என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இளைஞர்"

    • ரத்தோர் தன்னுடைய ரிக்ஷாவில்' எனக்கு மணப்பெண் வேண்டும்' என விளம்பரம் செய்த வினோத சம்பவம் நடந்துள்ளது.
    • அந்த விளம்பரத்தில் ரத்தோரின் வயது, உயரம், பிறந்த தேதி, ரத்தப் பிரிவு, கல்வித் தகுதி உள்ளிட்ட விவரங்கள் அடங்கியுள்ளன.

    மத்தியபிரதேச மாநிலத்தில் 29 வயது இளைஞரான ரத்தோர் தன்னுடைய ரிக்ஷாவில் 'எனக்கு மணப்பெண் வேண்டும்' என விளம்பரம் செய்த வினோத சம்பவம் நடந்துள்ளது.

    திருமணத்திற்கு பெண் தேடாமல் தனது பெற்றோர் பிரார்த்தனை மட்டுமே செய்து வந்ததால், விரக்தியடைந்த தீபேந்திர ரத்தோர் திருமண வரன் பார்க்கும் குழுவில் இணைந்துள்ளார். அங்கும் அவருக்கு பெண் கிடைக்கத்தால் மனமுடைந்த அவர் வித்தியாசமான முறையில் 'எனக்கு மணப்பெண் வேண்டும்' என தன்னுடைய சொந்த ரிக்ஷயாவில் விளம்பரம் செய்துள்ளார்.

    அந்த விளம்பரத்தில் ரத்தோரின் வயது, உயரம், பிறந்த தேதி, ரத்தப் பிரிவு, கல்வித் தகுதி உள்ளிட்ட விவரங்கள் அடங்கியுள்ளன.

    இது தொடர்பாகப் பேசிய ரத்தோர், "எந்த சாதி, மதத்தைச் சேர்ந்த பெண்ணாக இருந்தாலும் திருமணம் செய்து கொள்ள நான் தயாராக இருக்கிறேன். என்னுடைய மனைவியாக வருபவர் எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பார்" என்று அவர் தெரிவித்துள்ளார்.  

    • கைது செய்யப்பட்ட 3 பேரிடம் இருந்து, 15 போலி ஏடிஎம் கார்டுகள், 3 செல்போன்கள் மற்றும் 15 வங்கி புத்தகங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
    • இந்த மோசடியில் வட மாநிலத்தைச் சேர்ந்த கும்பல் ஒன்று மூளையாகச் செயல்பட்டுள்ளனர்.

    ஆன்லைன் வேலை வாங்கித் தருவதாக சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்த இளைஞர் அருண் என்பவருக்கு ஒரு எஸ்.எம்.எஸ் வந்துள்ளது. அதில் கொடுக்கப்பட்டிருந்த லிங்க்கை க்ளிக் செய்து, அதில் கொடுக்கப்பட்டிருந்த டாஸ்க்-ஐ ஒவ்வொன்றாக அவர் முடித்துள்ளார்.

    இதன் இறுதியில் அவர் வங்கி கணக்கில் இருந்து ₹2.50 லட்சம் வரை பணத்தை இழந்தது அவருக்கு தெரிய வந்துள்ளது.

    இதனையடுத்து, அரும்பாக்கம் காவல் நிலையத்தில் இது தொடர்பாக அவர் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் அருண் செலுத்திய வங்கிக் கணக்கு எண்ணை வைத்து போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர்.

    அதில், செங்குன்றம் பகுதியைச் சேர்ந்த நல்லம்பட்டி தேஜா (22), அண்ணாநகர் சாந்தோம் காலனியைச் சேர்ந்த விஜய் (24), ஹைதராபாத்தைச் சேர்ந்த சரஸ்வதி (23) ஆகியோர் இந்த குற்றச் செயலில் ஈடுபட்டது தெரியவந்ததை அடுத்து மூவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.

    இதனை அடுத்து, கைது செய்யப்பட்ட 3 பேரிடம் இருந்து, 15 போலி ஏடிஎம் கார்டுகள், 3 செல்போன்கள் மற்றும் 15 வங்கி புத்தகங்கள் ஆகியவற்றைப் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டனர்.

