என் மலர்
நீங்கள் தேடியது "Movement"
- சென்னை, மதுரை,கோவை,திருச்சி, போன்ற பெருநகரங்களில் இருந்து இந்த பேருந்துகள் மாநிலத்தின் முக்கிய ஊர்களுக்கு இயக்கப்படும்.
- அசோகன்(மேற்கு), ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் லோகுபிரசாத் உள்பட பலர் உடனிருந்தனர்.
பல்லடம்:
பல்லடம் அருகே உள்ள அலகுமலையில் தனியார் பள்ளி விழாவில் கலந்துகொண்ட போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 16 ஆயிரத்து200 பேருந்துகள் வருகிற 15,16,17 ஆகிய 3 நாட்கள் இயக்கப்படும். சென்னை, மதுரை,கோவை,திருச்சி, போன்ற பெருநகரங்களில் இருந்து இந்த பேருந்துகள் மாநிலத்தின் முக்கிய ஊர்களுக்கு இயக்கப்படும். தீபாவளி பண்டிகையின் போது எவ்வாறு அரசு போக்குவரத்து கழகங்கள் மூலம் பொதுமக்களுக்கு குறை இல்லா பேருந்து வசதி செய்து தரப்பட்டதோ அதே போல் பொங்கல் பண்டிகைக்கு பேருந்து வசதி செய்து தர வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
அதன்படி போக்குவரத்து கழக அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.தீபாவளி பண்டிகையின் போது சில ஆம்னி பேருந்துகள் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக எழுந்த புகாரின் பேரில் அதிக கட்டணம் வசூலித்த 4 தனியார் ஆம்னி பேருந்து நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. தற்போதும் அதிக கட்டணம் வசூலிக்க கூடாது என்று தனியார் ஆம்னி பேருந்து நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பேட்டியின் போது உடன் திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் க,செல்வராஜ், பொங்கலூர் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் வக்கீல் எஸ்.குமார்,திருப்பூர் மாநகர தி.மு.க. தெற்கு செயலாளர் டி.கே.டி.நாகராஜ், ஒன்றிய தி.மு.க. செயலாளர்கள் பாலுசாமி(கிழக்கு), அசோகன்(மேற்கு), ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் லோகுபிரசாத் உள்பட பலர் உடனிருந்தனர்.
- தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக சேலம் கோட்டம் மூலம் நேற்று முதல் 14-ந் தேதி வரை சிறப்பு பேருந்து இயக்கப்பட்டு வருகிறது.
- சேலம் மற்றும் திருவண்ணாமலைக்கும் என 400 சிறப்பு பேருந்து இயக்கப்பட்டு வருகிறது.
சேலம்:
தமிழகம் முழுவதும் வருகிற 15-ந் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக சேலம் கோட்டம் மூலம் சேலம், நாமக்கல், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் இருந்து பல்வேறு வழித்தடங்களில் பயணிகள் பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு ஏதுவாக நேற்று முதல் 14-ந் தேதி வரை சிறப்பு பேருந்து இயக்கப்பட்டு வருகிறது.
சென்னையிலிருந்து சேலம், நாமக்கல், தர்மபுரி,
கிருஷ்ணகிரி, ஓசூருக்கு சிறப்பு பேருந்து இயக்கப்படு கிறது. பெங்களூருவில் இருந்து சேலம், ஈரோடு, தர்மபுரி, திருவண்ணா மலை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரிக்கும், ஓசூரிலிருந்து சேலம், திருச்சி, மதுரை, திருவண்ணா மலை, தர்மபுரி, கிருஷ்ணகிரிக்கும், சேலத்திலிருந்து மதுரை, திருச்சி, சிதம்பரம், கடலூர், திருவண்ணாமலை, வேலூர், கள்ளக்குறிச்சி, விருத்தாசலம் மற்றும் விழுப்புரத்திற்கும், கோவை, திருப்பூரிலிருந்து சேலம் மற்றும் திருவண்ணாமலைக்கும் என 400 சிறப்பு பேருந்து இயக்கப்பட்டு வருகிறது.
