என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோரிக்கைகள்"

    • திருப்பத்தூரில் கோரிக்கைகளை வலியுறுத்தி கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது.
    • மீன் மார்க்கெட்டில் பார்மலின் திரவம் கலக்கப்பட்டு விற்கப்படுவதை தடுப்பதற்கு ஆய்வு செய்ய வேண்டும் என்றும் மனுவில் கூறப்பட்டுள்ளது.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டியிடம் மக்கள் உரிமை கூட்டணி மாநில பொதுச் செயலாளர் விஸ்டம் கமருதீன் மனு அளித்தார். அதில், நகரில் செயல்பட்டு வரும் மருதுபாண்டியர் அரசு மருத்துவ மனையில் விபத்து போன்ற காலகட்ட ங்களில் ஏற்படும் இறப்புகளை தவிர்ப்பதற்காக அவசர சிகிச்சை பிரிவை ஏற்படுத்த வேண்டும்.

    பொது பிரிவுக்கு என்று மட்டும் தற்சமயம் மருத்துவர்கள் இருந்து வரும் நிலையில் காது, மூக்கு, தொண்டை மற்றும் எலும்பு சம்பந்தப்பட்ட நோய்களுக்கு என்று மருத்துவர்களை நிரந்தரமாக பணியமர்த்த வேண்டும். நகரில் செயல்பட்டு வரும் மீன் மார்க்கெட்டில் பார்மலின் திரவம் கலக்கப்பட்டு விற்கப்படுவதை தடுப்பதற்கு துறை சார்ந்த அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வு செய்ய வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டிருந்தது. அப்போது மாவட்ட தலைவர் சதக்கத்துல்லா உடனிருந்தார்.

    • வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட 21 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டாவை விருதுநகர் கலெக்டர் வழங்கினார்.
    • திருமண உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் பெறப்பட்டது.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளர்ச்சி மன்றக் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் மேகநாதரெட்டி தலைமையில் நடந்தது.

    இலவச வீட்டுமனை பட்டா மற்றும் பட்டா மாறுதல், குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு, முதியோர், விபத்து நிவாரணம், மாற்றுத்திற னாளிகள், நலிந்தோர் நலத்திட்டம், திருமண உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் பெறப்பட்டது.

    இதில் ராஜபாளையம் ரிதம் அறிவுசார் குறை பாடுடையோர்க்கான சிறப்பு பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள், உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு, சென்னையில் நடந்த மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் மாணவர் முனியசாமி 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்திலும், மாணவி ஜீவிதா நீளம் தாண்டுதல் போட்டியிலும், மாணவி அமலா கிரிக்கெட் பந்து எறிதல் போட்டியிலும் முதலிடம் பெற்று சாதனை படைத்தனர். அவர்கள் பெற்ற சான்றிதழ் மற்றும் கேடயத்தை கலெக்டரிடம் காண்பித்து வாழ்த்து பெற்றனர்.

    முன்னாள் படைவீரர் கொடிநாளையொட்டி 2019-ம் ஆண்டில் அதிக வசுல் செய்து சாதனை புரிந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஞானகவுரி, சார் பதிவாளர் முத்துச்சாமி ஆகியோருக்கு வெள்ளி பதக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

    மாவட்ட ஆதிதிராவிட நலத்துறையின் சார்பில், ஆனையூர், மங்களம், கீழ திருத்தங்கல் பகுதிகளை சேர்ந்த வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட 21 பேருக்கு தலா 2 சென்ட் வீதம் தலா ரூ.20ஆயிரம் என மொத்தம் ரூ.4 லட்சத்து 20ஆயிரம் மதிப்பிலான இலவச வீட்டு மனை பட்டாக்களை கலெக்டர் வழங்கினார்.

    மாவட்ட மாற்றுத்திற னாளிகள் நலத்துறையின் சார்பில் 2 பயனாளிகளுக்கு முதலமைச்சர் மருத்துவக்காப்பீட்டு திட்டத்தின் கீழ் தலா ரூ.65ஆயிரம் வீதம் ரூ.1 லட்சத்து 30ஆயிரம் மதிப்பிலான நவீன செயற்கை கால்களை கலெக்டர் மேகநாதரெட்டி வழங்கினார்.

