என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சொத்துவரி"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • முதல் அரையாண்டுக்கான சொத்துவரி செப்டம்பர் மாதம் செலுத்தி இருக்க வேண்டும்.
    • தற்போது 2-வது அரையாண்டு நடந்து வருகிறது.

    சென்னை:

    சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள வீடுகள், வணிக கட்டிடங்கள் மூலம் பெறப்படும் சொத்துவரி மாநகராட்சிக்கு முக்கிய வருவாயாக உள்ளது. வருடத்திற்கு 2 முறை அரையாண்டு வீதம் சொத்து வரி வசூலிக்கப்படுகிறது.

    முதல் அரையாண்டுக்கான சொத்துவரி செப்டம்பர் மாதம் செலுத்தி இருக்க வேண்டும். தற்போது 2-வது அரையாண்டு நடந்து வருகிறது. முதல் அரையாண்டில் சொத்து வரி செலுத்தாதவர்களுக்கு அபராதம் இல்லாமல் கட்ட இன்று (15-ந் தேதி) வரை மாநகராட்சி அவகாசம் கொடுத்து இருந்தது.

    நாளையில் இருந்து செலுத்த வேண்டிய தொகைக்கு அபராதம் சேர்த்து வசூலிக்கப்படும்.

    இதற்கிடையில் பொதுமக்கள் ஆன்லைன் மற்றும் நேரடியாக சொத்துவரி செலுத்து வருகின்றனர்.

    ஆனாலும் சிலர் இறுதி நாளான இன்று சொத்துவரி செலுத்தினர். மாநகராட்சி சொத்துவரி மையங்களிலும், வங்கிகள் மற்றும் இணைய தளம் வழியாகயும் செலுத்தினார்கள். அபராதத்தை தவிர்க்கும் வகையில் சொத்தின் உரிமையாளர்கள் இன்று கடைசி நேரத்தில் வரி செலுத்தி வருகிறார்கள்.

    இது குறித்து மாநகராட்சி வருவாய் அதிகாரிகள் கூறும்போது, மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரியை காலத்திற்குள் செலுத்தி அபராதத்தை தவிர்க்க வேண்டும். முதல் அரையாண்டு கால சொத்து வரி இன்று இரவு வரை ஆன்லைனில் செலுத்தலாம். நாளை முதல் அபராதம் வசூலிக்கப்படும்.

    மேலும் பெரும் தொகையை நீண்ட காலமாக செலுத்தாமல் இருக்கும் சிலர் மீது அதிரடியாக பல்வேறு நடவடிக்கையும் தொடர்கிறது. எனவே மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரியை செலுத்தி மேல் நடவடிக்கையை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறோம் என்றனர்.

    • ராஜபாளையம் நகராட்சியில் சொத்துவரி குறைக்கப்படும் தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. தகவல் தெரிவித்துள்ளார்.
    • இதுகுறித்த அறிவிப்பு சில நாட்களில் வெளியாகும்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் எம்.எல்.ஏ. தங்கபாண்டியன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ராஜபாளையம் நகராட்சியில் சொத்துவரி குறைப்பது தொடர்பாக அமைச்சர் கே.என்.நேருவையும், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் அரசு கூடுதல் தலைமை செயலாளரையும், அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

    சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நேரத்தில் அரசு கூடுதல் தலைமை செயலாளரை நான் நேரில் சந்தித்து ராஜபாளையம் நகராட்சியில் சொத்து வரி குறைப்பது தொடர்பாக வலியுறுத்தினேன்.

    அதற்கு அவர் இன்னும் சில தினங்களில் ராஜபா ளையம் நகராட்சியில் சொத்து வரி குறைக்க அரசாணை வெளியிடப்படும் என்றார். ஆகவே அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரனின் முயற்சியால் வருகிற ஏப்ரல் ராஜபாளையம் ெரயில்வே மேம்பாலம் எவ்வாறு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வரவுள்ளதோ, எவ்வாறு குடிநீர் கட்டணம் குறைக்கப்பட்டதோ, அதேபோல் இன்னும் சில தினங்களில் ராஜபாளையம் நகராட்சியில் சொத்துவரி குறைக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஏப்ரல் 30-ந் தேதிக்குள் செலுத்துபவர்களுக்கு வரி தள்ளுபடி செய்யப்படும்.
    • இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள வேண்டுமாறு தெரிவித்துள்ளார்.

    வெள்ளகோவில் :

    வெள்ளகோவில் நகராட்சி ஆணையாளர் ஆர்.மோகன்குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- வெள்ளகோவில் நகராட்சி பகுதியில் உள்ள பொதுமக்கள் தங்களது 2023- 2024ம் நிதியாண்டிற்கான, சொத்து வரியை இந்த மாதம் ஏப்ரல் 30-ந் தேதிக்குள் செலுத்துபவர்களுக்கு 5 சதவீத வரி தள்ளுபடி செய்யப்படும், எனவே இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள வேண்டுமாறு தெரிவித்துள்ளார்.

    • தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சிகள் விதிகள் 2023 நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
    • டிஜிட்டல் பரிவர்த்தனை வாயிலாக சொத்துவரி செலுத்தவும் வழிவகை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் பவன்குமார் கிரியப்பனவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சிகள் சட்டம் 1998-க்கு திருத்தங்கள் ேமற்கொள்ளப்பட்டு 13.4.2023 முதல் தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சிகள் விதிகள்2023 நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சிகள் சட்டம்1998 பிரிவு 84(1)ல் அரையாண்டுக்கான சொத்துவரியினை முதல் 30 நாட்களுக்குள் செலுத்தும் சொத்து உரிமையாளர்களுக்கு, 5 சதவீத ஊக்கத் தொகை அதிகபட்ச மாகரூ.5,000 வரை வழங்கப்படும்.

    அதன்படி சொத்து உரிமையாளர்கள் தங்களது 2023-24 ஆண்டின் முதல்அரையாண்டிற்கான சொத்துவரியினை ஏப்ரல் 30-ந் தேதிக்குள் செலுத்தும் சொத்து உரிமையாளர்கள் ஊக்கத்தொகை பெற தகுதியுடையவர் ஆகிறார்கள். எனவே, ஏப்ரல் 30-ந்தேதிக்குள் சொத்துவரியினை செலுத்தும் சொத்து உரிமையாளர்களுக்கு 5 சதவீதம் ஊக்கத் தொகை வழங்கப்படும்.சொத்துவரியினை, சொத்து உரிமையாளர்கள் செலுத்த பல்வேறு வகைகளான விழிப்புணர்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி சொத்து உரிமையாளர்களுக்கு குறுந்தகவல் அனுப்புதல், குரல் ஒலி அழைப்புகள், திருப்பூர்மாநகராட்சியின் அறிவிப்பு பலகைகளில் சொத்துவரி செலுத்துவது தொடர்பாக விழிப்புணர்வு செய்தி வெளியிடுதல், குப்பை அகற்றும் வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு செய்தல், பண்பலை அலைவரிசை மூலம் சொத்துவரி செலுத்தக் கோரி ஒலிப்பரப்பு செய்தல், செய்தித்தாள்களில் விளம்ப ரங்கள் வெளியிடுதல் ஆகியவற்றின் மூலம் விழிப்புணர்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    சொத்து உரிமையாள ர்கள், சொத்துவரியினை தங்களது இல்லம் தேடி வரும்வரிவசூலிப்பாளர்கள், திருப்பூர் மாநகராட்சி அலுவலகங்களில் அமைந்து ள்ள அரசு இ-சேவை மையங்கள் ஆகியவற்றில் கடன் மற்றும் பற்று அட்டை, காசோலை மற்றும்வரை வோலை மூலமாகவும், திருப்பூர் மாநகராட்சி இணையதளம், NEFT and RTGS ஆகியவற்றின் மூலமாக டிஜிட்டல் பரிவர்த்தனை வாயிலாக சொத்துவரி செலுத்தவும் வழிவகை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    எனவே திருப்பூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட சொத்து உரிமையாளர்கள் தங்களது சொத்துவரியினை ஏப்ரல் 30 -ந் தேதிக்குள் செலுத்தி 5 சதவீதம் ஊக்கத்தொகை யினை பெற்றிடுமாறும், திருப்பூர் மாநகரத்திற்கு மேற்கொள்ளப்படும் வளர்ச்சி பணிகளில் தங்களது பங்களிப்பினை வழங்க மாநகராட்சி ஆணையாளர் பவன்குமார் ஜி.கிரியப்பனவர் தெரிவித்துள்ளார்.

    • வருகிற 30-ந் தேதிக்குள் சொத்துவரி செலுத்தும் உரிமையாளர்களுக்கு 5 சதவீத ஊக்கத்தொகை வழங்கப்படும்.
    • மாநகராட்சி மேயர் தெரிவித்துள்ளார்.

    மதுரை

    மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்ப தாவது:-

    தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சிகள் சட்டம் 1998-க்கு திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு 13.4.2023 முதல் தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சிகள் விதிகள் 2023 நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சிகள் சட்டம் 1998 பிரிவு 84(1)ல், அரை யாண்டுக்கான சொத்துவரியை முதல் 30 நாட்களுக்குள் செலுத்தும் உரிமையாளர்களுக்கு 5 சதவீதம் ஊக்கத் தொகை அதிகபட்சமாக ரூ.5 ஆயிரம் வரை வழங்கப்படும்.

    அதன்படி மதுரை மாநகராட்சி பகுதிகளில் உள்ள உரிமையாளர்கள் தங்களது 2023-24 ஆண்டின் முதல் அரையாண்டிற்கான சொத்துவரியை வருகிற 30-ந் தேதிக்குள் செலுத்தும் உரிமையாளர்களுக்கு ஊக்கத்தொகை பெற தகுதியுடையவர் ஆகிறார்கள். ஏப்ரல் 30-ந் தேதிக்குள் சொத்துவரி செலுத்தும் உரிமையாளர்களுக்கு 5 சதவீதம் ஊக்கத் தொகை வழங்கப்படும்.

