என் மலர்
நீங்கள் தேடியது "பிளஸ்-1"
- நாமக்கலில் உள்ள தனியார் பள்ளியில் கடந்த டிசம்பர் மாதம் தேசிய அளவிலான விளையாட்டு போட்டி நடைபெற்றது.
- இந்த நிலையில் கோவை மாணவியிடம் நெருங்கி பழகிய லட்சுமணன், அவரை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கினார்.
நாமக்கல்:
நாமக்கலில் உள்ள தனியார் பள்ளியில் கடந்த டிசம்பர் மாதம் தேசிய அளவிலான விளையாட்டு போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.
கோவையில் உள்ள பிரபல பள்ளியில் பிளஸ்-1 படிக்கும் மாணவி ஒருவர் இந்த போட்டியில் பங்கேற்க நாமக்கல் வந்திருந்தார். அதே போட்டியில் பங்கேற்க மாணவர் ஒருவரை தெலுங்கானா மாநிலத்தில் இருந்து பயிற்சியாளர் லல் கோத் லட்சுமணன் (வயது 24) என்பவர் அழைத்து வந்திருந்தார்.
இந்த நிலையில் கோவை மாணவியிடம் நெருங்கி பழகிய லட்சுமணன், அவரை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கினார். இந்த நிலையில் மாணவிக்கு திடீரென உடல்நல குறைவு ஏற்பட்டது. இதையடுத்து பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதித்தபோது அவர் 2 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.
இதை அடுத்து நடந்த சம்பவங்களை கேட்டு அறிந்த பெற்றோர், நாமக்கல் மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இது தொடர்பாக போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்த இன்ஸ்பெக்டர் பூர்ணிமா மற்றும் போலீசார் தெலுங்கானா மாநிலம் சென்று அங்கு உள்ள நல்கெண்டா மாவட்டம் எல்லாபுரம் கிராமத்தில் இருந்த பயிற்சியாளர் லட்சுமணனை கைது செய்தனர். பின்னர் நாமக்கல் அழைத்து வந்த அவரை, கோர்ட்டில் ஆஜர்படுத்தி நாமக்கல் சிறையில் அடைத்தனர்.
- சேலம் மாவட்டத்தில் பிளஸ்-1 தேர்வு இன்று தொடங்கியது. இதில் 36 ஆயிரத்து 143 பேர் எழுதினர்.
- தேர்வு துறையில் வழிகாட்டு நெறிமுறைகளை இறைவணக்கத்தின் போது தேர்வு கட்டுப்பாட்டாளர்கள் மாணவிகளுக்கு தெளிவாக விளக்கினர்.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் பிளஸ்-1 தேர்வு இன்று தொடங்கியது. இதில் 36 ஆயிரத்து 143 பேர் எழுதினர்.
தேர்வு துறையில் வழிகாட்டு நெறிமுறைகளை இறைவணக்கத்தின் போது தேர்வு கட்டுப்பாட்டாளர்கள் மாணவிகளுக்கு தெளிவாக விளக்கினர்.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் இன்று காலை பிளஸ்-1 பொதுத்தேர்வு தொடங்கியது. 155 மையங்களில் 16 ஆயிரத்து 706 மாணவர்கள் 19,437 மாணவிகள் என மொத்தம் 36 ஆயிரத்து 143 பேர் இந்த தேர்வில் பங்கேற்றனர்.
இதற்காக அனைத்து தேர்வு மையங்களிலும் பலத்தை பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. சேலம் கோட்டை மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இன்று காலை முதலே மாணவிகள் ஆர்வத்துடன் வந்து தேர்வில் பங்கேற்றனர்.
முன்னதாக தேர்வு துறையில் வழிகாட்டு நெறிமுறைகளை இறைவணக்கத்தின் போது தேர்வு கட்டுப்பாட்டாளர்கள் மாணவிகளுக்கு தெளிவாக விளக்கினர். தேர்வின்போது ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவுரை வழங்கினர்.
- ராமநாதபுரத்தில் பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டது.
- பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டாம்.
ராமநாதபுரம்
ஏர்வாடி சந்தனக்கூடு திருவிழாவை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத் திற்கு கடந்த 13-ந்தேதி உள்ளூர் விடுமுறை விடப் பட்டிருந்தது. இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் இன்று (24-ந்தேதி) வேலை நாள் என கலெக்டர் விஷ்ணு சந்திரன் அறிவித்தி ருந்தார். அதன்படி இன்று பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு வேலை நாளாகும்.
