என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Collector inspection"

    • பேரூராட்சி தலைவர் தனலட்சுமி, செயல் அலுவலர் செந்தில்குமார், சுகாதார ஆய்வாளர் கருப்பசாமி உள்ளிட்டோர் இருந்தனர்.
    • அவிநாசி - சேவூர் ரோட்டில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில், ஆய்வு மேற்கொண்டனர்.

    அவிநாசி:

    அவிநாசி அரசு மருத்துவமனையில் பொது பிரிவு, வெளி நோயாளிகள் பகுதி, பிரசவ அறை, அறுவை சிகிச்சை அரங்கு, எக்ஸ்ரே,அவசர சிகிச்சை பிரிவு உள்ளிட்ட பகுதிகளில் கலெக்டர் வினீத் ஆய்வு செய்தார். அப்போது சப்-கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன் உடனிருந்தார்.

    பின் மருத்துவர்களிடம் உள் மற்றும் வெளி நோயாளிகள் வருகை, பிரசவத்திற்காக வரும் பெண்களின் வருகை குறித்தும் கேட்டனர். குறை பிரசவத்தில் பிறக்கும் குழந்தைகளை கண்காணிக்க வைத்துள்ள இன்குபேட்டர், எடை பார்க்கும் கருவிகள் உள்ளிட்டவை சரியாக வேலை செய்கிறதா என கலெக்டர் ஒவ்வொன்றாக இயக்கி சரி பார்த்தார்.

    நோயாளிகளுடன் தங்குவோர் அறைகளில் சென்று பார்வையிட்டனர். அவிநாசி - சேவூர் ரோட்டில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில், ஆய்வு மேற்கொண்டனர்.

    கருவலூரில் ராமநாதபுரம் பகுதியில் சாலை பணிகள், நரியம்பள்ளி, அவிநாசி வட்டாட்சியர் அலுவலகம் உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு நடந்தது. அப்போது அவிநாசி வட்டாட்சியர் ராஜேஷ், வட்டார மருத்துவ அலுவலர் சக்திவேல், பி.டி.ஓ., விஜயகுமார், பேரூராட்சி தலைவர் தனலட்சுமி, செயல் அலுவலர் செந்தில்குமார், சுகாதார ஆய்வாளர் கருப்பசாமி உள்ளிட்டோர் இருந்தனர்.

    • சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் அதிக மழை பெய்ய வாய்ப்புள்ளது.
    • எந்திரங்கள் மூலம் தூர் வாரும் பணி இரவு பகலாக நடைபெற்று வருகிறது.

    விழுப்புரம்:

    வடகிழக்கு பருவ மழை ஒட்டிதமிழகம் முழுதும் கனத்த மழை பெய்யக்கூடும் எனஇந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.குறிப்பாக விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் அதிக மழை பெய்ய வாய்ப்புள்ளது. இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவம் மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து மாவட்ட கலெக்டர் மோகன் தலைமையில் அனைத்து துறை அலுவலர்கள் கூட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

    இன்று விழுப்புரம் நகரில் செல்லும் அனைத்து மழைநீர் வடிகால் வாய்க்கால்களில் நகராட்சி சார்பில் எந்திரங்கள் மூலம் தூர் வாரும் பணி இரவு பகலாக நடைபெற்று வருகிறது. இப்பணிகளை இன்று அதி காலை முதல் மாவட்ட கலெக்டர் மோகன் பார்வையிட்டார். திரு.வி.க. சாலையில் செல்லும் மழைநீர் வடிகால் வாய்க்கால்களையும், சிலப்பதிகார தெரு, வி.மருதூரில் செல்லும் பிரதான கோலியனூரன் வாய்க்கால்களை பார்வையிட்டார். அப்பொழுது ஒரு சில இடங்களில் வாய்க்கால்கள் கட்டப்பட்டுள்ள சிறு பாலங்கள் குறுகிய அளவில் கட்டப்பட்டுள்ளது கண்டறிந்தார்.

