என் மலர்
நீங்கள் தேடியது "திட்டம்"
- கலெக்டர் அரவிந்த் பேச்சு
- மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு த்துறையின் சார்பாக அமைக்கப்பட்டிருந்தது
நாகர்கோவில்:
குழித்துறை நகராட்சிக்கு ட்பட்ட பம்மம் பகுதியில் தமிழக அரசின் சாதனைகள் மற்றும் சிறப்பு திட்டங்கள் குறித்து பொதுமக்கள் அறிந்து கொண்டு பயன்பெறும் வகையில், மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு த்துறையின் சார்பில் புகைப்படக்கண்காட்சி இன்று நடைபெற்றது.
இது குறித்து மாவட்ட கலெக்டர் அரவிந்த் தெரிவித்ததாவது:-
தமிழக அரசு ஏழை எளிய கிராமப்புற மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
முதல்-அமைச்சர் தொடங்கி வைத்த திட்டங்களான, முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தில் சிகிச்சை அளிக்கும் திட்டம், மக்களை தேடி மருத்துவம், கூட்டுறவு வங்கிகளில் 5 பவுன் நகைக்கடன் தள்ளுபடி திட்டம், நரிக்குரவர்கள் மற்றும் இருளர் இனத்தை சேர்ந்தவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கியது, கன்னியாகுமரி மாவட்டத்தில் கனம ழையினால் பாதிக்கப்பட்ட இடங்கள் போர்க்கால அடிப்படையில் சீரமைக்க ப்பட்டதை நேரில் பார்வையிட்டது.
இன்னுயிர் காப்போம்,– நம்மைக் காக்கும் 48 திட்டம், விவசாயிகளுக்கு புதிய மின் இணைப்புகள் வழங்கும் திட்டம், கலைஞரின் வரும்முன் காப்போம் திட்டம், நமக்கு நாமே திட்டம் மற்றும் நகர்ப்புற வேலைவாய்ப்புத்திட்டம்,
காணி பழங்குடியினர்க ளுக்கு நிலஉரிமை ஆணை வழங்கியது, மீனவர்களின் நலன் கருதி பனிக்கட்டி நிலையங்களை திறந்து வைத்தல், மகளிர் சுய உதவிக்குழுவினர்களுக்கு கடனுதவிகள் வழங்கியது,
முதல்-அமைச்சரின் ஊட்டம் தரும் காய்கறித் தோட்டம் திட்டம், புதிய வேளாண் காடு வளர்ப்புத் திட்டம், மின்சாரத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பணியின்போது காலமானவர்களின் வாரிசுதாரர்களுக்கு பணிநியமன ஆணை வழங்கியது, பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு இலவச மிதிவண்டிகள் வழங்கியது, காலை உணவுத்திட்டம்,
புதுமைப்பெண் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் குறித்து மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு த்துறையின் சார்பாக அமைக்க ப்பட்டிருந்த புகைப்பட கண்காட்சியினை பொதுமக்கள் பார்வையிட்டு அரசின் திட்டங்களை தெரிந்துகொண்டு அனைத்துத் திட்டத்தின்கீழ் வழங்கப்படும் அரசு நலத்திட்ட உதவிகளை பெற்று பயன்பெற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- பஜாஜ் அலையன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனங்களுடன் இணைந்து, ஆண்டிற்கு ரூ.396-ல், ரூ10 லட்சம் மதிப்புள்ள விபத்து காப்பீட்டு திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.
- 18 வயது முதல் 65 வயது வரை உள்ளவர்கள் இந்த காப்பீட்டு திட்டத்தில் சேரலாம்.
பரமத்தி வேலூர்:
நாமக்கல் மாவட்ட அஞ்சல் கோட்ட கண்கா ணிப்பாளர் ரவிச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியின் டாடா ஏ.ஐ.ஜி ஜெனரல் இன்சூரன்ஸ் மற்றும் பஜாஜ் அலையன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனங்களுடன் இணைந்து, ஆண்டிற்கு ரூ.396-ல், ரூ10 லட்சம் மதிப்புள்ள விபத்து காப்பீட்டு திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.