    மதுரை மாநகராட்சி 100 வார்டு பகுதிகளில் உள்ள உரிமையாளர்களுக்கு குறுந்தகவல் அனுப்புதல், மாநகராட்சி மைய அலுவ லகம் மற்றும் 5 மண்டல அலுவலகங்களில் அறிவிப்பு பலகைகளில் விழிப்புணர்வு ஏற்படுத்துதல், பொதுமக்கள் அதிகளவில் கூடும் இடங்களில் பதாகைகள் வைத்தல், ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு செய்தல், ரேடியோ, செய்தித்தாள்கள் மற்றும் உள்ளுர் கேபிள் தொலைக்காட்சி வாயிலாக சொத்துவரியை உரிமையாளர்கள் செலுத்து வதற்கு விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    சொத்து உரிமையாளர்கள், சொத்துவரியை மதுரை மாநகராட்சி அனைத்து வரி வசூல் மையங்கள் மற்றும் https://tnurbanepay.tn.gov.in என்ற இணையதளம் மற்றும் "TN Urban Esevai" செயலி வாயிலாக வரி செலுத்து வதற்கு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    மதுரை மாநகராட்சி 100 வார்டு பகுதிகளில் உள்ள சொத்து உரிமையாளர்கள் தங்களது சொத்துவரியை வருகிற 30-ந் தேதிக்குள் செலுத்தி 5 சதவீத ஊக்கத் தொகையை பெற்றிடுமாறும், மதுரை மாநகராட்சி பகுதி களில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சிப் பணிகளில் தங்களது பங்களிப்பை வழங்குமாறு மதுரை மாநகராட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • எந்திரத்தில் காசோலை மற்றும் வரைவோலை மூலம் எளிதாக சொத்து வரி செலுத்த முடியும்.
    • தானியங்கி எந்திரங்கள் வட்டார துணை கமிஷனர்களின் அலுவலகங்களிலும் நிறுவப்பட்டுள்ளது.

    சென்னை:

    சென்னை மாநகராட்சி பகுதியை சுற்றியுள்ள சொத்து உரிமையாளர்கள் தங்களது நிலுவை சொத்து வரியை உடனடியாக செலுத்த சென்னை மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. வரி சலுகை, ஊக்கத்தொகை உள்ளிட்ட பல்வேறு முன்னெடுப்புகளையும் எடுத்து வருகிறது.

    அந்த வகையில், சொத்து உரிமையாளர்கள் தங்களது சொத்து வரியை இணையதளம், இ-சேவை மையம், பாரத் பில் பேமன்ட் முறை, இணைய வங்கி, கியூ-ஆர் கோர்டு, காசோலை மற்றும் வரைவோலை மூலம் செலுத்தி வருகிறார்கள்.

    இந்நிலையில், சொத்து உரிமையாளர்கள் தங்களது சொத்து வரியை தானியங்கி எந்திரம் மூலம் செலுத்தும் நடைமுறையை சென்னை மாநகராட்சி நேற்று தொடங்கியது. சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டிட வளாகத்தில் தானியங்கி எந்திரத்தின் செயல்பாட்டை மாநகராட்சி மேயர் பிரியா தொடங்கிவைத்தார்.

    பெடரல் வங்கியுடன் இணைந்து சென்னை மாநகராட்சி இதை நிறுவியுள்ளது. இந்த தானியங்கி எந்திரத்தில் காசோலை மற்றும் வரைவோலை மூலம் எளிதாக சொத்து வரி செலுத்த முடியும். இதற்கான ரசீதும் இந்த எந்திரத்தில் பெற்றுக்கொள்ளவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த தானியங்கி எந்திரங்கள் வட்டார துணை கமிஷனர்களின் அலுவலகங்களிலும் நிறுவப்பட்டுள்ளது.

    இந்த நிகழ்ச்சியில் துணை மேயர் மகேஷ் குமார், கமிஷனர் ககன்தீப் சிங் பேடி, துணை கமிஷனர் விசு மகாஜன், மாமன்ற ஆளுங்கட்சி தலைவர் ராமலிங்கம் மற்றும் வருவாய்துறை உயர் அலுவலகர்கள் கலந்துகொண்டனர்.

    • விபரங்களை வாட்ஸ் அப்பில் பகிர மாநகராட்சி கூறி உள்ளதால் பொதுமக்கள் தயக்கம் காட்டி வருகிறார்கள்.
    • ஆவடி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு உள்ளது. ஆனால் குடியிருப்பாளர்களின் தரவுத் தளம் புதுப்பிக்கப்படவில்லை.

