என் மலர்
நீங்கள் தேடியது "Kailasanathar Temple"
- பெரியகுளம் கைலாசபட்டி அருகில் உள்ள பெரியநாயகி உடனுறை கைலாசநாதர் மலைக்கோயிலில் மகா சனி பிரதோஷம் நடைபெற்றது.
- முன்னாள் முதல்-அமைச்சரும், அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் கைலாசநாதர் மலைக்கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.
பெரியகுளம்:
தேனிமாவட்டம் பெரியகுளம் கைலாசபட்டி அருகில் உள்ள பெரியநாயகி உடனுறை கைலாசநாதர் மலைக்கோயிலில் மகா சனி பிரதோஷம் நடைபெற்றது. நந்திகேஷ்வரருக்கும் கைலாசநாதருக்கும் 9 வகையான அபிஷேகம் நடைபெற்றது.
முன்னாள் முதல்-அமைச்சரும், அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் கைலாசநாதர் மலைக்கோவிலில் சாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோவில் நிர்வாகத்தின் சார்பில் பரிவட்டம் கட்டப்பட்டு மரியாதை செய்யப்பட்டது. மேலும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து தரிசனம் செய்தனர்.
பக்தர்களுக்கு தேனி மாவட்ட ஆவின் மண்டல தலைவர் ஓ.ராஜா பிரசாதம் வழங்கினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அன்பர் பணி செய்யும் பராமரிப்பு குழு தலைவர்ஜெயபிரதீப், செயலாளர் சிவக்குமார் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர். மேலும் நாளை கைலாசநாதர் மலைக்கோயிலில் 'கைலாசநாதருக்கு அன்னாபிஷேகமும் பவுர்ணமி கிரிவலமும் சிறப்பு அன்னதானமும் நடைபெறும் என கோவில் நிர்வாகத்தின் சார்பில் தெரிவித்துள்ளனர்.
- வேம்பத்தூர் கைலாசநாதர் கோவிலில் வருடாபிஷேக விழா நடந்தது.
- இரவு பவுர்ணமி திருவிளக்கு பூஜை வழிபாடு நடந்தது.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள வேம்பத்தூரில் அமைந்துள்ள ஆவுடை நாயகி அம்பாள் சமேத கைலாசநாதர் கோவிலில் வருடாபிஷேக விழா நடந்தது.
இந்த கோவிலில் 100 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்தாண்டு குடமுழுக்கு நடைபெற்றது.
இந்த கோவிலில் மட்டும் நவகிரகங்களில்உள்ள புதன் பகவான் சிம்ம வாகனத்தில் காட்சிகொடுப்பதால் தென்மாவட்டங்களில் உள்ள புதன் தலமாக கருதப்படுகிறது. மாசி மகம் தினத்தில் வருடாபிஷேக விழா நடந்தது.
கோவில் முன் மண்டபத்தில் புனித நீர்க் கலசங்கள் வைத்து யாக பூஜைகள் நடந்தன. பூர்ணாகுதி முடிந்து தீபாராதனை காட்டப்பட்டது. கைலாசநாதர் சுவாமிக்கும், ஆவுடை நாயகி அம்மனுக்கும் புனித நீரால் அபிஷேகம் செய்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடந்தன. அதன் பின்னர் கோவில் பரிவார தெய்வங்களுக்கும் பூஜை நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர்.
பின்னர் கோவிலில் நடந்த அன்னதானத்தில் பக்தர்கள் கலந்து கொண்டனர். இரவு பவுர்ணமி திருவிளக்கு பூஜை வழிபாடு நடந்தது.
- விழா தொடர்ந்து 10 நாட்கள் நடக்கிறது.
- 29-ந்தேதி தீர்த்தவாரி நடைபெறுகிறது.
