என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆசிய கோப்பை ஹாக்கி"

    • இறுதிப் போட்டியில் தென் கொரியாவை எதிர்கொண்டது இந்தியா.
    • ஆசிய கோப்பை ஜூனியர் மகளிர் ஹாக்கி தொடரில் இந்தியா முதன்முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

    கமாமிகஹரா:

    8-வது பெண்கள் ஜூனியர் ஆசிய கோப்பை ஆக்கி போட்டி ஜப்பானின் கமாமிகஹராவில் நடைபெற்றது. 10 அணிகள் பங்கேற்ற இந்தப் போட்டியில் இந்தியா, தென் கொரியா அணிகள் இறுதிப்ப்போட்டிக்கு முன்னேறின.

    அதன்படி, இன்று நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் பிரீத்தி தலைமையிலான இந்திய அணி, தென் கொரியாவை எதிர்கொண்டது. பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் இந்திய அணி தென் கொரியாவை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. இதன்மூலம் ஆசிய கோப்பை ஜூனியர் மகளிர் ஹாக்கி தொடரில் இந்தியா சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளது.

    ஆசியக் கோப்பை ஜூனியர் மகளிர் ஹாக்கி தொடரில் முதன்முறையாக சாம்பியன் பட்டம் வென்று இந்தியா சாதனை புரிந்துள்ளது.

    • ஆசியக் கோப்பை ஜூனியர் மகளிர் ஹாக்கி தொடரில் முதன்முறையாக சாம்பியன் பட்டம் வென்று இந்தியா சாதனை.
    • இந்திய அணி அபாரமான விடாமுயற்சி, திறமை மற்றும் குழுப்பணியை வெளிப்படுத்தியுள்ளது.

    8-வது பெண்கள் ஜூனியர் ஆசிய கோப்பை ஆக்கி போட்டி ஜப்பானின் கமாமிகஹராவில் நடைபெற்றது. 10 அணிகள் பங்கேற்ற இந்தப் போட்டியில் இந்தியா, தென் கொரியா அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறின.

    அதன்படி, நேற்று நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் பிரீத்தி தலைமையிலான இந்திய அணி, தென் கொரியாவை எதிர்கொண்டது.

    பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் இந்திய அணி தென் கொரியாவை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.

    இதன்மூலம் ஆசிய கோப்பை ஜூனியர் மகளிர் ஹாக்கி தொடரில் இந்தியா சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளது.

    ஆசியக் கோப்பை ஜூனியர் மகளிர் ஹாக்கி தொடரில் முதன்முறையாக சாம்பியன் பட்டம் வென்று இந்தியா சாதனை புரிந்துள்ளது.

    இந்நிலையில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இது'குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், "2023 மகளிர் ஹாக்கி ஜூனியர் ஆசிய கோப்பையை வென்ற எங்கள் இளம் சாம்பியன்களுக்கு வாழ்த்துகள். இந்திய பெண்கள் அணி அபாரமான விடாமுயற்சி, திறமை மற்றும் குழுப்பணியை வெளிப்படுத்தியுள்ளது.

    அவர்கள் நம் தேசத்தை மிகவும் பெருமைப்படுத்தியுள்ளனர். தங்களின் முன்னோக்கிய முயற்சிகளுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்" என்று குறிப்பிட்டிருந்தார்.

    • மலேசிய அணி 6-2 என்ற கோல்கணக்கில் நடப்பு சாம்பியன் தென்கொரியாவை வீழ்த்தியது.
    • மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணி, ஜப்பானை எதிர்கொள்கிறது.

    ஆசிய சாம்பியன் கோப்பை ஹாக்கி தொடரில் இன்று அரையிறுதி ஆட்டங்கள் நடைபெறுகின்றன. முதல் அரையிறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் தென்கொரியா- மலேசியா அணிகள் மோதின. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் மலேசிய அணி 6-2 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

    மலேசிய அணி தரப்பில் அஸ்ராய் (3வது நிமிடம்), ஜஸ்லான் (9 மற்றும் 21வது நிமிடம்), சாரி (19வது நிமிடம்), சில்வரியஸ் (47 மற்றும் 48வது நிமிடம்) கோல் அடித்தனர். தென் கொரிய அணியில் ஜி 2வது நிமிடத்திலும், ஜாங் 14வது நிமிடத்திலும் கோல் அடித்தனர்.

    மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணி, ஜப்பானை எதிர்கொள்கிறது. 

    • இந்திய அணி அடுத்த ஆட்டத்தில் நாளை மலேசியாவை எதிர்கொள்கிறது.
    • லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும்.

