என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கல்வி"

    • பெண் கல்வியை ஊக்கப்படுத்தும் வகையில் ஆரம்பிக்கப்பட்டுள்ள புதுமைப்பெண் திட்டம்.
    • ரூ.698 கோடியை தமிழக அரசு ஒதுக்கி, அரசாணையையும் வெளியிட்டது

    பெண் கல்வியை ஊக்கப்படுத்தும் வகையில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வரிசையில் தற்போது முத்திரை பதித்து இருக்கக்கூடிய திட்டம்தான், புதுமைப்பெண் திட்டம்.

    ஏற்கனவே பெண்களுக்காக நடைமுறையில் இருந்த மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவி திட்டத்தை, மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித்திட்டமாக அரசு மாற்றம் செய்து உத்தரவிட்டது. அந்த திட்டத்தின்படி, 6 முதல் 12-ம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் படித்து உயர்கல்வியில் பட்டப்படிப்பு, டிப்ளமோ, தொழிற்படிப்புகளில் இடைநிற்றல் இல்லாமல் படிப்பை தொடர வேண்டும் என்ற நோக்கில் மாணவிகளுக்கு ரூ.1,000 மாதந்தோறும் உதவித்தொகையாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

    நடப்பாண்டிலேயே இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக ரூ.698 கோடியை தமிழக அரசு ஒதுக்கி, அரசாணையையும் வெளியிட்டது.

    புதுமைப்பெண் திட்டம்

    இந்த திட்டத்தில் பயன்பெற அரசு பள்ளிகளில் படித்து தற்போது கல்லூரிகளில் 2, 3, 4-ம் ஆண்டுகளில் படிப்பை தொடரும் மாணவிகள் விண்ணப்பிக்க முதலில் அறிவுறுத்தப்பட்டது. அதன்படி, மாணவிகள் விண்ணப்பித்தனர். விண்ணப்பித்த மாணவிகளிடம் 6 முதல் 12-ம் வகுப்பு வரையில் அரசு பள்ளிகளில் படித்ததற்கான சான்று, 10 மற்றும் 12-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், ஆதார், கல்லூரி அடையாள அட்டை, வங்கி கணக்கு எண் ஆகியவை கேட்டு பெறப்பட்டது.

    அவ்வாறு விண்ணப்பித்த 2, 3 மற்றும் 4-ம் ஆண்டுகளில் படித்து வரும் 1 லட்சத்து 13 ஆயிரம் மாணவிகளுக்கு உதவித்தொகை வழங்குவதற்கான திட்டத்தை கடந்த செப்டம்பர் மாதம் 5-ந்தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் தொடங்கி வைத்தார். இதில் டெல்லி முதல்-மந்திரியும், ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அந்த நிகழ்ச்சியில்தான் இதற்கு புதுமைப்பெண் திட்டம் என்று பெயர் சூட்டப்பட்டது.

    3-வது தவணையாக...

    விண்ணப்பித்து தகுதியான மாணவிகளுக்கு ஒவ்வொரு மாதமும் 7-ந்தேதி அவரவர் வங்கி கணக்கில் ரூ.1,000 உதவித்தொகை சென்றடையும் வகையில், அனைத்து செயல்பாடுகளும் வெளிப்படைத்தன்மையுடன் இணைய வழியில் நடக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு நடைமுறையில் இருந்து வருகிறது.

    அதன்படி, திட்டம் தொடங்கி வைக்கப்பட்டதில் இருந்து தற்போது 3-வது தவணையாக ரூ.1,000 உதவித்தொகை வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு இருக்கிறது. தற்போது முதலாம் ஆண்டு கல்லூரிகளில் சேர்ந்து இருக்கும் மாணவிகளும், ஏற்கனவே 2, 3 மற்றும் 4-ம் ஆண்டுகளில் படித்து வந்து இந்த திட்டத்தில் சேராதவர்களும் வருகிற 19-ந்தேதிக்குள் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    • குழந்தைகள் சிலருக்கு, கணக்குப் பாடம் என்றால் மட்டும் அலர்ஜி.
    • கணக்கு தொடர்பான பயம், மற்ற விஷயங்களிலும் அவர்களின் ஞாபக சக்தியைக் குலைக்கிறது.

    மற்ற பாடங்கள் எல்லாவற்றையுமே ஆர்வத்தோடு படிக்கும் குழந்தைகள் சிலருக்கு, கணக்குப் பாடம் என்றால் மட்டும் அலர்ஜியாக இருப்பதுண்டு. இதை அலர்ஜி என்பதைவிட, 'ஃபோபியா' (பயம்) என்றே குறிப்பிட வேண்டும்.

    ஆம்...! அமெரிக்காவின் ஒஹையோவில் உள்ள கிளீவ்லேண்ட் ஸ்டேட் யூனிவர்சிட்டியைச் சேர்ந்த பேராசிரியர் மார்க் ஆஷ்கிராப்ட் இது தொடர்பாக விரிவாக ஆய்வு செய்திருக்கிறார். அதில் பல அதிர்ச்சியான தகவல்களும் வெளியாகி இருக்கிறது.

    கணித பயம் குறித்து பல்கலைக்கழக மாணவர்களிடம் அவர் செய்த ஆய்வில், கணக்கு தொடர்பான பயம், மற்ற விஷயங்களிலும் அவர்களின் ஞாபக சக்தியைக் குலைக்கிறது. கூடவே படிப்பு மீதான ஆர்வத்தையும் குறைத்துவிடுகிறதாம். இதனால், அவர்கள் மிகச் சாதாரணமான இரண்டு எண்களைக் கூட்டுவது போன்ற விஷயங்களுக்குக் கூட பதற்றமும், திணறலும் அடைகிறார்கள். சிலருக்கு ரத்த அழுத்தத்தின் அளவும், இதயத் துடிப்பின் அளவும் எகிறியதை ஆய்வுகள் உறுதி செய்துள்ளன.

