என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சாலை"

    • ராசிபுரம் டவுன் ஆத்தூர் ரோட்டில் உள்ள சூப்பர் மார்க்கெட் அருகில் திடீரென்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    • இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    ராசிபுரம்:

    ராசிபுரம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட சந்திரசேகரபுரம், தெற்குப்பட்டி, அக்ரஹாரம், முருங்கப்பட்டி, களரம்பட்டி, அணைப்பாளையம் தேவேந்திர் தெரு போன்ற பகுதிகளில் சில நாட்களுக்கு முன்பு பெய்த கனமழையால் அணைப்பாளையம் ஏரி தண்ணீர் குடியிருப்பு பகுதிகளிலும், வயல்களிலும் புகுந்தது.

    இதனால் விளை நிலங்களில் பயிரிடப்பட்ட பயிர்கள் நீரில் மூழ்கின. சந்திரசேகரபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட 3 ஆழ்துளை கிணறுகள் ஏரி தண்ணீரால் மூழ்கியது.

    இதன் காரணமாக தெற்குப்பட்டி, சந்திரசேக ரபுரம், அக்ரஹாரம் போன்ற பகுதிகளில் வசிக்கும் 800-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு குடிநீர் வசதி கிடைக்க வில்லை என்றும், இதனால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மின்மோட்டார்களை உடனடியாக சரி செய்து தர வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கூறினர். மேலும் தெற்குப்பட்டியில் உள்ள ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர் தேக்க தொட்டிக்கு குடிநீர் குழாய் பதிக்க வேண்டும், அணைப்பாளையம் ஏரி தண்ணீரை திறந்து விட வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தனர்.

    இந்த நிலையில் கோரிக்கை களை நிறைவேற்றித் தரக் கோரி சந்திரசேகரபுரம், அக்ரகாரம், தெற்குபட்டி, முருங்கப்பட்டி பகுதிகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான ஆண்களும், பெண்களும் காலி குடங்களுடன் ராசிபுரம் டவுன் ஆத்தூர் ரோட்டில் உள்ள காஞ்சி சூப்பர் மார்க்கெட் அருகில் திடீரென்று சாலை மறியலில் ஈடுபட்டனர். மூதாட்டி ஒருவர் தரையில் படுத்து போராட்டம் நடத்தினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    சம்பவ இடத்திற்கு ராசிபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகவனம் மற்றும் போலீசார் விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் ராசிபுரம் வட்டார வளர்ச்சி அலுவலர்(கிராம ஊராட்சி) வனிதா தெற்குப்பட்டியில் உள்ள மேல்நிலை நீர் தேக்கத் தொட்டிக்கு புதிய பைப் லைன் உடனடியாக போட்டு தரப்படும் என்று கூறினார். அதன் பேரில் கிராம மக்கள் கலைந்து சென்றனர். கசாலை மறியல் காரணமாக அந்தப் பகுதியில் ½ மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.

    • தீக்குளிப்பதற்காக மண்ணெண்ணை பாட்டிலுடன் வந்த வக்கீல் கைது
    • பேச்சுவார்த்தை நடத்தியதில் உடன்பாடு ஏற்படாததினால் நடவடிக்கை

    கன்னியாகுமரி:

    களியக்காவிளை அருகே மடிச்சல் பகுதியை சேர்ந்தவர் புனித தேவ குமார் இவர் மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக உள்ளார்.

    இவர் 14.10.2022 அன்று மண்ணெண்ணை பாட்டிலுடன் தான் தீ குளிக்க போவதாக அறிக்கை ஒன்றை சமூக வலைத்தளங்களில் பரவவிட்டிருந்தார்.

