என் மலர்
நீங்கள் தேடியது "தொண்டு நிறுவனம்"
- பாதிக்கப்பட்ட பலர் தொண்டு நிறுவனத்தை அணுகிய போது அவர்களுக்கு உரிய தீர்வு கிடைக்கவில்லை என தெரிகிறது.
- முற்றுகைப் போராட்டம் நேற்று இரவில் உள்ளிருப்பு போராட்டமாக மாறியது.
ஆறுமுகநேரி:
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரியில் பிரபல அறக்கட்டளை மற்றும் தொண்டு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் மூலம் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பட்டதாரி இளம் பெண்கள் தற்காலிக ஆசிரியர் பணிக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களின் தகுதிக்கேற்ப நிர்ணயிக்கப்பட்ட மாத சம்பளத்தை இந்த தொண்டு நிறுவனமே வழங்கி வந்துள்ளது. ஆனால் இவ்வாறு பணி அமர்த்தப்பட்ட ஆசிரியர்களிடம் இருந்து வளர்ச்சி நிதி என்ற பெயரில் நன்கொடை பெறப்பட்டுள்ளதாக தெரிகிறது.
மேலும் இப்படி வாங்கப்பட்ட தொகை, பணம் கொடுத்தவர்களின் பெயரில் காப்பீடு செய்யப்பட்டு 21 ஆண்டுகளுக்குப் பிறகு அவர்களுக்கு திரும்ப கிடைக்கும் என்று உறுதிமொழி பத்திரம் வழங்கப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் தூத்துக்குடி மாவட்டத்திலும் பிற மாவட்டங்களிலும் நூற்றுக்கணக்கான பட்டதாரி பெண்கள் பணம் செலுத்தி குறிப்பிட்ட தொண்டு நிறுவனத்தின் உறுப்பினர்களாகி தற்காலிக ஆசிரியைப் பணியை பெற்றுள்ளதாக தெரிகிறது.
அத்துடன் அவர்கள் வழங்கிய நன்கொடை தொகையின் அடிப்படையில் அவர்களுக்கு ரூ.5 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் வரையில் மாத சம்பளமாக வழங்கப்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் இப்படியான மாத சம்பளத்தொகை கடந்த 7 மாதங்களாக வழங்கப்படாமல் இருப்பதாக கூறப்படுகிறது.
இதனிடையே தற்காலிக ஆசிரியை பணிக்கு சில மாவட்ட கல்வி அதிகாரிகள் திடீர் தடை விதித்து விட்டதாகவும் தெரிகிறது. சம்பள பிரச்சனை, பணி நீக்கம் ஆகிய இந்த காரணங்களால் பாதிக்கப்பட்ட பலர் தொண்டு நிறுவனத்தை அணுகிய போது அவர்களுக்கு உரிய தீர்வு கிடைக்கவில்லை என தெரிகிறது.
இந்நிலையில் தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களைச் சேர்ந்த 60-க்கும் மேற்பட்ட தற்காலிக ஆசிரியர்கள் தங்கள் குடும்பத்தினருடன் வந்து ஆறுமுகநேரியில் உள்ள தொண்டு நிறுவன அலுவலகத்தை நேற்று காலையில் முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்த ஆறுமுகநேரி இன்ஸ்பெக்டர் செந்தில், சப்-இன்ஸ்பெக்டர்கள் அமலோற்பவம், வேல்பாண்டியன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். அவர்களின் பேச்சுவார்த்தையில் சமரசம் ஏற்படவில்லை.
இதனிடையே முற்றுகைப் போராட்டம் நேற்று இரவில் உள்ளிருப்பு போராட்டமாக மாறியது. இதன்படி பாதிக்கப்பட்ட அனைவரும் தொண்டு நிறுவனத்தின் அலுவலகத்திற்குள் சென்று அமர்ந்தனர்.
இது பற்றிய தகவல்கள் பரவியதை தொடர்ந்து மேலும் பல்வேறு இடங்களில் இருந்து பாதிக்கப்பட்ட 100-க்கும் அதிகமான பெண்கள் இன்று காலையில் வந்து சேர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அரசு துறை அதிகாரிகள் இந்தப் பிரச்சினையில் தலையிட்டு உரிய தீர்வு காண வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
- மாணவ, மாணவிகளுக்கு தலா ரூ.5 ஆயிரத்து 638 மதிப்பில் ஒரு கிராம் தங்க நாணயங்கள் விருதாக வழங்கப்பட்டது.
- மொத்தம் 610 மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட்ட பரிசுகளின் மொத்த மதிப்பு ரூ.40 லட்சம் ஆகும்.