18 வயது முதல் 65 வயது வரை உள்ளவர்கள் இந்த காப்பீட்டு திட்டத்தில் சேரலாம்.விண்ணப்ப படிவம், அடையாள, முகவரி சான்றின் நகல்கள் போன்ற எந்த விதமான காகித பயன்பாடுமின்றி, தபால்காரர் கொண்டு வரும் ஸ்மார்ட் போன், விரல் ரேகை மூலம், வெறும் 5 நிமிடங்களில் முற்றிலும் டிஜிட்டல் முறையில் இந்த பாலிசி வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தின் சிறப்பம்சங்களாக ரூ.10லட்சம் மதிப்புள்ள விபத்து காப்பீடு மற்றும் விபத்தினால் ஏற்படும் மருத்துவ செலவுகளில் உள்நோயாளி செலவு களுக்கு அதிகபட்சம் ரூ.60 ஆயிரம் வரையும், புறநோயாளி செலவுகளுக்கு அதிகபட்சம் ரூ.30ஆயிரம் வரையும், விபத்தினால் மரணம், ஊனம், பக்கவா தம் ஏற்பட்டவரின் குழந்தைகளின் கல்வி செலவுகளுக்கு ரூ.1 லட்சம் வரையும், விபத்தினால் மருத்துவமனையில் அனும திக்கப்படும் நாட்களுக்கு, தினப்படி தொகை ஒரு நாளைக்கு ரூ.1000 வீதம் 10 நாட்களுக்கும், விபத்தில் பாதிக்கப்பட்டவரை பார்க்க பயணிக்கும் குடும்பத்தினரின் பயண செலவுகளுக்கு அதிகபட்சம் ரூ.25,000 வரையும், விபத்தினால் உயிரிழக்க நேரிட்டால், ஈமக்கிரியைகள் செய்ய ரூ.5,000 வரையும் காப்பீடு வழங்கப்படுகிறது.
பொது மக்கள் அனை வரும் பரமத்தி வேலூர், பொத்தனூர், பரமத்தி, ஜேடர்பாளையம், பாண்ட மங்கலம் உள்ளிட்ட பல்வேறு அஞ்சலகங்கள், தபால்காரர்கள் மூலம் இந்த குழு விபத்து காப்பீட்டு திட்டத்தில் இணைந்து பயன்பெறுலாம்.
இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.
- நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா குப்பிச்சிபாளையம் மற்றும் அதனை சுற்றியுள்ள விவசாயிகள் பிரதாம கிஷ்சான் திட்டத்தில் ஆதார் எண்ணுடன் தொலைபேசி எண் இணைப்பு முகாம் நடந்தது.
- இ.கே.ஒய்.சி ஆதார் எண்ணுடன் இணைக்க குப்பிச்சி பாளையம் அஞ்சல் அலுவல கத்தில் நாளை முகாம் நடைபெற உள்ளது.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா குப்பிச்சிபாளையம் மற்றும் அதனை சுற்றியுள்ள விவசாயிகள் பிரதாம கிஷ்சான் திட்டத்தில் ஆதார் எண்ணுடன் தொலைபேசி எண் இணைப்பது மற்றும் இ.கே.ஒய்.சி ஆதார் எண்ணுடன் இணைக்க குப்பிச்சி பாளையம் அஞ்சல் அலுவல கத்தில் நாளை முகாம் நடைபெற உள்ளது. பிரதாம கிஷ்சான் திட்டத்தில் இணைக்காத விவசாயி
கள் இவ்வா ய்ப்பை பய ன்படுத்தி இணைத்துக் கொள்ளலாம் என வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் தெரிவித்து ள்ளார்.
- மாணவிகள் தங்கள் கல்வி நிறுவ னங்கள் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
- கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் தகவல்
நாகர்கோவில்:
குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
அரசு பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்புவரை படித்து மேல் படிப்பு மற்றும் தொழில் நுட்ப படிப்பு பயிலும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் புதுமை பெண் திட்டம் மூலமாக தமிழ்நாட்டில் 2, 3 மற்றும் 4ம் ஆண்டில் பயிலும் 1.13 லட்சம் மாணவிகள் உதவித்தொகை பெற்று பயனடைந்துள்ளார்கள். கன்னியாகுமரி மாவட் டத்தில் 108 கல்லூரிகளிலிருந்து முதற் கட்டமாக 1938 பயனாளிகள் பயன் பெற்று வருகின்றனர்.
தற்போது இவ்வலை தளத்தில் (https://www.puthumaipenn.tn.gov.in) முதலாம் ஆண்டு பயிலும் மாணவிகளும் விண்ணப் பிக்கலாம்.இவ்வலைதளத்தில், மாணவிகள் அனைவரும் சம்மந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் வாயிலாக நவம்பர் 1-ந்தேதி முதல் 18-ந்தேதி வரை பதிவு செய்ய லாம். அரசு பள்ளிகளில் பயின்ற மாணவிகள் மட்டுமே இத்திட்டத்திற்கு தகுதியானவர்கள். மாணவிகள் தங்கள் கல்வி நிறுவ னங்கள் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். நேரடியாக விண்ணப்பிக்க கூடாது.
இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் முறை மற்றும் தகுதி வரம்பு குறித்து அனைத்து மாணவி களுக்கும் கல்வி பயிலும், நிறுவனங்களில் நவம்பர் 18-ந்தேதி வரை சிறப்பு முகாம்கள் நடைபெறும். மாணவிகள் தவறாமல் அவர்களுடைய ஆதார் அட்டை மற்றும் (கல்வி மேலாண்மைதவல் திட்ட எண்ணுக்காக EMIS No.) மாற்றுச் சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும் மேலும் தற்போது 2, 3 மற்றும் 4-ம் ஆண்டுகளில் படிக்கும் மாணவிகள், முதற்கட்டத்தில் இத்திட்டத் தின் கீழ் விண்ணப்பிக்க தவறியவர்கள் தற்போது விண்ணப்பிக்கலாம்.
இத்திட்டத்தில் விண் ணப்பிக்கும் மாணவிகள் இந்தியன் பேங்க், இந்தியன் ஓவர்சீஸ் பேங்க், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா மற்றும் கனரா பேங்க் ஆகிய வங்கிகளில் மட்டுமே சேமிப்பு வங்கி கணக்கு வைத்திருக்க வேண்டும். இணையதளத்தில் விண்ணப்பிக்கும் முன்பாக வங்கி கணக்கை ஆதார் எண் மற்றும் செல்ேபான் எண்ணுடன் கண்டிப்பாக இணைத்திருக்க வேண்டும்.
பயனாளியின் பெயர், வங்கி கணக்கு எண், IFSC எண், Branch பெயர் போன்ற விபரங்கள் வங்கி கணக்கு புத்தகத்தில் இடம் பெற்றிருக்கும் விபரத்து டன் ஒத்திருக்க வேண்டும். புதுமைப்பெண் திட்டத்தில் இரண்டாவது கட்டமாக பய னாளிகள் (முதலா மாண்டு மாணவிகள் மற்றும் விடுபட்டவர் கள்) இணையவழி விண்ணப் பம் அந்தந்த கல்வி நிலை யங்களின் வாயிலாக மட்டுமே விண்ணப்பிக் கும்படி இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
புதுமைப்பெண் திட்டம் இணையதளம் தொடர் பான பயிற்சி மற்றும் அறிமுககூட்டம் மாவட்ட கலெக்டர் தலைமையில் 28-ந்தேதி காலை 10 மணிக்கு கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள பேரூராட்சிகள் உதவி இயக்குநர் அலுவலக கூட்ட ரங்கில் நடைபெறுகிறது.
மேலும் விண்ணப்பம் பூர்த்தி செய்யும் முறையில் மாணவிகளுக்கு சந்தேகங் கள் இருப்பின், சமூகநல இயக்குநரக அலுவல கத்தில் மாநில அளவில் செயல்படும் உதவி மையத்தினை திங்கள் முதல் வெள்ளி வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை 9150056809, 91500 56805, 9150056801 மற்றும் 9150056810 எண்களில் தொடர்பு கொள்ளலாம். மேலும் mraheas@gmail. com < mailto:mraheas@ gmail.com> என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பலாம்.
மேல்படிப்பு மற்றும் தொழிற்நுட்ப படிப்புக ளில் முதலாம் ஆண்டு பயிலும் தகுதி வாய்ந்த மாணவிகள் அனைவரும் இத்திட்டத்தின்கீழ் விண் ணப்ப முறையினை சரி யாக தெரிந்து கொண்டு, கடைசி தேதிக்கு முன்பாக தவறாமல் விண்ணப்பிக் குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- விவசாயிகளுக்கு வேளாண்மை-உழவர் நலத்துறையின் அட்மா திட்டத்தின் கீழ் குப்பிரிக்காபாளையம் கிராமத்தில் நடைபெற்றது.
- அரசின் மானிய உதவிகள், மரக்கன்றுகளை பராமரிப்பது, மர வளர்ப்புக்கு உதவிடும் செயல்பாடுகள் குறித்தும் விரிவாக எடுத்துக்கூறினார்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா, கபிலர்மலை வட்டார விவசாயிகளுக்கு வேளாண் காடுகள் வளர்ப்பு குறித்த பயிற்சி வேளாண்மை-உழவர் நலத்துறையின் அட்மா திட்டத்தின் கீழ் குப்பிரிக்காபாளையம் கிராமத்தில் நடைபெற்றது. பயிற்சியை வேளாண்மை உதவி இயக்குனர் ராதாமணி தொடங்கி வைத்து வட்டார வேளாண்மை மானிய திட்டங்கள், உழவன் செயலியை விவசாயிகள் பதிவிறக்கம் செய்வது, பயிர் சாகுபடி தொடர்பான தொழில்நுட்ப தகவல்கள் குறித்து விளக்கினார்.