இந்தநிலையில் மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியர்களுக்கு மண்டபம், திருப்புல்லாணி, ராமநாதபுரம், ஆர்.எஸ்.மங்கலம், திருவாடனை, நயினார்கோயில், போகலூர், பரமக்குடி, கமுதி, முதுகுளத்தூர் மற்றும் கடலாடி ஆகிய11 ஒன்றியங்களில் சி.ஆர்.சி பயிற்சி வகுப்புகள் இன்று நடைபெறுகிறது.
இதனால் பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டாம் என அனைத்து அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் வாயிலாக தெரிவிக்கப் படுகிறது. மேலும் ஒன்று முதல் 10-ம் வகுப்பு வரை வழக்கம் போல் வகுப்புகள் நடக்கும் என தெரிவிக்கப் பட்டது. அதன்படி பள்ளிகள் இன்று செயல்பட்டன.
- கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத்திட்டங்கள் அடங்கிய குரூப்புகள் வேகமாக நிரம்பி வருகின்றன.
- மாணவர் சேர்க்கை தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மதுரை:
தமிழகத்தில் தற்போது பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் முடிந்து பிளஸ்-1 வகுப்புக்கான மாணவர் சேர்க்கை தீவிர மாக நடைபெற்று வருகிறது. மதுரை மாவட்டத்தை பொறுத்த அளவில் 117 அரசு பள்ளிகள், 80-க்கும் மேற்பட்ட அரசு உதவி பெறும் பள்ளிகள், 200-க்கும் மேற்பட்ட மெட்ரிக் பள்ளிகள் இயங்கி வருகின்றன.
இவற்றில் மொத்தமாக அறிவியல் மற்றும் கலைப் பிரிவுகளில் 40 ஆயிரத்திற் கும் மேற்பட்ட இடங்கள் உள்ளன. மேல்நிலைப் படிப்பை முடித்துவிட்டு கல்லூரியில் தொழில் கல்வி, கலை பிரிவில் படிக்க விரும்பும் மாணவர்களுக்கு பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகளே முக்கியமான நுழைவு வாயிலாக இருக்கிறது.
பிளஸ்-1 வகுப்பில் எடுக்கும் பாடத்திட்டங்களே மாணவர்களின் கல்லூரி படிப்பையும் எதிர்காலத்தையும் தீர்மானிப்பவையாக உள்ளன. எனவே 10-ம் வகுப்பு முடித்துவிட்டு பிளஸ்-1 வகுப்பில் சரியான பாடப்பிரிவுகளை தேர்வு செய்வதில் மாணவர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இதுகுறித்து தனியார் பள்ளிகள் தாளாளர் கூட்டமைப்பின் தலைவர் கூறுகையில், தற்போது பிளஸ்-1 வகுப்பில் சேர விரும்பும் மாணவர்கள் பெரும்பாலானோர் கம்ப்யூட்டர் சயின்ஸ், வணிகவியல் படங்களுக்கு முன்னுரிமை அளித்து வருகின்றனர். கூடுமானவரை கணிதம், உயிரியல் பாடங்களை தவிர்க்கின்றனர்.
கலைப் பிரிவில் எந்த பாடத்தை தேர்வு செய்தாலும் அதனுடன் கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடமும் இடம்பெறுவது போல் இருக்கும் குரூப்புகளையே மாணவர்கள் தேர்வு செய்ய விரும்புகின்றனர். மாணவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் பெரும்பாலான தனியார் பள்ளிகளும் பல்வேறு பாடத்திட்டங்களுடன் இணைந்து கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத்தையும் கற்பிக்கும் வகையில் குரூப்புகளை பெற்றுள்ளனர்.
இந்த வகை பாடத்திட்டங்களுக்கு இருக்கும் இடங்கள் வேகமாக நிரம்பி வருகின்றன. ஒரு சில பள்ளிகளில் முற்றிலுமாக அறிவியல் பாடத்திட்டம் என்ற வகையில் உயிரியல் போன்ற பாடத்தை மட்டுமே கொண்ட குரூப்புகளை வைத்துள்ளன. இவற்றில் கணிதம் கற்பிக்கப்படுவது இல்லை.
மாணவர்களின் 10-ம் வகுப்பு மதிப்பெண்களை அடிப்படையாக வைத்து தனியார் மற்றும் அரசு பள்ளிகளில் தேவையான பாடப்பிரிவுகளை வழங்கும் வகையில் மாணவர் சேர்க்கை வேகமாக நடைபெற்று வருகிறது என்றார்.
