என் மலர்
நீங்கள் தேடியது "Risk"
- சீமை கருவேல மரங்களால் மழை வளம் கடுமையாக பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
- நிலத்தடி நீரை விஷமாக மாற்றி கரியமில வாயுவை அதிகமாக வெளியிடும் தன்மை கொண்டது.
வெள்ளகோவில் :
திருப்பூர் மாவட்டம் முத்தூர் அருகே மு.வேலாயுதம்பாளையம் கிராம பகுதிகளில் உள்ள நொய்யல் ஆற்றின் இரு கரையோரங்களிலும் ஏராளமான சீமை கருவேல மரங்கள் வளர்ந்து பரந்து, விரிந்து ஓங்கி நின்றபடி உள்ளதால் ஆற்றில் நீர்வரத்து அதிக அளவில் செல்லும் போது நிலத்தடி நீர்மட்டம் குறைகிறது. மேலும் நொய்யல் ஆற்றில் செல்லும் தண்ணீர் தேங்கி மேலே எழும்பி அருகில் உள்ள கிராமங்கள் மற்றும் விவசாய விளை நிலங்களில் புகுந்து உயிர் சேதம், பொருள் சேதம் ஏற்படும் அபாயம் சூழ்நிலை நிலவி வருகிறது.
மேலும் சீமை கருவேல மரங்களின் வேர்கள் மண்ணில் ஆழமாக ஊடுருவி நிலத்தடி நீரை உறிஞ்சி வறட்சியை ஏற்படுத்தும் தன்மை கொண்டது. இந்த மரங்களின் வேர்கள் நிலத்தடி நீரை விஷமாக மாற்றி கரியமில வாயுவை அதிகமாக வெளியிடும் தன்மை கொண்டது. மேலும் காற்று மண்டலம் முழுவதும் நச்சுத்தன்மை ஆக்கி சுற்று பகுதி முழுவதும் பரவும் ஆற்றல் கொண்டது.
நொய்யல் ஆற்றின் இரு கரையோரங்களிலும் வளர்ந்து உள்ள சீமை கருவேல மரங்களால் மழை வளம் கடுமையாக பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக துரித நடவடிக்கை மேற்கொண்டு சீமை கருவேல மரங்களை முற்றிலும் வெட்டி அகற்ற உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்என்று விவசாயிகள், கிராம பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- பணிக்காக கொண்டு வரப்பட்ட கற்கள் சாலையோரம் கொட்டி வைக்கப்பட்டுள்ளன.
- கல், மண் குவியலை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
ஊட்டி,
நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசன் துவங்கியுள்ளதால் சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக காணப்படுகிறது.
ஊட்டியில் உள்ளூர் மற்றும் வெளியூர் வாகனங்களுக்கு வாகனங்களை நிறுத்த இடம் கிடைக்காமல் திண்டாடி வருகின்றனர். இதனால் ஊட்டி நகரையே பலமுறை சுற்றி வரும் நிலையே காணப்படுகிறது.
இந்த நிலையில் கோடப்பமந்து கால்வாயின் தடுப்பு சுவர்கள் கட்டும் பணி முடிந்த பின்பும், பணிக்காக கொண்டு வரப்பட்ட கற்கள் மற்றும் கட்டுமான பொருட்கள் சாலையோரம் கொட்டி வைக்கப்பட்டுள்ளன.
இதனால் அந்த சாலையில் வாகனங்களை நிறுத்த முடியாமலும், வாகனங்கள் செல்வதற்கும் சிரமம் அடைந்து வருகிறார்கள். எனவே நகராட்சி நிர்வாகம் உடனடியாக இதில் தலையீட்டு உரிய நடவடிக்கை எடுத்து அங்கு இருக்கும் கல், மண் குவியலை அகற்ற வேண்டும் என பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- கடலூர் மாநகராட்சி சார்பில் பொருட்கள் ஏற்றி வரும் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகின்றது.
- தற்போது கட்டணம் வசூலிக்க வரும் நபர்கள் பெரும்பாலானோர் வாலிபர்களாக உள்ளனர்.
