என் மலர்
நீங்கள் தேடியது "Gold Chain"
- வீட்டை பூட்டிவிட்டு அண்ணன் வீட்டிற்கு சென்றுள்ளார்
- வீட்டின் பூட்டை உடைத்து தங்க சங்கிலியை திருடிய மர்ம ஆசாமியை போலீசார் தேடி வருகிறார்கள்.
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள மலையாளப்பட்டியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவரது மனைவி ஷீலாராணி (வயது 42). கிருஷ்ணமூர்த்தி வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார்.
ஷீலாராணி சம்பவத்தன்று தனது வீட்டை பூட்டிவிட்டு அருகே உள்ள அண்ணன் வீட்டிற்கு சென்றுள்ளார். நேற்று காலை வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த 2 பவுன் தங்க சங்கிலியை மர்ம ஆசாமி திருடி சென்றது தெரியவந்தது.
இந்த சம்பவம் குறித்து ஷீலாராணி அளித்த புகாரின் பேரில் அரும்பாவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்."
- கணவன் - மனைவி இருவரும் உறவினர் வீட்டு சுப நிகழ்ச்சிக்கு செல்வதற்காக மோட்டர் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.
- பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் மூதாட்டி அணிந்திருந்த தங்க சங்கிலியை பறித்து கொண்டு தப்பி சென்றனர்.
பல்லடம் :
பல்லடம் வடுகபாளையம் முனியப்பன் கோயில் வீதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி(வயது62). இவரது மனைவி ஜானகி(56) . கணவன் - மனைவி இருவரும் உறவினர் வீட்டு சுப நிகழ்ச்சிக்கு செல்வதற்காக நேற்று மாலை மோட்டர் சைக்கிளில் பல்லடம் அருகே உள்ள சாமி கவுண்டம்பாளையம் நோக்கி சென்று கொண்டிருந்தனர். கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், சாமி கவுண்டம்பாளையம் பிரிவு ரோட்டில் செல்லும் போது, இவர்களது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் திடீரென அருகில் வந்து மூதாட்டி அணிந்திருந்த 5 பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பி சென்று மறைந்தனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்து செய்வதறியாது திகைத்து நின்ற தம்பதியினர் பின்னர் இதுகுறித்து பல்லடம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். வழக்கு பதிவு செய்த போலீசார் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து அந்த வாலிபர்களை தேடி வருகின்றனர். கண்காணிப்பு கேமராவில் மோட்டார் சைக்கிளில் வந்து தங்கச் சங்கிலி பறித்து சென்ற வாலிபர்களின் உருவம் பதிவாகி உள்ளது. அதன் மூலம் அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
- தஞ்சை புதிய பஸ் நிலையத்திலிருந்து பஸ்ஸில் ஏறி பழைய பஸ் நிலையத்திற்கு சென்றார்.
- கழுத்தில் அணிந்து இருந்த 4 பவுன் தங்க சங்கிலியை காணாதது கண்டு அதிர்ச்சடைந்தார்.
தஞ்சாவூர்:
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள பாலையூர் கிராமத்தை சேர்ந்தவர் சாமி.
இவரது மனைவி வசந்தா (வயது 68) . இவர் பாலையூரில் இருந்து தஞ்சை புதிய பஸ் நிலையத்திற்கு வந்தார். பின்னர் அங்கிருந்து பஸ்ஸில் ஏறி பழைய பஸ் நிலையத்திற்கு சென்றார்.
அப்போது தான் கழுத்தில் அணிந்து இருந்த 4 பவுன் தங்க சங்கிலியை காணாதது கண்டு அதிர்ச்சடைந்தார். பலரிடம் கேட்டு பார்த்தும் பயனில்லை.
இது குறித்து அவர் தஞ்சை மேற்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் தஞ்சையில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- டால்மியா போர்டு நல்லி தோட்டம் பகுதியில் உள்ள மகா காளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா கடந்த 27-ந் தேதி நடைபெற்றது.
- கூட்ட நெரிசலை பயன்படுத்தி உமா நந்தினி கழுத்தில் இருந்த 3½ பவுன் தங்கச் செயினை மர்மநபர்கள் பறித்துக் கொண்டனர்.
சேலம்:
சேலம் கருப்பூர் அருகே உள்ள டால்மியா போர்டு நல்லி தோட்டம் பகுதியில் உள்ள மகா காளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா கடந்த 27-ந் தேதி நடைபெற்றது. இந்த கும்பாபிஷேக விழாவில் அதே பகுதியைச் சேர்ந்த விஜய் என்பவரின் மனைவி உமா நந்தினி(29) கலந்து கொண்டார். அப்போது கூட்ட நெரிசலை பயன்படுத்தி உமா நந்தினி கழுத்தில் இருந்த 3½ பவுன் தங்கச் செயினை மர்மநபர்கள் பறித்துக் கொண்டனர்.
