என் மலர்
நீங்கள் தேடியது "விடைத்தாள்"
- தேர்வு முடிவுகள் மே மாதம் 5-ந்தேதி வெளியிட கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.
- குமரி மாவட்டத்தில் 1500 ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்தும் பணிகளை தொடங்கி உள்ளனர்.
நாகர்கோவில் :
தமிழ்நாட்டில் பிளஸ்-2 பொதுத்தேர்வுகள் கடந்த மார்ச் 13-ந்தேதி தொடங்கி ஏப்ரல் 3-ந்தேதி நிறைவுபெற்றது. இதனைத்தொடர்ந்து பிளஸ்-1 பொதுத்தேர்வும், மார்ச் 14-ந்தேதி தொடங்கி ஏப்ரல் 5-ந்தேதி வரை நடந்து முடிந்துள்ளது. பிளஸ்-2 பொதுத் தேர்வுக்கான விடைத்தாள் திருத்தும் பணிகள் இன்று (10-ந் தேதி) தொடங்கியது. இந்த பணிகள் தொடர்ந்து 21-ந்தேதி வரை நடைபெற உள்ளது. தொடர்ந்து மதிப்பெண் பதிவு செய்யும் பணிகள் நடத்தப்படுகிறது.
தேர்வு முடிவுகள் மே மாதம் 5-ந்தேதி வெளியிட கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. குமரி மாவட் டத்தில் நடந்து முடிந்த பிளஸ்-2 பொதுத்தேர்வு விடைத்தாள்கள் சேகரிக்கப்பட்டு அரசு தேர்வுகள் இயக்குநரக அறிவுறுத்தல்படி மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதனை போன்று பிற மாவட்ட விடைத்தாள்கள் குமரி மாவட்டத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.
குமரி மாவட்டத்தில் படந்தாலுமூடு தூய இருதய மெட்ரிக் மேல்நிலைபள்ளி, வடசேரி எஸ்.எம்.ஆர்.வி. மேல்நிலை பள்ளி ஆகிய இரு மையங்களும் விடைத்தாள் திருத்தும் மையங்களாக செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
விடைத்தாள் திருத்தும் பணிகள் இன்று (10-ந்தேதி) முதன்மை கண்காணிப் பாளர்கள் மற்றும் கூர்ந்தாய்வு அலுவலர்கள் விடைத்தாள் திருத்தும் பணிகளை தொடங்கி உள்ளனர். இவர்கள் இன்று காலை 9 மணிக்கு விடைத்தாள் திருத்தும் மையங்களில் பணியில் ஈடுபட்டு உள்ளனர். விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடும் ஆசிரி யர்களுக்கு விடுப்பு அனுமதியில்லை என்றும், மருத்துவ விடுப்பில் ஆசிரி யர்கள் இருப்பின் தலைமை ஆசிரியர், தாளாளர் பரிந்துரையுடன் முகாம் அலுவலரிடம் அனுமதி பெறவேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
பாடவாரியாக தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், கணினி, அறிவியல், கணினி தொழில்நுட்பம், வணி கவியல், கணக்குபதிவியல், பொருளியல் வரலாறு உள்ளிட்ட பாடங்களுக்கு சுமார் 300 ஆசிரியர்கள் முதன்மை கண்காணிப் பாளர்களாகவும், கூர்ந் தாய்வு அலுவலர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதனை போன்று உதவித்தேர்வர்கள் ஏப்ரல் 11-ந்தேதி முதல் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட உள்ளனர். இப்பணியில் சுமார் 1200 ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். அந்த வகையில் குமரி மாவட்டத்தில் 1500 ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்தும் பணிகளை தொடங்கி உள்ளனர்.
- 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் கடந்த 6-ந் தேதி தொடங்கி, 20-ந் தேதியுடன் நிறைவடைந்தது.
- 25-ந் தேதி முதல் உதவி தேர்வாளர்கள் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடவுள்ளனர்.
சேலம்:
தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் கடந்த 6-ந் தேதி தொடங்கி, 20-ந் தேதியுடன் நிறைவடைந்தது. இதனையடுத்து விடைத்தாள் திருத்தும் பணிகளை நாளை மாநிலம் முழுவதும் தொடங்கவுள்ளது. இதற்காக மாணவர்களின் விடைத்தாள்கள் ஏற்கனவே விடைத்தாள் திருத்தும் மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தை பொறுத்த வரை 625 அரசு, உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 44,831 மாணவர்கள் நடப்பாண்டு 10-ம் வகுப்பு தேர்வெழுதினர். தொடர்ந்து, விடைத்தாள் திருத்தும் பணிக்காக 3 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
சேலம் கல்வி மாவட்டத்தில், சூரமங்கலம் செயின்ட் ஜோசப் பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், ஆத்தூர் தேவியாக்குறிச்சி தாகூர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியிலும், சங்ககிரி கல்வி மாவட்டத்தில் ஜலகண்டாபுரம் மினர்வா பள்ளியிலும் விடைத்தாள் திருத்தும் மையம் அமைக்கப்பட்டுள்ளது.
