என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டீ"

    • அதிகப்படியான டீ பதட்டத்தை அதிகரிக்கும்.
    • வெறும் வயிற்றில் அதிகமாக டீ குடிப்பது வாயு மற்றும் அமிலத்தன்மையை ஏற்படுத்தும்.

    டீ குடிப்பது உற்சாகமாக உணர வைக்கிறது. உடலில் ஏற்படும் சோர்வைக் குறைக்க பலர் டீ அருந்துகிறார்கள். அவர்கள் பலமுறை டீ பருகுவதை ரசிக்கிறார்கள்.

    ஆனால் அதிகமாக டீ குடிப்பதால் உடலில் இரும்புச்சத்து குறைபாடு ஏற்பட்டு, பல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    அதிகமாக டீ, காபி குடித்தால் பிரச்சனைகள் உங்களுக்குத் தெரியாமலேயே உங்களைச் சூழ்ந்து கொள்ளலாம்.

    ஒரு நாளைக்கு 2-3 கப் டீ, காபி (200-300 மிலி) குடிப்பது பாதுகாப்பானது. ஆற்றலை அதிகரிக்கிறது. மேலும் ஆக்ஸிஜனேற்றிகள் ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன.

    இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் இந்த அளவை பரிந்துரைக்கிறது.

    தேசிய சுகாதார நிறுவனங்கள் ஒரு நாளைக்கு 4-5 கப், 400 மி.கி.க்கு மேல் டீ உட்கொண்டால் தூக்கத்தைக் கெடுக்கும் என்று கூறுகிறது. அதிகப்படியான டீ பதட்டத்தை அதிகரிக்கும்.



    வெறும் வயிற்றில் அதிகமாக டீ குடிப்பது வாயு மற்றும் அமிலத்தன்மையை ஏற்படுத்தும்.

    டீ, காபியில் உள்ள டானின்கள் இரும்பு உறிஞ்சுதலைத் தடுக்கின்றன. ஒரு நாளைக்கு 5 கப் அளவுக்கு மேல் குடிப்பது இரத்த சோகை அபாயத்தை அதிகரிக்கும் என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கிறது.

    அதிகப்படியான டீ உட்கொள்வது ஒழுங்கற்ற இதயத் துடிப்புகளை ஏற்படுத்தும். அமெரிக்க இதய சங்கம் இதை உறுதிப்படுத்தியுள்ளது.

    உணவுக்கு பிறகு டீ, காபி குடிக்கவும், ஒரு நாளைக்கு 3 கப் அளவுக்கு அதிகமாக குடிக்க வேண்டாம். அது அதிகமாக இருந்தால், மூலிகை டீக்களுக்கு மாறுங்கள். இது ஆரோக்கியத்தை பேணுவதற்கு பயனுள்ளதாக இருக்கும் என அறிவுறுத்தியுள்ளனர். 

    • கவுண்டி நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.
    • சரியாக மூடப்படாததால் தேநீர் அவர் மீது சிந்தியது.

    பார்சல் கட்டும் போது செய்த தவறு காரணமாக ஸ்டார்பக்ஸ் தேநீர் சிந்தியதால் டெலிவரி ஊழியருக்கு 50 மில்லியன் டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ. 433.49 கோடி) வழங்க லாஸ் ஏஞ்சல்ஸ் கவுண்டி நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.

    கடந்த 2020-ம் லாஸ் ஏஞ்சல்ஸ்-இல் உள்ள ஸ்டார்பக்ஸ் விற்பனையகத்தில் இருந்து தேநீர் விநியோகம் செய்யும் பணியில் மைக்கேல் கார்சியா என்ற ஊழியர் ஈடுபட்டிருந்தார். சம்பவம் நடந்த தினம் மைக்கேல் விநியோகம் செய்ய எடுத்துச் சென்ற தேநீர் பார்சல் சரியாக மூடப்படாமல் இருந்துள்ளது. இதை துளியும் எதிர்பார்க்காத மைக்கேல் அதனை வாடிக்கையாளருக்கு விநியோகம் செய்ய வாகனத்தில் எடுத்துச் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது, பார்சல் சரியாக மூடப்படாததால் தேநீர் அவர் மீது சிந்தியது. இதில் மைக்கேல் இடுப்பின் கீழ் பகுதி தொடையின் உள்பகுதி மற்றும் ஆண்குறி உள்ளிட்டவற்றில் பலத்த தீக்காயங்கள் ஏற்பட்டன. இதைத் தொடர்ந்து அவர் தனக்கு நேர்ந்த கதியை நீதிமன்றத்தில் முறையிட முடிவு செய்து அதற்கான பணிகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வந்தார்.