கடலூர்:
கடலூர் மாநகரில் மஞ்சக்குப்பம், திருப்பாதி ரிப்புலியூர், முதுநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வணிக வளாகங்கள் உள்ளிட்ட ஏராளமான கடைகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு தினந்தோறும் 100-க்கண க்கான வாகனங்கள் மூலமாக பல்வேறு பொரு ட்கள் கொண்டு வரப்பட்டு, கடைகளில் பொருட்களை ஏற்றி, இறக்கி வருகின்றனர் கடலூர் மாநகராட்சி சார்பில் பொருட்கள் ஏற்றி வரும் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகின்றது. தற்போது கட்டணம் வசூலிக்க வரும் நபர்கள் பெரும்பாலானோர் வாலிபர்களாக உள்ளனர். 4 மணி நேரமும் வாகனங்கள் மூலம் பொருட்கள் கொண்டுவரும் நிலையில் பணம் வசூலிக்கும் வாலிபர்கள் வாகன டிரைவர்களிடம் சீட்டு வழங்கி அதற்கான கட்டண தொகை வசூல் செய்கின்றனர். கட்டணம் வசூல் செய்யும் வாலிபர்கள் அடாவடியாக வாகன ஓட்டுனர் மற்றும் கடை உரிமையாளர்களிடம் பணம் வசூல் செய்து வருவதாக புகார் எழுந்துள்ளது. இதன் காரணமாக அடா வடியாக வசூல் செய்யும் வாலிபர்களிடம் ஏன்? இது போன்ற நடவடிக்கையில் ஈடுபடுகிறீர்கள், பணம் கேட்டால் கண்டிப்பாக வழங்கப்படும். ஆனால் சில நேரங்களில் வேலை பளு காரணமாக சில நிமிடங்கள் காலதாமதமானால் இது போன்ற அடாவடியாக வசூல் செய்வதால் அனைவருக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது என தெரிவித்துள்ளனர்.
ஆனால் அவர்கள் எதை பற்றியும் கவலைப்படாமல் தொ டர்ந்து அடாவடிப்போக்கில் கட்டண வசூல் செய்வதால் நாளடைவில் பெரிய அளவிலான சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏற்படக்கூடிய அபாயம் ஏற்பட்டு உள்ளது. இரு தரப்பினருக்குள் வாக்குவாதம் ஏற்படும் சமயத்தில் தகராறாக மாறி கடும் பாதிப்பை ஏற்படும் நிலையும் உருவாக்கி வருகின்றது. இது சம்பந்தமாக போலீசாரும், மாநகராட்சி அதிகாரிகளும் தனி கவனம் செலுத்தி, கட்டணம் வசூல் செய்யும் நபர்களிடம் ஒழுங்கான முறையில் பணம் வசூல் செய்யும் நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் என கடும் எச்சரிக்கை விடுத்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வணிகர்களும் வாகன ஓட்டுனர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.
மேலும், இது போன்ற நடவடிக்கையில் தொடர்ந்து அதிகரித்தால் வணிகர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகப் பெரிய போராட்டத்தை கையில் எடுக்கும் நிலை ஏற்படாத வகையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
- பன்றிகள் அதிக அளவில் சுற்றி திரிவதால் பெருமளவில் சுகாதாரக் கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் இருந்து வந்தது.
- இந்த நடவடிக்கை தொடரும் என நகராட்சி நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
கடலூர்:
பண்ருட்டி நகராட்சியில் உள்ள 33 வார்டுகளில் பன்றிகள் அதிக அளவில் சுற்றி திரிவதால் பெருமளவில் சுகாதாரக் கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் இருந்து வந்தது. இது குறித்து பொதுமக்கள் நகர மன்ற தலைவர் ராஜேந்திரன், நகராட்சி ஆணையர்,மகேஸ்வரி ஆகியோரிடம் ஈகார் கொடுத்தனர்.
இதனை தொடர்ந்து பண்ருட்டி நகராட்சி சார்பாக இன்று காலை முதல் தெருகளில் சுற்றி திரிந்த 20-க்கும் மேற்பட்ட பன்றிகளை உயிருடன் பிடித்து அருகிலிருந்த வனத்துறைக்கு சொந்தமான சமூக காட்டில் விட்டனர் இந்த நடவடிக்கை தொடரும் என நகராட்சி நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
- கழிவு நீர் ரோட்டில் தேங்கி, துர்நாற்றம் வீசுவதால் கொசு உற்பத்தியாகிறது.
- பலருக்கு மலேரியா போன்ற மற்றும் தொற்று நோய் ஏற்பட்டு அவதிக்குள்ளாகிறார்கள்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள வண்டிபாளையம் கிராமத்தில் வசிக்கும் 500-க்கும் மேற்பட்ட குடும்ப ங்கள் உள்ளன. இவர்கள் அனைவரும் விவசாயிகள். வண்டிபாளையம் கிராமத்தில் விநாயகர் கோவில் தெருவில் வசிப்ப வர்கள் தினந்தோறும் விளைநிலத்திற்கு செல்வது வழக்கம் அந்த பகுதி விநாயகர் கோவில் தெருவில் கழிவுநீர் வாய்க்கால் இல்லை. எனவே கழிவு நீர் ரோட்டில் தேங்கி, துர்நாற்றம் வீசுவதால் கொசு உற்பத்தியாகிறது. மேலும் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது.
