என் மலர்
நீங்கள் தேடியது "Foundation"
- விரிவாக்க கட்டிடத்துக்கு அடிக்கல் நாட்டு விழாவில் அமைச்சர் பங்கேற்றார்.
- ஊராட்சி மன்ற தலைவர் சண்முகநாதன் வரவேற்றார்.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை நகராட்சி அலுவலகத்தில் விரிவாக்க கட்டிடத்துக்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது. கலெக்டர் மதுசூதன்ரெட்டி தலைமை தாங்கினார். நகராட்சித் தலைவர் எஸ்.மாரியப்பன் கென்னடி வரவேற்றார். அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் விழாவில் பங்கேற்று விரிவாக்க கட்டிடத்துக்கு அடிக்கல் நாட்டினார். அவர் பேசியதாவது:-
பேரூராட்சியாக இருந்த மானாமதுரை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட பின்னர் பொதுமக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை அதிகமாக செய்துதர வேண்டும். பொதுமக்கள் அலுவலகத்துக்கு வந்து செல்லும் வகையில் நகராட்சிக்கு போதுமான கட்டிடங்கள், பணியாளர்கள் தேவைப்படும் நிலையில் முதல்கட்டமாக தற்போது ரூ.1 கோடி மதிப்பீட்டில் புதிய விரிவாக்க கட்டிடம் 4800 சதுர அடியில் கட்டப்பட உள்ளது. இன்னும் பல திட்டங்கள் மானாமதுரை நகராட்சிக்கு வர உள்ளது.
கடந்த 1½ ஆண்டுகால முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில் மக்களுக்கான திட்டங்கள் ஒவ்வொன்றாக அறிவிக்கப்பட்டு வருகிறது. கிராமப்புறங்களில் அமலில் இருந்த பொதுமக்கள் பங்களிப்புடன் கூடிய நமக்கு நாமே திட்டம் தற்போது நகர்புறங்களிலும் அமல்படுத்தப்பட்டுள்ளது. மானாமதுரை நகராட்சியிலும் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
தமிழகத்தில் ஏற்கனவே செயல்படுத்தப்பட்டு வரும் எந்த திட்டங்களையும் ரத்து செய்யாமல் மேலும் பல புதிய திட்டங்களை அறிவித்து நிதி நெருக்கடியான இந்த கால கட்டத்திலும் இந்தியாவிலேயே சிறந்த முதல்வராக மு.க.ஸ்டாலின் சிறப்பாக ஆட்சி நடத்தி வருகிறார். பொதுமக்கள் எப்போதும் இந்த அரசுக்கு ஆதரவாக இருக்க வேண்டும்.
இவ்வாறு அர் பேசினார்.
விழாவில் மானாமதுரை எம்.எல்.ஏ. தமிழரசி, திருப்புவனம் பேரூராட்சித் தலைவர் சேங்கைமாறன், நகராட்சி துணைத்தலைவர் பாலசுந்தரம், மாவட்ட விழிப்புணர்வுக்குழு உறுப்பினர் பொன்னுச்சாமி, ஊராட்சி ஒன்றியத்தலைவர் லதா அண்ணாதுரை, ஆணையாளர் சக்திவேல், சுகாதார ஆய்வாளர் தங்கதுரை மற்றும் வார்டு உறுப்பினர்கள், பணியா ளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதேபோல் மானா மதுரை ஊராட்சி ஒன்றியம் இடைக்காட்டூர் ஊராட்சியில் புதிய ஊராட்சி மன்ற கட்டிடம் திறப்பு மற்றும் வாழ்ந்துகாட்டுவோம் திட்டத்தில் பயனாளிகளுக்கு நலதிட்ட உதவிகளை அமைச்சர் கே.ஆர். பெரிய கருப்பன் வழங்கினார். ஊராட்சி மன்ற தலைவர் சண்முகநாதன் வரவேற்றார்.
- சிங்கம்புணரி ஒன்றியங்களில் வளர்ச்சி திட்ட பணிகளுக்கு அமைச்சர் பெரியகருப்பன் அடிக்கல் நாட்டினார்.