    இது சம்பந்தமாக கலெக்டர் கூறுகையில், மாவட்ட முழுவதும் உள்ள மழை நீர் வடிகால் வாய்க்கால்கள் செல்லும் பாதைகளை பார்வையிட்டு வருகிற டிசம்பர் மாதம் 12-ந் தேதிக்குள் இப்பணிகள் குறித்து அரசுக்கு ஆய்வறிக்கை அனுப்பப்பட வேண்டும் என்று கூறினார்.அதனைத் தொடர்ந்து அனிச்சம் பாளையம் பகுதியில் செல்லும் மழைநீர் வடிகால் வாய்க்கால்களையும் தூர்வாரும் பணிகளை விரைந்து முடித்திடுமாறு அறிவுரை வழங்கினார். நகராட்சி கமிஷனர் சுரேந்திரஷா, பொதுப் பணித்துறை நீர் ஆதாரம் உட்கோட்ட பொறியாளர் சோபனா நெடுஞ்சாலைத்துறை செயற்பொறியாளர் சிவசேனா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

    • காரைக்குடி அரசு மருத்துவமனையில் கலெக்டர் ஆய்வு செய்து நோயாளிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.
    • இந்த ஆய்வின் போது இணை இயக்குநர், தலைமை மருத்துவர் மற்றும் மருத்துவர்கள் செவிலியர்கள் இருந்தனர்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அரசு தலைமை மருத்துவமனையில் புறநோயாளிகள் பிரிவு, மகப்பேறு சிகிச்சை பிரிவு, குழந்தைகள் பிரிவு, பரிசோதனை ஆய்வகம், இயன்முறை சிகிச்சை பிரிவு மருந்தகம், அவசர சிகிச்சை பிரிவு, ரத்த வங்கி, அறுவை சிகிச்சை பிரிவு ஆகியவற்றை கலெக்டர் மதுசூதன் ரெட்டி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    இந்த ஆய்வின்போது வருகை பதிவேட்டில் மொத்த மருத்துவர்களின் எண்ணிக்கை, வருகைபுரிந்த மருத்துவர்கள், விடுப்பில் உள்ள மருத்துவர்கள், சிறப்பு பிரிவு மருத்துவர்கள் எண்ணிக்கை, குழந்தை களுக்கு போடப்படும் தடுப்பூசி குறித்தும், புற நோயாளிகள் பிரிவிற்கு சென்று சிகிச்சை பெற வந்துள்ள பொது மக்கள், சிகிச்சை அளிக்கப்படும் விதம் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்

    பின்னர் கலெக்டர் கூறியதாவது:-

    மகப்பேறு பகுதியில் கர்ப்பிணிகளை பரிசோதிக்கும் வெளிநோயாளிகள் பிரிவில் மாதம்தோறும் 1200 பேருக்கும், உள்நோயாளிகள் பிரிவில் மாதம்தோறும் 600 பேருக்கும், பிரசவிக்கும் தாய்மார்கள் மாதம்தோறும் 300 முதல் 400 பேருக்கும், குடும்ப கட்டுப்பாடு செய்து கொள்ளும் தாய்மார்கள் மாதம்தோறும் 100 பேருக்கும் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    24 மணி நேரமும் சிகிச்சை அளிக்கப்படும் சிசு பராமரிப்பு பகுதியில் மாதம்தோறும் 300 வெளி நோயாளி குழந்தைகளுக்கும், 150 உள்நோயாளி குழந்தை களுக்கும் சிகிச்சை அளிக்க ப்படுகிறது.

    பொது வெளி நோயாளி கள் பிரிவில் மாதம்தோறும் 20 ஆயிரம் பேருக்கும், விபத்து மற்றும் அவரச சிகிச்சை பிரிவின் கீழ் மாதம்தோறும் 200 நோயாளிகளுக்கும் சிகிச்சை அளிக்கப்படுகிறது. சீறுநீரக சுத்திகரிப்பு பிரிவில் மாதம்தோறும் 25 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    எலும்பு முறிவு அறுவை சிகிச்சை, கர்ப்பபை அகற்றும் சிகிச்சை, பித்தப்பை கல் அடைப்பு அகற்றுதல், கர்ப்பவாய் பரிசோதனை நுண்துளைகள் அறுவை சிகிச்சையும் நடைபெறு கிறது.