    இதற்கான காரணம் குறித்து விளக்குகையில், ''எண்களைப் பார்த்ததும் இவர்களது மனதில் ஏராளமான சிந்தனைகள் அலைமோதுகின்றன. அதனால் கணக்கிடத் தேவையான சிந்தனையோ, பொறுமையோ அவர்களிடம் இல்லாமல் போகிறது. இதனால் நாளடைவில் அவர்களின் தன்னம்பிக்கை தளர்ந்து போகிறது.

    இதிலிருந்து தப்பிக்க ஒரே வழி... கணிதம் தொடர்பான பயத்தை மழலை பருவத்திலேயே அகற்றி, தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்வதுதான். கணக்கு என்றவுடனே, முகம் சுழிக்கும் குழந்தைகளுக்கு, அதை உற்சாகமாக எதிர்கொள்ளும் வழிமுறைகளை கற்றுக்கொடுங்கள். அப்போது அவர்களது பதற்றமும், கணக்கு பயமும் குறைந்துவிடும்'' என்கிறார் ஆஷ்கிராப்ட்.

    • திருப்பத்தூர் அருேக நடுவிக்கோட்டையில் நடந்த வி.எஸ்.எம். திருமண மகால் திறப்பு விழாவில் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.
    • சேதுபாஸ்கரா கல்வி குழும நிறுவனர் சேதுகுமணன் பங்கேற்றார்.

    நெற்குப்பை

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா கல்லல் ஒன்றியம் கண்டர மாணிக்கம் அருகே உள்ள நடுவிக்கோட்டையில் உள்ள மேலையூர் கிராமத்தில் ஆ.று.வீரய்யா சேர்வை சவுந்தரம்மாள் (வி.எஸ்.எம்.) திருமண மஹால் திறப்பு விழா விமரிசையாக நடைபெற்றது.

    விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக 'கல்வி தந்தை' என போற்றப்படும் சேதுபாஸ்கரா கல்வி குழும நிறுவனரான சேது குமணன் பங்கேற்று வி.எஸ்.எம். திருமண மகாலை திறந்து வைத்தார். இதில் பொறியாளர் ராஜா, காளிமுத்து, ஜெயக்குமார், கவுதமன், ஊராட்சி மன்ற தலைவர் வசந்தா சோமன் மற்றும் பல்வேறு கட்சியை சார்ந்த அரசியல் பிரமுகர்கள், தொழில் அதிபர்கள், முக்கி யஸ்தர்கள், பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    முன்னதா விழாவில் பங்கேற்ற சேதுகுமணன் சால்வை அணிவிக்கப்பட்டு கவுரவிக்கப்பட்டார்.

    • கையெழுத்து மாணவர்களின் வாழ்க்கையில் முக்கிய அங்கம் வகிக்கிறது.
    • மோசமான கையெழுத்தால் மதிப்பெண்களை இழந்தவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்.

    கையெழுத்து அழகாக இருந்தால் வாழ்க்கையும் அழகாக மாறும் என்பார்கள். அந்த அளவுக்கு கையெழுத்து மாணவர்களின் வாழ்க்கையில் முக்கிய அங்கம் வகிக்கிறது. கையெழுத்து மோசமாக இருந்தால் அதை படிப்பவர்கள் புரிந்து கொள்வதற்கு கடினமாக இருக்கும். தேர்வில் அதன் தாக்கம் வெளிப்படும்.

    மோசமான கையெழுத்தால் மதிப்பெண்களை இழந்தவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். இன்றைய டிஜிட்டல் யுகத்தில் பேனா கொண்டு எழுதும் நடைமுறை குறைந்து கொண்டிருக்கிறது. ஆனாலும் மாணவர்களை பொறுத்தவரை கையெழுத்து முக்கியமானது. அதுதான் அவர்களின் மதிப்பெண்ணையும், எதிர்காலத்தையும் தீர்மானிக்கும். கையெழுத்தை மேம்படுத்துவதற்கு உதவும் சில டிப்ஸ்கள் குறித்து பார்ப்போம்.

    * தினமும் எழுதி பார்ப்பதற்கு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்க வேண்டும். அது கையெழுத்தை மேம்படுத்துவதற்கு சிறந்த தொடக்கமாக அமையும். குழந்தைகள், மாணவர்களை பொறுத்தவரை வீட்டு பாடங்கள் எழுதுவதுடன் நிறுத்திவிடக்கூடாது. படிக்கும் பாடங்களை எழுதி பார்க்கலாம். அது நன்றாக நினைவில் பதிவதற்கு வழிவகுக்கும். புத்தகங்கள், பத்திரிகை செய்திகளை எழுதி பார்த்தும் பயிற்சி பெறலாம். இந்த விஷயத்தில் குழந்தைகளின் விருப்பத்திற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். அவர்களை கட்டாயப்படுத்தக்கூடாது. அவர்களுக்குள்ளாகவே ஆர்வம் எழ வேண்டும். அதற்கேற்ப அவர்களை கவரும் வகையிலான எழுது பொருட்களை வாங்கிக் கொடுக்கலாம். அவர்கள் எண்ணத்தில் உதிக்கும் வார்த்தைகளை எழுதுமாறு ஊக்குவிக்கலாம்.