- ஊராட்சி மன்ற தலைவர் பாலசுப்பிரமணியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
சிங்கம்புணரி
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி ஒன்றி யங்களில் வேலைவாய்ப்பு முகாம், பள்ளி மற்றும் மயான பகுதிகளுக்கு சுற்றுச்சுவர் அமைத்தல், நியாயவிலைக் கடை திறப்பு, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா போன்ற நிகழ்ச்சிகள் நடந்தன. கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமை தாங்கினார்.
இதில் அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பன் பங்கேற்று வளர்ச்சி திட்ட பணிகளை தொடங்கி வைத்தார். தனியார் கல்வி நிறுவனமான எஸ்.எஸ்.மெட்ரிக் பள்ளியில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி ஒன்றிய, நகர தி.மு.க. ஏற்பாட்டில் வேலை வாய்ப்பு முகாம் நடந்தது.
அதில் கலந்து கொண்ட 40-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்களில் பணியாற்றுவதற்கான ஆணையை முகாமில் பங்கேற்றவர்களுக்கு அமைச்சர் வழங்கினார்.
நமக்கு நாமே திட்டத்தின் கீழ் தனியார் தொண்டு நிறுவனங்களின் பங்களிப்பாக ரூ.19 லட்சம், அரசு நிதியில் இருந்து ரூ.38 லட்சம் என மொத்தம் ரூ.57 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அரசு மேல்நி லைப்பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்ட பூமி பூஜை நடந்தது.
மேலும் முஸ்லிம்களின் மயான பகுதிக்கு சுற்றுச்சுவர் கட்ட அமைச்சர் தனது சொந்த நிதியில் இருந்து ரூ.10 லட்சம், அரசு நிதி ரூ.20 லட்சம் என மொத்தம் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் அதற்கான பணியை தொடங்கி வைத்தார்.
தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களின் சார்பில் முறையூர், அரளிப்பட்டி, கிருங்கா கோட்டை, சூரக்குடி, காளாப்பூர், சிங்கம்புணரி போன்ற பகுதிகளில் உள்ள 91 பயனாளிகளுக்கு ரூ.27.01 லட்சம் மதிப்பீட்டில் பயிர் கடன், புதிய வாகனம் என பல்வேறு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் பெரியகருப்பன் வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து பேரூராட்சிக்கு உட்பட்ட 2-வது வார்டு மற்றும் பிரான்மலை ஊராட்சி போன்ற பகுதிகளில் நீண்ட நாள் கோரிக்கையான முழுநேர புதிய நியாய விலை கடைகளை அமைச்சர் திறந்து வைத்து அந்த பகுதிகளில் செயல்பட்டு வரும் மகளிர் சுயநிதி குழுக்களுக்கு நலத்திட்ட உதவிக்கான ஆணைகளை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சிகளில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுவாமிநாதன், மாவட்ட கல்வி அலுவலர் சண்முகநாதன், கூட்டுறவு சங்க இணை பதிவாளர் கோ.ஜினு, துணைப் பதிவாளர் குழந்தை வேல், மாவட்ட வழங்கல் அலுவலர் ரத்தினவேல்,ஆவின் பால்வளத் தலைவர் சேங்கை மாறன், பேரூராட்சி சேர்மன் அம்பலமுத்து, துணை சேர்மன் செந்தில், செயல் அலுவலர் ஜான் முகமது, கவுன்சிலர் செந்தில் கிருஷ்ணன், 2-வது வார்டு கவுன்சிலர் முகமது நிஷா ஷேக் அப்துல்லா, பிரான்மலை ஊராட்சி மன்ற தலைவர் பாலசுப்பிரமணியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- கீழக்கரையில் பட்டமளிப்பு விழா நடந்தது.
- கீழக்கரை சுன்னத்துவல் ஜமாத் அறக்கட்டளை நிறுவனர் தைக்கா அப்துல் ஓபுர் நன்றி கூறினார்.