    அதில் அவர் கூறியிருப்பதாவது :-

    குழித்துறை நகராட்சிக்கு சொந்தமான குழித்துறையில் இருந்து மடிச்சல் செல்லும் சாலையில் சுமார் 100 மீட்டர் தூரம் சுமார் 3 வருடமாக குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இதனை சரி செய்ய பல முறை புகார் அளித்தும் குழித்துறை நகராட்சியோ, மாவட்ட நிர்வாகமோ எந்த நடவடிக்கை எடுக்க வில்லை. அதனால் இந்த மாதம் 30-ந் தேதி சாலையை செப்பனிட வில்லை என்றால் தான் 31-ந் தேதி குழித்துறை சந்திப்பில் தீ குளிக்க போவதாக மண்ணெண்ணை பாட்டிலுடன் அறிக்கை ஒன்றை சமூக வலைத்தளத்தில் விடுத்திருந்தார்.

    அந்த அறிக்கை சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வந்தது. இந்த நிலையில் அதிகாரிகள் அவரிடம் சில நாட்களில் சாலையை செப்பனிடுவோம் என்றும், இப்போது எங்களிடம் போதிய நிதி இல்லை என்றும் பேச்சு வார்தையில் ஈடுபட்டு வந்தனர். அதற்கு உடன்படாத அவர் இன்று காலை தீ குளிப்பதற்காக மண்ணெண்ணை பாட்டிலுடன் தனது வீட்டில் இருந்து கிளம்பிய போது போலீசார் அவரை தடுத்து நிறுத்தி அவரிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அதில் உடன்பாடு ஏற்படாததினால் அவரை கைது செய்து காவல் நிலையம் கொண்டு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சாலை விதிகளை மீறியதாக 2,756 வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது
    • பெரம்பலூர் மாவட்டத்தில்

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டத்தில் சாலைவிதிகளை மீறியதாக 2 ஆயிரத்து 756 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து எஸ்பி மணி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், தமிழகம் முழுவதும் சாலை விதிகளை மீறுவோருக்கான அபராத தொகை உயர்த்தி நடைமுறை ப்படுத்தப்பட்டது. பெரம்பலூர் மாவட்டத்தில் போக்குவரத்து காவல்துறையினரால் சாலை விதிகளை மீறுபவர்கள் மீது வழக்கு பதிவு செய்து புதிய அபராத தொகை விதிக்கப்பட்டது.

    அதன் அடிப்படையில் நேற்று வரை பெரம்பலூர் மாவட்டத்தில் தலைக்கவசம் அணியாமல் வாகனத்தை ஓட்டுவது, வாகனத்தில் அதிக பாரத்தை ஏற்றி செல்வது, வாகனத்தில் பயணம் செய்யும் போது சீட்பெல்ட் அணியாமல் பயணம் செய்வது, வாகன உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டுவது போன்ற சாலை விதிகளை பின்பற்றாத 2 ஆயிரத்து 756 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே பெரம்பலூர் மாவட்டத்தில் வாகன ஓட்டிகள் அனைவரும் போக்குவரத்து சாலை விதிமுறைகளை பின்பற்றி விபத்துக்களை தவிர்க்கவேண்டும் என தெரிவித்துள்ளார்.

    • தாராபுரம் ரோட்டில் சிவசக்தி காலணி வரை பல இடங்களில் பெரிய அளவிலான குழிகள் ஏற்பட்டுள்ளன.
    • நகர எல்லை வரை பழனி ரோடு மற்றும் கொழுமம் ரோட்டில் பல இடங்களில் ரோடுகள் சேதம் அடைந்துள்ளன.

    உடுமலை:

    உடுமலை நகரப் பகுதியில் உள்ள ரோடுகளில் மழை நீர் தேக்கம் காரணமாகவும் முறையான பராமரிப்பு இல்லாததாலும் பெரும்பாலான ரோடுகள் குண்டும் குழிமாக மாறி காணப்படுகின்றன.பஸ் ஸ்டாண்டில் இருந்து பொள்ளாச்சி செல்லும் ரோடு பல ஆண்டுகளாக பராமரிப்பு இல்லாமல் முழுவதுமாக சேதம் அடைந்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் கடுமையான பாதிப்புஅடைந்து வருகின்றனர்.

