என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "peacock"

    • 60 அடி ஆழம் கிணறு இருந்ததால், மேலே வர முடியாமல் மயில் தண்ணீரில் தத்தளித்தது.
    • தீயணைப்பு நிலைய வீரா்கள் கயிறு கட்டி கிணற்றில் இறங்கி மயிலை உயிருடன் மீட்டனா்.

    காங்கயம் :

    காங்கயம் அருகே, செம்மங்காளிபாளையம் கிராமத்தில் தனியாருக்குச் சொந்தமான விவசாயக் கிணற்றில் ஆண் மயில் விழுந்துள்ளது. 60 அடி ஆழம் கிணறு இருந்ததால், மேலே வர முடியாமல் மயில் தண்ணீரில் தத்தளித்தது. தகவலின்பேரில் காங்கயம் தீயணைப்பு நிலைய வீரா்கள் சம்பவ இடத்துக்கு சென்று, கயிறு கட்டி கிணற்றில் இறங்கி மயிலை உயிருடன் மீட்டனா்.

    மீட்கப்பட்ட மயில் காங்கயம் வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டு, பின்னா் ஊதியூா் காப்புக்காட்டில் பாதுகாப்பாக விடப்பட்டது. 

    • அரசு பஸ் ஒன்று புளியம்பட்டி நோக்கி சென்று கொண்டிருந்தது.
    • மயில் பஸ்ஸில் உள்ளே விழுந்து இறந்தது.

    திருப்பூர் :

    பல்லடம் பஸ் நிலையத்திலிருந்து இன்று காலை அரசு பஸ் ஒன்று புளியம்பட்டி நோக்கி சென்று கொண்டிருந்தது. பஸ்சை டிரைவர் சக்திகுமார் ஓட்டி சென்றார். பஸ் பல்லடம் அடுத்த சின்னிய கவுண்டன் பாளையம் அருகே சென்று கொண்டிருந்தபோது எதிரே மயில் ஒன்று பறந்து வந்து பஸ்ஸின் முன்பக்க கண்ணாடி மீது பயங்கரமாக மோதியது. மோதிய வேகத்தில் பஸ்ஸில் முன்பக்க கண்ணாடி உடைந்து தூள் தூளானது.

    மேலும் மயில் பஸ்ஸில் உள்ளே விழுந்து இறந்தது. இதில் பஸ்ஸில் பயணம் செய்த பெண் ஒருவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. பின்னர் இது குறித்து டிரைவர் சக்திவேல் பல்லடம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.போலீசார் வனத்துறையினருடன் இறந்த மயிலை மீட்டு சென்றனர். பின்னர் பயணிகளை வேறொரு பஸ்ஸில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.

    • சோதனை சாவடி பகுதி மிகவும் குளிர்ச்சியாக இருக்கக்கூடிய பகுதியாகும்.
    • ஆண் மயில் ஒன்று தனது தோகையை விரித்து ஆடி கொண்டிருந்தது.

    அந்தியூர், 

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்து வரட்டுப்பள்ளம் அணை உள்ளது.

    இந்த அணையின் அருகே உள்ள ேசாதனை சாவடி பகுதி மிகவும் குளிர்ச்சியாக இருக்கக்கூடிய பகுதியாகும். இந்த பகுதியில் மயில்கள் அதிக அளவில் உள்ளது. அவ்வப்போது மயில்கள் அந்த பகுதியில் உள்ள விலை நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை தின்றும் சேதப்படுத்தியும் வருகிறது.

    இந்த நிலையில் மாலை நேரத்தில் ஆண் மயில் ஒன்று தனது தோகையை விரித்து ஆடி கொண்டிருந்தது. இதனை அந்தப் பகுதியில் சென்றவர்கள் பார்த்து ரசித்தனர்.