மேலும், பண்டிகையை கொண்டாடி விட்டு திரும்ப ஏதுவாக, 16-ந் தேதி முதல் 18-ந் தேதி வரை சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஓசூர் ஆகிய ஊர்களிலிருந்து சென்னைக்கும், சேலம், ஈரோடு, தர்மபுரி, திருவண்ணா மலை, வேலூர், திருப்பத்தூர் கிருஷ்ணகிரி ஆகிய ஊர்களிலிருந்து பெங்களூருக்கும், சேலம், திருச்சி, மதுரை, திருவண்ணாமலை, தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய ஊர்களிலிருந்து ஓசூருக்கும், மதுரை, கோவை, திருச்சி, சிதம்பரம், திருப்பூர், கடலூர், திருவண்ணாமலை, வேலூர், கள்ளக்குறிச்சி, விருத்தாசலம், விழுப்புரம் ஆகிய ஊர்களிலிருந்து சேலத்திற்கும், சேலத்திலிருந்து கோவை மற்றும் திருப்பூருக்கும் 400 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது.
சேலம், நாமக்கல், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் இருந்து அனைத்து முக்கிய நகரங்களுக்கும் சிறப்பு பேருந்துகள் கூடுதலாகவும் மற்றும் புறநகர் வழித்தட பேருந்துகள் மூலம் கூடுதல் நடைகளும் இயக்கப்படவுள்ளது. அனைத்து நேரங்களிலும் பயணிகள் தேவைக்கேற்ப கூடுதல் நகரப்பேருந்து வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நேற்று (12-ந் தேதி) முதல் 18-ந் தேதி வரை பயணிகள் கூட்டத்திற்கு ஏற்ப இரவு முழுவதும் டவுன் பஸ்கள் இயக்கப்படுகிறது.
- பவுர்ணமி மற்றும் தைப்பூசத்திருவிழாவை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சிறப்பு பேருந்துகள் தொடக்கப்பட்டுள்ளது.
- சேலத்தி லிருந்து திருவண்ணாமலைக்கும் ஆகிய இடங்களில் நாளை முதல் வருகிற 6-ந்தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கம் செய்யப்படவுள்ளது.
சேலம்:
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் சேலம் நிர்வாக இயக்குனர் பொன்முடி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது:-
பவுர்ணமி மற்றும் தைப்பூசத்திருவிழாவை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சேலம் மூலமாக சேலத்திலிருந்து ஈரோடு, காங்கேயம் வழியாக பழனிக்கும், நாமக்கல்லில் இருந்து கரூர் வழியாக பழனிக்கும், சேலத்திலிருந்து காளிப்பட்டிக்கும், ராசிபுரத்தி லிருந்து காளிப்பட்டிக்கும், திருச்செங்கோட்டி லிருந்து காளிப்பட்டிக்கும், சங்ககிரியிலிருந்து காளிப்பட்டிக்கும், எடப்பாடி யிலிருந்து காளிப்பட்டிக்கும், எடப்பாடி யிலிருந்து பழனிக்கும், நாமக்கல்லில் இருந்து கபிலர்மலைக்கும், திருச்செங்கோட்டிலிருந்து கபிலர்மலைக்கும், வேலூரிலிருந்து கபிலர்மலைக்கும், சேலத்திலிருந்து வடலூ ருக்கும், சேலத்தி லிருந்து திருவண்ணாமலைக்கும் ஆகிய இடங்களில் நாளை முதல் வருகிற 6-ந்தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கம் செய்யப்படவுள்ளது. ஆகவே பயணிகள் அனைவரும் பயண நெரிசலை தவிர்த்து பயணம் செய்திடும்படி கேட்டுக்கொள் ளப்படுகிறது. இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.
- மானாமதுரை வழியாக மதுரை-ராமேசுவரத்துக்கு கூடுதலாக பஸ்கள் இயக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- இதனால் ஏராளமான பயணிகள் குழந்தைகளுடன் பஸ்நிலை யத்தில் காத்திருக்கும் நிலை உள்ளது.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வளர்ந்து வரும் பெரியநகராட்சி ஆகும். மாவட்டத்திலேயே மானாமதுரையில் இரவு பகலாக பஸ் வசதி உள்ளது. அதிகாலை முதல் இரவு வரை நகர பஸ்கள் வசதிகள் உள்ளது.
