என் மலர்
நீங்கள் தேடியது "போக்குவரத்து"
- கன்னியாகுமரிகடல் நடுவில் அமைந்துள்ளது
- சுற்றுலா பயணிகள் பார்வையிட அனுமதிக்கப்படுகிறார்கள்
கன்னியாகுமரி:
சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் கடல் நடுவில் அமைந்துள்ள பாறையில் தெய்வப்புலவர் திருவள்ளுவருக்கு 133 அடி உயர வானுயர சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலையை கடந்த 2000 -ம் ஆண்டு ஜனவரி மாதம் 1-ந்தேதி அப்போதைய முதல்-அமைச்சர் கருணாநிதி திறந்து வைத்தார்.
கடல் நடுவில் இந்த திருவள்ளுவர் சிலை அமைந்துள்ளதால் இந்த சிலை அடிக்கடி உப்பு காற்றினால் சேதம் அடைந்து வருகிறது. இதனால் கடல் உப்பு காற்றின் பாதிப்பில் இருந்து இந்த திருவள்ளுவர் சிலை சேதமடைவதை தடுப்பதற்காக 4 ஆண்டு களுக்கு ஒரு முறை ரசாயன கலவை பூசும் பணி நடைபெறுவது வழக்கம்.
அதன்படி 4 ஆண்டுகளுக்கு பிறகு இந்த முறை திருவள்ளுவர் சிலை பராமரிப்பு பணியானது ரூ.1 கோடி செலவில் கடந்த ஜூன் மாதம் தொடங்கப்பட்டது.
133 அடி உயரம் கொண்ட சிலையை சுற்றி சுமார் 60 டன் எடை கொண்ட ராட்சத இரும்பு பைப்புகள் கொண்டு சாரம் அமைக்கப்பட்டு முதலில் சிலையை தண்ணீர் கொண்டு முழுவதுமாக சுத்தம் செய்யப்பட்டது. பின்னர் சிலையின் இணைப்பு பகுதிகளில் உள்ள வெடிப்புகளை சரி செய்யும் விதமாக சுண்ணாம்பு, கடுக்காய், பனை வெல்லம் ஆகியவை கொண்ட கலவை பூசும் பணி நடைபெற்றது.
அதன் பிறகு காகித கூழ் கலவை சிலை மீது ஒட்டப்பட்டு சிலையில் படிந்துள்ள உப்பினை அகற்றும் பணி நடைபெற்று முடிந்தது. அதைத்தொடர்ந்து தண்ணீர் கொண்டு முழுவதுமாக சுத்தம் செய்யப்பட்டது. பின்னர் ஜெர்மன்நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட வாக்கர் எனப்படும் ரசாயன கலவை பூசப்பட்டது. தற்போது இந்த பணிகள் அனைத்தும் முடிவுற்ற நிலையில் இந்த பணிக்காக 60 டன் எடை கொண்ட இரும்பு பைப்புகள் மூலம் சிலையை சுற்றி அமைக்கப்பட்ட சாரத்தினை பிரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இன்னும் 10 நாட்களில் இந்த பணி நிறைவடைந்து விடும் என்று கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து 6 மாதங்களுக்கு பிறகு வருகிற பொங்கல் பண்டிகை முதல் திருவள்ளுவர் சிலைக்கு படகுபோக்குவரத்து இயக்கப்படுகிறது.
இதைத் தொடர்ந்து அன்று முதல் மீண்டும் திருவள்ளுவர் சிலையை நேரில் சென்று பார்வையிட சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள் என்று தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
- 2 நபர்களுக்கு குடிபோதை வழக்கு பதிவு செய்யப்பட்டு வாகனம் பறிமுதல் செய் யப்பட்டது.
- 2 சிறுவர்கள் ஓட்டி வந்த வாகனங்களை பறிமுதல் செய்த போலீசார் அவர்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
கன்னியாகுமரி:
குளச்சல் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் வில்லியம் பெஞ்சமின் மற்றும் மார்த்தாண்டம் வட்டார போக்குவரத்து துறை மோட்டார் வாகன இன்ஸ்பெக்டர் ராஜேஷ் ஆகியோர் தலைமையில் குளச்சல் காந்தி சந்திப்பில் வாகன சோதனை நடைபெற்றது.