    தொற்றுநோய் பிரிவு, மனநலபிரிவு, செவி திறன் ஆய்வு பிரிவு, குழந்தைகளுக்கான வெளிநோயாளி மற்றும் உள்நோயாளிகள் பிரிவு, தீவிர சிகிச்சை பிரிவு ஆகிய பிரிவுகள் செயல்பட்டு வருகிறது.முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் அறுவை சிகிச்சை மற்றும் இதர நோயாளிகளுக்கும் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மேலும் காரைக்குடி அரசு தலைமை மருத்துவமனையின் வலதுபுற பகுதியில் 300 மரக்கன்றுகளை நடும் பணியின் தொடக்கமாக கலெக்டர் மரம் நடும் பணியை தொடங்கிவைத்தார்.

    இந்த ஆய்வின் போது இணை இயக்குநர் இளங்கோ மகேஸ்வரன், தலைமை மருத்துவர் தர்மர், வட்டாச்சியர் கண்ணன் மற்றும் மருத்துவர்கள் செவிலியர்கள் இருந்தனர்.

    • தென்காசி மாவட்டத்திற்கான வரைவு வாக்காளர் பட்டியலை கலெக்டர் ஆகாஷ் வெளியிட்டார்
    • கடையநல்லூர் சட்டமன்ற தொகுதியில் மொத்தம் 2 லட்சத்து 84 ஆயிரத்து 59 வாக்காளர்கள் உள்ளனர்

    கடையநல்லூர்:

    தமிழகம் முழுவதும் நேற்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

    இதனையடுத்து தென்காசி மாவட்டத்திற்கான வரைவு வாக்காளர் பட்டியலை கலெக்டர் ஆகாஷ் வெளியிட்டார். மேலும் இம்மாதம் 12, 13 மற்றும் 26, 27 ஆகிய தேதிகளில் 4 நாட்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், தொகுதி மாற்றங்கள் குறித்து சிறப்பு முகாம்கள் நடக்கிறது.

    கடையநல்லூர் சட்டமன்ற தொகுதியில் 1 லட்சத்து 40 ஆயிரத்து 768 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 43 ஆயிரத்து 279 பெண் வாக்காளர்களும், 12 மூன்றாம் பாலின வாக்காளர்களும் என மொத்தம் 2 லட்சத்து 84 ஆயிரத்து 59 வாக்காளர்கள் உள்ளனர்.

    இந்நிலையில் கடைய நல்லூர் நகராட்சி பகுதியில் உள்ள வாக்குச்சாவடி மையங்களை கலெக்டர் ஆகாஷ் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது அங்கிருந்த பணியாளர்களிடம் கடையநல்லூர் சட்டமன்ற தொகுதியில் வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண் இணைப்பு குறைவாக உள்ளது. அதனை வரும் நாட்களில் நடைபெறும் சிறப்பு முகாம்களில் அந்த பணிகளையும் துரிதப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். நிகழ்ச்சியில் தாசில்தார் சண்முகம், நகர்மன்ற தலைவர் மூப்பன் ஹபீபுர் ரஹ்மான், தேர்தல் பிரிவு தாசில்தார் ஜெகநாதன், குடும்பப் பொருள் தாசில்தார் சங்கரலிங்கம், மண்டல் துணை வட்டாட்சியர் மணிகண்டன், நகராட்சி ஆணையாளர் ரவிச்சந்திரன், நகரமைப்பு ஆய்வாளர் கிருஷ்ணகுமார், தேர்தல் பிரிவு மாரியப்பன், கவுன்சிலர்கள் முருகன், முகையதீன் கனி, தி.மு.க. மாவட்ட நெசவாளரணி அமைப்பாளர் மூவன்னா மசூது, உட்பட பலர் பங்கேற்றனர்.

    அதனைத் தொடர்ந்து தாலுகா அலுவலகங்களில் பொது மக்களின் மனுக்கள் குறித்து ஆய்வு மேற்கொ ண்டார். பின்னர் இடைகால், ஆய்க்குடி, சாம்பவர் வடகரை பகுதி களில் அரசு புறம்போக்கு நிலங்களை பொதுமக்கள் ஆக்கிர மிப்பு செய்வதை தடுக்கும் வகையில் கம்பி வேலி அமைத்து பாதுகாக்கப்படுவதை பார்வையிட்டார்.

