என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போக்குவரத்து மாற்றம்"

    • வாகனங்கள் மாற்று வழியில் பழைய மாமல்லபுரம் சாலை வழியாக செல்ல வழிவகை செய்யப்பட்டுள்ளது.
    • போக்குவரத்து மாற்றத்துக்கு வாகன ஓட்டிகள் ஒத்துழைப்பு தரும்படி தாம்பரம் மாநகர போலீஸ் சார்பில் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    சென்னையை அடுத்த தாம்பரம் மாநகர போலீஸ் சார்பில் கிழக்கு கடற்கரை சாலையில் நாளை(சனிக்கிழமை) காலை 7 மணி முதல் 10 மணி வரை ஹெல்மெட் குறித்த விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட உள்ளது. இதனால் கிழக்கு கடற்கரை சாலையில் அக்கரை சந்திப்பிலிருந்து மாமல்லபுரம் நோக்கி வாகனங்கள் செல்ல முழுவதும் தடுக்க வேண்டியுள்ளது. இதனால் வாகனங்கள் மாற்று வழியில் பழைய மாமல்லபுரம் சாலை வழியாக செல்ல வழிவகை செய்யப்பட்டுள்ளது.

    அதன்படி அக்கரையிலிருந்து கிழக்கு கடற்கரை சாலையில் செல்லும் வாகனங்கள் அனைத்தும் அக்கரை சந்திப்பில் வலதுபுறம் திரும்பி கே.கே.சாலை வழியாக சென்று பழைய மாமல்லபுரம் சாலையை அடைந்து இடதுபுறம் திரும்பி கேளம்பாக்கம், கோவளம் வழியை பயன்படுத்தி செல்ல வேண்டும். கோவளத்திலிருந்து கிழக்கு கடற்கரை சாலையில் செல்லும் வாகனங்கள் அனைத்தும் கோவளம் சந்திப்பில் இடதுபுறம் திரும்பி கேளம்பாக்கம் வழியாக சென்று பழைய மாமல்லபுரம் சாலையை அடைந்து சோழிங்கநல்லூர் சந்திப்பில் வலதுபுறம் திரும்பி அக்கரை சந்திப்பை அடைந்து இடதுபுறம் திரும்பி திருவான்மியூர் செல்ல வேண்டும்.

    இந்த போக்குவரத்து மாற்றத்துக்கு வாகன ஓட்டிகள் ஒத்துழைப்பு தரும்படி தாம்பரம் மாநகர போலீஸ் சார்பில் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    மேற்கண்ட தகவல் தாம்பரம் மாநகர போலீசார் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    • கபாலீசுவரர் கோவில் பங்குனி பெருவிழாவையொட்டி மயிலாப்பூரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.
    • மாட வீதிகளில் வாகனங்களை நிறுத்தக் கூடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    கபாலீசுவரர் கோவில் பங்குனி பெருவிழாவையொட்டி மயிலாப்பூரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. இதுதொடர்பாக,

    சென்னை மாநகர போக்குவரத்து போலீசார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

    சென்னை மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவில் வருடாந்திர பங்குனி பெருவிழா வரும் 3-ம் தேதி முதல் ஏப்ரல் 12-ம் தேதி வரை நடைபெறுவதை முன்னிட்டு பொதுமக்களின் போக்குவரத்து வசதியை கருதி தேவைப்படும் நேரங்களில் பின்வரும் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்படும். மேற்கண்ட நாட்களில் கபாலீசுவரர் கோவிலைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து கோவிலை நோக்கி வாகனங்கள் அனுமதிக்கப்பட மாட்டாது.

    அதாவது தேவடி தெருவில் இருந்து - நடுத்தெரு மற்றும் சித்ரகுளம் வடக்கு நோக்கி, நடுத்தெரு மற்றும் சுந்தரேஸ்வரர் தெருவில் இருந்து கிழக்கு மாட தெரு நோக்கி, வடக்கு சித்ரகுளத்தில் இருந்து கிழக்கு மாட தெரு நோக்கி, மேற்கு சித்ரகுளம் தெரு, டி.எஸ்.வி. கோவில் தெரு, ஆடம்ஸ் தெரு மற்றும் ஆர்.கே. மடம் சாலையில் இருந்து தெற்கு மாட தெரு நோக்கி, ஆர்.கே.மடம் சாலையில் இருந்து வடக்கு மாட தெரு நோக்கி, கச்சேரி சாலையில் இருந்து மத்தள நாராயணன் தெரு நோக்கி, புனிதமேரி சாலையில் இருந்து ஆர்.கே.மடம் சாலையில் தெற்கு மாடவீதி நோக்கி, டாக்டர் ரங்கா சாலையில் இருந்து வெங்கடேச அக்ரஹாரம் சாலை நோக்கி, முண்டக கன்னியம்மன் கோவில் தெருவில் இருந்து கல்விவாரு தெரு நோக்கியும் வாகனங்கள் அனுமதிக்கப்பட மாட்டாது.

    ராயப்பேட்டை நெடுஞ்சாலையில் இருந்து லஸ் சந்திப்பு வழியாக அடையாறு செல்லும் வாகனங்கள் லஸ் சர்ச் ரோடு, டிசில்வா ரோடு, பக்தவத்சலம் ரோடு, ரங்கா ரோடு, சி.பி.ராமசாமி சாலை, காளியப்பா சந்திப்பு, காமராஜ் சாலை, ஸ்ரீனிவாச அவென்யு, ஆர்.கே.மடம் சாலை வழியாக கிரீன்வேஸ் சந்திப்பை அடையலாம்.