இதில் குடிபோதையில் வாகனம் ஓட்டி வந்த நபர்கள் நவீன கருவி மூலம் பரிசோதிக்கப்பட்டனர்.பரிசோதனையில் 2 நபர்களுக்கு குடிபோதை வழக்கு பதிவு செய்யப்பட்டு வாகனம் பறிமுதல் செய் யப்பட்டது. மேலும் 2 சிறுவர்கள் ஓட்டி வந்த வாகனங்களை பறிமுதல் செய்த போலீசார் அவர்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
இவைதவிர 58 ஹெல்மெட் வழக்குகள், 3 செல்போன் வழக்குகள் உட்பட மொத்தம் 114 வாகன விதிமீறல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.
- மேம்பாலத்தின் கீழ் வழியாக வந்த வாகனங்கள் அனைத்தும் மாற்று பாதை வழியாக சிறிது நேரம் திருப்பி விடப்பட்டது.
- போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை
நாகர்கோவில்:
பார்வதிபுரத்தில் இருந்து நாகர்கோவில் நோக்கி இன்று மதியம் கார் ஒன்று வந்தது. மேம்பாலத்தின் கீழ் பகுதி யில் வந்த போது டிரைவர் காரை மெதுவாக ஓட்டி சென்றார். இதையடுத்து பின்னால் வந்த அரசு பஸ் டிரைவர் பஸ்ஸை நிறுத்தினார்.
அதனால் பின்னால் வந்த காரும் நின்றது.ஆனால் அதன் பின்னால் வந்த கார் ஒன்று வேகமாக முன்னால் நின்ற கார் மீது மோதியது.மோதிய வேகத்தில் அந்த கார் பஸ்மீது மோதி நின்றது. இதில் இரண்டு கார்களும் சேதம் அடைந்தன. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.
இதையடுத்து போக்கு வரத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். மேம்பாலத்தின் கீழ் வழியாக வந்த வாகனங்கள் அனைத்தும் மாற்று பாதை வழியாக சிறிது நேரம் திருப்பி விடப்பட்டது.
- காவேரி பாலத்தில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றபட்டுள்ளது
- திருச்சி மாநகரப் போக்குவரத்து போலீசார் நடவடிக்கை
திருச்சி:
பொங்கல் பண்டிகையின் தொடா் விடுமுறையால், சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு வருவோா் எண்ணிக்கை அதிகளவில் இருக்கும். காவிரி பாலத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் அனைத்து வாகனங்களும் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்று வருகிறது. இதனால், அப்பகுதியில் தினந்தோறும் போக்குவரத்து நெரிசல் தவிா்க்க முடியாமல் உள்ளது.
இந்நிலையில், திருச்சி மாநகரப் போக்குவரத்து காவல்துறை சாா்பில் பொங்கலுக்காக பிரத்யேக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சென்னையிலிருந்து தென்மாவட்டங்களுக்கு வரும் அனைத்து பேருந்துகள், காா்கள், லாரிகள் அனைத்தும் சா்க்காா்பாளையம் அணுகுசாலை வழியாக மட்டுமே செல்ல வேண்டும். அவசர ஊா்திகள் அனைத்தையும் சா்க்காா்பாளையம் அணுகுசாலை வழியாக அனுப்பி, சஞ்சீவி நா் சந்திப்பில் தாற்காலிக திறப்பை
ஏற்படுத்தி அதன் வழியாக அனுமதிக்கப்படும். அதிக போக்குவரத்து நெரிசல் இருக்கும் சூழலில், சென்னை-திருச்சி சாலையில் வரும் வாகனங்கள் அனைத்தையும் சஞ்சீவி நகா் பகுதியில் திரும்ப அனுமதிக்காமல், நேராகச் சென்று பால் பண்ணை வழியாக திரும்பி வர அனுமதிக்கப்படும். தேவையான இடங்களில் கல்லூரி மாணவா்களின் என்சிசி, என்எஸ்எஸ் பிரிவு, ஊா்க்காவல் படை, போக்குவரத்து வாா்டன் ஆகியோரை கொண்டு போக்குவரத்து ஒழுங்குபடுத்து பணி மேற்கொள்ளப்படும்.