10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் 350-க்கும் அதிக மான மதிப்பெண்களை பெற்ற மாணவி ஒருவர் கூறுகையில் கணிதம், இயற்பியல், கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆகிய பாடங்கள் அடங்கிய குரூப் பாடத் தையே தேர்வு செய்ய விரும்புகிறேன். எதிர்காலத் தில் ஐ.டி. நிறுவனங்களில் பணிபுரியும் வகையில் பாடத்திட்டத்தை தேர்வு செய்ய விரும்புகிறேன் என்றார்.
அதே நேரத்தில் பெரும் பாலான மாணவர்கள் கணிதம் தவிர்த்த கலைப் பிரிவு படங்களுக்கே முக்கி யத்துவம் அளித்து வருகின்ற னர். நீட் தேர்வின் மீதான தயக்கம் காரணமாக பெரும் பாலான மாணவர்கள் உயிரியல் பாடத்தை தேர்வு செய்வதில் தயக்கம் காட்டு வதாக தனியார் பள்ளிகள் தரப்பில் கூறப்படுகிறது.
அதே நேரத்தில் அரசு பள்ளியில் படிக்க விரும்பும் மாணவர்கள் பரவலாக பல்வேறு குரூப்புகளிலும் சேர்வதில் ஆர்வம் காட்டி வருவதாக அரசு பள்ளி தலைமை ஆசிரியர் ஒருவர் தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், 10-ம் வகுப்பில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் அரசுப் பள்ளிகளில் பல்வேறு குரூப்புகளை தேர்வு செய்ய மாணவர்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.
அரசு பள்ளிகளை பொறுத்தவரை கலைப் பிரிவு, வணிகப்பிரிவு, அறிவியல் பிரிவு என்ற பேதங்கள் இல்லாமல் மாண வர்களின் விருப்பம் மற்றும் மதிப்பெண்களை அடிப்ப டையாக வைத்து மாணவர் சேர்க்கை அளிக்கப்படுகிறது.
அரசு பள்ளிகளில் தமிழ் வழியில் படிக்கும் மாணவர் களுக்கு உயர்கல்வியில் பல்வேறு துறைகளிலும் 7.5 சதவீதம் உள் இட ஒதுக்கீடு இருப்பதால் மாணவர்கள் பாடத்திட்டங்களை தேர்வு செய்வதில் எந்தவித தயக்க மும் இல்லை.
அதே நேரத்தில் மாண வர்கள் உயிரியல் பாடத்தை தவிர்ப்பது குறித்து தனியார் பள்ளி தாளாளர் ஒருவர் கூறுகையில், ஒரு சில மாணவர்களுக்கு உயர் கல்வியில் மருத்துவம் படிக்க விருப்பம் இருந்தா லும் நீட் போன்ற நுழைவுத் தேர்வுகளை எதிர்கொள்வ தில் தயக்கம் உள்ளது. எனவே அவர்கள் பிளஸ்-1 பாடத்தில் உயிரியலை தவிர்த்த படங்களையே எடுக்க விரும்புகின்றனர்.
அரசுப் பள்ளிகளில் வணிகவியல், கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத்திட்டங்கள் அடங்கிய குரூப்புகள் வேகமாக நிரம்பி வருகின்றன. மெட்ரிக் பள்ளிகள் போன்ற தனியார் பள்ளிகளில் கணிதம் அல்லாத உயிரியல், கம்ப்யூட்டர் சயின்ஸ் இணைந்த பாடத்திட்டங்கள் வேகமாக நிரம்பி வருகிறது. கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரி வாக இருந்தாலும், உயிரியல் பிரிவாக இருந்தாலும், கலை பிரிவாக இருந்தாலும் மாணவர்கள் கணிதம் இடம்பெறுவதை தவிர்க் கவே விரும்புகின்றனர்.
கணித பாடத்தில் பிளஸ்-2 தேர்வில் கேட்கப்படும் சிறப்பு கேள்விகளை எதிர்கொள்வதில் மாணவர்கள் மத்தியில் தயக்கம் இருப்பதாக கூறப்படுகிறது. ஆகவே கணிதம் வேண்டாம், உயிரியல் வேண்டாம், கம்ப்யூட்டர் சயின்ஸ் மட்டும் போதும் என்பதே எதிர்காலத்தை தேடும் இன்றைய இளைய தலைமுறையின் எதிர்பார்ப்பாக உள்ளது.