என் மலர்
நீங்கள் தேடியது "நடவடிக்கை"
- வியாபாரிகள் விருப்பத்திற்கு ஏற்ப அவர்களாகவே தரைக்கடைகள் அமைக்க அனுமதிக்கப்படுவர்.
- சாலைகளில் குதிரைகள் தொல்லை அதிகமாக உள்ளதால் விபத்துகள் ஏற்படுகிறது.
தஞ்சாவூர்:
தஞ்சை மாநகராட்சி கூட்டம் இன்று நடைபெற்றது.
இந்த கூட்டத்துக்கு மேயர் சண்.ராமநாதன் தலைமை தாங்கினார். துணை மேயர் அஞ்சுகம் பூபதி, ஆணையர் சரவணக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் நடந்த விவாதங்கள் வருமாறு;-
துணை மேயர் அஞ்சுகம் பூபதி: 51-வது வார்டில் சில இடங்களில் காலியாக உள்ள மனைகளில் செடி, கொடிகள் படர்ந்துள்ளது.
இதனால் வீட்டுக்குள் பாம்பு, விஷபூச்சிகள் படையெடுப்பதால் பொதுமக்கள் அச்சப்படுகின்றனர்.
எனவே இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எதிர்கட்சி தலைவர் மணிகண்டன்: தீபாவளி நேரத்தில் தஞ்சை பழைய பஸ் நிலையம் பகுதியில் ஏராளமான தரைக்கடைகள் அமைக்கப்பட்டன.
இதற்கு மாநகராட்சி அனுமதி கொடுக்கவில்லை என கூறியது. அப்போது எப்படி இந்த கடைகள் அமைக்கப்பட்டன.
இதற்கு பதில் அளித்து ஆணையர் சரவணக்குமார் பேசும்போது, வியாபாரிகள் அவர்களாகவே கடை அமைத்தனர்.
இனி வரும் காலங்களில் தீபாவளி நேரத்தில் வியாபாரிகள் விருப்பத்திற்கு ஏற்ப அவர்களாகவே தரைக்கடைகள் அமைக்க அனுமதிக்கப்படுவர்.
இதையடுத்து கவுன்சிலர்கள் பேசிய விவரம் வருமாறு;-
கவுன்சிலர் கோபால்:
எனது வார்டில் பணிகள் சரிவர நடப்பதில்லை.
உடனடியாக அனைத்து பணிகளையும் முழுவீச்சில் மேற்கொண்டு உடனே முடிக்க வேண்டும்.
சரவணன்: சேவப்பநாயக்கன்வாரி 3 தெருவில் சாலை வசதி இல்லாததால் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து விடுகிறது.
எனவே அதனை தடுக்க நடவடிக்கை எடுப்பதோடு சாலை வசதி அமைத்து தர வேண்டும்.
யு.என்.கேசவன் :
எனது வார்டில் சாலைகள் மோசமாக உள்ளது.
அதனை சீரமைக்க வேண்டும். சாலைகளில் குதிரைகள் தொல்லை அதிகமாக உள்ளதால் விபத்துக்கள் ஏற்படுகிறது.
எனவே குதிரைகளை அப்புறப்படுத்த வேண்டும்.
மழை காலம் தொடங்க உள்ளதால் மழை பெய்யும் நேரத்தில் தண்ணீர் தேங்கினால் அதனை உடனுக்குடன் வெளியேற்ற தேவையான கருவிகளை தயார் நிலையில் வைக்க வேண்டும்.
காந்திமதி :
கீழவாசல் வெள்ளைபிள்ளையார் கோவில் அருகே உள்ள தற்காலிக மீன்மார்க்கெட்டால் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது.
எனவே வேறு இடத்தில் மீன் மார்க்கெட்டுக்கு நிரந்தர கட்டிடம் கட்ட வேண்டும்.
மேலும் இந்த பகுதியில் சாலைகள் பழுதடைந்துள்ளது.
அதனையும் சீரமைக்க வேண்டும்.
ஜெய்சதீஷ் :
எனது வார்டில் பாதாள சாக்கடை ஆழ்துறை குழிக்கான மூடி கண்டுபிடிக்கப்பட்டதற்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
அதே நேரத்தில் சில இடங்களில் பாதாள சாக்கடை இணைப்புக்காக தோண்டப்பட்ட இடங்களில் பணி முடிந்தும் சரிவர மூடாப்படாதால் சாலை சேதமடைந்துள்ளது.