    "ஸ்டார்பக்சில் வேலை செய்யும் ஊழியர் அலட்சியமாக எரியும் சூடான பானங்களில் ஒன்றை பாதுகாக்க தவறிவிட்டார். இதனால் அது மைக்கேலுக்கு ஒப்படைக்கப்பட்ட ஒரே நொடியில் அவரின் மடியில் உடனடியாக விழுந்தது," என்று மைக்கேல் தரப்பு வழக்கறிஞரான நிக்கோலஸ் ரோவ்லி எழுத்துப்பூர்வ அறிக்கையில் தெரிவித்தார்.

    மேலும், "மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பலமுறை தோல் மாற்று அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டதாகவும், தீக்காயங்களால் ஏற்பட்ட சிதைவு, வலி, செயலிழப்பு மற்றும் உளவியல் ரீதியான பாதிப்புகளுடன் மைக்கேல் ஐந்து ஆண்டுகள் வாழ்ந்தார்," என்றும் வழக்கறிஞர் கூறினார்.

    இந்த தீர்ப்பு குறித்து ஸ்டார்பக்ஸ் கார்ப்பரேட் கம்யூனிகேஷன்ஸ் இயக்குநர் ஜேசி ஆண்டர்சன் கூறும் போது, நீதிபதி அறிவித்துள்ள இழப்பீடு தொகை அதிகமாக இருந்தது என்றும், அதைக் குறைக்க நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகவும் கூறினார்.

    • வேலையிடத்தில் பசியைப் போக்க தேநீரோ மற்ற பானங்களோதான் அவருக்கு உணவு என்று ஆகிப்போனது.
    • தேநீரும் சத்து பானங்களும்தான் என அனிமாவின் உணவுமுறை அமைந்துவிட்டது.

    மேற்குவங்க மாநிலம், ஹூக்ளி மாவட்டம், சியாம் பஜார் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பெல்தியா கிராமத்தைச் சேர்ந்தவர் அனிமா சக்ரவர்த்தி. 76 வயதான இவர், மகன், பேரன்பேத்திகளையும் பார்த்துவிட்டார்.

    இளம் வயதில் குடும்ப சூழ்நிலை காரணமாக, வீட்டு வேலைசெய்து அந்த வருவாயில் குடும்பத்தை நடத்தி வந்தார். அப்போது வேலை செய்யும் இடங்களில் தரப்படும் மீந்துபோன உணவை, வீட்டுக்கு எடுத்துவந்து பிள்ளைகளுக்கு கொடுத்துவந்துள்ளார்.

    அதில் பெரும்பாலும் அவருக்கென எதுவும் மிஞ்சாது. வேலையிடத்தில் பசியைப் போக்க தேநீரோ மற்ற பானங்களோதான் அவருக்கு உணவு என்று ஆகிப்போனது.

    வாழ்க்கையோட்டத்தில் அந்த வேலையை அவர் விட்டு விட்டபோதும், உணவுப் பழக்கம் மாறவில்லை. தேநீரும் சத்து பானங்களும்தான் என அனிமாவின் உணவுமுறை அமைந்துவிட்டது.

    கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகளாக அவர் திட உணவு உட்கொள்ளவில்லை என்றபோதும், ஆரோக்கியமாகவே இருக்கிறார். முதலில் அந்த கிராமத்துக்காரர்களுக்கே இதுகுறித்து தெரியாமல் இருந்தது.