    திருநின்றவூர்:

    சென்னை புறநகர் பகுதியான ஆவடி மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகள் வேகமாக வளர்ச்சி அடைந்து வருகின்றன. இதைத்தொடர்ந்து கடந்த 2019-ம் ஆண்டு ஆவடி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது.

    இந்நிலையில் ஆவடி மாநகராட்சி பகுதியில் வசிக்கும் பொதுமக்களில் சொத்துவரி செலுத்துபவர்கள் தங்களது ஆதார், பான் எண் உள்ளிட்ட விபரங்களை அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது.

    அந்த கடித்தத்தில் சொத்து வரி செலுத்துபவர்கள் தங்களது செல்போன் எண், குடும்ப அட்டை எண், ஆதார், இ- மெயில் முகவரி, பான் எண், வணிக நிறுவனங்களின் ஜி.எஸ்.டி. எண் மற்றும் மின் இணைப்பு எண் உள்ளிட்ட விபரங்களை தெரிவிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

    மேலும் பூர்த்தி செய்யப்பட்ட அந்த கடிதத்தை புகைப்படம் எடுத்து குறிப்பிடப்பட்டுள்ள தொலைபேசி எண்ணுக்கு வாட்ஸ்அப்பில் அனுப்ப உத்தரவிட்டு உள்ளனர்.

    ஆனால் விபரங்களை வாட்ஸ் அப்பில் பகிர மாநகராட்சி கூறி உள்ளதால் பொதுமக்கள் தயக்கம் காட்டி வருகிறார்கள். மேலும் இந்த விபரம் சேகரிப்பு எதற்காக நடத்தப்படுகிறது என்ற தெளிவான விளக்கமும் அறிவிக்கப்படவில்லை. இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் பொது மக்கள் தொடர்ந்து குழப்பத்தில் உள்ளனர்.

    இது குறித்து ஆவடியை சேர்ந்த ஒருவர் கூறும்போது, 'சொத்துவரி செலுத்துவோரிடம் இருந்து இது போன்ற விவரங்கள் எதற்காக கேட்கப்படுகின்றன என்று மாநகராட்சி தெளிவான விளக்கம் கூறவில்லை.

    மின்இணைப்பு எண் மற்றும் பான் எண் ஆகியவற்றை வழங்க பொது மக்கள் தயங்குகின்றனர்' என்றார்.

    இதுகுறித்து ஆவடி மாநகராட்சி கமிஷனர் தர்பகராஜ் கூறும்போது, 'ஆவடி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு உள்ளது. ஆனால் குடியிருப்பாளர்களின் தரவுத் தளம் புதுப்பிக்கப்படவில்லை. பல சொத்துக்கள் வேறு ஒருவருக்கு மாறி உள்ளது. இதுபற்றிய சரியான விபரங்கள் இல்லை.

    மேலும் எங்களிடம் உள்ள பெரும்பாலான தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ள முடியவில்லை. எனவேதான் தற்போதைய சரியான விபரங்களை கேட்டு பதிவு செய்து வருகிறோம். பொது மக்கள் இது குறித்த விபரங்களை தயக்கம் இல்லாமல் அளிக்கலாம் என்றார்.

    • பல கோடி ரூபாய் வரி நிலுவை இருந்த பொழுதிலும் எந்த ஒரு அனுமதி ஆணையும் இல்லாமல் இந்த சொத்துவரி கணக்குகள் நீக்கப்படுகின்றன.
    • சொத்துவரி நிலுவையில் இருக்கும் பட்சத்தில் முறையாக அனுமதி ஆணை இல்லாமல் நீக்கப்பட்ட கணக்குகளை முழுமையாக ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்.

    சென்னை:

    சென்னை மாநகராட்சி கூட்டம் மேயர் பிரியா தலைமையில் ஆணையாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் முன்னிலையில் நடைபெற்றது. கூட்டத்தில் மாநகராட்சி நிலைக்குழு கணக்கு மற்றும் தணிக்கை குழு தலைவர் க. தனசேகரன் பங்கேற்று பேசியதாவது:-

    எனது தணிக்கை குழு ஆய்வின் போது அனைத்து மண்டலங்களிலும் வருடம் தோறும் ஆயிரக்கணக்கான சொத்து வரி கணக்குகள், சொத்து இணைப்பு, இடித்து புதிய கட்டிடம் கட்டுதல், ராங் பிராப்பர்டி போன்ற காரணங்களுக்காக நீக்கப்படுகின்றன.

    இக்கணக்குகளில் பல கோடி ரூபாய் வரி நிலுவை இருந்த பொழுதிலும் எந்த ஒரு அனுமதி ஆணையும் இல்லாமல் இந்த சொத்துவரி கணக்குகள் நீக்கப்படுகின்றன. உதாரணத்திற்கு மண்ட லம் 1-ல் 2019-20 நிதியாண்டில் சுமார் 682 வரிக் கணக்குகள் நீக்கப்பட்டு உள்ளது. இவற்றின் வரி நிலுவை தொகை சுமார் 3.47 கோடிகளாகும்.