    அப்போது, இவர்கள் கமிஷனுக்காக போலி வங்கிக் கணக்கு தொடங்கி அதன் மூலம் பணத்தைப் பெற்று, மோசடியில் ஈடுபட்ட வேறொரு கும்பலுடன் தொடர்பில் இருந்தது தெரியவந்தது .

    இந்த மோசடியில் வட மாநிலத்தைச் சேர்ந்த கும்பல் ஒன்று மூளையாகச் செயல்பட்டதும், மேலும் வடமாநில கும்பல் இவர்களது வங்கி கணக்கில் பணத்தைப் பெற்றுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.

    மேலும் இவ்வழக்கில் தொடர்புடைய வடமாநில கும்பலை காவல்துறை தேடி வருகிறது.

    • இளைஞர் ஒருவர் போக்குவரத்துக் காவலரின் கால்களை மசாஜ் செய்யும் வீடியோ ஒன்று வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது
    • ஏற்கனவே சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட அவர் தொடர்ந்து 2 நாட்கள் காலை மற்றும் நைட் ஷிப்ட் பார்த்ததால் மிகவும் சோர்ந்து போனார்

    மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் இளைஞர் ஒருவர் போக்குவரத்துக் காவலரின் கால்களை மசாஜ் செய்யும் வீடியோ ஒன்று வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், சாலையோரம் நாற்காலி போட்டு அமர்ந்திருக்கும் பாதுகாப்பு காவலரின் கால்களை அந்த இளைஞர் மசாஜ் செய்வது பதிவாகியுள்ளது.

    சமீபத்தில் சிறுவன் குடிபோதையில் போர்ச்சே கார் ஓட்டி ஏற்படுத்திய விபத்தில் உயிரிழந்த 2 ஐ.டி ஊழியர்கள் உயிரிழந்தனர். புனேவையே உலுக்கிய இந்த சம்பவம் நடந்த கல்யாணி நகர் பகுதியில்தான் இந்த சம்பவமும் நிகழ்ந்துள்ளது.

    போக்குவரத்துக் காவலரின் கால்களை இளைஞன் அமுக்கி விடும் வீடியோ சமூக வலைதளங்களில் தீயாக பரவிய நிலையில் புனே போக்குவரத்து துணை ஆணையர் சர்ச்சைக்கு விளக்கம் அளித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள விளக்கத்தில், எரவாடா போக்குவரத்து டிவிஷன் சப் இன்ஸ்பெக்டர் கொராடே (57) வாகன சோதனையில் ஈடுபட்டார்.

    ஏற்கனவே சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட அவர் தொடர்ந்து 2 நாட்கள் காலை மற்றும் நைட் ஷிப்ட் பார்த்ததால் மிகவும் சோர்ந்து போனார். அவரது கால்கள் அதிக வலியெடுத்துள்ளது. இதனால் அங்கு வந்த இளைஞன் அவருக்கு தானாக முன்வந்து கால் அமுக்கி விட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • யுவராஜூக்கு எந்த குற்றப் பின்னணியும் இல்லாத நிலையில் இந்த கொலை எதற்கு நடந்தது என்பது மர்மமாகவே உள்ளது
    • இந்த கொலை திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட ஒன்று என்று தெரியவந்துள்ளது.

    கனடாவில் கடந்த வெள்ளிக்கிழமை இந்திய இளைஞர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பைக் கிளப்பி வருகிறது. பஞ்சாப் மாநிலம் லூதியானவை சேர்ந்த 28 வயதாகும் யுவராஜ் கோயல் கடந்த 2019 ஆம் ஆண்டு மேற்படிப்புக்காகக் கனடா சென்றார். படிப்பு முடிந்து அங்கேயே சேல்ஸ் எக்சிகியூடிவ் வேலையில் சேர்ந்த அவர் சமீபத்தில்தான் குடியுரிமை பெற்று கனடாவிலேயே செட்டில் ஆனார்.