வேளாண்மை அலுவலர் அன்புசெல்வி சொட்டுநீர் பாசன திட்டங்களின் பயன்கள் மற்றும் மானிய விபரங்கள் குறித்து எடுத்துக்கூறினார். சொட்டுநீர் உழவியல் நிபுணர் கிருஷ்ணா வேளாண் காடுகள் வளர்ப்பு குறித்தும், அதன் தேவையையும், அதற்கான அரசின் மானிய உதவிகள், மரக்கன்றுகளை பராமரிப்பது, மர வளர்ப்புக்கு உதவிடும் செயல்பாடுகள் குறித்தும் விரிவாக எடுத்துக்கூறினார்.
பயிற்சியில் உழவன் செயலியை இதுவரை பதிவிறக்கம் செய்து பயன்ப டுத்தாத விவசாயிகளுக்கு பதிவிறக்கம் செய்து பயன்படுத்துவது குறித்து நேரடி செயல்விளக்கமும் செய்து காண்பிக்கப்பட்டது. முடிவில் வேளாண்மை உதவி அலுவலர் சந்திர சேகரன் நன்றி கூறினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலர் கோகுல் மற்றும் அட்மா திட்ட உதவி தொழில்நுட்ப மேலாளர் ஜோதிமணி ஆகியோர் செய்திருந்தனர்.
- ஆய்வு நடத்தி அழிக்கப்பட்டாலும் முழுமையாக தடுக்க முடியவில்லை.
- இந்த திட்டத்தை 2023 ஏப்ரல் மாதம் கொண்டு வர முடிவெடுக்கப்பட்டுள்ளது.
திருப்பூர்:
மத்திய மற்றும் மாநில மருந்து தரக்கட்டுப்பாட்டு வாரியங்கள் உத்தரவின் பேரில் அவ்வப்போது ஆய்வுகள் நடத்தப்பட்டு போலி, காலாவதி மருந்துகள் கண்டறியப்படுகிறது.காய்ச்சல், இதய நோய், வயிற்றுவலி, தைராய்டு உள்ளிட்ட பிரச்னைகளுக்கான போலி மருந்துகள் புழக்கத்தில் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. ஆய்வு நடத்தி அழிக்கப்பட்டாலும் முழுமையாக தடுக்க முடியவில்லை.
இதனால் மத்திய அரசு அதிகம் விற்பனையாகும், முக்கியத்துவம் வாய்ந்த மருந்துகளில், போலி மற்றும் தரமற்றவற்றை தடுக்கும் வகையில் டிராக் அண்ட் டிரேஸ் என்ற புதிய தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாகமுதல் கட்டமாக அதிகம் விற்பனையாகும் 300 மருந்து பொருட்களின் லேபிள்கள் மீது பார் கோடு அல்லது க்யூஆர் கோடுபிரின்ட் செய்யப்பட உள்ளது. முதல்கட்டமாக அதிகம் விற்பனையாகும் நோய் எதிர்ப்பு மருந்துகள், இதய நோய், வலி நிவாரணி மாத்திரை, அலர்ஜிக்கான மாத்திரை, அட்டையின் விலை, 100 ரூபாய்க்கும் மேல் இருக்கும் மருந்துகளில் இந்த வசதி அறிமுகமாக உள்ளது. இந்த திட்டத்தை 2023 ஏப்ரல் மாதம் கொண்டு வர முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இந்த க்யூஆர் கோடு ஸ்கேன் செய்தால் மருந்தின் தயாரிப்பு தேதி, உண்மை விலை உள்ளிட்ட அனைத்து விபரங்களும் இடம் பெறும் வகையில் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. இதன் மூலம், போலி, தரமற்ற, காலாவதியான மருந்துகளை தடுக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து திருப்பூர் மாவட்ட மருந்து வணிகர் சங்க நிர்வாகி ஒருவர் கூறுகையில், க்யூ ஆர் கோடு ஸ்கேனர் மூலம் மருந்து தயாரிப்பு நிறுவனம், தயாரிப்பு தேதி, காலவதி தேதி உள்ளிட்ட விபரங்களை வாடிக்கையாளர் நேரடியாக தெரிந்து கொள்ள முடியும். மத்திய அரசின் இத்திட்டம் வரவேற்கதக்கது என்றார்.
- பூளவாடி மனித வளம்-2030 என்ற தலைப்பில் சிறப்புத்திட்டத்தை செயல்படுத்த தீர்மானிக்கப்பட்டது.
- நூலக வாசகர் வட்டம் சார்பில் இலவசமாக உண்டியல் வழங்கமுடிவெடுக்கப்பட்டுள்ளது.