    அடையாறில் இருந்து லஸ் சந்திப்பு வழியாக ராயப்பேட்டை செல்லும் வாகனங்கள் ஆர்.கே.மடம் ரோடு, திருவேங்கடம் தெரு, வெங்கட கிருஷ்ணா ரோடு, சிருங்கேரி மடம் சாலை, வாரன்ரோடு, ரங்கா ரோடு, கிழக்கு அபிராமபுரம் முதல் தெரு, லஸ் அவென்யூ, அமிர்தாஞ்சன் சந்திப்பு, கற்பகாம்பாள் நகர், பி.எஸ்.சிவசாமி சாலை, ராயப்பேட்டை நெடுஞ்சாலை வழியாக இலக்கை அடையலாம்.

    ஆழ்வார்ப்பேட்டை சந்திப்பில் இருந்து லஸ் சந்திப்பு வழியாக செல்லும் வாகனங்கள் ஆலிவர் சாலை, பி.எஸ்.சிவசாமி சாலை சந்திப்பு, விவேகானந்தர் கல்லூரி, ராயப்பேட்டை நெடுஞ்சாலை வழியாக இலக்கை அடையலாம்.

    வருகிற 5-ம் தேதி அதிகாரநந்தி திருவிழா காலை 5 மணி முதல் நிகழ்ச்சி முடிவடையும் வரையிலும், ஏப்ரல் 9-ம் தேதி தேர் திருவிழா காலை 5 மணி முதல் நிகழ்ச்சி முடிவடையும் வரையிலும் மற்றும் ஏப்ரல் 10-ம் தேதி அறுபத்து மூவர் திருவிழா பகல் 1 மணி முதல் நிகழ்ச்சி நிறைவடையும் வரையிலும் மேற்கண்ட போக்குவரத்து மாற்றங்கள் செயல்படுத்தப்படும்.

    வருகிற 5 மற்றும் ஏப்ரல் 9,10-ம் தேதிகளில் சன்னதி தெரு, கிழக்கு மாடவீதி, தெற்கு மாடவீதி, ராமகிருஷ்ணா மடம் சாலை, மேற்கு மாடவீதி மற்றும் வடக்கு மாடவீதி ஆகிய இடங்களில் எந்த வாகனமும் நிறுத்த அனுமதியில்லை. அந்த நாட்களில் கீழ்கண்ட இடங்களில் வாகனங்களை நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது அதன் விவரம் வருமாறு:-

    கிழக்கு அபிராமபுரத்தில் இருந்து வரும் பக்தர்களின் வாகனங்கள் சாய்பாபா கோவில் அருகில், வெங்கடேச அக்ரஹாரம், திருமயிலை பறக்கும் ரெயில்வே நிலைய மேம்பாலத்தின் கீழ் நிறுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. (100 இருசக்கர வாகனங்கள் மற்றும் 30 கார்)

    ராயப்பேட்டை நெடுஞ்சாலையில் இருந்து மயிலாப்பூர் குளம் நோக்கி வரும் பக்தர்களின் வாகனங்கள் லஸ் சர்ச் ரோடு, காமதேனு கல்யாண மண்டபம் எதிரில் நிறுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. (100 இருசக்கர வாகனங்கள் மற்றும் 15 கார்)

    செயின்ட் மேரீஸ் சாலை மற்றும் மந்தவெளி வீதியில் இருந்து மயிலாப்பூர் குளம் நோக்கி வரும் வாகனங்கள் பி.எஸ். பள்ளி அருகே கபாலீசுவரர் கோவில் மைதானத்தில் நிறுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. (400 இருசக்கர வாகனங்கள் மற்றும் 80 கார்)

    காவல்துறை வாகனங்கள் சுந்தரேஸ்வரர் தெருவில் உள்ள ரசிக ரஞ்சனி சபா வளாகத்தில் நிறுத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. (100 இருசக்கர வாகனங்கள் மற்றும் 20 கார்)

    வாகன ஓட்டுனர்களும், பொதுமக்களும் மேற்கண்ட நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு தர வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

    • வாகன நிறுத்த ஏற்பாடுகள் மற்றும் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட உள்ளன.
    • வாலாஜா சாலையில் கூடுதலாக மாநகர பேருத்துகள் மற்றும் சிறப்பு பேருந்துகள் இயக்க அனுமதிக்கப்படாது.

    சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நாளை ஐபிஎல் போட்டி நடக்க உள்ள நிலையில், போக்குவரத்து மாற்றம் மற்றும் வாகன நிறுத்தம் தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக சென்னை போக்குவரத்து காவல் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    TATA IPL Season 2025 கிரிக்கெட் போட்டிகள் 23.03.2025, 28.03.2025, 05.04.2025, 11.04.2025, 25.04.2025, 30.04.2025 & 12.05.2025 Globes MA சிதம்பரம் மைதானத்தில் நடைபெற உள்ளன.

    இப்போட்டிகள் நடைபெறுவதை முன்னிட்டு போட்டி நடைபெறும் நாட்களில் மாலை 5 மணி முதல் இரவு 11 மணி வரையிலும், பின்வருமாறு வாகன நிறுத்த ஏற்பாடுகள் மற்றும் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட உள்ளன.

    நிறுத்தத்திற்கான எற்பாடுகன்:-

    1. பொதுமக்கள் MRTS, உயில் அல்லது மெட்ரோ ரயில் அரசு எஸ்டேட் மெட்ரோ நிலையம் மூலமாக சேப்பாக்கம் நிலையம் வருமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

    2. வாகன நிறுத்தத்திற்கான அனுமதி வைத்திருப்பவர்கள் வாகன அனுமதி அட்டையில் குறிப்பிட்டுள்ளபடி நிர்ணயிக்கப்பட்ட இடத்தில் வாகணங்களை நிறுத்த அனுமதிக்கப்படுகிறார்கள்(இவ்வாகன நிறுத்த இடத்திலிருந்து கிரிக்கெட் மைதாணம் 200 மீட்டர் நடந்து செல்லும் தொலைவில் உள்ளன)