    இதேபோல் 2020-21 நிதியாண்டில் மண்டலம் 3-ல் 517 சொத்துவரி கணக்குகள் நீக்கப்பட்டுள்ளதன் நிலுவை தொகை ரூ. 68.61 லட்சத்துக்கு மேல் உள்ளது.

    இதே நிலை அனைத்து மண்டலங்களிலும் காணப்படுகிறது. அதனால் ஆணையர் அவர்கள் சொத்துவரி நிலுவையில் இருக்கும் பட்சத்தில் முறையாக அனுமதி ஆணை இல்லாமல் நீக்கப்பட்ட கணக்குகளை முழுமையாக ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்.

    மண்டலம் 3-ல் 2017-18 நிதியாண்டில் இருந்து 12 அரையாண்டுகளுக்கு மேலாக விஜய் ராஜ் சுரானா, தினேஷ் சந்த் சுரானா, கௌதம் ராஜ் சுரானா ஆகியோர் சென்னை மாநகராட்சிக்கு சொத்துவரி செலுத்தாமல் மொத்தமாக சுமார் ரூ. 18.83 லட்சம் நிலுவையாக வைத்து உள்ளனர். இதனை உடனடியாக வசூலிக்க சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு ஆணையா ளர் உத்தரவிட வேண்டும். மண்டலம் 2-ல், தணிக்கை குழு களஆய்வில் அந்த மண்டலத்தில் இருக்கும் சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தின் பல ஏக்கர் நிலங்களின் விவரங்கள் மற்றும் அவைகளின் சொத்து வரி நிலுவைகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதனை அடுத்து அந்நிறுவனம் ஆக்கிரமித்து வைத்திருந்த சுமார் 100 கோடி மதிப்புள்ள 3.3 ஏக்கர் நிலங்கள் மீட்கப்பட்ட செய்தி சில தினங்களில் பல்வேறு நாளிதழ்களில் வெளிவந்தன. இந்த துரித நடவடிக்கையை மேற்கொண்ட சென்னை மாநகராட்சி வடக்கு வட்டார துணை ஆணையர் சிவகுரு பிரபாகரன், மண்டல குழு தலைவர் ஆறுமுகம், மண்டல உதவி ஆணையர் கோவிந்தராஜ், உதவி செயற்பொறியாளர் தேவேந்திரன், உதவி பொறியாளர் கவிதா ஆகியோருக்கு எனது நன்றியினை தெரிவித்து கொள்கிறேன்.

    அதேபோல் சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தின் கல்வி அறக்கட்டளையால் நடத்தப்பட்டு வரும் பாலிடெக்னிக் கல்லூரியின் காலிமனை சொத்து வரி நிதியாண்டு 2020-21 வரை சுமார் ரூ.1.3 கோடிக்கு மேல் நிலுவை உள்ளது என தணிக்கை ஆய்வில் கண்ட றியப்பட்டது. இதற்கு மண்டல அதிகாரிகள் இதனை வசூலிக்கும் நடவடிக்கைகளை எடுத்து வருவதாக தெரிவித்தனர். அதனால் இந்த பெரும் நிலுவை தொகை முழுமையாக வசூலிக்க ஆணையர் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    இதுமட்டுமல்லாமல், சுமார் 2.58 லட்சம் சதுரடிக்கு மேல் இயங்கி வரும் இந்த பாலிடெக்னிக் கல்லூரிக்கு நிதியாண்டு 2020-21 வரை சொத்துவரி எதுவும் விதிக்கப்படவில்லை என தெரிய வந்துள்ளது. மேலும் சொத்துவரி விதிக்கப்பட்டிருந்தால் 2020-21 வரை சுமார் ரூ.29,92,320 வசூலிக்கப்பட்டிருக்க வேண்டும் எனவும் கணக்கிடப்பட்டு உள்ளது. அதனால் இந்த கல்லூரி சொத்து வரி செலுத்துவதில் இருந்து ஏதேனும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளதா என்று தெரியவில்லை. அப்படி இல்லையென்றால் சொத்துவரி வசூலிக்க ஆணையர் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    தணிக்கை குழு ஆய்வின் பொழுது அரசின் விதிகளுக்கு மாறாக மண்டல அலுவலர், மண்டல நல அலுவலர், உதவி வருவாய் அலுவலர், உதவி கோட்ட மின்பொறியாளர் அதிகாரிகள் செல்ப் செக் மூலம் பல கோடி ரூபாய் ரொக்கமாக எடுத்து வருவது தெரியவந்து உள்ளது. மேலும் இதனை செலவு செய்ததற்கான ஆதாரம் மற்றும் செலவு சீட்டுகள் முழுமையாக தணிக்கைக்கு அளிக்கப்படுவதும் இல்லை. உதாரணத்திற்கு மண்டலம் 9-ல் நிதி யாண்டு 2020-21-ல் வெறும் 37 செல்ப் செக் மூலம் சுமார் ரூ 6.34 கோடிக்கு மேல் ரொக்கம் எடுக்கபட்டுள்ளது. அதாவது ஒரு செல்ப் செக் மூலம் சராசரியாக ரூ. 17.13 லட்சம் ரொக்கமாக எடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் நிதியாண்டு 2019-20-ல் சுமார் ரூ.2.3 கோடிக்கு மேல் செல்ப் செக் மூலம் பணம் எடுக்கபட்டுள்ளது. இன்றுவரை இதனை முறையாக தணிக்கை ஆய்வுக்கு உட்படுத்தவும் இல்லை. எனவே செல்ப் செக் மூலம் பணம் எடுக்கும் முறையை உடனடியாக நிறுத்த அதிகாரிகளுக்கு ஆணையர் உத்தரவிட வேண்டும்.