    • கோரிக்கைகளை வலியுறுத்தி மின்வாரிய ஊழியர்கள் வருகிற 10-ந் தேதி வேலைநிறுத்தம் நடத்தினர்.
    • கடந்த 1.12.2019 முதல் வழங்க வேண்டிய ஊதிய விகித மாற்றத்தினை உடனடியாக வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.

    விருதுநகர்

    தமிழ்நாடு எலக்ட்ரிசிட்டி போர்டு எம்ப்ளாயீஸ் பெடரேஷன் மாநில பொதுச்செயலாளர் சேக்கிழார் விருதுநகரில் நிருபர்களுக்கு பேட்டி யளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    விவசாயிகளையும், சாமானிய மக்களையும் பாதிக்கக்கூடிய மின்சார சட்ட திருத்தம் 2022-ஐ திரும்ப பெற வேண்டும். மேலும் கடந்த 1.12.2019 முதல் வழங்க வேண்டிய ஊதிய விகித மாற்றத்தினை உடனடியாக வழங்க வேண்டும். வாரியத்தில் உள்ள 58 ஆயிரம் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்.

    கேங்மேன் பணி யிடத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ள 5,000 பேரை பணியமர்த்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டம் நடத்தியும் நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில் ஜனவரி 10-ந் தேதியன்று அனைத்து தொழிற்சங்கத்தினரும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்.

    தொடர் வேலை நிறுத்த போராட்டம் நடத்தவும் வாய்ப்புள்ளது. எனவே தமிழக அரசும், மின்வாரியமும் கோரிக்கை களை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதனை தொடர்ந்து தமிழ்நாடு விருதுநகர் மின் பகிர்மான வட்டக்கிளையின் பொதுக்குழு கூட்டம் திட்ட தலைவர் இளங்கோவன் தலைமையில் நடந்தது. மாநில நிர்வாகிகள் துரைப்பா ண்டியன், ஞானகுரு ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலாளர் ராதா கிருஷ்ணன் செயல் அறிக்கை சமர்ப்பித்தார்.

    பொருளாளர் பாலசுப்பி ரமணியன் வரவு, செலவு அறிக்கை வாசித்தார். மாநில நிர்வாகிகள் சேக்கிழார், மணிகண்டன், பாண்டியராஜ் ஆகியோர் அருப்புக்கோட்டை, ராஜபாளையம், விருதுநகர் கோட்ட நிர்வாகிகள் இளங்கோவன், மாயாண்டி, ராஜ்குமார் ஆகியோரை பாராட்டி பேசினர்.

    இதனை தொடர்ந்து 15 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தலை வராக இளங்கோவனும், செயலா ளராக ஞான குருவும், செயல் தலை வராக தங்கவேலும், அமைப்பு செயலாளராக ராதாகிருஷ்ணனும், பொருளாளராக பாலசுப்பி ரமணியமும் தேர்வு செய்யப்பட்டனர்.

    • தொகுப்பூதியம் ரத்து செய்யப்பட்டு காலமுறை ஊதியம் வழங்கப்பட வேண்டும்.
    • அரசு துறைகளில் பயன்படுத்தும் மென்பொருள் திட்டத்தினை தனியார் வசம் ஒப்படைப்பதை கைவிட வேண்டும்.

    திருவாரூர்:

    திருவாரூரில் அரசு அலுவலகங்கள் முன்பு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறு த்தி ஆர்ப்பாட்டங்கள் நடை பெற்றது.

    புதிய ஓய்வூதிய திட்டத்தின ரத்து செய்து அனைவருக்கும் பயனளிக்கும் வகையில் பழைய ஓய்வூதிய திட்டத்தி னை வழங்கிட வேண்டும். அகவிலைப்படி உயர்வு, நிறுத்தி வைக்கப்பட்ட சரண் விடுப்பு ஒப்படைப்பு ஆகியவர்களை உடனே வழங்கிட வேண்டும்.

    சத்துணவு, அங்கன்வாடி, கிராம உதவியாளர்கள் ஊர்புற நூலகர்கள் உள்ளிட்ட பணியாளர்க ளுக்கு வழங்கப்படும் தொகுப்பூதியம் ரத்து செய்யப்பட்டு காலமுறை ஊதியம் வழங்கப்பட வேண்டும்.

