என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புதிய பாலம்"

    • பூடான் எல்லையில் டோக்லாம் பகுதியில் இந்தியா மற்றும் சீன ராணுவத்தினருக்கிடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
    • பூடான் எல்லையில் சீனாவால் அமைக்கப்பட்டு வரும் கட்டுமான பணிகள் வேகமாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

    புதுடெல்லி:

    அருணாச்சல பிரதேசத்தில் தவாங் செக்டார் பகுதியில் உள்ள யாங்ட்ஸி பகுதியில் கடந்த 9-ந் தேதி சீன ராணுவத்தினர் 300-க்கும் மேற்பட்டோர் இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைய முயன்றனர்.

    அவர்களை இந்திய ராணுவத்தினர் தடுத்தி நிறுத்தியபோது இரு தரப்பிற்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்திய ராணுவத்தினரின் பதிலடியால் சீன வீரர்கள் ஓட்டம் பிடித்தனர்.

    சீன ராணுவத்தினரின் முயற்சி முறியடிக்கப்பட்டதாக பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத் சிங் பாராளுமன்றத்தில் தெரிவித்தார். இந்நிலையில் சீன ராணுவத்தினர் சென்றபோது அவர்கள் விட்டு சென்ற உபகரணங்களை இந்திய ராணுவத்தினர் மீட்டுள்ளனர். அவற்றில் ஒரு சில பைகளில் ஆடைகளும், சில பைகளில் கடுமையான குளிரில் வாழ்வதற்கு தேவையான பொருட்களும் இருந்தன.

    இதற்கிடையே பூடான் எல்லையில் டோக்லாம் பகுதியில் இந்தியா மற்றும் சீன ராணுவத்தினருக்கிடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது. ஏற்கனவே 2017-ம் ஆண்டு பூடான் எல்லையில் அமைந்திருக்கும் டோக்லாம் பகுதியில் இந்தியா மற்றும் சீனா ராணுவத்தினரிடையே வெடித்த மோதல் 73 நாள் வரை நீடித்தது.

    அந்த பகுதியில் சீன ராணுவத்தினர் சாலை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டதாகவும், அதை இந்திய ராணுவத்தினர் தடுத்து நிறுத்தியதாகவும் அப்போது தகவல் வெளியானது.

    பின்னர் டோக்லாம் அருகே பூடானுக்கு சொந்தமான பகுதியில் சீன ராணுவம் கிராமங்களை அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்பட்டது.

    அதாவது டோக்லாமின் கிழக்கு திசையில் 9 கிலோ மீட்டர் தொலைவில் சீனா ஒரு கிராமத்தை உருவாக்கி அந்த கிராமத்திற்கு பாங்டா என்று பெயர் சூட்டி இருப்பதாகவும் தகவல் வெளியானதோடு, இதுதொடர்பான செயற்கைகோள் படங்களும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.

    இந்நிலையில் தற்போது டோக்லாம் பகுதியில் சீனா ஒரு பாலம் உள்பட புதிய கட்டுமான பணிகளை நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. டோக்லாமிற்கு தெற்கு பகுதியில் லாங் மார்போ எனப்படும் பகுதியில் புதிய கிராமங்கள் காணப்படுகின்றன.

    பூடான் எல்லையில் சீனாவால் அமைக்கப்பட்டு வரும் இந்த கட்டுமான பணிகள் வேகமாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

    சைபுரு, கைடாங்ஷா மற்றும் குலே ஆகிய பகுதிகளிலும் 2 மாதங்களுக்கு மேலாக கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன.

    சீனாவின் இந்த கட்டுமான பணிகளை இந்தியா கவனித்து வருவதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • ஆழ்வார் திருநகரி ரெயில் நிலையத்திற்கும் இந்த பாலத்தையே பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர்.
    • பாலம் பழுதடைந்த நிலையில் உள்ளதாலும் வாகனத்தில் செல்லவே அச்சமாக இருப்பதாகவும் பொதுமக்கள் கூறுகின்றனர்.

    தென்திருப்பேரை:

    ஆழ்வார்திருநகரி பேரூராட்சி தாமிரபரணி ஆற்று பாசனத்தை சார்ந்த விவசாயத்தையே வாழ்வா தாரமாக கொண்ட விவசாய பூமி ஆகும்.

