என் மலர்
நீங்கள் தேடியது "போலீசார்"
- திருப்பூர் ரெயில் நிலையத்தில் முதியவரிடம் செல்போன் பறிப்பு
- பெண்ணால் திருப்பூர் ரெயில் நிலையத்தில் பரபரப்பு
திருப்பூர்:
திருப்பூர் ரெயில் நிலையத்தில் முதியவரிடம் செல்போனை பிடுங்கி, நீங்கள்பீடி, சிகரெட் குடிக்கிறீர்களா, தீப்பெட்டி வைத்துள்ளீர்களா நான் சேலம்கோட்ட ரெயில்வே அதிகாரி உங்களுக்கு அபராதம் விதித்து விடுவேன் எனக் கூறி 38 வயதுள்ள பெண் ஒருவர் வீடியோ எடுத்தார். பலர் வேடிக்கை பார்க்க, அங்கிருந்த தம்பதியினர்- இளம்பெண்ணையும் வீடியோ எடுத்தார்.
இளம்பெண் எதிர்ப்பு தெரிவித்து நீங்கள் யார் என கேட்க, கடும் வார்த்தைகளால் அப்பெண் திட்டிள்ளார். இதையடுத்து அங்கிருந்தவர்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர். அங்கு வந்த போலீஸ்காரர் கண்ணன் அப்பெண்ணிடம் விசாரணை நடத்த கால்மேல் கால் போட்டு அமர்ந்தபடி, நான் சேலம் டிவிசன் ஆபீசர், திருப்பூர் ஸ்டேஷன் என்னோடுது, தினமும் வர்றேன். எல்லாத்தையும்புடுச்சி, புடுங்கிட்டாங்களா, என்ன வந்து விசாரிக்கிறீங்க, என்னை யாரும்எதுவும் கேட்க முடியாது என, வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அங்கிருந்தவர்களிடம் போலீஸ்காரர் விசாரணை நடத்திக் கொண்டிருக்க,குறுக்கிட்ட அந்த பெண்,' உனக்கு விசாரிக்கவே தெரியல, நீ எப்படி? வேலைக்கு வந்த என வாய்க்கு வந்தபடி பேசினார். அங்கு வந்த ரெயில்வே போலீஸ் எஸ்.ஐ., லதா அப்பெண்ணை அங்கிருந்து அப்புறப்படுத்தி, அழைத்துச் சென்றனர். தன்னைரெயில்வே அதிகாரி எனக்கூறி போலீசாரிடம் சண்டையிட்ட பெண்ணால் திருப்பூர் ரெயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
- ரெயில் நிலையங்களில் உள்ள பார்சல்கள் சோதனை
- மங்களூருவில் குண்டு வெடிப்பு எதிரொலி
நாகர்கோவில்:
கர்நாடக மாநிலம் மங்களூர் நகர் நாகுரி பகுதியில் நேற்று முன்தினம் மாலையில் ஆட்டோவில் குக்கர் வெடிகுண்டு வெடித்தது. ஆட்டோ டிரைவர் உள்பட 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
முதல் கட்ட விசாரணையில் மங்களூரில் நாச வேலைக்கு திட்டமிட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மங்களூரில் வெடிகுண்டு சம்பவத்தை தொடர்ந்து தமிழகம் முழு வதும் போலீசார் உஷார் படுத்தப்பட்டனர். குமரி மாவட்டத்திலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவின் பேரில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். சர்வதேச சுற்று லாத்தலமான கன்னியா குமரியில் போலீசார் ரோந்து சுற்றி வந்தனர். மாவட்ட எல்லை பகுதிகளில் உள்ள சோதனை சாவடிகளி லும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
களியக்காவிளை அஞ்சுகிராமம் ஆரல்வாய்மொழி சோதனை சாவடிகளில் கூடுதல் போலீசார் நியமிக்கப்பட்டு கண்காணிக் கப்பட்டு வருகிறார்கள். கன்னியாகுமரி நாகர்கோ வில் குளச்சல் தக்கலை சப் டிவிஷனுக்குட்பட்ட பகுதிகளில் வாகன சோத னையும் போலீசார் நடத்தி வருகிறார்கள்.