கிருஷ்ணகிரி,
ஐ.வி.டி.பி. மகளிர் சுய உதவிக்குழுக்களில் உள்ள உறுப்பினர்களின் குழந்தைகள் 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு அரசு பொது தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறுவதை ஊக்குவிக்கும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் ஐ.வி.டி.பி. கோசலை விருது வழங்கப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டின் கோசலை விருது வழங்கும் விழா கிருஷ்ணகிரி புனித அன்னாள் மகளிர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த விழாவில் 10-ம் வகுப்பு அரசு பொது தேர்வில் சிறப்பிடம் பெற்ற 8 மாணவ, மாணவிகளுக்கு தலா ரூ.22 ஆயிரத்து 552 மதிப்பிலான 4 கிராம் தங்க நாணயங்களும், 12-ம் வகுப்பு அரசு பொது தேர்வில் சிறப்பிடம் பெற்ற 5 மாணவர்களுக்கு தலா ரூ.37 ஆயிரத்து 913 மதிப்பிலான லெனோவா மடிக்கணினிகளும் வழங்கப்பட்டது.
மேலும் 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு அரசு பொது தேர்வில் 90 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண்கள் பெற்ற ஏனைய மாணவ, மாணவிகளுக்கு தலா ரூ.5 ஆயிரத்து 638 மதிப்பில் ஒரு கிராம் தங்க நாணயங்கள் விருதாக வழங்கப்பட்டது.
மொத்தம் 610 மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட்ட பரிசுகளின் மொத்த மதிப்பு ரூ.40 லட்சம் ஆகும்.
ஐ.வி.டி.பி. நிறுவன தலைவரும், ராமன் மகசேசே விருது பெற்றவருமான குழந்தை பிரான்சிஸ் தலைமையில் இந்த விழா நடைபெற்றது. இதில் நாமக்கல் தமிழ் சங்க செயலாளர் கோபால நாராயண மூர்த்தி, திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியின் கூடுதல் முதல்வர் மரிய ஆரோக்கியராஜ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
அவர்கள் பேசுகையில் மாணவ, மாணவிகள் வாழ்க்கையில் மென்மேலும் உயர ஊக்கமளித்து வாழ்த்துக்களை கூறி பேசினார்கள்.
மேலும் தமிழ்நாடு கிராம வங்கி, இந்தியன் வங்கி, யூனியன் பேங்க் ஆப் இந்தியா வங்கியின் மேலாளர்கள், ஜாய் ஆலுக்காஸ் நிறுவனத்தின் தென்னிந்திய மேலாளர், வேலூர் அக்சிலியம் கல்லூரியின் முன்னாள் முதல்வர் யூஜினி, கிருஷ்ணகிரி புனித அன்னாள் மகளிர் மேல்நிலைப்பள்ளியின் அருட்சகோதரிகள் என பலர் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு தங்க நாணயங்களை வழங்கினார்கள்.
விழாவிற்கான ஏற்பாடுகளை ஐ.வி.டி.பி. நிர்வாக குழு உறுப்பினர்கள் ஜோஸ்வா, நந்தினி ஜோஸ்வா ஆகியோர் செய்திருந்தனர்.
விழாவில் கிருஷ்ணகிரி புனித அன்னாள் மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
ரூ.36.95 கோடியில் கல்வி பணி
இதுவரை ஐ.வி.டி.பி. கோசலை விருது திட்டத்திற்காக மட்டும் ரூ.4.69 கோடி வழங்கப்பட்டுள்ளது என்றும், கல்வி பணிக்காக மட்டும் ரூ.36 கோடியே 95 லட்சம் ஐ.வி.டி.பி. நிறுவனத்தால் வழங்கப்பட்டுள்ளதாக ஐ.வி.டி.பி. தலைவர் குழந்தை பிரான்சிஸ் தெரிவித்தார்.
- ஆதவா தொண்டு நிறுவனம் பட்டதாரி மற்றும் ஆசிரியர் பயிற்சி முடித்த இளம் பெண்களை அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர் பணிக்கு அமர்த்தி மாத சம்பளம் வழங்கி வந்துள்ளது.
- ஆறுமுகநேரியில் உள்ள தொண்டு நிறுவனத்தின் அலுவலகத்தை சுமார் 160 ஆசிரியர்கள் குடும்பத்தினருடன் வந்து திடீர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆறுமுகநேரி:
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரியில் ஆதவா தொண்டு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதன் நிறுவனரான பாலகுமரேசன் (வயது 48) தனது அலுவலகத்தின் அருகில் சுமார் 3 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இடத்தில் பால்பண்ணையும், குடும்ப உணவகத்தையும் நடத்தி வந்தார்.