கீழக்கரை
உலகக் கல்வியுடன் திருக்குரானை மனப்பாடம் செய்து முடித்த தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 25 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா கீழக்கரை சதக்கத்துல்லா அப்பா வளாகத்தில் நடந்தது. அதாயி கல்வி குழுமத்தின் சார்பில் சுப்ரீம் நிறுவனர் முஹம்மது நிசார் பாஜில் ஜமாலி, சென்னை மற்றும் கீழக்கரை அதாயி பெண்கள் ஹிப்ளு பள்ளி தலைவர் ஹபிபுல்லாகான், கீழக்கரை அதாயி இஸ்லாமிக் பள்ளி தலைவர் ஜஹுபர் கமால், கீழக்கரை சுன்னத்துல் ஜமாத் பவுண்டேஷன் ஒபூர் ஆகியோர் ஏற்பாட்டில் இந்த நிகழ்ச்சி நடந்தது.
சிறப்பு விருந்தினராக ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி, ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்சா முத்துராமலிங்கம், தமிழ்நாடு வக்பு வாரிய தலைவர் அப்துர் ரஹ்மான் உள்பட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். துபாய் ஈமான் அமைப்பின் தலைவர்-தொழிலதிபர் ஹபிபுல்லா கான் காணொலி வாயிலாக வாழ்த்துரை வழங்கினார். இதில் குரானை மனப்பாடம் செய்த 25 மாணவர்களுக்கு பட்டம் வழங்கப்பட்டது.
கீழக்கரை சுன்னத்துவல் ஜமாத் அறக்கட்டளை நிறுவனர் தைக்கா அப்துல் ஓபுர் நன்றி கூறினார். விழாவில் கீழக்கரை பல்வேறு ஜமாத், சங்க நிர்வாகிகள், பிரமுகர்கள், பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள், உள்ளூர் மற்றும் வெளியூரில் இருந்து திரளானோர் கலந்து கொண்டனர். துபாய் ஈமான் அமைப்பின் பொதுச் செயலாளர் ஹமீது யாசின், கீழக்கரை சுன்னத்துவல் ஜமாத் அறக்கட்டளை நிர்வாகிகள் ஒருங்கிணைத்தனர்.
- திருப்புல்லாணி பகுதியில் திட்டப்பணிகளை எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
- புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திருப்புல் லாணி கிழக்கு ஒன்றிய பகுதிகளில் எம்.எல்.ஏ.வும், தி.மு.க. மாவட்ட செயலாளருமான காதர் பாட்சா முத்துராமலிங்கம் சுற்றுப்பயணம் செய்து பல்வேறு திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார். புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
கோரைக்கூட்டம் ஊராட்சி தன்ரம்பல் கிராமத்தில் புதிய டிரான்ஸ்பார்மர், தினைக்குளத்தில் சைக்கிள் நிறுத்தம், மரைக்கா நக ரில் நிழற்குடை, பெரிய பட்டினத்தில் 63 கே.வி. திறன் கொண்ட டிரான்ஸ்பார்மர், ரேசன்கடை, வண்ணாங் குண்டு ஊராட்சி நேருபுரம் கிராமத்தில் கலையரங்கம் ஆகியவற்றை திறந்து வைத்தார்.
தினைக்குளத்தில் கலையரங்கம் கட்டவும், வண்ணாங்குண்டு தொடக்கப்பள்ளியில் கூடுதல் வகுப்பறைகள் கட்டவும் அடிக்கல் நாட்டினார். அனைத்து இடங்களிலும் பொதுமக்கள் மற்றும் தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சியினர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ.வுக்கு வரவேற்பு அளித்தனர். அங்கு தி.மு.க. கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். அனைத்து கிரா மங்களிலும் பொதுமக்களை சந்தித்து அவர்களிடம் குறைகளை கேட்டு, கோரிக்கை மனுக்களை பெற்றார். இதில் ராமநாதபுரம் நகர் மன்ற தலைவர் கார்மேகம், துணைத் தலைவர் பிரவீன் தங்கம், மின்வாரிய செயற்பொ றியாளர் இளங்கோ, உதவி செயற்பொறியாளர் செந்தில்குமார், உதவி பொறியாளர் சோமசுந்தரம், ராமநாதபுரம் ஒன்றிய குழு தலைவர் வக்கீல் பிரபாகரன், மாவட்ட கவுன்சிலர் ஆதித்தன், பெரியபட்டினம் ஊராட்சி மன்ற தலைவர் அக்பர் ஜான் பீவி, ஒன்றிய கவுன்சிலர் பைரோஸ் கான், ஊராட்சி துணைத் தலைவர் புரோஸ் கான்.