    மழைக்காலங்களில் நீர் தேங்கியிருப்பது தெரியாமல் வாகனங்கள் விபத்துக்குள்ளாகும் சம்பவங்களும் தொடர்ந்து வருகிறது. அதே போல் நகர எல்லை வரை பழனி ரோடு மற்றும் கொழுமம் ரோட்டில் பல இடங்களில் ரோடுகள் சேதம் அடைந்துள்ளன.பாதாள சாக்கடை ஆள் இறங்கும் குழிகளின் மூடிகள் ஒரு சில பகுதிகளில் உடைந்து தாழ்வாகவும் பெரும்பாலான இடங்களில் உயரமாகும் உள்ளதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. மேலும் தாராபுரம் ரோட்டில் சிவசக்தி காலணி வரை பல இடங்களில் பெரிய அளவிலான குழிகள் ஏற்பட்டுள்ளன.

    திருப்பூர் ரோடு, ராஜேந்திரா ரோடு , தளிரோடு என நெடுஞ்சாலை துறை பராமரிப்பில் உள்ள ரோடுகள் மட்டுமின்றி நகராட்சி ரோடுகளும் பரிதாப நிலைக்கு மாறி உள்ளன.நகராட்சிக்குட்பட்ட ராமசாமி நகர் ரோடு, சீனிவாசா வீதி, கல்பனா ரோடு ,வெங்கடகிருஷ்ணா ரோடு, அனுஷம் நகர் ரோடு என நகராட்சி பராமரிப்பில் உள்ள பெரும்பாலான ரோடுகளும் பல ஆண்டுகளாக புதுப்பிக்கப்படாமல் பராமரிக்கவும் இல்லாமல் சேதமடைந்துள்ளன.இந்த ரோடுகளால் போக்குவரத்து நெரிசல் விபத்துக்கள் ஏற்படும் நிலையில் மழை காலங்களில் பெரும் பாதிப்பு ஏற்படுகிறது. எனவே தேசிய நெடுஞ்சாலை உடுமலை, மடத்துக்குளம், புதுக்கோட்டை மாநில நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் மற்றும் நகராட்சி அதிகாரிகள் குண்டும் குழியுமாக மாறி உள்ள ரோடுகளை உடனடியாக புதுப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • காலாவதியான பொருட்களை கண்டறிந்து அழிக்க வேண்டும்
    • பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை

    கன்னியாகுமரி:

    கண்ணணூர் ஊராட்சிக்குட்பட்ட வீராலிகாட்டு விளை பகுதியில் நேற்று மாலை மறைவான பகுதியில் ஒரு டெம்போவில் பேக்கரி பொருட்களை ரோட்டோரம் கொட்டி வைத்துவிட்டு மின்னல் வேகத்தில் டெம்போ சென்றது.

    சிறிது நேரத்தில் அந்த பகுதியில் உள்ள சிறுவர்கள் ரோட்டோரம் சாக்லெட், பிஸ்கட் மற்றும் குளிர்பானங்களை கொட்டி இருந்ததை கண்டு பெட்டி பெட்டியாக வீட்டுக்கு எடுத்து சென்றனர். இது அந்த பகுதி முழுவதும் பரவியது. உடனே அந்த பகுதியை சேர்ந்தவர்கள் வந்த பார்த்தனர். அனைத்து பொருள்களும் காலாவதி யானவை என தெரிய வந்தது.

    உடனே அந்த பகுதி மக்கள் கண்ணணூர் ஊராட்சி மன்ற தலைவர் ரெஜினி விஜிலாபாய் மற்றும் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ராஜ் ஆகியோருக்கு தகவல் கொடுத்தனர்.

    இதற்கிடையில் மீண்டும் அதே இடத்திற்கு மற்றொரு டெம்போ காலா வதியான பேக்கரி பொருள் களை கொட்ட வந்தது. உடனே ஊராட்சி மன்ற தலை வரும், வார்டு உறுப்பி னர்கள் ஜெயா அனிதா, மற்றும் ஊர்மக்க ளும் சேர்ந்து வாகனத்தை சிறை பிடித்தார்கள்.