நெல்லை சந்திப்பு கைலாசபுரத்தில் உள்ள கைலாசநாதர் -சவுந்தரவல்லி அம்பாள் கோவிலில் ஆண்டு தோறும் வைகாசி மாதம் திருவிழா நடைபெற்று வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான வைகாசி திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
கொடியேற்றத்தை முன்னிட்டு நேற்று அதிகாலையில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டது. அதை தொடர்ந்து கோவில் முன்பு உள்ள கொடி மரத்தில் கொடியேற்றப்பட்டது. அப்போது அங்கு கூடியிருந்த திரளான பக்தர்கள், பக்தி கோஷங்கள் எழுப்பி சுவாமியை வழிபட்டனர்.
விழா தொடர்ந்து 10 நாட்கள் நடக்கிறது. விழா நாட்களில் தினமும் சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் வீதி உலா நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.
விழாவில் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 28-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. மறுநாள் தீர்த்தவாரியும் நடைபெறுகிறது.
- கைலாசநாதர் கோவிலில் ஆனி திருமஞ்சன விழா விநாயகர் வழிபாட்டுடன் தொடங்கியது.
- ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரி சனம் செய்தனர்.
சென்னிமலை:
சென்னிமலை டவுன் கிழக்கு ராஜா வீதியில் உள்ள கைலாசநாதர் கோவிலில் ஆனி திருமஞ்சன விழா காலை 10 மணிக்கு விநாயகர் வழிபாட்டுடன் தொடங்கியது. தொடர்ந்து கலச ஸ்தாபனம், யாக பூஜை, பூர்ணாஹூதி, தீபாரதனை நடந்தது.
அதைத்தொடர்ந்து உற்சவர் நடராஜ பெருமானு க்கும், தாயார் சிவகாமி அம்மையாருக்கும் தேன், பால், தயிர் உள்பட 16 திரவியங்கள் மூலம் சிறப்பு அபிேஷகம் நடந்தது. அதன் பின்பு அலங்கார பூஜை நடந்தது.
பூஜைகளை சென்னி மலை முருகன் கோவில் ஸ்தானீகம் ராஜசேகர் சிவாச்சாரியார் தலைமை யில் ரவி குருக்கள், செல்வ ரத்தின குருக்கள், பிரபு குருக்கள், மாணிக்கம் குரு க்கள் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.
இந்த ஆனி திருமஞ்சன அபிேஷக விழாவில் ஏராள மான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரி சனம் செய்தனர். கட்டளை தாரர்கள் சார்பாக பக்தர்க ளுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.
- எறும்புகள் நுழைவதற்காக துளைகளை விட்டு செதுக்கிய சிலை.
- கதவுகல் 120 கூரிய உலோகக் குமிழ்கள் அமைக்கப்பட்டுள்ளன.
உலகத்திலேயே மிகச்சிறிய உயிரினமான எறும்புகள் நுழைவதற்காக துளைகளை விட்டு செதுக்கிய சிலை இந்த கோயிலில் மட்டும்தான் உள்ளது.
தொன்று தொட்டு விளங்கிவரும் தமிழ் பாரம்பரியத்தில் கட்டிடக்கலைக்குப் புகழ்பெற்றவர்கள் தமிழர்கள். தமிழர்களின் கட்டிடக்கலைக்கு மிகப்பெரிய சான்றாக தஞ்சை பெரிய கோயில் உள்ளது. அதைப்போலவே அரிய பொக்கிஷமாகத் திகழும் தாரமங்கலம் கயிலாசநாதர் ஆலயம் உள்ளது. தாரமங்கலம் சேலத்தில் இருந்து சுமார் 30 கி.மீ. தொலைவில் உள்ளது.
மேற்கு பார்த்தபடி அமைந்த சிவன் கோயில் இது, இந்த பழைமையான சிவன் கோயில் தமிழர்களின் சிற்பக்கலைகளுக்கு மேலும் ஒரு சான்று எனலாம். இந்த கோயிலில் மூலவர் கயிலாசநாதர், தாயார் கற்பகாம்பாள் அருள் பாலிக்கிறார்கள்.