விடைத்தாள் திருத்தும் பணிக்காக முகாம் அலுவலர்கள் தலை மையில், மதிப்பெண் சரிபார்ப்பு அலுவலர், முதன்மை தேர்வாளர், கூர்ந்தாய்வாளர், உதவி தேர்வாளர், இதர பணியாளர்கள் என சுமார் 2,400-க்கும் மேற்பட்டோர் நியமிக்கப்பட்டுள்ளனர். நாளை 24-ந் தேதி முதன்மை தேர்வாளர், கூர்ந்தாய்வாளர் பணி களை தொடங்கி வைத்து, 25-ந் தேதி முதல் உதவி தேர்வாளர்கள் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடவுள்ளனர். இதனிடையே விடைத்தாள் திருத்தும் பணியின்போது, தேர்வுகள் இயக்கம் வெளியிட்டுள்ள நேர விதிகளை முழுமையாக கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து ஆசிரியர்கள் கூறுகையில், விடைத்தாள் மதிப்பீட்டுப் பணி என்பது மிகவும் பொறுப்பான பணி. ஆனால் பல நேரங்களில் உரிய நேர விதிகள் கடைபிடிக்கப்படு வதில்லை. ஒரு சிலர் அவசர, அவசரமாக ஒதுக்கிய நேரத்திற்கு முன்னதாகவே மதிப்பீடு செய்துவிடுகின்றனர்.
இதனை பார்த்து மற்றவர்கள் பதற்றமடைந்து விரைவாக திருத்த வேண்டிய சூழல் உருவாகிறது. இதனால், துல்லியத்தன்மை இல்லா ததுடன், குளறுபடிகளும் நடப்பதால் மாணவர்கள் தான் பாதிக்கப்படுகின்றனர். கடந்த முறை விடைத்தாள் திருத்தும் பணியில் கவனக்கு றைவுடன் இருந்ததாக ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
ஒரு சிலர் செய்யும் தவறால் ஒட்டுமொத்த மையமும் பாதிக்கப்படும் சூழல் உள்ளது. எனவே, விடைத்தாளை பொறுமையாக மதிப்பீடு செய்யும் வகையில், உரிய நேர விதிகளை கடைபிடிக்க வேண்டும் என்றனர்.
- பீகாரில் பத்தாம் வகுப்பு தேர்வு கடந்த மாதம் 15-ம் தேதி தொடங்கி 23-ம் தேதி முடிந்தது.
- விடைத்தாள் திருத்தும் பணி தற்போது மாநிலம் முழுவதும் நடந்து வருகிறது.
பாட்னா:
பீகார் மாநிலத்தில் கடந்த மாதம் 15-ம் தேதி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கி 23-ம் தேதி முடிவடைந்தது. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி தற்போது மாநிலம் முழுவதும் நடந்து வருகிறது. விடைத்தாள் திருத்தும் பணி முடிந்தபின் தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளது.
இந்நிலையில், பத்தாம் வகுப்பு மாணவி ஒருவரது விடைத்தாள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதுதொடர்பாக, அந்த மாணவி தனது விடைத்தாளில், விவசாயியான எனது அப்பாவுக்கு வருமானம் குறைவு. எனவே நிதி நெருக்கடியால் படிப்பை கைவிடும்படி கூறிவருகிறார். தேர்வில் நல்ல மதிப்பெண் எடுக்கவேண்டும். இல்லாவிட்டால் திருமணம் செய்துவைப்பதாக கூறியுள்ளார். தயவுசெய்து எனக்கு நல்ல மதிப்பெண் தந்து எதிர்காலத்தை காப்பாற்ற உதவுங்கள் என தெரிவித்துள்ளார்.
மாணவியின் இந்த கோரிக்கை சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
- வருகிற 30-ந்தேதி முதல் மாணவர்களின் விடைத்தாள்கள் 101 மண்டல சேகரிப்பு மையங்களுக்கு எடுத்துச் செல்லப்படும்.
- பணிகளில சுமார் 46 ஆயிரம் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
சென்னை:
தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் பிளஸ்-1 வகுப்புக்கான பொதுத் தேர்வு மார்ச் 4-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த தேர்வை சுமார் 8 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர். அதன்படி தமிழ், வேதியியல், இயற்பியல் உள்பட பெரும்பாலான பாடங்களுக்கான தேர்வுகள் முடிந்துவிட்டன. தொடர்ந்து பிளஸ்-1 பொதுத்தேர்வு நாளை (திங்கட்கிழமை) நிறைவு பெற உள்ளது. இறுதி நாளில் கணிதம், விலங்கியல், வணிகவியல் உள்ளிட்ட பாடங்களுக்கான தேர்வுகள் நடைபெற உள்ளன. இதையடுத்து விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யும் பணி வருகிற 6-ந்தேதி முதல் தொடங்க உள்ளது.
