என் மலர்
நீங்கள் தேடியது "முகூர்த்தக்கால்"
- முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி இன்று காலை நடந்தது.
- அம்மனுக்கு தினமும் சிறப்பு அபிசேகம், பூஜைகள் நடைபெற்றது.
ஈரோடு:
ஈரோடு நகரின் பிரசித்தி பெற்ற பெரிய மாரியம்மன் வகையறா திருக்கோவில்கள் பொங்கல் விழா ஆண்டுதோறும் மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெறுவது வழக்கம்.
அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா வரும் 21-ந் தேதி இரவு 9 மணிக்கு பூச்சாட்டுதலுடன் தொடங்குகிறது.
முன்னதாக முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி இன்று காலை 7 மணிக்கு நடந்தது. இதைத்தொடர்ந்து 25-ந் தேதி இரவு 8.30 மணிக்கு பட்டாளம்மன் அபிஷேகம், 10 மணிக்கு கம்பம் நடும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
தொடர்ந்து 29-ந் தேதி இரவு 7.30 மணிக்கு அன்ன வாகன ஊர்வலமும், இரவு 10.30 மணிக்கு கிராம சாந்தி நிகழ்ச்சியும் நடை பெறுகிறது. தொடர்ந்து பொதுமக்கள் தினமும் கம்பத்துக்கு புனித நீர் ஊற்றி வழிபடுவர்.
அம்மனுக்கு தினமும் சிறப்பு அபிசேகம், பூஜைகள் நடைபெறும்.
இதையடுத்து வருகின்ற ஏப்ரல் மாதம் 4-ந் தேதி அதிகாலை 5.30 மணிக்கு வாய்க்கால் மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
அன்றைய தினம் இரவு 8 மணிக்கு மாவிளக்கு, கரகம் எடுத்து வந்து பக்தர்கள் நேர்த்திக் கடன் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
தொடர்ந்து 5-ந் தேதி காலை 9.30 மணிக்கு திருவிழாவின் முக்கிய நிகழ்வான பொங்கல் வைக்கும் நிகழ்ச்சியும், சின்னமாரியம்மன் கோவிலில் தேரோட்டமும் நடைபெறுகிறது.
6-ந் தேதி இரவு 8 மணிக்கு பெரிய மாரியம்மன் திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகி றது. தொடர்ந்து 7-ந் தேதி மாலை 4 மணிக்கு தேர் நிலை சேரும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
மேலும் அன்றைய தினம் இரவு 8 மணிக்கு காரை வாய்க்கால் மாரியம்மன் திருவீதி உலா, 9.30 மணிக்கு சின்ன மாரியம்மன் திருவீதி உலா நடைபெறவுள்ளது.
இதையடுத்து 8-ந் தேதி மாலை 3 மணிக்கு கம்பம் பிடுங்கும் நிகழ்ச்சியும், மஞ்சள் நீராட்டு விழாவும் நடைபெறும்.
இதில் பெரிய மாரியம்மன் வகையறா திருக்கோவில்களை சேர்ந்த பெரிய மாரியம்மன், சின்ன மாரியம்மன், காரை வாய்க்கால் மாரியம்மன் கோவில்களின் கம்பங்கள் எடுத்து வரப்பட்டு நகரின் முக்கிய வீதிகள் எடுத்து செல்லப்பட்ட காவிரி ஆற்றில் விடப்படும்.
தொடர்ந்து இறுதி நிகழ்ச்சியாக 9-ந் தேதி காலை 10.30 மணிக்கு மறு பூஜையுடன் விழா நிறைவு பெறுகிறது.
- சென்னிமலை கைலாசநாதர் கோவிலில் முகூர்த்த கால் அமைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
- பின்னர் பங்குனி தேருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.
சென்னிமலை:
சென்னிமலை முருகன் கோவிலில் அடுத்த மாதம் 5-ந் தேதி பங்குனி உத்திர தேரோட்டம் நடைபெறுகிறது.
இதையொட்டி தேரோட்டத்தின் தொடக்க நிகழ்ச்சியாக நேற்று அதிகாலை 5 மணியளவில் சென்னிமலை கைலாசநாதர் கோவிலில் முகூர்த்த கால் அமைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
அப்போது கைலாசநாதர் கோவிலில் உள்ள மூலவர் மற்றும் உற்சவர் உள்பட அனைத்து சாமிகளுக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் பங்குனி தேருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.
அதைத்தொடர்ந்து அதிகாலை 5.30 மணியளவில் கோவிலின் தலைமை குருக்கள் ராமநாதசிவம் தலைமையில் கைலாசநாதர் கோவிலில் இருந்து சாமியின் வேலுடன் புறப்பட்டு 4 ராஜ வீதிகளில் வலம் வந்து பின்னர் மீண்டும் கைலாசநாதர் கோவிலை அடைந்தனர்.
- 3-ந்தேதி சித்திரை தேரோட்டத்தை முன்னிட்டு தேரடி கருப்பண்ணசாமி கோவிலில் முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நடந்தது.
- தேரோட்டத்திற்கான முன்னேற்பாடு பணிகள் தொடங்கின.
மதுரை
மதுரையில் பிரசித்தி பெற்ற மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா வருகிற 23-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழா நடக்கும் 10 நாட்கள் தினமும் காலை, மாலையில் மாசி வீதிகளில் சுவாமி-அம்பாள் வீதி உலா வருவார்கள். விழாவின் சிகர நிகழ்ச்சி யான திருக்கல்யாணம் மே 2-ந்தேதியும், தேரோட்டம் மே 3-ந்தேதியும் நடைபெறுகிறது. நான்கு மாசி வீதிகளில் நடக்கும் தேரோட்டத்தை காண மதுரை நகர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பல்லாயிரக்கணக்கானோர் குவிவார்கள்.