    இந்நிலையில் கடந்த ஜூன் 7 ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை பிரிட்டிஷ் கொலம்பியா பகுதியில் அவரை மர்ம நபர்கள் சுட்டுக் கொன்றுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக 4 பேரை சந்தேகத்தின் பேரில் போலீசார் கைது செய்து விசாரித்தனர்.

    நேற்று முன் தினம் [ஜூன் 8] 3 இந்தியர்கள் மற்றும் ஒரு கனேடியர் மீது கொலை வழக்கு பதியப்பட்டது. யுவராஜூக்கு எந்த ஒரு குற்றப் பின்னணியும் இல்லாத நிலையில் இந்த கொலை எதற்கு நடந்தது என்பது மர்மமாகவே உள்ளது. போலீசார் நடத்தி வரும் விசாரணையில் இந்த கொலை திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட ஒன்று என்று தெரியவந்துள்ளது.

     

    ஏற்கனவே இந்தியா மற்றும் கனடாவுக்கிடையில் பஞ்சாபில் தனி நாடு கோரும் காலிஸ்தான் கிளர்ச்சியாளர்களை முன்வைத்து பிரச்சனை நிலவி வருகிறது. சமீபத்தில் கனடாவில் உள்ள காலிஸ்தான் ஆதரவாளர் கொல்லப்பட்டதில் இந்திய அரசுக்குத் தொடர்புள்ளது என்று கனடா குற்றம்சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

    • தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் இளைஞர் ஒருவரை மர்ம நபர்கள் விரட்டி விரட்டி குத்திக் கொன்ற வீடியோ வெளியாகியுள்ளது.
    • பலத்த காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் மிதந்த சையத் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் இளைஞர் ஒருவரை மர்ம நபர்கள் விரட்டி விரட்டி குத்திக் கொன்ற வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹைதராபாத்தில் உள்ள பாலாபபூர் பகுதியில் உள்ள ராயல் காலனியில் நேற்று [ஜூன் 13] இரவு நடந்த இந்த கொடூர சம்பவத்தில் சையத் சமீர் என்ற அந்த 28 வயது இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    சம்பாபேட் பகுதியைச் சேர்ந்த அலங்காரத் தொழிலாளர் சையத் நேற்று இரவு வேலை முடித்து வீடு திரும்பும்போது மர்ம நபர்கள் அவரைகொலை வெறியுடன் துரத்தியுள்ளனர். சுற்றிலும் அடுக்குமாடி கட்டிடங்கள் நிறைந்த ராயல் காலனி பகுதியில் சையதை துரத்திப் பிடித்த அவர்கள் சரமாரியாக தாக்குதல் நடத்தினர்.

    அவர்களில் ஒருவன் தனது கையில் வைத்திருந்த கத்தியால் சையதை குத்தினான். சையத் சரிந்து கீழே விழுந்த நிலையிலும் அவரை கண்மூடிதனமாக அவர்கள் உதைத்ததை அப்பகுதியில் இருந்தவர் வீடியோ எடுத்து இணையத்தில் பதிவிட்டுள்ளார்.

    சையத்தை அவர்கள் தாக்கியபோது அருகே பலர் நடந்து சென்று கொண்டிருந்தும் யாரும் உதவிக்கு வரவில்லை. பலத்த காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் மிதந்த சையத் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த கொலை தொடர்பாக விசாரணையை தொடங்கியுள்ள போலீசார் மர்ம நபர்களை வீடியோ காட்சிகளின் உதவியுடன் தீவிரமாக தேடிவருகின்றனர்.  

    • 5 நாட்களாக எந்த சிகிச்சையும் அளிக்கப்படாமல் உடைந்த காலில் அட்டைப்பெட்டி கட்டுடன் படுக்கையில் இருந்துள்ளார் நிதிஷ் குமார்.
    • இந்த சம்பவத்தை வீடியோ எடுத்து சஞ்சீவ் என்பவர் பிரதமர் அலுவலகத்தை டேக் செய்து தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டார்.