இதனால் அந்த கிராமத்தில் வசிக்கும் பலருக்கு மலேரியா போன்ற மற்றும் தொற்று நோய் ஏற்பட்டு அவதிக்குள்ளாகிறார்கள். எனவே மரக்காணம் மாவட்ட கலெக்டர் நேரில் சென்று பார்வையிட்டு உடனடியாக அந்த பகுதியை சீரமைக்க கிராம பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- மதுரையில் சாலை விதிகளை பின்பற்றாத ஷேர் ஆட்டோக்களால் விபத்து ஏற்படும் அபாயம் ஏற்படுகிறது.
- போக்குவரத்திற்கும் இடையூறு செய்கின்றனர்.
மதுரை
மதுரை மாநகரில் பொது போக்குவரத்துக்கு அரசு பஸ்கள் மட்டுமே இயங்கி வருகின்றன. மதுரை மாநகரில் மக்கள் தொகை அதிகரித்து விட்டதால் மாற்று போக்கு வரத்துக்கான தேவை அதிகளவில் உள்ளது. இதனால் பொது மக்கள் ஷேர் ஆட்டோக்களை அதிகளவில் பயன்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.
மதுரை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் மட்டும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஷேர் ஆட்டோக்கள் இயக்கப்பட்டு வருகிறது. ஆனால் தற்போது விதிமீறல்கள் அதிகரித்து வருகின்றன. இதனால் ஷேர் ஆட்டோக்களில் செல்வோர் ஒருவித அச்சத்துடன் செல்ல வேண்டி உள்ளது. நினைத்த இடத்தில் இறங்கிக் கொள்ளலாம் என்ற வசதி இருப்பதால் தான் பொதுமக்களும் ஷேர் ஆட்டோக்கள் நாடி செல்கின்றனர். இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
மதுரை நகரில் குறுகிய அளவிலான சாலைகளே அதிகளவில் உள்ளது. இதில் ஷேர் ஆட்டோக்கள் நடுவழியில் நிறுத்தி பயணிகளை ஏற்றி, இறக்குவதால் கடும் போக்கு வரத்து பாதிப்பு ஏற்படுகிறது.இதனால் வாகன ஓட்டிகளுக்கு சிரமம் ஏற்படுவதுடன் விபத்து அபாயமும் உள்ளது.
குறிப்பாக ஷேர் ஆட்டோக் களில் அரசு நிர்ணயித்த அளவைக் காட்டிலும் அதிகளவில் ஆட்களை ஏற்றிச் செல்வதை சர்வசாதாரணமாக காணலாம். போக்குவரத்து போலீசார் இதனை கண்டு கொள்வதில்லை. சாலையில் சென்று கொண்டிருக்கும் போது யாரேனும் பயணி அழைத்தால் ஷேர் ஆட்டோ ஓட்டுநர்கள் எந்தவித சிக்னலும் இல்லாமல் நிறுத்தி அந்தப் பயணியை ஏற்றுகின்றனர். இதனால் பின்னால் வரும் வாகன ஓட்டிகள் மோதி விபத்தில் சிக்குவது நடக்கிறது.
இதுகுறித்து பொதுமக்கள் தட்டிக்கேட்டால் ஷேர் ஆட்டோ டிரைவர்கள் தகராறு செய்வதும் வாடிக்கையாக உள்ளது. அத்துடன் பல இடங்களில் பயணிகள் இறங்கிய பின்பு கூடுதல் கட்டணம் கேட்டு வாக்கு வாதத்தில் ஈடுபடுகின்றனர்.
போக்குவரத்து நெரிசல் மிகுந்த பெரியார் பஸ் நிலையம், காளவாசல், சிம்மக்கல், கோரிப்பாளையம், அண்ணா நிலையம், கீழவாசல், பைபாஸ் ரோடு, குரு தியேட்டர், தெற்குவாசல், காமராஜர் சாலை, பரவை உள்ளிட்ட பகுதிகளில் பஸ் நிறுத்தங்களி லேயே நெடுநேரம் ஷேர் ஆட்டோக்களை நிறுத்தி பயணி களுக்கும் போக்குவரத்திற்கும் இடையூறு செய்கின்றனர்.