நாகர்கோவில் ரெயில் நிலையத்திலும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணி யில் ஈடுபட்டனர். இன்ஸ்பெக்டர் கேத்தரின் சுஜாதா தலைமையில் போலீசார் பிளாட்பாரங்களில் ரோந்து சுற்றி வந்தனர். பிளாட்பாரங்களில் சுற்றி வந்த போலீசார் ரெயில்களிலும் கண்காணிப்பணியை மேற்கொண்டனர்.
ரெயில்வே தண்ட வாளங்களிலும் சோ தனை நடத்தப்பட்டது. நாகர்கோவிலில் இருந்து வெளியூருக்கு அனுப்பு வதற்காக வைக்கப்பட்டிருந்த பார்சல்களையும் போலீசார் சோதனை செய்தனர். வெளியூர்களில் இருந்து வந்த பார்சல்களும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இன்று 2-வது நாளாக காலை முதலே சோதனை நடந்து வருகிறது.
வெளியூர்களில் இருந்து வரும் ரெயில்களில் போலீ சார் தீவிர சோதனை மேற்கொண்டு வருகிறார் கள். கன்னியாகுமரி, குழித் துறை, நாங்குநேரி, வள்ளியூர், இரணியல் ரெயில் நிலை யங்களிலும் கூடுதல் போலீசார் நியமிக்கப்பட்டு கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகிறார்கள்.
- நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் திங்கள் கிழமை தோறும் பொது மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு வருகிறது.
- பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசார் தங்களது உடமைகளை வைப்பதற்கு இடவசதி இல்லாமல் இருந்தது.
நாகர்கோவில்:
நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் திங்கள் கிழமை தோறும் பொது மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு வருகிறது.
இதையடுத்து மாவட்ட த்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமானார் வந்து மனு கொடுத்து செல்கி றார்கள். மற்ற நாட்களிலும் பொது மக்களும், அரசியல் கட்சியினரும் மனு அளிக்க வருகிறார்கள்.
மனு அளிக்க வரும் பொது மக்கள் சிலர் தற்கொலைக்கு முயலும் சம்பவங்கள் நடந்து வரு வதையடுத்து கலெக்டர் அலுவலகத்தில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. அலுவலகத்தின் முன் பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
இவர்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு வரு பவர்களை சோதனைக்கு பிறகு உள்ளே அனுமதித்து வருகிறார்கள். பாதுகாப்பு பணியில் பெண் போலீ சாரும் ஈடுபட்டு உள்ளனர்.
பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசார் தங்க ளது உடமைகளை வைப்பதற்கு இடவசதி இல்லாமல் இருந்தது. மேலும் உணவு அருந்துவதற்கும் அவர்கள் சிரமப்பட்டு வந்தனர். இதுதொடர்பாக கலெக்டரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது .
இந்த நிலையில் போலீ சாருக்கு கலெக்டர் அலுவல கத்தின் முன் பகுதியில் இடம் ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. கலெக்டர் அலுவலகத்தின் முன் பகுதி யில் காலியாக இருந்த அறை ஒன்று போலீசாருக்கு வழங்கப்பட்டு உள்ளது. பாதுகாப்பு பணியில் ஈடு படும் போலீசார் அந்த அறையை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதையடுத்து இன்று காலை முதல் அந்த அறை யில் போலீசார் தங்களது உடமைகளையும், பொருட்களையும் வைத்தி ருந்தனர். மழை மற்றும் வெயில் நேரங்களில் இந்த அறை எங்களுக்கு பயன் உள்ளதாக இருக்கும் என்று போலீசார் தெரிவித்தனர்.
- பொதுமக்கள் பார்த்து தஞ்சை ரெயில்வே இருப்பு பாதை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
- பிரேத பரிசோதனைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தஞ்சாவூர்:
தஞ்சை அருகே உள்ள சோழகம்பட்டி ரெயில்வே நிலைய தண்டவாளத்தில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் பிணம் ஒன்று கிடந்தது.