    ஸ்ரீவைகுண்டம் தென் கால் பாசனவசதி மூலம் சுமார் 1,500 ஹெக்டேர் பரப்பளவு நிலத்தில் விவ சாயத்தை நம்பி வாழ்ந்து வருகின்றனர். இப்பகுதியில் நெல் மற்றும் வாழை பயிரிட்டு வருகின்றனர்.

    விவசாயத்திற்கு தென் கால் பாசனம் இரண்டு வாய்க்கால் மூலம் பாசன வசதி பெற்று வருகின்றனர். இந்த 2 வாய்க்காலில், ஒரு வாய்க்கால் கடம்பா குளத்திற்கும், ஒரு வாய்க்கால் ஆத்தூர் குளத்தி ற்கும் நேரடியாக பாசன வசதி பெறுகிறது.

    இந்த வாய்க்காலில் சுமார் 100 வருடங்களுக்கும் மேலாக பாலம் போடப்பட்டு அந்த பாலத்தின் வழியாக ஆழ்வார்திருநகரி பேரூ ராட்சி 10-வது வார்டு மற்றும் 15-வது வார்டுக்கு உட்பட்ட அழகிய மணவாளபுரம், முஸ்லிம் தெரு, பத்தவாசல், பிள்ளமடை, வேலவன் தெருவை சேர்ந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் தங்களது ஊருக்கு சென்று வந்தனர்.

    அதுமட்டுமின்றி ஆழ்வார் திருநகரி ரெயில் நிலையத்திற்கும் இந்த பாலத்தையே பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர். இந்தபாலம் ஒரு வழி பாதை போன்ற பால மாக இருப்பதால் கனரக வாகனங்கள், நெல் அறுவடை எந்திரம், மற்றும் டிராக்டர் போன்ற வாகனங்கள் பாலத்தின் வழியாக செல்ல முடியாமல் சுற்றி செல்ல வேண்டியது உள்ளது. மேலும் அவசரமான சூழ்நிலை நேரத்தில் மருத்துவமனைக்கு செல்ல முடியாத நிலை உள்ளது.

    பாலம் பழுதடைந்த நிலை யில் உள்ளதாலும் வாகனத்தில் செல்லவே அச்சமாக இருப்பதாகவும் பொதுமக்கள் கூறுகின்றனர். இப்பகுதியில் வசிக்கும் மக்கள் இந்த பாலத்தை பயன்படுத்தி தான் ஆழ்வார் திருநகரிக்கு வர வேண்டிய சூழ்நிலை உள்ளது. எனவே இப்பகுதியில் புதிய பாலம் கட்டி கொடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

    இதனை கருத்தில் கொண்டு தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. இளைஞர் அணி செயலாளர் ராமஜெயம் தலைமையில் ஆழ்வார்திருநகரி பேரூர் செயலாளர் கோபிநாத், செம்பூர் நயினார் ஆழ்வை போஸ், 10-வது வார்டு செயலாளர் மந்திர மூர்த்தி, 15-வது வார்டு செயலாளர் ரமேஷ், சங்கர், சின்னத்துரை, ஆபிரகாம், பாண்டி, குருசாமி, ரஸ்வி ஆகியோர் மீன் வளம் மற்றும் மீன்வளத்துறை, கால்நடை துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை சந்தித்து பாலத்தை அகலப்ப டுத்தி புதிய பாலம் கட்டி கொடுக்க கோரிக்கை மனு அளித்தனர்.

    மனுவை பெற்று கொண்ட அமைச்சர் சம்பந்தப்பட்ட துறை அமைச்சர் மற்றும் துறை அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாகவும், புதிய பாலம் கட்ட ஆவனம் செய்வதாகவும் கூறினார்.

    • அமைச்சர் துறை சார்ந்த அலுவலர்களுக்கு பல்வேறு ஆலோ னைகளை வழங்கினார்.
    • நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள் , உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளனர்.