மேலும் சாலை குறுகலாக உள்ள வில்லாபுரம், அவனியாபுரம் சிக்கந்தர் சாவடி, முடக்குசாலை, தெப்பக்குளம் போன்ற பகுதிகளில் ஷேர் ஆட்டோக்களால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. பல இடங்களில் போக்கு வரத்து கண்காணிப்பு மையங்களில் இருந்து போலீசார் ஒலிபெருக்கி மூலம் எச்சரித்தும், அறிவுறுத்தியும் அதனை கண்டு கொள்வதில்லை.
தற்போது பெரும்பாலான ஷேர் ஆட்டோக்களில் இளம் வயதினரே டிரைவராக உள்ளனர். அவர்கள் விதி முறைகள் குறித்த எவ்வித அக்கறையோ, அச்சமோ இல்லாமல் தாறுமாறாக ஆட்டோக்களை இயக்குகின்றனர். மேலும் பயணிகளை ஏற்றுவதற்காக ஒருவரை ஒருவர் முந்திச் செல்கின்றனர்.
அதிகளவில் பயணிகள் இருக்கும் போது ஆட்டோக்கள் கவிழ்ந்து விபத்துகள் ஏற்படுகின்றன. போக்குவரத்து நெரிசல் மிக்க காலை, மாலை வேளைகளில் ஷேர் ஆட்டோக்கள் சாலையை மறித்துச் செல்லும் போது கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. சில நேரங்களில் சிறுவர்கள் ஷேர் ஆட்டோக்களை இயக்கி சவாரி செல்வதாக புகார் எழுந்துள்ளன. எனவே இதுபோன்ற விதிமீறல்களில் ஈடுபடும் ஷேர் ஆட்டோ டிரைவர்கள் மீது கடும் நடவடிக்ைக எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. மேலும் இளம் டிரைவர்களுக்கு போக்குவரத்து விதிகள், பயணிகளின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- சிறுவாணி அணையின் ஒட்டுமொத்த உயரம் 50 அடி ஆகும்.
- 15 நாளுக்கு மட்டுமே அணையில் நீர் இருப்பு உள்ளது
கோவை,
கோவை மாவட்டத்தில் உள்ள சிறுவாணி அணைக்கட்டு, மாநகருக்கான குடிநீர்ஆதாரமாக உள்ளது. இந்த அணையின் ஒட்டுமொத்த உயரம் 50 அடி ஆகும். இதில் 45 அடிகள் வரை தண்ணீர் தேக்க இயலும்.
சிறுவாணி அணைக்கட்டு பகுதியில் கோவை கூட்டுகுடிநீர் திட்டத்தின்கீழ் உறைகிணறு அமைக்கப்பட்டு உள்ளது. அங்கு 4 வால்வுகள் பொருத்தி தண்ணீர் உறிஞ்சி எடுக்கப்படுகிறது. அதன்பிறகு இந்த தண்ணீர் பெரிய குழாய்கள் மூலம், கோவைக்கு கொண்டு வரப்பட்டு, மாநகரம் முழுவதும் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கோவை மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக பெரிய அளவில் மழை இல்லை. எனவே சிறுவாணி அணை படிப்படியாக வறண்டு வருகிறது. அங்கு தற்போது அரை அடி என்ற நிலையில்தான் தண்ணீர் உள்ளது. இதன்காரணமாக அணைக்கட்டின் பெரும்பாலான பகுதிகள், தண்ணீரின்றி பாளம் பாளமாக வெடித்து காணப்படுகிறது.
சிறுவாணி அணைக்கட்டு பகுதியில் கோவை மாவட்டத்துக்கான கூட்டுகுடிநீர்திட்டத்தின்கீழ் அமைக்கப்பட்டு உள்ள உறைகிணற்றில் 4 வால்வுகள் உண்டு. இதில் 3 தண்ணீர் மட்டத்துக்கு மேல் தெரிகிறது. எனவே மீதம் உள்ள ஒரு வால்வு மூலம் மட்டுமே தண்ணீர் உறிஞ்சி எடுக்கப்பட்டு வருகிறது. இது 15 நாட்கள் வரை தாங்கும்.
சிறுவாணி அணைக்கட்டு பகுதியில் கனமழை பெய்யவில்லை என்றால் ஒட்டுமொத்த அணையும் வறண்டு, கோவையில் குடிதண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.