தற்போது ராமேசுவரம் வரை ரெயில்கள் செல்லாத தால் மதுரையில் இருந்து வெளிமாநில பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் பஸ்சில் செல்கின்ற னர். இதனால் மதுரை-ராமேசுவரம் இடையே உள்ள திருப்புவனம், மானாமதுரை, பரமக்குடி பகுதி பயணிகளுக்கு போதுமான பஸ்கள் இல்லாமல் அவதிப்பட்டு நீண்ட நேரம் காத்திருந்து நின்று கொண்டே பயணம் செய்யும் நிலையில் உள்ளது.
இதில் குறிப்பாக மதுரை எம்.ஜி.ஆர். பஸ் நிலையத்தில் வரும் பஸ்கள் திருப்புவனம், மானாமதுரை பயணிகளை ஏற்ற மறுக்கின்றனர். இதனால் ஏராளமான பயணிகள் குழந்தைகளுடன் பஸ்நிலை யத்தில் காத்திருக்கும் நிலை உள்ளது. மிகபெரிய பஸ்நிலையமாக உள்ள மானாமதுரையில் இருந்து மதுரை வரை நேரடியாக பஸ் வசதி பலவருடமாக கிடையாது.
தற்போது ராமேசு வரத்தில் இருந்து வரும் பஸ்களும் அதிக அளவில் பயணிகளுடன் வருவதால் மானாமதுரை பயணிகள் மற்றும் கல்லூரிக்கு செல்லும் மாணவ-மாணவிகள், பணியாளர்கள் காத்திருந்து மதுரை செல்லும் நிலை உள்ளது.
இதேபோல் காலை 10 மணி வரை மானாமதுரை யில் இருந்து சிவகங்கை செல்லும் பஸ்களிலும் பயணிகள் படிக்கட்டில் தொங்கிக் கொண்டு செல்லும் நிலை உள்ளது.
கூட்டநெரிசலை தடுக்கும் வகையில் மதுரையில் இருந்து மானாமதுரை வழியாக ராமேசுவரம் வரை கூடுதல் பஸ்களையும், மானாமதுரை பயணிகளின் நீண்டகால கோரிக்கையான மானாமதுரை-மதுரை இடையே இரவு பகலாக 4 வேளைகளில் நேரடியாக பஸ்வசதியும், இங்கிருந்து தென் மாவட்டங்களுக்கு நேரடியாக பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மானா மதுரை பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பெரம்பலூர்:
போதையற்ற தமிழ்நாட்டை உருவாக்கக்கோரி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் பெரம்பலூரில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில், மாவட்ட தலைவர் சரவணன் தலைமையில் நடைபெற்ற கையெழுத்து இயக்கத்தினை, மாநில செயலாளர் கருணாகரன் கையெழுத்துயிட்டு துவக்கி வைத்தார். இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் சக்திவேல், மாவட்ட பொருளாளர் அறிவழகன், மாவட்ட துணைச் செயலாளர் வேல்முருகன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் பிரியா, மாவட்ட துணைத் தலைவர் ராமு, மாவட்ட செயற்குழு துரை, மாவட்ட குழு உறுப்பினர்கள் சடையப்பன், அருண், ஒன்றிய குழு உறுப்பினர்கள் மணிகண்டன், காசிராஜன், ரவிச்சந்திரன், கார்த்திக் ராஜா, சிஐடியூமாவட்ட செயலாளர்அகஸ்டின் உள்ளிட்ட ஏராளமானவர்கள்கலந்து கொண்டு கையெழுத்திட்டனர். தமிழக அரசின் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களை புதுக்கோட்டை, பெரம்ப லூர் மாவட்டத்தில் காவல்து றையினர் முழு வீச்சில் கட்டுப்படுத்திட வலியுறுத்தியும், போதைக்கு எதிராக பொதுமக்களிடம் பெறப்படும் கையெழுத்துக்களை மாவட்ட கலெக்டரிடம் கொடுத்து, முதல்வருக்கு அனுப்ப உள்ளதாக அவர்கள் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் தெரிவித்தனர்.
- கடந்த 10 நாட்களாக சிறுத்தை புலி எந்த கால்நடையையும் வேட்டையாடவில்லை. மேலும் இப்பகுதியில் சிறுத்தை புலி நடமாட்டம் இருப்பதற்கான அறிகுறியும் தெரியவில்லை.
