என் மலர்
நீங்கள் தேடியது "மோதி"
- சேலம் கொண்டலாம் பட்டி, போஸ்ட் ஆபீஸ் தெரு பகுதியைச் சேர்ந்தவர் நேற்று இரவு அவர் உறவினரை பார்க்க, தனது ஸ்கூட்டரில் நெத்திமேடு பகுதிக்கு வந்து கொண்டிருந்தார்.
- எதிரே வந்த கண்டெய்னர் லாரியும், ஸ்கூட்டரும் எதிர்பாராத விதமாக மோதியதில் ரத்த வெள்ளத்தில் படுகாயமடைந்த மணிராஜ பெருமாள் சம்பவ இடத் திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
அன்னதானப்பட்டி:
சேலம் கொண்டலாம் பட்டி, போஸ்ட் ஆபீஸ் தெரு பகுதியைச் சேர்ந்தவர் மணிராஜ பெருமாள் ( வயது 32). ப்ளக்ஸ் டிசைனிங் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வந்தார். இந்த நிலையில் நேற்று இரவு அவர் உறவினரை பார்க்க, தனது ஸ்கூட்டரில் நெத்திமேடு பகுதிக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது கரிய பெருமாள் கரடு நுழைவு ரோடு அருகே, எதிரே வந்த கண்டெய்னர் லாரியும், ஸ்கூட்டரும் எதிர்பாராத விதமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில் ரத்த வெள்ளத்தில் படுகாயமடைந்த மணிராஜ பெருமாள் சம்பவ இடத் திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோத னைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சேலம் மாவட்டம் பூசாரிப்பட்டி பகுதியில் இன்று காலை ராமேஸ்வரம் பகுதியில் இருந்து லாரியில் வைக்கோல் கட்டுகளை ஏற்றிக்கொண்டு பூசாரிப்பட்டி பகுதியில் விற்பனைக்காக கொண்டு வந்தார்.
- அப்போது எதிர்பாராதவிதமாக மின் கம்பத்தில் லாரி மோதியது. இதில் பாதி மின்கம்பம் லாரியின் மீதுசாய்ந்தது. உடனே டிரான்ஸ்பார்மரில் இருந்து மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.
சேலம்:
சேலம் மாவட்டம் பூசாரிப்பட்டி பகுதியை சேர்ந்த செல்வராஜ் மகன் பிரதாப் (வயது23).
லாரி டிரைவர். இவர் இன்று காலை ராமேஸ்வரம் பகுதியில் இருந்து லாரியில் வைக்கோல் கட்டுகளை ஏற்றிக்கொண்டு பூசாரிப்பட்டி பகுதியில் விற்பனைக்காக கொண்டு வந்தார்.
பூசாரிபட்டி பழைய சினிமா கொட்டாய் பகுதி யில் ஒரு விவசாயிக்கு 5 கட்டுகளை இறக்கிவிட்டு லாரி புறப்பட்டது. அப்போது எதிர்பாராதவிதமாக மின் கம்பத்தில் லாரி மோதியது. இதில் பாதி மின்கம்பம் லாரியின் மீதுசாய்ந்தது. உடனே டிரான்ஸ்பார்மரில் இருந்து மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.
இதில் டிரைவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார் .இந்த விபத்தில் மின் இணைப்பு துணிக்கப்படாமல் இருந்தால் பெரும் சேதம் ஏற்பட்டிருக்கும்.
தகவல் அறிந்த போலீசார் மற்றும் மின் வாரிய அதிகாரிகல் சம்பவ இடத்துக்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதுபற்றி போலீசார் விசா ரணை நடத்தி வருகிறார்கள்.
- சேலம் அன்னதா னப்பட்டி அருகே மணியனூர் உத்தரப்பன் காடு அடுத்த அம்பேத்கர் நகரில் வசிப்பவர் லாரி மோதி தனியார் நிறுவன ஊழியர் பலியானார்.
- அருகில் இருந்தவர்கள் மீட்டு உடனடியாக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் ஏற்கனவே இறந்துவிட்ட தாக தெரிவித்தனர்.
சேலம்:
சேலம் அன்னதா னப்பட்டி அருகே மணியனூர் உத்தரப்பன் காடு அடுத்த அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்தவர் கணேசன். இவரது மகன் கிரேஸ்குமார் (வயது 37). இவர் நேற்று காலை பள்ளப்பட்டி, மையனூர் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது இவருக்கு பின்னால் வந்த லாரி, எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த கிரேஸ்குமாரை, அருகில் இருந்தவர்கள் மீட்டு உடனடியாக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு கிரேஸ் குமாரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்ட தாக தெரிவித்தனர்.
