என் மலர்
நீங்கள் தேடியது "தூக்கு போட்டு"
- மோகன்குமார் மின் விசிறியில் சேலையால் தூக்கு போட்டு தொங்கி கொண்டு இருந்தார்
- இது குறித்து கோபிசெட்டிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்கள்.
கோபி:
கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள மொடச்சூர் பகுதியை சேர்ந்தவர் பால முருகன். இவரது மகன் மோகன் என்ற மோகன் குமார் (வயது 22).
அவர் வீட்டு மாடியில் பனியன் கம்பெனி வைத்து நடத்தி வந்தார். இவருக்கு குடி பழக்கம் இருந்து வந்த தாக கூறப்படுகிறது. மோகன்குமார் வேலை முடிந்து இரவு நஞ்ச கவுண்டன் பாளையத்தில் உள்ள வீட்டில் தங்கி வந்தார்.
இந்த நிலையில் மோகன் குமார் நஞ்சகவுண்டன் பாளையத்தில் உள்ள வீட்டில் இரவு தூங்க சென்றார். காலை நீண்ட நேரமாகியும் அவர் வெளியே வராததால் சந்தேகம் அடைந்த அவரது உறவி னர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் வீட்டு கதவை உடைத்து சென்று பார்த்தனர்.
அப்போது மோகன்குமார் மின் விசிறியில் சேலையால் தூக்கு போட்டு தொங்கி கொண்டு இருந்தார்.இதை கண்ட அவரது உறவினர்கள் அவரை மீட்டு கோபிசெட்டிபாளையம் அரசு ஆஸ்பத்தி ரிக்கு கொண்டு சென்றனர்.
அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து கோபிசெட்டிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்கள்.
- ராமு அங்கு தூக்கில் தொங்கிய நிலையில் இருந்தார்.
- அந்தியூர் இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.
அந்தியூர்:
அந்தியூர் தவிட்டுப்பாளை யம் பகுதியைச் சேர்ந்தவர் ராமு (52). கூலித் தொழி லாளி. இவருக்கு திருமணம் ஆகி மகேஸ்வரி என்ற மனைவியும், 2 மகள்கள் உள்ளனர். 2 மகள்களுக்கும் திருமணம் ஆகிவிட்டது.
ராமுவுக்கு மது பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படு கிறது. ராமுவின் அண்ணன் மகன் குணசேகரன் (37)என்பவர் அந்தியூர் அருகே அரசு பணிமனை அருகே குடியிருந்து வருகின்றார்.
குணசேகரனுக்கு ராமு போன் செய்து நான் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ளப் போகி றேன். நான் இறந்த பிறகு எனக்கு நீ, தான் காரியம் செய்ய வேண்டும் என்று பேசி விட்டு போனை வைத்து விட்டார்.
இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த குணசேகரன் ராமுவின் வீட்டுக்கு சென்று கதவை தட்டினார். அப்போது கதவு உள் பக்க மாக மூடப்பட்டு இருந்தது. இதையடுத்து அக்கம் பக்கத்தினர் உதவியுடன் வீட்டு கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார்.
அப்போது ராமு அங்கு தூக்கில் தொங்கிய நிலையில் இருந்தார். ெபாதுமக்கள் அவரை மீட்டு அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கன வே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
தற்கொலை செய்து கொண்ட ராமு இதே போன்று பலமுறை விளை யாட்டாக போன் செய்து தற்கொலை செய்து கொள்வதாக கூறி வந்ததாக கூறப்படுகிறது.
அதே போல் விளை யாட்டாக அவர் பேசி வரு கிறார் என அவரது குடும்பத்தினர் நினைத்துக் கொண்டார்கள். ஆனால் தற்போது விளையாட்டு வினையாக முடிந்து விட்டது.
இது குறித்து அந்தியூர் இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.
- முரளி தூக்கு போட்டு தொங்கி கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்
- அவரை பரிசோதித்த டாக்டர்கள் முரளி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்
ஈரோடு மாணிக்க ம்பாளையம், ஆண்டிகாடு பகுதியைச் சேர்ந்தவர் முரளி (43). இவரது மனைவி சவிதா. வீட்டின் கீழ் பகுதியில் சொந்தமாக தறிப்பட்டறை வைத்து நடத்தி வந்துள்ளார். மேல் பகுதியில் அவரது வீடு உள்ளது.