இக்கோயிலிலுள்ள இறைவனை சந்திரனும், சூரியனும் வந்து தொழுது செல்வதாக கூறப்படுகிறது. இந்த ஊருக்கு தாரமங்கலம் என்று பெயர் வரக்காரணம், சிவபெருமானுக்கும், பார்வதிக்கும் இங்கு திருமணம் நடந்தது என்றும், திருமால் தாரை வார்த்துக் கொடுத்து மணவிழாவினை நடத்தியதால் 'தாரமங்கலம்' என்ற பெயர் வந்ததென்றும் கூறுவர்.
தல வரலாறு:
கிபி 12-ம் நூற்றாண்டில் கெட்டி முதலியார் இங்கு ஆட்சி செய்து வந்தார். அப்போது பசுக்கள் தினந்தோறும் மேய்ச்சலுக்கு போகும்போது ஒரு பசு மட்டும் குறிப்பிட்ட புற்றினில் தினமும் பால் சுரக்கிறது என்று தகவல் வந்தவுடன் அவர் அந்த புற்றை தோண்டி பார்த்தபோது சிவலிங்கம் காணப்பட்டது. அதனால் அவர் அங்கேயே வழிபாடு செய்ததாகவும் பிறகு வந்த மன்னர்கள் அங்கு கோயில் எழுப்பியதாகவும் வரலாற்றில் கூறப்படுகிறது.
கோயிலின் சிறப்புகள்:
இக்கோயிலிலுள்ள இறைவனை சந்திரனும், சூரியனும் வந்து தொழுது செல்வதாகக் கூறப்படுகிறது. ஆண்டுதோறும் உத்தராயண, தட்சணயான புண்ணிய காலங்களில் மாலை வேளையில் சூரியனின் கதிர்களும், சந்திரன் ஒளியும் சிவலிங்கத்தின் மீது படுகின்றன.
அதாவது, சூரிய ஒளி மூலஸ்தான சிவலிங்க மூர்த்தி மேல் விழுவதை சூரிய பூஜை என்று கூறுவர். சூரியனுடைய கதிர்கள் ராஜகோபுர வாயிலின் வழியே வந்து, நந்தி மண்டபத்தின் ஊடே புகுந்து, பின் மூன்று உள்வாயிலையும் கடந்து சிவலிங்கத்தின் மேல் படுவது அபூர்வமாக கருதப்படுகிறது.
சந்திரனுக்கும், சூரியனுக்கும் தாரகாபதி, தாரகன் என்ற பெயர்கள் இருப்பதால் தாரமங்கலம் என்ற பெயர் உண்டாயிற்று என்றும் கூறுவார்கள். கோயிலில் உள்பிரகார தூண்கள் எல்லாவற்றிலும் அற்புதமான சிற்ப வேலைப்பாடு அமைந்த திருவுருவங்கள் காணப்படுகின்றன. கோயில் என்பது இறைவனின் இருப்பிடம் என்பதைத் தாண்டி மக்களின் 'பாதுகாப்பு அரண்' என்னும் கொள்கையில் இந்தக் கோயில் அமைந்துள்ளது.
எதிரி நாட்டு படை தாக்க வரும்போது பொன், பொருள், மக்களைப் பாதுகாக்கும் வீதம் இந்த கோயில் அமைக்கப்பட்டுள்ளது. ராஜகோபுரம் 90 அடி உயரம் கொண்டது. வாசலில் 20 அடி கொண்ட வேங்கை மரத்தினாலான கதவுகள் அமைக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு கதவுகளிலும் 60 கூர்மையான உலோகக் குமிழ்கள் வீதம் மொத்தம் 120 கூரிய உலோகக் குமிழ்கள் அமைக்கப்பட்டுள்ளன. யானை வைத்து கதவுகளை உடைக்கும் அந்த காலத்தில் யானை முட்டி மோதி உடைக்கும் போது குத்தி கிழித்துவிடும்படி நுணுக்கமாக இவை அமைக்கப்பட்டுள்ளன.