சஞ்சீவிநகா், ஓயாமரி சாலை, தேசிய நெடுஞ்சாலை-38, புறவழிச் சாலை, கொண்டையம்பேட்டை அணுகுசாலை, கொண்டயம்பேட்டை சந்திப்பு, கல்லணை சாலை ஆகிய இடங்களில் கூடுதல் போலீஸாா் நியமிக்கப்பட்டு போக்குவரத்து ஒழுங்குப்படுத்ப்படும் என மாநகரக் காவல்துறை தெரிவித்துள்ளது. இதுதொடா்பாக, திருச்சி மாநகரம், கோட்டை போக்குவரத்து ஒழுங்குப் பிரிவு, திருவரங்கம் போக்குவரத்து ஒழுங்குப் பிரிவு போலீசார் பொங்கல் பண்டிகை நாள்கள் முடியும் வரையில் (வரும் 17-ந் தேதி வரை) கூடுதல் கவனத்துடன் பணிபுரியவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- நான்கு பக்கங்களிலிருந்து வரும் வாகனங்கள் தாறுமாறாக செல்வதால் தினந்தோறும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகின்றன.
- காலை மற்றும் மாலை நேரங்களில் கட்டுக்கடங்காத வாகன நெரிசல் தினந்தோறும் ஏற்பட்டு வருகின்றன
வீரபாண்டி :
திருப்பூரில் இருந்து பல்லடம் செல்லும் சாலையில் தொழில் நிறுவனங்கள், வணிக வளாகங்கள்,கடைகள் ,குடியிருப்புகள் உள்ளிட்டவைகள் அதிகமாக இருக்கின்றன. கோவை மற்றும் கேரளாவை இணைக்கும் முக்கிய வழித்தடம் என்பதாலும் சரக்கு போக்குவரத்து பிரதானமாக இருப்பதாலும் இந்த சாலையில் நாளுக்கு நாள் வாகன போக்குவரத்து அதிகரித்து வருகின்றன.
போக்குவரத்து நிறைந்த இந்த சாலையில் தினந்தோறும் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். குறிப்பாக திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட வீரபாண்டி பிரிவு முதல் டி.கே.டி.மில் வரை அதிகப்படியான போக்குவரத்து நெரிசல் தினந்தோறும் ஏற்பட்டு வருகின்றன.
மேலும் பல்லடம் சாலை வழியாக தினந்தோறும் அரசு மருத்துவமனைக்கு வரும் ஆம்புலன்ஸ் வாகனங்களும் இந்த போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கின்றன.
இது குறித்து வாகன ஓட்டிகளும் சமூக ஆர்வலர்களும் கூறியதாவது:- வீரபாண்டி பிரிவு ,நொச்சிப்பாளையம் பிரிவு,டி.கே.டி.மில் பிரிவு என முக்கிய சாலைகள் செல்லும் சந்திப்புகள் இந்த சாலையில் உள்ளது. மேற்கூறிய இடங்களில் அதிகப்படியான வாகன போக்குவரத்து இருப்பதாலும் போக்குவரத்து நெரிசலும் அதிகமாக உள்ளன.
குறிப்பாக காலை மற்றும் மாலை நேரங்களில் கட்டுக்கடங்காத வாகன நெரிசல் தினந்தோறும் ஏற்பட்டு வருகின்றன. நொச்சிப்பாளையம் பிரிவு மற்றும் டி.கே.டி.மில் பிரிவு இந்த இரண்டு நால்ரோடுகளிலும் பெரும்பாலும் போக்குவரத்தை ஒழுங்குபடுத்த போலீசார் இருப்பதில்லை.