    ஊராட்சி செயலர்களுக்கு கருவூலம் மூலம் ஊதியம் வழங்க வேண்டும். கரு வூலம் உள்ளிட்ட அரசு துறைகளில் பயன்ப டுத்தும் மென்பொருள் திட்டத்தினை தனியார் வசம் ஒப்படைப்பதை கைவிட வேண்டும்.

    சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தினை பணிக்காலமாக அறிவிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் திருவாரூரில் அரசு அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    திருவாரூர் வட்டாட்சி யர் அலுவலகம்முன்பு நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் வட்டத் தலைவர் சண்முகம் தலைமை வகித்தார்.

    நெடுஞ்சா லைத்துறை அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட துணைச் செயலாளர் மகாலிங்கம் தலைமை வகித்தார். திருவாரூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு வட்டச் செயலாளர் தம்பிதுரை தலைமை வகித்தார்.

    திருவாரூர் மின்வா ரிய அலுவலகம்முன்பு நடைபெற்ற ஆர்ப்பா ட்டத்திற்கு கிளைச் செயலாளர் ராஜேந்திரன் தலைமை வகித்தார்.

    திருவாரூர்க லெக்டர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பா ட்டத்திற்கு வட்டத் தலைவர் சண்முகம் தலைமை வகித்தார். கொரடாச்சேரி வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கிளைச் செயலாளர் ஆறுமுகம் தலைமை வகித்தார்.

    இந்த ஆர்ப்பாட்டங்களில் அரசு ஊழியர் சங்கத்தை சார்ந்த ஊழியர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.

    • மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து விவசாயிகள் கலந்து கொண்டனர்.
    • கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி விவசாயிகள் கைகளில் கரும்புகளை ஏந்தியப்படி ஆர்ப்பாட்டம்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், இன்று விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.

    இதற்கு கூடுதல் கலெக்டர் சுகபுத்ரா தலைமை தாங்கினார்.

    மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    இதில், தஞ்சாவூர் மாவட்டம் திருமண்டங்குடி திருஆரூரான் சர்க்கரை ஆலை நிர்வாகத்தை கண்டித்து 31-வது நாளாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    ஆனால், விவசாயிகளின் கோரிக்கை குறித்து இதுவரை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தாததை கண்டித்தும், உடனடியாக விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும் விவசாயிகள் ஏராளமானோர் கூட்டத்தை புறக்கணித்து கலெக்டர் அலுவலகம் முன்பு கைகளில் கரும்புகளை ஏந்தியப்படி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் என்.வி.கண்ணன், மாவட்ட தலைவர் செந்தில்குமார், காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாவட்ட செயலாளர் சுவாமிமலை சுந்தர விமல்நாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவை தொகைகளை உடனடியாக சர்க்கரை ஆலை நிர்வாகம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

    • தமிழ்நாடு கிராம ஊராட்சி களப்பணியாளர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது..
    • பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி ஆர்பாட்டம் நடத்தினர்

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு கிராம ஊராட்சி களப்பணியாளர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க மாவட்ட தலைவர் சிவக்குமார் தலைமை தாங்கினார்.   தமிழ்நாடு கிராம ஊராட்சி களப்பணியாளர் சங்க மாவட்டத் தலைவர் சிவக்கொழுந்து முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் பாண்டியன் வரவேற்றார். இதில் சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க சிறப்பு தலைவர் பாலசுப்ரமணியன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். இதில் பணி நீக்கம் செய்யப்பட்ட தூய்மை காவலர்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும். தூய்மை பணியாளர்கள், மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் பணி செய்பவர்களுக்கு பொங்கல் போனஸ் வழங்க வேண்டும்.

    பணியின் போது இறந்த பணியாளர்கள் குடும்பத்திற்கு வாரிசு அடிப்படையில் பணி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி ஆர்பாட்டம் நடத்தினர்.  இதில் மாநில செயலாளர் டெல்லி அப்பாதுரை, மாவட்ட அமைப்பாளர் தணிகைவேல், மாவட்ட துணைத் தலைவர் சுப்பிரமணியன், மாநில பிரச்சார செயலாளர் அதிதேவி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட பொருளாளர் சிராஜுதீன் நன்றி கூறினார்.