- கரூர் மாவட்டத்தில் முகாமிட்டு சிறுத்தை புலி பிடிக்க கூண்டு வைத்துள்ளனர். தற்போது அந்த பகுதியிலும் கடந்த ஒரு வாரமாக சிறுத்தை புலி நடமாட்டம் தென்படவில்லை. இதனால் பரமத்திவேலூர், கரூர் பகுதி பொதுமக்கள் நிம்மதி அடைந்து இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி உள்ளனர்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே இருக்கூர் ஊராட்சி செஞ்சுடையாம்பாளையம், வெள்ளாளபாளையம், புளியம்பட்டி மற்றும் சுண்டப்பனை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆடு, கன்று குட்டி, கோழிகள், மயில்கள், நாய் உள்ளிட்டவைகளை வேட்டையாடி வந்த சிறுத்தை புலி பொதுமக்க ளுக்கு அச்சுறுத்தலாக இருந்தது.
இந்த சிறுத்தை புலியை பிடிக்க வனச்சரக அலுவலர் பெருமாள் தலைமையில் வனத்துறை யினர் ட்ரோன், கண்காணிப்பு காமிரா மற்றும் கூண்டு அமைத்து அதன் நடமாட்டத்தை கண்காணித்து வந்தனர். இந்நிலையில் கடந்த 10 நாட்களாக சிறுத்தை புலி எந்த கால்நடையையும் வேட்டையாடவில்லை. மேலும் இப்பகுதியில் சிறுத்தை புலி நடமாட்டம் இருப்பதற்கான அறிகுறியும் தெரியவில்லை.
அதை உறுதி செய்யும் வகையில், கரூர் மாவட்டம் நொய்யல் அருகே அத்திப்பாளையம்புதூரில் கடந்த 16-ந் தேதி சிறுத்தை புலி 5 ஆடுகளை கடித்து கொன்றது. தகவல் அறிந்த இருக்கூர் சமுதாய கூடத்தில் முகாமில் இருந்த சேலம், நாமக்கல், ஈரோடு, சத்தியமங்கலம், முதுமலை பகுதிகளை சேர்ந்த வனத்துறையினர், கரூர் மாவட்டத்தில் முகாமிட்டு சிறுத்தை புலி பிடிக்க கூண்டு வைத்துள்ளனர். தற்போது அந்த பகுதியிலும் கடந்த ஒரு வாரமாக சிறுத்தை புலி நடமாட்டம் தென்படவில்லை. இதனால் பரமத்திவேலூர், கரூர் பகுதி பொதுமக்கள் நிம்மதி அடைந்து இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி உள்ளனர்.
மேலும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த 40க்கும் மேற்பட்ட வனத்துறையினர், தங்களது கூடாரங்களை காலி செய்து வருகின்றனர். தற்போது 4 பேர் மட்டுமே பணியில் உள்ளனர்.
இதுகுறித்து வனத்துறையினர் கூறியதாவது:-
பரமத்திவேலூர், கரூர் பகுதிகளில் சிறுத்தை புலியின் நடமாட்டம் தென்படவில்லை. சிறுத்தை புலி ஒரே இரவில் 50 கிலோமீட்டர் வரை கடந்து செல்லும் திறன் உடையது. மேலும் கரூர் மாவட்ட எல்லைப் பகுதியில் இருந்து கொடைக்கானல் மலை, 100 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இதனால் சிறுத்தை புலி கொடைக்கானல் பகுதிக்கு சென்றிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. இவ்வாறு தெரிவித்தனர்.