இதனால் இந்த இரண்டு பகுதிகளிலும் நான்கு பக்கங்களிலிருந்து வரும் வாகனங்கள் தாறுமாறாக செல்வதால் தினந்தோறும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகின்றன.
நெரிசலில் சிக்கிய வாகனங்கள் தினந்தோறும் ஊர்ந்து செல்வதால் கடும் மன உளைச்சல் ஏற்படுகின்றன. மேலும் மருத்துவமனைக்கு செல்லும் ஆம்புலன்ஸ் வாகனங்களும் தினந்தோறும் இந்த போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவியாய் தவிக்கின்றன. மேற்கூறியுள்ள இரண்டு பகுதிகளிலும் உடனடியாக போக்குவரத்து போலீசாரை நியமித்து போக்குவரத்தை ஒழுங்குபடுத்த வேண்டும் என வாகன ஓட்டிகளும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைத்துள்ளார்கள்.
- சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் திரும்பியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
- இதனால் பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் பயணிகள் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக காணப்பட்டது.
பெரம்பலூர்
பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊர்களுக்கு சென்றிருந்தவர்கள் விடுமுறை முடிந்ததால் நேற்று புறப்பட தொடங்கினர். சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் மீண்டும் திரும்பி வர தமிழக அரசு சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது. ஆனாலும் பஸ்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது. இதே போல் வெளியூர்களில் தங்கியிருந்து வேலை பார்த்த பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்தவர்களும், பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊர்களுக்கு வந்தவர்களும் நேற்று புறப்பட்டனர்.
இதனால் பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் பயணிகள் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக காணப்பட்டது. மேலும் பொங்கல் பண்டிகையை கொண்டாட தென் மாவட்டங்களுக்கு சென்றவர்கள் நேற்று கார், ஆம்னி பஸ்கள் உள்ளிட்டவற்றில் சென்னைக்கு ஒரே நேரத்தில் திரும்பி சென்றவாறு இருந்தனர். இதனால் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் பகுதியில் போக்குவரத்து நிறைந்து பரபரப்பாக காணப்பட்டது. இதில் சிறுவாச்சூரில் மேம்பால பணி நடப்பதாலும், திருமாந்துறை சுங்கச்சாவடியிலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டு வாகனங்கள் ஊர்ந்து சென்றதை காணமுடிந்தது.
- மதுரையில் போக்குவரத்து போலீசார் விழிப்புணர்வு பிரசாரம் நடத்தினர்.
- மதுரை மாநகரில் போக்குவரத்து போலீசார் சார்பில் விழிப்புணர்வு பிரசாரம் நடத்தப்பட்டு வருகிறது.
மதுரை
தமிழகம் முழுவதும் சாலை பாதுகாப்பு வாரம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி போக்குவரத்து போலீசார் மாநிலம் முழுவதும் விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மதுரை மாநகரில் போக்குவரத்து போலீசார் சார்பில் விழிப்புணர்வு பிரசாரம் நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக மதுரை கோரிப்பாளையம் சந்திப்பில் போக்குவரத்து போலீசார் விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபட்டனர். அப்போது வாகன ஓட்டிகளிடம், "தலைக்கவசம் அணிந்து வாகனம் ஓட்டுவேன், அதிவேகமாக வாகனம் ஓட்ட மாட்டேன். ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்ட மாட்டேன், இருசக்கர வாகனத்தில் 3 நபர்களுடன் பயணிக்க மாட்டேன், குடிபோதையில் வாகனம் ஓட்ட மாட்டேன், செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்ட மாட்டேன், சரக்கு வாகனத்தில் அதிக பாரம் ஏற்ற மாட்டேன், பயணிகள் ஏற்றி செல்லும் வாகனத்தில் அனுமதிக்கப்பட்ட அளவை பின்பற்றுவேன், போக்குவரத்து சமிக்கைகளை பின் பற்றுவேன், படிக்கட்டில் பயணம் செய்ய மாட்டேன்" என்ற வாசகங்கள் அடங்கிய விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வாகன ஓட்டிகளிடம் வழங்கினர்.