    • செல்லியம்பாளத்திற்கு செல்லும் தார் சாலையை 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பயன்படுத்தி வருகிறார்கள்.
    • கலெக்டர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள வி. கூட்ரோட்டில் இருந்து செல்லியம்பாைளயத்திற்கு தார் சாலை ஒன்று செல்கிறது. அந்த 20 அடி சாலையை செல்லியம்பாளையம், ராயப்பனூர், பகுதி பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே உள்ள வி.கூட்ரோடில் கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி பூங்கா செயல்பட்டு வருகிறது. கால்நடை ஆராய்ச்சி பூங்கா நிர்வாகத்தினர் இந்த சாலை பகுதியில் பல்வேறு கட்டிடப் பணிகள் மேற்கொண்டு வருவதால் வருங்காலங்களில் இந்த சாலையில் கிராம மக்கள் செல்வதற்கு நிரந்தரமாக தடை செய்யப்படலாம் என்று கருதி மாவட்ட கலெக்டர் இடம் மனு கொடுக்கப்பட்டது.

    அந்த மனுவில் கூறி இருப்பதாவது:- வி கூட்ரோட்டில் இருந்து செல்லியம்பாளத்திற்கு செல்லும் தார் சாலையை ராயப்பனூர் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பயன்படுத்தி வருகிறார்கள். தற்போது 20 அடி அகலத்தில் உள்ள இந்த சாலையை 30 அடி சாலையாக மாற்றி தர வேண்டும் என கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்து கோரிக்கை வைத்தனர். 

    கோரிக்கையை ஏற்று சம்பந்தப்பட்ட சாலையை மாவட்ட கலெக்டர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்பொழுது உடன் இருந்த வருவாய் துறை நிறுவன அதிகாரியிடம் உள்ள பதிவேடுகளை பார்த்து ஆய்வு செய்து தற்போது பயன்பாட்டில் உள்ள சாலை விபரம் குறித்த தகவல் கேட்டு அறிந்தார். பின்னர் இதன் மீது பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். ஆய்வின்போது மாவட்ட திட்ட இயக்குனர் மணி, வருவாய் கோட்டாட்சியர் பவித்ரா, சின்னசேலம் யூனியன் சேர்மேன் சத்தியமூர்த்தி, சின்னசேலம் வருவாய் வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், ஊராட்சி மன்ற தலைவர், செல்லியம்பாளையம் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் ஆய்வில் பங்கேற்றனர்.

    • 92 பதவிகளுக்கு குரூப்-1 தேர்வு இன்று நடந்தது.
    • 3 லட்சத்து 22 ஆயிரம் பேர் எழுதுகின்றனர்.

    விழுப்புரம்:

    தமிழகம் முழுவதும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் துணை கலெக்டர், டி.எஸ்.பி உள்ளிட்ட 92 பதவிகளுக்கு குரூப்-1 தேர்வு இன்று நடந்தது. இந்த பதவிகளுக்கு 3 லட்சத்து 22 ஆயிரம் பேர் எழுதுகின்றனர். விழுப்புரம் மாவட்டத்தில் வளவனூரில் உள்ள அரசு பெண்கள் மேல்நி லைப்பள்ளி, நகராட்சி ஆண்கள் மேல்நி லைப்பள்ளி, ரங்கநாதன் சாலையில் உள்ள வி.ஆர்.பி. மேல்நிலைப்பள்ளி மேலும் விழுப்புரம் புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரி, இ.எஸ். கலை-அறிவியல் கல்லூரி கல்லூரி உள்ளிட்ட 23 தேர்வு மையங்களில் இந்த தேர்வு நடைபெறுகிறது.

    இந்த குரூப்-1 தேர்வை விழுப்புரம் மாவட்டத்தில் மட்டும் 10,926 பேர் எழுதுகின்றனர். மேலும் விழுப்புரம் சிதம்பரம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளில் நடைபெறும் தேர்வு மையங்களிலும் தண்ணீர் மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் முன்னதாகவே ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த தேர்வு காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரை நடந்தது.