    தெரிந்தபிறகு அவர்கள் வியப்பும் திகைப்பும் அடைந்தனர். ஆனால் உரிய ஊட்டச்சத்துகள் கிடைத்தால் போதும்; திட உணவுதான் எடுக்கவேண்டும் என்பது அவசியம் இல்லை என்கிறார்கள், மருத்துவர்கள்.

    மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கும் நோயாளிகளுக்கு, திரவ வடிவில்தானே உடலுக்குத் தேவையான ஊட்டம் வழங்கப்படுகிறது. அவர்களுக்கு இதனால் எந்த பாதகமும் இல்லைதானே என விரிவான விளக்கத்தையும் மருத்துவர்கள் அளிக்கிறார்கள்.

    • வெளியில் இருந்து வீட்டுக்கு வந்த பிரபாகரன் மனைவியிடம் குடிக்க டீ தருமாறு கேட்டார்.
    • அதிர்ச்சி அடைந்த அவரது தந்தை உடனடியாக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தார்.

    அம்பத்தூர்:

    அயனாவரம், பாளையம் பிள்ளை நகரை சேர்ந்தவர் பிரபாகரன். இவரது மனைவி சுப்ரியா(வயது34). இவர்களுக்கு திருமணமாகி 10 ஆண்டு ஆகிறது. கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் வெளியில் இருந்து வீட்டுக்கு வந்த பிரபாகரன் மனைவியிடம் குடிக்க டீ தருமாறு கேட்டார். ஆனால் சுப்ரியா டீ தயார் செய்ய தாமதமானதாக தெரிகிறது.

    நீண்ட நேரம் கழித்து அவர், கணவர் பிரபாகரனுக்கு சூடான டீயை கொடுத்தார். இதனால் ஆத்திரம் அடைந்த பிரபாகரன் அந்த சூடான டீயை வாங்கி மனைவி சுப்ரியாவின் மீது ஊற்றினார். இதில் சுப்ரியாவின் தோள்பட்டை மற்றும் கை வெந்தது. அவர் அலறி துடித்தார். பின்னர் அவர் கணவரிடம் கோபித்துக்கொண்டு கீழ்ப்பாக்கத்தில் உள்ள தனது தந்தை வீட்டுக்கு சென்றுவிட்டார். உடல் வெந்த சுப்ரியாவை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த அவரது தந்தை உடனடியாக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தார். அங்கு சுப்ரியா சிகிச்சை பெற்று வருகிறார்.

    இதுகுறித்து அயனாவரம் போலீஸ்நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்த பிரபாகரனை கைதுசெய்தனர்.

    • சமூக வலைதள வீடியோ மூலம் வைரலானவர் டாலி.
    • உலக பணக்காரர்களில் ஒருவரான பில் கேட்ஸ் வாடிக்கையாளர் ஆனார்.

    உலகில் வித்தாயசமான சேட்டைகள் செய்வதில் இந்தியர்கள் எப்போதும் விசேஷமானவர்கள் எனலாம். செய்யும் எல்லாவற்றிலும் வித்தியாசத்திற்கு பழகி வரும் இந்தியர்கள் மத்தியில், சமூக வலைதள வீடியோ மூலம் வைரலானவர் டாலி (dolly) என்ற டீ மாஸ்டர்.

    அணிந்திருக்கும் உடையில் துவங்கி, வாடிக்கையாளர்கள் கையில் டீ கிளாசை கொடுக்கும் வரை சுறுசுறுப்பு கொஞ்சம் ஓவர்டோசாகவே காணப்படுபவர் தான் டோலி. தனது நேர்த்தியான டீ போடும் விதத்தால் பிரபலமானவர். டாலியின் உடல் பாவனை ரஜினிகாந்த் போன்று இருந்ததும் இவர் வைரலாக காரணமானது.

     


    தற்போது டாலியின் கடைக்கு உலக பணக்காரர்களில் ஒருவரான பில் கேட்ஸ் வாடிக்கையாளராகி இருக்கிறார். டாலி டீ போடும் விதத்தை பார்க்கவும், அந்த டீ எப்படி இருக்கிறது என்பதை சுவைத்து பார்க்கவும் பில் கேட்ஸ் முடிவு செய்தார்.

    இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பில் கேட்ஸ் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார். இதனிடையே பில் கேட்ஸ், டாலி கடையிலும் ஒரு டீயை வாங்கி சுவைத்தார். மேலும் இது தொடர்பான வீடியோவை தனது இன்ஸ்டாகிராமிலும் அவர் பகிர்ந்துள்ளார்.

    அந்த பதிவில், "எளிமையான ஒரு கப் தேநீரில் துவங்கி, இந்தியாவில் எங்கு திரும்பினாலும் புதுமையை பார்க்க முடியும்," என்று குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.



    • டீ, காபியில் அதிக அளவில் காஃபின் உள்ளது. அது நரம்பு மண்டலத்தை பாதிக்கக்கூடியது.
    • ஒரு நாளைக்கு 300 மில்லி கிராம் அளவுக்கு மேல் காஃபின் உட்கொள்ள கூடாது என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.

    தேசிய ஊட்டச்சத்து நிறுவனத்துடன் இணைந்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் 17 புதிய வழிகாட்டுதல்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

    டீ, காபியில் அதிக அளவில் காஃபின் உள்ளது. அது நரம்பு மண்டலத்தை பாதிக்கக்கூடியது. 150 மில்லி கிராம் காபியில் 80-120 மில்லி கிராம் காஃபின் உள்ளது. இன்ஸ்டன்ட் காபியில் 50-65 மில்லி கிராம் காஃபின் உள்ளது. டீயில் 30-65 மில்லி கிராம் காஃபின் உள்ளது.

    ஆகவே ஒரு நாளைக்கு 300 மில்லி கிராம் அளவுக்கு மேல் காஃபின் உட்கொள்ள கூடாது என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.

    உணவு சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பும், பின்பும் தேநீர், காபி குடிக்க வேண்டாம் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அறிவுறுத்தியுள்ளது.

    ஏனெனில் உணவில் இருந்து உடலுக்குச் செல்லும் இரும்புச் சத்துக்கள் டீ, காபி போன்ற பானங்களால் தடைப்படக்கூடும் எனவும் இதனால் அனீமியா, ரத்த சோகை போன்ற உடல் நலக்குறைபாடு ஏற்படலாம் எனவும் அதிகளவில் காபி குடிப்பது ரத்த அழுத்தத்தை அதிகரிக்கலாம் எனவும் ஆய்வறிக்கையில் தெரிய வந்துள்ளது.

    அதே சமயம் பால் இல்லாமல் தேநீர் அருந்துவதால் ரத்த ஓட்டம் சீராகிறது எனவும் வயிற்று புற்றுநோய் ஏற்படுவதறகான வாய்ப்பு குறைகிறது என்றும் ஆய்வில் தெரிய வந்துள்ளது.

    தேநீர் மற்றும் காபி குடிப்பதை கட்டுப்படுத்தி, பழங்கள், காய்கறிகள், தானியங்கள், இறைச்சிகள் மற்றும் கடல் உணவுகளை சாப்பிடலாம் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அறிவுறுத்தியுள்ளது.

    அதே நேரத்தில் எண்ணெய், சர்க்கரை மற்றும் உப்பு நிறைந்த உணவுகளை குறைவான அளவே எடுத்து கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • ஐக்கிய நாடுகள் சபையின் படி ஆண்டுதோறும் மே 21 அன்று சர்வதேச தேயிலை தினம் கொண்டாடப்படுகிறது.
    • 5,000 ஆண்டுகளுக்கு முன்பு சீனாவில் தேநீர் அருந்தப்பட்டதற்கான சான்றுகள் உள்ளன.