இந்நிலையில் சம்பவ த்தன்று முரளியின் மகன் கீழ் பகுதியில் விளையாடிக் கொண்டிருந்தார். சவிதா தறிப்பட்டறையில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். மேல் வீட்டில் முரளி மட்டும் இருந்துள்ளார். முரளியின் இளைய மகன் தண்ணீர் குடிப்பதற்காக மேல் வீட்டுக்கு சென்றார். அப்போது கதவு தாழிடப்ப ட்டிருந்தது. கதவை திறந்து பார்த்தபோது தந்தை முரளி தூக்கு போட்டு தொங்கி கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உடனடியாக அவர் இது குறித்து தனது தாய் மற்றும் அக்கம் பக்கத்தினருக்கு தகவல் தெரிவித்தார். அவர்கள் முரளியை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் முரளி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- பவித்ரா, இருவரையும் தங்களது வீட்டுக்கு வருமாறு அழைத்துள்ளார்.
- இருவருக்கும் திருமணமாகி 3 ஆண்டுகளேயாவதால் ஆர்.டி.ஓ.வும் விசாரணை நடத்தி வருகிறார்.
பெருந்துறை:
திருப்பூர் வீரபாண்டியைச் சேர்ந்தவர் மணிகண்டன் (26). இவரது மனைவி கவுதமி (22). இருவரும் திருப்பூரில் ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்தபோது காதலித்து திருமணம் செய்து கொண்டனர். திருமணம் குறித்து மணி கண்டன் தனது பெற்றோ ருக்கு தெரிவிக்கவில்லை யாம்.
தற்போது இவர்களுக்கு 2 வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளது.
இந்த நிலையில், தங்களது திருமணம் குறித்து மணி கண்டனின் பெற்றோரிடம் தெரிவிக்குமாறு கெளதமி கூறியுள்ளார்.
இதையடுத்து மணி கண்டன், முதற்கட்டமாக, ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் வசித்து வரும் தனது சகோதரி பவித்ராவிடம் தங்களது திருமணம் குறித்து தெரி வித்துள்ளார்.
இதையடுத்து பவித்ரா, இருவரையும் தங்களது வீட்டுக்கு வருமாறு அழைத்துள்ளார்.
அதன்பேரில், மணி கண்டனும் கவுதமியும், பெருந்துறையில் உள்ள பவித்ராவின் வீட்டுக்கு நேற்று வந்துள்ளனர். அவர்கள் பேசிக் கொண்டிருந்தபோது, தங்களுக்கு தெரியாமல் இருவரும் திருமணம் செய்து கொண்டது குறித்து பவித்ரா கேட்டதாக தெரிகிறது.
இதனால் மனமுடைந்த கவுதமி பவித்ராவின் வீட்டில் உள்ள குளியல் அறைக்குள் சென்று துப்பட்டாவால் தூக்குப் போட்டுக் கொண்டுள்ளார்.
வெகு நேரமாகியும் கவுதமி வெளியில் வராத தால் குளியல் அறை கதவை உடைத்து பார்த்தனர்.
அங்கு தூக்கில் தொங்கிய கவுதமியை மீட்டு பெருந்துறை அரசு மருத்து வக் கல்லூரி மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர், கவுதமி ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தார்.
இதுகுறித்து, கவுதமியின் சகோதரர் செல்லதுரை அளித்த புகாரின் பேரில் பெருந்துறை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மேலும், இருவருக்கும் திருமணமாகி 3 ஆண்டுகளேயாவதால் ஆர்.டி.ஓ.வும் விசாரணை நடத்தி வருகிறார்.
- முருகாத்தாள் கணவரிடம் மது அருந்தி வந்ததற்காக சத்தம் போட்டார்.
- முருகாத்தாள் வீட்டுக்கு வந்து கதவை தட்டியுள்ளார்.
ஈரோடு,
ஈரோடு மாவட்டம் பங்களாபுதூர் அடுத்த அரக்கன் கோட்டை பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் ரங்கசாமி (33). கட்டிட கூலித் தொழிலாளி. இவரது மனைவி முருகாத்தாள் (27). இவர்களுக்கு 13 வயதில் ஒரு மகன் உள்ளார். ரங்கசாமிக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது.