    ஹூலுன்பியர்:

    8-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி சீனாவின் ஹூலுன்பியர் நகரில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 6 அணிகள் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும்.

    தனது தொடக்க ஆட்டத்தில் சீனாவை 3-0 என்ற கோல் கணக்கில் தோற்கடித்த நடப்பு சாம்பியனான இந்திய அணி நேற்று ஜப்பானை எதிர்கொண்டது. இதில் தொடக்கம் முதலே ஆக்ரோஷமாக விளையாடிய இந்திய வீரர்கள் முதல் 3 நிமிடங்களுக்குள் 2 கோல் (சுக்ஜீத் சிங், அபிஷேக்) கோல் போட்டு மிரள வைத்தனர்.

    இதனால் இந்தியாவின் தாக்குதல் யுக்தியை சமாளிக்க ஜப்பான் வீரர்கள் தடுப்பாட்டத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டி இருந்தது. ஆனாலும் இந்திய வீரர்களின் கோல் மழை ஓயவில்லை. 17-வது நிமிடத்தில் சஞ்சய், 54-வது நிமிடத்தில் உத்தம்சிங், 60-வது நிமிடத்தில் மறுபடியும் சுக்ஜீத் சிங் கோல் அடித்தனர். இதற்கிடையே ஜப்பான் தரப்பில் மோட்சுமோட்டோ 41-வது நிமிடத்தில் கோல் திருப்பினார்.

    முடிவில் இந்தியா 5-1 என்ற கோல் கணக்கில் ஜப்பானை துவம்சம் செய்து 2-வது வெற்றியை பெற்றது. ஆட்டநாயகன் விருது பெற்ற இந்திய வீரர் அபிஷேக் கூறுகையில், 'இது அணியின் முழுமையான கூட்டு முயற்சிக்கு கிடைத்த வெற்றி. தாக்குதல் ஆட்டத்தை சிறப்பாக மேற்கொண்டு, இலக்கை சரியாக எட்டினோம். ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது' என்று குறிப்பிட்டார்.

    மற்றொரு ஆட்டத்தில் சீனா 4-2 என்ற கோல் கணக்கில் மலேசியாவை பதம் பார்த்தது. பாகிஸ்தான்- தென்கொரியா இடையிலான ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் 'டிரா'வில் முடிந்தது.

    போட்டியில் இன்று ஓய்வு நாளாகும். இந்திய அணி அடுத்த ஆட்டத்தில் நாளை மலேசியாவை எதிர்கொள்கிறது. கடந்த ஆண்டு இறுதி ஆட்டத்தில் இந்திய அணி இதே மலேசியாவை வீழ்த்தி இருந்தது நினைவு கூரத்தக்கது.

    • இந்தியா மோதிய அனைத்து ஆட்டங்களிலும் வெற்றி பெற்று அரையிறுதிக்குத் தகுதி பெற்றுவிட்டது.
    • புள்ளிபட்டியலில் பாகிஸ்தான் 2-ம் இடமும் தென்கொரியா 3-ம் இடமும் பிடித்துள்ளது.

    8-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி சீனாவின் ஹூலுன்பியர் நகரில் நடந்து வருகிறது.

    இதில் இந்தியா, பாகிஸ்தான், சீனா, ஜப்பான், மலேசியா, தென் கொரியா ஆகிய 6 அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற 5 அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும்.

    லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்குத் தகுதி பெறும். நடப்பு சாம்பியனான இந்தியா தான் மோதிய 4 ஆட்டங்களிலும் வெற்றி பெற்று அரையிறுதிக்குத் தகுதி பெற்றுவிட்டது.

    சீனா, ஜப்பான், மலேசியா, தென் கொரியா ஆகிய அணிகளை வீழ்த்திய இந்திய அணி தனது 5-வது மற்றும் கடைசி லீக் ஆட்டத்தில் பாகிஸ்தானுடன் இன்று மோதியது. இப்போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றது.

    விளையாடிய அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் இந்தியா முதல் இடத்தில் நீடிக்கிறது. பாகிஸ்தான் 2-ம் இடமும் தென்கொரியா 3-ம் இடமும் பிடித்துள்ளது.