    மேலும் தங்களது செல்போனில் படம் பிடித்து நண்பர்களுக்கும் அனுப்பி வைத்தனர். மயில் தோகை விரித்து ஆடினால் மழை வரும் என்று முன்னோர்கள் கூறுவார்கள். அதே போல் மயில் ேதாகை விரித்து ஆடியதும் அந்தப் பகுதியில் சிறிது நேரம் மழையும் தூறியது.

    • காரின் மேலே மயில் ஒன்று அமர்ந்து கொண்டு இருந்தது.
    • போக்குவரத்து போலீசார் நாகராஜ் ஓட்டி சென்ற காரை வழிமறித்து காரின் மீது இருந்த மயிலை பாதுகாப்பாக மீட்டனர்.

    கடலூர்:

    கடலூர் திருப்பாதிரி ப்புலியூரில் இன்று மதியம் கார் ஒன்று லாரன்ஸ் சாலை வழியாக சென்று கொண்டிருந்தது. அந்த காரை நாகராஜ் என்பவர் ஓட்டி சென்றார். அந்த காரின் மேலே மயில் ஒன்று அமர்ந்து கொண்டு இருந்தது. அப்போது அங்கிருந்த பொதுமக்கள் இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

    அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போக்குவரத்து போலீசார் நாகராஜ் ஓட்டி சென்ற காரை வழிமறித்து காரின் மீது இருந்த மயிலை பாதுகாப்பாக மீட்டனர். பின்னர் வன ஆர்வலர் செல்லாவிற்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் செல்லா சம்பவ இடத்திற்கு நேரில் வந்து மயிலை மீட்டார். இதனைத் தொடர்ந்து மயில் அமர்ந்து வந்த கார் எங்கிருந்து வந்தது? எந்த ஊரை சேர்ந்தது? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். மேலும் கார் மீது மயில் அமர்ந்து சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கதாகும்.

    • பெண் மயில் பேருந்தின் முகப்பு கண்ணாடியில் அடிபட்டு காயமடைந்தது.
    • பேருந்தில் அடிபட்ட காயமடைந்த மயிலை மீட்டு முதலுதவி அளித்த பெரியசாமியை பொதுமக்கள், சமூக ஆா்வலா்கள் பாராட்டினா்.

    அவிநாசி:

    புளிம்பட்டியில் இருந்து அவிநாசி நோக்கி குரும்பபாளையம் அருகே தனியாா் பேருந்து வந்தபோது, அவ்வழியாக பறந்து வந்த பெண் மயில் பேருந்தின் முகப்பு கண்ணாடியில் அடிபட்டு காயமடைந்தது. இதில் பேருந்தின் முகப்பு கண்ணாடி முழுவதும் உடைந்தது.

    மேலும், பலத்த காயமடைந்த மயிலை அப்பகுதியைச் சோ்ந்த விவசாயி பெரியசாமி என்பவா் மீட்டு, சேவூா் கால்நடை மருத்துவமனைக்கு கொண்டுச் சென்று சிகிச்சை அளித்தாா். தகவலறிந்து, சம்பவ இடத்துக்கு வந்த வனத் துறையினா், மயிலை மீட்டு வனப் பகுதியில் விடுவதற்காக எடுத்துச் சென்றாா்.

    இதில் கடந்த பிப்ரவரி மாதம் தனது தோட்டத்துக்குள் நாய்கள் துரத்தி வந்த புள்ளிமானை மீட்டு வனத் துறையினரிடம் பெரியசாமி ஒப்படைத்தாா்.

    அதேபோல தற்போது பேருந்தில் அடிபட்ட காயமடைந்த மயிலை மீட்டு முதலுதவி அளித்த பெரியசாமியை பொதுமக்கள், சமூக ஆா்வலா்கள் பாராட்டினா். 

    • கால்களில் காயம் ஏற்பட்டு அது நடக்க முடியாமல் தவறி விழுந்தது.
    • மயிலை காப்பாற்றிய அந்த குடும்பத்தினருக்கு பாராட்டு தெரிவித்தார்.