எஸ்.டி.பி.ஐ. நகர் தலைவர் மீராசா, நகர் செயலாளர் பீர் மைதீன், எஸ்.டி.டி.யூ. நகர் தலைவர் இஜாஸ், ஹக் அம்பலம், கீழக்கரை நகர் செயலாளர் பஷீர் அகமது, மாணவரணி அமைப்பாளர் இப்திகார் ஹசன், நகர்மன்ற உறுப்பினர்கள் நசீருதீன், மீரான் அலி, திருப்புல்லாணி கிழக்கு ஒன்றிய செயலாளர் நாகேசுவரன், மண்டபம் மத்திய ஒன்றிய செயலாளர் முத்துக்குமார், மண்டபம் மேற்கு ஒன்றிய செயலாளர் பிரவீன், பெரியபட்டினம் தி.மு.க. செயலாளர் அன்சாரி, ஒன்றிய முன்னாள் கவுன்சிலர் அபிபுல்லா, ராமநாதபுரம் மாவட்ட பிரதிநிதிகள் ஆனந்தன், டி.கே.குமார், ரகுநாதபுரம் ஊராட்சி தலைவர் கோபால கிருஷ்ணன், திருப்புல்லாணி ஒன்றிய கவுன்சிலர் கோவிந்த மூர்த்தி.திருப்புல்லாணி ஊராட்சி மன்ற தலை வர் கஜேந்திரமாலா முத்துகி ருஷ்ணன், வண்ணாங் குண்டு ஊராட்சி தலைவர் தியாகரா ஜன், ஜமாத் தலைவர் நிஜாப் கான், தி.மு.க.நிர்வாகி பஷீர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- சேதமடைந்த 2 வகுப்பறை கட்டிடங்கள் இடித்து அகற்றப்பட்டது.
- புதிய வகுப்பறை கட்டிடங்கள் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டு விழா.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் திருச்செங்காட்டங்குடியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சேதமடைந்த 2 வகுப்பறை கட்டிடங்கள் இடித்து அகற்றப்பட்டது.
இதை தொடர்ந்து புதிய வகுப்பறை கட்டிடம் கட்ட அரசுக்கு கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து அந்த பள்ளிக்கு புதிய பள்ளி கட்டிடங்கள் கட்டும் சிறப்பு திட்டம் 2022-23 கீழ் ரூ.26 லட்சம் மதிப்பீட்டில் 2 புதிய வகுப்பறை கட்டிடங்கள் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
விழாவிற்கு ஊராட்சி மன்ற தலைவர் வள்ளி கலியமூர்த்தி தலைமை தாங்கினார்.
ஒன்றியக்குழு உறுப்பினர் இளஞ்செழியன் முன்னிலை வகித்து அடிக்கல் நாட்டி பணியை தொடங்கி வைத்தார்.
இதில் ஒன்றிய பொறியாளர் சுரேஷ், பள்ளியின் தலைமை ஆசிரியர் ஆனந்த வல்லி, ஊராட்சி செயலர் அன்பழகன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- தொண்டி அருகே அரசுப்பள்ளியில் கூடுதல் கட்டிடம் கட்ட அடிக்கல் நாட்டு விழா நடந்தது.
- யூனியன் சேர்மன் முகமது முக்தார், ஒன்றிய செயலாளர் சரவணன், கவுன்சிலர் கணேசன் முன்னிலை வகித்தனர்.