இதுகுறித்து கோவை மாநகர குடிநீர் அதிகாரிகள் கூறுகையில், சிறுவாணி அணைக்கட்டு பகுதியில் பெரிய அளவில் மழை இல்லை. எனவே அங்கு தண்ணீர் இருப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. நிலைமை இப்படியே போனால் 15 நாட்களுக்கு பிறகு உறைகிணற்றில் தண்ணீர் இருக்காது. கேரளா மாநிலத்தில் தற்போது தென்மேற்கு பருவமழை தொடங்கிவிட்டது. எனவே சிறுவாணி அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரிக்கும். அதுவும்தவிர நீர்ப்பிடிப்பு பகுதிகளில் சாரல் மழை பெய்து வருகிறது. அங்கு இன்னும் ஒருசில நாட்களில் பருவமழை தொடங்கி விடும். எனவே சிறுவாணி அணையில் நீர்மட்டம் மேலும் அதிகரித்து, குடிதண்ணீர் பிரச்சினை நீங்க வாய்ப்பு உள்ளது என்று நம்பிக்கை தெரிவித்து உள்ளனர்.
+2
- ஆற்றுப்பாலம் முறையாக பராமரிக்கப்படாத நிலையில் உள்ளது.
- இரவு நேரங்களில் வாகனங்களில் செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் சுற்றுவட்டாரப் பகுதிகளின் குடிநீர் ஆதாரமாகவும், பாசன ஆதாரமாகவும் அமராவதி ஆறு உள்ளது. மடத்துக்குளம் பகுதியில் திருப்பூர், திண்டுக்கல் மாவட்டங்களின் எல்லைக்கோடு போல இந்த ஆறு அமைந்துள்ளது. கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் இரு மாவட்டங்களையும் இணைக்கும் வகையில் ஆற்றின் மேல் பழமையான உயர் மட்டப் பாலம் அமைந்துள்ளது.
தினசரி நூற்றுக்கணக்கான கனரக வாகனங்கள் கடந்து செல்லும் இந்த ஆற்றுப்பாலம் முறையாக பராமரிக்கப்படாத நிலையில் உள்ளதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.பக்கவாட்டு சுவர்களில் மரங்கள் முளைத்தும், தரைத்தளத்தில் புற்கள் வளர்ந்தும் உள்ளதால் பாலத்தின் உறுதித்தன்மை பாதிக்கும் அபாயம் உள்ளதாக தொடர்ந்து புகார் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் பல மாதங்களுக்கு முன் நடந்த வாகன விபத்தால் பாலத்தின் ஒரு பகுதியில் பக்கவாட்டு சுவர் பலத்த சேதமடைந்துள்ளது. இந்த பக்கவாட்டு சுவர்களில் சாய்ந்து நின்று சில நேரங்களில் சற்று தொலைவில் செல்லும் ரெயில், சலசலத்து ஓடும் ஆறு என இயற்கையை பலரும் ரசிக்கின்றனர்.
அதுபோன்ற சமயங்களில் பக்கவாட்டு சுவர் முழுமையாக உடைந்தால் பொதுமக்கள் ஆற்றில் விழும் அபாயம் உள்ளது. எனவே பாலத்தின் சேதமடைந்த பக்கவாட்டு சுவரை சீரமைக்கவும், பாலத்தை முழுமையாக பராமரிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் இந்த பாலத்தில் மின் விளக்குகள் இல்லாத நிலையில் இரவு நேரத்தில் பணி முடிந்து திரும்பும் தொழிலாளர்களும் பாதிப்புக்குள்ளாகின்றனர்.
எனவே பாலத்தின் மீது மின் விளக்குகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.
தடுப்பு சுவர்
குடிமங்கலம் ஒன்றியத்தில் முக்கிய நீர் ஆதாரமாக விளங்குவது உப்பாறு ஓடை. குடிமங்கலம் ஒன்றியத்தில் உள்ள பெரும்பாலான ஊராட்சிகளின் வழியாகவே உப்பாறு ஓடைசெல்கிறது. உப்பாறு ஓடடையின் வழியாக தண்ணீர் செல்லும் போது குடிமங்கலம் பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் உயர்கிறது. இதன் காரணமாக விவசாயிகள் கிணற்றுப்பாசனம் மூலம் காய்கறி சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர். உப்பாறு ஓடை வழியாக செல்லும் தண்ணீர் கடைசியாக உப்பாறு அணைக்கு செல்கிறது. உப்பாறு அணை மூலம் சுமார் 3 ஆயிரம் ஏக்கர் நிலம் நேரடியாக பாசன வசதி பெறுகிறது. இதுதவிர ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் மறைமுகமாகவும் பாசன வசதி பெறுகிறது.உப்பாறு ஓடையின் குறுக்கே பல இடங்களில் தரை பாலமும் உயர் மட்ட பாலமும் கட்டப்பட்டுள்ளன.