    காலையில் ஒரு கப் டீ இல்லாமல் ஒரு சிலருக்கு நாளே ஓடாது. உலகின் பல்வேறு பகுதிகளில் பலர் தேநீர் பிரியர்களாக உள்ளனர். தேநீர் என்பது பல வீடுகளில் மாலையிலும், காலையில் ஒரு முறையும் கட்டாயம் குடிக்க வேண்டிய பானமாக மாறிவிட்டது. இஞ்சி டீ, சுலைமான் டீ, பிளாக் டீ தொடங்கி மசாலா டீ, லெமன் டீ என தேநீர் வகைகளின் பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது. ஐக்கிய நாடுகள் சபையின் படி ஆண்டுதோறும் மே 21 அன்று சர்வதேச தேயிலை தினம் கொண்டாடப்படுகிறது.

    தேநீர் என்பது கேமிலியா சினேசிஸ் தாவரத்தில் இருந்து தயாரிக்கப்படும் ஒரு பானமாகும். தண்ணீருக்கு அடுத்தபடியாக உலகில் அதிகம் உட்கொள்ளும் பானம் தேநீர். தேயிலை வடகிழக்கு இந்தியா, வடக்கு மியான்மர் மற்றும் தென்மேற்கு சீனாவில் தோன்றியதாக நம்பப்படுகிறது, ஆனால் ஆலை முதலில் வளர்ந்த சரியான இடம் தெரியவில்லை. தேநீர் நீண்ட காலமாக எங்களுடன் உள்ளது. 5,000 ஆண்டுகளுக்கு முன்பு சீனாவில் தேநீர் அருந்தப்பட்டதற்கான சான்றுகள் உள்ளன.


    தேயிலை உற்பத்தி மற்றும் பதப்படுத்துதல் வளரும் நாடுகளில் மில்லியன் கணக்கான குடும்பங்களுக்கு வாழ்வாதாரத்தின் முக்கிய ஆதாரமாக உள்ளது மற்றும் பல குறைந்த வளர்ச்சியடைந்த நாடுகளில் வாழும் மில்லியன் கணக்கான ஏழைக் குடும்பங்களின் முக்கிய வாழ்வாதாரமாக உள்ளது.

    தேயிலை தொழில் சில ஏழ்மையான நாடுகளுக்கு வருமானம் மற்றும் ஏற்றுமதி வருவாயின் முக்கிய ஆதாரமாக உள்ளது, மேலும் தொழிலாளர்-தீவிர துறையாக, குறிப்பாக தொலைதூர மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய பகுதிகளில் வேலைகளை வழங்குகிறது. வளரும் நாடுகளில் கிராமப்புற மேம்பாடு, வறுமைக் குறைப்பு மற்றும் உணவுப் பாதுகாப்பு ஆகியவற்றில் தேயிலை குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கிறது, இது மிக முக்கியமான பணப்பயிர்களில் ஒன்றாகும்.


    தேயிலை நுகர்வு பானத்தின் அழற்சி எதிர்ப்பு, ஆக்ஸிஜனேற்ற மற்றும் எடை இழப்பு விளைவுகளால் ஆரோக்கிய நன்மைகளையும் ஆரோக்கியத்தையும் தருகிறது. இது பல சமூகங்களில் கலாச்சார முக்கியத்துவத்தையும் கொண்டுள்ளது.

    தனிநபர் நுகர்வு ஒப்பீட்டளவில் குறைவாக இருக்கும் தேயிலை உற்பத்தி செய்யும் நாடுகளில், தேவையை விரிவுபடுத்துவதற்கான அதிக முயற்சிகளை இயக்குவதற்கு, தேயிலை மீதான அரசாங்கங்களுக்கு இடையேயான குழுவின் அழைப்பை மீண்டும் வலியுறுத்துவது மற்றும் பாரம்பரிய இறக்குமதி செய்யும் நாடுகளில் தனிநபர் நுகர்வு குறைந்து வருவதை நிவர்த்தி செய்வதற்கான முயற்சிகளை ஆதரிப்பது, பொதுச் சபை மே 21 ஐ சர்வதேச தேயிலை தினமாக அறிவிக்க முடிவு செய்தது .