    3. அனுமதி அட்டை வாங்காத வாகனங்கள்:-

    * போட்டியை காண சொந்த வாகனத்தில் வரும் நபர்கள் கதீட்ரல் சாலை மற்றும் R.K சாலை வழியாக காமராஜர் சாலை சென்று மெரினா கடற்கரை அடைந்து மெரினா கடற்கரை சர்வீஸ் சாலையில் தங்கள் வாகனங்களை நிறுத்திவிட்டு, பின்னர் சுரங்கப்பாதைகள் பயன்படுத்தி நடைபயணமாக சென்று மைதானத்தை அடையலாம். (இவ்வாகன நிறுத்த இடத்திலிருந்து கிரிக்கெட் மைதானம் 500 மீட்டர் நடந்து செல்லும் தொலைவில் உள்ளன)

    ஆ. போட்டியை காண டாக்சிகள், ஆட்டோ ரிஷபோன்ற வணிக வாகனத்தில் வரும் நபர்களுக்கு அண்ணாசாலையிலிருந்து வாலஜா சாலைக்குள் சென்று மைதானத்திற்கு அருகில் இறக்கிவிடப்பட்டு, மேலும் வாகனங்கள் சிவானந்தா சாலையில் நிறுத்த அனுமதிக்கப்படும்.

    4. வாலாஜா சாலையில் கூடுதலாக மாநகர பேருத்துகள் மற்றும் சிறப்பு பேருந்துகள் இயக்க அனுமதிக்கப்படாது. அவ்வாகனங்கள் சுாமி சிவானந்தா சாலையில் மட்டுமே பயணிகளை ஏற்றிச்செல்ல/இறக்கிவிடுவதற்கு அனுமதிக்கப்படும். பொதுமக்கள் பிரஸ் கிளப் சாலை வழியாக சென்று கிரிக்கெட் மைதானத்தை அடையலாம். (பேருந்து நிறுத்த இடத்திலிருந்து கிரிக்கெட் மைதானம் 300 மீட்டர் நடந்து செல்லும் தொலைவில் உள்ளன)

    இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

    • அழகர்கோவில் சாலை பகுதியில் நாளை முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
    • பறக்கும் மேம்பால பணிகள் நிறைவுபெற்றது.

    மதுரை

    மதுரை மாநகர போக்குவரத்து போலீசார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மதுரை நகரில் நத்தம் சாலை மேம்பால கட்டுமான பணிகள் கடந்த 2 ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகளுக்காக போக்குவரத்தில் சில மாறுதல்கள் செய் யப்பட்டன.

    இந்த நிலையில் மேம்பால கட்டுமானப்பணிகள் நிறைவடைந்த சாலைக ளில் நாளை (வியாழக்கிழமை) முதல் பொதுமக்களின் பயன்பாட்டுக்கான போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட உள்ளன.

    இதன்படி பாண்டியன் ஓட்டல் சந்திப்பில் இருந்து யூத் ஹாஸ்டல் (ரேஸ்கோர்ஸ் சாலை) நோக்கி வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்படுகிறது. புதூரில் இருந்து அழகர்கோவில் சாலை மார்க்கமாக தல்லாகுளம், தமுக்கம் மற்றும் கோரிப்பாளையம் செல்ல வேண்டிய வாகனங்கள் பாண்டியன் ஓட்டல் சந்திப்பை கடந்து தொடர்ந்து அழகர்கோ வில் சாலையில் பயணித்து, அம்பேத்கர் சிலை, அவுட்போஸ்ட் வழியாக தல்லாகுளம் செல்ல வேண்டும்.

    புதூரில் இருந்து அழகர்கோவில் சாலை மார்க்கமாக கே.கே.நகர் ஆர்ச் செல்ல வேண்டிய வாகனங்கள், பாண்டியன் ஓட்டல் சந்திப்பை கடந்து அழகர்கோவில் சாலையில் தொடர்ந்து பயணித்து, அவுட்போஸ்ட் சந்திப்பில் இடதுபுறம் திரும்பி மதுரை மாநகராட்சி அலுவலக சாலை, மாவட்ட கோர்ட்டு வழியாக செல்ல வேண்டும்.

    நத்தம் சாலை, ஐ.ஓ.சி. சந்திப்பில் இருந்து கே.கே.நகர் ஆர்ச் செல்ல வேண்டிய வாகனங்கள், பாண்டியன் ஓட்டல் சந்திப்பில் வலது புறம் திரும்பி அழகர்கோவில் சாலையில் பயணித்து அவுட்போஸ்ட் சந்திப்பில் இடதுபுறம் திரும்பி மதுரை மாநகராட்சி அலுவலக சாலை, மாவட்ட கோர்ட்டு வழியாக செல்லவேண்டும். நத்தம் சாலை ஐ.ஓ.சி. சந்திப்பில் இருந்து தல்லாகுளம், தமுக்கம், கோரிப்பாளையம் செல்ல வேண்டிய வாகனங்கள் பாண்டியன் ஓட்டல் சந்திப்பில் வலதுபுறம் திரும்பி அழகர்கோவில் சாலையில் பயணித்து அம்பேத்கர் சிலை, அவுட்போஸ்ட வழியாக செல்லவேண்டும்.

    மதுரை மாநகராட்சி அலுவலக சாலை-அவுட் போஸ்ட் சந்திப்பில் இருந்து வலதுபுறம் திரும்பி அம்பேத்கர் சிலை வழியாக பாண்டியன் ஓட்டல் சந்திப்புக்கு வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்படுகிறது.

    கே.கே.ந கர் ஆர்ச்சில் இருந்து, அழகர்கோவில் சாலைக்கு கக்கன் சிலை, மதுரை மாநகராட்சி அலுவலக சாலை, அவுட்போஸ்ட் வழியாக வலதுபுறம் திரும்பி பாரதியார் பூங்கா, பாண்டியன் ஓட்டல் சந்திப்பு வழியாக தற்போது சென்று வரும் வாகன போக்குவரத்து தடை செய்யப்படுகிறது.