உடுமலை:
உடுமலை பூளவாடி கிளை நூலகம் மற்றும் வாசகர் வட்டம் சார்பில், பள்ளி மாணவர்களிடையே வாசிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த, பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
அவ்வகையில் நூலக வார விழாவையொட்டி, பூளவாடி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், மாணவர்களுடன் ஆலோசனைக்கூட்டம் நடந்தது. இதில், பூளவாடி மனித வளம்-2030 என்ற தலைப்பில் சிறப்புத்திட்டத்தை செயல்படுத்த தீர்மானிக்கப்பட்டது.
இத்திட்டத்தின் கீழ், பள்ளி மாணவர்கள் வீடுதோறும், சிறு நூலகம் அமைப்பதற்கான பணிகளை துவக்க தீர்மானிக்கப்பட்டது.மேலும், இத்திட்டத்துக்கு மாணவர்கள் சிறு தொகை சேமிக்க, நூலக வாசகர் வட்டம் சார்பில் இலவசமாக உண்டியல் வழங்கமுடிவெடுக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக இத்திட்டத்தில் இணைய 40க்கும் மேற்பட்ட மாணவர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். முடிவில் கிளை நூலகர் லட்சுமணசாமி நன்றி தெரிவித்தார்.
- மாவட்டத்தை சேர்ந்த உதவி கமிஷனர்கள், செயல் அலுவலர்கள், ஆய்வாளர்கள், கோவில் பணியாளர்கள் பங்கேற்றனர்.
- மக்காத குப்பையை தனியே சேகரித்து அப்புறப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
திருப்பூர்:
திருப்பூர் மாநகராட்சி பகுதியில் தினமும் 500 மெட்ரிக் டன் அளவு குப்பை கழிவுகள் சேகரமாகிறது. மாநகராட்சி பகுதியில் 16 இடங்களில் காய்கறி கழிவுகள் மூலம் நுண் உரம் உற்பத்தி செய்து விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கும் திட்டம் செயல்பாட்டில் உள்ளது.
காய்கறி கழிவு உள்ளிட்ட மக்கும் கழிவுகளை மாற்று சக்தியாக மாற்றி பயன்படுத்த 12 ஆண்டுக்கு முன் தென்னம்பாளையம் சந்தை வளாகத்தில் காய்கறி கழிவுகளை கொண்டு மின் உற்பத்தி செய்யும் வகையில் திட்டம் துவங்கியது. ஆனால் தொழில்நுட்ப ரீதியாக அது வெற்றி பெறுவதில் சிக்கல் இருந்த நிலையில், கைவிடப்பட்டது.
இதனால் பயோ- கியாஸ் உற்பத்தி செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதற்காக 1.60 கோடி ரூபாய் செலவில் பணிகள் நடைபெற்றது.மேலும் சில மாறுதல்கள் செய்து, இங்கு உற்பத்தியாகும் பயோ கியாசை சிலிண்டர்களில் நிரப்பி, அம்மா உணவகம் மற்றும் மாநகராட்சி சத்துணவு மையங்களில் பயன்படுத்த முடிவானது. ஆனாலும் மையம் முழுமையாக இயக்கப்படாமல் வீணானது. ஒப்பந்தம் எடுத்த நிறுவனம் சத்தமின்றி விலகியது.
இவ்வாறு பல ஆண்டுகளாக கிடப்பில் கிடந்த இம்மையம் மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வரும் வகையில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இது குறித்து மேயர் தினேஷ்குமார் கூறுகையில், நவீன தொழில்நுட்பத்தில் புதிய கருவிகள் பொருத்தி சி.என்.ஜி., கியாஸ் உற்பத்தி துவங்கப்படும். மாநகராட்சிக்கு சொந்தமான குறிப்பிட்ட அளவிலான வாகனங்கள் இந்த கியாஸ் மூலம் இயக்கப்படும். இதனால் கிடப்பில் உள்ள மையம் செயல்படுவதோடு கணிசமான அளவு வாகன எரிபொருள் மீதமாகும் என்றார்.
தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை, தனியார் நிறுவனங்களுடன் இணைந்து பசுமை ஆலயம் திட்டம் தயாரித்துள்ளது. கோவில்களில் சேகரமாகும் மக்கும் குப்பையை உரமாக்கி நந்தவனங்களுக்கு பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
கோவில்களில் உள்ள கோசாலை மாடுகளின் கழிவுகள், அன்னதான கூட கழிவு, பூமாலை, துளசி, தோட்ட கழிவு, காய்கறி மற்றும் கால்நடை கழிவுகளை கொண்டு, மக்கும் உரம் தயாரிக்கப்படுகிறது. மக்காத குப்பையை தனியே சேகரித்து அப்புறப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் பசுமை ஆலயம் திட்டத்தை செயல்படுத்துவது குறித்த ஆலோசனை கூட்டம் இணை கமிஷனர் அலுவலகத்தில் நடந்தது. இணை கமிஷனர் குமாரதுரை தலைமை வகித்தார். மாவட்டத்தை சேர்ந்த உதவி கமிஷனர்கள், செயல் அலுவலர்கள், ஆய்வாளர்கள், கோவில் பணியாளர்கள் பங்கேற்றனர்.
