என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஏழை மக்கள்"

    • அமைச்சர் மனோ தங்கராஜ் பேச்சு
    • ஏழைப் பெண்களுக்கு திருமண நிதி உதவி மற்றும் திருமாங்கல்யத்திற்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கீழ் ஏழைப் பெண்களுக்கு திருமண நிதி உதவி மற்றும் திருமாங்கல்யத்திற்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர், தலைமையில், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் முன்னிலையில் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாக பேரூராட்சி அலுவலக கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்து கொண்டு ஏழை பெண்களுக்கு திருமண நிதி உதவி வழங்கி பேசியதா வது:-

    தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு பொதுமக்களை சார்ந்த அரசாக திகழ்வதால், ஏழை, எளிய மக்களின் நலனில் மிகுந்த அக்கறை கொண்டு பல்வேறு நலத்திட்ட உதவிகள் மற்றும் வளர்ச்சி திட்டப் பணிகளை நிறைவேற்றி வருகிறது. கலைஞர் ஏழை விதவை பெண்களின் நலனை கருத்தில் கொண்டு, ஈ.வெ.ரா.மணியம்மையார் நினைவு ஏழை விதவை மகள் திருமண நிதி உதவி திட்டத்தினை தொடங்கி வைத்தார். மேலும், அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண்கள் திருமண நிதி உதவி திட்டம், டாக்டர் முத்துலெட்சுமிரெட்டி அம்மையார் நினைவு கலப்பு திருமண நிதிஉதவி திட்டம், டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண நிதி உதவி திட்டம் என நான்கு வகையான திருமண உதவி திட்டங்களுக்கு 2022-2023 நிதி ஆண்டில் 55 பயனாளிகளுக்கு திருமண உதவித்தொகை மற்றும் திரு மாங்கல்யத்திற்கு 8 கிராம் தங்கம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    அதில் பட்டதாரிகள் 52 நபர்கள் மற்றும் பட்டதாரி அல்லாத 3 நபர்கள் என 55 நபர்களுக்கு தங்க நாணயங்களும், ஒரு பட்டதாரிக்கு ரூ.50 ஆயிரம் வீதம் 52 பட்டதாரிகளுக்கு ரூ.26 லட்சமும், பட்டதாரி அல்லாதவர்களுக்கு ரூ.25 ஆயிரம் வீதம் 3 நபர்களுக்கு ரூ.75 ஆயிரமும் வழங்கப்பட்டுள்ளது. 2021- 2022 நிதியாண்டில் 10-ம் வகுப்பு படித்த 970 ஏழை பெண்களுக்கு தலா ரூ.25 ஆயிரம் வீதம் ரூ. 2.425 கோடி திருமண நிதியுதவியும், பட்டம் மற்றும் பட்டயம் படித்த 2380 ஏழைப்பெண்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் வீதம் ரூ.11.90 கோடி, திருமண நிதியுதவியும் மற்றும் 8 கிராம் எடையுள்ள 3350 தங்க நாணயங்கள் வழங்கப்பட்டுள்ளது.

    மேலும், பெண்களின் முன்னேற்றத்திற்கு டாக்டர் கலைஞர் மூன்று உன்னதமான திட்டங்களை அறிமுகப்படுத்தி அவற்றை சிறப்பாக செயல்படுத்தி அனைத்துத்தரப்பட்ட மகளிர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார்கள்.

    கலைஞர் வழியில் செயல்படும் தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பெண்களின் முன்னேற்றத்திற்கென இரண்டு உன்னதமான திட்டங்களை அறிவித்துள்ளார். அவற்றில் பெண்கள் இடைநிற்றலை தவிக்கும் வகையிலும், அரசுப்பள்ளிகளில் பயின்று உயர் கல்வி பயிலும் நோக்கிலும் புதுமைப்பெண் என்ற திட்டத்தினை அறிமுகப்படுத்தி மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் நிகழ்ச்சியினை இரண்டு கட்டங்களாக தொடங்கி வைத்ததின் அடிப்படையில், குமரி மாவட்டத்தில் புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் 149" கல்வி நிறுவனங்களிலிருந்து 3168 ஏழை, எளிய மாணவியர்கள் ரூ.1000 உதவித்தொகை பெற்று வருகின்றனர்.