    * இவ்வளவு நேரத்திற்குள் எழுதி முடிக்க வேண்டும் என்று கால நிர்ணயம் செய்யக்கூடாது. அவ்வாறு நிர்பந்திப்பது அவசர அவசரமாக எழுதி பார்க்கும் மன நிலைக்கு தயார்படுத்திவிடும். முக்கியமான தேர்வுக்கு தயாராகும்போது வேண்டுமானால் சற்று வேகமாக எழுதி பார்க்க அனுமதிக்க வேண்டும். அந்த வேகம் எழுத்தின் தரத்தை பாழ்படுத்திவிடக்கூடாது. கையெழுத்து எப்போதும் மாறாமல் ஒரே நிலையில் இருப்பதற்கு ஏதுவாக பயிற்சி எடுத்துக்கொள்ளலாம்.

    * எழுதி பார்க்கும்போது குழந்தைகள் சரியான தோரணையில் அமர்ந்திருப்பதை உறுதிபடுத்திக்கொள்ள வேண்டும். மேஜையில் கைகளை வைத்தபடி நிமிர்ந்த நிலையில் அமர்ந்து எழுதுவதுதான் சரியான தோரணையாகும். எழுதும்போது மணிக்கட்டு பகுதியைவிட கைவிரல்களுக்குத்தான் அதிக அழுத்தம் கொடுக்க வேண்டும். அதாவது பேனாவை கைவிரல்கள் அழுத்தி பிடித்திருக்க வேண்டும். அப்போதுதான் எழுத்து முழு வடிவம் பெறும். அழகாகவும் மாறும். கைவிரல்களும், பேனா முனையும் நேர் நிலையில் இருக்க வேண்டும். சில குழந்தைகள் எழுதும்போது கைகளை வளைப்பதுண்டு. இது சரியான தோரணை கிடையாது.

    * பேனா தேர்விலும் கவனம் தேவை. சரியான பேனாவை தேர்ந்தெடுத்தால்தான் எழுத்து வடிவம் அழகு பெறும். எழுத்தின் மீது ஈடுபாடும் அதிகரிக்கும். எழுதும்போது குழந்தைகளின் கைகள் நிதானமாக இருக்க வேண்டும்.

    * காகித தேர்வும் எழுத்தின் மீதான ஈர்ப்பை அதிகரிக்கச் செய்யும். அடிக்கோடிட்ட வரிகள் கொண்ட பேப்பரில் குழந்தைகளை எழுத வைப்பது பொருத்தமாக இருக்கும். எழுத்துக்கள் நேர் வரிசையில் இருப்பது உறுதிப்படுத்தப்படும்.

    * இன்றைய டிஜிட்டல் யுகத்தில் கடிதம் எழுதும் பழக்கம் குறைந்து போய்விட்டது. காலங்கள் கடந்தும் நினைவுகளை அசைபோடவைக்கும் அசாத்திய ஆற்றல் கடிதத்துக்கு உண்டு. குடும்பத்தை பிரிந்து தொலைதூரத்தில் படிக்கும், வேலை பார்க்கும் இளம் வயதினர் குடும்பத்தினர், உறவினர்களுக்கு கடிதம் எழுதும் வழக்கத்தை பின்பற்றலாம். அது அவர்கள் மீது நீங்கள் கொண்டிருக்கும் அன்பை என்றென்றும் நினைவுபடுத்திக்கொண்டே இருக்கும்.

    • விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த மாணவர்கள் கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் கலெக்டர் தெரிவித்துள்ளார்.
    • இணையதள முகவரியில் இருந்தும்் விண்ணப்ப படிவங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாத ரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களில் உள்ள மத்திய அரசு கல்வி நிறுவனங்களான ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., என்.ஐ.டி. மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு படிக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவ-மாணவிகள் கல்வி உதவி தொகை பெற விண்ணப்பிக்கலாம்.

    குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்திற்கு மிகாமல் உள்ள மாணவ-மாணவிகளுக்கு ஒருவருக்கு ஆண்டிற்கு அதிகபட்சம் ரூ.2 லட்சம் வரை கல்வி உதவித்தொ கையாக வழங்குவதற்கு தமிழ்நாடு அரசால் ஆணையிடப்பட்டுள்ளது.

    கல்வி உதவித்தொகைக்கு 2022-23-ம் கல்வியாண்டில் புதிதாக விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான மாணவர்கள் கீழ்க்கண்ட முகவரியிலுள்ள இயக்ககத்தையோ, விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவ லகத்திலுள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரையோ அணுகலாம்.

    மேலும் https://bcmbcmw.tn.gov.in/welfschemes.htm#scholarshipschemes என்ற இணையதள முகவரியில் இருந்தும்் விண்ணப்ப படிவங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

    2022-23-ம் நிதியாண்டிற்கான புதிய கல்வி உதவித் தொகை விண்ணப்பத்தை மாண வர்கள் பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனத்தில் சமர்ப்பிக்க வேண்டும். கல்வி நிறுவனங்கள் தங்களது சான்றொப்பத்துடன் தகுதியான விண்ணப்பத்தை பரிந்துரை செய்து ''ஆணையர், பிற்படுத்தப்பட்டோர் நல இயக்ககம், எழிலகம் இணைப்பு கட்டடம், 2வது தளம், சேப்பாக்கம், சென்னை-5. தொலைபேசி எண். 044-29515942, மின்னஞ்சல் முகவரி:tngovtiitscholarship@gmail.com'' என்ற முகவரிக்கு பூர்த்தி செய்த விண்ணப்பங்களை ஜனவரி 31-ந்தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மதிப்பெண்களை வைத்து ஒருவரின் அறிவை மதிப்பிட முடியாது.
    • நம்பிக்கையுடன் தேர்வை எதிர்கொள்ள வேண்டும்.