இதுகுறித்து பள்ளப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து, லாரியை ஓட்டி வந்த தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள பழையூர் தோப்பு பகுதியைச் சேர்ந்த ஈஸ்வரன் (42) என்பவரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- தொப்பூர் காமராஜர் நகர் அருகில் இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து வந்த மகேஸ்வரி தவறி கீழே விழுந்தார்.
- அப்பொழுது பின்னால் வந்த வாகனம் மகேஸ்வரி மீது ஏறியதில் சம்பவ இடத்தில் அவர் பலியானார்.
காடையாம்பட்டி:
தர்மபுரி மாவட்டம் கலெக்டர் அலுவலகம் அருகில் வசித்து வருபவர் முனுசாமி. இவரது மனைவி மகேஸ்வரி (வயது 42).இவர்கள் கொத்தனார் வேலை செய்து வருவதாக கூறப்படுகிறது. இன்று அதிகாலை மோட்டார் சைக்கிளில் தருமபுரியில் இருந்து சேலத்தை நோக்கி வரும்போது தொப்பூர் காமராஜர் நகர் அருகில் இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து வந்த மகேஸ்வரி தவறி கீழே விழுந்தார். அப்பொழுது பின்னால் வந்த வாகனம் மகேஸ்வரி மீது ஏறியதில் சம்பவ இடத்தில் அவர் பலியானார். முனுசாமி லேசான காயத்துடன் ஓமலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து தீவட்டிப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சேலம் அப்–சரா இறக்–கம் பகு–தி–யில் வந்த போது சாலையை கடக்க முயன்ற 37 வய–து–டைய நபர் மீது எதிர்–பா–ரா–த–வி–த–மாக போலீஸ் வாக–னம் மோதி–யது.
- தலை–யில் பலத்த காயம் அடைந்த அவரை அக்–கம்–பக்–கத்–தி–னர் மீட்டு சிகிச்–சைக்–காக சேலம் அரசு ஆஸ்–பத்–தி–ரி–யில் சேர்த்–த–னர். அவர் வரும் வழி–யி–லேயே அவர் இறந்து விட்–ட–தாக தெரி–வித்–த–னர்
சேலம்:
சேலம் மாவட்ட ஆயு–தப்–ப–டை–யில் போலீஸ்–கா–ர–ராக அன்–பு–தா–சன் (வயது 35) என்–ப–வர் பணி–யாற்றி வரு–கி–றார். டிரை–வ–ரான அவர் நேற்று போலீஸ் வாக–னத்–தில் 2-ம் நிலை காவ–லர் தேர்–வுக்கு பயன்–ப–டுத்–தப்–பட்ட பொருட்–களை ஏற்–றிக்–கொண்டு மாவட்ட போலீஸ் சூப்–பி–ரண்டு அலு–வ–ல–கத்–துக்கு சென்–றார். பின்–னர் பொருட்–களை அங்கு இறக்கி வைத்–து–விட்டு மீண்–டும் ஆயு–தப்–ப–டைக்கு வாக–னத்தை ஓட்டி வந்து கொண்–டி–ருந்–தார்.
அப்–சரா இறக்–கம் பகு–தி–யில் வந்த போது சாலையை கடக்க முயன்ற 37 வய–து–டைய நபர் மீது எதிர்–பா–ரா–த–வி–த–மாக போலீஸ் வாக–னம் மோதி–யது. இதில் தலை–யில் பலத்த காயம் அடைந்த அவரை அக்–கம்–பக்–கத்–தி–னர் மீட்டு சிகிச்–சைக்–காக சேலம் அரசு ஆஸ்–பத்–தி–ரி–யில் சேர்த்–த–னர். அங்கு டாக்–டர்–கள் பரி–சோ–தனை செய்த போது, அவர் வரும் வழி–யி–லேயே அவர் இறந்து விட்–ட–தாக தெரி–வித்–த–னர்.