இதனை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து தஞ்சை ரெயில்வே இருப்பு பாதை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன் பேரில் இன்ஸ்பெக்டர் சிவ வடிவேல் தலைமையில் சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் இசையரசன், தனிப்பிரிவு சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் சுரேஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிணத்தை பார்வையிட்டனர். ஆனால் அவர் யார்? எந்த ஊர்? என்று விவரம் தெரியவில்லை.
இதையடுத்து மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த நபர் தண்டவாளத்தை கடக்க முயலும் போது ரெயிலில் அடிப்பட்டு இறந்தாரா? அல்லது வேறு ஏதும் காரணமா ? என்ற பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் . மேலும் அவர் யார் என்ற விவரம் குறித்தும் விசாரித்து வருகின்றனர்.
- போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் தொடங்கி வைத்தார்
- ரத்ததானம் வழங்குவதால் எந்த பாதிப்பும் ஏற்படாது.
நாகர்கோவில்:
நாகர்கோவில், ஆயுதப்படை மைதானத்தில் போலீசாருக்கான ரத்ததான முகாம் இன்று நடந்தது. முகாமை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் ரத்ததானம் வழங்கினார்.
இதைத்தொடர்ந்து நாகர்கோவில் டவுன் டி.எஸ்.பி. நவீன் குமார், வடசேரி இன்ஸ்பெக்டர் திருமுருகன் மற்றும் சப்- இன்ஸ்பெக்டர்கள், போலீசார், ஆயுதப்படை போலீசார் என 50-க்கும் மேற்பட்டவர்கள் ரத்ததானம் வழங்கினார்கள்.
ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் இருந்து வந்த டாக்டர் குழுவினர் ரத்தான முகாமில் பங்கேற்றனர். இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் கூறுகையில், இது மிக முக்கியமான நிகழ்வாகும். ரத்ததானம் வழங்குவதால் எந்த பாதிப்பும் ஏற்படாது. போலீசார் தற்பொழுது ஆர்வமாக வந்து ரத்ததானம் வழங்கி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது, என்றார்.
- தக்கலை - ராமன்பரம்பு சாலையை சீரமைக்க வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம்
- உண்ணாவிரதம் இருக்கலாம் ஆனால் பந்தல் அனுமதி கிடையாது என தெரிவித்த போலீசாருடன் கடும் வாக்கு வாதம்
கன்னியாகுமரி:
தக்கலை அருகே உள்ள பத்மனாபபுரம் நகரட்சிக்குட்பட்ட 15-வது வார்டில் தக்கலை - ராமன்பரம்பு சாலை குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் மக்கள் அவதிபட்டு வந்தனர், சாலையை சீரமைக்க வலியுறுத்தி பாரதிய ஜனதா கவுன்சிலர் கீதா பலமுறை மனு கொடுத்தும் பலன் இல்லை.
இந்த நிலையில் சாலையை சீரமைக்க வலியுறுத்தி தக்கலை பஸ் நிலையம் இன்று உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று (வெள்ளிக்கிழமை) காலை பாரதிய ஜனதாவினர் பேராட்டத்திற்கு திரண்ட னர். உண்ணாவிரதம் இருப்பவர் வசதிக்காக பந்தல் அமைக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் இன்று காலை தக்கலை போலீஸ் இன்ஸ்பெக்டர் நெப்போலியன் மற்றும் போலீசார் அங்கு வந்தனர். அவர்கள் உண்ணாவிரதம் இருக்கலாம். ஆனால் பந்தல் அனுமதி கிடையாது என தெரிவித்தனர்.