    மேலும் இதுவரை செல்ப் செக் மூலம் எடுக்கப்பட்ட பணம் முறையாக தணிக்கை செய்யப்பட்டதை உறுதி செய்து அதன் முழு விவரத்தை தணிக்கை குழுவிற்கு சமர்ப்பிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்.

    மண்டலம் 9-ல், நிதி யாண்டு 2020-21-ல் 38 அம்மா உணவகங்களில் மொத்த வரவு ரூ. 1,55,34,200-ஆகவும், இதற்கான மொத்த செலவு சுமார் ரூ.9,54,51,092-ஆக உள்ளது. இதில் அரிசி, காய்கறி, மளிகை பொருட்கள் வாங் குவதற்கான செலவு ரூபாய் 4,62,67,592 ஆகவும், அம்மா உணவகங்களின் பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட தினக்கூலி மட்டும் சுமார் ரூபாய் 4,91,83,500-ஆகவும் உள்ளது.

    இப்படி 7 கோடியே 99 லட்சத்து 16 ஆயிரத்து 892 ரூபாய் வருவாயை விட மிக அதிகமாக செலவிடப்பட்டு உள்ளது தெரிய வந்துள்ளது. இந்த அதீத செலவீனத்தை முழுமையாக விசாரணைக்கு ஆணையர் உட்படுத்த வேண்டும்.

    தணிக்கை குழுவிற்கு தங்கும் விடுதிகள் குறித்து பல்வேறு புகார்கள் வந்து கொண்டிருக்கின்றன. அவற்றில் பெரும்பான்மையான தங்கும் விடுதிகள் முறையாக அரசின் வழி காட்டுதல்களை பின்பற்றுவதில்லை எனவும் முறையாக வரி விதிக்கப்படவில்லை எனவும் தெரிய வந்துள்ளது. அதனால் சென்னை மாநகராட்சி எல்லைக்குப்பட்ட அனைத்து தங்கும் விடுதிகள் முறையாக அரசின் விதிகள், மாநகராட்சியின் அனுமதி மற்றும் வரிகள் ஆகியவை முறையாக பின்பற்றபடுகின்றனவா என ஆய்வு மேற்கொள்ள அதிகாரிகளுக்கு ஆணையர் அறிவுறுத்த வேண்டும்.

    முதலமைச்சரின் சிங்கார சென்னை 2.0 திட்டதின் கீழ் சென்னை மாநகரை தூய்மையாக பராமரிக்க பல்வேறு நடவடிக்கைகளை மாநகராட்சி மேற்கொண்டு வந்தாலும் மாநகராட்சி முழுக்க வரையபட்டுள்ள சுவர் விளம்பரங்கள் இன்னும் முழுமையாக அழிக்கபடாமலும் மேலும் தினம் புது புது சுவர் விளம்பரங்கள் வரையப்பட்டும் வருகின்றன. எனவே ஆணையர் இந்த சுவர் விளம்பரங்களை முழுமையாக அழித்து தமிழ்நாட்டின் கலாச்சாரத்தையும், வரலாற்று சிறப்புகளையும் குறிக்கும் வகையிலான கண்கவரும் வண்ண ஓவியங்கள் வரைய அரசு மற்றும் தனியார் கல்லூரி மாணவர்களுக்கு வாய்ப்பு வழங்கி நடவடிக்கைகளை துரித்த படுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • அனைத்து வகையிலும் கட்டணங்களை 100 முதல் 200 சதவீதம் வரை தமிழக அரசு உயர்த்தியுள்ளது.
    • விலை உயர்வுகள் அனைத்தும் திருமண நிகழ்ச்சிகளை நடத்தும் பொதுமக்களை கடுமையாக பாதிக்கும்.

    சென்னை:

    தமிழ்நாடு திருமண மண்டப உரிமையாளர்கள் சங்க கூட்டம் தலைவர் ஜான் அமல்ராஜ் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் சங்க நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். பின்னர் சங்க தலைவர் ஜான் அமல்ராஜ் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழகத்திலுள்ள சுமார் 7000 திருமண மண்டபங்களுக்கு தொடர்ச்சியாக சொத்து வரி, மின் கட்டணம், வணிக உரிம கட்டணம் என்று அனைத்து வகையிலும் கட்டணங்களை 100 முதல் 200 சதவீதம் வரை தமிழக அரசு உயர்த்தியுள்ளது.