ஐ.டி.சி., நிறுவனம், ஆர்.டி.ஓ., டிரஸ்ட், எக்ஸ்நோரா இன்டர்நேஷனல் நிறுவனத்தினர் பங்கேற்று பசுமை ஆலய திட்ட செயல்பாடுகள் குறித்து விளக்கினர். திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள கோவில்களில், பசுமை ஆலயம் திட்டம் செயல்படுத்தப்படுமென இந்து சமய அறநிலையத்துறை இணை கமிஷனர் தெரிவித்துள்ளார்.
- அதிகாரிகளுடன், கலெக்டர் அரவிந்த் நேரில் ஆய்வு
- குளத்தில் போர்ட் ரெஸ்டாரண்ட் அமைப்பது தொடர்பாக ஆலோசனை
நாகர்கோவில்:
நாகர்கோவில் புத்தேரி குளத்தில் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்வது குறித்து கலெக்டர் அரவிந்த் இன்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
குளத்தை தூர்வாரி அதை மேம்படுத்த என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து மாநகராட்சி ஆணையாளர் ஆனந்த மோகனுடன் ஆலோசனை நடத்தினார்.
புத்தேரி குளத்தை தூர்வாரி ரெயில்வே மேம்பாலத்தில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு பொதுமக்கள் வாக்கிங் செல்ல வசதியாக நடை பாதை அமைப்பது தொடர்பாகவும், அங்கு சைக்கிளிங் செல்ல வசதி ஏற்படுத்துவது தொடர்பாகவும் ஆலோ சிக்கப்பட்டது.
இதுபோல குளத்தில் போர்ட் ரெஸ்டாரண்ட் அமைப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது.இதற்கு திட்ட மதிப்பீடு தயார் செய்து அரசுக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. இப்போது ரூ.4 கோடியில் திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
முதல் கட்டமாக இதற்கு ரூ.1 கோடியே 6 லட்சம் நிதி தேவைப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தத் திட்டத்தை நிறைவேற்றுவது தொடர்பான வரைபடமும் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் செயல்பாட்டிற்கு வரும் பட்சத்தில் பொதுமக்களுக்கு இது பயனுள்ளதாக இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆய்வின்போது பொறியாளர் பாலசுப்பிரமணியன், மாநகராட்சி கவுன்சிலர் ஸ்ரீலிஜா ஆகியோர் உடன் இருந்தனர். இதைத்தொடர்ந்து வடசேரியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை கலெக்டர் அரவிந்த் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் நாகர்கோவில் மாநகராட்சி அலுவலகத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்திலும் கலெக்டர் அரவிந்த் கலந்து கொண்டார்.
- தமிழ்நாட்டுக்கு ெரயில்வே துறையில் பல நல்ல திட்டங்களை செயல்படுத்தி உள்ளார்.
- மயிலாடுதுறை ெரயில்வே நிலையத்தில் பயணிகளுக்காக தானியங்கி படிக்கட்டு வசதிக்கான ஒப்புதல்.
பாபநாசம்:
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் ெரயில் நிலையத்தில் சென்னை - திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ெரயிலை மீண்டும் நிறுத்தத்துக்கான தொடக்க விழா நடைபெற்றது. விழாவிற்கு திருச்சி தென்னக ெரயில்வே கோட்ட மேலாளர் மணிஷ் அகர்வால் தலைமை வகித்தார். விழாவில் மாநிலங்களவை உறுப்பினர் கல்யாணசுந்தரம் கலந்து கொண்டு தமிழகத்திற்கு கூடுதலாக ெரயில் திட்டங்களை ஒதுக்கப்பட வேண்டும் என்றார்.
நிகழ்ச்சியில் மத்திய இணை அமைச்சர் டாக்டர் எல்.முருகன் குத்துவிளக்கேற்றி கொடியசைத்து சென்னை - திருச்செந்தூர் விரைவு ரயில் நின்று செல்வதை தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது,
பாபநாசம் பொது மக்கள் மற்றும் இங்குள்ள அரசியல் தலைவர்களின் நீண்ட நாள் கோரிக்கையான இந்த நிறுத்தத்தை தொடங்கியுள்ளோம். பிரதமர் நரேந்திர மோடி, தமிழ்நாட்டுக்கு ெரயில்வே துறையில் பல நல்ல திட்டங்களை செயல்படுத்தியும், இந்த ெரயில் நிறுத்தத்திற்கு ஒப்புதல் வழங்கி உள்ளார்.