    உடனே திருவட்டார் போலீஸ் நிலையத்திற்கும், உணவு, பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கும், கிராம நிர்வாக அதிகாரி களுக்கும், சுகாதார துறை அதிகாரிகளுக்கும் தகவல் கொடுத்தனர்.

    அவர் கள் வந்து பார்த்து ஆய்வு செய்து போது வேர்க்கிளம்பி பகுதியை சேர்ந்த பேக்கரி கடையில் உள்ள காலாவதியான பொருள்கள் என்று தெரிய வந்தது. உடனே கடை யின் உரிமையாளர் வர வழைக்கப்பட்டனர்.

    கண்ணனூர் ஊராட்சி மன்றம் சார்பாக இரண்டு டெம்போக்களுக்கும் அபராதமாக ரூ.2100 விதிக்கப்பட்டது. அந்த பணம் உடனே பேக்கரி கடை உரிமையாளரிடம் இருந்து வசூலிக்கப்பட்டது.

    தீவிர விசாரணைக்கு பிறகு அந்த கடை உரிமை யாளரிடம் காலாவதியான பொருள்கள் அனைத்தும் அழிக்க வேண்டும் என்று எழுத்து பூர்மாக அதிகாரிகள் எழுதி வாங்கி கொண்டு அனுப்பி வைத்தனர்.

    சுமார் 3, 4 ஆண்டுகளாக ஒரு பேக்கரி கடையில் இவ்வளவு காலாவதியான பொருட் களை எப்படி பாது காத்து வைத்தார்கள் என்பது குறித்து உடனே மாவட்ட நிர்வாகம் தலை யிட்டு சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இதே மாதிரி மாவட்டம் முழுவதும் உள்ள பேக்கரி கடைகளிலும் உள்ள பொருட்களை ஆய்வு செய்ய வேண்டும். காலாவதியான பொருட்களை கண்டறிந்து அழிக்கவேண்டும் என்று அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்தனர்.

    • ஏற்கனவே ரூ.30 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருந்தது.
    • மேயர் மகேஷ் தகவல்

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் மாநக ராட்சிக்குட்பட்ட வார்டு பகுதிகளில்மேயர் மகேஷ் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். 40-வது வார்டுக்குட்பட்ட வைத்திய நாதபுரம், வடலிவிளை, இசங்கன்விளை, பறக்கை ரோடு பகுதிகளில் இன்று காலை கவுன்சிலரும் மண்டல தலைவருமான அகஸ்டினா கோகிலவாணியுடன் சென்று ஆய்வு செய்தார்.

    அப்போது அந்த பகுதியில் கழிவுநீர் ஓடை சீரமைப்பு பணி சாலை பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதைத் தொடர்ந்து நாகர்கோவில் மகளிர் கிறிஸ்தவ கல்லூரி சாலை முன்பு அமைக்கப்பட உள்ள ரவுண்டானாவை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பின்னர் மேயர் மகேஷ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    நாகர்கோவில் மாநகர பகுதிக்கு உட்பட்ட வார்டுகளில் ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு தூய்மை பணி நடந்து வருகிறது. தற்போது சாலை சீரமைப்பு பணிக்கு ஏற்க னவே ரூ.30 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருந்தது.தற்போது மேலும் ரூ.10 கோடியே 80 லட்சம் நிதி வந்துள்ளது. மொத்தத்தில் தற்பொழுது ரூ.41 கோடியே 80 லட்சத்தில் சாலை சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

    இந்த நிதியின் மூலமாக எந்தெந்த வார்டுகளில் எந்தெந்த சாலைகள் சீரமைக்கப்பட வேண்டும் என்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. கவுன்சிலரின் கருத்துக்கள் கேட்கப்பட்டு முதற்கட்டமாக அந்த சாலைகள் சீரமைக்கப்படும். நாகர்கோவில் மகளிர் கிறிஸ்தவ கல்லூரி சாலையில் ரவுண்டானா ரூ.10 லட்சம் செலவில் அமைக்கப்படும். இந்த ரவுண்டானா 30 அடி சுற்றளவில் அமைக்கப்படும்.

