என் மலர்
நீங்கள் தேடியது "without"
- சேலம், நாமக்கல் உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான மக்கள் வந்து சாமி தரிசனம் செய்வார்கள்.
- இந்து அறநிலைத் துறையால் முத்திரை இடப்பட்ட உண்டியல் துணியால் மூடப்பட்டு இருந்தது. அதன் அருகே முத்திரை இடாத 2 குட உண்டியல், 2 டிரம் உண்டியல் வைக்கப்பட்டு இருந்தது.
நாமக்கல்:
சேலம் நாமக்கல் மாவட்ட எல்லையில் உள்ள|
காளிப்பட்டி கந்தசாமி கோவில் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த கோவிலுக்கு சேலம், நாமக்கல் உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான மக்கள் வந்து சாமி தரிசனம் செய்வார்கள். திருவிழா காலங்களில் ஏராளமான சிறப்பு பஸ்களும் இயக்கப்படும். கோவில் நிர்வாகம், செயல் அலுவலர், பரம்பரை அறங்காவலர்களால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது.
இக்கோவிலில் உண்டி யல் வசூலில் முறைகேடு நடப்பதாக இந்து சமய அறநிலையத் துறை அதி காரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதை அடுத்து நேற்று குமாரபாளையம் சரக இன்ஸ்பெக்டர் வடிவுக்கரசி மற்றும் அதி காரிகள் திடீர் ஆய்வு செய்தனர். அப்போது இந்து அறநிலைத் துறையால் முத்திரை இடப்பட்ட உண்டியல் துணியால் மூடப்பட்டு இருந்தது. அதன் அருகே முத்திரை இடாத 2 குட உண்டியல், 2 டிரம் உண்டியல் வைக்கப்பட்டு இருந்தது.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள், 4 உண்டியலுக்கும் முத்திரை இட்டனர். மேலும் அனுமதி இல்லாமல் உண்டியல் வைத்தது தொடர்பாக துறை ரீதியாக நடவடிக்கை மேற்கொள்ளவும் முடிவு செய்த அதிகாரிகள், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- நால்ரோடு பகுதியில் கடந்த சில நாட்களாக சாலை விரிவாக்க பணி நடந்து வருகிறது.
- வில்லரசம்பட்டி வழியாக சித்தோடு பவானி வழியாக கோபி, சத்தியமங்கலம் செல்கின்றன.
ஈரோடு,
ஈரோடு மாநகர் பகுதி நெருக்கடி மிகுந்த பகுதியாக உள்ளது. இதனால் இங்கு எப்போதுமே வாகன போக்குவரத்து நெரிசல் இருந்து வருகிறது.
ஈரோடு மேட்டூர் ரோடு, பெருந்துறை ரோடு, ஈ.வி. என்.ரோடு போன்ற பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படும். இந்நிலையில் தற்போது மாநகர் பகுதியில் பல்வேறு இடங்களில் வளர்ச்சி திட்ட பணிகளு–க்காக குழிகள் தோண்டப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதனால் மேலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் நீண்ட தூரம் அணிவகுத்து நிற்கின்றன.
இந்நிலையில் வில்லரசம் பட்டி நால்ரோடு பகுதியில் கடந்த சில நாட்களாக சாலை விரிவாக்க பணி நடந்து வருகிறது. வில்லரசம் பட்டி நால்ரோடு பகுதி முக்கிய போக்குவரத்து பகுதியாக காணப்படுகிறது. இந்த பகுதி வழியாக சரக்கு வாகனங்கள் ஈரோடு மாநகர பகுதிக்குள் வராமல் ஈரோடு பெருந்துறை ரோடு நசியனூர் ரோட்டில் இருந்து வில்லரசம்பட்டி வழியாக சித்தோடு பவானி வழியாக கோபி, சத்தியமங்கலம் செல்கின்றன.
இதேபோல் அங்கிருந்து வரும் வாகனங்கள் மாநகர் பகுதிக்குள் செல்லாமல் கனிராவுத்தர் குளம் வழியாக வில்லரசம்பட்டி நால்ரோடு வந்து பெருந்துறை ரோடு வந்து திண்டல் வழியாக பரிந்துரை கோயம்புத்தூர், திருப்பூர் போன்ற பகுதிகளுக்கு சென்று வருகின்றன.
இந்தப் பகுதியில் குடியிருப்புகள் அதிக அளவில் உள்ளன. கடந்த சில நாட்களாக இந்த பகுதியில் சாலை விரிவாக்க பணிகள் நடந்து வருகின்றன. இதற்காக சலையின் இருபுறமும் அகலப்படுத்தப்பட்டு தார்ரோடுகள் போடப்பட்டு வருகின்றன. இதற்காக பல்வேறு இடங்களில் மின்கம்பங்கள் அகற்றப்பட்டு வருகின்றன.
ஆனால் ஒரு சில இடங்களில் மின் கம்பங்கள் அகற்றப்படாமல் அதனை சுற்றி தார்ரோடு போட்டு சென்று உள்ளனர். இதனால் இரவு நேரங்களில் செல்லும் வாகன ஓட்டிகள் இந்த மின்கம்பங்களில் மோதி விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இந்த பகுதியில் இதேபோன்று 4 இடங்களில் மின்கம்பங்களை சுற்றி தார்ரோடுகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த பகுதியில் தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த மின்கம்பங்களால் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளதால் அதனை அகற்ற வேண்டுமென வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் இந்த பகுதியில் மின் வயர்கள் தாழ்வாக செல்வதால் வாகனங்கள் அதில் உரச வாய்ப்புள்ளது. எனவே அந்த மின் வயர்களின் உயரத்தை அதிகரிக்க வேண்டும் எனவும் அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- கல்வி கடன்களை தாமதமின்றி உடனே வழங்க வேண்டும் என்று கலெக்டர் கூறினார்.
- வங்கி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில் கலெக்டர் ஜெயசீலன் தலைமையில், அனைத்து வங்கியாளர்கள் உடனான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் தாட்கோ, மாவட்ட தொழில்மையம், மகளிர் திட்டம் ஆகிய துறை கள் மூலம் பெறப்பட்ட கடன் விண்ணப்பங்களை முறையாக பரிசீலனை செய்து காலதாமதமின்றி கடன் வழங்க வேண்டும் என்றும், கல்விக்கடன் விண்ணப்பங்களை நிராகரிக்காமல் எந்த வித தாமதமின்றி பரிசீலனை செய்து கடன்களை வழங்கிட வேண்டும் எனவும் கலெக்டர் அறிவுறுத்தினார்.
இதில் மாவட்ட தாட்கோ அலுவலகம் மூலம் 7 பயனா ளிகளுக்கு பால் பண்ணை தொழில் புரிவதற்கும், 4 பய னாளிகளுக்கு வெள்ளாடு கள் வாங்குவதற்கும், 7 பய னாளிகளுக்கு டிராக்டர் வாங்குவதற்கும் என மொத்தம் 18 பயனாளி களுக்கு ரூ.21.8 லட்சம் மதிப்பில் சுய தொழில் புரி வதற்கான மானிய தொகைக்கான ஆணை களை கலெக்டர் வழங்கி னார்.
கூட்டத்தில் மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் பாண்டிசெல்வன் மற்றும் வங்கி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.