தொண்டி
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை பஞ்சாயத்து யூனியனுக்குட்பட்ட தினையத்தூர் கிராமத்தில் உள்ள பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப் பள்ளியில் கூடுதல் வகுப்பறைக்கான அடிக்கல் நாட்டு விழா திருவாடானை தொகுதி எம்.எல்.ஏ. கரு.மாணிக்கம் தலைமையில் நடந்தது.
யூனியன் சேர்மன் முகமது முக்தார், ஒன்றிய செயலாளர் சரவணன், கவுன்சிலர் கணேசன் முன்னிலை வகித்தனர். பஞ்சாயத்து தலைவர் சிங்கத்துரை வரவேற்றார். வட்டார கல்வி அலுவலர் புல்லாணி, வட்டார வளர்ச்சி அலுவலர் முத்துகிருஷ்ணன் மற்றும் ஆசிரியர்கள், கிராம மக்கள் கலந்து கொண்டனர்.
- போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் அடிக்கல் நாட்டினார்
- 2.32 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட உள்ளது
அரியலூர்,
அரியலூர் மாவட்டம், கீழப்பழூர் ஊராட்சியில் காவல் நிலையம் அருகில் மாவட்ட நகர் மற்றும் ஊரமைப்பு அலுவலக கட்டட பணிகளுக்கு போக்குவரத்துத்துறை அமைச்சர்.சிவசங்கர் அவர்கள் அடிக்கல் நாட்டினார். இவ்வலுவலகம் ரூ.2 கோடியே 32 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ளது. இதில் தரைத்தளம் 2453 சதுர அடியில் உதவி இயக்குநர் அறை, வரவேற்பு அறை, அலுவலக அறை, நகல் எடுக்கும் இயந்திர அறை மற்றும் கழிவறை வசதிகளுடன் அமைக்கப்பட உள்ளது. மேலும், முதல் தளம் 2453 சதுர அடியில் அலுவலக அறை, பதிவறை, சேமிப்பு அறை மற்றும் கழிவறை வசதிகளுடன் அமைப்படவுள்ளது. பொதுமக்கள் மற்றும் அலுவலக பயன்பாட்டிற்காக 365 சதுர அடியில் நான்கு சக்கர வாகனம் நிறுத்துமிடமும், 355 சதுர அடியில் இருச்சக்கர வாகனம் நிறுத்திமிடமும் அமைக்கப்படவுள்ளது. இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர்பெ.ரமண சரஸ்வதி, அரியலூர் சட்டமன்ற உறுப்பினர்கு.சின்னப்பா, செயற்பொறியாளர்மணிவண்ணன், உதவி செயற்பொறியாளர்தேவேந்திரன், உதவி பொறியாளர்அட்ஷயா, திருமானூர் ஒன்றியக்குழுத்தலைவர்சுமதி அசோகசக்கரவர்த்தி, வட்டாட்சியர்கண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- ரூ.12.40 கோடி செலவில் கட்டப்பட உள்ளது
- அமைச்சர் மெய்யநாதன் அடிக்கல் நாட்டினார்
ஆலங்குடி,
கடந்த ஆண்டு சட்டசபையில் மானியக் கோரிக் கையின் போது ஆலங்குடி தொகுதிக்கு அரசு இருபாலர் கலை அறி வியல் கல்லூரி அறிவிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக கல்லூரி அறிவிக்கப்பட்டு இரண்டு மாதங்களிலேயே ஆலங்குடி நகரில் உள்ள தனியார் கட்டடத்தில் அரசு கலைக்கல்லூரி செயல்பட தொடங்கியது. அரசு கலைக் கல்லூரிக்கு நிரந்தர இடமா னது ஆலங்குடி அருகே உள்ள கீழாத்தூர் ஊராட்சியில் தேர்வு செய்ய ப்பட்டது. புதிய கல்லூரி கட்டடம் கட்டுவதற்கு ரூ.12.40 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அந்த இடத்தில் புதிய கல்லூரி கட்டிடம் கட்டுவதற்காக அடிக் கல் நாட்டும் விழா இன்று கீழாத்தூர் சமத்துவபுரம் அருகே நடைபெ ற்றது. இந்த விழாவில் ஆலங்குடி சட்டமன்ற உறுப்பினரும் தமிழ்நா டு சுற்றுச்சூழல் துறை அமைச்சருமான மெய்யநாதன் கலந்துகொ ண்டு புதிய கல்லூரிக்கு அடிக்கல் நாட்டி கல்லூரி காண வரைபடத் தையும் பார்வையிட்டார்.
