசிவு காரணமாக தான் சாலையில் பள்ளம் ஏற்பட்டது என்றும் பள்ளம் விரைவில் சரிசெய்யபட்டது என்று தௌசாவில் உள்ள விரைவுச் சாலையின் திட்ட இயக்குநர் பல்வீர் யாதவ் தெரிவித்தார்.
- விமானத்தில் வழங்கப்பட்ட உணவில் உயிருடன் எலி இருந்ததால் பயணிகள் அச்சமடைந்து கூச்சல் இட்டனர்.
- இச்சம்பவத்திற்கு விமான நிறுவனம் வருத்தம் தெரிவித்துள்ளது.
நார்வே நாட்டில் இருந்து ஸ்பெயினுக்கு சென்ற ஸ்காண்டிநேவியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் வழங்கப்பட்ட உணவில் உயிருடன் எலி இருந்ததால் பயணிகள் அச்சமடைந்து கூச்சல் இட்டனர். இதனால் விமானம் அவசரமாக டென்மார்க்கில் தரையிறக்கப்பட்டது.
பின்னர் பயணிகள் அனைவரும் வேறு விமானத்திற்கு மாற்றப்பட்டு ஸ்பெயினுக்கு புறப்பட்டனர்.
இச்சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்த விமான நிறுவனம், 'பலத்த பாதுகாப்பையும் மீறி இந்த அரிதான நிகழ்வு நடந்துள்ளது. இனி இதுபோன்று நடக்காது' எனவும் உறுதியளித்துள்ளது.
- உயிரிழந்தவரின் கண்ணை எலி கடித்திருக்கலாம் என்று மருத்துவமனை ஊழியர்ககள் தெரிவித்தனர்.
- இந்த விவகாரம் தொடர்பாக விசாரிக்க 4 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள நாளந்தா மருத்துவமனையில் இறந்து போன ஒருவரின் இடதுபக்க கண் காணாமல் போனது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நவம்பர் 14 அன்று பன்டூஷ் என்ற நபரை மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதனையடுத்து அவர் சிகிச்சைக்காக நாளந்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நவம்பர் 15 அன்று அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி அன்று இரவு அவர் உயிரிழந்தார்.
இதனையடுத்து நேற்று அவரது உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்படவிருந்த நிலையில், அவரது இடது கண் காணாமல் போனதை பார்த்த அவரது உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர். அறுவை சிகிச்சை பிளேடு ஒன்று சடலத்துக்கு அருகில் இருந்ததாக உறவினர் ஒருவர் குற்றம் சாட்டினார்.
உயிரிழந்தவரின் கண்ணை எலி கடித்திருக்கலாம் என்று மருத்துவமனை ஊழியர்கள் தெரிவித்தனர். இதனையடுத்து இந்த விவகாரத்தில் மருத்துவமனை நிர்வாகம் அலட்சியத்துடன் செயல்பட்டதாக கூறி, பன்டூஷ் குடும்பத்தினர் மருத்துவமனை வளாகத்திற்குள் போராட்டம் நடத்தினர்.
இது தொடர்பாக பேசிய நாளந்தா மருத்துவமனையின் கண்காணிப்பாளர் மருத்துவர் வினோத் குமார், "இந்த விவகாரம் தொடர்பாக விசாரிக்க 4 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. யாராவது அவர் கண்ணை வெளியே எடுத்திருப்பார்களோ அல்லது எலி கண்ணை கடித்ததா என்ற 2 கோணத்தில் விசாரித்து வருகிறோம். இது இரண்டில் எது நடந்திருந்தாலும் அது தவறு தான். விசாரணைக்கு பின் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக மருத்துவமனையில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, விசாரணை மேற்கொண்டு வருவதாக போலீசார் தெரிவித்தனர்.