    பல்லடம்:

    பல்லடம் அருகே உள்ள ஆறுமுத்தாம்பாளையத்தில் வசிப்பவர் முத்துக்குமாரசாமி(வயது 51). இவர் ஆறு முத்தாம்பாளையம் ஊராட்சி 5வது வார்டு உறுப்பினராக உள்ளார். நேற்று இவரது வீட்டில் தேசிய பறவையான ஆண் மயில் ஒன்று வந்து விழுந்தது. அதன் கால்களில் காயம் ஏற்பட்டு அது நடக்க முடியாமல் தவறி விழுந்தது. இதனைப் பார்த்த முத்துக்குமாரசாமி குடும்பத்தினர் மயிலுக்கு உணவு கொடுத்து தண்ணீர் கொடுத்து பராமரிப்பு செய்தனர்.

    பின்னர் இது குறித்து திருப்பூர் வனச்சரக அலுவலர் சுரேஷ் கிருஷ்ணனுக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதையடுத்து அவர் வன காவலர் வெங்கடேஸை அனுப்பி காயம்பட்ட அந்த மயிலை கால்நடை மருத்துவமனைக்கு அனுப்பி சிகிச்சை பெற ஏற்பாடு செய்தார்.மேலும் மயிலை காப்பாற்றிய அந்த குடும்பத்தினருக்கு பாராட்டு தெரிவித்தார்.

    தேசிய பறவையான மயிலை காப்பாற்றி உணவு கொடுத்து பராமரித்த முத்துக்குமாரசாமி குடும்பத்தாருக்கும், உடனடி நடவடிக்கை எடுத்து மயிலுக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்த வனத்துறைக்கும் பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

    • பக்தர்கள் மயிலுக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர்.
    • ஆனால், சிகிச்சை பலனின்றி மயில் பரிதாபமாக உயிரிழந்தது.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை காவிரி வடகரையில் வதான்யேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது.

    புகழ் பெற்ற குரு பரிகாரம் கோவிலில் தினம் தோறும் அப்பகுதியில் வசிக்கும் மயில் ஒன்று வந்து உலாவி விட்டு செல்வது வழக்கம்.

    சம்பவதன்று கோயிலுக்கு வந்துவிட்டு மீண்டும் பறந்து சென்ற பொழுது கோயில் ஆர்ச் அருகே இருந்த மின் கம்பியில் பட்டு உயிருக்கு போராடியது.

    இதை பார்த்த பக்தர்கள் மயிலுக்கு முதல் உதவி சிகிச்சை அளித்தனர்.

    ஆனால் சிகிச்சை பலனின்றி மயில் பரிதாபமாக உயிரிழந்தது.

    மயிலின் உடலை சீர்காழி வனத்துறையினர் கைப்பற்றி கொண்டு சென்றனர் இச்ச சம்பவம் பக்தர்கள் இடையே பெருத்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • இவருக்கு சொந்தமான 70 அடி ஆழமுள்ள தண்ணீர் இல்லாத கிணறு ஒன்று அப்பகுதியில் உள்ளது.
    • இந்நிலையில் தேசிய பறவையான மயில் ஒன்று கிணற்றில் தவறி விழுந்து விட்டது.

    கந்தர்வகோட்டை

    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அடுத்த நரங்கியம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சுப்ரமணியன்.

    இவருக்கு சொந்தமான 70 அடி ஆழமுள்ள தண்ணீர் இல்லாத கிணறு ஒன்று அப்பகுதியில் உள்ளது. இந்நிலையில் தேசிய பறவையான மயில் ஒன்று கிணற்றில் தவறி விழுந்து விட்டது.