உயர்மட்ட பாலம் கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆன நிலையில் தடுப்பு சுவர் உடைந்து காணப்படுகிறது. மேலும் பாலத்துக்கு அருகில் எந்த அறிவிப்பு பலகையும் வைக்கப்படவில்லை. இரவு நேரங்களில் வாகனங்களில் செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். மழைக்காலங்களில் பாலத்தின் இரு புறங்களிலும் கரைப்பகுதியில் மழை நீர் தேங்கி விடுகிறது.இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். பாலத்தின் தடுப்பு சுவரை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் பாலத்தின் அடிப்பகுதியில் குப்பை கழிவுகள் கொட்டப்படுவதால் தேங்கி கிடக்கிறது.எனவே நீர் வழித்தடத்தில் கொட்டப்பட்டுள்ள கழிவுகளையும் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
கான்கிரீட் பாலம்
குண்டடம் அடுத்துள்ள மேட்டுக்கடையிலிருந்து கோவை மாவட்டம் ஜல்லிபட்டி செல்லும் மெயின் ரோட்டில் அரசு மற்றும் தனியார் பஸ்கள், பள்ளி, கல்லூரி பஸ்கள், கார்கள், இருசக்கர வாகனங்கள் என தினசரி நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. திருப்பூரிலிருந்து பொங்கலூர், மேட்டுக்கடை வழியாக மருதூர், பொன்னாபுரம் பகுதிக்கு செல்லவும் இந்த ரோடுதான் முக்கியமாக விளங்கி வருகிறது. இதில் தும்பலப்பட்டியை ஒட்டி பாயும் ஓடையின் குறுக்கே தரைப்பாலம் உள்ளது. தரைப்பாலத்தில் வேறெங்கும்இல்லாதவிதமாக 2 ஓடைகள் இணைகின்றன. மழைக்காலங்களில் ஓடைகளில் தண்ணீர் பாயும்போது, தரைப்பாலத்தில் பெருக்கெடுத்து செல்வதால் போக்குவரத்து வெகுவாகப் பாதிக்கப்படுகிறது. இதனால் கிராமங்களுக்கு செல்ல முடியாமல் பொதுமக்கள் பாதிக்கின்றனர். மேலும் குறைந்த அளவு தண்ணீர் செல்லும்போது பாலத்தில் பாசி பிடித்து இருசக்கர வாகனஓட்டிகள் அடிக்கடி கீழே விழுந்து செல்லும் நிலையும் உள்ளது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பாலத்தின் மீது தார்ஜல்லி போட்டுள்ளனர். மேலும் பாலத்தின் வடக்கு பகுதியில் குறுகிய வளைவு இருப்பதால் எதிரே வரும் வாகனங்கள் தெரியாமல் வாகனங்கள் விபத்துக்குள்ளாவதும் அவ்வப்போது நடந்து வருகிறது. எனவே நெடுஞ்சாலைத்துறை உயர் அதிகாரிகள் மேற்கண்ட இடத்தை நேரில் ஆய்வு செய்து ரோட்டின் வளைவுகளை சரிசெய்து, உயர்மட்ட கான்கிரீட் பாலம் அமைத்து தரவேண்டும் என 30-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- நெடுஞ்சாலையில் காலை, மாலை வேளைகளில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது
- போக்குவரத்து சிக்னலை சீரமைத்து இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
கருமத்தம்பட்டி,
கருமத்தம்பட்டி, சோமனூர் நெடுஞ்சாலையில் காலை, மாலை வேளைகளில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது. இதனால் அங்கு தொடர்ந்து சிறு சிறு விபத்துகள் நடந்து வருகின்றன.
எனவே கிருஷ்ணாபுரம், கொங்கு வேளாளர் திருமண மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து கட்டுப்பாடு சிக்னல் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
அதன்படி கருமத்தம்பட்டி பகுதியில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் போக்குவரத்து சிக்னல் அமைக்கப்பட்டது.
ஆனால் அவை கடந்த பல மாதங்களாக செயல்படாத நிலையில் உள்ளது.இதனால் அந்த பகுதிகளில் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது.
எனவே கருமத்தம்பட்டி பகுதியில் உள்ள போக்குவரத்து சிக்னலை சீரமைத்து இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
- பள்ளி குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
- போலீசார் நடைமேடையில் வாகனம் நிறுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை.