    தமிழகத்தில் நீட் தேர்வு தற்கொலைகள் அவ்வப்போது பெரும் அதிர்வுகளை ஏற்படுத்துகிறது. ஆனால் இன்னும் 10 மற்றும் 12 வகுப்பு தேர்வு தோல்விகளை கூட தாங்கிக்கொள்ள முடியாத நிலையில் மாணவ- மாணவிகள் இருப்பது கவலை அளிக்கிறது. அதற்கு வீடு மற்றும் சமூகத்தின் பார்வையால் எழும் அழுத்தமே காரணமாக கூறப்படுகிறது. மராட்டியத்தில் 1834 மாணவர்கள், மத்திய பிரதேசத்தில் 1308 மாணவர்கள் தற்கொைல செய்து உள்ளனர். தமிழகத்தில் 1246 மாணவர்கள் தற்கொைல செய்து உள்ளனர்.இந்தியாவில் மொத்தம் 13,089 மாணவர்கள் தற்கொைல செய்து உள்ளனர். இதில் 18 வயதுக்கு உட்பட்டவர்கள் 10,732 பேர். தேர்வில் தோல்வி காரணமாக தற்கொலை செய்தவர்கள் மட்டும் 864 பேர் என்பது குறிப்பிடத்தக்கது.

    கடந்த 2020-ம் ஆண்டு 12,526 பேர் தற்கொலை செய்து உள்ள னர். இதில் ஆண்கள்- 55.62 சதவீதம். பெண்கள்- 44.38 சதவீதம். 2021-ம் ஆண்டு 13,089 பேர் தற்கொலை செய்து உள்ளனர். இதில் ஆண்கள்- 56.51 சதவீதம். பெண்கள்- 43.49 சதவீதம் என்று குறிப் பிடப்பட்டு உள்ளது. இதனால் மாணவிகளை விட மாணவர்களே அதிகம் தற்கொலை செய்து கொள்கின்றனர்.

    மதிப்பெண்களை வைத்து ஒருவரின் அறிவை மதிப்பிட முடியாது. ஆனால் மதிப்பெண்கள் தான் உயர் கல்விக்கும், நல்ல வேலை பெறவும் ஆதாரமாக இருக்கிறது. எனவே நம்பிக்கையுடன் தேர்வை எதிர்கொள்ள வேண்டும். தேர்வில் மதிப்பெண் பெற முடியாத நிலை ஏற்படும் போது குற்ற உணர்ச்சி கொள்ள எந்த அவசியமும் இல்லை. மீண்டும் படித்து தேர்ச்சி பெற முயற்சி செய்ய வேண்டும். இதற்கு மாணவர்- ஆசிரியர் இடையே உறவு மேம்பட வேண் டும். பாடம், படிப்பு, தேர்வு என்பதை தாண்டி உலகம் எவ்வளவு அதிசயங்களை உள்ளிடக்கியது என்பதை ஆசிரியர்கள் மாணவர் களுக்கு புரிய வைக்க வேண்டும் ஆசிரியர்கள், மாணவர்களை சமூகத்தில் தைரியமாக வாழத் தகுதி உடையவர்களாக உருவாக்க வேண்டும். அதற்கான வழிகாட்டுதல்களை தொடர்ந்து வழங்க வேண்டும்.

    பள்ளி மற்றும் கல்லூரி தேர்வுகளில் தோல்வி அடைவது என்பது கவனக்குறைவால் ஏற்படும் சிறு சறுக்கல், தடுமாற்றம் தான் என்பதை மாணவர்கள், இளைஞர்கள் புரிந்து கொள்ள வேண்டும். தவறுகள், தோல்விகள், இழப்புகள், பலவீனங்களில் இருந்து மீண்டும் வர முடியும். படிப்பு, தேர்வு உள்பட எந்த தோல்வியும் வாழ்க்கையை விட மேலானது, உயர்ந்தது அல்ல. எத்தனை தோல்வி அடைந்தாலும் வாழ்ந்து காட்ட வேண்டும். அது தான் ஒரு பிறப்பின் அர்த்தத்தை சமூகத்துக்கு விளக்கும் சான்றாக இருக்க முடியும்.

    • ரூ. 2 லட்சம் கல்வி உதவித் தொகை வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
    • விண்ணப்பங்களை பூா்த்தி செய்து 2023 ஆம் ஆண்டு ஜனவரி 31 ந் தேதிக்குள் அனுப்பிவைக்க வேண்டும்.

    திருப்பூர் :

    மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் பயிலும் பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சீா்மரபினா் வகுப்பைச் சோ்ந்த மாணவா்கள் கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என திருப்பூா் மாவட்ட கலெக்டர் எஸ்.வினீத் தெரிவித்துள்ளாா்.

    இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-  தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களில் உள்ள மத்திய அரசு கல்வி நிறுவனங்களான ஐஐடி, ஐஐஎம், ஐஐஐடி, என்ஐடி மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் பட்டபடிப்பு மற்றும் பட்ட மேற்படிப்புப் பயிலும் தமிழகத்தைச் சோ்ந்த பிற்படுத்தப்பட்டோா், மிகப்பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சீா்மரபினா் இனத்தைச் சோ்ந்த மாணவ, மாணவிகளுக்கு ஒரு ஆண்டுக்கு அதிகபட்சமாக ரூ. 2 லட்சம் கல்வி உதவித் தொகை வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

    இதற்கு விண்ணப்பிக்கும் மாணவா்களின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். திருப்பூா் மாவட்டத்தைச் சோ்ந்த தகுதியான மாணவா்கள் 2022-23 ம் ஆண்டு கல்வி உதவித் தொகை பெற மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலுள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா்களை அணுகலாம்.

