என் மலர்
நீங்கள் தேடியது "Tank"
- தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது.
- மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை அகற்றிவிட்டு புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்க வேண்டும்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம், திருமருகல் அருகே எரவாஞ்சேரி ஊராட்சி, தேவங்குடியில் சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதி பொதுமக்கள் பயன்பாட்டிற்காக 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டப்பட்டது.
இந்த குடிநீர் தொட்டியில் குழாய்கள் பொருத்தப்பட்டு அதன் மூலம் கீழத்தெரு, நடுத்தெரு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது.
இந்த நிலையில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி தற்போது பழுதடைந்து காணப்படுகிறது.
இதனால் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னர் நேரடியாக மோட்டாரில் இருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்த மோட்டார் குளத்திற்கு அருகில் இருப்பதால் குளத்தில் உள்ள கழிவுநீர் குழாய்களில் வருகிறது.
இதனால் தொற்று நோய் பரவும் அபாய நிலை உள்ளது.
இந்த தொட்டியின் அருகே ஆபத்தை உணராமல் சிறுவர்கள் விளையாடி கொண்டிருக்கின்றனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட துறையினரிடம் பலமுறை புகார்கள் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
எனவே ஆபத்தான நிலையில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை அகற்றிவிட்டு புதிய மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைத்து தர சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் மற்றும் ஊராட்சி நிர்வாகிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- மீனாட்சி அம்மன் கோவிலில் தொட்டியில் இறங்கி பார்வதி யானை உற்சாக குளியல் போட்டது.
- இதற்காக தமிழக அரசு ரூ.23.50 லட்சம் ஒதுக்கீடு செய்தது.
மதுரை
உலகப்புகழ் பெற்ற தலங்களில் மீனாட்சி அம்மன் கோவில் குறிப்பிடத்தக்கது. இந்த கோவிலில் பார்வதி என்ற பெண் யானை உள்ளது.
சில மாதங்களுக்கு முன்பு பார்வதி யானைக்கு கண்களில் வெண்புரை பாதிப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக பார்வை குறைபாடு உருவானது. இதைத்தொடர்ந்து வெளிநாடுகளில் இருந்து கால்நடை சிறப்பு மருத்துவ நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர்.
அவர்கள் பார்வதி யானைக்கு சிகிச்சை அளித்தனர். இதன் விளைவாக கண்புரை நோய் முற்றிலும் குணமாகி, பழைய நிலைக்கு வந்தது. மேலும் பார்வதி யானைக்கு மன அழுத்தத்தை நீக்கும் பயிற்சி தரப்பட வேண்டும் என்று டாக்டர்கள் பரிந்துரைத்தனர்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் யானை நீச்சல் அடித்து குளிக்க வசதியாக, குளியல் தொட்டி (தெப்பம்) கட்டுவது என்று முடிவு செய்யப்பட்டது. இதற்காக தமிழக அரசு ரூ.23.50 லட்சம் ஒதுக்கீடு செய்தது. இதன் அடிப்படையில் மீனாட்சி அம்மன் கோவில் வளா கத்தில் யானை தெப்பம் கட்டப்பட்டது.
அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று காலை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வந்தார். அப்போது பார்வதி யானைக்காக கோவில் வளாகத்தில் கட்டப்பட்டு உள்ள யானை தெப்பம் திறக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கோவில் ஊழியர்கள் பார்வதி யானையை அழைத்து வந்தனர்.
தண்ணீரைப் பார்த்ததும் யானைக்கு உற்சாகம் ஏற்பட்டது. தொட்டியில் இறங்கிய பார்வதி யானை உற்சாகத்தில் அங்கும் இங்கும் ஓடி உற்சாக குளியல் போட்டது. இது பார்வை யாளர்களை கவர்ந்தது.
- ராமநாதபுரம் அருகே இடியும் நிலையில் உள்ள நீர்தேக்க தொட்டியை அகற்ற மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
- புகைப்படங்கள் தாக்கல் செய்யப்பட்டது.