    கொரோனா கால நஷ்டத்திலிருந்து இன்றளவும் மீள முடியாமல் திணறிக்கொண்டு இருக்கும் திருமண மண்டபங்கள் இவ்வாறான வரிகளால் திருமண மண்டப உரிமையாளர்கள் மண்டபங்களை பராமரிக்க முடியாமல், வங்கி கடனை செலுத்த முடியாமலும் மண்டபங்களை மூடும் தருவாய்க்கு வந்துவிட்டார்கள். இந்த விலை உயர்வுகள் அனைத்தும் திருமண நிகழ்ச்சிகளை நடத்தும் பொதுமக்களை கடுமையாக பாதிக்கும்.

    மேலும் திருமண மண்டபங்கள் மூடப்பட்டால் திருமண நிகழ்ச்சிகளில் ஈடுபடும் கேட்டரிங், நடேஸ்வரன், புகைப்படம், அலங்காரம், புரோகிதர்கள் என நேரடியாகவும் மறைமுகமாகவும் பல லட்சம் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு வேலையிழப்பு ஏற்படும். எனவே இது குறித்து தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.

    • தங்கள் வீட்டுக்கு கடைசியாக செலுத்திய சொத்துவரி ரசீது நகலை இணைக்க வேண்டும்.
    • விவரங்களுக்கு exweltup@tn.gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளலாம்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்ட முன்னாள் படைவீரர்கள் மற்றும் விதவையர்களின் சொந்த வீடு, அடுக்குமாடி போன்றவற்றின் சொத்துவரி குறித்த கணக்கெடுப்பு செய்யப்பட உள்ளது. எனவே திருப்பூர் மாவட்ட முன்னாள் படைவீரர்கள் மற்றும் விதவையர்கள் சர்வே படிவத்தை திருப்பூர் மாவட்ட முன்னாள் படைவீரர்கள் நல அலுவலகத்தில் பெற்று பூர்த்தி செய்து தங்கள் வீட்டுக்கு கடைசியாக செலுத்திய சொத்துவரி ரசீது நகலை இணைக்க வேண்டும்.

    பின்னர் உதவி இயக்குனர், மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகம், அறை எண்.23, 5-வது தளம், கலெக்டர் அலுவலக வளாகம், திருப்பூர் -641 604 என்ற முகவரிக்கு நேரிலோ, தபால் மூலமாகவோ வருகிற 8-ந் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 0421 2971127 என்ற தொலைபேசி எண்ணுக்கோ, exweltup@tn.gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ள வேண்டும் என்று கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.

    • சொத்து உரிமையாளர்களுக்கு எஸ்.எம்.எஸ். மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
    • 30-ந்தேதிக்கு பிறகு செலுத்தினால் 1 சதவீதம் அபராதம் கட்ட வேண்டும்.

    சென்னை:

    சென்னை மாநகராட்சிக்கு முக்கிய வருவாய் இனம் சொத்துவரியாகும். மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 13 லட்சம் சொத்து உரிமையாளர்கள் மூலம் இந்த வருவாய் கிடைக்கிறது.

    வீடுகள் மற்றும் வணிக வளாகங்கள், கடைகள் மூலம் ஆண்டுக்கு 2 முறை சொத்துவரி வசூலிக்கப்படுகிறது. கடந்த ஆண்டு சொத்துவரி உயர்த்தப்பட்ட பிறகு நடப்பு ஆண்டின் சொத்துவரி இலக்கு ரூ.1,600 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    முதல் அரையாண்டிற்கான சொத்துவரி செலுத்த வருகிற 30-ந்தேதி கடைசி நாளாகும். அந்த வகையில் இதுவரையில் ரூ.605 கோடி சொத்துவரி வசூலிக்கப்பட்டு உள்ளது. மீதமுள்ள ரூ.200 கோடியை வசூலிக்க வருவாய்த்துறை அதிகாரிகள், ஊழியர்கள், தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

    சொத்து உரிமையாளர்களுக்கு எஸ்.எம்.எஸ். மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டு வருகிறது. 30-ந் தேதிக்கு பிறகு செலுத்தினால் 1 சதவீதம் அபராதம் கட்ட வேண்டும். அதனால் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரியை உடனே செலுத்தி அபராதத்தை தவிர்க்குமாறு மாநகராட்சி அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.

    அதே வேளையில் நீண்ட காலமாக சொத்துவரி செலுத்தாமல் மாநகராட்சிக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தி வரும் சொத்து உரிமையாளர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை பாயப் போகிறது.