    தேர்வு நடக்கும் முன்னதாகவே விழுப்புரம் மாவட்ட கலெக்டர் மோகன் மற்றும் வருவாய் அலுவலர் பரமேஸ்வரி விழுப்புரம் புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள தெய்வானை அம்மாள் கல்லூரிக்கு சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். தேர்விற்கான வினா த்தாள்களை கொண்டு செல்ல 6 நடமாடும் குழுக்களும் தேர்வை கண்காணிக்க 2 பறக்கும் படை அலுவலர்களும் நியமனம் செய்யப்பட்டு அவர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். மேலும் தேர்வு நடைபெறும் மையங்களில் முறை கேடுகளை தவிர்ப்பதற்காக போலீஸார்கள் ஆய்வு பணிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

    மேலும் தேர்வில் எந்தவித முறைகேடும் நடைபெறாமல் அதை தவிர்க்க வீடியோ கிராபர்களும் நியமனம் செய்ய ப்பட்டுள்ளனர். அனைத்து தேர்வு மையங்களிலும் தேர்வு எழுதும் தேர்வர்களுக்கு கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளின் படி தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர் என்று மாவட்ட வருவாய் அலுவலர் பரமேஸ்வரி அறிவுறுத்தினார். 

    • பணியினை மாவட்ட கலெக்டர்மோகன் பார்வையிட்டார்.
    • 60 மீட்டர் நீளத்தில் 25 மீட்டர் அகலத்தில் மேம்பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம், ஜானகிபுரம் சந்திப்பில், நெடுஞ்சாலைத்துறை சார்பில், திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில், ஜானகிபுரம் சந்திப்பில் அமைக்கப்பட்டு வரும் மேம்பாலம் கட்டும்பணி மற்றும் சாலை அமைக்கும் பணியினை மாவட்ட கலெக்டர்மோகன் பார்வையிட்டார். அப்போது அவர் கூறியதாவது:-

    திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில், ஜானகிபுரம் சந்திப்பிலிருந்து பாண்டிச்சேரி வரை 29 கி.மீ நீளத்திற்கு தேசிய நெடுஞ்சாலைத்துறையின் சார்பில் பணி ரூ.1,013 கோடி மதிப்பீட்டில் புதிய 4 வழிச்சாலை அமைக்கும் பணிகள் மேற்கொள்ள ப்பட்டு வருகின்றன. ஜானகிபுரம் சந்திப்பில் புதியதாகபூஜ்ஜியம் கி.மீட்டராக நிலையாக வைத்து 60 மீட்டர் நீளத்தில் 25 மீட்டர் அகலத்தில் மேம்பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. திருச்சி - சென்னை நெடுஞ்சா லையில், அதிக ப்படியான வாகன ங்கள் சென்று வருவதால் பாதுகா ப்பான பயணத்தை உறுதிசெய்தி டும் பொருட்டு, பணி நடைபெறும் இடத்தில் அறிவிப்பு பலகைகள் கூடுதலாக வைத்திடவும், எதிர்வரும் வாகனங்கள் தெரியும் அளவிற்கு தற்போது வைக்கப்பட்டுள்ள தடுப்புகளின் அளவை குறைத்து குறைந்த உயரத்தில் தடுப்புகள் அமைத்திடவும், வாகனங்கள் அதிகப்ப டியான வேகத்தில் செல்வ தனை கட்டுப்படுத்திடும் பொருட்டு தற்காலிக சிறிய அளவிலான வேகத்தடைகள் வைத்திடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    சாலை அமைக்கும் பணியில் ஈடுபடும் பணியாளர்கள் பாதுகாப்பான முறையில் பணியாற்றிட தலைக்கவசங்கள் வழங்கிடவும், பிரதிபலிக்கும் பட்டை உடைய ஆடைகளை அணிந்து பணியாற்றிடவும், வாகன நெரிசல் ஏற்படாத வகையில் பணிகளை மேற்கொள்வதோடு, வாகனங்கள் செல்வதற்காக அமைக்கப்பட்டுள்ள மாற்றுப்பாதையில் வாகனங்கள் நெரிசல் இல்லாமல் செல்வதை உறுதி செய்து கொள்ள வேண்டும். மேலும், இரவு நேரங்களில் பணிகள் நடைபெறும் சமயத்தில் வாகன ஓட்டிகள் அறிந்துகொள்ளும் வகையில் ஒளிரும் வகையில் விழிப்புணர்வு ஸ்டிக்கர் மற்றும் பதாகைகள் ஏற்படுத்திட வேண்டும். பொதுமக்களுக்கோ, வாகன ஓட்டிகளுக்கோ இடையூறு ஏற்படாத வகையில் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என நெடுஞ்சாலைத்துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவவாறு அவர் கூறினார்.