அதனை சரி செய்ய வேண்டும்.
ரம்யா சரவணன் :
தஞ்சை மாதவராவ் நகரில் இருந்து அண்ணா நகர் வரையிலான பகுதிகளில் மழைநீர் வடிகாலை சரி செய்ய வேண்டும்.
கடன் இல்லாத மாநகராட்சி
கவுன்சிலர்கள் கோரிக்கைகளுக்கு பதில் அளித்து மேயர் சண்.ராமநாதன் பேசியதாவது;-
தமிழகத்தில் கடன் இல்லாத மாநகராட்சியாக தஞ்சாவூர் மாநகராட்சி அறிவிக்கப்பட்டு உள்ளது.
இன்று நடந்த கூட்டத்தில் கவுன்சிலர்கள் முன்வைத்த கோரிக்கைகளை குறித்து பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- மாவட்ட பஞ்சாயத்து கூட்டத்தில் தீர்மானம்
- நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடந்தது.
நாகர்கோவில்:
குமரி மாவட்ட பஞ்சாயத்து கூட்டம் நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட பஞ்சாயத்து தலைவர் மெர்லியன்றுதாஸ் தலைமை தாங்கினார். மாவட்ட பஞ்சாயத்து செயலாளர் முருகானந்தம், சுகாதார பணிகள் துணை இயக்குனர் மீனாட்சி உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் துணைத் தலைவர் சிவக்குமார் கவுன்சிலர்கள் பேராசிரியர் நீல பெருமாள், ஜான்சிலின் விஜிலா, அம்புளி, செலின்மேரி, பரமேஸ்வரன், லூயிஸ், ராஜேஷ் பாபு, ஜோபி, ஷர்மிளா ஏஞ்சல் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் கவுன்சிலர் கள் கூறுகையில், குமரி மாவட்டத்தில் கால்நடைகளுக்கான மருந்து தட்டுப்பாடு உள்ளது, நாய் தொல்லை அதிகமாக உள்ளது. அதை கட்டுப்படுத்த என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? குழித்துறை அரசு ஆஸ்பத்திரியில் சி.டி. ஸ்கேன் மற்றும் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் வசதி செய்ய வேண்டும், குளச்சல் அரசு ஆஸ்பத்திரியில் ஆம்புலன்ஸ் வசதி இல்லை, ஏற்கனவே பிரேத பரிசோதனை கூடம் இருந்த நிலையில் தற்போது அது செயல்படவில்லை. டாக்டர்கள் இருப்பதில்லை. நோயாளிகள் சிகிச்சை அளிக்க சென்றால் உடனே ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரிக்கு செல்லுங்கள் என்று அனுப்பும் நிலை உள்ளது என்றனர்.
அதிகாரிகள் கூறுகையில், கால்நடைகளுக்கான மருந்து தட்டுப்பாடு ஏற்கனவே இருந்து வந்த நிலையில் தற்போது அந்த தட்டுப்பாடு சரியாகிவிட்டது. நாய்களை கட்டுப்படுத்த பஞ்சாயத்து மற்றும் பேரூராட்சி அலுவலகங்களில் இருந்து பிடித்து கொண்டு வந்தால் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
குமரி மாவட்டத்தில் முதல்-அமைச்சரின் இன்னுயிர் காப்போம் திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது குமரி மாவட்டத்தில் மருந்து தட்டுப்பாடு இல்லை. குழித்துறை அரசு ஆஸ்பத்திரி மேம்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப் பட்டு வருகிறது. குளச்சல் அரசு ஆஸ்பத்திரியில் ஆம்புலன்ஸ் வசதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். பிரேத பரிசோதனை செய்வதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம் என்றனர்.
கூட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் பயனாளிகள் ஊதியம் காலதாமதம் இன்றி வழங்க வேண்டும், தமிழகத்தில் மக்களை பாதிப்படையை செய்யும் மின் கட்டணம் மற்றும் சொத்து வரி உயர்வை ரத்து செய்ய வேண்டும், குமரி மாவட்டத்தில் விவ சாயத்திற்கு பயன் படுத்தப்படும் பாசன கால்வாய்களில் கழிவுநீர் கலப்பதை உடனடியாக தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், நாகர்கோவில், குழித்துறை, கன்னியாகுமரி, இரணியல், ரெயில் நிலையங்களில் பிரீ பெய்டு ஆட்டோ வசதி செய்து கொடுக்க வேண்டும்.