கோத்தகிரி,
கோத்தகிரி காந்தி மைதானம்-ராம்சந்த் ரோட்டில் இடது புறம் லாரிகள் நிறுத்தும் இடமாகவும், வலது பக்கம் நடைமேடையும் உள்ளது. இது மிகவும் குறுகலான சாலை. எனவே வாகனங்கள் சிரமப்பட்டு சென்று வருகின்றன.
காந்தி மைதானம்-ராம்சந்த் சாலையில் காலை, மாலை வேளைகளில் போக்குவரத்து அதிகமாக இருக்கும். இந்த நிலையில் அந்த பகுதியில் வசிக்கும் பலர் நடை மேடையில் வாகனங்களை நிறுத்தி செல்கின்றனர்.
இதனால் அங்கு பொதுமக்கள் நடக்க முடியாமல் நடுரோட்டில் இறங்கி செல்ல வேண்டி உள்ளது. எனவே பள்ளி குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
எனவே போக்குவரத்து போலீசார் இந்த விஷயத்தில் உடனடியாக தலையிட்டு நடைமேடையில் வாகனம் நிறுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
- நீரோடையில் கிடக்கும் குப்பைகள் மூலம் நோய் பரவும் அபாயம்
- குப்பை கொட்டுவோர் மீது அபராதம் விதிக்க கோரிக்கை
கோவை,
கோவை மாநகரை சுற்றியுள்ள பகுதிகளில் ஆங்காங்கே நொய்யல் ஆறு மூலம் ஆங்காங்கே நீரோடைகள் ஓடி கொண்டிருக்கிறது.
இந்நிலையில் குடியிருப்புவாசிகள் ஒரு சிலர் இந்த நீரோடைகளில், குப்பை கழிவுகளை கொட்டுவதால், நீரோட்டம் தடைபடுவது மட்டுமின்றி, நீர் மாசடைந்து, துர்நாற்றம் வீசுகிறது. அத்துடன் நோய் பரவுவதற்கான வாய்ப்புகளும் அதிகமாக உள்ளது.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-
நொய்யல் ஆறு என்பது கோவைக்கு கிடைத்த வரப்பிரசாதம். இத்தகைய நொய்யல் ஆறு கோவை மாநகரம் முழுவதும் ஆங்காங்கே நீர் ஓடைகள் மூலம் ஓடிக்கொண்டிருக்கிறது.
பொதுமக்கள் செய்யும் தவறுகளால் இந்த நொய்யல் ஆறு மாசடைந்து காணப்படுகிறது.நகர வீதிகளில் ஆங்காங்கே குப்பை தொட்டிகள் வைத்திருந்தாலும் குப்பை தொட்டியில் குப்பைைய போடாமல் கீழே போடுவார்கள்.
தற்போது குப்பைகளை நீரோடைகளில் கொட்ட தொடங்கி உள்ளனர்.
நீரோடை என்பதால் தண்ணீரில் அடித்து சென்று விடும் என நினைத்து குப்பைகளை கொட்டுகின்றனர். ஆனால் மேலும், மேலும் கொட்டப்படும் குப்பைகளால் அங்கு நீரோடை இருக்கிறதா என்ற கேள்வியே எல்லோருக்கும் எழும்.
அந்தளவுக்கு அங்கு குப்பைகளை தேக்கி நீர் செல்ல முடியாத அளவுக்கு மாறிவிடுகிறது.
மேலும் குப்பைகள் மக்கி அதில் இருந்து ஒரு சில பாக்டீரியாக்களும் வெளியாகின்றன. இவை துர்நாற்றம் ஏற்படுத்துவதோடும் பொதுமக்களும் சில பல நோய்களையும் உருவாக்கி வருகிறது.
குறிப்பாக கோவையில் மதுக்கரை மார்க்கெட் அருகே ஒரு நீரோடை செல்கிறது. அந்த நீரோடையில் அங்கு குடியிருப்பவர்கள் குப்பைகளை கொட்ட ஆரம்பித்தனர். தற்போது அங்கு நீரோட்டம் தடைபட்டு குப்பைகள் மலைபோல் குவிந்து கிடக்கிறது.
இவர்கள் மட்டுமின்றி மற்ற பகுதிகளை சேர்ந்தவர்களும் இரவு நேரங்களில் வந்து குப்பையை கொட்டி செல்கிறார்கள். இதனால் அங்கு துர்நாற்றம் வீசுகிறது.