இது குறித்து தேர்வுத்துறை அதிகாரிகள் சிலர் கூறியதாவது:-
பொதுத்தேர்வு நிறைவடைந்ததும் வருகிற 30-ந்தேதி முதல் மாணவர்களின் விடைத்தாள்கள் 101 மண்டல சேகரிப்பு மையங்களுக்கு எடுத்துச் செல்லப்படும். அங்கிருந்து மதிப்பீட்டு மையங்ளுக்கு 4-ந்தேதி முதல் அனுப்பி வைக்கப்படும்.
தொடர்ந்து ஏப்ரல் 6-ந்தேதி முதல் 25-ந்தேதி வரை விடைத்தாள்களை திருத்தும் பணிகள் நடை பெற உள்ளன. முதலில் அரியர் மாணவர்களுக்கான விடைத்தாள்கள் 6-ந்தேதி முதல் 13-ந்தேதிக்குள் மதிப்பீடு செய்யப்படும்.
தொடர்ந்து மற்ற மாணவர்களுக்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி அடுத்த மாதம் 15-ந்தேதி முதல் 25-ந்தேதி வரை மேற்கொள்ளப்படும். இதற்காக தமிழகம் முழுவதும் 83 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த பணிகளில சுமார் 46 ஆயிரம் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
தொடர்ந்து மதிப்பெண் பதிவேற்றம் உள்ளிட்ட பணிகளை முடித்து திட்டமிட்டபடி தேர்வு முடிவுகள் மே 14-ந்தேதி வெளியிடப்படும். மதிப்பீட்டு பணிகளின் பொது ஆசிரியர்கள் உரிய வழிமுறைகளை பின்பற்றி கவனத்துடன் செயல்பட அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.
- தேசிய தேர்வு முகமை நடத்தும் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்காக நீட் நுழைவுத் தேர்வு நாடு முழுவதும் கடந்த மே 5 ஆம் தேதி நடைபெற்று முடிந்தது.
- குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் வினாத்தாளில் குளறுபடி உள்ளிட்ட புகார்களும் எழுந்த வண்ணம் உள்ளன.
தேசிய தேர்வு முகமை (NTA) நடத்தும் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்காக நீட் நுழைவுத் தேர்வு நாடு முழுவதும் கடந்த மே 5 ஆம் தேதி நடைபெற்று முடிந்தது. வழக்கம் போல் கடும் கட்டுப்பாடுகளுடன் நடந்த இந்த ஆண்டு தேர்வில் தேர்வில் நாடு முழுவதும் மருத்துவக் கனவுடன் உள்ள லட்சக்கணக்கான மாணவர்கள் பங்கேற்றனர்.
குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் வினாத்தாளில் குளறுபடி உள்ளிட்ட புகார்களும் எழுந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் நடந்து முடித்த தேர்வுக்கான முதற்கட்ட மாதிரி விடைக் குறிப்பு விரைவில் வெளியிடப்படும் என்று என்று தகவல் வெளியாகி உள்ளது. விடைக்குறிப்பு வெளியானதும் மாணவர்கள், exams.nta.ac.in/NEET என்ற இணையத்தளத்தில் அதைப் பதிவிறக்கம் செய்து அந்த விடைகளில் ஏதேனும் ஆட்சேபனை இருந்தால் முறையிடலாம்.
அதைத்தொடர்ந்து அனைத்தையும் பரிசீலித்த பின்னர் இறுதிக்கட்ட விடைக்குறிப்பு வெளியிடப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இதனிடையே இளநிலை நீட் தேர்வு முடிவுகள் வரும் ஜூன் 14 ஆம் தேதி வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது
- மதிப்பெண் போடலாமா வேண்டாமா என்ற சந்தேகம் எழுகிறது.
- தேர்வு தாளில் கிறுக்குவதை தடுக்க ஏ ஐ தொழில்நுட்பம்.
விடைத்தால் திருத்தும் பணியில் ஈடுபடும் விரிவுரையாளர்கள் பேராசிரியர்கள் மாணவர்கள் என்ன எழுதி இருக்கிறார்கள் என்பதே தெரியாத அளவுக்கு அவற்றை அடையாளம் காண்பதில் குழப்பம் அடைகின்றனர்.
இந்த கேள்விக்கு மதிப்பெண் போடலாமா வேண்டாமா என்ற சந்தேகம் அவர்களுக்குள் ஏற்படுகிறது.