    பீகார் மாநிலத்தில் இருசக்கர வாகன விபத்தில் சிக்கி காயமடைந்த இளைஞருக்கு கார்ட்போர்டு அட்டைப்பெட்டியை வைத்து அரசு மருத்துவர்கள் கட்டுப் போட்டுவிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த இளைஞர் உடைந்த காலில் அட்டைப்பெட்டி கட்டுடன் மருத்துவமனை படுக்கையில் உள்ள வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

    இரு சக்கர வாகன விபத்தில் சிக்கிய நிதிஷ் குமார் என்ற அந்த இளைஞர் முஸாபர்பூர் மாவட்டத்தில் உள்ள மினாபூர் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவருக்கு அட்டைப்பெட்டிகளை வைத்து கட்டுப் போடப்பட்டுள்ளது.

    இதனைத்தொடர்ந்து அவர் முஸாபர்பூரில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா மருத்துவக்கல்லூரி அரசு மருத்தவமனைக்கு மேல் சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் 5 நாட்களாக எந்த சிகிச்சையும் அளிக்கப்படாமல் உடைந்த காலில் அட்டைப்பெட்டி கட்டுடன் படுக்கையில் இருந்துள்ளார் நிதிஷ் குமார்.

    இந்த சம்பவத்தை வீடியோ எடுத்து சஞ்சீவ் என்பவர் பிரதமர் அலுவலகத்தை டேக் செய்து தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டார். இதனைத்தொடர்ந்து இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ள நிலையில், நிதிஷ் குமாருக்கு விரைவில் உரிய சிகிச்சை அளிக்கப்படும் என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதற்கிடையில் அரசு மருத்துவர்களின் மெத்தனப் போக்குக்கு கடுமையான கண்டனங்கள் குவிந்து வருகிறது. 

    • டிண்டர் எனும் ஆப் மிகவும் பிரபலமானது.
    • டெல்லியில் சிவில் சர்வீஸ் தேர்வுக்கு படித்துக் கொண்டு இருக்கும் இளைஞர் டிண்டரில் வர்ஷா என்ற பெண்ணிடம் பேசி வந்துள்ளார்.

    தற்பொழுது உள்ள சமூதாயத்தில் இளைஞர்கள் தங்களின் வாழ்க்கை துணையை தேர்ந்தெடுப்பதற்கு பல ஆப்கள் மற்றும் வெப்சைட்டுகள் வந்துவிட்டது.

    அதில் டிண்டர் எனும் ஆப் மிகவும் பிரபலமானது. இதில் உங்களுக்கு பிடித்த பெண்களுக்கு அவருக்கும் உங்களை பிடித்திருந்தால் அவர்களுடன் நீங்கள் பேசலாம். இவ்வாறு டிண்டரில் தன்னுடைய வாழ்க்கை துணை கிடைத்தவர்கள் ஏராளம்.

    ஆனால் இதே டிண்டர் ஆப்பில் நாம் பல்வேறு மோசடிகளையும் கேள்வி பட்டிருப்போம் அதேப் போல் மற்றொரு மோசடி டெல்லியில் நடந்துள்ளது.

    டெல்லியில் சிவில் சர்வீஸ் தேர்வுக்கு படித்துக் கொண்டு இருக்கும் இளைஞர் டிண்டரில் வர்ஷா என்ற பெண்ணிடம் பேசி வந்துள்ளார். இவ்வாறு டிண்டரில் ஆரம்பித்த இந்த காதல் நாளடைவில் வளர்ந்துள்ளது. வர்ஷாவின் பிறந்தநாளை டெல்லியில் உள்ள ப்ளாக் மிரர் கஃபேவில் கொண்டாட வருகிறார் அந்த இளைஞன்.

    கஃபேவில் இருவரும் பேசிவிட்டு இரண்டு கேக்குகள், ஸ்னாக்ஸுகள் மற்றும் சிலவற்றை ஆர்டர் செய்துள்ளனர். ஆனால் திடீரென்று வர்ஷா தனது குடும்பத்தில் ஏதோ பிரச்சனை என்று கூறிவிட்டு அவசரமாக அந்த இடத்தை விட்டு செல்கிறார் வர்ஷா.