தேரோட்டம் சிறப்பாக நடைபெற வேண்டும் என கருதி சித்திரை திருவிழா கொடியேற்றத்துக்கு முன்பு தேரடி வீதியில் உள்ள கருப்பண்ணசாமி கோவிலில் முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெறும். அதன்படி இன்று முகூர்த்தக்கால் நடப்பட்டது. இதில் மீனாட்சியம்மன் கோவில் சிவாச்சாரியார்கள் கலந்து கொண்டு சிறப்பு பூஜை நடத்தினர்.
இந்த நிகழ்ச்சியில் கோவில் துணை ஆணையர் அருணாச்சலம் உள்பட பலர் கலந்துகொண்டனர். முகூர்த்தக்கால் நடப்பட்டதை தொடர்ந்து தேரோட்டத்திற்கான முன்னேற்பாடு பணிகள் தொடங்கின.
- சமத்துவ எருதுகட்டு விழாவுக்கு முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நடந்தது.
- ஏற்பாடுகளை விழா ஒருங் கிணைப்பாளர் ராஜேந்திரன் செய்து வருகிறார்.
கீழக்கரை
ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஒன்றியம் தாதனேந்தல் பஞ்சாயத்துக்குட்பட்ட பொக்கனாரேந்தல் கிராமத்தில் உள்ள மலை மேல் சாத்தார் உடையார் அய்யனார் கோவில் ஜல்லிக்கட்டு, எருது கட்டு, வடமாடு உரிமை யாளர்கள் நலச்சங்கம் சார்பில் 57-ம் ஆண்டு சமத்துவ எருதுகட்டு விழா நடைபெற உள்ளது. இதற்கு முகூர்த்தக்கால் நட்டு காப்பு கட்டும் வை பவம் இன்று நடைபெற்றது.
வருகிற 19-ந் தேதி காலையில் பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடு நடைபெற உள்ளது.இந்நிகழ்ச்சிக்கு திமுக ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ தலைமை வகிக்க உள்ளார்.பொக்கனாரேந்தல், பால் கரை , பள்ளபச்சேரி,முத்து வீரப்பன் வலசை, ராஜ சூரிய மடை கோவிந்த னேந்தல், அச்சடிபிரம்பு, அம்மன் கோவில், இந்தியா நகர ்(திருப்புல்லாணி), ஆணைகுடி வீரன்வலசை, தெற்குத்தரவை, கொடிக்குளம், வித்தானூர், எல். கருங்குளம், ஆர். காவனூர், இந்திராநகர் (ராம நாதபுரம்), சிவஞான புரம், அரியகுடி புத்தூர், குமுக்கோட்டை, திருவரங்கம் மற்றும் கைக் கோளர்மடம் பாத்தியப்பட்ட அனைத்து கிராம பொறுப் பாளர்கள் முன்னிலை வகிக்க உள்ளனர்.இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை விழா ஒருங் கிணைப்பாளர் ராஜேந்திரன் செய்து வருகிறார்.
- அண்ணாமலை நடைபயணத்துக்கு மதுரை பொதுக்கூட்டத்திற்கு முகூர்த்தக்கால் நடப்பட்டது.
- பார்வர்டு பிளாக் கட்சி தலைவர் திருமாறன்ஜி தலைமையில் வரவேற்பு அளிக்கப்படுகிறது
மதுரை
பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை மதுரையில் வருகிற 5-ந்தேதி தொடங்கி 4 நாட்கள் நடை பயணம் செல்கிறார். இதையொட்டி 7-ந்தேதி மாலை பழங்கா நத்தம் பகுதியில் பிரமாண்ட பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள் ளது. இதில் அண்ணாமலை கலந்து கொண்டு பேசுகி றார். மத்திய இணை மந்திரி மன்சூக் மாண்டவியா, அ.தி.மு.க. உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்று பேசுகின்றனர்.
இந்த பொதுக் கூட்டத்திற்கு முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி இன்று நடந்தது. மாவட்டத்தலைவர் மகா சுசீந்திரன் தலைமை தாங்கினார். பெருங்கோட்ட பொறுப்பாளர் கதலி நரசிங்கப் பெருமாள், மாவட்ட பொதுச் செயலாளர் ராஜ்குமார் மாவட்ட மேற்பார்வை யாளர்கள் கார்த்திக் பிரபு, ராஜரத்தினம், விருந் தோம்பல் பிரிவு மாவட்ட தலைவர் கிருஷ்ணன், சதீஷ்குமார் சகாதேவன் முருகேஷ் பாண்டியன் ஊடகப்பிரிவு மாவட்டத் தலைவர் ரவிச்சந்திர பாண்டியன் ராமச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து நிருபர்க ளிடம் மகா சுசீந்திரன் கூறுகையில், மதுரை வரும் அண்ணாமலைக்கு 5-ந்தேதி ஜான்சிராணி பூங்காவில் தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சி தலைவர் திருமாறன்ஜி தலைமையில் வரவேற்பு அளிக்கப்படுகிறது. 7-ந்தேதி பழங்காநத்தத்தில் நடைபெற உள்ள மாபெரும் பொதுக்கூட்டத்தில் 20 ஆயிரத்துக்கும் அதிகமா னோர் கலந்து கொள்வார் கள் என எதிர் பார்க்கிறோம் என்றார்.