தமிழகத்தில் விற்பனை செய்யும் அனைத்து மின்சாதன பொருட்களிலும் தமிழ் மொழி இடம் பெற வேண்டும். தமிழகத்தில் விற்பனை செய்யப்படும் அனைத்து கடைகள் வணிக நிறுவனங்களில் வாடிக்கையாளர்களுக்கு தமிழ் மொழியில் ரசீது வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
- கல்குவாரிக்கு புவியியல் மற்றும் சுரங்கத் துறை ஆணையா் ரூ.10.40 கோடி அபராதம் விதித்துள்ளாா்.
- மூடப்பட்ட குவாரியை உடனடியாக திறந்து இயக்க சுரங்கத் துறை ஆணையா் அனுமதி அளித்துள்ளாா்.
திருப்பூர் :
திருப்பூா் மாவட்டத்தில் முறைகேடாக இயங்கும் கல்குவாரிகள் மற்றும் அதற்கு உடந்தையாக இருக்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.இது குறித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூா் மாவட்டச் செயலாளா் செ.முத்துகண்ணன், தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:-
திருப்பூா் மாவட்டம், பல்லடத்தை அடுத்த கோடங்கிபாளையத்தில் விதிகளுக்கு புறம்பாக செயல்பட்டு வந்த தனியாா் கல்குவாரிக்கு புவியியல் மற்றும் சுரங்கத் துறை ஆணையா் ரூ.10.40 கோடி அபராதம் விதித்துள்ளாா். அபராத தொகையை தவணை முறையில் செலுத்த அவகாசம் அளித்தும், முழு அபராத தொகையை செலுத்துவதற்கு முன்பாகவே மூடப்பட்ட குவாரியை உடனடியாக திறந்து இயக்க சுரங்கத் துறை ஆணையா் அனுமதி அளித்துள்ளாா்.
முழு அபராத தொகையை செலுத்தும்வரை சம்பந்தப்பட்ட குவாரி இயங்குவதற்கு அனுமதி அளித்துள்ளது சந்தேகத்தை எழுப்புகிறது. ஆகவே, திருப்பூா் மாவட்டத்தில் உள்ள கல்குவாரிகளை முழுமையான ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். மேலும், சட்டவிரோதமாக செயல்படும் குவாரிகளுக்கு தடை விதிப்பதுடன், அதற்கு உடந்தையாக இருக்கும் அதிகாரிகளின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- பொதுப்பணித்துறை மூலம் திருப்பூர், ஈரோடு மாவட்ட கலெக்டர்களின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
- நஞ்சை சம்பா நெல் சாகுபடி செய்து இந்த ஆண்டு கூடுதல் மகசூல் பெற்று பயன்பெற முன்வர வேண்டும்.
காங்கயம்:
ஈரோடு மாவட்ட நீர்வள ஆதார, கீழ்பவானி பாசன கோட்டம் பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் காங்கயம் கோட்டம் பொதுப்பணித்துறை கீழ்பவானி பாசன கண்காணிப்பு குழு அதிகாரிகள் ஆகியோர் இணைந்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
கீழ்பவானி பாசன கால்வாயில் திறந்து விடப்பட்டு உள்ள நஞ்சை சம்பா நெல் சாகுபடிக்கு உரிய தண்ணீரை மின் மோட்டார் வைத்து உறிஞ்சுபவர்கள் மற்றும் கால்வாயில் இருந்து டிராக்டர்கள் மூலம் தண்ணீரை உறிஞ்சி எடுத்து கொண்டு சென்று வேறு பாசனத்திற்கு பயன்படுத்தினாலும் மற்றும் உரிய சம்பா நெல் பயிர் பாசனத்திற்காக திறந்து விடப்படும்தண்ணீரை வேறு விற்பனை உட்பட மற்ற ஏதாவது பயன்பாட்டிற்கு பயன்படுத்தினாலும் சம்பந்தப்பட்டவர்கள் தகவல்கள் குறித்து பொதுப்பணித்துறை மூலம் திருப்பூர், ஈரோடு மாவட்ட கலெக்டர்களின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
எனவே விவசாயிகள் கீழ்பவானி பாசன கால்வாயில் திறந்து விடப்பட்டு உள்ள தண்ணீரை பயன்படுத்தி நஞ்சை சம்பா நெல் சாகுபடி செய்து இந்த ஆண்டு கூடுதல் மகசூல் பெற்று பயன்பெற முன்வர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
- திருமங்கலம் நகராட்சியில் அடிப்படை வசதிகள் செய்து தர நடவடிக்கை எடுக்கப்படும்.