    • வடமாநில தொழிலாளர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றி தரப்படும் என்று இணை ஆணையர் தெரிவித்துள்ளார்.
    • வட மாநிலத்தவர்கள் தங்கள் சொந்த ஊருக்கு சென்று விட்டனர்.

    திருமங்கலம்

    தமிழகத்தில் வட மாநில தொழிலாளர்கள் தொடர்பான வதந்திகள் பரவியதால் ஏராளமான வட மாநில தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்கு திரும்பிச்சென்றனர். இந்தநிலையில் வடமாநில தொழிலாளர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் பல்வேறு நடவ டிக்கைகள் மேற்கொள்ள ப்பட்டது. வதந்தி பரப்பி யவர்கள் கைது செய்யப்ப ட்டனர்.

    இந்த நிலையில் தமிழக காவல்துறை மூலம் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கப்பலூர் தொழில் பேட்டையில் பணியாற்றி வரும் வட மாநில தொழிலா ளர்களை வரவழைத்து அவர்களுக்கு விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.

    இதில் திருமங்கலம் துணை போலீஸ் சூப்பி ரண்டு வசந்தகுமார் தலைமை தாங்கி பேசும்போது கூறுகையில், ''வட மாநில தொழி லாளர்களுக்கு பாது காப்பான சூழ்நிலை உருவாக்கிட வேண்டும். அவர்களின் குறைகளை கண்டறிந்து அதை நிவர்த்தி செய்ய வேண்டும். ஏதேனும் புகார்கள் இருந்தால் காவல்துறைக்கு தெரிவிக்கலாம்'' என்றார்.

    மதுரை தொழிலாளர் துறை இணை ஆணையர் சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வடமாநில தொழிலாளர்களுக்கு எதிரான வதந்தி பரவியது. இதனைப் பரப்பிய நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர். தொழில் அமைதியாக நடைபெற வேண்டும். இதற்காக தொழிலதிபர்கள் மற்றும் வட மாநில தொழிலா ளர்களை அழைத்து விழிப்பு ணர்வு கூட்டம் நடத்தி வருகிறோம்.

    இதன் ஒரு பகுதியாக கப்பலூர் தொழிற்பேட்டையில் பணியாற்றி வரும் வடமாநில தொழிலாளர்களை அழைத்து அறிவுரை வழங்கினோம். வட மாநில தொழிலாளர்களுக்கு அனைத்து வசதிகளையும் செய்து தருகிறோம். சம்பளம் மற்றும் வேறு பிரச்சனைகள் இருந்தால் தெரிவிக்கலாம். மேலும் சொந்த மாநிலத்திற்கு சென்ற தொழிலாளர்கள் மீண்டும் தமிழ்நாட்டிற்கு வந்து பணிபுரியலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கூட்டத்தில் கப்பலூர் தொழிற்பேட்டை தொழிலதிபர் சங்க தலைவர் ரகுநாத ராஜா பேசியதாவது:-

    கப்பலூர் தொழிற்பேட்டையில் 16 ஆயிரம் பேர் பணியாற்றி வருகின்றனர். இதில் 2500-க்கும் மேற்பட்ட வட மாநில தொழி லாளர்கள் பணி யாற்றி வருகின்றனர். இவர்க ளுக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடு க்கப்பட்டுள்ளது.

    உள்ளூர் தொழிலா ளர்களை விட அவர்களுக்கு நல்ல முறையில் பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது. வதந்திகளால் வட மாநிலத்தவர்கள் தங்கள் சொந்த ஊருக்கு சென்று விட்டனர். அவர்கள் மீண்டும் வருவதற்கு ஏற்பாடு செய்துள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் கவன ஈர்ப்பு போராட்டம் நடத்துவதாக கட்டிட தொழிலாளர்கள் அறிவித்துள்ளனர்.
    • திருமங்கலத்தில் அகில இந்திய அமைப்பு சாரா மற்றும் கட்டிட தொழிலாளர்கள் பொது நல மத்திய முன்னேற்ற சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் நடந்தது.