இது போன்ற மாணவர்கள் தேர்வு தாளில் கிறுக்கி வைத்து மதிப்பெண் பெறுவதை தடுக்க ஏ ஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு மூலம் விடைத்தால் திருத்தும் பரிசோதனையை தமிழக அரசு தொடங்கியுள்ளது.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில்:-
ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு எந்திரம் மூலம் விடைத்தாள்களை திருத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. சரியான பதில்கள் ஸ்கேன் செய்யப்பட்ட நகல் ஏ ஐ தொழில்நுட்ப எந்திரத்திற்கு அனுப்பப்படும்.
செயற்கை நுண்ணறிவு நகலை ஆய்வு செய்து பொருத்தமற்ற பதில்களை கண்டுபிடித்து அது பேராசிரியர்களை எச்சரிக்கும். ஒவ்வொரு மாணவரின் கையெழுத்தும் வித்தியாசமாக இருக்கும்.
ஏஐ தொழிநுட்பத்தில் இது தொடர்பாக பல்வேறு திட்டங்கள் புகுத்தப்பட்டு வருகின்றன.
தேர்வுத்தாள் திருத்தம் பேராசிரியர்களுக்கு ஒரு ஏஐ தொழில்நுட்ப கருவி வழங்கப்படும்.
இதன் மூலம் அவர்கள் விடைத்தாளில் உள்ள பிழைகளை கண்டறிந்து சரியான மதிப்பெண் தர முடியும். இதற்கென பிரத்தியேக மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது. வினாத்தாள்கள் பகுப்பாய்வு செய்யப்பட்டு பாட அறிவு தொடர்பான விதிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.
ஏஐ தொழில்நுட்பத்தில் விடைத்தாள்களை திருத்துவது குறித்து பேராசிரியர்கள் மூலம் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
தற்போது தமிழகத்தில் உள்ள 4 பல்கலைக்கழகங்கள் ஏஐ தொழில்நுட்பத்தில் விடைத்தாள்களை திருத்த தேர்வு செய்யப்பட்டுள்ளன.
இந்த தொழில்நுட்பத்தின் செயல் திறனை சரியாக பயன்படுத்திய பிறகு விரிவான முடிவுகள் செய்து அனைத்து பல்கலைக்கழகங்களில் செயல்படுத்துவதற்கான திட்டம் தயாரிக்கப்படுகிறது.
இதனை மாநில திட்ட குழு முடிவு செய்யும். ஏஐ தொழில்நுட்பத்தால் கல்லூரி விடைத்தாள்களை திருத்த ஒரு எந்திரன் வந்துவிட்டது.
இதன் மூலம் தேர்வில் ஏதாவது எழுதி கிறுக்கி வைத்தால் மதிப்பெண்கள் கிடைக்கும் என்ற மாணவர்களின் எண்ணம் ஒருபோதும் நிறைவேறாது. சரியான விடைக்கு மட்டுமே மதிப்பெண் கிடைக்கும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- விடைத்தாளின் முகப்புப் பக்கம் மாணவர்களின் விவரங்கள் இடம் பெற்றிருக்கும்.
- விடை தாள்களின் முகப்புப் பக்கத்தை இணைக்கும் பணியை தேர்வு நடக்கும் பள்ளி தலைமை ஆசிரியர் மேற்கொண்டனர்.
பொதுத்தேர்வுகளில் முறைகேடுகளை தடுக்க விடைத்தாள்களின் பராமரிப்புகளை அரசுத் தேர்வுகள் இயக்ககம் நேரடியாக மேற்கொள்ள உள்ளது.
மதுரையில் கடந்த 2023ம் ஆண்டு நடைபெற்ற +2 பொதுத் தேர்வில் விடைத்தாளின் முகப்புப் பக்கத்தை மாற்றி முறைகேடு செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
விடைத்தாளின் முகப்புப் பக்கம் மாணவர்களின் விவரங்கள் இடம் பெற்றிருக்கும்.
விடை தாள்களின் முகப்புப் பக்கத்தை இணைக்கும் பணியை தேர்வு நடக்கும் பள்ளி தலைமை ஆசிரியர் மேற்கொண்டனர்.
தற்போது அரசுத் தேர்வுகள் இயக்ககம், மாவட்டம் தோறும் மையங்கள் அமைத்து விடைத்தாள்களுடன் அதன் முகப்புப் பக்கத்தை இணைக்கும் பணியை மேற்கொண்டுள்ளது.
பொதுத் தேர்வு நடைபெறும் போது மாணவர்களுக்கு வழங்கப்படும் விடைத்தாளில் அனைத்துப் பக்கங்களும் முழுமையாக இணைக்கப்பட்டிருக்கும் வகையில் வழங்கப்பட உள்ளது.