இதற்கு பாரதிய ஜனதாவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்கள் போலீசாருடன் கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பந்தலை அகற்ற பாரதிய ஜனதாவினர் மறுத்தனர். தொடர்ந்து உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. கவுன்சிலர் கீதா தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் உன்னி கிருஷ்ணன் முன்னிலை வகித்தனர். உண்ணாவிரதத்துக்கு பாஜக ஓபிசி அணி மாவட்ட தலைவர் குமாரதாஸ், மாவட்ட நிர்வாகிகள் குமரி ரமேஷ், டாக்டர் சுகுமாரன், ஷண்முகம், துளசிதாஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- போலீ சார் அந்த எலும்பு கூடை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
- மீட்கப்பட்ட எலும்புக்கூடின் மண்டை ஓடு பாகங்கள் சூப்பர் இம்போசிசன் மற்றும் தொடை எலும்பு பாகங்களை டி.என்.ஏ. ஆய்வுக்கு உட்படுத்த போலீசார் திட்டமிட்டு ஆய்வுக்கு அனுப்பி உள்ளனர்.
கன்னியாகுமரி:
இரணியல் அருகே உள்ள வில்லுக்குறி மாம்பழத்து றையாறு அணை அருகே நாடாங் கோணம் பொற்றை உள்ளது. இங்கு பாறை களுக்கிடையே மனித எலும்புக் கூடு கிடப்பதாக இரணியல் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன் பேரில் இரணி யல் போலீஸ் சப்-இன்ஸ் பெக்டர் சுந்தர்மூர்த்தி தலைமையிலான போலீ சார் சம்பவ இடம் சென்று எலும்பு கூடை கைப்பற்றி விசாரணை நடத்தினர். இதில் அது ஆண் எலும்பு கூடு என ெதரிய வந்தது.
எனவே யாரையாவது கொலை செய்து உடலை இங்கு வீசியிருக்கலாமா? என்ற கோணத்தில் போலீ சார் விசாரணை நடத்தினர்.மேலும் மாயமானவர்கள் குறித்தும் விசாரணை நடத்தினர்.
அப்போது திருவிடை க்கோடு கோபாலப்பிள்ளை மகன் கிருஷ்ணன்குட்டி (வயது75) காணாமல் போயிருந்ததும், இது குறித்து அவரது மகள் பிரியா (43) கடந்த 24-ந் தேதி புகார் கொடுத்து இருப்பதும் தெரியவந்தது.
இதனை தொடர்ந்து கிருஷ்ணன் குட்டியின் உறவினர்களை அழைத்து வந்து போலீசார் காண்பித்த னர். எலும்பு கூட்டில் இருந்த லுங்கியைத்தான் காணாமல் போன அன்று கிருஷ்ணன்குட்டி கட்டி இருந்ததாக அவரது மகள் மற்றும் உறவினர்கள் தெரி வித்தனர். காவலாளி யாக வேலை பார்த்த கிருஷ்ணன்குட்டி கடந்த சில காலமாக மன நலம் பாதிக்கப்பட்டு இருந்தததும் விசாரணையில் தெரிய வந்தது. தொடர்ந்து போலீ சார் அந்த எலும்பு கூடை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இறந்தவர் கிருஷ்ணன் குட்டிதானா என்பதை உறுதி செய்ய, மீட்கப்பட்ட எலும்புக்கூடின் மண்டை ஓடு பாகங்கள் சூப்பர் இம்போசிசன் மற்றும் தொடை எலும்பு பாகங்களை டி.என்.ஏ. ஆய்வுக்கு உட்படுத்த போலீசார் திட்டமிட்டு ஆய்வுக்கு அனுப்பி உள்ளனர்.
- தனியார் காடுகள் சட்டத்தில் சில பகுதிகளை நீக்க வேண்டும்.
- சூழல் தாங்கு மண்டல பகுதிகள் என்பதை மறு வரையறை செய்ய வேண்டும்
நாகர்கோவில்:
நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடந்தது. பழங்குடி மக்களின் அனைத்து வீடுகளுக்கும் கழிப்பறை கட்டி தர வேண்டும்.விலங்குகள் சரணாலயம், யானைகள் மற்றும் புலிகள் சரணாலயம் என்ற பெயரில் பூர்வீக பழங்குடி அவர்களின் நிலங்களில் இருந்து வெளியேற்றம் செய்வதை நிறுத்த வேண்டும்.