    இந்த வழியாகச் செல்லும் வாகனங்கள் கக்கன் சிலையில் இருந்து வலதுபுறம் திரும்பி யூத் ஹாஸ்டல் (ரேஸ் கோர்ஸ் சாலை) பாண்டியன் ஓட்டல் வழியாக அழகர் கோவில் சாலைக்கு செல்ல வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • டி.டி.கே.சாலையில் சேமியர்ஸ் சாலை சந்திப்பில் இருந்து கவிஞர் பாரதிதாசன் சாலை சந்திப்பு வரை ஒரு வழி பாதையாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
    • சி.பி.ராமசாமி சாலையில் சி.வி.ராமன் சாலை சந்திப்பில் இருந்து ஆர்.ஏ. புரம் 2-வது பிரதான சாலை சந்திப்பு வரை ஒரு வழி பாதையாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

    சென்னை:

    சென்னை போக்குவரத்து காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மெட்ரோ ரெயில் பணிகள் கவிஞர் பாரதிதாசன் சாலையில் மேற்கொள்ள உத்தேசிக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக நாளை (சனிக்கிழமை) முதல் 11-ந்தேதி வரை ஒரு வார காலத்திற்கு கவிஞர் பாரதிதாசன் சாலை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சோதனை அடிப்படையில் போக்குவரத்து மாற்றங்களை செய்ய உத்தேசிக்கப்பட்டு உள்ளன.

    டி.டி.கே.சாலையில் சேமியர்ஸ் சாலை சந்திப்பில் இருந்து கவிஞர் பாரதிதாசன் சாலை சந்திப்பு வரை ஒரு வழி பாதையாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

    சி.பி.ராமசாமி சாலையில் சி.வி.ராமன் சாலை சந்திப்பில் இருந்து ஆர்.ஏ. புரம் 2-வது பிரதான சாலை சந்திப்பு வரை ஒரு வழி பாதையாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

    அண்ணாசாலையில் இருந்து கவிஞர் பாரதிதாசன் சாலை வழியாக டி.டி.கே. சாலைக்கு செல்ல வேண்டிய வாகனங்கள் மாற்று பாதையில் அனுப்ப உத்தேசிக்கப்பட்டு உள்ளது. அதன்படி மாநகர பஸ்கள் திருவள்ளூர் சாலை, எல்டாம்ஸ் சாலை வழியாகவும், இலகு ரக வாகனங்கள் சீதம்மாள் காலனி 1-வது பிரதான சாலை வழியாகவும் செல்லலாம்.

    டி.டி.கே. சாலையில் இருந்து ஆழ்வார்பேட்டை சிக்னலுக்கு செல்ல வேண்டிய மாநகர பஸ்கள் திருவள்ளூர் சாலை மற்றும் எல்டாம்ஸ் சாலை வழியாகவும், இலகு ரக வாகனங்கள் சீதம்மாள் காலனி 1-வது பிரதான சாலை (அல்லது) சி.வி.ராமன் சாலை வழியாக மாற்று பாதையில் செல்லலாம்.

    டி.டி.கே. சாலையில் உள்ள ஆழ்வார்பேட்டை மேம்பாலத்தில் இருந்து வரும் மாநகர பஸ்கள் நேராக சி.பி.ராமசாமி சாலை வழியாக சேமியர்ஸ் சாலைக்கு செல்லாம்.

    லஸ் சர்ச் சாலை வழியாக ஆழ்வார்பேட்டை சிக்னலுக்கு செல்ல வேண்டிய மாநகர பஸ்கள் டி.டி.கே. சாலை, ஆழ்வார்பேட்டை மேம்பால சர்வீஸ் சாலை வழியாக செல்லலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • மெட்ரோ ரெயில் பணிகள் இருவேறு இடங்களில் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
    • போக்குவரத்து மாற்றம் ஒருவார காலம் அமலில் இருக்கும்.

    சென்னை :

    மெட்ரோ ரெயில் பணிகள் இருவேறு இடங்களில் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக பனகல் பூங்கா மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் 12-ந்தேதி (நாளை) முதல் ஒரு வார காலத்துக்கு சோதனை அடிப்படையில் சில போக்குவரத்து மாற்றங்களை செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது.

    அதன் விவரம் வருமாறு:-

    தியாகராய சாலையில் தற்போதுள்ள ஒரு வழிப்பாதையில் இருந்து மாற்றப்பட்டு பனகல் பூங்காவில் இருந்து ம.பொ.சி.-க்கு செல்லலாம். தணிகாசலம் சாலை சந்திப்பில் இருந்து பனகல் பூங்காவுக்கு செல்ல அனுமதி இல்லை. இந்த வாகனங்கள் தணிகாசலம் சாலை, வெங்கட்நாராயணா சாலை வழியாக உஸ்மான் சாலையை (பனகல் பார்க்) அடையலாம்.

    உஸ்மான் சாலையில் இருந்து பாஷ்யம் சாலை வழியாக போத்தீசுக்கு செல்ல தடை செய்யப்பட்டுள்ளது. அந்த வாகனங்கள் தியாகராய சாலை மற்றும் தணிகாசலம் சாலை வழியாக திருப்பி விடப்படும்.

    பர்கிட் சாலையில் இருந்து வரும் மாநகர பஸ்கள் தணிகாசலம் சாலை வழியாக செல்ல தடைசெய்யப்பட்டு சிவஞானம் சாலை, தியாகராயசாலை வழியாக திருப்பி பர்கிட் சிக்னலில் இருந்து வாகனங்கள் வெங்கட்நாராயணா சாலை வழியாக அண்ணாசாலைக்கு செல்ல தடை செய்யப்படுகிறது. மேற்கண்ட வாகனங்கள் இந்தி பிரசார சபா தெரு, சவுத் போக் சாலை, ம.பொ.சி. சந்திப்பு வந்து அண்ணாசாலையை அடையலாம்.