    தேயிலையின் நிலையான உற்பத்தி மற்றும் நுகர்வுக்கு ஆதரவான நடவடிக்கைகளை செயல்படுத்துவதற்கும், பசி மற்றும் வறுமையை எதிர்த்துப் போராடுவதில் அதன் முக்கியத்துவத்தைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் இந்த நாள் கூட்டு நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் மற்றும் வளர்க்கும்.

    • பொதுவாக தேநீர் என்று சொல்லும் போது இந்தியாவில் பால் சேர்த்து தயாரிக்கப்படும் டீயை மட்டுமே குறிக்கிறோம்.
    • அதிகப்படியான டீ அல்லது காபி குடிப்பது தலைவலியை ஏற்படுத்தலாம்.

    டீ....

    உடலுக்கும், மனதிற்கும் புத்துணர்ச்சியை தரக்கூடியது தேநீர் அல்லது டீ.

    உலகின் மிகவும் பிரபலமான பானங்களில் ஒன்றாக கருதப்படும் டீயில் ஏராளமான வகைகள் உள்ளன. அவற்றில் சில வகையான தேநீர் உடலுக்கு பல்வேறு நன்மைகளை வழங்குகிறது. இந்தியாவிலும் அனைத்து குடும்பங்களிலும் பிரதான பானமாக விளங்கும் டீயை குடித்தால் பலருக்கும் தலைவலி தீருவதாக கூறுகிறார்கள்.

    இதைப்போல தினசரி வழக்கமான நேரத்திற்கு டீ குடிக்காவிட்டால் தலைவலி வருகிறது என சிலர் கூறுவதையும் காணமுடிகிறது. தேநீருக்கும், தலைவலிக்கும் சம்பந்தம் இருக்கிறதா என நிபுணர்கள் கூறியதாவது:-

    டீயில் கிரீன் டீ, இஞ்சி டீ, எலுமிச்சை டீ என பல்வேறு வகைகள் உள்ளன. அவற்றில் சில உங்கள் உடலுக்கு பல்வேறு நன்மைகளை செய்திருக்கலாம். அல்லது இல்லாமலும் இருக்கலாம்.


    பொதுவாக தேநீர் என்று சொல்லும் போது இந்தியாவில் பால் சேர்த்து தயாரிக்கப்படும் டீயை மட்டுமே குறிக்கிறோம். ஆனால் இந்த வகையான தேநீர் தலைவலியை தீர்க்க நேரடியாக உதவாது.

    தலைவலி பிரச்சனைக்கும், தேநீர் அருந்துவதற்கும் இடையே நேரடி ஆதாரம் இல்லை. ஆனால் நீரிழப்பு தலைவலியை தூண்டும் என்பதால், நீரேற்றத்திற்கு தேநீர் உதவும் என்று நினைப்பதில் பயன் உள்ளது.

    தேநீர் நாசி சைனசை குறைக்கும். மேலும் சைனசிடிசால் ஏற்படும் தலைவலியில் இருந்து நிவாரணம் அளிக்கும். இதே போல சிலவகையான தேநீரில் காபின் உள்ளது. இது தலைவலிக்கு தீர்வாக அமையும். காபின் ரத்த நாளங்களை சுருக்கி தலைவலி அறிகுறிகளை குறைக்கும். தேநீர் அருந்துவதால் கிடைக்கும் பயன்கள் நபருக்கு, நபர் மாறுபடும். இஞ்சி டீ ஒற்றைத்தலைவலி நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் பயனுள்ளதாக இருக்கும்.

    பொதுவாக தேநீரில் பயன்படுத்தப்படும் இஞ்சி, ஏலக்காய் மற்றும் இலவங்க பட்டை போன்ற மசாலா பொருட்களில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. அவை வலி மற்றும் அசவுகரியத்தை குறைக்கும். 2020-ன் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இஞ்சி ஒற்றைத்தலைவலி நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் பயன் உள்ளதாக இருக்கும் என்பது கண்டறியப்பட்டுள்ளது.