- போதைக்கு எதிராக பொதுமக்களிடம் நடத்தப்பட்டது
- நான்கு இடங்களில் நடைபெற்றது
ஆலங்குடி,
புதுக்கோட்டை மாவட்டத்தில் இந்திய ஜன நாயக வாலிபர் சங்கம் சார்பில் ஒவ்வொரு தாலுகாவாக போதைக்கு எதிராக போதை கலாச்சாரத்தால் சீரழியும் சமூகத்தை மீட்டெடுக்க ஒரு கோடி கையெழுத்து இயக்கம் தொடங்கி நடத்தி வந்தனர். இந்நிலையில் ஆலங்குடி பகுதியில் வல்லத்திராரக்கோட்டையில் தொழிலதிபர் ராமச்சந்திரன், ராஜஜெயரஞ்சன், திருவரங்குளம் தெற்கு ஒன்றிய செயலாளர் வடிவேல், வேங்கிடகுளம் மற்றும் திருவரங்குளம் ஒன்றிய குழு தலைவர் வள்ளியம்ம, மேற்கு ஒன்றிய செயலாளர் தங்கமணி, வட்டார வளர்ச்சி அலுவலர் கோகுலகிருஷ்ணன், ஆலங்குடி மருத்துவர் பெரியசாமி ஆகியோர் தலைமையில் நான்கு இடத்தில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. அனைத்து இடங்களிலும் அரசு அதிகாரிகள் மற்றும் முக்கியஸ்தர்கள், பொதுமக்கள் அனைவரிடமும் மேல தாளங்கள் முழங்க நடன இயக்கத்துடன் அந்தந்த பகுதிகளில் சுமார் 2 மணி நேரம் ஒலி பெருக்கி வாகனத்தில் வந்த இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் பொதுமக்களிடம் கையெழுத்துக்களை பெற்றனர்.
- தஞ்சாவூரிலிருந்து இரவு 7. 40 மணிக்கு புறப்பட்டு ஹூப்ளிக்கு மறுநாள் காலை 12:30 மணிக்கு சென்றடையும்.
- ஏப்ரல் 25-ம் தேதி வரை முதல் கட்டமாக இயக்கப்பட இருக்கிறது.
தஞ்சாவூர்:
கர்நாடக மாநிலத்தின் வடக்கு பகுதிகளான ஹுப்ளி பெல்காம் உள்ளிட்ட இடங்களில் இருந்து தஞ்சை மாவட்டம் கும்பகோணம் பகுதியில் உள்ள கோவில்களுக்கு பெருவாரியானயாத்திரிகர்கள் தினந்தோறும் வந்து தரிசித்து செல்கிறார்கள்.
அதேபோல் டெல்டா மாவட்டத்திலிருந்து கர்நாடகப் பகுதிகளில் வர்த்தகத் தொடர்பு இருந்து வருகிறது.
இதையடுத்து தஞ்சாவூர்- கும்பகோணம் ரெயில் பாதை அகல பாதையாக மாற்றப்பட்ட 2004-ம் ஆண்டு முதல் கும்பகோணத்தில் இருந்து பெல்காம் வரை நேரடி ரெயில் இயக்க வேண்டும் என தஞ்சாவூர் மாவட்ட ரெயில்வே உபயோகிப்பாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்து வந்தது.
இதேப்போல் பலரும் கோரிக்கை விடுத்தனர்.
இதனை ஏற்று கர்நாடக மாநிலம் ஹூப்ளியில் இருந்து திருச்சி வழியாக தஞ்சாவூர் வரை சிறப்பு ரெயில் ஒன்றினை தென் மத்திய ரெயில்வே இயக்க அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இந்த ரெயில் வாரந்தோறும் திங்கட்கிழமைகளில் இரவு 8:25 மணிக்கு ஹூப்ளியில் புறப்பட்டு தாவனகரே, தும்கூர் ,கிருஷ்ணராஜபுரம், பைப்பனஹள்ளி (பெங்களூரு), சேலம், கரூர், திருச்சி, பூதலூர் வழியாக தஞ்சாவூருக்கு மறுநாள் செவ்வாய்க்கிழமை மதியம் 2.15 மணிக்கு வந்தடையும்.
மறு மார்க்கத்தில் இந்த ரெயில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமைகளில் தஞ்சாவூரிலிருந்து இரவு 7. 40 மணிக்கு புறப்பட்டு அதே வழியாக ஹூப்ளிக்கு மறுநாள் காலை 12:30 மணிக்கு சென்றடையும். இந்த சிறப்பு ரயில் மார்ச் 20 ஆம் தேதி முதல் ஏப்ரல் 25ஆம் தேதி வரை முதல் கட்டமாக இயக்கப்பட இருக்கிறது.
மேற்கண்ட தகவலை தஞ்சாவூர் மாவட்ட ரெயில்வே உபயோகிப்பாளர்கள் சங்க செயலாளர் கிரி தெரிவித்துள்ளார்.