- கிராமசபை கூட்டத்தில் தலைவர் ரம்யா முத்துக்குமார் உறுதியளித்துள்ளார்.
திருமங்கலம்
மதுரை மாவட்டம் திருமங்கலம் நகராட்சியில் முதல் பகுதி சபா கூட்டம் 5 மற்றும் 6-வது வார்டுகளை இணைத்து கங்கன் காலனியில் காளியம்மன் கோவில் அருகே நடைபெற்றது.
நகராட்சி தலைவர் ரம்யா முத்துக்குமார் தலைமை வகித்தார். ஆணையாளர் டெரன்ஸ் லியோன், நகராட்சி துணைத்தலைவர் ஆதவன் அதியமான் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளர்களாக தி.மு.க. நகர செயலாளர் ஸ்ரீதர், நகராட்சி கவுன்சில் குழுத்தலைவர் ஜஸ்டின் திரவியம் கவுன்சிலர்கள் திருக்குமார், வீரக்குமார், நகர தி.மு.க. நிர்வாகிகள் முத்துக்குமார், ஹரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பகுதி சபா கூட்டத்தில் பங்கேற்ற பொதுமக்கள் தங்களது வார்டு பகுதியில் கூடுதல் குடிநீர் இணைப்பு வழங்க வேண்டும், தெருவிளக்கு வசதி வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி பேசினர். இதற்கு பதில் அளித்து பேசிய நகராட்சி தலைவர் ரம்யாமுத்துக்குமார், கடந்த 10 ஆண்டுகளாக அ.தி.மு.க. ஆட்சியில் போதுமான அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை. நாங்கள் பொறுப்பேற்று 6 மாதங்கள் தான் ஆகிறது. விரைவில் அடிப்படை வசதிகளை உடனுக்குடன் பூர்த்தி செய்வோம் என தெரிவித்தார். இதனை த்தொடர்ந்து பொதுமக்கள் நகராட்சி ஆணையாளர் டெரன்ஸ் லியோனிடம் மனுக்களை கொடுத்தனர்.
இதே போல் 7-வதுவார்டு 8-வது வார்டு மற்றும் 11-வது வார்டு மற்றும் 12-வது வார்டுகளிலும் நேற்று நகராட்சி தலைவர் தலைமையில் பகுதி சபா கூட்டம் நடைபெற்றது. இந்த வார்டுகளிலும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகள் குறித்து பேசினர்.
- உயிரிழப்பு இல்லாத வகையில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை விடுத்துள்ளார்.
மதுரை
முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் இன்று மதுரையில் கூறியதாவது:-
தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் தொடங்கி டிசம்பர் வரை வடகிழக்கு பருவமழை காலம் ஆகும்.
ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்துக்கு இயல்பாக கிடைக்கக்கூடிய 448 மில்லி மீட்டர் மழைநீரில், ஏறத்தாழ 50 சதவீதம் குடிநீருக்காகவும், விவசாயத்திற்காகவும் கிடைக்கக்கூடிய மழைப்பொழிவு ஆகும்.இந்தாண்டு இயல்பை விட 38% முதல் 75% வரை கூடுதல் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் நமக்கு எச்சரிக்கை விடுத்து இருக்கிறது.
இந்த நிலையில் கடந்த 29ம் தேதி வடகிழக்கு பருவமழைத்து தொடங்கி தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னையில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. தற்போது தமிழ்நாட்டில் 43 நீர்த்தேக்கங்களின் 75 சதவீதம் முதல் 100 சகவீதம் வரைநீர் நிரம்பி உள்ளது. 17 நீர்தேக்கங்களில் 50 சகவீதம் முதல் 75 சகவீதம் வரை மழை நீரால் நீர்நிலை நிறைந்திருப்பதாக செய்தி வெளியிடப்பட்டிருக்கிறது.
சென்னை கேகே நகர், அசோக் நகர், பூந்தமல்லி நெடுஞ்சாலை கோயம்பேடு, காசிமேடு உள்ளிட்ட பகுதிகளில் சென்னை வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.