இதில் தல்லாகுளம் போக்குவரத்து உதவி கமிஷனர் மாரியப்பன், இன்ஸ்பெக்டர் சுரேஷ், சப்-இன்ஸ்பெக்டர் சின்ன கருத்தபாண்டி, ஆண்டவர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- போக்குவரத்து போலீசாரின் வித்தியாச விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது.
- 5 நிமிடத்தில் 5 ஆயிரம் வாகனங்களுக்கு கருப்பு போக்குவரத்து ஒட்டப்பட்டது.
மதுரை
மதுரை மாநகர சாலைகளில் தினமும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் பயணிக்கின்றன. இவற்றில் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயணம் செல்கின்றனர்.
வாகனங்களின் முன் பக்கத்தில் நவீன ஒளி விளக்குகள் பொருத் தப்பட்டுள்ளன. அவற்றில் இருந்து வெளியாகும் ஒளிக்கற்றைகள், கண்களை கூச வைக்கும் தன்மை உடையவை. குறிப்பாக வாகனங்களில் இருந்து வெளியாகும் ஒளிக்கற்றைகள் எதிரே வரும் வாகன ஓட்டிகளை நிலைகுலைய செய்யும் தன்மை உடையவை. இதனால் விபத்து ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.
மதுரை மாநகரில் ஓடும் இருசக்கர- 3 சக்கர- 4 சக்கர வாகனங்களில், கண்கூச வைக்கும் விளக்குகளின் அளவை கட்டுப்படுத்த வேண்டும் என்று மாநகர போலீசார் முடிவு செய்தனர். இது பயணிகளிடம் விழிப்பு ணர்வு ஏற்படுத்தும் வகையில் அமைய வேண்டும் என்று போக்குவரத்து துணை கமிஷனர் ஆறுமுகசாமி முடிவு செய்தார்.
இதனைத் தொடர்ந்து மதுரை மாநகரில் நேற்று மாலை 5.30 முதல் 5.35 மணி வரை சாலைகளில் வாகனங்களை தணிக்கை செய்து, கண் கூச வைக்கும் விளக்குகளின் ஒளியை கட்டுப்படுத்தும் வகையில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்ட வேண்டும் என்று போலீசார் உத்தரவு பிறப்பித்தனர். இன்ஸ்பெக்டர்கள் தங்க மணி (தெப்பக்குளம்), கணேஷ்ராம் (தெற்கு வாசல்), நந்தகுமார் (பெரியார் பஸ் நிலையம்), பூர்ணகிருஷ்ணன் (திருப்ப ரங்குன்றம்), தங்கப்பாண்டி (அவனியாபுரம்), ரமேஷ்குமார் (மீனாட்சி அம்மன் கோவில்), சுரேஷ் (தல்லாகுளம்), ஷோபனா (மதிச்சியம்), பஞ்சவர்ணம் (மாட்டுத்தாவணி) ஆகியோர் தலைமையில் 150-க்கும் மேற்பட்ட போலீசார் உடனடியாக களத்தில் இறங்கினர்.
மதுரை மாநகரில் நேற்று மாலை போலீசார் ஆங்காங்கே உள்ள சந்திப்புகளில் வாக னங்களை தடுத்து நிறுத்தி தணிக்கை செய்தனர். அப்போது பெரும்பாலான வாகனங்களில் கண் கூசும் தன்மை உடைய விளக்குகள் பொருத்தப்பட்டிருப்பது தெரிய வந்தது. அந்த வாகனங்களில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு ஒளிவீச்சின் தன்மை குறைக்கப்பட்டது.