    இது குறித்து சென்னை தீ தடுப்பு கட்டுப்பாட்டு அறைக்கு சுப்பிரமணியன் தகவல் கொடுத்தார். உயர் அதிகாரிகளின் உத்தரவின் பெயரில் கந்தர்வகோட்டை தீயணைப்பு போலீசார் விரைந்து சென்று கிணற்றில் உயிருக்கு போராடிய மயிலை உயிருடன் மீட்டு வனத்தில் விட்டனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பாரம்பரிய மயில் கறி என்ற பெயரில் தேசியப் பறவையான மயிலை சமைத்து வீடியோ பதிவிட்டுள்ளார்.
    • காட்டுப் பன்றிக் கறி சமையல் வீடியோவையும் பிரணாய் பதிவிட்டிருந்தார்.

    தெலங்கானாவில் யூடியூபர் ஒருவர் மயில் கறி சமைத்து வம்படியாக வந்து சிக்கலில் மாட்டியுள்ளார். தெலங்கானா மாநிலம் சிர்சில்லா [Siricilla ] மாவட்டத்தில் உள்ள தங்களப்பள்ளியை சேர்ந்தவர் பிரணாய் குமார்.

    பாராம்பரிய உணவு வகைகளைச் சமைத்து அந்த வீடியோக்களை தனது யூடியூப் சேனலில் பதிவிட்டு வரும் பிரணாய் பாரம்பரிய மயில் கறி என்ற பெயரில் தேசியப் பறவையான மயிலை சமைத்து அந்த வீடியோவை பதிவிட்டுள்ளார்.

     

    ஆனால் மயிலை கொல்வது சட்டவிரோதம் என்பதால் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பிரணாய் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், குற்றத்தை உறுதி செய்த பின் அவரை கைது செய்து விரைவில் சிறையில் அடிப்போம் எனவும் சிர்சில்லா மாவட்ட எஸ்.பி ராஜண்ணா உறுதியளித்துள்ளார்.

    சர்ச்சைக்குப்பிறகு பிரணாய், மயில் கறி வீடியோவை தனது யூடியூப் சேனலில் இருந்து நீக்கியுள்ளார். எனினும் அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விலங்குகள் நல ஆர்வலர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். இதற்கு முன்னதாக காட்டுப் பன்றிக் கறி சமையல் வீடியோவையும் பிரணாய் பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

    கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள மரண பாறையில் 3 நாள் சிக்கித் தவித்த மயிலை வனத்துறையினர் பாதுகாப்பாக மீட்டனர்.
    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலி துறை கடற்கரை பகுதியில் கடலுக்குள் மரண பாறை ஒன்று உள்ளது. பல உயிர்களை பலி வாங்கிய ஆபத்தான இந்த மரண பாறையில் கடந்த 3 நாட்களாக ஆண் மயில் ஒன்று காலில் அடிபட்டு பறக்க முடியாமல் தவித்துக் கொண்டிருந்தது.

    இதனைப் பார்த்த சுற்றுலாப்பயணிகள் மற்றும் பொதுமக்கள் தங்கள் செல்போனில் அந்த மயிலை படம் பிடித்ததோடு மட்டுமின்றி வனத்துறையினருக்கும் தகவல் கொடுத்தனர்.

    அதன் பேரில் பூதப்பாண்டி வனச்சரக அலுவலர் திலிபன் தலைமையில் வனக்காப்பாளர்கள் அசோக், அர்ஜுனன், வனக்காவலர் ஜோயல் மற்றும் வேட்டை தடுப்பு காவலர் சிவகுமார் ஆகியோர் ஒரு குழுவாக அங்கு விரைந்து வந்தனர்.