    இணையதள முகவரியில் இருந்து விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதன் பின்னா் விண்ணப்பங்களை பூா்த்தி செய்து சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்களில் சமா்ப்பிக்க வேண்டும். கல்வி நிறுவனங்கள் தங்களது சான்றொப்பத்துடன் தகுதியான விண்ணப்பத்தினை பரிந்துரை செய்து கீழ்கண்ட முகவரிக்கு 2023 ஆம் ஆண்டு ஜனவரி 31 ந் தேதிக்குள் அனுப்பிவைக்க வேண்டும்.

    இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு திருப்பூா் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகத்தை 0421-2999130 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம். விண்ணப்பங்களை, ஆணையா், பிற்படுத்தப்பட்டோா் நல இயக்கம், எழிலகம் இணைப்பு கட்டடம், 2 ஆவது தளம், சேப்பாக்கம், சென்னை-5, போன் நம்பா்:044-29515942 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • தேத்தாக்குடி வடக்கு வடமழை மணக்காடு நடுநிலைப் பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கான கல்வி உபகரணங்களை திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் சதாசிவம் வழங்கினார்.
    • நாகை மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் வழக்கறிஞர் தாமோதரன் தலைமை வகித்தார்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அடுத்த வட மழை மணக்காட்டில் உள்ள பள்ளி மாணவர்கள் 500 பேருக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா நடைபெற்றது.

    விழாவிற்கு நாகை மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் வழக்கறிஞர் தாமோதரன் தலைமை வகித்தார்.

    நிகழ்ச்சியில் வேதாரண்யம் கிழக்கு ஒன்றியத்திற்குட்பட்ட தேத்தாக்குடி வடக்கு வடமழை மணக்காடு நடுநிலைப் பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கான கல்வி உபகரணங்களை திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் சதாசிவம் வழங்கினார்.

    விழாவில் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சோபா மலர்வண்ணன். ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் கலைக்கோவன், துணை அமைப்பாளர் ஜோதி செல்லபாண்டியன், ரெத்தினசாமி, கவியரசன் சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் சத்தியமூர்த்தி மாவட்ட கவுன்சிலர் சோழன், ஒன்றிய தலைவர் ஏகாம்பரம், ஒன்றிய துணைச் செயலாளர் சேது ராஜன், மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் செந்தாமரைசெல்வன், மாவட்ட மகளிர் தொண்டர் அணி துணை அமைப்பாளர் மோகனாதச மணி, மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணை ஒருங்கிணைப்பாளர் காந்திமதி லோகநாதன், மாவட்ட பிரதிநிதி செல்வம் செந்தில், சார்பு அணி அமைப்பாளர் கலைக்கோவன், கவி இளவரசன் ஒன்றிய கிளைக் செயலாளர்கள் தசமணி, சாம்பசிவம், ஒன்றிய பிரதிநிதி காமராஜ், வேதரத்னம், உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

    • பரமத்தி வேலூர் தாலுகா பரமத்தி பேரூராட்சிக்கு உட்பட்ட ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் பயிலும் மாணவ , மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • மாணவ,மாணவிகளுக்கு. நோட்டு,பேனா,பென்சில் மற்றும் கல்வி உபகரணங்களை வழங்கி சிறப்புரையாற்றினார்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா பரமத்தி பேரூராட்சிக்கு உட்பட்ட ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் பயிலும் மாணவ , மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பரமத்தி ஒன்றிய தி.மு.க. செயலாளர் மற்றும் அட்மா தலைவர் தனராசு தலைமை வகித்தார். பேரூராட்சி தலைவர் மணி , துணைத் தலைவரும், பேரூர் கழக செயலாளருமான ரமேஷ்பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நாமக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் மதுரா செந்தில் கலந்து கொண்டு மாணவ,மாணவிகளுக்கு. நோட்டு,பேனா,பென்சில் மற்றும் கல்வி உபகரணங்களை வழங்கி சிறப்புரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில் வார்டு கவுன்சிலர்கள்,உள்ளாட்சி பிரதிநிதிகள், மாவட்ட ,ஒன்றிய, பேரூர்கழக நிர்வாகிகள்,பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • மாணவர்கள் செல்போனில் அதிக நேரம் செலவிடுகிறார்கள்.
    • குழந்தைகளுடன் பெற்றோர் அதிக நேரம் செலவிட வேண்டும்.

    கோவை கே.ஐ.டி.- கலைஞர் கருணாநிதி தொழில்நுட்ப கல்லூரி துறை தலைவர் (இ.இ.இ.) பேராசிரியை மைதிலி கூறியதாவது:-

    பள்ளி படிப்பு முடிந்தது கல்லூரிக்குள் வரும் மாணவர்களுக்கு எதிர்காலம் குறித்த அச்சம் ஏற்படுகிறது. நல்ல வேலை கிடைக்குமா என்ற கவலையும் ஏற்படுகிறது. கல்லூரி படிப்பு தொடர்பாக பெற்றோர் தங்களின் விருப்பம் மற்றும் முடிவுகளை மாணவர்கள் மீது திணிக்க கூடாது. அதை தவிர்க்க வேண்டும்.

    மாணவர்கள் விரும்பும் படிப்பில் சேர முடியாததால் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். முதல் மதிப்பெண் எடுக்க வற்புறுத்துவதால் மாணவர்கள் மற்றவர்களுடன் தங்களை ஒப்பிடும் நிலை உள்ளது.