சிங்கமுகமும் மனித தலையும் கொண்ட யாழியின் வாயில் உள்ள கல் உருண்டையை நாம் எவ்வாறு வேண்டுமானலும் உருட்டலாம் ஆனால் கல்லை வெளியே எடுக்க முடியாது. கோபுரத்தை அடுத்துள்ள சிவப்பு பவளக்கல் படிகளில் 5 நிமிடம் அமர்ந்தாலே போதும் நம் உடலில் உள்ள வெப்பம் தணிந்து விடும். இந்த சிறப்புகள் தமிழ்நாட்டில் எங்கேயும் கிடையாது.
இந்த கோயிலின் கோபுரங்கள் ஒரு தேர் போலவும் யானைகள் குதிரைகள் கட்டி இழுப்பதுபோலவும் வடிவமைக்கப்பட்டுள்ளது சிறப்பு.
உலகத்திலேயே மிகச்சிறிய உயிரினமான எறும்புகள் நுழைவதற்காக துளைகளை விட்டு செதுக்கிய சிலை இந்த கோயிலில் மட்டும்தான் உள்ளது. எறும்புகள் நுழைந்து வரும் அளவுக்கு மட்டுமே துவாரம் உள்ள ஒரு மனிதனின் முகம் அமைக்கப்பட்டுள்ளது.
ஊர்ந்து கொண்டிருக்கும் எறும்புகள் அந்த சிற்பத்தின் காது வழியாக உள்ளே சென்று பின்னர் மூக்கு வழியாக வெளியே வரலாம். பிறகு தாடியில் உள்ள துவாரங்கள் வழியே உள்ளே நுழைந்து மறுபக்கம் சென்று மற்றொரு காது வழியாக வெளியே செல்லும் வகையில் நுண்ணிய துவாரங்களைக் கொண்டதாகக் கல்லில் சிலை செதுக்கியுள்ளனர்.
வளைந்த வாளுடனும், நீண்ட தாடி, தலைப்பாகையுடனும் படை எடுத்துவரும் மாலிக்கபூரின் வீரர்கள், அதை எதிர்த்து குறுவாள், கேடயத்துடன் எதிர்கொள்ளும் தமிழக மன்னர்களின் போர்க் காட்சிகள் பல இங்கு செதுக்கப்பட்டுள்ளன.
சோழ, பாண்டிய நாடுகளில் இருந்த செல்வங்களை எல்லாம் கொள்ளையிட்ட பின்னர் அவற்றைத் தன்னுடன் வந்திருந்த யானை மற்றும் ஒட்டகங்களின் மீது பொதி மூட்டையாய் ஏற்றிக் கொண்டு திரும்பிச் செல்லும் காட்சியும் சித்திரங்களாக உள்ளது.
தன்னுடைய தாய் நாட்டுக்குத் திரும்பிச் செல்லும் மாலிக்கபூரை இப்பகுதியில் வழிமறித்துத் தாக்குதல் நடத்த கெட்டி முதலியின் வீரர்கள் போர் வியூகம் அமைத்துள்ள காட்சி.
பின்னர், மதுரையில் கொள்ளையடித்த செல்வங்களை எல்லாம் யானை மற்றும் ஒட்டகங்களின் மீது ஏற்றிக் கொண்டு வந்த மாலிக்கபூரின் வீரர்கள் மீது தாக்குதல் நடத்தி, அவர்கள் கொண்டு வந்த செல்வங்களை எல்லாம் கெட்டி முதலியின் வீரர்கள் பறித்துக்கொண்ட பிறகு, முதுகில் சுமையில்லாமல் யானை ஒன்று மாலிக்கபூரோடு செல்வது போன்ற ஒரு காட்சி போன்றவை ஆலயத்தின் சுற்றுச்சுவரில் செதுக்கப்பட்டுள்ளன.
அந்த செல்வங்கள் வைக்கப்பட்டுள்ள இடத்தைக் காட்டும் வகையில் சில குறிப்புகளை இந்த சித்திரங்களில் காட்டியுள்ளனர். வாழ்வில் கட்டாயம் காண வேண்டிய சிற்பக் களஞ்சியமாக இந்த கோயில் அமைந்துள்ளது.