    இதைதொடர்ந்து, ஆர்டர் செய்ததை சாப்பிட்டுவிட்டு பில் செலுத்தலாம் என்று சென்ற இளைஞனுக்கு காத்திருந்தது அதிர்ச்சி. பில் கட்டணம் சில ஆயிரத்தில் இல்லை 1 லட்சத்து 21 ஆயிரம் ரூபாய் என்று இருந்தது.

    செய்வதறியாமல் திகைத்து நின்ற இளைஞனிடம் இருந்து அந்த கஃபே உரிமையாளர் பணத்தை செலுத்தும்படி மிரட்டியுள்ளார்.

    வேறு வழியில்லாமல் அவரும் பணத்தை கட்டிவிட்டு நேராக போலீஸ் ஸ்டேஷன் சென்று புகாரளித்துள்ளார்.

    இந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வந்ததில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

    அதில், பிளாக் கஃபேவை பாவா, அன்ஷ் க்ரோவர் மற்றும் வன்ஷ் பாவா ஆகிய மூவரும் இணைந்து நடத்தி வருகின்றனர்.

    வர்ஷா என்ற பெண்ணும் இதில் கூட்டு களவானி என்றும் அவளின் உண்மையான பெயர் அஃப்சன் பர்வீன் என்றும் தெரியவந்துள்ளது.

    ஆர்யன் அந்த இளைஞரிடம் டிண்டரில் பேசி, பர்வீனின் புகைப்படத்தை வர்ஷா என்ற பெயரில் அனுப்பி வைத்து, கடந்த ஜூன் 23 ஆம் தேதி அந்த கஃபேவிற்கு வரவழைத்துள்ளது தெரியவந்துள்ளது.

    அவள் திடீரென குடும்ப அவசரம் என்று சென்றவுடன், அந்த கஃபேவை நடத்தி வந்த ஆர்யன் வேண்டுமென்றே அந்த பில்லை கொடுத்துள்ளார். இதை ஒரு குழுவாக செய்துள்ளனர்.

    மேலும், அந்த பெண்ணுக்கு போலீசார் வலை வீசிய நிலையில், அவள் ஷாதி டாட் காம் திருமண ஆப் மூலம் சந்தித்த ஒரு ஆணுடன் டேட் செய்து கொண்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து, இந்த பெண் உள்பட கஃபே உரிமையாளர்களையும் போலீசார் பிடித்து காவலில் வைத்துள்ளனர்.

    இச்சம்பவம் டெல்லியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டிண்டர் உபயோகிக்கும் இளைஞர்கள் இதை கருத்தில் கொண்டு உஷாராக இருக்க வேண்டும் என்ற சூழ்நிலை உருவாகியுள்ளது.

    • ஸ்வப்னில் தாவ்டே என்ற இளைஞர் தனது ஜிம்மில் இருந்த 32 பேர்களுடன் சேர்ந்து இந்த நீர்வீழ்ச்சிக்கு குளிக்க வந்துள்ளார்.
    • 2 நாட்களாக இளைஞரை தேடியும் அவரது உடல் இன்னமும் கிடைக்கவில்லை

    இந்தியா முழுவதும் தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. இதனால் வடமாநிலங்களில் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில் புனேவில் உள்ள பிம்ப்ரி சின்ச்வாட் பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் தம்ஹினி காட் பகுதியில் உள்ள நீர்வீழ்ச்சியில் குதித்து நீச்சல் அடிக்கும் போது அடித்து செல்லப்பட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ஸ்வப்னில் தாவ்டே என்ற இளைஞர் தனது ஜிம்மில் இருந்த 32 பேர்களுடன் சேர்ந்து இந்த நீர்வீழ்ச்சிக்கு குளிக்க வந்துள்ளார். வந்த இடத்தில் நீர்வீழ்ச்சியில் அடித்து செல்லப்பட்டு இளைஞர் காணாமல் போயுள்ளார்.