    மதிப்பெண் அவசியம் என்றாலும் சாதனை படைப்பதற்கு தன்னம்பிக்கை, தனித்திறன்கள் மிகவும் முக்கியம். குழந்தைகள் கேட்பதை வாங்கி கொடுப்பதோடு பெற்றோர் அவர்களுடன் நேரம் செலவிட வேண்டும். குடும்பத்தின் நிலை தெரியும் வகையில் குழந்தைகளுக்கு வளர்க்க வேண்டும்.

    மாணவர்கள் செல்போனில் அதிக நேரம் செலவிடுகிறார்கள். ஆனால் தங்களின் மனஉணர்வுகளை நண்பர், உறவினர்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும். மாணவர்களின் மனநிலை அறிந்து பெற்றோர் உரிய ஆலோசனைகளை வழங்க வேண்டும். ஆசிரியர்கள் அனைத்து மாணவர்களையும் சமமாக நடத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பேஷன் தொடர்பான படிப்புகள் மாணவிகளை அதிகமாகவே ஈர்க்கின்றன.
    • படைப்பாற்றல், கற்பனைத்திறன் இவைதான் இப்படிப்புக்கு அடிப்படை தேவை.

    ஆடை வடிவமைப்பு என்பது அடிப்படையில் ஓர் அழகுக்கலை. இந்த பேஷன் டிசைனிங் விஷயத்தில் இளைஞர்கள், இளம்பெண்கள் கூடுதலாகவே கவனம் செலுத்துவார்கள். இதன் காரணமாக, தற்போது பேஷன் டிசைனிங், பேஷன் டெக்னாலஜி தொடர்பான படிப்புகளில் சேரும் ஆர்வம் இளைய தலைமுறையினரிடம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக பேஷன் தொடர்பான படிப்புகள் மாணவிகளை அதிகமாகவே ஈர்க்கின்றன.

    ஆரம்பத்தில் அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட வளர்ந்த நாடுகளில் மட்டுமே இருந்து வந்த பேஷன் டிசைனிங் படிப்புகள் தற்போது இந்தியா போன்ற வளரும் நாடுகளிலும் பிரபலமாகி வருகின்றன. படைப்பாற்றல், கற்பனைத்திறன் இவைதான் இப்படிப்புக்கு அடிப்படை தேவை. இவ்விரண்டு திறன்களும் இருந்தால் இத்துறையில் ஜொலிக்கலாம். நிறைய சாதிக்கலாம்.

    சாதாரணமாக, பேஷன் டிசைன் படிப்பில் பிளஸ் 2-வில் எந்த குரூப் படித்த மாணவர்களும் சேரலாம். ஆனால், பேஷன் டெக்னாலஜி படிப்பில், பிளஸ் 2-வில் கணிதம், இயற்பியல், வேதியியல் படித்தவர்கள் மட்டுமே சேர முடியும். பேஷன் டிசைன் என்றவுடன் அனைவருக்கும் உடனே நினைவுக்கு வருவது 'நிப்ட்' என அழைக்கப்படும் தேசிய பேஷன் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் (National Institute of Fashion Technology) தான். சென்னை, பெங்களூரு, மும்பை, டெல்லி, ஐதராபாத் உள்ளிட்ட நகரங்களில் 'நிப்ட்' இயங்கி வருகிறது. சென்னை வளாகம் தரமணியில் அமைந்துள்ளது. இங்கு இளங்கலையில் டிசைனிங் தொடர்பான 4 ஆண்டு பட்டப்படிப்பும் (பி.டிசைன்), பேஷன் டெக்னாலஜி சம்பந்தமான பட்டப்படிப்பும் (பி.எப்.டெக்) வழங்கப்படுகிறது.

    டிசைனிங் படிப்பில் பேஷன் டிசைன், லெதர் டிசைன், அக்ஸெசரி டிசைன், டெக்ஸ்டைல் டிசைன், நிட்வேர் டிசைன், பேஷன் கம்யூனிகேஷன் ஆகிய 6 பாடப்பிரிவுகள் உள்ளன. ஒவ்வொரு பாடப்பிரிவிலும் தலா 30 இடங்கள். இளங்கலை படிப்புகளில் பிளஸ் 2 முடித்தவர்கள், பாலிடெக்னிக் டிப்ளமோ படிப்பை பூர்த்தி செய்தவர்கள் சேரலாம். வயது வரம்பு 23. எஸ்.சி., எஸ்.டி. வகுப்பினருக்கு 5 ஆண்டு வயது வரம்பில் தளர்வு உண்டு. மேற்படிப்பை பொறுத்தவரையில், எம்.டிசைன், எம்.எப்.எம். (பேஷன் மேனேஜ்மென்ட்), எம்.எப்.டெக் (பேஷன் டெக்னாலஜி) படிப்புகள் உள்ளன. முதல் இரு படிப்புகளில் எந்த பட்டதாரிகளும் சேரலாம். ஆனால், எம்.எப். டெக் படிப்புக்கு மட்டும் பி.எப். டெக் அல்லது பி.இ., பி.டெக் பட்டம் அவசியம். இதற்கு வயது வரம்பு ஏதும் கிடையாது.

    இளங்கலை, முதுகலை படிப்புகளுக்கு அகில இந்திய அளவில் சிறப்பு நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டு அதன் அடிப்படையில் மாணவ-மாணவிகள் சேர்க்கப்படுகிறார்கள்.

    நிப்ட் கல்வி நிறுவனத்தைப் போன்று, தமிழ்நாட்டில் கோவை பாரதியார் பல்கலைக்கழகம், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம் ஆகியவற்றில் பேஷன் தொடர்பான பட்டப் படிப்புகள் வழங்கப்படுகின்றன. இவை தவிர பல தனியார் கல்வி நிறுவனங்களில் பேஷன் டிசைனிங், பேஷன் டெக்னாலஜி படிப்புகள் உள்ளன. இந்த இடங்கள் பொறியியல் படிப்பு பொது கலந்தாய்வு மூலமாக நிரப்பப்படுகின்றன.