3 சாலைகள் சந்திக்கும் முக்கிய பகுதியாக இருக்கும் இந்த சாலையில் செல்லும் பொதுமக்கள் அனைவரும் மூக்கை பிடித்து கொண்டு செல்லும் நிலை காணப்படுகிறது.மேலும் நீர் ஓடையில் குவிக்கப்பட்டி ருக்கும் குப்பைகள் மூலம் கொசுக்கள் உற்பத்தியாகி நோயையும் பரப்பி வருகின்றன.எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனே இதை ஆய்வு செய்து குப்பைகளை அகற்ற வேண்டும்.
மேலும் குப்பைகளை கொட்டக்கூடாது என அறிவிப்பு பலகையும் வைக்க வேண்டும். மீறுபவர்கள் மீது அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- ஆழ்துளை கிணறு அமைத்த போதும், விவசாயத்துக்கு போதிய தண்ணீர் கிடைக்கவில்லை.
- அவிநாசி - அத்திக்கடவு திட்டம் துவக்கப்பட்டதில் இருந்து மூன்று ஆண்டுக்குள் முடிக்கப்பட்டிருக்க வேண்டும்.
திருப்பூர்,செப்.26-
தொடர் வறட்சியால் கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் ஆயிரம் அடிக்கு கீழ் சென்றுள்ளது. ஆழ்துளை கிணறு அமைத்த போதும், விவசாயத்துக்கு போதிய தண்ணீர் கிடைக்கவில்லை. குடிநீர் பற்றாக்குறையும் ஏற்பட்டு வருகிறது.
விவசாயத்தையும், குடிநீர் தேவையையும் பூர்த்தி செய்யும் வகையில் அவிநாசி - அத்திக்கடவு திட்டம் உருவாக்கப்பட்டது. பவானி ஆற்று நீரை, குழாய்கள் மூலம் கொண்டு வந்து கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்ட குளம், குட்டைகளுக்கு நீர் நிரப்புவதற்கான திட்டப்பணிகள் முடிவடைந்துள்ளன. குளம், குட்டைகளில் நீர் ஏற்றி சோதனை ஓட்டமும் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.
ஆனாலும் அவிநாசி - அத்திக்கடவு திட்டம் இன்னும் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படாதது, விவசாயிகள், பொதுமக்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. திருப்பூர் கோட்ட அளவிலான குறைகேட்பு கூட்டம் அவிநாசி தாலுகா அலுவலகத்தில் நடந்தது. இதில் அவிநாசி - அத்திக்கடவு திட்டத்தை விரைந்து செயல்படுத்தக்கோரி விவசாயிகள் குரல் எழுப்பினர். கோரிக்கை மனுக்களும் அளித்துள்ளனர்.
விவசாயிகள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-
பருவமழை பொய்த்ததால், அவிநாசி, ஊத்துக்குளி தாலுகா பகுதிகளிலும் திருப்பூர் வடக்கு சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட பொங்குபாளையம், கணக்கம்பாளையம், காளிபாளையம், பெருமாநல்லூர், ஈட்டிவீரம்பாளையம், வள்ளிபுரம், தொரவலூர், மேற்குபதி, சொக்கனூர், பட்டம்பாளையம் ஊராட்சிகளில் வறட்சி நிலவுகிறது. இப்பகுதிகளில் விவசாயிகள், நடப்பு ஆண்டு வைகாசி பட்டத்தில் 10ஆயிரம் ஏக்கருக்கு மேல் நிலக்கடலை பயிரிட்டிருந்தனர். கோடை மழை பெய்யாததால் கடலை செடிகள், பூ, பிஞ்சுடன் காய்ந்து போய்விட்டன. வறட்சியால் ஆழ்துளை கிணறுகள், திறந்த வெளி கிணறுகளிலும் நீர்மட்டம் குறைந்துள்ளது.
பாசனத்துக்கு தண்ணீர் கிடைக்காமல் விவசாயிகள் பரிதவிக்கின்றனர். பொதுமக்களுக்கும் குடிநீர் பற்றாக்குறை பிரச்சினை ஏற்பட்டுள்ளது. அவிநாசி - அத்திக்கடவு திட்டம் துவக்கப்பட்டதில் இருந்து மூன்று ஆண்டுக்குள் முடிக்கப்பட்டிருக்க வேண்டும். மூன்று ஆண்டுகளுக்கு மேலாகியும் இந்த திட்டத்தை இன்னும் செயல்பாட்டுக்கு கொண்டுவராதது ஏமாற்றம் அளிக்கிறது.தமிழக அரசு அவிநாசி - அத்திக்கடவு திட்டம் மூலம், குளம், குட்டைகளுக்கு நீர் நிரப்பி,மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.