    ஆனால் தேநீரில் உள்ள நறுமணம் தலைவலியை குணப்படுத்தும் என்பதை நிரூபிக்க போதுமான அறிவியல் சான்றுகள் இல்லை. தேநீரில் உள்ள மசாலா பொருட்கள் ஒரு இனிமையான விளைவை கொண்டிருக்கும். இது மன அழுத்தம் தொடர்பான தலைவலியை குறைக்கும் என்று சிலர் நம்புகிறார்கள்.

    அதே நேரம் தேநீர் தலைவலியை தூண்டும் என்றும் கருதுபவர்களும் இருக்கிறார்கள். அதிகப்படியான டீ அல்லது காபி குடிப்பது தலைவலியை ஏற்படுத்தலாம். ஏனெனில் அவற்றை சீரான இடைவெளியில் அருந்தும் போது, அவை மூளையில் உள்ள ரத்த நாளங்களை சுருக்கி தலைவலியை ஏற்படுத்துகின்றன. இது தொடர்பாக ஏராளமான மாறுபட்ட தகவல்கள் உள்ளன. ஆனால் அதற்கு அறிவியல் ஆதாரம் இல்லை என்றனர்.

    உணவு சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பும், பின்பும் தேநீர் அல்லது காபி சாப்பிடுவதை தவிர்க்குமாறு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அறிவுறுத்தி உள்ளது.

    • டீக்கு வாழ்நாள் முழுக்க பழகியவர்களை மாற்ற முடியாது.
    • காபி மிட்டாய்களை அறிமுகபடுத்தி, குழந்தைகளிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

    1950... இரண்டாம் உலகபோர் முடிந்து ஜப்பான் மறுசீரமைக்கபட்டது. பொருளாதாரம் முன்னேறி வந்தது. நெஸ்லே கம்பனி ஜப்பானில் காபி விற்பனை செய்யலாம் என முனைந்தது. ஆனால் ஒரு சின்ன பிரச்சனை. ஜப்பானியர்கள் க்ரீன் டீ பிரியர்கள். நாள் முழுக்க ஏராளமான க்ரீன் டீ குடிப்பார்களே ஒழிய காபி குடிக்க மாட்டார்கள்.

    ஜப்பானியர்களுக்கு காபி குடிக்க கொடுத்து சோதனை செய்தார்கள். காபி குடித்த ஜப்பானியர்கள் "ஆகா, அருமை, அற்புதம்" என்றார்கள். அதன்பின் நெஸ்கபே ஜப்பானில் ஆரவாரமாக அறிமுகம் செய்யப்பட்டது. ஏராளமான பொருள்செலவில் விளம்பரம், கடைகளில் ஸ்டாக் எல்லாம் செய்தும் விற்பனை சுத்தமாக இல்லை.

    காபியை குடிக்க சொல்லி கொடுத்தால் நல்லா இருக்கு என்கிறார்கள். ஆனால் அதன்பின் பழைய வழக்கமான க்ரீன் டீக்கு போய்விடுகிறார்கள். காபியை குடிப்பது இல்லை. இவர்களை என்ன செய்வது?

    பிரபல மனிதவியல் நிபுணர், மனநல நிபுணர் க்லோடேர் ராபில்லியை அழைத்து வந்து ஐடியா கேட்டார்கள்.

    "இப்ப அமெரிக்காவில் எல்லாரும் காபி குடிக்கிறீர்கள். திடீர்னு க்ரீன் டீக்கு மாற சொன்னால் மாறுவீர்களா?"

    "அது எப்படி மாறுவோம்?"

    "அந்த மாதிரிதான். க்ரீன் டீக்கு வாழ்நாள் முழுக்க பழகியவர்களை மாற்ற முடியாது. ஆனால் அடுத்த தலைமுறையை குறிவைத்தால், அவர்களை காபிக்கு பழக்கபடுத்தலாம். அதற்கு ஒரு பத்து ஆண்டுகளாவது ஆகும். காத்திருக்க தயாரா?"