இந்த ஆதவா தொண்டு நிறுவனம் பட்டதாரி மற்றும் ஆசிரியர் பயிற்சி முடித்த இளம் பெண்களை அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர் பணிக்கு அமர்த்தி மாத சம்பளம் வழங்கி வந்துள்ளது. இந்த நிலையில் தங்களுக்கு கடந்த 7 மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை என்றும், தங்களிடம் இருந்து வளர்ச்சி நிதி என்ற பெயரில் பெறப்பட்ட பணத்தை திருப்பி தரும்படி கேட்டும் ஆறுமுகநேரியில் உள்ள தொண்டு நிறுவனத்தின் அலுவலகத்தை சுமார் 160 ஆசிரியர்கள் குடும்பத்தினருடன் வந்து திடீர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதே போல் பாதிக்கப்பட்டதாக கூறி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் தற்காலிக ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரையில் அவர்களுக்கான தீர்வு ஏதும் கிடைக்கவில்லை. இதனிடையே ஆதவா நிறுவனத்திற்கு சொந்தமான பால் பண்ணையில் ' திடீர் திடீரென' 2 நாட்கள் பல லட்சம் மதிப்புள்ள வைக்கோல் படப்புகள் தீயில் எரிந்து நாசமாயின. மேலும் நிறுவனத்திற்கு பணம் கொடுத்தவர்கள் சார்பில் சிலர் அந்த பால் பண்ணையில் முகாமிட்டனர். இதனால் கூடுதல் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில் பல்வேறு இடங்களை சேர்ந்த தற்காலிக ஆசிரியர், ஆசிரியைகள் 65 பேர் நேற்று திரண்டு வந்து அதிரடியாக பால் பண்ணைக்குள் நுழைந்தனர். தாங்கள் இந்த பால் பண்ணையின் பங்குதாரர்கள் என்று உரிமை கோரிய அவர்கள் பால குமரேசனின் விருப்பத்தின்படியே இங்கு வந்துள்ளதாகவும், மற்றவர்கள் இங்கிருந்து வெளியே செல்ல வேண்டும் என்றும் எச்சரிக்கை விடுத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இது பற்றி தகவல் அறிந்த ஆறுமுகநேரி இன்ஸ்பெக்டர் செந்தில் மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் அங்கிருந்த ஆசிரியர் குழுவினரை பார்த்து எவ்வித ஆவணமும் இல்லாத உங்களால் இந்த பால் பண்ணையை உரிமை கோர இயலாது என்றும், இதே போல் மற்றொரு தரப்பினரும் வந்தால் அது பெரும் பிரச்சினைக்கு வழிவகுக்கும் என்பதால் இங்கிருந்து உடனே சென்று விடுங்கள் என்றும் அறிவுறுத்தினர். இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்த அந்த ஆசிரியர் குழுவினர் சோகத்துடன் அங்கிருந்து திரும்பி சென்றனர். தொடர்ந்து பால்பண்ணையில் போலீஸ் காவல் போடப்பட்டுள்ளது.
- 14,000 இந்திய பழங்குடியின பள்ளி மாணவிகளிடையே நடத்தப்பட்ட ஆராய்ச்சியின் விபரீதத்தில் முடிந்தது
- விழிப்புணர்ச்சி இல்லாததால் ஆராய்ச்சிக்குப் பழங்குடியினர் குறிவைக்கப்பட்டுள்ளனர்.
ஆய்வுகூடமான இந்தியா
இந்தியா புதிய விஷயங்களைச் சோதனை செய்வதற்கான ஆய்வுக்கூடம் என உலகப் பணக்காரர் பில் கேட்ஸ் கூறியுள்ள கருத்துக்கு கண்டங்கள் எழுந்துள்ளது. வேலை தேடும் தளமான லிங்க்ட்இன் தளத்தின் இணை நிறுவனர் ரீட் ஹாஃப்மேன் உடன் மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸ் போட்காஸ்ட் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார்.
அப்போது பேசிய அவர், இந்தியாவில் கடினமான விஷயங்கள் ஏராளமாக உள்ளன. உடல்நலம், ஊட்டச்சத்து, கல்வி ஆகியவை மேம்பட்டு வருகின்றன, மேலும் அவை போதுமான அளவு நிலையான வருவாய் உருவாகி வருகிறது.
இன்னும் 20 வருடங்கள் கழித்து அங்குள்ள மக்கள் வியத்தகு முறையில் முன்னேறி இருப்பார்கள். எனவே இந்தியா [புதிய] விஷயங்களை முயற்சி செய்து பார்க்கும் ஆய்வுக்கூடம் போன்றது. அங்கு நிரூபனம் ஆன பிறகு அவற்றை [திட்டங்களை] இடங்களுக்கு[ நாடுகளுக்கு] எடுத்துச் செல்லலாம் என்று தெரிவித்துள்ளார்.