இந்நிலையில் ஊரில் கோவில் திருவிழாவை ஒட்டி நேற்று முருகாத்தாள் அம்மாவும், அவரது தம்பியும் முருகாத்தாள் வீட்டுக்கு வந்துள்ளனர்.
அப்போது அரங்கசாமி மது அருந்து வீட்டுக்கு வந்து வாந்தி எடுத்துள்ளார். இதனால் முருகாத்தாள் கணவரிடம் மது அருந்தி வந்ததற்காக சத்தம் போட்டார்.
பின்னர் ஒரு குடம் தண்ணீரை எடுத்து ஒரு ரங்கசாமி மீது ஊற்றினார். இதனால் ஆத்திரமடைந்த ரங்கசாமி தான் எங்கேயாவது போய் விடுகிறேன் என்று கூறியுள்ளார். பின்னர் முருகாத்தாள் அவரது தாய் மற்றும் தம்பி கோவில் திருவிழாவுக்கு சென்று விட்டனர்.
வீட்டில் ரங்கசாமி இருந்துள்ளார். பின்னர் முருகாத்தாள் வீட்டுக்கு வந்து கதவை தட்டியுள்ளார். ஆனால் பதில் ஏதும் வரவில்லை. கதவு உள் தாழ்பால் போடப்பட்டிருந்தது. ஜன்னல் வழியாக பார்த்தபோது ரங்கசாமி வீட்டில் உள்ள அறையில் தூக்கு போட்டு தொங்கி கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
அக்கம், பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர் . அவரை பரிசோதித்த மருத்துவர் வரும் வழியிலேயே ரங்கசாமி இறந்துவிட்டதாக தெரிவித்தார். இது குறித்து பங்களாபுதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தனியாக தங்கியிருந்து அதே பகுதியில் இட்லி கடை நடத்தி வந்தார்.
- தனது வீட்டில் சேலையால் தூக்கு மாட்டி கொண்டார்.
சென்னிமலை,
சென்னிமலை அருகே ஊத்துக்குளி ரோடு மேலப்பாளை யத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவர் ஏற்கனவே இறந்துவிட்டார்.
இவரது மனைவி செல்வி (55). இவர்களுடைய மகன் சுரேஷ் (34). இவர் திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளியில் வசித்து வருகிறார்.
செல்வி, மேலப்பாளையத்தில் தனியாக தங்கியிருந்து அதே பகுதியில் இட்லி கடை நடத்தி வந்தார்.
நோயால் பாதிக்கப்பட்ட செல்வி மனம் உடைந்து தனது வீட்டில் சேலையால் தூக்கு மாட்டி கொண்டார். உடனடியாக அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் செல்வியை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே செல்வி இறந்து விட்டார்.
- அறுவை சிகிச்சை செய்ய பெரியசாமிக்கு விருப்பம் இல்லாமல் இருந்தது.
- செட்டின் விட்டதில் தூக்கு போட்டு தற்கொலைக்கு முயன்றார்.
ஈரோடு,
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த பெரிய வெட்டுவபாளையம், தலைகரைபுதூர் பகுதியைச் சேர்ந்தவர் பெரியசாமி (82). தனது குடும்பத்துடன் வசித்து வந்தார். பெரியசாமிக்கு 2 கால்களிலும் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. மேலும் அவருக்கு கட்டி இருந்ததால் அறுவை சிகிச்சை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.
ஆனால் இந்த அறுவை சிகிச்சை செய்ய பெரியசாமிக்கு விருப்பம் இல்லாமல் இருந்தது. இதனால் தான் அடிக்கடி சாவதே மேல் என்று அவர் கூறி வந்துள்ளார்.
உறவினர்கள் அவருக்கு ஆறுதல் கூறி வந்தனர்.இந்நிலையில் நேற்று பெரியசாமி வீட்டில் உள்ளவர்கள் சென்னிமலை சென்று விட்டனர். பெரியசாமி மட்டும் வீட்டில் இருந்து உள்ளார். அப்போது தற்கொலை செய்ய முடிவு எடுத்த பெரியசாமி மாடு கட்டும் நைலான் கயிற்றால் வெளியில் உள்ள செட்டின் விட்டதில் தூக்கு போட்டு தற்கொலைக்கு முயன்றார்.
உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக பெருந்துறை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே பெரியசாமி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தினமும் மாத்திரை சாப்பிட்டு வந்த நிலையில் மூட்டு அறுவை சிகிச்சையால் மணி அவதிப்பட்டு வந்துள்ளார்.
- மணிக்கு கடந்த 3 வருடங்களுக்கு முன்பு அவரது 2 முழங்கால்க ளிலும், மூட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம், கவுந்தப்பாடி அருகே உள்ள சலங்கபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் மணி (63). இவரது மனைவி கடந்த 8 வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார்.இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.
மணிக்கு கடந்த 3 வருடங்களுக்கு முன்பு அவரது 2 முழங்கால்க ளிலும், மூட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இதனால் தினமும் மாத்திரை சாப்பிட்டு வந்த நிலையில் மூட்டு அறுவை சிகிச்சையால் மணி அவதிப்பட்டு வந்துள்ளார்.
இந்த நிலையில் சம்பவ த்தன்று இரவு மணி தனது வீட்டினுள் உள்ள பேனில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் பெருந்துறையில் வசித்து வரும் அவரது மகள் நந்தினிக்கு தகவல் தெரிவித்தனர்.
அவர் கொடுத்த புகாரின் அடிப்ப டையில் கவுந்தப்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஜன்னல் வழியாக பார்த்த போது கவுசல்யா வீட்டில் உள்ள அறையில் தூக்கு மாட்டி தொங்கி கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்
- அவரை பரிசோதித்த மருத்துவர் ஏற்கனவே கவுசல்யா இறந்து விட்டதாக தெரிவித்தார்
ஈரோடு
ஈரோடு மாவட்டம் வெள்ளோடு அடுத்த தஞ்சாங்கரை பகுதியை சேர்ந்தவர் முத்துசாமி. இவரது மனைவி கவுசல்யா (26). இவர்களுக்கு 2 வயதில் மகன் உள்ளார்.
கடந்த இரண்டு வருடமாக கவுசல்யா அதே பகுதியில் உள்ள தனது தாய் வீட்டில் வசித்து வந்தார். முத்துசாமி அவ்வப்போது தனது மனைவி, மகனை பார்த்து வந்துள்ளார். கவுசல்யாவின் தாய் தனது மகள், மருமக னிடம் நீங்கள் கவுந்தப்பாடி யில் போய் குடியேருமாறு அறிவுறுத்தி வந்தார்.
இந்நிலையில் நேற்று கவுசல்யாவின் தாய் மற்றும் அவரது அண்ணன் வெளியே சென்று விட்டனர். வீட்டில் கவுசல்யா மற்றும் அவரது 2 வயது மகன் மட்டும் இருந்தனர். வெளியே சென்ற அவரது தாய் மற்றும் அண்ணன் மீண்டும் வீட்டுக்கு வந்தனர். அப்போது வீட்டில் வெளியே கவுசல்யா மகன் மட்டும் விளையாடிக் கொண்டிருந்தான். வீட்டின் கதவு பூட்டப்பட்டிருந்தது. அவரது தாய் கதவைத் தட்டி உள்ளார்.
ஆனால் பதில் வரவில்லை. உள் பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. ஜன்னல் வழியாக பார்த்த போது கவுசல்யா வீட்டில் உள்ள அறையில் தூக்கு மாட்டி தொங்கி கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மகளை மீட்டு வெள்ளோ ட்டில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.
பின்னர் மேல் சிகிச்சை க்காக அவரை பெருந்துறை மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர் ஏற்கனவே கவுசல்யா இறந்து விட்டதாக தெரிவி த்தார்.
இதுகுறித்து வெள்ளோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- காதலித்த பெண்ணுக்கு வேறு ஒருவருடன் திருமணம் நிச்சயம்
- ரத்தினபுரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவை,
கோவை ரத்தினபுரியை சேர்ந்தவர் பிரவீன் குமார் (வயது 28). இவர் மோட்டார் சைக்கிள் உதிரி பாகங்களை விற்பனை செய்து வந்தார்.