    தியாகராயநகர் மேட்லியில் இருந்து பர்கிட் சாலை வழியாக அண்ணாசாலைக்கு வெங்கட்நாராயணா சாலை வழியாக செல்லும் வாகனங்கள் தடை செய்யப்பட்டு, மூப்பாரப்பன் தெரு, இணைப்பு சாலை வந்து அண்ணாசாலையை அடையலாம்.

    நந்தனம் சந்திப்பில் இருந்து வெங்கட்நாராயணா சாலை வழியாக செல்லும் வாகனங்கள் பனகல் பூங்கா வரை வழக்கம் போல செல்லலாம்.

    மேற்கண்ட தகவல் சென்னை மாநகர போக்குவரத்து போலீசார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • டி.டி.கே. சாலையில் சேமியர்ஸ் சாலை சந்திப்பில் இருந்து கவிஞர் பாரதிதாசன் சாலை சந்திப்பு வரை ஒரு வழிபாதையாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
    • சி.பி.ராமசாமி சாலையில் சி.வி.ராமன் சாலை சந்திப்பில் இருந்து ஆர்.ஏ.புரம் 2-வது பிரதான சாலை சந்திப்பு வரை ஒரு வழி பாதையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    சென்னை போக்குவரத்து காவல்துறை வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    மெட்ரோ ரெயில் பணிகள் காரணமாக கடந்த 5-ந்தேதி முதல் 11-ந்தேதி வரை ஒருவார காலத்திற்கு கவிஞர் பாரதிதாசன் சாலை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சோதனை அடிப்படையில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டது.

    மேலும் இன்று (12-ந்தேதி) முதல் அடுத்த மூன்று வருடத்திற்கு கவிஞர் பாரதிதாசன் சாலை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கீழ்க்கண்டவாறு போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்படுகிறது.

    அதன்படி டி.டி.கே. சாலையில் சேமியர்ஸ் சாலை சந்திப்பில் இருந்து கவிஞர் பாரதிதாசன் சாலை சந்திப்பு வரை ஒரு வழிபாதையாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதே போல் சி.பி.ராமசாமி சாலையில் சி.வி.ராமன் சாலை சந்திப்பில் இருந்து ஆர்.ஏ.புரம் 2-வது பிரதான சாலை சந்திப்பு வரை ஒரு வழி பாதையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    அண்ணா சாலையில் இருந்து கவிஞர் பாரதிதாசன் சாலை வழியாக டி.டி.கே. சாலைக்கு செல்ல வேண்டிய வாகனங்கள் மாற்று பாதையில் அனுப்ப உத்தேசிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி, மாநகர பஸ்கள் திருவள்ளுவர் சாலை, எல்டாம்ஸ் சாலை வழியாகவும், இலகுரக வாகனங்கள் சீதம்மாள் காலனி 1-வது பிரதான சாலை வழியாகவும் செல்லலாம்.

    டி.டி.கே. சாலையில் இருந்து ஆழ்வார்பேட்டை சிக்னலுக்கு செல்ல வேண்டிய மாநகர பஸ்கள் திருவள்ளுவர் சாலை மற்றும் எல்டாம்ஸ் சாலை வழியாகவும், இலகுரக வாகனங்கள் சீதம்மாள் காலனி 1வது பிரதான சாலை அல்லது சி.வி.ராமன் சாலை வழியாக மாற்று பாதையில் செல்லலாம்.

    டி.டி.கே. சாலையில் உள்ள ஆழ்வார்பேட்டை மேம்பாலத்திலிருந்து வரும் மாநகர பஸ்கள் நேராக சி.பி. ராமசாமி சாலை வழியாக சேமியர்ஸ் சாலைக்கு செல்லலாம்.

    லஸ் சர்ச் சாலை வழியாக ஆழ்வார்பேட்டை சிக்னலுக்கு செல்ல வேண்டிய மாநகர பஸ்கள் டி.டி.கே. சாலை, ஆழ்வார்பேட்டை மேம்பால சர்வீஸ் சாலை வழியாக செல்லலாம்.

    இந்த போக்குவரத்து மாற்றத்துக்கு வாகன ஓட்டுனர்கள் ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • வியாசர்பாடி, செங்குன்றம், மாதவரம், பெரியார் நகர் பகுதிக்கு செல்லக்கூடிய பஸ்கள் புளியந்தோப்பு வழியாக மாற்றி விடப்பட்டுள்ளது.
    • தற்போது மழை இல்லாத நேரத்தில் பள்ளம் ஏற்பட்டதால் அதனை விரைவாக சரி செய்ய முடிகிறது.

    சென்னை:

    பெரம்பூர் பேரக்ஸ் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தால் அந்த பகுதியில் போக்குவரத்து முற்றிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    அண்ணா சதுக்கம்-பெரம்பூர் இடையே ஓடும் 29-ஏ பஸ் மட்டும் ஓட்டேரி மேகலா தியேட்டர் வழியாக திருப்பி விடப்பட்டுள்ளது. மற்ற பஸ்கள் அனைத்தும் புளியந்தோப்பு போலீஸ் நிலையம் அருகில் இருந்து மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளன.

    வியாசர்பாடி, செங்குன்றம், மாதவரம், பெரியார் நகர் பகுதிக்கு செல்லக்கூடிய பஸ்கள் புளியந்தோப்பு வழியாக மாற்றி விடப்பட்டுள்ளது.

    போக்குவரத்து மாற்றப்பட்டதால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். குறிப்பாக இரு சக்கர வாகன ஓட்டிகள் குறுகிய தெருக்களிலும், சந்துக்கள் வழியாக செல்கின்றனர். புரசைவாக்கத்தில் இருந்து பட்டாளம், புளியந்தோப்பு வரை செல்லக்கூடிய பல்வேறு வழிகளில் ஆட்டோ, மோட்டார் சைக்கிள் செல்கின்றன.

