என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "celebrated"

    • புத்தாண்டு பிறந்ததை முன்னிட்டு முசிறியில் டி.எஸ்.பி தலைமையில் போலீசார் கேக் வெட்டி கொண்டாடினர்
    • புத்தாண்டு தினத்தை முன்னிட்டு நேற்றிரவு முசிறி போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர்.

    முசிறி:

    புத்தாண்டு தினத்தை முன்னிட்டு நேற்றிரவு முசிறி போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். போலீசாரின் ரோந்து பணியினை டிஎஸ்பி யாஸ்மின் ஆய்வு செய்து கொண்டிருந்தார். நள்ளிரவு 12 மணியானதை தொடர்ந்து முசிறி கைக்காட்டி பகுதியில் டிஎஸ்பி யாஸ்மின் கேக் வெட்டினார். பின்னர் கேக் போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் வழங்கப்பட்டது. போலீஸ் இன்ஸ் பெக்டர் செந்தில்குமார், சப்-இன்ஸ்பெக்டர் கருணாநிதி, சக்தி விநாயகம், வடிவேல், நெடுஞ்சாலை போக்குவரத்து இன்ஸ்பெக்டர் அங்கமுத்து, சப்-இன்ஸ்பெக்டர் கோமதி பிரியா பலர் கலந்து கொண்டனர்.


    • சேலம் சிறைக் கண்காணிப்பாளர் தமிழ்ச்செல்வன், சேலம் மத்திய சிறையில் பணிபுரியும் காவலர்களில் இன்று பிறந்தநாள் கொண்டாடும்,
    • கேக் மற்றும் வாழ்த்து அட்டைகளை வழங்கி பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்தார்.

    சேலம்:

    தமிழக சிறைத்துறை இயக்குனராக அமரேஷ் பூஜாரி பொறுப்பேற்ற பின், சிறை துறையில் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். குறிப்பாக சிறை காவலர்கள் நலனில் தனிக்கவனம் செலுத்தி வருகிறார்.

    மேலும், சிறை காவலர்களின் பிறந்தநாளை கொண்டாடும் வகையில், அவர்களுக்கு பிறந்தநாள் கேக் மற்றும் சிறைத்துறை இயக்குனரின் வாழ்த்து அட்டை வழங்குவதற்கு ஏற்பாடு செய்யுமாறு அனைத்து சிறைக் கண்காணிப்பாளர்க ளுக்கும் உத்தரவிட்டுள்ளார்.

    அதன்படி, சேலம் சிறைக் கண்காணிப்பாளர் தமிழ்ச்செல்வன், சேலம் மத்திய சிறையில் பணிபுரியும் காவலர்களில் இன்று பிறந்தநாள் கொண்டாடும், முதல் நிலை காவலர்கள் சுரேஷ் கண்ணன், லட்சுமணன், 2-ம் நிலை காவலர்கள் திருநாவுக்கரசு, பாலசுப்பிரமணியன், சிறப்பு நிலை செவிலியர் உமா மகேஸ்வரி ஆகியோருக்கு கேக் மற்றும் வாழ்த்து அட்டைகளை வழங்கி பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்தார். 

    • ஜெயங்கொண்டத்தில் அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டினர்
    • அ.தி.மு.க.வின் பொது செயலாளராக எடப்பாடி பழனிசாமியை அங்கீகரிக்கப்பட்டதற்கு தொண்டர்கள் வரவேற்பு கோஷங்கள் எழுப்பினர்

    ஜெயங்கொண்டம்:

    எடப்பாடி பழனிச்சாமியை இந்திய தேர்தல் ஆணையம் அ.தி.மு.க.வின் பொது செயலாளராக அங்கீகரித்ததை வரவேற்று தமிழகம் முழுவதும் அ.தி.மு.க.வினர் பட்டாசுகள் வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர். அந்த வகையில் ஜெயங்கொண்டம் நான்கு ரோட்டில் அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. ராம ஜெயலிங்கம் தலைமையில் மாவட்ட துணை செயலாளர் தங்க பிச்சை, நகர செயலாளர் செல்வராஜ், ஒன்றிய செயலாளர்கள் கல்யாண சுந்தரம், விக்ரம பாண்டியன் உள்ளிட்ட மாவட்ட ஒன்றிய நகர நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அ.தி.மு.க.வின் பொது செயலாளராக எடப்பாடி பழனிசாமியை அங்கீகரிக்கப்பட்டதற்கு வரவேற்பு கோஷங்கள் எழுப்பியவாறு பட்டாசுகள் வெடித்து கொண்டாடினர்.