    திருமங்கலம்

    திருமங்கலத்தில் அகில இந்திய அமைப்பு சாரா மற்றும் கட்டிட தொழிலா ளர்கள் பொது நல மத்திய முன்னேற்ற சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் நடந்தது. மாநில தலைவர் மகாலிங்கம் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் கண்ணன், மாவட்ட செயலாளர் மகேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மாவட்ட பொருளாளர் அஜந்தன் வரவேற்றார். சட்ட ஆலோசகர் சக்திவேல் தீர்மானம் வாசித்தார். பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம் வருமாறு:- பென்சன்தாரர்களுக்கு அரசு வழங்கி வரும் ஓய்வூதியத்தொகை ரூ1,000-ல் இருந்து ரூ.2ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும். குடும்ப ஓய்வூதியத்தொகை ரூ.500-ல் இருந்து ரூ1,000 ஆக உயர்த்தி வழங்க வேண்டும். கட்டுமானம் மற்றும் அமைப்பு சார்ந்த தொழிலாளர்களுக்கு அரசு வழங்கும் நலத்திட்டங்களை விளக்கி ஒவ்வொரு மாவட்ட வாரியாக விழிப்புணர்வு தெருமுனை பிரசார கூட்டம் நடத்துவது.

    மேற்கண்டவை உள்ளிட்ட 13 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    இதுகுறித்து மாநில தலைவர் மகாலிங்கம் கூறுகையில், தற்போது கட்டுமான பொருட்களின் விலை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதனால் கட்டிட தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் உள்ளது. எனவே எங்கள் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டுமென முதல்-அமைச்சரிடம் முறையிட்டுள்ளோம். கோரிக்கையை நிறை வேற்றாவிட்டால் கவன ஈர்ப்பு போராட்டம் நடத்தப்படும் என்றார்.

    • தலித் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.
    • அனைத்து தலித் இயக்கங்களின் நியாயமான கோரிக்கைகளை வெல்வது என முடிவு செய்யப்பட்டது.

    புதுச்சேரி:

    காரைக்கால் மாவட்ட அனைத்து தலித் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில், வக்கீல் வின்சென்ட் ராஜ் தலைமையில், அனைத்து தலித் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், மூத்த போராளிகள் நிரவி தங்கராசு, தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில தலைவர் நிலவழகன், டாக்டர் அம்பேத்கர் கல்வி பொருளாதாரம் மேம்பாட்டு மையம் நிறுவனர் தணிகாசலம், ஆதிதிராவிடர் பழங்குடியின மக்கள் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் தோழர் சூர்யா, ஆதிதிராவிடர் பழங்குடியினர் நல கூட்டமைப்பின் தலைவர் நாகூரான், சமூக நீதிக் கூட்டு இயக்கத்தின் ஒருங்கிணை ப்பாளர் வின்சன்ராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தின் முடிவில், திட்டமிட்டப்படி எதிர்வரும் 29-ந் தேதி தொடர் முழுக்க போராட்டம் நடத்தி, அனைத்து தலித் இயங்களின் நியாயமான கோரிக்கைகளை வெல்வது என முடிவு செய்யப்பட்டது.

    • பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு ஏட்டப்படாததால் நள்ளிரவு வரை போராட்டம் தொடர்ந்தது.
    • கோரிக்கைகள் முழுவதுமாக நிறைவேற்றி தருகிறேன்.

    பட்டுக்கோட்டை:

    பல்வேறு கோரிக்கை களை தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை நகராட்சியில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்கள் நேற்று காலை திடீரென போராட்டத்தை தொடங்கினர்.

    போராட்டத்தின் போதுஒப்பந்த பணியாளர்களாக தங்களை பணியமர்த்த வேண்டும். சட்டவிரோதமாக செயல்படும் டெண்டர் முறையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.

    தங்களின் சம்பளத்தை உயர்த்தி, பிரதி மாதம் மூன்றாம் தேதிக்குள்ளாக சம்பளம் வழங்க வேண்டும்.

    தூய்மை பணியாளர்களை நிரந்தர ஒப்பந்த பணியாளர்களாக பணியமர்த்த வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தினர். இதைத் தொடர்ந்து நகர்மன்ற தலைவர், மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு ஏற்படாததால் நள்ளிரவு வரை போராட்டம் தொடர்ந்து கொண்டே போனது.