சோதனை எலிகளான பழங்குடியின மாணவிகள்
முன்னதாக பில் கேட்ஸ் தனது மனைவி பெயரில் நடத்தும் தொண்டு நிறுவனமான மெலிண்டா கேட்ஸ் நிறுவனத்தின் நிதியுதவியுடன்14,000 இந்திய பழங்குடியின பள்ளி மாணவிகளிடையே நடத்தப்பட்ட ஆராய்ச்சியின் விபரீத முடிவுகளைசுட்டிக்காட்டி பலர் பில் கேட்ஸ் கருத்துக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
மெலிண்டா கேட்ஸ் நிறுவனத்தின் நிதியுதவியுடன் இயங்கும் PATH (Programme for Appropriate Technology in Health) என்ற அரசு சாரா நிறுவனம் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் [ ICMR] உடன் இணைத்து தெலுங்கானா மற்றும் குஜராத் வதோதரா பகுதிகளில் உள்ள 14,000 பழங்குடியின மாணவிகளுக்குப் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் தடுப்பூசி போடப்பட்டு அதன் விளைவுகள் பரிசோதிக்கப்பட்டது.
இந்த சோதனை தொடங்கி சில மாதங்களுக்குப் பிறகு, பல மாணவிகளுக்குக் கடுமையான பக்க விளைவுகள் ஏற்பட்டது. 7 பழங்குடியின மாணவிகள் சோதனை தடுப்பூசி விளைவுகளால் பரிதாபமாக உயிரிழந்தனர். ஆனால் அவர்களின் இறப்புக்கான காரணம் தொற்று பாதிப்பு, தற்கொலை என வேறு விதமாக விளக்கம் அளிக்கப்பட்டது.

கோப்புப் படம்
விழிப்புணர்ச்சி
விசாரணையின்மூலம் ஆராய்ச்சியில் நடந்த விதிமீறல்கள் கண்டறியப்பட்டன. சுகாதார முன்னெடுப்பு என கூறி இந்த சோதனைகள் நடத்தப்பட்டது என்றும் சம்மத படிவத்தில் பழங்குடியின மாணவிகளின் பெற்றோருக்குப் பதில் அவர்கள் தங்கிப் படித்து வந்த விடுதி காப்பாளர்கள் கையெழுத்திட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது. அதிக விழிப்புணர்ச்சி இல்லாததால் ஆராய்ச்சிக்குப் பழங்குடியின சிறுமிகள் குறிவைக்கப்பட்டுள்ளனர்.
ஸ்கின் டாக்டர்
2009 தடுப்பூசி சோதனைகள், வெளிநாட்டு நிதியுதவியுடன் நிறுவனங்களால் இந்தியாவும் பிற வளரும் நாடுகளும் எவ்வாறு சோதனைக் களமாகப் பயன்படுத்தப்படுகின்றன என்பதற்கு எச்சரிக்கை மணியாக அமைந்தது. ஸ்காட்லாந்தைச் சேர்ந்த 'ஸ்கின் டாக்டர்' என்ற விமர்சகர், நிதியுதவி பெறும் எத்தனை என்ஜிஓக்கள் இந்தியாவிலும் ஆப்பிரிக்காவிலும் இதேபோன்ற சோதனைகளை நடத்துகிறார்கள் என்பது யாருக்குத் தெரியும்?

எங்களை வெளிப்படையாகக் கினிப் பன்றிகளாக நடத்தும் அதே வேளையில், எங்கள் ஆட்சியாளர்களை அவர்கள் எவ்வளவு எளிதாக அணுகுகிறார்கள் என்பது கவலை அளிக்கிறது என்று தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
கடந்த மார்ச் மாதம் முகேஷ் அம்பானி மகன் திருமணத்துக்காக இந்தியா வந்த பில் கேட்ஸ் பிரதமர் மோடியை சந்தித்து உரையாடியது குறிப்பிடத்தக்கது.
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியி ட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தஞ்சாவூர் மாவட்ட த்தில் 2022-23-ம் நிதியாண்டில் முதியோர் மற்றும் குழந்தைகளை ஒருங்கிணைத்து மாநில அரசு மானியத்துடன் கூடிய ஒருங்கிணைந்த வளாகங்கள் நடத்த விருப்பம் உள்ள தொண்டு நிறுவனங்கள் வருகிற 25-ஆம் தேதிக்குள் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட சமூகநல அலுவலகத்தில் நேரில் கருத்துருக்களை அனுப்பலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.