    2016 ஆம் ஆண்டு நடந்த தெற்காசிய விளையாட்டு போட்டியின் இறுதிப்போட்டியில் பாகிஸ்தானிடம் இந்தியா தோல்வியடைந்தது. அதன்பின் கடந்த 8 ஆண்டுகளாக பாகிஸ்தான் அணியிடம் ஒரு போட்டியில் கூட இந்திய அணி தோல்வியடையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    • முதல் அரையிறுதி போட்டி பாகிஸ்தானை வீழ்த்தி சீனா இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
    • நாளை நடைபெறும் இறுதி போட்டியில் சீனாவை இந்தியா எதிர்கொள்கிறது.

    8-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி சீனாவின் ஹூலுன்பியர் நகரில் நடந்து வருகிறது.

    இதில் இந்தியா, பாகிஸ்தான், சீனா, ஜப்பான், மலேசியா, தென் கொரியா ஆகிய 6 அணிகள் பங்கேற்றுள்ளன.

    இதில் நடப்பு சாம்பியனான இந்தியா, பாகிஸ்தான், சீனா, தென்கொரியா ஆகிய அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றன.

    முதல் அரையிறுதி போட்டி பாகிஸ்தானுக்கும் சீனாவுக்கும் இடையே நடைபெற்றது. இப்போட்டி 1 -1 எனற கணக்கில் சாமானில் முடிந்தது. இதனையடுத்து வெற்றியை தீர்மானிக்க போட்டி பெனால்டி ஷூட் அவுட் முறைக்கு சென்றது. அதில் 2-0 என்ற கணக்கில் சீனா வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

    பின்னர் நடத்த 2 ஆவது அரையிறுதி போட்டியில் தென்கொரிய அணியை இந்தியா எதிர்கொண்டது. இப்போட்டியில் 4 - 1 என்ற கோல்கணக்கில் இந்தியா அபார வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

    நாளை நடைபெறும் இறுதி போட்டியில் சீனாவை இந்தியா எதிர்கொள்கிறது. 

    • ஆசிய சாம்பியன்ஸ் கோப்பையில் தென்கொரியாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு இந்தியா முன்னேறியது
    • முதல் அரையிறுதி போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி சீனா இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.

    8-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி சீனாவின் ஹூலுன்பியர் நகரில் நடந்து வருகிறது.

    இதில் இந்தியா, பாகிஸ்தான், சீனா, ஜப்பான், மலேசியா, தென் கொரியா ஆகிய 6 அணிகள் பங்கேற்றுள்ளன.

    இதில் நடப்பு சாம்பியனான இந்தியா, பாகிஸ்தான், சீனா, தென்கொரியா ஆகிய அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றன.

    முதல் அரையிறுதி போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி சீனா இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. இரண்டாவது அரையிறுதி போட்டியில் தென் கொரியாவை வீழ்த்தி இந்தியா இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

    இந்நிலையில், இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் 1 - 0 என்ற கோல் கணக்கில் சீனாவை வீழ்த்தி 5 ஆவது முறையாக இந்தியா கோப்பையை கைப்பற்றியது.

    இதற்கு முன்பு இந்தியா 2011, 2016, 2018, 2023, ஆகிய ஆண்டுகளில் கோப்பையை வென்றது குறிப்பிடத்தக்கது.

    அதிக கோல்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் மட்டுமே அடுத்த சுற்றுக்கு தகுதி பெற முடியும் என்ற நெருக்கடியான சூழலில் இந்திய அணி விளையாடியது.

    ஜகார்த்தா:

    11-வது ஆசிய கோப்பை ஆக்கி போட்டி இந்தோனேசியா தலைநகர் ஜகார்த்தாவில் நடைபெற்ற வருகிறது. இதில் 8 அணிகள் பங்கேற்றுள்ளன.

    'ஏ' பிரிவில் இடம் பெற்றுள்ள பிரேந்திர லாக்ரா தலைமையிலான  இந்திய அணி முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானுடன் 1-1 என்ற கோல் கணக்கில் 'டிரா'  செய்தது.

    அடுத்த ஆட்டத்தில் ஜப்பானிடம் 2-5 என்ற கோல் கணக்கில் அதிர்ச்சி தோல்வியை தழுவியது. இந்திய அணி தனது கடைசி லீக்கில் நேற்று இந்தோனேசியாவை எதிர்கொண்டது. 

    இந்த ஆட்டத்தில் மிக அதிகமான கோல்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் மட்டுமே அடுத்த சுற்றுக்கு தகுதி பெற முடியும் என்ற நெருக்கடியான சூழலில் இந்திய அணி விளையாடியது.

    ஆட்டத்தின் முதல் பாதியில் 6-0 என்ற கோல் கணக்கில் இந்திய அணி முன்னிலை பெற்றிருந்தது. இரண்டாவது பாதியில் திப்சன் டிர்கி மற்றும் அபாரன் சுதேவ் ஆகியோர் அடுத்தடுத்து கோல்கள் அடித்தனர். 

