என் மலர்
நீங்கள் தேடியது "புகை பழக்கம்"
- நியூசிலாந்தில் 14 வயதுக்குட்பட்டவர்கள் புகைப்பிடிக்க தடை விதித்து சட்டம் இயற்றப்பட்டு உள்ளது.
- புகைப்பழக்கத்தை ஒழிப்பதற்கான சட்டம் நியூசிலாந்தை விட இந்தியாவுக்கு தான் அதிகம் தேவை.
சென்னை :
பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-
நியூசிலாந்தில் 2009-ம் ஆண்டுக்கு பிறகு பிறந்தவர்கள், அதாவது 14 வயதுக்குட்பட்டவர்கள் புகைப்பிடிக்கவும், அவர்களுக்கு சிகரெட் உள்ளிட்ட புகையிலை பொருட்களை விற்கவும் தடை விதித்து சட்டம் இயற்றப்பட்டு உள்ளது. உலகில் இத்தகைய சட்டத்தை இயற்றிய முதல் நாடு நியூசிலாந்து தான்.
நியூசிலாந்து நாட்டின் சட்டத்தால் புகைப்போரின் எண்ணிக்கை ஆண்டுக்கு, ஆண்டு குறையும். 2050-ம் ஆண்டில் 40 வயதானவர்களால் கூட புகைக்க முடியாது. 2023-ம் ஆண்டு இறுதிக்குள் நியூசிலாந்தில் சிகரெட் விற்பனை செய்யும் கடைகளின் எண்ணிக்கை 6 ஆயிரத்தில் இருந்து 600 ஆக குறைக்கப்படும். புகைப்பிடிப்போர் எண்ணிக்கை குறைவதால், நியூசிலாந்து மக்களின் மருத்துவத்துக்காக செலவிடப்படும் தொகை ஆண்டுக்கு ரூ.40 ஆயிரம் கோடி (5 பில்லியன் டாலர்) குறையும்.
ஒரு சட்டத்தால் இவற்றை விட பெரிய நன்மையை ஒரு நாட்டுக்கு செய்து விடமுடியாது. அதனால் தான் இது வரலாற்று சிறப்புமிக்க சட்டம். புகைப்பழக்கத்தை படிப்படியாக ஒழிப்பதற்கான சட்டம் நியூசிலாந்தை விட இந்தியாவுக்கு தான் அதிகம் தேவை. எனவே, இந்தியாவில் புகைப் பிடிப்பதற்கான வயதை 21 ஆக உயர்த்த வேண்டும். 2001-ம் ஆண்டுக்கு பிறகு பிறந்தவர்களுக்கு சிகரெட் விற்க தடை விதித்து சட்டம் இயற்ற வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
- மக்களிடம் புகை பிடிக்கும் பழக்கத்தை குறைக்க பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது.
- நியூசிலாந்தை 2025-ம் ஆண்டுக்குள் புகைப்பிடிக்காத நாடாக மாற்ற இலக்கை.
வெல்லிங்டன் :
2025-ம் ஆண்டுக்குள் நியூசிலாந்தை புகைப்பிடிக்காத நாடாக மாற்ற வேண்டும் என்ற இலக்கை அந்த நாட்டு அரசு கொண்டுள்ளது. அதன் அடிப்படையில் மக்களிடம் புகை பிடிக்கும் பழக்கத்தை குறைக்க பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது.
இந்த நிலையில் நியூசிலாந்தில் இளைஞர்கள் சிகரெட் வாங்குவதற்கு வாழ்நாள் தடை விதிக்கும் புதிய சட்டத்தை அந்த நாட்டு அரசு நேற்று முன்தினம் நிறைவேற்றியது.
ஜனவரி 1, 2009 அன்று அல்லது அதற்குப் பிறகு பிறந்த எவருக்கும் புகையிலை விற்கக் கூடாது என்று அந்த சட்டம் கூறுகிறது. இதன் மூலம் சிகரெட் வாங்குவதற்கான குறைந்தபட்ச வயது தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே இருக்கும்.
அதாவது, நியூசிலாந்தில் அடுத்த 50 ஆண்டுகளுக்கு பிறகு சிகரெட் வாங்குவதற்கான குறைந்தபட்ச வயது 63 ஆக இருக்கும் என சட்ட நிபுணர்கள் கூறுகின்றனர். ஆனால் அதற்கு முன்பாகவே புகைபிடிக்கும் பழக்கம் மறைந்துவிடும் என்று சுகாதார அதிகாரிகள் நம்புகின்றனர்.