இவர் அதே பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவரை கடந்த 8 வருடங்களாக காதலித்து வந்தாக கூறப்படுகிறது. இந்நிலையில் அப்பெண்ணுக்கு வேறு ஒருவருடன் திருமணம் செய்ய நிச்சயம் ஆனது. இதனை அறிந்த பிரவீன் சில நாட்களாக மன வருத்தத்தில் இருந்ததாக தெரிகிறது. சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்த புகாரின் பேரில் ரத்தினபுரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவை சரவணம்பட்டியை சேர்ந்தவர் ரவி (40). இவர் தனியார் நிறுவனத்தில் வெல்டராக வேலை செய்து வந்தார்.
இவர் குடும்ப செலவுக்காக ரூ.5 லட்சம் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. ஆனால் அவரால் கடனை திருப்பி கொடுக்க முடியவில்லை. இதனால் அவர் மனவேதனையில் இருந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 1 மாதத்துக்கு முன்பு சிறுவிபத்தில் அவரது கையில் காயம் ஏற்பட்டு அவரால் வேலைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
சம்பவத்தன்று காலை அவரது மனைவி வேலைக்கு சென்று விட்டார். அப்போது வாழ்க்கையில் விரக்தி அடைந்த ரவி வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்த புகாரின் பேரில் சரவணம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- முருகன் இவரது மனைவி மாரிச்செல்வி (34). கடந்த 10 வருடங்களாக அவர்கள் நாமகிரிப்பேட்டை அருகே உள்ள வெள்ளக்கல்பட்டியில் குடியிருந்து வருகின்றனர்.
- இதற்கிடையில் கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
நாமக்கல்:
தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள வல்லம் கிராமம் சித்தி விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி மாரிச்செல்வி (34). கடந்த 10 வருடங்களாக அவர்கள் நாமகிரிப்பேட்டை அருகே உள்ள வெள்ளக்கல்பட்டியில் குடியிருந்து வருகின்றனர். முருகன் குடும்பத்தினர் முறுக்கு வியாபாரம் செய்து வந்தனர். இதற்கிடையில் கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.இந்த நிலையில் நேற்று அதிகாலையில் சமையல் அறையில் கயிறு மூலம் மாரிச்செல்வி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது பற்றி தகவல் அறிந்த நாமகிரிப்பேட்டை போலீசார் தற்கொலை செய்து கொண்ட மாரிச்செல்வியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சசிகுமார் (வயது 27). இவர் கட்டிட தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இன்னும் திருமணம் ஆகவில்லை.
- அடிக்கடி குடித்துவிட்டு வீட்டில் தகராறு செய்து வந்துள்ளார். மேலும் ஏற்கனவே 2 முறை தற்கொலைக்கும் முயன்றுள்ளார் என கூறப்படுகிறது.
திருச்செங்கோடு:
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு சாணார்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சசிகுமார் (வயது 27). இவர் கட்டிட தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இன்னும் திருமணம் ஆகவில்லை. சசிகுமாரின் தந்தை இறந்துவிட்ட நிலையில் தாயுடன் வசித்து வந்தார்.
இவருக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது. அடிக்கடி குடித்துவிட்டு வீட்டில் தகராறு செய்து வந்துள்ளார். மேலும் ஏற்கனவே 2 முறை தற்கொலைக்கும் முயன்றுள்ளார் என கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 21-ந் தேதி சசிகுமாரின் தாய் உறவினர் திருமணத்திற்காக பல்லடம் சென்று விட்டார். அன்று மாலை வீட்டில் தனியாக இருந்த சசிகுமார் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். மேலும் தனது வாட்ஸ் அப்பில் சோகமான ஸ்டேடஸ்களை வைத்திருந்ததாக கூறப்படுகிறது.
இதை பார்த்து சந்தேகமடைந்த இவரது நண்பர்கள் சசிகுமார் வீட்டிற்கு வந்தனர். அங்கு அவர் தூக்கில் தொங்கியதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து அவரை மீட்டு திருச்செங்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
இது குறித்து திருச்செங்கோடு டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.