    • அங்கன்வாடிகளில் பயிலும் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு மாதா, மாதம் எடை மற்றும் உயரம் அளவிடுதல், ஊட்டச்சத்து நிலை ஆகியவை குறித்து அங்கன்வாடி பணியா–ளர்கள் கணக்கெடுப்பு செய்து வருகின்றனர்.
    • கூலிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட கலெக்டர் மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள், பென்சில் உள்ளிட்டவற்றை பரிசாக வழங்கினார்.

    நாமக்கல்:

    ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் பணியாற்றி வரும் அங்கன்வாடி பணியாளர்கள் குழந்தைக–ளுக்கு முன்பருவ கல்வியை வழங்குவதுடன், கர்ப்பிணித் தாய்மார்களுக்கு சத்தான உணவு வகைகள் குறித்த ஆலோசனைகளையும் வழங்கி, குழந்தைகளின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றி வருகின்றனர்.

    அங்கன்வாடிகளில் பயிலும் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு மாதா, மாதம் எடை மற்றும் உயரம் அளவிடுதல், ஊட்டச்சத்து நிலை ஆகியவை குறித்து அங்கன்வாடி பணியாளர்கள் கணக்கெடுப்பு செய்து வருகின்றனர்.

    இதையொட்டி நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி ஊராட்சி ஒன்றியம், கூலிப்பட்டி அங்கன்வாடி மையத்திற்கு கலெக்டர் ஸ்ரேயா பி.சிங் சென்று குழந்தைகளுக்கு விளையாட்டுடன் கூடிய கல்வி கற்கும் வகையிலான விளையாட்டு பொருட்கள் தேவையான அளவு இருப்பதையும், குழந்தைகள் அந்த விளையாட்டு உபகரணங்களை பயன்படுத்தி விளையாடுவதையும் பார்வையிட்டார்.

    அங்கன்வாடி மைய வளாகத்தில் உள்ள ஊட்டச்சத்து தோட்டத்தில் வல்லாரை கீரை உள்ளிட்ட பல்வேறு கீரை மற்றும் காய்கறி செடிகள் பராமரிக்கப்பட்டு வருவதை பார்வையிட்டு, செடிகள் பராமரிப்பு குறித்து கேட்டறிந்தார்.

    அதனைத்தொடர்ந்து, கூலிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட கலெக்டர் மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள், பென்சில் உள்ளிட்டவற்றை பரிசாக வழங்கினார்.

    • வேலூர் லாங்கு பஜார், மண்டி தெரு இருபுறமும் கடைகள் ஆக்கிரமித்துள்ளன
    • சாலையின் நடுவில் உள்ள சென்டர் மீடியனை அகற்ற முடிவு

    வேலூர்:

    வேலூர் மண்டி தெரு மற்றும் லாங்கு பஜாரில் இரண்டு பக்கமும் கடைகள் ஆக்கிரமித்து வைக்கப்பட்டு உள்ளதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

    இதனால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே லாங்கு பஜார் மற்றும் மண்டி தெருவில் நடுவில் உள்ள சென்டர் மீடியனை அகற்றுவது குறித்து கலெக்டர் குமாரவேல் பாண்டியன், கார்த்திகேயன் எம்.எல்.ஏ. மாநகராட்சி கமிஷனர் அசோக்குமார், டிஎஸ்பி திருநாவுக்கரசு மற்றும் போக்குவரத்து போலீசார் ஆய்வு செய்தனர்.

    அப்போது போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள தள்ளுவண்டி கடைகளை பழைய மீன் மார்க்கெட் வளாகத்தில் கட்டப்பட்டுள்ள இடத்திற்கு மாற்றம் செய்வது மற்றும் சாலையின் நடுவில் உள்ள சென்டர் மீடியனை அகற்றுவது என முடிவு செய்தனர்.