தனியார் காடுகள் சட்டத்தில் சில பகுதிகளை நீக்க வேண்டும். சூழல் தாங்கு மண்டல பகுதிகள் என்பதை மறு வரையறை செய்ய வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதற்கு குமரி மாவட்ட குழு தலைவர் மணிகண்டன் தலைமை தாங்கினார்.செயலாளர் வேலப்பன் முன்னிலை வகித்தார். துணைத் தலைவர் பினு குமார் வரவேற்று பேசினார்.பொருளாளர் ரமேஷ் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட துணை தலைவர் இசக்கிமுத்து, நாம் தமிழர் கட்சி கிழக்கு மாவட்ட பொருளாளர் அனிட்டர் ஆல்வின், பேச்சிப்பாறை ஊராட்சி மன்ற தலைவர் தேவதாஸ் ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள். மணி,ராஜேந்திரன், சுகுமாரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது.
தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்க நிர்வாகிகள் ஆர்ப்பாட்டம் முடிந்த பிறகு கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிப்பதற்காக வந்தனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அனைவரையும் கலெக்டர் அலுவலகத்திற்குள் அனுமதிக்க முடியாது. ஒரு சிலர் மட்டுமே கலெக்டர் அலுவலகத்திற்குள் செல்ல வேண்டும் என்று தெரிவித்தனர் .இதனால் போலீசாருக்கும் பழங்குடி மக்கள் சங்கம் நிர்வாகிகள் மற்றும் நாம் தமிழர் கட்சியினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தள்ளுமுள்ளும் மூண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அவர்கள் கலெக்டர் அலுவலகத்திற்குள் வந்து மனு அளித்தனர்.
- சமூக வலை தளம் மூலம் பழகி மாயமானார்
- வாலிபரை போக்சோ வழக்கில் போலீசார் கைது செய்தனர்.
கன்னியாகுமரி:
குமரி மாவட்டம் மணவாளக்குறிச்சி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 9- ம் வகுப்பு மாணவி ஓருவர், கடந்த மாதம் 21-ந் தேதி வீட்டில் இருந்து பள்ளிக்கு சென்றார்.
அதன்பிறகு அவர் மாலை யில் வீடு திரும்பவில்லை.மாணவியின் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளில் தேடி யும் மாணவி குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை.
இது குறித்து மாணவியின் தந்தை குளச்சல் மகளிர் போலீசில் புகார் செய்தார்.போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான மாணவி குறித்து விசாரணை நடத்தி வந்தனர்.
இதில் திருப்பூர் மாவட்டம் ராஜீவ்காந்தி நகரை சேர்ந்த லட்ச பிரபு (வயது 22) என்ப வருடன் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதியில் மாணவி தங்கியிருப்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.
அவர்கள் மாணவியையும், அவருடன் இருந்த வாலிபரையும் மீட்டு குளச்சல் போலீஸ் நிலையம் அழைத்து வந்தனர். விசா ரணையில் மாணவி சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம் மூலம் லட்சபிரபுவுடன் பழகி இருப்பது தெரிய வந்தது.
தொடர்ந்து மாணவியை போலீசார் மருத்துவ பரிசோ தனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். லட்ச பிரபுவை போக்சோ வழக்கில் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் நாகர்கோவில் போக்சோ கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
- மதுரை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் 1500 போலீசார் கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக பாதுகாப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
- இயேசு கிறிஸ்துவின் பிறப்பை விளக்கும் குடில்கள் மற்றும் நட்சத்திரங்களும் பார்ப்பதற்கு மனதை கவரும் கண்கொள்ளா காட்சியாக இருந்து வருகிறது.
மதுரை
மதுரையில் நாளை கிறிஸ்துமஸ் பண்டிகை விமரிசை யாக கொண்டாடப்படும் நிலையில் இன்று நள்ளிரவு முதல் அதிகாலை வரை மதுரையில் உள்ள 100-க்கும் மேற்பட்ட கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெறுகின்றன.