    2 நாட்களாக இளைஞரை தேடியும் அவரது உடல் இன்னமும் கிடைக்கவில்லை என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இந்த சம்பவத்தை அடுத்து, மழைக்காலங்களில் காடுகள் மலைகளுக்கு பயணம் மேற்கொள்பவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று புனே வனத்துறை அதிகாரி துஷார் சவான் தெரிவித்துள்ளார்.

    • கடந்த 40 நாட்களில் மட்டுமே இவர் 7 முறை விஷப் பாம்புகளிடம் இருந்து கடி வாங்கியுள்ளார்.
    • 9 வது முறை தன்னை கடிக்கும்போது தான் இறந்துவிடுவேன் என்றும் கனவில் பாம்பு வந்து கூறியது என்றும் தெரிவித்தார்.

    பாம்புகள் வஞ்சம் வைத்து கடிக்கும் என்பது வாய்மொழிக் கதையாக மக்கள் மத்தியில் பேசப்படும் ஒன்று. ஆனால் கதைகளேயே மிஞ்சும் வகையில் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு நடந்து வரும் சம்பவம் அனைவரையும் அச்சத்தில் உறைய வைத்துள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் பதேபூர் மாவட்டத்தில் உள்ள சௌரா கிராமத்தைச் சேர்நதவர் ௨௪ வ்யாவிகாஸ் தூபே. கடந்த 40 நாட்களில் மட்டுமே இவர் 7 முறை விஷப் பாம்புகளிடம் இருந்து கடி வாங்கியுள்ளார்.

    கடந்த ஜூன் 2 ஆம் தேதி தூபேவை அவர் வீட்டில் கட்டிலில் படுத்திருந்தபோது முதல் தடவை பாம்பு கடிதித்துள்ளது. உடனே மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் சிகிச்சைக்குப் பின் உயிர்பிழைத்தார். இவ்வறாக ஜூன் 2 முதல் ஜூலை 7 வரையிலான காலகட்டத்தில் 6 முறை தூபேவை பாம்புகள் கடித்துள்ளன. வீட்டில் இருந்தால் பாம்பு கடிக்கிறது என்று அவரை உறவினர் வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளனர் பெற்றோர். ஆனால் உறவினர் வீட்டில் வைத்தும் அவரை 5 வது முறையாக பாம்பு கடித்துள்ளது.

    அதன்பின் சிகிச்சை பெற்று அவர் தனது வீட்டுக்கே திரும்பிய நிலையில் நேற்று அவரை மீண்டும் பாம்பு கடித்துள்ளது. தற்போது 6 வது பாம்பு கடிக்கு சிகிச்சை பெற்று உயிர்பிழைத்துள்ள தூபே பேசுகையில், தன்னை சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் மட்டுமே பாம்புகள் கடிக்கின்றன என்றும் அவை தன்னை கடிக்கப்போகிறது என்று தன்னால் முன்கூட்டியே உணர முடிகிறது, 9 வது முறை தன்னை கடிக்கும்போது தான் இறந்துவிடுவேன் என்றும் கனவில் பாம்பு வந்து கூறியது என்றும் தெரிவித்தார்.

    இந்நிலையில் குணமாகி வீடு திரும்பிய அவரை மீண்டும் இன்று [ஜூலை 13] சனிக்கிழமை வந்து பாம்பு கண்டித்துள்ளது. இதனால் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கிராமத்தின் அருகில் உள்ள ஒரே மருத்துவமனையில் அவர் மீண்டும் மீண்டும் சிகிச்சை பெற்று வருவதால் அவரது நிலைமை மோசமாகியுள்ளது. சனி ஞாயிறில் மட்டுமே அவரை எப்படி பாம்பு கடிக்கிறது என்று மருத்துவர்களும் குழப்பத்தில் உள்ளனர். 

    • பழங்குடியின இளைஞரை அவரது திருமணம் நடந்து கொண்டிருந்தபோதே நடுவில் புகுந்து போலீசார் கைது செய்தனர்.
    • மணப்பெண் தன் மீது பெட்ரோல் ஊற்றி தீவைத்து தற்கொலைக்கு முயன்ற சம்பவமும் நடந்துள்ளது.