மதுரை
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டிைய சேர்ந்த வழக்கறிஞர் கலந்தர் ஆசிக் அஹமது, மதுைர ஐகோர்ட்டில் ஒரு பொதுநல மனுவை தாக்கல் செய்திருந்தார். அதில் அவர் கூறியிருந்த தாவது:-
திருவாடானை அண்ணா நகர் பகுதியில் 30 ஆண்டு களுக்கு முன்பு 30ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டது.இந்த நீர் தேக்க தொட்டி தற்போது முற்றிலும் சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது.
அதன் தூண்களில் உள்ள கம்பிகள் பலமிழந்து வெளியே தெரிகின்றது.இந்த தொட்டியின் கீழ் பகுதியில் குடியிருப்புகள் உள்ளன. மேலும் எதிரிலேயே பஸ் நிலையம் உள்ளது. பொதுமக்கள் மற்றும் மாணவ-மாணவிகள் அதிகமாக சென்று வரும் பகுதி என்பதால் நீர்நிலை தொட்டி இடிந்து விழுந்தால் உயிர் சேதம் ஏற்பட வாய்ப்புள்ளது.
ஆகவே இதனை அகற்ற வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திடம் மனு கொடுத்தோம். ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே நீதிமன்றம் இந்த நீர் தேக்க தொட்டியை இடித்து அப்புறப்படுத்த உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் சுப்பிரமணியன், விக்டோ ரியா கௌரி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், மேல்நிலை நீர்தேக்க தொட்டியின் தற்போதைய நிலையின் புகைப்படங்கள் தாக்கல் செய்யப்பட்டது.
அரசு தரப்பில் அளித்த பதிலில் இந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் தண்ணீர் ஏற்றப்படுவது இல்லை. அதனால் தொட்டியை இடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் நீர்நிலை தொட்டியின் மோசமான நிலையை கருத்தில் கொண்டு அதனை 6 மாதத்திற்குள் இடித்து அப்புறப்படுத்த வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.
- பழுதடைந்த நிலையில் இருந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இடித்து அகற்றப்பட்டது.
- நாச்சிகுளம் கிராமத்தில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது.
திருத்துறைப்பூண்டி:
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அடுத்த நாச்சிகுளம் கிராமத்திற்கு கலெக்டர் சாருஸ்ரீ ஆய்வு மேற்கொண்டார்.
அவரிடம் நாச்சிகுளம் தவ்ஹீத் ஜமாத் கிளை செயலாளர் அலாவுதீன் தலைமையில் நிர்வாகிகள் கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
உதயமார்தாண்டபுரம் ஊராட்சி அலுவலகம் அருகில் பழுதடைந்த நிலையில் இருந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இடித்து அகற்றப்பட்டது. அதற்கு மாற்றாக நாச்சிகுளம் பகுதிக்கு புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டித்தர வில்லை.
இதனால் நாச்சிகுளம் கிராமத்தில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது.
இந்நிலையில், புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டுவதற்கு அனுமதி கிடைத்ததாக சொல்லப்பட்ட நிலையில் அதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எனவே, கிராமமக்கள் நலனை கருத்தில் கொண்டு நாச்சிக்குளம் பகுதியில் புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
- அங்கு அமைக்கப்பட்டிருந்த குடிநீர் தொட்டியில் எதிர்பாராதவிதமாக விழுந்தது.
- நவீன கருவிகளை கொண்டு பசுமாட்டை உயிருடன் மீட்டனர்.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் அடுத்த நாகூர் காரைக்கால் சாலையில் எப்போதுமே போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும்.
இந்நிலையில் வாகனத்தின் ஒளியை சத்தத்தை கேட்டு மிரண்ட பசுமாடு ஒன்று நாகூர் கொத்தவச்சாவடி அருகே உள்ள வணிக வளாகம் தரைத்தளத்தில் அமைக்கப்பட்டிருந்த குடிநீர் தொட்டியில் எதிர்பா ராத விதமாக விழுந்தது.
தொட்டியில் தண்ணீர் குறைவாக இருந்ததால் அங்கும் இங்கும் சுற்றியபடி கத்தியது.
உடனடியாக இது குறித்து அக்கம் பக்கத்தினர் நாகை தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
மாவட்ட தீயணைப்பு அலுவலர் சரவணபாபு உத்தரவின் பேரில் தீயணைப்பு நிலையத்திலிருந்து வந்திருந்த தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினர் நவீன கருவிகளை கொண்டு பசுமாட்டினை உயிருடன் மீட்டனர்.