சென்னையில் வடிகால் பணிகள் 40 சதவீத பணிகள் கூட முடியவில்லை என்பது தான் இன்றைய உண்மையான நிலை.
வர்தா புயல், ஒக்கி புயல், கஜா புயல், நிவர்புயல் போன்றவற்றில் அதிமுக அரசு சிறப்பாக செயல்பட்டது. இதனால் ஒரு உயிரிழப்பு கூட இல்லாமல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
தற்போது சிங்கார சென்னை திட்டத்தில் கட்டமைப்பு நிதி, வெள்ளத் தடுப்பு நிதி உள்ளிட்ட பல்வேறு நிதியின் புதிய மழைநீர் வடிகால் கட்டமைப்பு பணிகள் வடிகால் தூர் வாறும் பணிகள் நடைபெறுவதாக அரசு அறிவித்திருக்கிறது.இந்த ஆண்டு 1058 கிலோ மீட்டர் தூரத்திற்கு பணிகள் மேற்கொள்வதாக அறிவிப்புகள் வெளியிட்டி ருக்கிறார்கள்.முதல்வர் ஆய்வு செய்யும் பகுதிக்கு அருகே சேறும், சகதியுமாக இருக்கிறது. அங்கு எந்த பணிகளும் நடைபெறவில்லை. இதுதான் உண்மையான கள நிலவரம்.
மேலும் வடிகால் பணி யிலே ஒருங்கிணைப்பது, அனைத்து துறைகளுக்கு ஒருங்கிணைப்பு என்பது கேள்விக்குறியாக உள்ளது. பெரும்பாலான கால்வாய்களில் கான்கிரிட் கம்பிகள், ஆறு அடி உயரத்துக்கு முழுவதுமாக வெளியே நீண்ட படி பொது மக்களின் உயிருக்கு அச்சுறுத்தலாக இருக்கிற காட்சிகளையும் காண முடிந்தது.
மழை கொஞ்ச நேரம் பெய்தால் கூட, சென்னையில் மழை நீர் சாலையை மூழ்கடித்து செல்கிறது மக்கள் அவதிப்படக்கூடிய சூழ்நிலையை நாம் பார்க்கிறோம்.
உயிரை காவு வாங்குற நிலை. தினமும் உயிரை கையில் பிடித்து கொண்டு சாலையை கடந்து செல்லக்கூடிய நிலை இருக்கிறது. சில பகுதிகளில் மழை நீர் வடிகால் பணிகள் அவசர கதியில் முடிக்கப்பட்டு சாலையில் மண்ணை கொட்டி அந்த பணி செய்துள்ளார்கள்.
வெள்ள பாதிப்புகளை தடுப்பதற்கு ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி கடந்த கால ஆட்சி காலத்தில் பல்வேறு ஆலோசனை கொடுத்த பரிந்துரைகள் அடிப்படையில் இடந்த அதிமுக ஆட்சியில் நடை முறைப்ப டுத்தப்பட்டது.
கடந்த ஆண்டு சென்னை யில் பெய்த பருவமலையின் காரணமாக சென்னை மக்கள் பாதிக்கப்பட்டது. அரசு சரியான நடவடிக்கை எடுக்காத காரணத்தால் தான். பருவமலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க இந்த அரசு தவறி விட்டது ஆகவே இந்த பேரிடர் காலங்களில் உயிர்இழப்புகள் இல்லாத வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு தஞ்சாவூர் மாநகராட்சி அலுவலகம் மின்னொளியில் ஜொலித்தது.
- 51 வார்டுகளிலும் அந்தந்த கவுன்சிலர்கள் தலைமையில் பகுதி சபா கூட்டம்.
தஞ்சாவூர்:
தமிழகத்தில் உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு நேற்று முதன் முறையாக நகரம், மாநகரம், பேரூராட்சிகளிலும் பகுதி சபா கூட்டம் நடைபெற்றது. அதன்படி தஞ்சை மாநகராட்சியில் 51 வார்டுகளிலும் அந்தந்த கவுன்சிலர்கள் தலைமையில் பகுதி சபா கூட்டம் நடந்தது.
இந்த நிலையில் உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு தஞ்சாவூர் மாநகராட்சி அலுவலகம் மின்னொளியில் ஜொலித்தது.