    திப்சன் டிர்கி 4 கோல்களும்,  சுதேவ் ஹாட்ரிக் கோல் அடித்தனர். மேலும் இந்திய வீரர்கள் செல்வம், பவன், எஸ்.வி.சுனில் பிரேஸ் கோல் அடித்து அசத்தினார். 

    இதனால் இந்திய அணி இந்தோனேசியாவை 16-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியதுடன் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றது.
    லீக் சுற்றில் ஜப்பானிடம் 2-5 என்ற கோல் கணக்கில் தோற்றிருந்த இந்திய அணி, இன்று வெற்றி பெற்று பழிதீர்த்துக் கொண்டது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
    ஜகார்த்தா:

    11-வது ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி இந்தோனேசியா தலைநகர் ஜகார்த்தாவில் நடந்து வருகிறது. 

    8 அணிகள் பங்கேற்றுள்ள இந்த போட்டியில் லீக் சுற்று முடிவில் 'ஏ' பிரிவில் ஜப்பான், நடப்பு சாம்பியன் இந்தியா, 'பி' பிரிவில் மலேசியா, தென்கொரியா ஆகிய அணிகள் சூப்பர் 4 எனப்படும் 2-வது சுற்றுக்கு முன்னேறின. இந்த சுற்றில் ஒவ்வொரு அணியும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். இதன் முடிவில் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும். 
     
    இந்நிலையில், சூப்பர் 4 சுற்றின் முதலாவது ஆட்டத்தில் பிரேந்திர லாக்ரா தலைமையிலான இந்திய அணி ஜப்பானை இன்று எதிர்கொண்டது. 

    இதில் 2-1 என்ற கோல் கணக்கில் ஜப்பானை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றது. இந்திய வீரர்கள் மஞ்சித் சிங் மற்றும் பவன் ராஜ்பர் ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர்.
    லீக் சுற்றில் ஜப்பானிடம் தோற்ற இந்திய அணி, நேற்று நடந்த முதல் போட்டியில் வெற்றி பெற்று பழிதீர்த்துக் கொண்டது.
    ஜகார்த்தா:

    11-வது ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி இந்தோனேசியா தலைநகர் ஜகார்த்தாவில் நடந்து வருகிறது. 

    8 அணிகள் பங்கேற்றுள்ள இந்த போட்டியில் லீக் சுற்று முடிவில் 'ஏ' பிரிவில் ஜப்பான், நடப்பு சாம்பியன் இந்தியா, 'பி' பிரிவில் மலேசியா, தென்கொரியா ஆகிய அணிகள் சூப்பர் 4 எனப்படும் 2-வது சுற்றுக்கு முன்னேறின. இந்த சுற்றில் ஒவ்வொரு அணியும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். இதன் முடிவில் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும். 
     
    நேற்று நடந்த சூப்பர் 4 சுற்றின் முதலாவது ஆட்டத்தில் இந்திய அணி ஜப்பானை வென்றது.

    இந்நிலையில், இன்று நடைபெற்ற இரண்டாவது போட்டியில் இந்தியா, மலேசியா அணிகள் மோதின. இதில் 3-3 என்ற கோல் கணக்கில் போட்டி டிராவானது. இந்திய வீரர்கள் விஷ்ணுகாந்த் சிங், எஸ்.வி.சுனில் மற்றும் சஞ்சீப் எக்செஸ் ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர்.
    ஆசிய கோப்பைக்கான ஹாக்கி போட்டியில் நாளை நடைபெறும் மூன்றாம் இடத்துக்கான போட்டியில் இந்தியா, ஜப்பானை எதிர்கொள்கிறது.
    ஜகார்த்தா:

    ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியின் சூப்பர் 4 சுற்றில் இந்திய அணி தென் கொரியாவுடன் இன்று மோதியது.

    இதில், இந்திய அணி 4 - 4 என்ற கோல் கணக்கில் தென் கொரியாவை டிரா செய்தது. இதன்மூலம் இந்திய அணி 5 புள்ளிகள் பெற்றது.

    ஏற்கனவே, தென் கொரியா, மலேசியா ஆகிய அணிகள் 5 புள்ளிகள் பெற்றுள்ளன. கோல்களின் அடிப்படையில் தென் கொரியா, மலேசியா அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளன.

    நடப்பு சாம்பியனான இந்தியா இறுதிப்போட்டிக்கு முன்னேறாததால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
    ×