    கலெக்டர் அலுவலக முன்பகுதியில் உள்ள ரவுண்டானா அமைக்கும் பணி நடந்து வருகிறது. அந்த பகுதியில் நினைவுச்சின்னம் அமைப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. எந்த வகையான நினைவுச்சின்னம் அமைக்கப்பட வேண்டும் என்பது குறித்து விரைவில் முடிவு செய்யப்பட்டு அந்த நினைவு தினம் அந்த பகுதியில் அமைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். ஆய்வின் போது கவுன்சிலர் விஜிலா ஜஸ்டஸ், பால்அகியா, பொதுக்குழு உறுப்பினர் ஜீவானந்தம், செயற்குழு உறுப்பினர் சதாசிவம் உடனிருந்தனர்.

    • 152 வது அரசாணை நமது காலகட்டத்தில் ஏற்க முடியாத பாவ செயல்.
    • அரசு வேலை, தூய்மை வரி வசூல் உள்ளிட்ட அனைத்தும் தனியார் வசம் என்பது மாநகராட்சி மற்றும் நகராட்சி அமைப்புகளின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகராட்சியின் மாமன்ற கூட்டம் இன்று மேயர் தினேஷ்குமார் தலைமையில் நடைபெற்றது. கமிஷனர் கிராந்தி குமார், துணை மேயர் பாலசுப்ரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டம் தொடங்கியதும் மேயர் தினேஷ்குமார் பெண் கவுன்சிலர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து தங்களது வார்டுகளில் உள்ள கோரிக்கைகளை பேச அனுமதி வழங்கினார்.

    இதனைத் தொடர்ந்து 23 -வது வார்டு கவுன்சிலர் துளசி மணி பேசினார். அப்போது 23 -வது வார்டு தியாகி பழனிச்சாமி நகரில் கட்டப்பட்டு வரும் ஆரம்ப சுகாதார பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு வழங்க வேண்டும். அங்கேரிபாளையம் ரோட்டில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பணிகளை அதிகாரிகள் யாரும் வந்து பார்வையிட வருவதில்லை. ஆகையால் பணிகள் தரமற்ற முறையில் தாமதமாக நடைபெற்று வருகிறது. எனவே அதிகாரிகள் தினமும் அதை பார்வையிட வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

    ம.தி.மு.க. கவுன்சிலர் சாந்தாமணி:-

    38வது வார்டில் மங்களம் ரோடு குறுகளாக இருப்பதால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. எனவே நெடுஞ்சாலை துறையினர் ஆக்கிரமிப்புகளை அகற்றி அதன் பின்னர் ரோடு போட நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல் ஆங்காங்கே குடிநீர் குழாய் உடைந்து செல்வதால் பொதுமக்களுக்கு சரிவர தண்ணீர் சென்று அடையவில்லை. அதனையும் சரி செய்ய வேண்டும்.

    மேலும் தெருவிளக்கு சரியாக எரிவதில்லை. இதனால் இரவு நேரங்களில் இருளாக காணப்படுகிறது. அதனை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.மாநகராட்சி முழுவதும் தெருநாய்கள் தொல்லை இருக்கிறது. அதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

    அதற்கு பதில் அளித்து பேசிய மேயர் தினேஷ்குமார் ,தெரு நாய்களை பிடிப்பதில் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் உள்ளன. கருத்தடை செய்து ஐந்து நாட்கள் பராமரித்து அதனை உரிய முறையில் மீண்டும் அந்த இடத்தில் விடுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்படுகிறது. இது தொடர்பாக இரண்டு கூட்டங்கள் நடத்தப்படும் என தெரிவித்தார்.