    பேஷன் டிசைனிங் தொடர்பான படிப்புகள் 100 சதவீதம் உடனடி வேலைவாய்ப்பு நிறைந்தவை. தற்போது, சின்னத்திரையிலும், வெள்ளித்திரையிலும் ஆடை அலங்காரத்துக்கு அதிகளவில் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். எனவே, பேஷன் டிசைனர்களுக்கு இத்துறைகளில் உடனடி வேலைவாய்ப்புகள் காத்திருக்கின்றன. தற்போது சர்வதேச அளவில் ஆடை நிறுவனங்கள், பேஷன் ஷோ நிகழ்ச்சிகள் வளர்ந்து வருகின்றன. இதுபோன்ற காரணங்களால், பேஷன் தொடர்பான படிப்பை முடிப்பவர்களுக்கு வேலைவாய்ப்புகள் உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் விரிந்து பரந்து கிடக்கின்றன. அவர்கள் ஆடை அலங்கார நிபுணர் ஆகலாம். வெளிநாடு சென்று பணிபுரிய விரும்புவோருக்கு பேஷன் டிசைனிங் அருமையான படிப்பு.

    பொதுவாக, இப்படிப்பை முடிப்பவர்கள் பேஷன் டிசைனர், பேஷன் கோ-ஆர்டினேட்டர், ஸ்டைலிஸ்ட், காஸ்ட்யூம் டிசைனர், டெக்ஸ்டைல் டிசைனர் என பல்வேறு பொறுப்புகளில் பணியில் சேரலாம். மேலும் ஆயத்த ஆடை நிறுவனங்கள், ஆடை ஏற்றுமதி நிறுவனங்கள் போன்றவற்றில் பேஷன் டிசைன் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றன. தனியார் துறையில் மட்டுமின்றி அரசு பணி வாய்ப்புகளும் இல்லாமல் இல்லை. மத்திய, மாநில அரசுகளில் கைத்தறி துறைகளில் வேலைவாய்ப்பு பெறலாம். நிறைய மேற்படிப்பு வாய்ப்புகளும் இருக்கின்றன. எம்.பி.ஏ. பேஷன் மேனேஜ்மென்ட், எம்.டிசைன் (மாஸ்டர் ஆப் டிசைன்), எம்.எப்.டெக் (பேஷன் டெக்னாலஜி) படிக்கலாம்.

    கலை, அறிவியல், தொழில்நுட்பம், மனித உணர்வுகள் ஆகியவை இணைந்த கலவைதான் பேஷன் டிசைனிங். நமது உடலின் இரண்டாவது தோல் என்று கூட இதை அழைக்கலாம். உலக அளவில் மட்டுமின்றி இந்தியாவிலும் பேஷன் டிசைனிங் துறையானது மிக வேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறது. இதனை, பி.எஸ்சி மற்றும் பி.டெக் படிப்பாக படிக்கலாம். சாதாரணமாக பி.எஸ்சி படிப்புக்கு ஆண்டுக்கு சுமார் ரூ.50 ஆயிரமும், பி.டெக். படிப்பு எனில் ரூ.2 லட்சம் வரையிலும் செலவாகும். அதிக செலவு நிறைந்த படிப்பு போல் தோன்றினாலும் இப்படிப்பை முடிப்பவர்களுக்கு ஏராளமான வேலைவாய்ப்புகள் காத்திருக்கின்றன.

    பேஷன் துறையிலும், ஜவுளித் துறையிலும் பணிவாய்ப்புகள் மிகுதி. பெரிய நிறுவனங்களில் அசிஸ்டென்ட் பையர், பேஷன் அசிஸ்டென்ட், பேஷன் கன்சல்டன்ட், புராஜெக்ட் லீடர், டெக் னிக்கல் லீட், குவாலிட்டி ஆடிட்டர், பிரான்ட் மேனேஜர், கன்டன்ட் டிசைனர், இன்போகிராபிக் டிசைனர், டேட்டா அனலிஸ்ட், ஜூனியர் ரிசர்ச் சயின்டிஸ்ட், மெட்டீரியல் மேனேஜர், அப்பரல் டிசைனர், புரடக்‌ஷன் பிளானர், பேட்டர்ன் என்ஜினீயர், 3-டி ஸிமுலேட்டர், பிளான்ட் லே-அவுட் டிசைனர்... இப்படி பலதரப்பட்ட பொறுப்புகளில் வேலைவாய்ப்புகள் காத்திருக்கின்றன.

    இத்துறையில் தொடக்க நிலையில் ரூ.40 ஆயிரம் சம்பளம் கிடைக்கும். ஐந்தாறு ஆண்டுகளில் ரூ.75 ஆயிரம், ரூ.1 லட்சம், ரூ.2 லட்சம் பெறக்கூடிய வாய்ப்புகள் அதிகம். நல்ல படைப்பாற்றலும், கற்பனை வளமும், தொழில்திறனும் இருந்தால் சம்பளம் இன்னும் அதிகமாக பெறலாம். எல்லாவற்றுக்கும் மேலாக சொந்தமாக தொழில் தொடங்கி மிகப்பெரிய தொழில்முனைவோர் ஆகலாம்.