    அவர்கள் இன்று அதிகாலை சுமார் 1 மணிக்கு கடலில் அமைந்து உள்ள மரணப்பாறையில் சிக்கிய அந்த மயிலை நீந்தி சென்று மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். பின்னர் அந்த மயிலுக்கு முதல் உதவி சிகிச்சை செய்தனர்.அதன்பின்னர் அந்த மயிலை பாதுகாப்பான வனப்பகுதியில் பத்திரமாக கொண்டு விட்டனர்.
    சாம்பவர்வடகரையில் கிணற்றில் விழுந்த மயில் மீட்கப்பட்டது.
    சாம்பவர்வடகரை:

    கடையநல்லூர் தாலுகா சாம்பவர்வடகரை பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் சாம்பவர்வடகரை துணை மின் நிலையம் கீழ்புறம் உள்ள விவசாயி கிருஷ்ணமூர்த்தி என்பவருக்கு சொந்தமான கிணற்றில் மயில் ஒன்று தவறி விழுந்து தத்தளித்தது.

    இதுகுறித்து சட்ட உரிமை நீதி பாதுகாப்பு இயக்கத்தின் மாவட்ட செயலாளர் முருகேசன் சுரண்டை தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தார்.

    அங்கு விரைந்து வந்த தீயணைப்பு நிலைய அலுவலர் முத்துச்செல்வம், நிலைய போக்குவரத்து அலுவலர் பாலச்சந்தர், சிறப்பு நிலை அலுவலர் ரவீந்திரன் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சாமி, நான்முக ராஜன், சமுத்திர பாண்டி ஆகியோர் கிணற்றில் தவறி விழுந்த மயிலை உயிருடன் மீட்டு அருகில் உள்ள காட்டில் விட்டனர்.
    பெண்களை வர்ணிக்கும்போது வண்ணமயிலோடு ஒப்பிட்டு புகழ்வர். பெண்களின் அழகிய வளைவு நெளிவுக்கு ஏற்ற அலங்கார நகைகள் விதவிதமான மயில்கள் வடிவமைக்கப்பட்டு விற்பனைக்கு வருகின்றன.
    பெண்களை வர்ணிக்கும்போது வண்ணமயிலோடு ஒப்பிட்டு புகழ்வர். அந்த கையில் அவர்களது ஆடைகள், நகைகள் பெரும்பாலும் பயன்படுத்தும் பல பொருட்கள் அனைத்திலும் மயில்கள் பிரதான வடிவமைப்பு பொருளாக அலங்கரிக்கின்றன. குறிப்பாக பெண்கள் அணியும் தங்க நகைகளில் மயில் டிசைன் நகைகள் என்றவாறு பிரத்யேக அணிவகுப்பு நகைகள் உள்ளன. இவை மயில்களின் அலங்கார அணிவகுப்பு, வண்ண தோகை அலங்காரம், அழகிய வளைவுகள் என்றவாறு கைநுணுக்க வேலைப்பாட்டுடன் உருவாக்கப்படுகின்றன.

    பெண்களின் அழகிய வளைவு நெளிவுக்கு ஏற்ற அலங்கார நகைகள் விதவிதமான மயில்கள் வடிவமைக்கப்பட்டு விற்பனைக்கு வருகின்றன. பழங்கால ஆண்டிக் நகைகள் முதல் நவீன கால் வடிவமைப்பு நகைகள் வரை அனைத்திலும் மயில்களின் தாக்கம் அதிகரித்தே காணப்படுகிறது.

    மயில்கள் அணிவகுக்கும் ஆன்டிக் ஆரம் :

    ஆன்டிக் நகைகள் பெரிய பிரம்மாண்ட தோற்றத்துடன் காணப்படும் நகை. அதன் வடிவங்கள் சிற்ப வேலைப்பாடு பழமையின் பிரதான சின்னங்களுடன் கூடுதல் உழைப்புடன் காணப்படுபவை. ஆன்டிக் நகைகள், பாதுகாக்கப்பட வேண்டிய அரிய பொக்கிஷ நகையாக உள்ளன. மயில்கள் இருபுறமும் வரிசை கிரமமாய் தோகை விரித்தப்படி அணிவகுக்க அதன் இரு பெரிய மயில்கள் தொங்குவது போன்ற பதக்க அமைப்பு, பதக்க ஓரப்பகுதியில் இலை மோடிப் கொண்டவாறும், கீழ் மணி உருளைகள் தொங்குகின்றன. பதக்கத்தின் நடுப்பகுதியில் கற்கள் பதித்த மயில் வண்ணமாய் நடனமிடுகிறது. ஆன்டிக் மயில் ஆரத்தில் எட்டு தங்க மயில் வடிவங்களும், ஒன்பதாவதாக கல் மயில் உருவமும் செதுக்கப்பட்டுள்ளன. மயில்களின் கூடாரமாய் திகழும் இந்த ஆரம் பெண்களின் கழுத்திற்கு மயில் தோரணமாய் அலங்கரிக்கின்றன.