- கும்பாபிஷேகம் மகா கணபதி ஹோமத்துடன் தொடங்கியது.
- கும்பாபிஷேகம் செய்யப்பட்டு பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது.
நம்பியூர்:
நம்பியூர் அருகே உள்ள திட்டமலை பெரியநாயகி சமேத கைலாசநாதர் கோவில் கும்பாபிஷேகம் கடந்த 26-ந் தேததி மகா கணபதி ஹோமத்துடன் தொடங்கியது.
அதனைத்தொடர்ந்து லட்சுமி ஹோமம், நவகிரக ஹோமம், பூர்ணா குதி, வாஸ்து பூஜை திசா ஹோமம், 4 காலை யாக பூஜை, விக்னேஸ்வரா பூஜை, யாகசாலை ப்ரவேசம், உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடைபெற்றது,
அதனைத்தொடர்ந்து முக்கிய நிகழ்வாக மகா கும்பாபிஷேகம் விழா கொண்டாடப்பட்டது.
இதனையொட்டி பட்டாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க மேல தாளங்களுடன் புனித நீரை எடுத்து கோவிலை சுற்றி வலம் வந்து கோபுர உச்சியில் உள்ள கலசத்திற்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
மூல விநாயகர், பாலமுருகன், பெரிய நாயகி சமேத கைலாசநாதர் பெரு மானுக்கு கோவில் கோபுர கலசங்களுக்கு யாகத்தில் வைத்து பூஜை செய்யப்பட்டு புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டு பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது.
பின்னர் கற்பூர ஆராதனை காட்ட ப்பட்டு மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.
விழாவில் ஈரோடு மாவட்டம் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களை ேசர்ந்த பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
- அதிசய நிகழ்வை காண ஏராளமான பக்தர்கள் திரண்டு வந்து தரிசனம் செய்வார்கள்.
- இன்றும், நாளையும் அதிசய நிகழ்வை காண முடியும்.
தாரமங்கலம் கைலாசநாதர் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் 21, 22, 23 ஆகிய தேதிகளில் மாலை வேளையில் சூரியன் அஸ்தமனம் ஆகும் நேரத்தில் சூரியஒளி ராஜகோபுரம் வழியாக வந்து முன் மண்டபத்தில் அமர்ந்திருக்கும் நந்தி சிலையின் இரு கொம்புகளுக்கும் நடுவே ஊடுருவி கருவறையில் வீற்றிருக்கும் சிவலிங்கத்தின் நெற்றியில் முதல் நாள் ஒளிபடும். 2-ம் நாள் மார்பிலும், 3-ம் நாள் பாதத்திலும் விழும் அதிசய நிகழ்வு நடைபெறும்.
இந்த அதிசய நிகழ்வை காண ஏராளமான பக்தர்கள் திரண்டு வந்து தரிசனம் செய்வார்கள். அதன்படி நேற்றும் பக்தர்கள் அதிக அளவில் குவிந்தனர். மாலை 6 மணி அளவில் ராஜகோபுரம் வழியாக உள்ளே வந்த சூரிய ஒளி நந்தி சிலையின் கொம்புகளுக்கு நடுவே ஊடுருவி கோவிலின் நடுவே உள்ள உண்டியல் மீது பட்டு மறைந்தது, பக்தர்கள் அதிக அளவில் கூடி கூட்ட நெரிசலை ஏற்படுத்தியதால் ஒளி உள்ளே செல்ல முடியாமல் மறைந்தது. இதனால் சிவலிங்கத்தின் மீது ஒளி விழும் அதிசய நிகழ்வை காண காத்திருந்த பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
அதனைத் தொடர்ந்து சுவாமிக்கு தீப ஆராதனை காட்டப்பட்டது. பக்தர்கள் அனைவரும் சாமியை வழிபட்டு சென்றனர். தொடர்ந்து இன்றும், நாளையும் இந்த அதிசய நிகழ்வை காண முடியும்.