மயிலாடுதுறை ெரயில்வே நிலையத்தில் பயணிகளுக்காக தானியங்கி படிக்கட்டுகளை வசதிக்கான ஒப்புதலை கடந்த மாதம் வழங்கி உள்ளார்.இந்தியா முழுவதும் உள்ள ெரயில்களில் பயோ டாய்லெட் பயன்படுத்தப்பட்டு வருகிறது. பிரதமர் மோடியின் 8 ஆண்டு கால ஆட்சி காலத்தில் ெரயில்வே துறை பல சாதனைகளை புரிந்துள்ளது.
தமிழ்நாட்டின் வளர்ச்சி, முன்னேற்றத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி எப்போதுமே பல நிதிகளை வழங்கி வருகின்றார். மாநிலங்களவை உறுப்பினர் கல்யாணசுந்தரம் தெரிவித்துள்ள கோரிக்கைகள் நியாயமானது தான். கடல்பாசி என்பது தமிழ்நாட்டுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதமாக இருக்கும். நம்முடைய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கடல்பாசியை உற்பத்தியை பெருக்குவதற்கு மீனவ சகோதரிகள் பயன்பெறும் வகையில் கடல்பாசி பூங்கா ராமநாதபுரம், மண்டபம் பகுதிக்கு வழங்கி உள்ளார். இதுகுறித்து தமிழக அரசு 126 கோடி ரூபாய் திட்ட மதிப்பீடு தயாரித்து, மத்திய அரசுக்கு அனுப்பி உள்ளார்கள்.இந்த திட்ட மதிப்பீடு தற்போது பரிசீலனை உள்ளது.
இதேபோல் மீன்பிடி துறைமுகங்களை மேம்படுத்துவதற்கு,மீன்வள உள்கட்டமைப்பு மேம்பாடு திட்டத்தின் நிதியின் கீழ் தமிழகத்திற்கு மட்டும் இரண்டு ஆண்டுகளில் 1200 கோடி ரூபாய்க்கு மேல் நிதியை ஒதுக்கி உள்ளோம்.
சென்னை, திருவொற்றியூரில் 150 கோடி ரூபாயில் தற்போது நடைபெற்று வரும் துறைமுகம் அமைக்கும் பணி 90 சதவீதங்கள் முடிந்துள்ளன. செங்கல்பட்டுக்கும் விழுப்புரத்துக்கு இடையே மீன்பிடி துறைமுகம் அமைப்பதற்கு 250 கோடி ரூபாய் ஒதுக்கி உள்ளோம்.
இந்தியாவில் உள்ள மீன்பிடித் துறைமுகங்களை வளப்படுத்தும் விதமாக விசாகப்பட்டினம், ஒரிசா, கொச்சின், சென்னை காசிமேடு ஆகிய 4 துறைமுகங்களும் சர்வதேச அளவில் மேம்படுத்துவதற்காக 100 கோடி ரூபாய் மதிப்பில் முன்னேற்றம் செய்வதற்கான பணி நடைபெற்றுக் கொண்டிருக்கின்றனர் என்றார்.
- இன மொழி உரிமைக்காக குரல் கொடுத்தவர்.
- அமைச்சராக இருந்து மக்களுக்கான திட்டங்களை திறம்பட நிறைவேற்றியவர்.
கும்பகோணம்:
கும்பகோணத்தில் தி.மு.க சார்பில் பேராசிரியர் அன்பழகனின் நூற்றாண்டு நிறைவு பொதுக்கூட்டம் தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளரும், எம்.பி.யுமான கல்யாணசுந்தரம் தலைமையில் நடைபெற்றது. இதில் தென்சென்னை தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி. கலந்து கொண்டு பேசுகையில்,
தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றியவரும், தலைசிறந்த கல்வியாளருமான பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழாவைப் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தத்துவத் தலைமையாக தன் வாழ்நாள் முழுவதும் கொள்கைக் கோபுரமாக உயர்ந்து நின்றவர், இன உணர்வும், மொழி உணர்வும், பண்பாட்டுப் பெருமையுடன் கூடிய தொலைநோக்குப் பார்வையும் கொண்ட அவருடைய எழுத்தாற்றலில் விளைந்த படைப்புகள் அனைத்துமே திராவிட இயக்கத்தின் கருவூலங்கள் நாடாளுமன்றத்தில் மக்களவை உறுப்பினராக இருந்து, இன மொழி உரிமைக்காகக் குரல் கொடுத்தவர்.