இது–கு–றித்து தக–வல் கிடைத்–த–தும் செவ்–வாய்–பேட்டை போலீ–சார் அங்கு விரைந்து சென்று விசா–ரணை நடத்–தி–னர். இதில் இறந்–த–வ–ரின் சட்–டைப்–பை–யில் அரசு ஆஸ்–பத்–தி–ரி–யில் பொதுப்–பி–ரி–வில் புற–நோ–யா–ளி–யாக சிகிச்சை பெற்–ற–தற்–கான சீட்டு இருந்–தது. அதில் ரவிக்–கு–மார் (37)
- கோரிமேடு அடுத்த எம்.ஜி.ஆர் நகர் பகுதியில் இன்று காலை அதிக பாரம் மரங்களை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று குரும்பப்பட்டியை நோக்கி சென்றுக்கொண்டி ருந்தது.
- வாகன போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
சேலம்:
சேலம் கோரிமேடு அடுத்த எம்.ஜி.ஆர் நகர் பகுதியில் இன்று காலை அதிக பாரம் மரங்களை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று குரும்பப்பட்டியை நோக்கி சென்றுக்கொண்டி ருந்தது.
அப்போது சாலையில் உள்ள மின்சார கம்பிகள் மீது மோதியதில் மின்கம்பிகள் அறுந்து சாலையிலேயே விழுந்தது. அப்போது சாலையில் பொது மக்கள் நடமாட்டம் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
இந்த விபத்து காரணமாக சேலம் குரும்பப்பட்டி உயிரியல் பூங்கா, செட்டி சாவடி, கோம்பைப்பட்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு வாகன போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
மேலும் ஒரு மணி நேரத்திற்கு மேலாக மின்சாரமும் துண்டிக்கப்பட்டது.
- இருசக்கர வாகனத்தில் சென்றபோது விபத்து
- கடந்த 3 மாதங்களுக்கு முன்பு விடுமுறையில் ஊருக்கு வந்தார்.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி அருகே உள்ள கோவளம் மேற்கு தெருவை சேர்ந்தவர் லிகோரி. இவருடைய மகன் டெனி லிகோரி (வயது 23). இவர் வெளிநாட்டில் கப்பல் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.
இவர் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு விடுமுறையில் ஊருக்கு திரும்பி னார். நேற்று இரவு 10 மணி அளவில் டெனிலிகோரி தனது இருசக்கர வாகனத்தில் கன்னியாகுமரி மெயின் ரோட்டில் பெரியார் நகர் சந்திப்பில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே நாகர்கோவிலில் இருந்து கன்னியாகுமரி நோக்கி மின்னல் வேகத்தில் வந்த கேரளா சுற்றுலா பஸ் பெரியார் நகருக்கு செல்வதற்காக திரும்பியது.
அப்போது டெனிலிகோரி சென்ற இரு சக்கரவாகனம் மீது அந்த சுற்றுலா பஸ் பயங்கரமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட டெனிலிகோரி சம்பவ இடத்திலேயே துடி துடித்து ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார்.
இது பற்றி தகவல் அறிந்ததும் கன்னியாகுமரி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து கன்னியாகுமரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி கேரளா சுற்றுலா பஸ்சை ஓட்டி வந்த பத்தனம் திட்டா, முடியூர் கோணம் பகுதியைச் சேர்ந்த டிரைவர் பினுகுமார் (46) என்பவரை கைது செய்தனர்.
- 6 மாத குழந்தையான ஜெயாவுக்கு தடுப்பூசி மற்றும் பிற சோதனைகளை முடிப்பதற்கான செயல்முறைகள் நடந்து வருகிறது.
- மோதி என்ற பெயரிடப்பட்ட 7 மாத நாய்க்கும் பாஸ்போர்ட் தயாராகி விட்டதாகவும், இன்னும் 3 மாதங்களில் அந்த நாய் இத்தாலிக்கு பறந்து செல்லும் என தெரிவித்துள்ளனர்.
லக்னோ:
உத்தரபிரதேச மாநிலம் வாரணாசிக்கு இத்தாலி மற்றும் நெதர்லாந்தை சேர்ந்த சுற்றுலா பயணிகள் சிலர் கடந்த டிசம்பர் மாதம் சுற்றுலா வந்தனர்.
அப்போது அங்குள்ள அஸ்ஸி காட் என்ற தெரு ஒன்றில் நடந்து சென்ற போது தெரு நாய்கள் சில ஒன்று சேர்ந்து பெண் நாய் ஒன்றை விரட்டி துன்புறுத்தியதை இத்தாலியை சேர்ந்த சுற்றுலா பயணி வேரா லாசரெட்டி பார்த்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர், தெரு நாய்களை விரட்டி அதன் பிடியில் சிக்கிய பெண் நாயை மீட்டார்.