    வண்ணமயமான நாக்ஷி- போல்கி மயில் ஆரங்கள் :

    தங்கத்தில் அழகிய தோகையுடன் கூடிய மயில் உருவத்தின் ஓரப்பகுதி, தலை பகுதி, தோகைப்பகுதியில் அன்-கட் டைமண்ட் மற்றும் வண்ணக் கற்கள் மணிகள் பதித்து மயிலை அழகுற வடிவமைத்து உள்ளன. இந்த மயில்கள் இருபுறமும் வண்ணமா ஜொலிக்க நடுவே பெரிய இருமயில்கள் வளைந்தவாறு தொங்கும் அமைப்பில் கற்கள், மணிகள் தொங்க விடப்பட்டபடி உள்ளன. பெரிய வெள்ளைக்கற்கள் மற்றும் மோல்கி வடிவமைப்பில் பெரிய அகலமான ஆரங்கள் கைநேர்த்தியுடன் உருவாக்கப்பட்டுள்ளன. இருமயில் தோகைகளுடன் இணைந்த ஆரமும் அற்புதம்.

    பச்சை வண்ண மயில் காதணிகள் :

    மயில்கள் வெள்ளை மற்றும் பச்சை கற்கள் பதித்தவாறு வளைந்தவாறும் தொங்கும் அமைப்பிலும் உள்ள காதணிகள் அழகோ அழகு. இதில் தோகை பகுதியில் பச்சை நிற கற்கள் பதித்தவாறு கீழ் பகுதியும், கொண்டை மற்றும் முகப்பகுதியில் வேறு வண்ண கற்கள் காதுடன் பொருந்தும் பகுதியாகவும், உடல் பகுதியில் வெள்ளை கற்கள் பதிய விடப்பட்டுள்ளன. தோகைகள் சுருள் அமைப்பு, நீள் அமைப்பு, வளைந்த அமைப்பு பல வகை வடிவத்துடன் மயில்கள் மாறுபட்டவாறு டிசைன் செய்யப்பட்டுள்ளன.



    இரட்டை மயில்கள் நடனமாடும் வளையல்கள் :

    முழுக்க முழுக்க தங்கத்தில் சிற்ப வேலைப்பாடு கொண்ட ஆன்டிக் வளையல்கள் அகலமாய், இடையில் கொடிகள் ஓடுவது போன்று டிசைன் செய்யப்பட்டு உள்ளன. அதுபோல் கம்பி வளையல் அமைப்பின் நடுப்பகுதியில் மட்டும் கல் பதித்த மயில்கள் நடனமாடுவதுபோன்றும், தோகையுடன் ஜொலிப்பது போன்றும் வடிவமைக்கப்பட்டுள்ளன. இவை அனைத்திற்கும் முத்தாய்ப்ாய் தங்க உடல் பகுதியில் கொண்டை, கண், தோகை அனைத்தும் மாறுபட்ட வண்ணத்தில் எனாமல் பூசப்பட்ட மயில் வளையல்கள் வர்ணஜாலம் நிகழ்த்துகின்றன. அதுபோக 'பென்டன்ட் எனும் பதக்க அமைப்புகள் தனிப்பட்ட டாலர் அமைப்பாய் மயில் உருவத்துடன் கிடைக்கின்றன.
    ×