- அய்யப்பன் எம்.எல்.ஏ. நியாய விலைக்கடை கட்டிடம் கட்டும் பணியை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
- விழாவிற்கு முன்னாள் மாவட்ட பொருளாளர் வி.எஸ்.எல்.குணசேகரன் தலைமை தாங்கினார்.
கடலூர்:
கடலூர் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட 2 வது வார்டில் 15.50 லட்சம் ரூபாய் செலவில் சிமெண்ட் சாலை, 3-வது வார்டு செம்மண்டலம் காந்தி நகர் ரூ.14 லட்சம் மதிப்பில் நியாய விலைக்கடை கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதற்கு முன்னாள் மாவட்ட பொருளாளர் வி.எஸ்.எல்.குணசேகரன் தலைமை தாங்கினார். மாநகராட்சி கவுன்சிலர்கள் கீதா குணசேகரன், பிரகாஷ் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக அய்யப்பன் எம்.எல்.ஏ., கலந்து கொண்டு நியாய விலைக்கடை கட்டிடம் கட்டும் பணியை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் மாநகராட்சி கவுன்சிலர்கள் தமிழரசன், சரத் தினகரன், சுமதி ரங்கநாதன், பாரூக் அலி, கர்ணன், கீர்த்தனா ஆறுமுகம், ராதிகா பிரேம்குமார், மகேஸ்வரி விஜயகுமார், கூட்டுறவு சங்கத் தலைவர்கள் ஆதி பெருமாள், ரவிச்சந்திரன், லட்சுமி செக்யூரிட்டி கே.ஜி.எஸ்.தினகரன், முன்னாள் கவுன்சிலர்கள் இளங்கோவன், வனிதா சேகர், வார்டு அவைத்தலைவர் அண்ணாதுரை, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சுதாகர், நிர்வாகிகள் ராமலிங்கம், தெய்வநாயகம், செல்வராஜ், சம்மந்தம், முருகன், பாஸ்கர், அஷ்ரப் அலி, மணிகண்டன், சதிஷ், ஆனந்த், பாலசந்தர், செந்தில், மணிவண்ணன், சதாசிவம், சுரேஷ், தண்டபாணி, அருணாச்சலம், சிவகுஞ்சிதம், ஆறுமுகம், சங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் 100 படுக்கை வசதி கொண்ட அதிதீவிர சிகிச்சை பிரிவு கட்டிடம் கட்டும் பணி.
- அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தலைமை தாங்கி புதிய கட்டிடம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டி தொடங்கி வைக்கிறார்.