    கடலூர்:

    கடலூர் மாநகராட்சி பகுதிகளில் முக்கிய சாலை சந்திப்புகளில் தேசிய நெடுஞ்சாலைத் துறையின் மூலம் நடைபெற்று வரும் விரிவாக்க பணிகளை வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பார்வை யிட்டு ஆய்வு செய்தார். கடலூர் மாநகராட்சி நுழைவாயிலான ஆல் பேட்டை சாலை சந்திப்பில் பொது போக்குவரத்திற்கு இடையூறின்றி ஒழுங்குபடுத்தும் விதமாகவும், விபத்து தடுப்பு நடவடிக்கையாகவும், இச்சாலை சந்திப்பை ரூ. 7 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருவதையும், கடலூர், கெடிலம் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அண்ணா பாலத்துக்கு மாற்றாக பழைய இரும்பு பாலத்தை அகற்றி புதிய பாலம் கட்டுவது தொடர்பாகவும் மற்றும் உழவர் சந்தை அருகே உள்ள சாலை சந்திப்பை மேம்படுத்துவது குறித்தும் மாண்புமிகு வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பார்வையிட்டு, போக்குவரத்திற்கு இடையூறின்றி இப்பணிக ளை துரிதமாக மேற்கொ ள்வது குறித்து துறை சார்ந்த அலுவலர் களுக்கு பல்வேறு ஆலோ சனைகளை வழங்கினார்.

    அப்போது கலெக்டர் அருண் தம்புராஜ், அய்யப்பன் எம்.எல்.ஏ, மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா, துணை மேயர் தாமரைச்செல்வன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம், மாநகர தி.மு.க. செயலாளர் ராஜா மற்றும் நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள் , உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதி கள் உள்ளனர்.

    • 20 மீட்டர் தூர தாழ்வான பாலத்தை இடிக்கும் பணிகள் தொடங்கி உள்ளன.
    • மேம்பால கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    சென்னை:

    தி.நகர் உஸ்மான் ரோடு பாலத்தையும், அண்ணா சாலையையும் இணைக்கும் வகையில் புதிய பாலம் கட்டப்பட்டு வருகிறது.

    ரூ.131 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் இந்த புதிய பாலம் 55 தூண்களுடன் 7.5 மீட்டர் அகலத்தில் இரு வழி பாதையுடன் பிரமாண்ட பாலமாக உருவாகி வருகிறது.

    இந்த பாலப் பணிகளில் 50 சதவீதத்துக்கும் மேற்பட்ட பணிகள் முடிவடைந்து உள்ளன. அண்ணா சாலையில் இருந்தே தி.நகர் உஸ்மான் ரோடு பாலத்துடன் இணையும் வகையில் போடப்பட்டு உள்ள இந்த பாலத்தின் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தி.நகர் ரங்கநாதன் தெருவை ஒட்டியுள்ள பாலத்தின் இணைப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதையொட்டி, ரங்கநாதன் தெரு சந்திப்பில் பாலம் சாய்வாக இறங்கும் இடத்தை இடித்து விட்டு அப்பகுதியில் உயரமான பாலம் அமைக்கப்பட உள்ளது. 120 மீட்டர் தூர தாழ்வான பாலத்தை இடிக்கும் பணிகள் தொடங்கி உள்ளன.

    இதற்காக தி.நகர் உஸ்மான் ரோடு பாலம் மூடப்பட்டு போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டுள்ளது.

    இதனை தொடர்ந்து உஸ்மான் ரோடு பகுதியில் இருந்து தி.நகர் பஸ் நிலையத்துக்கு செல்லும் வாகனங்கள் மாற்று பாதைகள் வழியாக திருப்பி விடப்பட்டு உள்ளன. மேம்பாலம் வழியாக சென்ற வானங்கள் தற்போது பிரகாசம் சாலை, பர்கிட் சாலை வழியாக பஸ் நிலையத்தை சென்றடைகின்றன. சி.ஐ.டி. பிரதான சாலையில் இருந்து வடக்கு உஸ்மான் ரோட்டுக்கு செல்லும் வாகனங்கள் தென்மேற்கு போக் சாலை வழியாக கண்ணம்மா பேட்டை சந்திப்புக்கு சென்று வெங்கட் நாராயணா சாலை வழியாக வடக்கு உஸ்மான் ரோட்டை சென்றடையலாம்.