    இந்நிலையில் நேற்று புதிதாக பட்டுக்கோட்டை நகராட்சி ஆணையராக பொறுப்பேற்ற கும ரன் போராட்டம் நடத்துபவர்க ளிடம் இரவு சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

    அப்போது அவர் தூய்மை பணியாளர்கள் முன்வைத்த கோரிக்கைகளில் அரசின் கொள்கை முடிவையும், தமிழக முதல்வர் எடுக்கும் முடிவையும் தவிர்த்து பட்டுக்கோட்டை நகராட்சி மூலமாக நிறைவேற்ற அதிகாரம் உள்ள கோரிக்கைகளை போர்க்கால அடிப்படையில் படிப்படியாக நிறைவேற்றி தருவதாகவும், நான் பட்டுக்கோட்டையில் இன்று தான் பணியில் சேர்ந்து உள்ளேன், எனக்கு குறைந்த கால அவகாசம் கொடுக்கும் பட்சத்தில் உங்களுடைய கோரிக்கைகள் முழுவதுமாக நிறைவேற்றி தருகிறேன் என்று கூறினார்.

    இதைத் தொடர்ந்து போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது.

    • இளங்கலை டாக்டர்களுக்கான நெக்ஸ்ட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்.
    • பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

    தஞ்சாவூர்:

    மருத்துவ தேசிய ஆணையம் கொண்டு வந்துள்ள இளங்கலை மருத்து வர்களுக்கான நெக்ஸ்ட் தேர்வை ரத்து செய்ய கோரி தஞ்சையில் பயிற்சி மருத்துவர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பா ட்டத்தில் ஈடுபட்டனர்.

    தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு மருத்துவ மாணவர்கள் சங்க ஒருங்கிணைப்பாளர் விக்னேஷ் தலைமை வகித்தார்.

    இளங்கலை மருத்துவர்களுக்கான நெக்ஸ்ட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்.

    மருத்துவ பாடத்திட்டங்களில் குழப்பத்தை ஏற்படு த்தும் நெக்ஸ்டை நடை முறைப்படுத்தக் கூடாது.

    இத்தேர்வை ரத்து செய்யக்கோரி மாநில அரசு மத்திய அரசுக்கு அழுத்தம் தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பா ட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை முன்வைத்தனர்.
    • விவசாய பிரதிநிதிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் பழனி தலைமையில்  நடைபெற்றது.இதில் கலந்து கொண்ட விவசாயிகள், திண்டிவனத்தில் விதை சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும். மரவள்ளி தொழிற்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வீடுர் அணைக்கட்டை சுற்றி மண் அணைப்பு செய்திருக்கும் இடத்தில் மண் சரிவு வராமல் பாதுகாக்க பனைக்கன்றுகள் நட வேண்டும். விவசாயிகளின் பாரம்பரிய நெல் விதைகளை வேளாண் உற்பத்தியா ளர்கள் நிறுவனத்தின் மூலம் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    அனைத்து ஏரிகள், குளங்கள், குட்டைகள் போன்றவற்றை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும். நீர்நிலைகள், அரசாங்க புறம்போக்கு இடங்கள், சுடுகாடு, வழிப்பாதை போன்ற ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை முன்வைத்தனர். மாதந்தோறும் விவசாயிகள் தெரிவிக்கும் அனைத்து கோரிக்கைகளும் உரிய அலுவலர்கள் வாயிலாக நிறைவேற்றப்பட்டு வருகிறது. தற்பொழுது விவசாயிகள் வைத்த கோரிக்கை மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, விவசாயிகளின் கோரி க்கைகள் நிறைவேற்ற ப்படும் என மாவட்ட கலெக்டர் பழனி விவசாயிகளிடம் உறுதியளித்தார்.

    இதில் மாவட்ட வருவாய் அலுவலர் பரமேஸ்வரி, தனி மாவட்ட வருவாய் அலுவலர் சரஸ்வதி, வேளாண்மை இணை இயக்குநர் சண்முகம், மேற்பார்வை பொறியாளர், தமிழ்நாடு மின்சார வாரியம் லட்சுமி, இணை பதிவாளர் கூட்டுறவு சங்கம் யசோதா தேவி, மேலாண்மை இயக்குநர், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இளஞ்செல்வி, செயற்பொறியாளர், பொதுப்பணித்துறை ஷோபனா, வேளாண்மை துணை இயக்குநர் பெரியசாமி, விவசாய பிரதிநிதிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    ×