    இந்த ஆண்டிற்கான நிதிநிலை அறிவிக்கையில் தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதியினை நிறைவேற்றும் வகையில் இல்லத்தரசிகளுக்கு ரூ.1000 உரிமை தொகை வரும் செப்டம்பர் மாதம் முதல் வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்கள். இவ்வாறு பெண்களின் வாழ்வில் ஏற்றம் பெற பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வரும் தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசிற்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்வதோடு, ஏழை மக்களின் நலன் காக்கும் அரசாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு செயல்படுகிறது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    மாவட்ட சமூக நல அலுவலர் சரோஜினி, நாகர்கோவில் மாநகராட்சி துணை மேயர் மேரி பிரின்சி லதா, முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் பூதலிங்கம் பிள்ளை, மாவட்ட சமூகநல அலுவலக கண்காணிப்பாளர் தேவதாஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பாகிஸ்தானில் ஏழ்மையில் இருக்கும் குடிமக்களை இழிவுபடுத்துவதாக சமூக ஊடகங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.
    • 5 ஆண்டுகள் கேப்டனாக இருந்தும் பாபர் அசாமுக்கு எப்படி நடந்துகொள்வது என்று தெரியவில்லை.

    பாகிஸ்தான் விக்கெட் கீப்பர்-பேட்டர் அசம் கான் ஒரு பஸ் பயணத்தின் போது சக வீரர்களுடன் 'உணர்ச்சியற்ற' வீடியோவை உருவாக்கினார்.

    அந்த வீடியோவில் அவர் பணத்தால் வியர்வையைத் துடைப்பதைக் காணலாம். அவரது நகைச்சுவையின் ஒரு பகுதியாக, கிரிக்கெட் வீரரும் தனது கேப்டன் பாபர் ஆசாமுக்கு பதிலளிக்கும் போது அதையே செய்வதைப் பற்றி தற்பெருமை செய்வது போல் காட்டினார்.

    பாகிஸ்தான் கேப்டன் அசம் கான் தனது முகத்தை கரன்சி நோட்டுகளால் துடைக்கும் வீடியோவைப் பகிர்ந்ததை அடுத்து ரசிகர்கள் சமூக ஊடகங்களில் பாபர் ஆசாமை விமர்சித்து பேசி வருகின்றனர்.

    சர்ச்சைக்குரிய வீடியோ, பாகிஸ்தானில் ஏழ்மையில் இருக்கும் குடிமக்களை இழிவுபடுத்துவதாக சமூக ஊடகங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

    இந்த நடவடிக்கை அவரது அருகாமையில் இருந்த சக ஊழியர்களிடமிருந்து அதிக சிரிப்பலை ஏற்படுத்தியிருந்தாலும், இது சமூக ஊடகங்களில் நெட்டிசன்கள் மத்தியில் பரவலான சீற்றத்தை ஈர்த்தது. ஒரு குறிப்பிட்ட சமூக ஊடகப் பயனர், ஆசம் கானின் 'உணர்ச்சியற்ற' செயல் தற்போது வெப்பத்தால் பாதிக்கப்பட்டுள்ள 'ஏழை பாகிஸ்தானிய' குடிமக்களை இலக்காகக் கொண்டது என்று கூறினார்.