    51 வது வார்டு காங்கிரஸ் கவுன்சிலர் செந்தில்குமார் பேசுகையில்,

    152 வது அரசாணை நமது காலகட்டத்தில் ஏற்க முடியாத பாவ செயல். அரசு வேலை ,தூய்மை வரி வசூல் உள்ளிட்ட அனைத்தும் தனியார் வசம் என்பது மாநகராட்சி மற்றும் நகராட்சி அமைப்புகளின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும். இந்த அரசாணைக்கு எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்வதாக கூறிவிட்டு அவர் வெளிநடப்பு செய்தார்.

    இதேபோல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாமன்ற உறுப்பினர்களும் இதே கோரிக்கையை வலியுறுத்தி 152-வது அரசாணையை ரத்து செய்து தீர்மானம் கொண்டுவர வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.தொடர்ந்து கவுன்சிலர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

    இதையடுத்து திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் பேசியதாவது:-

    மாநகராட்சி பகுதிகளில் பழுதடைந்த சாலைகளை சரி செய்ய போதுமான நிதி உள்ளதால் போக்குவரத்து அதிகமாக உள்ள சாலைகள் குறித்து மாமன்ற உறுப்பினர்கள் தகவல் கொடுத்தால் அதனை முதலில் சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். 

    4-வது கூட்டு குடிநீர் திட்ட பணிகள் வேகமாக நடந்து வருகிறது. இன்னும் 40 மீட்டர் பணிகள் மட்டும் தான் செய்ய வேண்டியது உள்ளது. 2023ம் ஆண்டுக்குள் பெரும்பாலான சாலைகள் அனைத்தும் சீரமைக்கப்படும் என்றார்.

    • குரங்கணி வழியாக ஏரல் செல்லும் சாலை ஆங்காங்கே குண்டும் குழியுமாக காணப்படுகிறது.
    • குழிகளில் மழைநீர் தேங்கி வாகனத்தில் செல்வோர் தட்டு தடுமாறி செல்லும் நிலை உள்ளது.

    தென்திருப்பேரை:

    பொதுமக்கள் அதிகமாக பயன்படுத்தி வருவது சாலை வசதி. இந்த சாலை வசதியால் பொதுமக்கள் ஒரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு விரைந்து சென்று வருவதற்கு தரமான சாலை வசதி வேண்டும்.

    ஆனால் தென்திருப்பேரையில் இருந்து குரங்கணி வழியாக ஏரல் வரை செல்லும் மாநில நெடுஞ்சாலையில் திருச்செந்தூர் மெயின் ரோட்டிலிருந்து இருந்து குரங்கணி வரையுள்ள ஆங்காங்கே சாலைகள் குண்டும் குழியுமாக காணப்படுகிறது.

    இந்த சாலையில் பஸ் போக்குவரத்து கல்லூரி மற்றும் பள்ளி மாணவ- மாணவிகள் செல்லும் பஸ்கள் மற்றும் இருசக்கர வாகனத்தில் ஏராளமானவர்கள் சென்று வருகின்றனர்.

    தற்போது மழையின் காரணமாக பள்ளமான குழிகளில் மழைநீர் தேங்கி சாலை சேதமடைந்த நிலையில் காணப்படுவதால் வாகனத்தில் செல்வோர் தட்டு தடுமாறி செல்லும் நிலை உள்ளது. இந்த சேதமடைந்த சாலையின் பள்ளத்திற்கு அருகில் நூலகத்திற்கு செல்லும் பொதுமக்களும் மிகவும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.

    அது மட்டுமல்லாமல் நவதிருப்பதி ஸ்தலங்களில் ஒன்றான மகரநெடுங்குழைக்காதர் கோவிலுக்கும் அதிக அளவில் சுற்றுலா பயணிகளும், பொதுமக்களும் பஸ் மற்றும் வேன்களில் வந்து வழிபட்டு செல்கிறார். சாலை மோசமாக உள்ளதால் பக்தர்கள் மிகவும் சிரமப்பட்டு சென்று வருகின்றார்கள்.

    எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து பொது மக்கள் மற்றும் பக்தர்களுக்கு சிரமத்தை தவிர்க்கும் வகையில் சாலையை சீரமைத்து கொடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • சாலையில் சென்றவர்களை கொட்டிய தேனீக்களால் பரபரப்பு
    • கூட்டை அழிப்பதற்கு பொதுமக்கள் கோரிக்கை

    பெரம்பலூர்:

    அகரம்சீகூர் அடுத்துள்ள வயலூர் கிராமத்தில் பால் பண்ணை அருகில் அமைந்துள்ள ஒரு புளிய மரத்தில் தேனீக்கள் கூடு கட்டியிருந்தது. இந்த நிலையில் அந்தப் பாதை வழியாக சென்று கொண்டிருந்த ஜலாவுதின், மாதசாகிப், இளவரசு, கந்தசாமி, செல்லக்கண்ணு கணவர் பெயர் அம்மாசி, பிரபாகரன் மற்றும் சிலரை தேனீகள் சுற்றி வலளத்து கொட்டின. இதனால் உடல்வலி, மயக்கும் ஏற்பட்டதால் அவர்களை அங்குள்ள மருத்துமனையில் அனுமதித்து சிகிச்சை பெற்று வருகின்றனர். பின்னர் தேனீ கூட்டை அழிப்பதற்கு தீயணைப்பு நிலையம் அலுவலரிடம் வயலூர் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • அதிகாரிகளுடன், கலெக்டர் அரவிந்த் நேரில் ஆய்வு
    • குளத்தில் போர்ட் ரெஸ்டாரண்ட் அமைப்பது தொடர்பாக ஆலோசனை

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் புத்தேரி குளத்தில் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்வது குறித்து கலெக்டர் அரவிந்த் இன்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    குளத்தை தூர்வாரி அதை மேம்படுத்த என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து மாநகராட்சி ஆணையாளர் ஆனந்த மோகனுடன் ஆலோசனை நடத்தினார்.

    புத்தேரி குளத்தை தூர்வாரி ரெயில்வே மேம்பாலத்தில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு பொதுமக்கள் வாக்கிங் செல்ல வசதியாக நடை பாதை அமைப்பது தொடர்பாகவும், அங்கு சைக்கிளிங் செல்ல வசதி ஏற்படுத்துவது தொடர்பாகவும் ஆலோ சிக்கப்பட்டது.

    இதுபோல குளத்தில் போர்ட் ரெஸ்டாரண்ட் அமைப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது.இதற்கு திட்ட மதிப்பீடு தயார் செய்து அரசுக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. இப்போது ரூ‌.4 கோடியில் திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    முதல் கட்டமாக இதற்கு ரூ.1 கோடியே 6 லட்சம் நிதி தேவைப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தத் திட்டத்தை நிறைவேற்றுவது தொடர்பான வரைபடமும் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் செயல்பாட்டிற்கு வரும் பட்சத்தில் பொதுமக்களுக்கு இது பயனுள்ளதாக இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    ஆய்வின்போது பொறியாளர் பாலசுப்பிரமணியன், மாநகராட்சி கவுன்சிலர் ஸ்ரீலிஜா ஆகியோர் உடன் இருந்தனர். இதைத்தொடர்ந்து வடசேரியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை கலெக்டர் அரவிந்த் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் நாகர்கோவில் மாநகராட்சி அலுவலகத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்திலும் கலெக்டர் அரவிந்த் கலந்து கொண்டார்.

    • வாறுவிளை சந்திப்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது
    • மாவட்ட தலைவர் டாக்டர் பினுலால்சிங், கிள்ளியூர் தொகுதி எம்.எல்.ஏ. ராஜேஷ்குமார் குளச்சல் தொகுதி எம்.எல்.ஏ., பிரின்ஸ், மாவட்ட பொருளாளர் ஐ.ஜி.பி. லாரன்ஸ், ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள்.