இதற்காக அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களும் மின்விளக்குகள் மற்றும் அலங்கார விளக்கங்களால் அலங்கரிக்கப்பட்டு மின்னொளியில் ஜொலித்து வருகின்றன.
இயேசு கிறிஸ்துவின் பிறப்பை விளக்கும் குடில்கள் மற்றும் நட்சத்திரங்களும் பார்ப்பதற்கு மனதை கவரும் கண்கொள்ளா காட்சியாக இருந்து வருகிறது.
நள்ளிரவு கிறிஸ்துமஸ் பண்டிகை சிறப்பு பிரார்த்தனைகள் தொடங்குவதால் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் தேவாலயங்க ளுக்கு சென்று இந்த பிரார்த்தனையில் ஈடுபடுகிறார்கள்.
இதையொட்டி கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் முக்கிய பகுதிகளில் பாதுகாப்பு பணி பலப்படுத்தப்பட்டுள்ளது. நள்ளிரவு நேரம் என்பதால் பிரார்த்தனைக்கு செல்பவர் களுக்கு தேவையான அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளையும் மதுரை நகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத் ஆகியோரது உத்தரவு பேரில் பாதுகாப்பு பணிகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
மதுரை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் 1500 போலீசார் கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக பாதுகாப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். முக்கிய பகுதிகளில் வாகன சோதனை நடத்தவும் போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபடும் வகையில் கூடுதல் போலீசாரை பணியமர்த்த வும் உத்தரவிடப்பட்டுள்ளது.
- முத்தலக்குறிச்சியில் இருந்து தக்கலை பஸ் நிலையம் வரை ஊரக சாலை மேம்பாடு நிதியில் ஜூலை மாதம் தொடங்கப்பட்ட பணி நிறைவு பெறவில்லை.
- பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
கன்னியாகுமரி:
இரணியல் அருகே முத்தலக்குறிச்சி பகுதியில் இருந்து தக்கலை பஸ் நிலையம் வரை ஊரக சாலை மேம்பாடு நிதியில் இருந்து ரூ.49 லட்சம் மதிப்பிலான பணிகள் கடந்த ஜூலை மாதம் தொடங்கப்பட்டது. சுமார் 6 மாதங்கள் கழித்தும் பணி நிறைவு பெறவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் பெரும் அவதியடைந்து வருகின்றனர். இதனை யடுத்து மனோகர் குமார் தலைமையில் பொதுமக்கள் சுமார் 100 பேர் முத்தலக்குறிச்சி சந்திப்பில் சாலை மறியல் செய்ய திரண்டனர். அவர்களிடம் இரணியல் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்வேல்குமார் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினார்.
பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை யடுத்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
- பணம் எடுத்துகொண்டு வெளியே வந்து பார்த்த போது சிறுமியை காணவில்லை .
- கண்டுபிடித்து அவருடைய பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
கிருஷ்ணகிரி,
ஓசூர் அருகேயுள்ள மத்திகிரி குதிரைபாளையம் கிராமத்தை சேர்ந்த அன்பு வடிவு என்பவர் தனது 3 வயது குழந்தையான ரியாஸ்டி (எ)அக்சயா ஸ்ரீ உடன் மத்திகிரி பேருந்து நிலையம் அருகிலுள்ள ஏ.டி.எம்.முக்கு சென்று தன் மகளை வெளியே நிறுத்திவிட்டு பணம் எடுத்துகொண்டு வெளியே வந்து பார்த்த போது சிறுமியை காணவில்லை .
இதுகுறித்து அன்பு வடிவு மத்திகிரி போலீசில் கொடுத்த புகாரின் பேரில் மத்திகிரி மத்திகிரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிற்றரசு தலைமையிலான தனிப்படையினர் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை செய்து அப்பகுதிகளிலுள்ள கண்காணிப்பு கேமிராக்களின் பதிவுகளை ஆய்வு செய்தனர்.
அதன்மூலம் குகாணாமல் போன குழந்தையை 2 மணிநேரத்தில் குதிரைபாளையம் கிராமத்திற்கு அருகில் கண்டுபிடித்து அவருடைய பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.