    மத்தியப் பிரதேச மாநிலம் குணா மாவட்டத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை தேவா என்ற 25 வயது பழங்குடியின இளைஞரை அவரது திருமணம் நடந்து கொண்டிருந்தபோதே நடுவில் புகுந்து போலீசார் கைது செய்தனர். திருட்டு வழக்கு தொடர்பாக தேவாவும் அவரது உறவினர் கங்காராமும் கைது செய்யப்பட்டதாக தெரிகிறது. இந்நிலையில் கைது செய்யப்பட்ட அன்றைய இரவே, 'உங்களது மகன் தேவா கஸ்டடியில் மாரடைப்பால் இறந்துவிட்டான்' என்று அவரது குடுபத்துக்கு போலீசிடம் இருந்து போன் வந்துள்ளது.

    இதனால் பழங்குடியின இளைஞரான தேவாவின் குடும்பபும் உறவினர்களும் அதிர்ச்சியைடந்த நிலையில் போலீஸ்தான் தேவாவை அடித்து துன்புறுத்தி கொலை செய்துள்ளதாக குற்றம் சாட்டி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையில் தேவாவுடன் கல்யாணமாக இருந்த மணப்பெண் தன் மீது பெட்ரோல் ஊற்றி தீவைத்து தற்கொலைக்கு முயன்ற சம்பவமும் நடந்துள்ளது.

    இந்நிலையில் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவகத்தில் திரண்ட உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் கொதிப்படைந்த தேவாவின் உறவின பெண்மணிகள் ஆட்சியர் அலுவலகத்துக்குள் நுழைந்து தங்களின் ஆடைகளை அவிழ்த்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் உள்ளே தரையில் படுத்து அழுது புலம்பியுள்ளனர். தங்களின் வளையல்களை உடைத்து கூச்சலிட்டனர் அவர்களை போலீசார் வெளியேற்ற முயன்ற நிலையில் அங்கு நடந்த கைகலப்பில் ஒரு பெண் படுகாயமடைந்தார்.

    தேவாவுக்கு மாரடைப்பு வந்தது உண்மைதான் என்றும் மாவட்ட மருத்துவமனையில் அவருக்கு சிபிஆர் வழங்கியும் உயிரை காப்பாற்ற முடியவில்லை என்றும் போலீஸ் தரப்பில் தொடர்ந்து தெரிவிக்கப்படுகிறது. ஆனால் 'இளம் வயதில் எப்படி மாரடைப்பு வரும், தேவாவையும், கங்காரமையும் போலீசார் அடித்து துன்புறுத்தியுள்ளனர். தற்போது படுகாயங்களுடன் இருக்கும் கங்காராமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க வேண்டும்' என்று தேவாவின் உறவினர்கள் தரப்பில் தொடர்ந்து போராட்டம் நடந்து வருகிறது. 

     

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தன்னை சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் மட்டுமே பாம்புகள் கடிக்கின்றன.
    • 9 வது முறை பாம்பு தன்னை கடிக்கும்போது தான் இறந்துவிடுவேன் என்றும் கனவில் பாம்பு வந்து கூறியது.

    உத்தரப் பிரதேச மாநிலம் பதேபூர் மாவட்டத்தில் உள்ள சௌரா கிராமத்தைச் சேர்நதவர் வ்யாவிகாஸ் தூபே. கடந்த 40 நாட்களில் மட்டும் 7 முறை தன்னை விஷப்பாம்புகள் கடித்துள்ளதாக அவர் தெரிவித்தது அம்மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    கடந்த ஜூன் 2 ஆம் தேதி தூபேவை அவர் வீட்டில் கட்டிலில் படுத்திருந்தபோது முதல் தடவை பாம்பு கடித்துள்ளது. உடனே மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் சிகிச்சைக்குப் பின் உயிர்பிழைத்தார்.