    • புதுவை மாநிலத்தில் சென்டாக் மூலமாக மருத்துவக் கல்லூரி சேர்க்கை நடை பெறும்.
    • பா.ஜனதா கட்சி மாநில தலைவர் சாமிநாதன் தலைமையில் பா.ஜனதாவினர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

    புதுச்சேரி:

    புதுவை மாநிலத்தில் சென்டாக் மூலமாக நடை பெறும் மருத்துவக் கல்லூரி சேர்க்கையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி அரசு பள்ளிகளில் பயின்ற ஏழை-எளிய மாணவர்க ளின் மருத்துவக் கல்வி கனவை நிறைவேற்றிய பிரதமர் நரேந்திர மோடிக்கும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் புதுச்சேரி பா.ஜனதா கட்சி மாநில தலைவர் சாமிநாதன் தலைமையில் பா.ஜனதாவினர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

    இந்நிகழ்ச்சியில் மாநிலத் துணைத் தலைவர் செல்வம், மாநில ஒழுங்கு நடவடிக்கை குழு அமைப்பாளர் இளங்கோ, உழவர்கரை மாவட்ட தலைவர் நாகேஸ்வரன் பட்டியலணி மாநில தலைவர் தமிழ்மாறன் மகளிர் அணி மாநில தலைவி ஜெயலட்சுமி தொழில் துறை பிரிவு மாநில அமைப்பாளர் ஆசீர்வாத் ரமேஷ், வக்கீல் பிரிவு மாவட்ட இணை அமைப்பாளர் கார்த்தி ராஜகணபதி ராஜபவன் தொகுதி தலை வர் நாகராஜ் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட பா.ஜனதா நிர்வா கிகள் கலந்து கொண்டனர்.

    தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டத்தில் கருணாநிதி பிறந்த நாள் விழாவை சிறப்பாக கொண்டாட வேண்டும் என அமைச்சர் கீதாஜீவன் கூறினார்.
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம் கலைஞர் அரங்கில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு அவைத்தலைவர் செல்வராஜ் தலைமை தாங்கினார். 

    மேயர் ஜெகன் பெரியசாமி, மாநகர செயலாளர் ஆனந்தசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளரும், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் கலந்து கொண்டு பேசினார்.

    அப்போது, முத்தமிழ் அறிஞர் கலைஞர் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாட வேண்டும். கலைஞர் சிலை திறக்கப்பட்ட மாவட்டங்கள் பட்டியலில் தூத்துக்குடி 3-வது இடத்தை பிடித்தது. 
    உங்கள் ஒத்துழைப்பால் தான் அது நடந்தது. 

    கைரிக்‌ஷா ஒழிப்பு, பெண்களுக்கு சொத்துரிமை, வேலைவாய்ப்பு உள்ளிட்டவற்றை கொண்டு வந்தது தி.மு.க. அதனை பின்பற்றி மத்திய அரசு சமீபத்தில் அறிவித்து உள்ளது. 

    எல்லாவற்றிலும் முன்னோடியாக இருந்தது தமிழகம்தான். அதற்கு தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, கலைஞர்தான் காரணம். தற்போது முதல்-அமைச்சர் திராவிட மாடல் ஆட்சி நடத்தி வருகிறார். நம் கொள்கைகளை பிற மாநிலங்கள் பின்பற்றி வருகின்றன. அரசின் திட்டங்களை பரப்ப வேண்டும். தெருமுனை பிரசாரங்கள் நடத்த வேண்டும். அனைத்து நிர்வாகிகளும் பிறந்தநாள் விழாவை கொண்டாட வேண்டும் என்று கூறினார்.

    முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதி பிறந்தநாள் வருகிற 3-ந் தேதி கொண்டாடப்படுகிறது. அன்று தி.மு.க. வடக்கு மாவட்டத்துக்கு உட்பட்ட மாவட்ட, மாநகர, நகர, ஒன்றிய, பகுதி, பேரூர், வார்டு மற்றும் கிளைக்கழகங்கள் தோறும் கலைஞர் கருணாநிதி உருவப்படத்தை வைத்து அஞ்சலி செலுத்தியும், தி.மு.க கொடியேற்றியும், இனிப்புகள் வழங்கியும், தி.மு.க. கொள்கை விளக்க பாடல்களை ஒலிபரப்பி, ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட வேண்டும். 

    அன்றைய தினம் வடக்கு மாவட்டத்துக்கு உட்பட்ட அனைத்து முதியோர் இல்லங்கள், அனாதை இல்லங்களுக்கு உணவு வழங்குவது, அரசு ஆஸ்பத்திரிகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிப்பது, நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடுவது என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    கூட்டத்தில் மாவட்ட துணை செயலாளர் ராஜ்மோகன்செல்வின், பொருளாளர் சுசீ.ரவீந்திரன், மகளிர் அணி கஸ்தூரிதங்கம், மகளிர் தொண்டரணி உமாதேவி, இளைஞர் அணி அமைப்பாளர் மதியழகன், மாநகராட்சி மண்டல தலைவர் பாலகுருசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    ×