இந்த புதிய சட்டம் நாட்டில் புகையிலை விற்க அனுமதிக்கப்படும் சில்லறை விற்பனையாளர்களின் எண்ணிக்கையை சுமார் 6,000ல் இருந்து 600 ஆக குறைக்கிறது. மேலும் புகையிலையில் அனுமதிக்கப்பட்ட நிகோடின் அளவை குறைக்கவும் வழிவகை செய்கிறது.
- பீடி பற்ற வைத்துள்ளார். பின்னர் அதனை அணைக்காமல் தூக்கி போட்டதாக கூறப்படுகிறது.
- துரைசாமி சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் என்.தாசிரிபள்ளியை சேர்ந்தவர் துரைசாமி (வயது 85). விவசாயி. இவருக்கு புகை பிடிக்கும் பழக்கம் இருந்துள்ளது.
நொடிக்கொருமுறை பீடி பற்ற வைத்தவாறே இருப்பாராம். கடந்த 26-ந்தேதி அதிகாலை எழுந்த துரைசாமி வழக்கம்போல பீடி பற்ற வைத்துள்ளார்.
பின்னர் அதனை அணைக்காமல் தூக்கி போட்டதாக கூறப்படுகிறது. அந்த பீடியில் இருந்த தீக்கங்கு அருகே கிடந்த தென்னை ஓலைகளில் பற்றி துரைசாமி மீதும் தீப்பற்றியது.
இதில் உடல் கருகிய நிலையில் கிடந்த அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த துரைசாமி சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து வேப்பனபள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- புகை பிடிப்பதால், இந்தியாவில் ஆண்டுதோறும் 10 லட்சம் மரணங்கள் நிகழ்கின்றன.
- பக்கத்தில் இருந்து புகையை சுவாசிப்பவர்களில் 2 லட்சம் பேர் இறக்கிறார்கள்.
புதுடெல்லி :
தேசிய ஒருங்கிணைந்த நோய் கண்காணிப்பு திட்ட முதன்மை விசாரணை அதிகாரியும், பிரபல தொற்றுநோயியல் நிபுணருமான நரேஷ் புரோகித் ஒரு செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்தார். அதில் அவர் கூறியதாவது:-
அதிகமாக புகையிலை பயன்படுத்துபவர்களில் உலக அளவில் 2-வது இடத்தில் இந்தியா இருக்கிறது. இங்கு 26 கோடியே 80 லட்சம்பேர் புகையிலை பயன்படுத்துகிறார்கள்.
இளைஞர்களும், படிப்பறிவு இல்லாதவர்களும் பீடி, ஹூக்காவுக்கு பதிலாக சிகரெட்டுக்கு மாறிவிட்டார்கள். மேல்தட்டு மக்கள், சிகரெட்டுக்கு பதிலாக சிகாருக்கு மாறிவிட்டார்கள். ஆனால், சிகாரில், புற்றுநோயை உண்டாக்கும் வேதிப்பொருள் அதிகமாக இருக்கிறது.
இந்தியாவில், தினமும் 5 ஆயிரத்து 500 குழந்தைகள், புகையிலை பழக்கத்துக்கு அடிமை ஆகிறார்கள். அவர்களில் மூன்றில் ஒரு பங்கு பேர், புற்றுநோய், மாரடைப்பு, மூளை பக்கவாதம், ஆஸ்துமா போன்ற பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். பிறர் புகைக்கும்போது, பக்கத்தில் இருந்து புகையை சுவாசிப்பவர்களுக்கும் அதே தீங்கு ஏற்படும். அவர்களுக்கும் நுரையீரல் புற்றுநோய், இதய நோய்கள் ஏற்படும். குழந்தைகளுக்கு சுவாச தொற்று ஏற்படும்.
ஓட்டல், உணவகம், விமான நிலையம் ஆகிய இடங்களில் குறிப்பிட்ட பகுதிகளில் புகை பிடிக்க அனுமதி அளிக்கப்படுகிறது. அந்த பகுதிகளை ரத்து செய்து, பொது இடங்களில் 100 சதவீத தடை விதிக்க வேண்டும். அப்போதுதான், பாதிப்புகளை குறைக்க முடியும்.