    இதன்பிறகு ஜூன் 2 முதல் ஜூலை 7 வரையிலான காலகட்டத்தில் 6 முறை தன்னை பாம்பு கடித்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

    மேலும், தன்னை சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் மட்டுமே பாம்புகள் கடிக்கின்றன என்றும் அவை தன்னை கடிக்கப்போகிறது என்று தன்னால் முன்கூட்டியே உணர முடிகிறது, 9 வது முறை தன்னை கடிக்கும்போது தான் இறந்துவிடுவேன் என்றும் கனவில் பாம்பு வந்து கூறியது என்றும் அவர் தெரிவித்தார்.

    சனி ஞாயிற்றில் மட்டுமே அவரை எப்படி பாம்பு கடிக்கிறது என்று இந்த விவாகரத்தில் மருத்துவர்களும் குழப்பத்தில் ஆழ்ந்தனர்.

    இதனையடுத்து விகாஸின் பிரச்சனைக்குத் தீர்வு காண்பதற்காக பத்தேபூர் ஆட்சியர் இந்துமதியின் உத்தரவின்பேரில் மருத்துவர்கள் விசாரணை மேற்கொண்டனர்.

    அந்த விசாரணையில், விகாஸ் தூபேவை இதுவரை ஒரு முறை மட்டுமே பாம்பு கடித்துள்ளதாக திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.

    முதல்முறை பாம்பு கடித்ததில் பயம் ஏற்பட்டு (Snake Phobia) தன்னை அடிக்கடி பாம்பு கடித்ததாக எண்ணி விகாஸ் தூபே அச்சப்பட்டுள்ளார்.  ஆகவே அவருக்கு மனநல சிகிச்சை தேவை என்று விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • ஆசம் ஷேக்கின் ரெயில் ஸ்கேட்டிங் ஸ்டண்ட் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.
    • இதனை அடுத்து ரெயில்வே பாதுகாப்புப் படை அதிகாரிகள் அவரைத் தேடி வந்தனர்.

    ஓடும் லோக்கல் ரெயிலில் ஸ்கேட்டிங் ஸ்டண்ட் செய்து வைரலான மும்பையை சேர்ந்த ஃபர்ஹத் ஆசம் ஷேக் என்ற இளைஞர் இதே போன்று மீண்டும் ஸ்டண்ட் செய்த போது நடந்த விபத்தில் தனது ஒரு கை மற்றும் காலை இழந்துள்ளார்.

    இம்மாத துவக்கத்தில் ஆசம் ஷேக்கின் ரெயில் ஸ்கேட்டிங் ஸ்டண்ட் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதனை அடுத்து ரெயில்வே பாதுகாப்புப் படை அதிகாரிகள் அவரைத் தேடி வந்தனர்.

    அப்போதுதான் ஏப்ரல் 14 அன்று மஸ்ஜித் ரயில் நிலையத்தில் ஸ்டண்ட் செய்ய முயற்சித்த போது ஷேக் தனது ஒரு கை மற்றும் காலை இழந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

    ஜூலை 14 ஆம் தேதி வைரலான அந்த வீடியோ இந்தாண்டு மார்ச் 7 ஆம் தேதி செவ்ரி ரெயில் நிலையத்தில் தனது நண்பரால் பதிவு செய்யப்பட்டது என்று ஷேக் அதிகாரிகளிடம் கூறினார். இந்த ஸ்டண்ட் பின்னர் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பலரின் கவனத்தை பெற்றுள்ளது.

    பின்னர் இந்த விவகாரம் தொடர்பாக வீடியோ ஒன்றை ரெயில்வே அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர். அதில், ஷேக் அவரது கை மற்றும் கால்கள் துண்டிக்கப்பட்ட நிலையில் காணப்பட்டார். யாரும் நான் செய்தது போல ஸ்டண்ட் செயல்களை செய்யவேண்டாம் என்று அவர் கோரிக்கை விடுத்தார். இத்தகைய செயல்கள் இது சட்டவிரோதமானது மட்டுமல்ல, உயிருக்கு ஆபத்தானது என்று அவர் கூறினார்.

    ×