    இன்னும் சிலர், பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் உண்மையில் உணர்ச்சியற்ற முட்டாள்கள். பாகிஸ்தானில் வெயிலின் தாக்கத்தால் மக்கள் இறக்கின்றனர். இவர்கள் இங்கிலாந்தில் அமர்ந்து ஏழை பாகிஸ்தானியர்களை கேலி செய்து பணத்தால் வியர்வையை துடைக்கிறார்கள். 5 ஆண்டுகள் கேப்டனாக இருந்தும் பாபர் அசாமுக்கு எப்படி நடந்துகொள்வது என்று தெரியவில்லை. என்று பல்வேறு கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

    • பெண் குழந்தைகள் பாலின விகிதத்தை உயர்த்தும் வகையில் சிறப்பாக பணியாற்றியதற்காக தமிழகத்தில் முதல் மூன்று மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டன.
    • அதன்படி 2-ம் இடம் பிடித்து சாதனை படைத்த தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவருக்கு, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெள்ளிப்பதக்கம்,பாராட்டு சான்றிதழ் வழங்கி பாராட்டு தெரிவித்தார்.

    தஞ்சாவூர்:

    பெண் குழந்தைகள் பாலின விகிதத்தை உயர்த்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பெண் குழந்தைகள் நலனுக்காக தமிழக அரசு அமல்படுத்தி உள்ள பல்வேறு திட்டங்களை அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் பொது மக்களிடம் கொண்டு சேர்த்து வருகின்றனர்.

    இந்நிலையில் பெண் குழந்தைகள் பாலின விகிதத்தை உயர்த்தும் வகையில் சிறப்பாக பணியாற்றியதற்காக தமிழகத்தில் முதல் மூன்று மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டன. அதில் முதல் இடத்தை கோவையும், 2-ம் இடத்தை தஞ்சாவூரும், 3-ம் இடத்தை கரூர் மாவட்டமும் பிடித்து சாதனை படைத்துள்ளன.

    இதற்காக சிறப்பாக பணியாற்றிய மாவட்ட கலெக்டர்களுக்கு விருது வழங்கும் விழா சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்றது.விழாவுக்கு சமூக நலத்துறை அமைச்சர் கீதாஜீவன் முன்னிலை வகித்தார். விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பெண் குழந்தைகள் பாலின விகிதத்தை உயர்த்த சிறப்பாக பணியாற்றிய கோவை ,தஞ்சாவூர், கரூர் மாவட்ட கலெக்டர்களுக்கு பதக்கம், பாராட்டு சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

    அதன்படி 2-ம் இடம் பிடித்து சாதனை படைத்த தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவருக்கு, முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெள்ளிப் பதக்கம் , பாராட்டு சான்றிதழ் வழங்கி பாராட்டு தெரிவித்தார்.

    சாதனை படைத்த தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவருக்கு பல்வேறு தரப்பிலிருந்து பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன. தஞ்சை மாவட்டத்தில் அரசின் பல்வேறு நல்ல திட்டங்களை கடைக்கோடி வரை உள்ள மக்களுக்கு சென்று சேரும் வகையில் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நடவடிக்கை எடுத்துள்ளார். இதனால் அரசின் திட்டங்கள் எளிதாக கிடைக்கின்றன என்று ஏழை மக்கள் பாராட்டு தெரிவித்தனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-

    மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி, வீடு இல்லாதவர்களுக்கு பட்டா வழங்கி வீடு கட்ட நடவடிக்கை, மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை உள்பட பல்வேறு அரசின் நல திட்டங்களை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் செயல்படுத்தி வருகிறார். தற்போது பெண் குழந்தைகள் பாலின விகிதத்தை உயர்த்த சிறப்பான பணிக்காக பதக்கம், பாராட்டு சான்றிதழ் ஆகியவற்றை முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி உள்ளார். தொடர்ந்து பல்வேறு சாதனைகளை படைத்து மக்கள் கலெக்டராக விளங்கி வருகிறார். கலெக்டரின் நல்ல செயல்களால் தமிழக அளவில் தஞ்சாவூர் மாவட்டம் புகழ் பெற்று விளங்குகிறது, தஞ்சாவூர் மாவட்டத்திற்கு மேலும் மேலும் பெருமை சேர்த்துள்ளார்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

    ×