    தற்போது மழை இல்லாத நேரத்தில் பள்ளம் ஏற்பட்டதால் அதனை விரைவாக சரி செய்ய முடிகிறது. மழை பெய்தால் இந்த பணி கடுமையாக பாதிக்கப்படுவதோடு பொதுமக்களுக்கு சிரமங்கள் அதிகமாக ஏற்பட்டு இருக்கும்.

    பள்ளத்தை சரி செய்யும் பணி முடியும் வரை அந்த சாலையில் போக்குவரத்து நடைபெறாது. அடுத்தடுத்து அந்த பகுதியில் பள்ளம் விழுவதற்கு காரணம்? என்ன என மண்ணின் தன்மையையும் ஆராய்கிறார்கள்.

    சமீபத்தில் பெய்த கனமழையின்போது பள்ளம் ஏற்பட்ட பகுதியில் தான் மழை வெள்ளம் அதிகளவில் தேங்கி நின்றது. அதனை வெளியேற்ற எடுத்த நடவடிக்கையால் கழிவுநீர் குழாய் பாதிக்கப்பட்டதா? எனவும் ஆய்வு செய்யப்படுகிறது.

    சம்பவ இடத்தில் குடிநீர் வாரிய தலைமை பொறியாளர் ராமசாமி, பகுதி பொறியாளர் வைதேகி உள்ளிட்ட அதிகாரிகள் முகாமிட்டு பணியினை வேகப்படுத்தி வருகின்றனர்.

    சம்பவ இடத்தை திரு.வி.க. நகர் தொகுதி எம்.எல்.ஏ. தாயகம் கவி ஆய்வு செய்தார்.

    பள்ளத்தை சரி செய்ய 5 நாட்கள் ஆகும் என்று வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • வாகனங்கள் அனைத்தும் கே.ஜி.தியேட்டர், அரசு கலைகல்லூரி சாலை சந்திப்பு வழியாக மற்ற பகுதிகளுக்கு செல்லலாம்.
    • லட்சுமி மில் சந்திப்பு, புலியகுளம் சாலை வழியாக ராமநாதபுரம் சந்திப்பை அடைந்து திருச்சி சாலையில் செல்லலாம்.

    கோவை,

    கோவை ரேஸ்கோர்ஸில் மாநகராட்சி சார்பில் 'ஹேப்பி ஸ்ட்ரீட்' என்ற நிகழ்ச்சி நாளை காலை 5 மணி முதல் 10 மணி வரை நடைபெறுகிறது. இதற்காக கீழ் கண்டவாறு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    இது குறித்து கோவை மாநகர போக்குவரத்து போலீசார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

    திருச்சி ரோடு-வெஸ்ட் கிளப் சந்திப்பிலிருந்து ரேஸ்கோர்ஸ் வழியாக செஞ்சிலுவை சங்கம் அடைந்து காந்திபுரம் செல்லும் பஸ்கள் அனைத்தும் கிளாசிக் டவர், ெரயில் நிலையம், செஞ்சிலுவை சங்கத்தை அடைந்து காந்திபுரம் செல்லலாம்.

    காந்திபுரத்தில் இருந்து ரேஸ்கோர்ஸ் வழியாக திருச்சி சாலை செல்லும் பஸ்கள் அனைத்தும் அவினாசி சாலை அண்ணா சிலை சந்திப்பில் இருந்து லட்சுமி மில் சந்திப்பு, புலியகுளம் சாலை வழியாக ராமநாதபுரம் சந்திப்பை அடைந்து திருச்சி சாலையில் செல்லலாம்.

    திருச்சி ரோடு-வெஸ்ட் கிளப் சந்திப்பிலிருந்து ரேஸ்கோர்ஸ் கே.ஜி.தியேட்டர் வழியாக மற்ற பகுதிகளுக்கு செல்லும் வாகனங்கள் அனைத்தும் ரேஸ்கோர்ஸ் வெஸ்ட் கிளப் சாலையில் இருந்து கிழக்கு நோக்கி திரும்பி ஸ்கீம் ரோடு அல்லது தாமஸ் பார்க் சந்திப்பு, காஸ்மோபாலிடன் கிளப் சந்திப்பை அடைந்து திருஞானசம்பந்தம் சாலை வழியாக அவினாசி சாலையை அடைந்தும் அல்லது தாமஸ் பார்க், அப்துல் ரஹீம் சாலை, காமராஜர் சாலை வழியாக அவினாசி சாலையை அடைந்தும்,செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்லலாம்.

    ஓசூர் சாலையில் இருந்து கே.ஜி.தியேட்டர் வழியாக மற்ற பகுதிகளுக்கு செல்ல ரேஸ்கோர்ஸ் சாலையை பயன்படுத்தும் வாகனங்கள் அனைத்தும் கே.ஜி.தியேட்டர், அரசு கலைகல்லூரி சாலை சந்திப்பு வழியாக மற்ற பகுதிகளுக்கு செல்லலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மயிலாப்பூரில் உள்ள கச்சேரி சாலையில் சென்னை மெட்ரோ ரெயில் கட்டுமான பணிகள் நடக்கவுள்ளது.
    • கடந்த 10-ந்தேதி முதல் ஒரு வாரம் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.

    சென்னை :

    சென்னை மயிலாப்பூரில் உள்ள கச்சேரி சாலையில் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தால் மேற்கொள்ளப்பட உள்ள கட்டுமான பணிகளை கருத்தில்கொண்டு, போக்குவரத்து மாற்றங்கள் திட்டமிடப்பட்டு கடந்த 10-ந்தேதி முதல் ஒரு வாரம் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.