    • பிரான்மலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கலெக்டர் ஆய்வு செய்தார்.
    • ஆய்வில் வட்டார மருத்துவ அலுவலர் நபீசாபானு மற்றும் செவிலியர்கள் கலந்து கொண்டனர்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி ஊராட்சி ஒன்றியம் பிரான்மலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் செயல்பாடு கள் மற்றும் அங்கு புதிதாக கட்டப்பட்டு வரும் வட்டார பொது சுகாதார அலகு மருத்துவ கட்டிட கட்டுமான பணிகளை கலெக்டர் மதுசூதன் ரெட்டி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    இந்த ஆய்வின்போது அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்நோயா ளிகள் பிரிவு, வெளி நோயாளிகள் பிரிவு, மகப்பேறு சிகிச்சை பிரிவு, குழந்தைகள் நலப்பிரிவு, மருந்துகள் இருப்பு விபரம் மற்றும் இருப்பு மருத்துவ உபகரணங்கள், தேவையான மருத்துவ உபகரணங்கள் மற்றும் மேம்படுத்த வேண்டிய உட்கட்டமைப்பு வசதிகள், பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகள், மருத்து வமனைக்கு வருகை புரி யும் நோயாளிகளின் சராசரியான எண்ணிக்கை, முதல்-அமைச்சரின் மக்களைத்தேடி மருத்துவ திட்டத்தின் மூலம் சிகிச்சை மற்றும் மருந்து, மாத்திரைகள் பெற்று பயன்பெறுபவர்களின் எண்ணிக்கை குறித்து வட்டார மருத்துவ அலுவலரிடம் கலெக்டர் கேட்டறிந்தார்.

    இதைத்தொடர்ந்து பிரான்மலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் வட்டார பொது சுகாதார அலகு கட்டிட பணிகள் குறித்தும், அதன் நிலை குறித்தும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, பணிகளை தரமான முறையில் விரைந்து முடித்து, பயன்பாட்டிற்கு கொண்டு வர துறை சார்ந்த அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

    இந்த ஆய்வில் வட்டார மருத்துவ அலுவலர் நபீசாபானு மற்றும் செவிலியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கல்லல் யூனியனில் ரூ.111.97 கோடியில் வளர்ச்சி பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.
    • பல்வேறு பகுதிகளில் வளர்ச்சி திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு, மேம்படுத்தப்பட்டு வருகிறது.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம், கல்லல் ஊராட்சி ஒன்றி யத்தில் ரூ.111.97 கோடியில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகள் தொடர்பாக கலெக்டர் மதுசூதன்ரெட்டி ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது:-

    சிவகங்கை மாவட்டத்தில் தமிழக அரசால் செயல்படு த்தப்பட்டு வரும் அனைத்து நலத்திட்டங்கள் மட்டுமின்றி, வளர்ச்சிப் பணிகளும் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் சார்பில் கல்லல் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு துறைகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப் பணிகள் தொடர்பாகவும், அதன் நிலை குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    கல்லல் ஊராட்சி ஒன்றியத்தில் 14-வது நிதிக்குழு மானியம், 15-வது நிதிக்குழு மானியம், மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித்திட்டம், நமக்கு நாமே திட்டம், சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதி, எஸ்.ஐ.டி.எஸ்.திட்டம், ஒன்றிய பொது நிதி உள்பட பல்வேறு திட்டங்களின் கீழ் 2019-2020-ம் ஆண்டில் மொத்தம் 865 பணிகள் ரூ.2584.29 லட்சம் மதிப்பீட்டிலும், 2020-21-ம் ஆண்டில் மொத்தம் 1,328 பணிகள் ரூ.3896.49 லட்சம் மதிப்பீட்டிலும், 2021-22-ம் ஆண்டு 1,910 பணிகள் ரூ.4716.63 லட்சம் மதிப்பீட்டிலும் என மேற்கண்ட ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் வளர்ச்சி திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு, மேம்படுத்தப்பட்டு வருகிறது.