மதுரை மாவட்டத்தில் நேற்று மட்டும் 5 நிமி டங்களில் 5 ஆயிரம் வாகனங்களுக்கு கருப்பு ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டன. தெப்பக்குளத்தில் மட்டும் 500 வாகனங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது. இதன் மூலம் வாகன ஓட்டிகளிடம் கண் கூச வைக்கும் விளக்குகளின் உபயோகம் குறித்து வித்தியாசமான முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
- வி.இ.ரோட்டில் புதிதாக ரவுண்டானா அமைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
- பணிகள் துரிதமாக நடைபெற அதிகாரிகளுக்கு மேயர் உத்தரவிட்டார்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாநகராட்சியில் போக்கு வரத்து நெருக்கடிக்கு தீர்வு கண்டு,சீரான போக்கு வரத்தை ஏற்படுத்தும் வகையில் அதிகாரிகள் மற்றும் அனுபவம் வாய்ந்தவர்களுடன் ஆலோசனைகள் மேற்கொண்டு மேயர் ஜெகன் பெரியசாமி, சாலை அமைக்கும் பணிகள் மற்றும் சாலையோர பகுதிகளில் நடை பாதைகள், வடி கால்கள் உள்ளிட்ட திட்டப் பணிகளை மேற்கொண்டு வருகிறார்.
போக்குவரத்து சீராக நடைபெற பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்கும்படி அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்நிலையில் தாமோதரன்நகர் சந்திப்பு வி.இ.ரோட்டில் போக்கு வரத்து அதிகமாக இருப்பதாக வந்த தகவலை யடுத்து அந்தப் பகுதியில் புதிதாக ரவுண்டானா அமைக்க முடிவு எடுக்கப்பட்டு ள்ளது. இதைத்தொடர்ந்து ரவுண்டானா அமைய உள்ள இடத்தினை மேயர் ஜெகன் பெரியசாமி நேற்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தொடர்ந்து பணிகள் துரிதமாக நடைபெற உரிய நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு மேயர் உத்தரவிட்டார். ஆய்வின்போது மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ், பிரபாகரன், ஜாஸ்பர் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள், அலுவலர்கள் உடன் இருந்தனர்.
- நெல்லை போக்குவரத்து கழக பொது மேலாளரை ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. சந்தித்து மனு அளித்தார்.
- நெல்லையில் இருந்து சிந்தாமணி,பழனியப்பபுரம் வழியாக சாத்தான்குளத்திற்கு பஸ் சேவை வழங்க வேண்டும் என மனுவில் கூறப்பட்டிருந்தது.
சாத்தான்குளம்:
சாத்தான்குளம் அருகே உள்ள கோமானேரி, கலுங்குவிளை, நெடுங்குளம், கொம்பன்குளம், வழியாக சாத்தான்குளத்துக்கு அரசு பஸ் சேவை இல்லாமல் உள்ளது. பேய்க்குளத்தில் இருந்தும், கோமானேரி, கலுங்குவிளை, நெடுங்குளம், துவர்குளம், கொம்பன்குளம், மேட்டுக்குடியிருப்பு வழியாக சென்ற அரசு பஸ்சும் நிறுத்தப்பட்டதால் மக்கள் சிரமம் அடைந்து வருகின்றனர்.
இதையடுத்து சாலைபாதுகாப்பு நுகர்வோர்குழு உறுப்பினர் போனிபாஸ், ஒன்றிய கவுன்சிலர் ப்ரெனிலா கார்மல் ஆகியோர் ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ.விடம் முறையிட்டனர். அவர்களது கோரிக்கையை ஏற்று நெல்லை போக்குவரத்து கழக பொது மேலாளரை ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. சந்தித்து மனு அளித்தார். அதில், சாத்தான்குளத்தில் இருந்து கலுங்குவிளை, நெடுங்குளம், முனைஞ்சிப்பட்டி வழியாக நெல்லைக்கு இயக்கப்பட அரசு பஸ் தடம் 65 இ, தடம் எண் 165 எச் இரவு நெல்லையில் இருந்து முனைஞ்சிப்பட்டி, கலுங்குவிளை வழியாக சாத்தான்குளத்துக்கு இயக்கப்பட வேண்டும் எனவும், அதேப்போல் தடம் எண் 137ஏ, 137கே ஆகிய பஸ்களை காலை, மாலை, நெல்லையில் இருந்து சிந்தாமணி, பேய்க்குளம், பழனியப்பபுரம் வழியாக சாத்தான்குளம், உடன்குடிக்கும், விராக்குளம், பிரண்டார்குளம், மடத்துவிளை, கலுங்குவிளை, வழியாக சாத்தான்குளத்துக்கும் இயக்கப்பட்டு வந்தது, தற்போது இயக்கப்படாததால் மீண்டும் கலுங்குவிளை, நெடுங்குளம் வழியாக இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என முறையிட்டனர்.
- மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்திற்கு தகவல்
- 1 மாதம் ஆகியும் போலீசார் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.
கன்னியாகுமரி:
மார்த்தாண்டம் சாங்கோ மெடிக்கல் பின்புறம் சிறிய நடைபாதை உள்ளது. இந்த நடைபாதையில் காலை மற்றும் மாலை வேளைகளில் அதிக நெருக்கடியாக இருக்கும். அப்பகுதியில் ஏராளமான கடைகள் மற்றும் வீடுகள் உள்ளன. இந்த பகுதியில் மோட்டர் சைக்கிளும் செல்கிறது.ஆகையால் காலை மற்றும் மாலை நேரங்களில் இப்பகுதி மிகுந்த நெருக்கடியாக இருக்கும்.
இந்த நெருக்கடியான நடைபாதையில் கடந்த 5 மாதங்களுக்கு மேலாக ஒரு மோட்டார் சைக்கிள் நிறுத்தப்பட்டிருந்தது. இந்த வாகனம் அருகில் ஏதேனும் வீட்டில் உள்ளவர்களுக்கு சொந்தமானதா? இல்லை பழுதானதால் அங்கு நிறுத்தி சென்று விட்டார்களா? இல்லை திருட்டு வாகனமா என்பது தெரியவில்லை.
போக்குவரத்துக்கு இடையூறாக சில மாதங்களாக அதே இடத்தில் நின்றதால் இது பற்றி அருகில் உள்ளவர்கள் மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.ஆனால் 1 மாதம் ஆகியும் போலீசார் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த மோட்டார் சைக்கிளால் பொதுமக்கள் நடந்து செல்வதற்கும், இருசக்கர வாகனத்தில் செல்வதற்கும் மிகுந்த சிரமமாக உள்ளது என்று அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
- தீயணைக்கும் படையினர் போராடி அகற்றினர்
- நேற்று மாலை “திடீர்” என்று சூறாவளி காற்று வீசியது
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி அருகே உள்ள கொட்டாரம் சந்திப்பில் இருந்து வட்டக்கோட் டைக்கு செல்லும் சாலையில் உள்ள லெட்சுமிபுரம் சந்திப்பில் 100ஆண்டு பழமை வாய்ந்த நாவல்மரம் ஒன்று உள்ளது.
இந்த மரத்தில் உள்ள ராட்சத மரக்கிளை நேற்று மாலை "திடீர்" என்று வீசிய சூறாவளி காற்றில் நடுரோட்டில் முறிந்து விழுந்தது. இந்த மரக்கிளை கொட்டாரம் சந்திப்பில் இருந்து வட்டகோட்டை செல்லும் சாலையும் கொட்டாரம் பெருமாள் புரம் வெட்டி முறிச்சான் இசக்கி அம்மன் கோவில் முன்புஇருந்து பொட்டல் குளம் செல்லும் சாலையும் சந்திக்கும் நான்கு முக்கு ரோடு சந்திப்பில் முறிந்து விழுந்ததால் அந்தப் பகுதியில் போக்கு வரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
ஆனால் அந்தப் பகுதியில் மரம் முறிந்து விழும்போது எந்தவித வாகனங்களும் செல்லாததால்பெரும்உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. இதுபற்றி தகவல்அறிந்ததும் கன்னியாகுமரிதீயணைக் கும்படைவீரர்கள்சம்பவ இடத்துக்குவிரைந்து சென்று பல மணி நேரம்போராடி அந்த ராட்சத மரக்கிளை களை உடனடியாகவெட்டிஅப்புறப்படுத்தினார்கள்.
அதன் பிறகு அந்த பகுதியில் போக்குவரத்து சரி செய்யப்பட்டது.