பகுதி சபா கூட்டம் குறித்து மேயர் சண்.ராமநாதன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறி இருப்பதாவது:-
உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு மாநகரங்களிலும் பகுதி சபா கூட்டம் நடத்த வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்தது. அதன்படி குறுகிய காலத்தில் தஞ்சை மாநகராட்சியில் பகுதி சபா கூட்டம் சிறப்பாக நடந்து முடிந்தது.
இதற்கு மாநகராட்சி அலுவலர்கள் துரிதமாக பணி மேற்கொண்டு கூட்டம் சிறப்பாக நடைபெற நடவடிக்கை எடுத்தனர். பகுதி சபா கூட்டத்தில் பொதுமக்கள் விடுத்த கோரிக்கைகள் குறித்து அந்தந்த வார்டு கவுன்சிலர்கள் மாநகராட்சி அலுவலகத்தில் முன் வைத்துள்ளனர். அந்த கோரிக்கைகள் அனைத்தும் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது ஆணையர் சரவணகுமார், போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.
- ரெயில் நிலையங்களின் மேம்பாடு குறித்தும் ரெயில் சங்க பிரதிநிதிகளுடன் விஜய் வசந்த் எம்.பி. ஆலோசனை மேற்கொண்டார்.
- டவுண் ரெயில் நிலையத்தில் பரசுராம் ரெயில் 1 நிமிடம் நின்று செல்ல வழிவகை செய்தல், ரெயில் நிலையம் அருகே பேருந்து நிலைய வசதிகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை
நாகர்கோவில் :
கன்னியாகுமரி மாவட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய ரெயில்வே சேவைகள் குறித்தும் ரெயில் நிலையங்களின் மேம்பாடு குறித்தும் ரெயில் சங்க பிரதிநிதிகளுடன் விஜய் வசந்த் எம்.பி. ஆலோசனை மேற்கொண்டார்.
இதில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ரெயில் நிலையங்களில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், புதிய ரெயில்களைக் குமரி மாவட்டத்திற்கு கொண்டு வருதல் சில ரெயில்கள் குறிப்பிட்ட சில ரெயில் நிலையங்களில் நின்று செல்ல ஏதுவாக வழிவகை செய்தல் உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் குறித்து ஆலோசனை மேற் கொள்ளப்பட்டது.
குறிப்பாக தாம்பரம்-நாகர்கோவில் ரெயிலை தினசரி ரெயிலாக இயக்கு தல், ஷார்மினார் விரைவு ரெயிலை கன்னியாகுமரி வரை நீடித்தல், வார கடைசி யில் வேளாங்கண்ணி செல்ல கன்னியாகுமரி வழித்தடத்தில் ரெயில் இயக்குதல், மதுரை-திருவனந்தபுரம் இடையே மெமோ ரெயில் இயக்குதல், டவுண் ரெயில் நிலையத்தில் பரசுராம் ரெயில் 1 நிமிடம் நின்று செல்ல வழிவகை செய்தல், ரெயில் நிலையம் அருகே பேருந்து நிலைய வசதிகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தனர்.
இதனைக் கேட்டறிந்த விஜய் வசந்த் எம்.பி. இந்த கோரிக்கைகள் குறித்து ரெயில்வே அதிகாரி களிடம் நேரடியாக கோரிக்கை கள் வைத்து விரைந்து நடவ டிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் மேலும் வரக் கூடிய நாடாளுமன்ற கூட்டத் தொடரில் இது குறித்து பேசுவேன் என ரெயில் பயணிகள் சங்கத்திடம் கூறினார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் திருவனந்தபுரம் கோட்ட ரெயில்வே ஆலோ சனை குழு உறுப்பினர் சூசைராஜ், மதுரை கோட்ட ரெயில்வே ஆலோசனை குழு உறுப்பினர் சிவக்குமார், ரெயில் பயணிகள் சங்கத்தை சேர்ந்த ஸ்ரீ ராம், கன்னியாகுமரி நுகர்வோர் பாதுகாப்பு சங்க செயலாளர் முருகதாஸ் உள்ளிட்ட சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
- பரமக்குடி வார்டுகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தேவை என பகுதி சபை கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
- ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி நகராட்சியில் உள்ள 36 வார்டுகளிலும் பகுதி சபை கூட்டம் நடந்தது.