இதேபோல் அயோத்தியாப்பட்டணம் ஏரிக்காடு பகுதி சேர்ந்த மாதேஸ்வரன் (57) என்பவர் கழுத்தில் இருந்த 4 பவுன் தங்க சங்கிலியையும் மர்ம நபர்கள் திருடி சென்றனர். இதுகுறித்து 2 பேரும் கொடுத்த புகாரின் பேரின் கருப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- இந்திராணி மற்றும் அவரது மகள்கள் திருடன்.. திருடன்... என கத்தி கூச்சலிட்டனர்.
- மொத்தம் 7 பவுன் தங்க செயினை பறித்து கொண்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் கீழவஸ்தா சாவடி நாகா நகரை சேர்ந்தவர் பன்னீர்செல்வம்.
இவரது மனைவி இந்திராணி (வயது 50).
நேற்று இரவு வீட்டில் இந்திராணி தனது மகள்கள் சுஷ்மிதா (27), ஸ்ருதி (25) ஆகியோருடன் தூங்கிக் கொண்டிருந்தார்.
அப்போது வீட்டின் பின்பக்கம் உள்ள கம்பி வேலியை பிரித்துக் கொண்டு மூன்று மர்ம நபர்கள் வீட்டுக்குள் புகுந்தனர். திடுக்கிட்டு எழுந்த இந்திராணி மற்றும் அவரது மகள்கள் திருடன்.. திருடன்... என கத்தி கூச்சலிட்டனர்.
இதையடுத்து அந்த மர்ம நபர்கள் கத்தி, கட்டையை காண்பித்து சத்தம் போட்டால் கொலை செய்து விடுவோம் எனக் கூறி மிரட்டல் விடுத்தனர்.
பின்னர் கத்தி முனையில் இந்திராணி, சுஷ்மிதா, ஸ்ருதி கழுத்தில் கிடந்த தங்க செயினை பறித்தனர்.
மொத்தம் 7 பவுன் தங்க செயினை பறித்து கொண்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
இது குறித்து இந்திராணி தஞ்சை தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- செம்பூரில் உள்ள நகைக்கடைஇன்ஸ்டாகிராமில் பகிர்ந்த வீடியோ தற்போது வைரலாகி உள்ளது.
- வீடியோவில், சல்தான்ஹா தனது நாய் டைகருக்கு சங்கிலியை தேர்ந்தெடுப்பதை காணலாம்.
மும்பையைச் சேர்ந்த சரிதா சல்தான்ஹா என்ற பெண், தனது நாய்க்கு ரூ.2.5 லட்சம் மதிப்புள்ள தங்க சங்கிலியை பரிசாக அளித்து சமூக வலைதளங்களில் கவனத்தை ஈர்த்துள்ளார். அந்த வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி உள்ளது.
மும்பையை சேர்ந்த சரிதா சல்தான்ஹா என்ற பெண், தனது வளர்ப்பு நாயான டைகரின் பிறந்தநாளைக் கொண்டாடுவதற்காக ஷாப்பிங் சென்றுள்ளார். அங்கு தனது நாய்க்கு நகையை தேர்ந்தெடுத்து அணிகிறார்.
செம்பூரில் உள்ள நகைக்கடை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த வீடியோ தற்போது வைரலாகி உள்ளது. வீடியோவில், சல்தான்ஹா தனது நாய் டைகருக்கு சங்கிலியை தேர்ந்தெடுப்பதை காணலாம்.
சரிதா சல்தான்ஹா தனது கழுத்தில் சங்கிலியை போடும்போது, உற்சாகமான மகிழ்ச்சியுடன் வாலை ஆட்டுவதுடன் வீடியோ முடிகிறது. இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி உள்ளது.
வள்ளியூர் அருகே உள்ள வடக்கு ஆச்சியூர் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் முப்புடாதி. இவரது மனைவி பிரேமா(வயது 35).
சம்பவத்தன்று ஆனைகுளத்தில் உள்ள முப்புடாதியின் உறவினர் வீட்டுக்கு கோவில் கொடைவிழாவில் பங்கேற்பதற்காக பிரேமா சென்றுள்ளார். அன்று இரவு கொடை விழா முடிந்து அனைவரும் தூங்க சென்றுள்ளனர்.
அப்போது காற்றுக்காக வீட்டின் கதவை திறந்து வைத்துவிட்டு பிரேமா தூங்கி கொண்டிருந்தார்.
நள்ளிரவில் அங்கு வந்த மர்மநபர், அயர்ந்து தூங்கி கொண்டிருந்த பிரேமாவின் கழுத்தில் கிடந்த 8 பவுன் தங்கநகையை பறிக்க முயன்றபோது விழித்துக்கொண்ட பிரேமா, நகையை பிடித்தார்.
ஆனால் அதில் சுமார் 6 கிராம் எடை கொண்ட செயின் துண்டு மட்டும் அவரது கையில் சிக்கியது. மற்றொரு பகுதி தங்க செயின் மர்ம நபரின் கையில் மாட்டிக்கொண்டது. பின்னர் கண்ணிமைக்கும் நேரத்தில் மர்ம நபர் அங்கிருந்து ஓடிவிட்டார்.
இதுதொடர்பாக வள்ளியூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகையை பறித்து சென்ற மர்மநபரை தேடி வருகின்றனர்.