கடலூர்:
கடலூர் மாநகர தி.மு.க. செயலாளர் ராஜா, மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது-
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவின் பேரில்கடலூர் அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் 100 படுக்கை வசதி கொண்ட அதிதீவிர சிகிச்சை பிரிவு கட்டிடம் கட்டும் பணிக்காக 34 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் புதிதாக கட்டிடம் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டு விழா இன்று( 15- ந்தேதி) மாலை கடலூர் அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் நடைபெறுகிறது. விழாவிற்கு வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தலைமை தாங்கி புதிய கட்டிடம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டி தொடங்கி வைக்கிறார். இதில் கலெக்டர் பாலசுப்ரமணியம், அய்யப்பன் எம்.எல். ஏ, அரசு மருத்துவமனை இணை இயக்குனர், சுகாதார துறை அதிகாரிகள், மாநகராட்சி அதிகாரிகள், மண்டல குழு தலைவர்கள், மாநகராட்சி கவுன்சிலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொள்கின்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ள
- 45- வது வார்டில் 9.80 லட்சம் மதிப்பீட்டில் கல்வெட்டு அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
- விழாவில் மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா தலைமை தாங்கி அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
கடலூர்:
கடலூர் மாநகராட்சிக் குட்பட்ட முதுநகர் பகுதிகளில் உள்ள 36, 37, 38, 39, 41, 42, 45 ஆகிய வார்டு களில் தமிழ்நாடு அரசின் நகர்ப்புற சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 3.41 கோடி மதிப்பீட்டில் சிமெண்ட் மற்றும் தார் சாலைகள் அமைப்பதற்கான பணிகள் மற்றும் 45- வது வார்டில் 9.80 லட்சம் மதிப்பீட்டில் கல்வெட்டு அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
விழாவில் மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா தலைமை தாங்கி அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். மாநகராட்சி ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தி, மாநகர தி.மு.க.செயலாளர் ராஜா, பொறியாளர் மகாதேவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாணவர் அணி துணை அமைப்பாளர் பாலாஜி, தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் கார்த்திக், மண்டல குழு தலைவர் இளையராஜா, மாநகராட்சி கவுன்சிலர்கள் விஜயலட்சுமி செந்தில், பாலசுந்தர், கவிதா ரகு ராமன், தகவல் தொழில்நுட்ப அணி பிரவீன் மற்றும் வெங்கடேசன், செந்தில், ரகுராமன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- செவிலியர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது என்றார்.
- செவிலியர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
தஞ்சாவூர்:
தன்னலமற்ற சேவையை வழங்கி வரும் செவிலியர்களை பெருமைப்படுத்தும் விதமாக 'விளக்கேந்திய மங்கை' , 'கை விளக்கேந்திய காரிகை' என்று உலகம் முழுவதும் போற்றப்படுபவரும் , நவீன செவிலியர் முறையை உருவாக்கிய இங்கிலாந்தைச் சேர்ந்த பிளாரன்ஸ் நைட்டிங்கேல் அம்மையாரின் பிறந்த நாளான மே 12 ஆம் தேதி உலகம் முழுவதும் செவிலியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக நோயாளிகளுக்கு செவிலியர்கள் ஆற்றி வரும் உன்னத சேவையை கவுரவிக்கும் விதத்தில் தஞ்சை நகர பொதுமக்கள் சார்பில் செவிலியர்கள் தின கொண்டாட்டம் தஞ்சை ராசா மிராசுதார் மருத்துவமனையில் நடைபெற்றது .
ஜோதி அறக்கட்டளை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த நிகழ்வில் ஜோதி அறக்கட்டளை செயலாளர் பிரபு ராஜ்குமார் மற்றும் நிர்வாகிகள் , செவிலியர்களுக்கு வாழ்த்து தெரிவித்து அவர்களின் தன்னலமற்ற சேவையை பாராட்டினர்.
மேலும் அவர் பேசுகையில் " சிகிச்சைக்கு வரும் நோயாளிகளிடம் பாசத்துடனும், பரிவுடனும் நடந்து கொண்டு கனிவான சேவையை வழங்கி வரும் செவிலியர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது என்றார்.
முன்னதாக தஞ்சை மாநகராட்சி துணை மேயர் டாக்டர் அஞ்சுகம் பூபதி , தஞ்சை மேற்கு காவல்நிலைய ஆய்வாளர் சந்திரா சரவணன் ஆகியோர் செவிலியர்களுக்கு இனிப்புகளை வழங்கி செவிலியர் தின வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டனர் .
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஜோதி அறக்கட்டளை செயலாளர் டாக்டர் பிரபுராஜ்குமார் மேற்பார்வையில் அறக்கட்டளை மேலாளர் ஞானசுந்தரி, தன்னார்வலர் மாலதி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.