பரமக்குடி
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி நகராட்சியில் உள்ள 36 வார்டுகளிலும் பகுதி சபை கூட்டம் நடந்தது. 24-வது வார்டில் நகர மன்ற தலைவர் சேது கருணாநிதி தலைமையில் கூட்டம் நடந்தது. இதில் பரமக்குடி எம்.எல்.ஏ. முருகேசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். 31-வது வார்டில் நகர் மன்ற துணைத் தலைவர் குணசேகரன் தலைமையில் பகுதி சபை கூட்டம் நடந்தது.
28-வது வார்டில் கவுன்சிலர் தனலட்சுமி ராஜீ, 33-வது வார்டில் நகரமன்ற துணை தலைவர் குணசேகரன், 13-வது வார்டில் கவுன்சிலர் அப்துல் மாலிக் தலைமையில் பகுதி சபை கூட்டம் நடந்தது. வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் தொற்று நோய் பரவாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும், தினமும் தெருக்களை சுத்தம் செய்து, பிளீச்சிங் பவுடர் தெளிக்க வேண்டும், மின் மோட்டார் பயன்படுத்தி குடிநீர் எடுப்பதை தடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை பொதுமக்கள் முன் வைத்தனர். இந்த கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என நகர்மன்ற தலைவர் மற்றும் உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
- தோட்டக்கலைப்பயிர்களை பாதுகாக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தல் எடுக்கப்பட்டுள்ளது
- புதுக்கோட்டை மாவட்டத்தில் பருவமழை காலங்களில்
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையினால் தோட்டக்கலை பயிர்கள் பாதிக்கா வண்ணம் விவசாயிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு பயிர்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என கலெக்டர் கவிதா ராமு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-
வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளதால் தோட்டக்கலைப்பயிர்கள் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் அதற்கான ஆயத்த நிலை ஏற்பாடுகளை செய்து, பயிர் களை பாதுகாத்துக்கொள்ளலாம்.
பசுமைக்குடில்கள் மற்றும் நிழல்வலைக்குடிகளில் பயிர் செய்யும் விவசாயிகள் பருவமழை காலத்தில் அதன் அடிப்பாகத்தை பலமாக நிலத்துடன் இணைப்புக் கம்பிகளால் இணைத்து கட்டுவதன் மூலம் சேதத்தை தடுக்கலாம்.
மா, பலா, முந்திரி, கொய்யா, எலுமிச்சை, சப்போட்டா போன்ற பல்லாண்டு பயிர்களில் காய்ந்த மற்றும் பட்டுப்போன கிளைகளை அகற்றிட வேண்டும். மரங்களின் எடையை குறைக்கும் வகையில் கிளைகளை கவாத்து செய்ய வேண்டும். மரத்தின் அடிப்பகுதியில் மண் அணைத்து தண்டுப் பகுதியில் மண்ணை குவித்து வைத்தல் வேண்டும். தோட்டத்தில் தேவையான வடிகால் வசதி செய்திட வேண்டும். நோய்த்தடுப்பு மருந்துகள் வேர்ப்பகுதி நனையும்படி தெளிக்க வேண்டும். இளம் செடிகள் காற்றினால் பாதிக்கா வண்ணம் தாங்கு குச்சிகள் கொண்டு கட்ட வேண்டும். கனமழை, காற்று முடிந்தவுடன் மரங்களில் பாதிப்பு இருப்பின் உடனடியாக வேர்பகுதியை சுற்றி மண் அணைக்க வேண்டும்.
வாழையில் சேதத்தை தடுக்க, மரத்தின் அடியில் மண் அணைத்தல் வேண்டும். சவுக்கு அல்லது யூகலிப்டஸ் கம்புகளை ஊன்றுகோலாக பயன்படுத்தி முட்டுக்கொடுக்க வேண்டும். நீர்பாசனம் மற்றும் உரமிடுதல் ஆகியவற்றை தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.
- போகலூர் யூனியன் கூட்டத்தில் பங்கேற்காத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றுதலைவர் கூறினார்.
- மேலாளர் ராமநாதன் நன்றி கூறினார்.
பரமக்குடி
ராமநாதபுரம் மாவட்டம் போகலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் போகலூர் யூனியன் கூட்டம் தலைவர் சத்யா குணசேகரன் தலைமையில் நடந்தது. துணைத்தலைவர் வக்கீல் பூமிநாதன் முன்னிலை வகித்தார். ஆணையாளர் சிவசாமி வரவேற்றார்.