    கடந்த ஏப்ரல் மாதம் 13-ந்தேதி முதல் இதற்கான சட்ட விதி அமலுக்கு வந்துள்ளது. அதன்படி பல ஆண்டுகளாக சொத்துவரி செலுத்தாமல் 'டிமிக்கி' கொடுத்து வரும் வணிக நிறுவனங்கள், சொத்து உரிமையாளர்கள் மீது நடவடிக்கை பாய்கிறது.

    இதுகுறித்து வருவாய் அதிகாரிகள் கூறியதாவது:-

    நீண்டகாலமாக சொத்துவரி செலுத்தாமல் 100 பேர் இருக்கிறார்கள். அவர்கள் ரூ.120 கோடி சொத்து வரி செலுத்த வேண்டும். அவர்களுக்கு பலமுறை அவகாசம் கொடுக்கப்பட்டது. உரிய முறையில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் சொத்துவரி செலுத்தாமல் இருந்து வருகின்றனர். நீண்ட காலமாக சொத்துவரி கட்டாமல் மாநகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தி வரும் இவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க தற்போது முடிவு செய்யப்பட்டுள்ளது.

    புதிய சட்ட விதிகளின்படி அவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்து ஏலம் விட்டு அதன் மூலம் சொத்துவரியை பெற நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

    எனவே 30-ந் தேதிக்குள் சொத்துவரி செலுத்தாவிட்டால் சொத்துக்களை பறிமுதல் செய்யும் நடவடிக்கை தொடரும். இது முதல்முறையாக செயல்படுத்தப்படுகிறது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • செல்போனில் ஸ்கேன் செய்து பொதுமக்கள் தங்களது குறைகளையும் தெரிவிக்கும் வகையில் புதிய செயலி தயார் செய்யப்பட்டு இருக்கிறது.
    • பரிசோதனை அடிப்படையில் முதல் கட்டமாக 48-வார்டு பகுதியில் அனைத்து வீடுகளிலும் கியூ.ஆர். கோடு ஒட்டப்பட்டு வருகிறது.

    தாம்பரம்:

    தாம்பரம் மாநகராட்சியில் மொத்தம் 70 வார்டுகள் உள்ளன. மாநகராட்சியில் சொத்துவரி, குடிநீர் உள்ளிட்ட சேவைகளுக்கு கியூ.ஆர். கோடு அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

    அதனை செல்போனில் ஸ்கேன் செய்து பொதுமக்கள் தங்களது குறைகளையும் தெரிவிக்கும் வகையில் புதிய செயலி தயார் செய்யப்பட்டு இருக்கிறது.

    புதிதாக உருவாக்கப்பட்டு உள்ள இந்த செயலி தாம்பரம் மாநகராட்சியின் 48-வது வார்டில் சோதனை முறையில் அறிமுகம் செய்து உள்ளனர். இந்த வார்டில் உள்ள 2976 குடியிருப்புகளில் முதல் கட்டமாக 1500 குடியிருப்புகளில் கியூ.ஆர். கோடு குறியீடு அட்டை ஒட்டப்பட்டு இருக்கிறது. இதனை முக்கியமாக திடக்கழிவு மேலாண்மைக்காகவும் பயன்படுத்த திட்டமிட்டு உள்ளனர்.

    துப்புரவு ஊழியர்கள் ஒரு கட்டிடத்தில் ஒட்டப்பட்டு உள்ள கியூ.ஆர். கோடை ஸ்கேன் செய்து அங்கிருந்து சேகரிக்கப்படும் குப்பை தரம் பிரிக்கப்பட்டதா? இல்லையா? என்பதையும் பதிவிட முடியும். இதன் மூலம் பொதுமக்களுக்கு அன்றாடம் கிடைக்கக்கூடிய சேவை சரியாக செய்யப்படுகிறதா? என்பதை கண்காணிக்க முடியும். மேலும் பொதுமக்கள் தங்கள் பகுதியில் உள்ள குறைகள், மருத்துவம், குடிநீர், சாலை வசதி உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் புகார் அளிக்கும் வகையில் இந்த செயலி உருவாக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறும்போது, தாம்பரம் மாநகராட்சியில் சொத்துவரி, குடிநீர்வரி உள்ளிட்ட அனைத்து சேவைகளுக்கும் ஒவ்வொரு வீடுகளுக்கு தனித்தனியாக கியூ.ஆர். கோடு உருவாக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரியை செலுத்தலாம். மேலும் இந்த கியூ.ஆர். கோடை ஸ்கேன் செய்து தங்கள் பகுதியில் உள்ள குறைகளையும் புகாராக தெரிவிக்க முடியும்.

    பரிசோதனை அடிப்படையில் முதல் கட்டமாக 48-வார்டு பகுதியில் அனைத்து வீடுகளிலும் கியூ.ஆர். கோடு ஒட்டப்பட்டு வருகிறது. இதன் பின்னர் மாநகராட்சி முழுவதும் கியூ.ஆர். கோடு ஒட்டப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும். இதன் மூலம் பொதுமக்களின் வீண் அலைச்சல், நேர விரயம் தவிர்க்கப்படும் என்றார்.

    ×