    இந்த திட்டப்பணிகள் தொடர்பாக, கல்லல் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள தளக்காவூர் ஊராட்சியில் 15-வது நிதிக்குழு மானியத்திட்டத்தின் கீழ் ரூ.2.34 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்றுவரும் குடிநீர் இணைப்புகள் பணிகள் தொடர்பாகவும், கம்பனூர் ஊராட்சியில் ரூ.14.59 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் நியாயவிலைக்கடைக் கட்டிடம் கட்டுமானப் பணிகள் தொடர்பாகவும், 15-வது நிதிக்குழு மான்யத் திட்டத்தின் கீழ் ரூ.6.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் மேல்நிலை நீர்த்தே க்கத்தொட்டி கட்டுமானப் பணிகள் தொடர்பாகவும் ஆய்வு செய்யப்பட்டது.

    மேலும், என்.மேலையூர் ஊராட்சியில் புதிய ஊராட்சி மன்றக்கட்டிடம் கட்டும் பணிக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு, இடம் தேர்வு செய்யப்படுவது தொடர்பாகவும் துறை சார்ந்த அலுவ லர்களுடன் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    இந்த பணிகளை தரமான முறையில், விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பா ட்டிற்கு கொண்டு வர அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த ஆய்வின்போது, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் -இணை இயக்குநர் சிவராமன், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) குமார், உதவித் திட்ட இயக்குநர் செல்வி, சிவகங்கை மாவட்ட செயற்பொறியாளர் வெண்ணிலா, தேவ கோட்டை உதவி செயற்பொ றியாளர் ஜெயராஜ், கல்லல் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இளங்கோ, அழகுமீனாள், உதவிப்பொறியாளர்கள் விஜயலெட்சுமி, செல்லையா, கணேஷ் மற்றும் பலர் உடனிருந்தனர்.

    • விழுப்புரம் மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
    • கடலோ ரத்தில் யாரும் வசிக்க வேண்டாம், முகாம்களுக்கு சென்று பாதுகாப்பாக இருங்கள்.

    விழுப்புரம்:

    வங்கக் கடலில் உருவாகியுள்ள மாண்டஸ் புயலின் மையப் பகுதியான கண் பகுதி மாமல்லபுரத்தின் அருகே கரையைக் கடக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. இப்புயல் கரையைக் கடக்கும் பொழுது மணிக்கு 65 முதல் 75 கி.மீ., வேகத்தில் காற்று வீசும் என்றும், சில இடங்களில் 85 கி.மீ., வேகத்தில் காற்று வீசும் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதையொட்டி விழுப்புரம் மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் 19 மீனவ கிராமங்கள் உள்ளன. மேலும், 100-க்கும் மேற்பட்ட கிராமங்கள் கிழக்கு கடற்கரை சாலையையொட்டி உள்ளது.

    இங்கு மேற்கொள்ளப் பட்டு வரும் பணிகளை ஆய்வு செய்யவும், நிவாரணப் பணிகளை பார்வையிடவும் இன்று காலை விழுப்புரம் கலெக்டர் மோகன் கோட்டக்குப்பம் பகுதிக்கு அதிகாரிகளுடன் வந்தார். அங்கு பிள்ளைச்சாவடி குப்பத்தில் கடல் சீற்றத்தால் முழ்கும் நிலையில் உள்ள மீனவர் சங்க கட்டிடத்தை பார்வையிட்டார். அப்பகு தியில் அமைக்கப்பட்ட நிவாரண முகாமினை பார்வையிட்டு, கடலோ ரத்தில் யாரும் வசிக்க வேண்டாம், முகாம்களுக்கு சென்று பாதுகாப்பாக இருங்கள். அங்கு உணவு, குடிநீர், ஜெனரேட்டர் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் உள்ளது என்று பொது மக்களிடம் கூறினார்.

    இதைத் தொடர்ந்து மரக்காணம் தாசில்தார் அலுவலகத்திற்கு கலெக்டர் மோகன் சென்றார். புயலை எதிர்கொள்வது குறித்த அனைத்து துறை அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் கலெக்டர் மோகன் கலந்து கொண்டார். சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் மாண்டஸ் புயல் இன்று நள்ளிரவு கரைைய கடக்கும் என்பதால் கடற்கரையோர அனைத்து கிராம மக்களையும் முகாம்களில் தங்க வைக்க அறிவுறுத்தினார். இக்கூட்டத்தில் வருவாய்த் துறை, உள்ளாட்சித் துறை, பொதுப் பணித்துறை, பேரூராட்சி மற்றும் ஊராட்சி மன்ற பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

    ×