இதில் துணைத் தலைவர் பூமிநாதன் பேசுகை யில், அரியகுடி, முத்துசெல்லா புரம், அ. புத்தூர், முஸ்லிம் குடியிருப்பு உட்பட பல்வேறு பகுதிகளில் ஒரு வரு டத்திற்கும் மேலாக காவிரி கூட்டுக் குடிநீர் வரவில்லை. இதனால் அந்த பகுதி மக்கள் குடிநீருக்காக சிரமப்பட்டு வருகின்றனர். விசேஷ நிகழ்ச்சிகளுக்கு கூட நாங்கள் ஊர்களுக்குள் நுழைய முடியவில்லை என்றார்.
அதற்கு பதில் அளித்த காவிரி கூட்டுக் குடிநீர் திட்ட உதவி பொறியாளர், சாலை அமைக்கும் பணியின் போது காவிரி குடிநீர் குழாய் உடைந்துள்ளது. அதை சீரமைப்பதற்காக டெண்டர் விடப்பட்டு முடி யும் நிலையில் உள்ளது. கூடிய விரைவில் சரி செய்யப்படும் என்றார்.
தலைவர் சத்யா குணசேகரன் பேசுகையில், 15-வது நிதி குழு மூலம் ரூ.49 லட்சம் மதிப்பீட்டில் அத்தியாவசிய பணிகள் நடைபெற உள்ளது. யூனி யன் கூட்டத்திற்கு பள்ளி கல்வித்துறை, மின்வாரிய துறையில் இருந்து அதி காரிகள் வருவது கிடை யாது. பலமுறை வலியுறுத்தியும் அலட்சியமாக உள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கலெக்டருக்கு பரிந்துரை செய்ய வேண்டும் என்றார்.
கவுன்சிலர் காளிதாஸ் பேசுகையில், உரத்தூர் முதல் எஸ்.கொடிக்குளம் செல்லும் சாலை, அனுமனேரி முதல் கோரைக்குளம் செல்லும் சாலை மிகவும் சேதம் அடைந்துள்ளது. இதனால் பள்ளி மாணவர்கள் சிரமப்படுகின்றனர். இருசக்கர வாகன ஓட்டிகளும் அவதிப்படுகின்றனர். ஆகவே அந்த சாலையை சீரமைத்து கொடுக்க வேண்டும் என்றார்.
இந்த கூட்டத்தில் ஒன்றிய கவுன்சிலர்கள் தேன்மொழி, முருகேஸ்வரி, காளிஸ்வரி ஆகியோர் கலந்து கொண்ட னர், மேலாளர் ராமநாதன் நன்றி கூறினார்.
- சாலையோரங்களில் அதிகரிக்கும் பிளக்ஸ் போர்டுகளால் வாகன ஓட்டிகளின் கவனம் சிதறி விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
- கீழக்கரை நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா? என சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
கீழக்கரை
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை முக்கு ரோடு பகுதியில் தினமும் ஏர்வாடி, சாயல்குடி, தூத்துக்குடி, திருச்செந்தூர், கன்னியாகுமரி, நாகர்கோவில், ராமேசுவரம் ஆகிய ஊர்களுக்கு ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்லும் பிரதான சாலையாக உள்ளது.
கீழக்கரை முக்கு ரோடு திருப்பத்தில் விளம்பர பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. இதனால் வாகன ஓட்டிகளின் கவனம் சிதறி விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. அனுமதியின்றி பேனர்கள் வைக்கும் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று ராமநாதபுரம் கலெக்டர் அறிவித்த நிலையில் கீழக்கரையில் பிளக்ஸ் போர்டு ஆக்கிரமிப்பு அதிகரித்து வருகிறது.
சென்னையில் பிளக்ஸ் பேனர் விழுந்து பெண் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. அதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் பிளக்ஸ் பேனர்கள் வைப்பதற்கு ஐகோர்ட்டு தடை விதித்துள்ளது. இதனையும் பொருட்படுத்தாமல் பலரும் பிளக்ஸ் பேனர்களை வைத்து வருகின்றனர். இதனை நகராட்சி நிர்வாகம், வருவாய்த்துறையினர் நடவடிக்கை எடுக்கா மல் மெத்தனம் காட்டி வருகின்றனர்.
விதிமுறை மீறி பிளக்ஸ் பேனர்கள் வைப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.