    பேஷன் டிசைனிங் தொடர்பான படிப்புகள்

    100 சதவீதம் உடனடி வேலைவாய்ப்பு நிறைந்தவை. தற்போது, சின்னத்திரையிலும், வெள்ளித்திரையிலும் ஆடை அலங்காரத்துக்கு அதிகளவில் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். எனவே, பேஷன் டிசைனர்களுக்கு இத்துறைகளில் உடனடி வேலைவாய்ப்புகள் காத்திருக்கின்றன.

    • மாணவர்களின் ஆங்கில வாசிப்பு, கணிதம் பாடங்களில் சிறப்பான முன்னேற்றம் ஏற்பட்டு இருக்கிறது.
    • குழந்தைகளுக்கு இந்தத் திட்டம் நல்லதுதான்.

    கொரோனா நோய்த் தொற்று குறைந்தபோதிலும், அதனால் விளைந்த பாதிப்புகள் ஒவ்வொரு துறையிலும் மறைந்தே இருக்கத்தான் செய்கின்றன.

    தொழில், கல்வி, சுகாதாரத்தில் அதன் தாக்கம் பெரிய அளவில் இருந்து வருவதை கடந்த ஓரிரு ஆண்டுகளாக நாம் அனுபவப்பூர்வமாக உணர்ந்து வருகிறோம். அதில் இருந்து மீள மத்திய, மாநில அரசுகளும் தொடர் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன.

    கல்வியைப் பொறுத்த அளவில் மாணவர்களின் கற்றல் செயல்பாடுகளில் அது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

    அதிலும் ஆரம்பக் கல்வியை தொடங்கும் மாணவர்களின் கல்வித் திறனே அதிக அளவில் பாதிப்புக்கு உள்ளாகி இருப்பதை பல்வேறு தரப்பிலான ஆய்வு முடிவுகள் எடுத்துக் காட்டுகின்றன.

    பல குழந்தைகளுக்கு தமிழ், ஆங்கிலம், கணிதம் போன்ற பாடங்களில் அடிப்படைகூட தெரியாத நிலை இருப்பது வேதனை அளிப்பதாக அவைகள் சுட்டிக்காட்டுகின்றன.

    இதற்கு முக்கிய காரணம், கொரோனா காலத்தில் 19 மாதங்களாக நேரடி வகுப்புகள் நடத்த முடியாமல் போனதுதான். அதனால் 1-ம் வகுப்பு பாடங்கள் பற்றி முழுமையாக தெரியாமலேயே 2-ம் வகுப்பிற்கும், அதுபோல் 2-ம் வகுப்பைப் படிக்காமலே 3-ம் வகுப்புக்கும் குழந்தைகள் தாவி வந்திருக்கிறார்கள்.

    இதனால் ஏற்பட்ட கற்றல் இடைவெளியால் முதல் மற்றும் இரண்டாம் வகுப்பு கல்வியின் பலன்களை குழந்தைகள் முழுமையாகப் பெறவில்லை.

    எண்ணும் எழுத்தும் திட்டம்

    இவ்வாறு கல்வியில் பாதிப்புக்கு உள்ளான குழந்தைகளின் கற்றல் இடைவெளியைச் சீர்செய்வது, கல்வித்துறையின் மிக முக்கிய கடமையாக இருக்கிறது.

    அதற்காக உருவானதுதான், எண்ணும் எழுத்தும் திட்டம். 2022-23-ம் கல்வி ஆண்டு முதல் 3 ஆண்டுகளுக்கு இந்தத் திட்டத்தை அரசு முன்னெடுக்க இருக்கிறது.

    எண்ணும் எழுத்தும் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 13.6.2022 அன்று திருவள்ளூர் மாவட்டம், அழிஞ்சிவாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தொடங்கி வைத்தார். அதன் பிறகு அந்தத் திட்டம் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து தொடக்கப் பள்ளிகளிலும் நடைமுறைக்கு வந்தது.

    அதை செயல்படுத்த, தனியாக ஆசிரியர்களுக்குச் சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட்டது. மேலும் ஆசிரியர் கையேடுகளும், பயிற்சி நூல்களும் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (எஸ்.சி.இ.ஆர்.டி.) மூலம் வழங்கப்பட்டு இருக்கிறது.

    அரும்பு, மொட்டு, மலர்...

    குழந்தைகளின் கற்றல் இடைவெளியை அடையாளம் கண்டு அவர்களின் திறமைக்கு ஏற்ப கல்வி கற்பிக்கும் வகையில் அவர்கள், "அரும்பு, மொட்டு, மலர்" என்று 3 பிரிவுகளாக பிரிக்கப்படுகிறார்கள்.

    அரும்பு என்பது படிக்கத் தெரியாத குழந்தைகளையும், மொட்டு என்பது கொஞ்சம் படிக்கத் தெரிந்த குழந்தைகளையும், மலர் என்பது நன்கு படிக்கத் தெரிந்த குழந்தைகளையும் குறிக்கிறது.

    இதில் அரும்பு, மொட்டு வகையில் இருக்கும் குழந்தைகளை மலராக பூக்க வைக்க வேண்டும் என்பதே திட்டத்தின் ஒரே நோக்கம் ஆகும்.

    ஆடல், பாடல், கதை சொல்லல்...

    தமிழ், ஆங்கிலம், கணக்குப் பாடங்களை கற்றுக் கொடுக்கும் போது, குழந்தைகளின் கற்றலை மகிழ்ச்சியாக்கும் வகையில், எண்ணும், எழுத்தும் வகுப்பறையில் ஆடல், பாடல், கதை சொல்லல், வாசித்தல், செயல்பாடு, படைப்பு, பொம்மலாட்ட களங்கள் போன்ற நிகழ்வுகள் மூலம் அவர்களின் ஆர்வமும், ஈடுபாடும் ஊக்கப்படுத்தப்படுகின்றன.

    ×