- தீவிபத்து நிகழ்ந்தபோது அந்த பெட்ரோல் பங்கில் மற்ற வாகனங்களும் எரிபொருள் நிரப்புவதற்காக நின்று கொண்டிருந்தன.
- விபத்து சம்பவம் புவனகிரி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தெலுங்கானா மாநிலம், புவனகிரி பகுதியில் அமைந்துள்ள நயாரா பெட்ரோல் பங்கில் ஒரு லாரி டீசல் நிரப்ப பெட்ரோல் பங்கிற்குள் நுழைந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக திடீரென லாரியின் டீசல் டேங்க் வெடித்து பெரும் தீ விபத்து ஏற்பட்டது.
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பெட்ரோல் பங்க் ஊழியர் ஒருவர் உடனடியாக பெட்ரோல் பங்கில் இருந்த தீயணைப்பு கருவியை எடுத்து வந்து துரிதமாக செயல்பட்டு, தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டார். இந்த சம்பவம் அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. தற்போது இந்த தீ விபத்து சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. இந்த தீவிபத்து நிகழ்ந்தபோது அந்த பெட்ரோல் பங்கில் மற்ற வாகனங்களும் எரிபொருள் நிரப்புவதற்காக நின்று கொண்டிருந்தன.
லாரி டேங்க் வெடித்து தீப்பிடித்ததும் அங்கிருந்தவர்கள் தங்கள் உயிரை காப்பாற்றிக் கொள்வதற்காக தெறித்து ஓடினர். ஆனால், பெட்ரோல் பங்கின் ஊழியர்களில் ஒருவர் மட்டும் துணிவுடன் முன்வந்து ஓடிச்சென்று தீயணைப்பு கருவியை எடுத்து வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தார். பின்னர் மற்ற ஊழியர்களும் தீயணைப்பு கருவிகளுடன் வந்து தீயை முற்றிலுமாக அணைத்தனர். இந்த விபத்து சம்பவம் புவனகிரி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
సీసీటీవీ ఫుటేజ్.. పెట్రోల్ బంకులో లారీ నుండి చెలరేగిన మంటలు
— Telugu Scribe (@TeluguScribe) May 19, 2024
యాదాద్రి భువనగిరి శివారులో ఉన్న నయారా పెట్రోల్ బంకులో డీజిల్ పోసుకోవడానికి వచ్చిన లారీ డీజిల్ ట్యాంక్ పగిలి చెలరేగిన మంటలు.
అప్రమత్తమై మంటలను ఆర్పిన పెట్రోల్ బంక్ సిబ్బంది. pic.twitter.com/KUfe6Trmkw
சுரண்டை நகராட்சி கூட்டம் தலைவர் வள்ளி முருகன் தலைமையில் நடைபெற்றது. துணைத்தலைவர் சங்கராதேவி முருகேசன், நகராட்சி ஆணையாளர் லெனின் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் சுரண்டை நகராட்சி பகுதியில் 10 இடங்களில் குடிநீர் தொட்டி அமைப்பதற்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதை த்தொடர்ந்து சொத்துவரி குறித்த தீர்மானம் நிறைவேற்ற முன்மொழியப்பட்டது.
அப்போது 8-வது வார்டு கவுன்சிலரும், அ.தி.மு.க. நகர செயலாளருமான சக்திவேல் தலைமையில் துணை தலைவர் சங்கராதேவி முருகேசன், கவுன்சிலர்கள் வசந்தன், பொன் ராணி, மாரியப்பன், ராஜேஷ் மற்றும் புதிய தமிழகம் கட்சியை சேர்ந்த 25-வது வார்டு கவுன்சிலர் வினோத்குமார் ஆகியோர் வெளிநடப்பு செய்தனர்.
அ.தி.மு.க.வினர் வெளிநடப்பை தொடர்ந்து காங்கிரஸ் மற்றும் தி.மு.க. கவுன்சிலர்கள் முன்னிலையில் தொடர்ந்து கூட்டம் நடைபெற்றது.