    கன்னியாகுமரி:

    பத்மநாபபுரம் தொகுதி காட்டாத்துறை ஊராட்சிக் குட்பட்ட காட்டாத்துறை-வாறு விளை, புல்லுவிளை, கருவச்சான்குழி சாலை, பூவன்கோடு முதல் முளகுமூடு வரை உள்ள சாலை, நல்லவிளை- தெற்றை ஆகிய சாலைகள் மிகவும் மோசமாகவும் பழுதடைந்த சாலைகளை உடனே சரிசெய்ய கேட்டு தமிழக அரசை கண்டித்து காட்டாத்துறை ஊராட்சி காங்கிரஸ் கமிட்டி சார்பாக வாறுவிளை சந்திப்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    காட்டாத்துறை ஊராட்சி காங்கிரஸ் கமிட்டி தலைவர் டாம் டிக்சன் தலைமை தாங்கினார், காட் டாத்துறை ஊராட்சி மன்ற தலைவர் இசையாஸ், வட்டார தலைவர் ஜெகன் ராஜ், ஊராட்சி மன்ற துணைத்த லைவர் ஜெபதாஸ் ஆகி யோர் முன்னிலை வகித்த னர்.

    மாவட்ட தலைவர் டாக்டர் பினுலால்சிங், கிள்ளியூர் தொகுதி எம்.எல்.ஏ. ராஜேஷ்குமார் குளச்சல் தொகுதி எம்.எல்.ஏ., பிரின்ஸ், மாவட்ட பொருளாளர் ஐ.ஜி.பி. லாரன்ஸ், ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட வழக்கறிஞர் அணி தலைவர் ஏசுராஜா, மாவட்ட செயலாளர் ஜாண் இக்னேசியஸ், காட் டாத்துறை ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் செல்வின் ஜெபகுமார், ஆன்றோ, சூசைமுத்து, மற்றும் காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • சாலையை சீரமைக்க கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மறியலில் ஈடுபட்டனர்.
    • இதையடுத்து மறியலில் ஈடுபட்ட 50-க்கும் மேற்பட்ட பொதுமக்களை போலீசார் கைது செய்தனர்.

    மதுரை

    மதுரை மாநகர் மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் சாலை விபத்துகளை ஏற்படுத்தும் குலமங்கலம் மெயின் ரோட்டை சீரமைக்க கோரி இன்று மறியல் போராட்டம் நடந்தது.

    பல ஆண்டுகளாக சாலைகள் போடப்படாமல் இருக்கும் வ.உ.சி 1 , 2, அண்ணா தெரு , பாரதிதாசன் தெரு, சத்யா நகர், ஆபீசர் டவுன் ஆகிய தெருவில் சாலைகளை உடனடியாக அமைக்க வேண்டும். சத்தியமூர்த்தி மெயின்ரோடு , பாதாள சாக்கடை அடைப்பை சரி செய்ய வேண்டும்.குடிநீரில் சாக்கடை கலப்பதை தடுத்து நிறுத்த வேண்டும்.

    22, 23, 24 ஆகிய வார்டுகளில் அடிப்படை பிரச்சினைகளை தீர்க்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் ஆகிய கோரிக்கை களை வலியுறுத்தி பகுதிக்குழு செயலாளர் பாலு தலைமையில் இந்த மறியல் போராட்டம் மீனாம்பாள்புரம்-குலமங்கலம் மெயின் ரோடு சக்கரை செட்டியார் படிப்பகம் அருகில் நடந்தது.

    இதில் 23-வது வார்டு கவுன்சிலர் குமரவேல், மாநிலக்குழு உறுப்பினர் விஜயராஜன் ஆகியோர் பேசினர். இதையடுத்து மறியலில் ஈடுபட்ட 50-க்கும் மேற்பட்ட பொதுமக்களை போலீசார் கைது செய்தனர்.

    ×