- வருகிற 21-ந்தேதி அமாவாசை , 22-ந்தேதி யுகாதி பண்டிகை கொண்டாடப்படுகிறது.
- இதையடுத்து அமாவாசை, யுகாதி பண்டிகையை முன்னிட்டு சேலம் கோட்ட போக்குவரத்து கழகம் சார்பில் சேலம், தருமபுரியில் இருந்து மாதேஸ்வரன்ம லைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது.
சேலம்:
பண்டிகை நாட்கள் மற்றும் தொடர் விடுமுறை நாட்களில் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுவது வழக்கம். அதன்படி வருகிற 21-ந்தேதி அமாவாசை , 22-ந்தேதி யுகாதி பண்டிகை கொண்டாடப்படுகிறது.
இதையடுத்து அமா வாசை, யுகாதி பண்டிகையை முன்னிட்டு சேலம் கோட்ட போக்குவரத்து கழகம் சார்பில் சேலம், தருமபுரியில் இருந்து மாதேஸ்வரன்ம லைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது.
இந்த சிறப்பு பஸ்கள் வருகிற 20-ந்தேதி முதல் 23-ம் தேதி வரை இயக்கப்ப டுகிறது.
இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், அமாவாசை, யுகாதி தினத்தில் பக்தர்கள் அதிக எண்ணிக்கையில் மாதேஸ்வரன் மலைக்கு செல்வார்கள்.
இதனால் பக்தர்களின் வசதிக்காக வருகிற 20-ந்தேதி முதல் 23-ம் தேதி வரை கிருஷ்ணகிரியில் இருந்து தருமபுரி, மேச்சேரி, மேட்டூர் வழியாகவும், தருமபுரியில் இருந்து மேச்சேரி மேட்டூர் வழியாகவும், சேலத்தில் இருந்து மேச்சேரி, மேட்டூர் வழியாகவும் மாதேஸ்வரன் மலைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது, என்றார்.
- திருச்சியிலிருந்து காலை 9.20 மணிக்கு புறப்பட்டு திருவாரூக்கு முற்பகல் 11.40 மணிக்கு சென்றடையும்.
- திருவாரூரில் இருந்து பிற்பகல் 3.40 மணிக்கு புறப்பட்டு திருச்சியை மாலை 6.05 மணிக்கு வந்தடையும்.
தஞ்சாவூர்:
திருச்சி கோட்ட ரெயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருவாரூரில் நாளை (சனிக்கிழமை) உலக புகழ் பெற்ற ஆழித்தேரோட்ட திருவிழா நடைபெறுகிறது.
இதனையொட்டி நாளை ஒரு நாள் மட்டும் திருச்சி-திருவாரூர் இடையே சிறப்பு ரெயில் (வண்டி எண்: 06131) இயக்கப்படுகிறது.
இந்த ரெயில் திருச்சியி லிருந்து காலை 9.20 மணிக்கு புறப்பட்டு பொன்மலை, மஞ்சத்திடல், திருவெறும்பூர், சோளகம்பட்டி, பூதலூர், ஆலங்குடி, தஞ்சாவூர், சாலியமங்கலம், நீடாமங்கலம், கொரடாச்சேரி, குளிக்கரை வழியாக திருவாரூக்கு முற்பகல்
11.40 மணிக்கு சென்றடையும்.
மறுமார்க்க மாக திருவாரூர்-திருச்சிக்கு சிறப்பு ரெயில் (வண்டி எண்: 06132) திருவாரூரில் இருந்து பிற்பகல் 3.40 மணிக்கு புறப்பட்டு திருச்சியை மாலை 6.05 மணிக்கு வந்தடையும்.
இதேபோல் இன்று (வெள்ளிக்கிழமை) ஒரு நாள் மட்டும் மயிலாடுதுறை-திருவாரூர் சிறப்பு ரெயிலானது (06133) மயிலாடுதுறையில் இருந்து இரவு 9.20 மணிக்கு புறப்பட்டு திருவாரூரை இரவு 10.20 மணிக்கு சென்றடையும்.