    இது நன்றாக செயல்பட்டதால், சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் கோரியப்படி இந்த போக்குவரத்து மாற்றங்கள் மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

    கச்சேரி சாலை மற்றும் அதை சுற்றியுள்ள சாலைகளில் 24-ந்தேதி (நாளை) முதல் 3 ஆண்டுகளுக்கு செய்யப்பட்டுள்ள போக்குவரத்து மாற்றங்கள் வருமாறு:-

    * முண்டக்கன்னி அம்மன் கோவில் தெருவில் இருந்து கச்சேரி சாலைக்கு வாகனங்கள் செல்வதை கட்டுப்படுத்தி, கல்விவாரு தெருவில் தற்போது உள்ள ஒருவழி பாதை அமைப்பு மாற்றியமைக்கப்பட்டு வாகனங்கள் கச்சேரி சாலையில் இருந்து முண்டக்கன்னி அம்மன் கோவில் தெருவுக்கு அனுமதிக்கப்படும்.

    * லஸ் சந்திப்பில் இருந்து கச்சேரி சாலை வழியாக சாந்தோம் நெடுஞ்சாலைய நோக்கி இலகு ரக வாகனங்கள் செல்ல தடை செய்யப்பட்டு, கல்விவாரு தெரு வழியாக முண்டக்கன்னி அம்மன் கோவில் தெரு மற்றும் பஜார் சாலை வழியாக செல்லலாம்.

    * சாந்தோம் நெடுஞ்சாலையில் இருந்து கச்சேரி சாலை வழியாக லஸ் சந்திப்பை நோக்கி இலகு ரக வாகனங்கள் செல்ல தடை செய்யப்பட்டு, தேவடி தெரு, நடு தெரு மற்றும் ஆர்.கே.மடம் சாலை அல்லது மாதா சர்ச் சாலை வழியாகவும் செல்லலாம்.

    * மாநகர பஸ் எண் '12 பி' லஸ் சந்திப்பில் இருந்து கச்சேரி சாலை வழியாக பட்டினப்பாக்கம் பஸ் நிலையம் செல்ல தடை செய்யப்பட்டு, ராயப்பேட்டை நெடுஞ்சாலை டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை மற்றும் சாந்தோம் நெடுஞ்சாலை வழியாகவும் திரும்பி வரும்போது வி.எம்.தெரு வரை வழக்கம்போல் வந்து டி.டி.கே.சாலை வழியாக செல்லலாம்.

    * மாநகர பஸ் எண் '12 எக்ஸ்' லஸ் சந்திப்பில் இருந்து கச்சேரி சாலை வழியாக பட்டினப்பாக்கம் பஸ் நிலையம் செல்ல தடை செய்யப்பட்டு, ஆர்.கே.மடம் சாலை மற்றும் தெற்கு கால்வாய் கரை சாலை வழியாகவும் திரும்பி வரும்போது மந்தைவெளி பஸ் நிறுத்தம் வரை வழக்கம்போல் வந்து வெங்கடகிருஷ்ணா சாலை மற்றும் ஆர்.கே.மடம் சாலை வழியாக செல்லலாம்.

    மேற்கண்ட தகவல் சென்னை போக்குவரத்து போலீசார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    • மின்மாற்றிகளை மாற்றி அமைக்கும் பணி நாளை முதல் நடக்கிறது
    • பொதுமக்கள் ஒத்து ழைப்பு அளிக்க வலியுறுத்தல்

    வேலூர்:

    வேலூர் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்ப தாவது:-

    பள்ளிகொண்டா- குடியாத்தம் சாலையில் தேசிய நெடுஞ்சா லையில் இருந்து குடியாத்தம் செல்லும் சாலை சாவடி வரை போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள உயர் மின்னழுத்த மின்கம்பங்கள் மற்றும் மின்மாற்றிகளை மாற்றி அமைக்கும் பணி நாளை முதல் நடக்கிறது.

    இந்த பணியை நெடுஞ்சாலை, மின் சாரத்துறையினர் ஒருங்கி ணைந்து மேற்கொள்ள உள்ள னர். இப்பணிகள் முடியும் காலமான சுமார் 15 நாட்க ளுக்கு இந்த சாலையில்போக் குவரத்து மாற்றம் செய்யப்ப டுகிறது.

    குடியாத்தத்தில் இருந்து பள்ளிகொண்டா வழியாக வேலூர் செல்லும் வாகனங் கள் தேசிய நெடுஞ்சாலையை பயன்படுத்தி வடுகன் தாங்கல், காட்பாடி வழியாக செல்ல வேண்டும்.

    வேலூரில் இருந்து பள்ளிகொண்டா வழியாக குடியாத்தம் செல்லும் வாகனங்கள் தேசிய நெடுஞ்சாலை 48-ஐ பயன்படுத்தி செதுவாலை, விரிஞ்சி புரம் வழியாக சென்று தேசிய நெடுஞ்சாலை 75-ஐ அடைந்து வடுகன்தாங்கல் வழியாக குடியாத்தம் செல்ல வேண்டும்.

    குடியாத்தத்தில் இருந்து பள்ளிகொண்டா வழியாக ஒடுகத்தூர், அணைக்கட்டு செல்லும் வாகனங்கள் குடியாத்தத்தில் இருந்து மேல்பட்டி சாலையில் உள்ளி கூட் ரோடு சந்திப்பை அடைந்து ஒடுகத்தூர், அணைக்கட்டு செல்ல வேண்டும். கிருஷ்ணகிரி மார்க்கத்தில் இருந்து பள்ளிகொண்டா வழியாக குடியாத்தம் செல்லும் வாகனங் கள் மாதனூர் - உள்ளி கூட்ரோடு மும்முனை சந்திப்பு வழியாக மேல்பட்டி சாலை வழியாக குடியாத்தம் செல்ல வேண்டும்.