    தி.நகர் பகுதிக்கு செல்பவர்கள் தற்போது மூடப்பட்டுள்ள பாலம் வழியாகவே செல்வார்கள். வணிக நிறுவனங்கள் அதிகம் உள்ள பகுதி என்பதால் பாலம் மூடப்பட்டுள்ள நிலையில் வாகன ஓட்டிகள் சிரமத்தை சந்தித்து வருகிறார்கள். இதையடுத்து போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வகையில் மாற்று ஏற்பாடுகளை செய்ய போலீசார் ஆலோசித்து வருகிறார்கள். மேம்பால கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்ட வருகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • புதிய பாலம் கட்டப்பட்டு போக்குவரத்து நடந்து வந்தது.
    • இரவு நேரத்தில் இந்த பாலம் இடிந்து விழுந்ததால் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம் உத்தரகன்னடா மாவட்டம் கார்வார் என்ற பகுதியில் ஆற்றின் குறுக்கே கடந்த 1983-ம் ஆண்டு பாலம் கட்டப்பட்டது. இந்த பாலம் வழியாக கோவா செல்லும் வாகனங்கள் சென்று வந்தது. இந்த நிலையில் பாலம் பழமையானதால் கடந்த 2009-ம் ஆண்டு இந்த பாலத்தை சீரமைக்க முடிவு செய்தனர். ஆனால் அந்த பணி சாத்தியப்படவில்லை. இதனால் பாலத்தின் பாதி பகுதி மட்டும் சீரமைக்கப்பட்டது. இதற்கிடையே இந்த பாலத்திற்கு மாற்றாக அதே பகுதியில் கடந்த 2018-ம் ஆண்டு புதிய பாலம் கட்டப்பட்டு போக்குவரத்து நடந்து வந்தது.

    இந்த நிலையில் நள்ளிரவு 1 மணியளவில் பழைய பாலம் வழியாக ஒரு லாரி ஆற்றை கடந்த போது திடீரென பாலம் இடிந்து ஆற்றில் விழுந்தது. இதில் லாரியும் ஆற்றில் கவிழ்ந்தது. இதுப்பற்றி தெரியவந்ததும் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் லாரி டிரைவரை பத்திரமாக மீட்டனர்.


    இதையடுத்து அந்த பகுதியில் உள்ள புதிய பாலத்திலும் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் கார்வார்-கோவா இடையே போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. ஆற்றில் இடிந்து விழுந்த பாலத்தை பார்க்க பொதுமக்கள் அதிகளவில் வந்து கொண்டு இருந்தனர்.

    இதனால் முன்எச்சரிக்கையாக ஆற்றுபகுதிக்கு பொதுமக்கள் வருவதை தடுக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. இரவு நேரத்தில் இந்த பாலம் இடிந்து விழுந்ததால் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதுப்பற்றி தெரியவந்ததும் மாவட்ட கலெக்டர் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • 2 மாதங்களுக்கு முன்பு பாலத்தை இடித்து விட்டு புதிய பாலம் கட்டும் பணி தொடங்கியது. 2 இடங்களிலும் இரட்டை பாலம் தலா ரூ.3 கோடி செலவில் கட்டப்பட்டது.
    • இந்த பாலத்தில் இருசக்கர வாகனம் தவிர இதர வாகனங்கள் செல்லாத வகையில் தடுப்புகளை வைத்து அடைக்கப்பட்டன.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாநகரில் மிகவும் பழமை வாய்ந்த கல்லணைக் கால்வாயில் உள்ள இர்வீன் பாலம் மற்றும் கரந்தையில் உள்ள வடவாறு பாலத்தை இடித்து அகற்றி விட்டு புதிய பாலம் கட்ட நெடுஞ்சாலைத்துறை முடிவு செய்தது.அதன்படி கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பாலத்தை இடித்து விட்டு புதிய பாலம் கட்டும் பணி தொடங்கியது. 2 இடங்களிலும் இரட்டை பாலம் தலா ரூ.3 கோடி செலவில் கட்டப்பட்டது.

    இதையடுத்து இருசக்கர வாகனங்கள் செல்லும் வகையில் கல்லணை கால்வாயில் கட்டப்பட்ட இரட்டை பாலத்தில் ஒரு பாலம் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. இந்த பாலத்தில் இருசக்கர வாகனம் தவிர இதர வாகனங்கள் செல்லாத வகையில் தடுப்புகளை வைத்து அடைக்கப்பட்டன.

    இந்த நிலையில்மற்றொரு பாலத்தை கட்டும் பணியினை நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளர் பாலசுப்பிரமணியன், உதவி கோட்டப்பொறியாளர் ரேணுகோபால், உதவி பொறியாளர் சோபனா மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    ×