மறுமார்க்கமாக, நாளை ஒரு நாள் மட்டும் திருவாரூர்-மயிலாடுதுறை சிறப்பு ரெயில் (06134) திருவாரூரில் இருந்து காலை 5 மணிக்கு புறப்பட்டு மயிலாடுதுறைக்கு காலை 5.55 மணிக்கு வந்தடையும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- கர்நாடக மாநிலம் ஹூப்ளியில் இருந்து சேலம், கரூர், திருச்சி வழியாக தஞ்சாவூருக்கு சிறப்பு ெரயில் இயக்கப்படுகிறது.
- பெங்களூரு, கிருஷ்ணராஜபுரம், பங்காருபேட்டை வழியாக மறுநாள் காலை 9.25 மணிக்கு சேலம் வந்தடையும்.
சேலம்:
ெரயில்களில் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் ெரயில்வே நிர்வாகம் சிறப்பு ெரயில்களை இயக்கி வருகிறது. அந்த வகையில் கர்நாடக மாநிலம் ஹூப்ளியில் இருந்து சேலம், கரூர், திருச்சி வழியாக தஞ்சாவூருக்கு சிறப்பு ெரயில் இயக்கப்படுகிறது.
அதன்படி ஹூப்ளி- தஞ்சாவூர் சிறப்பு ெரயில் (வண்டி எண் 07325) வருகிற 3, 10, 17, 24 ஆகிய தேதிகளில் திங்கட்கிழமைதோறும் ஹூப்ளி ெரயில் நிலையத்தில் இருந்து இரவு 8.25 மணிக்கு புறப்பட்டு பெங்களூரு, கிருஷ்ணராஜபுரம், பங்காருபேட்டை வழியாக மறுநாள் காலை 9.25 மணிக்கு சேலம் வந்தடையும். இங்கிருந்து 9.30 மணிக்கு புறப்பட்டு கரூர், திருச்சி வழியாக மதியம் 2.15 மணிக்கு தஞ்சாவூர் சென்றடையும்.
இதேபோல் மறு மார்க்கத்தில் தஞ்சாவூர்- ஹூப்ளி சிறப்பு ெரயில் (வண்டி எண் 07326) வருகிற 4, 11, 18, 25 ஆகிய தேதிகளில் செவ்வாய்க்கிழமைதோறும் தஞ்சாவூரில் இருந்து இரவு 7.40 மணிக்கு புறப்பட்டு திருச்சி ஜங்ஷன், திருச்சி கோட்டை, கரூர் வழியாக இரவு 11.45 மணிக்கு சேலம் வந்தடையும். பின்னர் இங்கிருந்து 11.50 மணிக்கு புறப்பட்டு பங்காருபேட்டை, கிருஷ்ணராஜபுரம், பெங்களூர் வழியாக மறுநாள் மதியம் 12.30 மணிக்கு ஹூப்ளி சென்றடையும்.
இந்த தகவலை சேலம்
ரெயில்வே கோட்ட அலுவலகம் தெரிவித்துள்ளது.
- நடை பயண பிரசார இயக்கம் இந்திய கம்யூனிஸ்ட சார்பில் நடைபெற்றது.
- இந்த நடை பயணமானது பி.எஸ். ஆர். மணிமண்டபம் வரை நடைபெற்றது.
திருத்துறைப்பூண்டி:
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில், மத்திய பா.ஜ.க. ஆட்சியை அகற்றுவோம், நாட்டையும் மக்களையும் காப்போம் என்ற மாற்றத்தை நோக்கி நடை பயண பிரசார இயக்கம் இந்திய கம்யூனிஸ்ட சார்பில் நடைபெற்றது.
திருத்துறைப்பூண்டி வேதை சாலையில் உள்ள அம்பேத்கார் சிலையிலிருந்து தொடங்கிய நடை பயண இயக்கத்தில் முன்னால் எம்.எல்.ஏ. பழனிச்சாமி தலைமையில் மாரிமுத்து எம்.எல்.ஏ, முன்னாள் எம்.எல்.ஏ. உலகநாதன், ஒன்றிய தலைவர் பாஸ்கர், நகரச் செயலாளர் சுந்தர், நிர்வாகிகள் சாமிநாதன், கோபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்த நடை பயணமானது பி.எஸ். ஆர். மணிமண்டபம் வரை நடைபெற்றது.