இதே போல வாரணாசியில் உள்ள முன்சிகாட் பகுதியில் நெதர்லாந்தை சேர்ந்த மெரல் பொன்டெல்பால் என்ற பயணி சென்ற போது அங்கும் ஒரு பெண் நாயை தெரு நாய்கள் கடித்து தாக்கியதை கண்டு அதிர்ச்சியடைந்த அவர் தெரு நாய்களை விரட்டி, பெண் நாயை மீட்டுள்ளார். பின்னர் வாரணாசி தளமாக கொண்டு இயங்கும் அனிமோடெல் கேர் டிரஸ்ட் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தை நாடியுள்ளனர். இந்த நிறுவனம் நோய் வாய்ப்பட்ட, காயமடைந்த மற்றும் உடல் ஊனமுற்ற தெரு நாய்களை மீட்பு மற்றும் மறுவாழ்வுக்காக இயங்கும் நிறுவனமாகும். இந்நிறுவனத்தினர் ஐரோப்பிய சுற்றுலா பயணிகளால் மீட்கப்பட்ட 2 பெண் நாய்களுக்கும் மோதி, ஜெயா என பெயரிட்டு வளர்த்தனர். மேலும் அந்த 2 நாய்களுக்கும் தேவையான சிகிச்சைகள் மற்றும் தடுப்பூசிகள் அளிக்கப்பட்டது.
இதன் பயனாக பூரண குணமடைந்த மோடி என பெயரிடப்பட்ட நாயை இத்தாலியை சேர்ந்த வேரா லாசரெட்டி தத்தெடுத்தார். இதேபோல ஜெயா என பெயரிடப்பட்ட நாயை நெதர்லாந்தை சேர்ந்த மெரல் பொன்டேல்பால் தத்தெடுத்தார்.
இதைத்தொடர்ந்து இந்த 2 நாய்களையும் அவற்றை தத்தெடுத்தவர்களுடன் அனுப்பி வைப்பதற்கான ஏற்பாடுகளை அனிமோடெல் கேர் டிரஸ்ட் மேற்கொண்டது. அதன்படி 2 நாய்களுக்கும் பாஸ்போர்ட் மற்றும் தடுப்பூசி சான்றிதழ் ஆகியவை பெறப்பட்டது. அவற்றை இத்தாலி மற்றும் போர்ச்சுகல்லுக்கு அனுப்பி உள்ளனர்.
6 மாத குழந்தையான ஜெயாவுக்கு தடுப்பூசி மற்றும் பிற சோதனைகளை முடிப்பதற்கான செயல்முறைகள் நடந்து வருகிறது.
இதேபோல மோதி என்ற பெயரிடப்பட்ட 7 மாத நாய்க்கும் பாஸ்போர்ட் தயாராகி விட்டதாகவும், இன்னும் 3 மாதங்களில் அந்த நாய் இத்தாலிக்கு பறந்து செல்ல உள்ளதாகவும் தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் நிர்வாக அதிகாரி சுண்டிலிப் சென்குப்தா தெரிவித்துள்ளார்.
- ஒருவர் படுகாயம்
- இந்த விபத்தில் அரசு பஸ் ஓட்டுநரும், பயணிகளும் சிறிய காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
கன்னியாகுமரி:
திருநெல்வேலி பகுதியை சேர்ந்தவர் பாண்டியன். லாரி டிரைவர். இவர் இன்று காலை திருவனந்தபுரத்தில் இருந்து திருநெல்வேலி நோக்கி லாரியில் சென்றுக்கொண்டிருந்தார்.
களியக்காவிளை அருகே பி.பி.எம். சந்திப்பில் அவர் வந்தபோது அவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி எதிரே நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரம் நோக்கி சென்ற அரசு பஸ்சின் மீது பயங்கரமாக மோதியது. இதில் அரசு பஸ்சின் முன் பக்க கண்ணாடி முற்றுலுமாக நொறுங்கியது.
இந்த விபத்தில் அரசு பஸ் ஓட்டுநரும், பயணிகளும் சிறிய காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். லாரி டிரைவர் படுகாயமடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த களியக்காவிளை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- டிரைவர் மீது வழக்கு
- நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையம் பகுதியில் உள்ள லாட்ஜில் வேலை பார்த்து வந்தார்.
கன்னியாகுமரி:
நாகர்கோவில் வாத்தி யார்விளை பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 52). இவர் நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையம் பகுதியில் உள்ள லாட்ஜில் வேலை பார்த்து வந்தார்.