சட்டப் பேரவையில் ஆளுங்கட்சி எதிர்க்கட்சி என இரு வரிசைகளிலும் உறுப்பினராக இருந்து ஜனநாயக மாண்பு காத்தவர். கழக ஆட்சிக்காலங்களில் மக்கள் நல்வாழ்வுத்துறை, சமூக நலத்துறை, நிதித்துறை, கல்வித்துறை உள்ளிட்ட துறைகளுக்கு அமைச்சராக இருந்து மக்களுக்கானத் திட்டங்களை திறம்பட நிறைவேற்றியவர்.
பேராசிரியர் என்ற சொல்லுக்கேற்ப கழகத்தின் ஒவ்வொரு தலைமுறைக்கும் மாநாடுகளிலும் பொதுக்கூட்டங்களிலும் கொள்கை வகுப்பு போல உரைகளை வழங்கி, இனஉணர்வையும் மொழி உணர்வையும் விதைத்து வளர்த்தவர்.
தி.மு.க. தலைவர் தமிழ்நாடு முதலமைச்சருக்கு 'பெரியப்பா' எனும் கொள்கை உறவாக இருந்து, அவர்தம் பொதுவாழ்வுப் பணியின் ஒவ்வொரு கட்டத்திலும் நல்லாசிரியராக வழிகாட்டி, நல்ல மதிப்பெண் அளித்துப் பாராட்டியவர் பேராசிரியரின் நூற்றாண்டு தொடக்க விழாவை கடந்த ஆண்டில் தொடங்கி, தொடர்ந்து நடத்தி அவரது பெருமைமிகு பொதுவாழ்வுக்கு புகழ் மாலை சூட்டியிருக்கிறது திராவிட முன்னேற்றக் கழகம் என தெரிவித்தார்.
கூட்டத்தில் சாக்கோட்டை அன்பழகன் எம்.எல்.ஏ., மயிலாடுதுறை ராமலிங்கம் எம்.பி. தலைமை கழக பேச்சாளர் அரங்கநாதன் மாவட்ட அவைத் தலைவர் நசீர் முகம்மது மாவட்ட துணை செயலாளர் கோவி அய்யாராசு மாநகர செயலாளர் சு.ப தமிழழகன் ஒன்றிய செயலாளர்கள் முத்துசெல்வம் கணேசன் சுதாகர் கோ.க அண்ணாதுரை கூகுர் அம்பிகாபதி உதயச்சந்திரன் தாமரைச்செல்வன் நாசர் தியாக சுரேஷ் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
- மீன் குஞ்சுகளை ரூ.1. 24 கோடி செலவில் ஆறுகளில் இருப்பு செய்திடும் பணி நடைபெற்று வருகிறது.
- ஒகேனக்கல் மீன் வளம் மற்றும் மீனவர் நலத்துறை அலுவலகத்தில் நிகழ்ச்சி நடைபெற்றது.
ஒகேனக்கல்,
தமிழ்நாட்டில் மாட்டு மீன் வளங்களை பாதுகாத்து பெருக்கிட ஆறுகளின் மீன் குஞ்சுகள் திட்டத்தின் கீழ் மொத்தம் 40 லட்சம் மீன் குஞ்சுகளை ரூ.1. 24 கோடி செலவில் ஆறுகளில் இருப்பு செய்திடும் பணி நடைபெற்று வருகிறது.
அதன் தொடர்ச்சியாக ஒகேனக்கல் பகுதியில் மீன் பிடிக்கும் தொழிலாளர்களின் வருவாய் கணிசமாக அதிகரிக்க வேண்டுமென்ற நோக்கிலும், நாட்டு மீன் இனங்கள் முற்றிலுமாக அழிந்து விடாமல் பாதுகாத்து பெருக்கி அவற்றை அடுத்த தலைமுறைகளுக்கும் எடுத்துச் சென்றிடும் பொருட்டும் ஒகேனக்கல் மீன் வளம் மற்றும் மீனவர் நலத்துறை அலுவலகத்தில் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் நாட்டு மீன் குஞ்சுகளான செல்கண்டை, கல்பாசு, கட்லா, ரோகு, மிர்கால் ஆகிய நாட்டு மீன் குஞ்சுகளை மீன்வள அதிகாரிகள் முதலைப் பண்ணை அருகே உள்ள ஆற்றில் விட்டனர்.
இந்நிகழ்ச்சியில் ஒகேனக்கல்லில் உள்ள மீனவர்கள் மற்றும் கட்சியினர், அரசு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.