    "தயார். என்ன செய்யவேண்டும்"

    "குழந்தைகளுக்கு காபி மிட்டாய்களை அறிமுகபடுத்துங்கள். தினமும் அவர்கள் காபிக்கு பழக்கபடுத்தினால், திரவமாக அதை பின்னாளில் சந்தைப்படுத்துவது எளிது"

    நெஸ்கபே அதன்பின் காபி மிட்டாய்களை அறிமுகபடுத்தி, குழந்தைகளிடம் நல்ல வரவேற்பை பெற்றது. பத்து ஆண்டுகள் பொறுத்திருந்து இன்ஸ்டன்ட் காபியை அறிமுகபடுத்த, இளைய தலைமுறையிடம் பெரிய ஹிட் ஆனது

    காபிக்கு கிடைத்த வரவேற்பை பார்த்து, கொகோகோலா கம்பனி, கேன் வடிவில் ஜார்ஜியா ஐஸ் காபி எனும் பானத்தை அறிமுகபடுத்தியது. கேன்களில் கிடைத்த குளிர்ந்த ஐஸ் காப்பியை இளைஞர்கள் வாங்கி குடித்தார்கள். இன்று கொகோகோலாவை விட அதிகமாக விற்கும் பானமாக ஜார்ஜியா ஐஸ் காபி மாறியது

    பன்னாட்டு பிசினஸ்பிஸ்தாக்கள் நீண்டகால ஆட்டத்தை ஆடுவதில் கைதேர்ந்தவர்கள். ஆயிரமாயிரம் ஆண்டு வழக்கத்தை ஒரே தலைமுறையில் மாற்றுவது என்றால் சும்மாவா என்ன?

    பொறுத்தார் பூமி ஆள்வார்

    - நியாண்டர் செல்வன்

    • நாம் கடன் வாங்கி தேயிலை இறக்குமதி செய்வதை தவிர்க்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
    • மின்சார செலவை மிச்சப்படுத்துவதற்காக இரவு 8.30 மணிக்கெல்லாம் சந்தைகளை மூட வேண்டும் என ஏற்கனவே அவர் தெரிவித்து இருந்தார்.

    இஸ்லாமாபாத்:

    அந்நிய செலாவணி கையிருப்பு குறைந்து வருவதால் பாகிஸ்தானில் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து வீண் செலவுகளை குறைக்க அந்நாடு திட்டமிட்டு வருகிறது.

    குறிப்பாக இறக்குமதி மூலம் ஏற்படும் பொருளாதார இழப்பை அந்நாட்டு அரசு சரி செய்ய திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் பொருளாதார பாதிப்பில் இருந்து மீள பொதுமக்கள் டீக்குடிப்பதை குறைத்துக்கொள்ள வேண்டும் என அந்நாட்டு மந்திரி ஆஷான் இக்பால் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    பாகிஸ்தான் உலகின் மிகப்பெரிய தேயிலை இறக்குமதி நாடுகளில் ஒன்றாக இருக்கிறது. கடந்த நிதியாண்டில் 8000 கோடி ரூபாய் இந்த தேயிலை இறக்குமதிக்காக செலவிடப்பட்டுள்ளது. இந்த தொகை நாம் கடன் வாங்கிய தொகையாகும். நாம் கடன் வாங்கி தேயிலை இறக்குமதி செய்வதை தவிர்க்க வேண்டும். இதற்கு பாகிஸ்தான் மக்கள் தினம் டீக்குடிப்பதை 1 அல்லது 2 கப் அளவில் குறைத்துகொள்ள வேண்டும்.

    இவ்வாறு இக்பால் தெரிவித்துள்ளார்.

    இக்பாலின் இந்த கருத்துக்கு மக்களிடையே கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இதேபோல் அவர், பாகிஸ்தான் வணிகர்கள் மின்சார செலவை மிச்சப்படுத்துவதற்காக இரவு 8.30 மணிக்கெல்லாம் சந்தைகளை மூட வேண்டும், அவ்வாறு செய்வது நாம் பெட்ரோல் இறக்குமதி செலவை குறைக்க உதவும் என ஏற்கெனவே கூறியிருந்தார்.

    ×