    இந்த போக்குவரத்து மாற்றம் நாளை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை பணி முடியும் வரை நடைமுறைப்படுத்தப்படும். மற்றநேரங்களில் தற் போது உள்ளபடி அதே சாலையை பயன்படுத்தி கொள்ளலாம். கனரக வாகனங்கள் பள்ளிகொண்டாவிற்குள் நுழைவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

    மழைநீர் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க உள்ள தாலும், மழைநீர் வடிகால் வாய்கள் நீண்ட காலத்துக்கு பயன்படுத்த பணிகளை மேற் கொள்ள வேண்டி உள்ளதால் மின்கம்பங்கள் மாற்றி அமைக்கும் பணி தவிர்க்க முடியாது. போக்குவரத்து மாற்றத்துக்கு வாகன ஓட்டிகள், பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • ஆர்.கே.சாலையில் இருந்து காந்தி சிலை நோக்கி வரும் வாகனங்கள் வி.எம்.தெரு சந்திப்பில் திருப்பி விடப்படும்.
    • பெசன்ட் நகர் 7-வது அவென்யூவில் இருந்து வரும் வாகனங்கள் ஓல்காட் பள்ளியை நோக்கி அனுமதிக்கப்படாமல், எம்ஜி சாலையை நோக்கி திருப்பி விடப்படும்.

    சென்னை:

    சென்னை மாநகர போக்குவரத்து போலீசார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    சென்னை ரன்னர்ஸ் சார்பில் 4 பிரிவுகளாக (42 கிமீ, 32 கிமீ, 21 கிமீ மற்றும் 10 கிமீ) மாரத்தான் ஓட்டம் நாளை (8-ந்தேதி) நடைபெறுகிறது.

    இதை முன்னிட்டு நாளை அதிகாலை 4 மணி முதல் நேப்பியர் பாலம் மற்றும் பெசன்ட் நகர் ஆல்காட் நினைவுப் பள்ளியிலிருந்து மாரத்தான் ஓட்டம் தொடங்கப்பட்டு காமராஜர் சாலை, சாந்தோம் ஹை ரோடு, டாக்டர்.டி.ஜி.எஸ்.தினகரன் சாலை, சர்தார் படேல் சாலை, ஓ.எம்.ஆர்., கே.கே.சாலை, இ.சி.ஆர். வழியாக இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தை சென்றடையும்.

    இந்நிகழ்ச்சி தொடர்பாக போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

    * அடையார் மார்க்கத்தில் இருந்து வரும் அனைத்து வாகனங்களும் திரு.வி.க. பாலம், டாக்டர். டி.ஜி.எஸ்.தினகரன் சாலை, சாந்தோம் ஹை ரோடு, காமராஜர் சாலை மற்றும் உழைப்பாளர் சிலை வரை வழக்கம் போல் எந்தவித மாற்றமும் இல்லாமல் செல்லலாம்.

    * போர் நினைவிடத்தில் இருந்து திரு.வி.க. பாலம் வரை வாகனங்கள் அனுமதிக்கப்பட மாட்டாது. மேலும் வாகனங்கள் கொடி மரச் சாலை சாலைக்கு வழியாக திருப்பி விடப்பட்டு வாலாஜா பாயின்ட் அண்ணாசாலையில் வழியாக தங்களது இலக்கை சென்றடையலாம்.

    * ஆர்.கே.சாலையில் இருந்து காந்தி சிலை நோக்கி வரும் வாகனங்கள் வி.எம்.தெரு சந்திப்பில் திருப்பி விடப்படும். அவ்வாகனங்கள் ராயப்பேட்டை ஹைரோடு, லஸ் கார்னர், ஆர்.கே.மடம் சாலை வழியாக தங்களது இலக்கை சென்றடையலாம்.

    * மத்திய கைலாசிலிருந்து வரும் வாகனங்கள் பெசன்ட் அவென்யூ சாலையை நோக்கி அனுமதிக்கப்பட மாட்டாது, அவ்வாகனங்கள் எல்.பி. சாலை, சாஸ்திரி நகர் வழியாக திருவான்மியூர் சிக்னல் வழியாகத் தங்களது இலக்கை சென்றடையலாம்.

    * காந்தி மண்டபத்தில் இருந்து வரும் வாகனங்கள் உத்தமர் காந்தி சாலை செல்ல அனுமதிக்கப்பட மாட்டாது. அவ்வாகனங்கள் எல்.பி. சாலை, சாஸ்திரி நகர், திருவான்மியூர் சிக்னல் வழியாகத் தங்களது இலக்கை சென்றடையலாம்.

    * பெசன்ட் நகர் 7-வது அவென்யூவில் இருந்து வரும் வாகனங்கள் ஓல்காட் பள்ளியை நோக்கி அனுமதிக்கப்படாமல், எம்ஜி சாலையை நோக்கி திருப்பி விடப்படும்.

    * மாநகர போக்குவரத்து கழக பஸ்கள் மட்டும் பெசன்ட் நகர் டெப்போவிற்கு அனுமதிக்கப்படும். பெசன்ட் அவென்யூ, எம்.எல். பார்க் நோக்கி அனுமதிக்கப்பட மாட்டாது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    மாரத்தான் ஓட்டம் காரணமாக நாளை அதிகாலை 4 மணி முதல் காலை 9 மணி வரை தாம்பரம் மாநகர காவல் எல்லையில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்படவுள்ளன என தாம்பரம் கமிஷனர் அமல்ராஜ் அறிவித்துள்ளார்.

    சோழிங்கநல்லூர் சந்திப்பிலிருந்து, சென்னை நோக்கி செல்லும் அனைத்து வாகனங்களும் இடது புறம் செம்மொழி சாலையாக செல்ல வேண்டும்.

    அதேபோல், மேட்டுக்குப்பம் ராஜ் நகர் சந்திப்பில் இருந்து சோழிங்கநல்லூர் செல்லும் வாகனங்கள் அனைத்தும் ராஜீவ்காந்தி சாலையில் வலது புறமாக செல்ல வேண்டும். மேலும், மேடவாக்கத்தில் இருந்து சோழிங்கநல்லூர் செல்லும் அனைத்து வாகனங்களும், வேளச்சேரி பிரதான சாலை பள்ளிக்கரணை வழியாக செல்ல வேண்டும் என தெரிவித்துள்ளார்.

    ×