நேற்று வேலைக்கு வந்த சதீஷ்குமார் அந்த பகுதியில் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த லாரி ஒன்று சதீஷ்குமார் மீது மோதியது. இதையடுத்து அந்த பகுதியில் ஏராளமான பொதுமக்கள் திரண்டனர். நாகர்கோவில் போக்குவரத்து பிரிவு போலீசாரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
போக்குவரத்து பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் சேகர் தலைமையிலான போலீசார் படுகாயத்துடன் கிடந்த சதீஷ்குமாரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலமாக ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப் பட்டு வந்தது. எனினும் சிகிச்சை பலன் இன்றி சதீஷ்குமார் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து நாகர்கோவில் போக்கு வரத்து பிரிவு போலீசார் லாரி டிரைவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பலியான சதீஷ்குமாரின் உடல் பிரேத பரிசோதனை இன்று நடக்கிறது.
இதையடுத்து அவரது உறவினர்கள் ஏராளமானோர் அங்கு திரண்டு இருந்தனர்.
- திடீரென லாரி, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து நூல் மில் சுற்றுச்சுவர் மீது மோதியது.
- சுற்றுச்சுவரையொட்டி மில் வளாகத்துக்குள் நிறுத்தி இருந்த 4 பைக் சேதமாகின.
வெள்ளகோவில்:
காங்கயத்தில் இருந்து வெள்ளகோவில் நோக்கி நேற்று ஒரு டிப்பர் லாரி கோவை - திருச்சி ரோட்டில் காங்கேயம் அருகே உள்ள கொழுஞ்சிகாட்டு வலசு என்ற இடத்தில் வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென லாரி, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து நூல் மில் சுற்றுச்சுவர் மீது மோதியது.இதனால் சுற்றுச்சுவர் சேதமாகின.
சுற்றுச்சுவரையொட்டி மில் வளாகத்துக்குள் நிறுத்தி இருந்த 4 பைக் சேதமாகின. சுற்றுச்சுவர் அருகே உள்ள வாட்ச்மேன் அறையில் பணியில் இருந்த ராம்பாரத்சமர்பஸ்வன் (வயது 38) என்பவருக்கு லேசான காயம் ஏற்பட்டது.
லாரி ஓட்டி வந்த டிரைவர் சேலம் ஆத்தூர் பகுதியை சேர்ந்த செந்தில்குமார் (36) என்பவருக்கு கால்களில் பலத்த அடிபட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
இந்த விபத்து குறித்து வெள்ளகோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- ஈரோடு, காங்கேயம், கொடுமுடி உள்ளிட்ட பகுதி களை சேர்ந்த 20-க்கும் மேற்பட்டோர் டிராவல்ஸ் வேனில் இன்று காலை நாமக்கல் மாவட்டம் கொல்லிமலைக்கு சுற்றுலா சென்று கொண்டிருந்தனர்.
- கோடாம்பில்பட்டி பஸ் நிறுத்தம் பகுதியில் உள்ள கொண்டை ஊசி வளைவில் வேன் திரும்பியது.
கொல்லிமலை:
ஈரோடு, காங்கேயம், கொடுமுடி உள்ளிட்ட பகுதி களை சேர்ந்த 20-க்கும் மேற்பட்டோர் டிராவல்ஸ் வேனில் இன்று காலை நாமக்கல் மாவட்டம் கொல்லிமலைக்கு சுற்றுலா சென்று கொண்டிருந்தனர்.
கொண்டை ஊசி வளைவு
சுமார் 9 மணியளவில் அரியூர்நாடு பஞ்சாயத்து கோடாம்பில்பட்டி பஸ் நிறுத்தம் பகுதியில் உள்ள கொண்டை ஊசி வளைவில் வேன் திரும்பியது. அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் அங்கிருந்த மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. சாலையில் கவிழ்ந்தது.
இதில் வேனில் இருந்த ஒரு குழந்தை உள்பட 10 பேர் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து அந்த வழியாக வந்தவர்கள் போலீசார் மற்றும் 108 ஆம்புலன்சுக்கு தகவல் அளித்தனர்.
சிகிச்சை
விரைந்து வந்த வாழவந்தி நாடு போலீசார் விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு செம்மேடு பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.அங்கு அவர்க ளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் 2 பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது. இந்த விபத்து குறித்து வாழவந்திநாடு போலீ
சார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.