புகை பிடிப்பதால், இந்தியாவில் ஆண்டுதோறும் 10 லட்சம் மரணங்கள் நிகழ்கின்றன. பக்கத்தில் இருந்து புகையை சுவாசிப்பவர்களில் 2 லட்சம் பேர் இறக்கிறார்கள். புகையில்லா புகையிலையை பயன்படுத்துவதால், 35 ஆயிரம்பேர் பலியாகிறார்கள்.
இந்தியாவில் புற்றுநோய் மரணங்களில் 27 சதவீத மரணங்கள், புகையிலை பயன்பாட்டால் ஏற்படுகின்றன. புகையிலையில் இருந்து உருவாகும் புகையில் புற்றுநோயை உருவாக்கும் 80 காரணிகள் இருக்கின்றன. பெண்களுக்கு கூட புகையிலை பழக்கத்தால், கர்ப்பப்பை வாய் புற்றுநோய், மார்பக புற்றுநோய் ஏற்படுகின்றன. புகை பழக்கத்தை விட முடியாதவர்கள், மனநல ஆலோசகரை அணுகினால் பலன் கிடைக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- பதிவு 8 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளுடன் வைரலாக பரவியது.
- பயனர்கள் பலரும் பொது சுகாதார விழிப்புணர்வுக்காக குரல் கொடுக்கும் டாக்டர் தீபக் கிருஷ்ணமூர்த்தியை பாராட்டி பதிவிட்டனர்.
சமூக வலைதளமான எக்ஸ் தளத்தில் சமீபத்தில் 23 வயது இளம்பெண் ஒருவர் புகை பிடிக்காதவர்களை தோல்வி அடைந்தவர்கள் என்று விமர்சித்து பதிவிட்டு இருந்தார். அதில், ஒரு நபர் சிகரெட் மற்றும் ஒரு கோப்பை தேநீர் வைத்திருக்கும் புகைப்படம் இருந்தது. அவரது இந்த பதிவு வைரலான நிலையில் பெங்களூருவை சேர்ந்த டாக்டர் தீபக் கிருஷ்ணமூர்த்தி அந்த பெண்ணின் பதிவை கடுமையாக சாடி உள்ளார்.
Hey smokers and losers (non smokers) wyd? pic.twitter.com/2HdWsy1JRc
— desi theka (@sushihat3r) May 5, 2024
அதோடு புகை பிடிக்காதவர்களை குறிவைத்து இழிவான கருத்துக்களுக்கு எதிராக ஒருநிலைப்பாட்டை எடுத்து, புகைபிடிப்பதால் ஒருவரது உடல் நலத்திற்கு ஏற்படும் தீமைகளை விளக்கி இருந்தார். அவரது இந்த பதிவு 8 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளுடன் வைரலாக பரவியது. இதை பார்த்த பயனர் ஒருவர் புகைப்பிடிப்பதை நிறுத்திய பிறகு அதன் விளைவை குறைக்க முடியுமா? என்று கேட்டார்.
மற்றொருவர் ஏன் புகை பிடிக்கிறார்கள் என்று எனக்கு தெரியவில்லை என பதிவிட்டு இருந்தார். பயனர்கள் பலரும் பொது சுகாதார விழிப்புணர்வுக்காக குரல் கொடுக்கும் டாக்டர் தீபக் கிருஷ்ணமூர்த்தியை பாராட்டி பதிவிட்டனர்.
The youngest patient I've sent for a triple bypass surgery was a 23y old girl smoker. #HeartAttack #MedTwitter
— Dr Deepak Krishnamurthy (@DrDeepakKrishn1) May 6, 2024
Be a loser (as per this lady) and live healthy. https://t.co/TsJI8qFrWG
- முகத்தை எப்பொழுதும் ஈரப்பதமாக வைத்திருக்க வேண்டும்.
- மன அழுத்தத்தில் இருந்தாலும் கொலாஜன் உற்பத்தி பாதிக்கப்படும்.
அழகாக இருக்க வேண்டும் என்று அனைவருக்கும் ஆசை தான். இதனால் பலரும் சந்தையில் விற்கப்படும் கிரீம்களை முகத்தில் அப்ளை செய்துவருகிறார்கள். சிலர் இயற்கை முறையில் தங்களை அழகு படுத்திக் கொள்கின்றனர். இருந்தாலும் பல நபர்களுக்கு இளம் வயதிலேயே தோல் சுருக்கங்கள் ஏற்படுகிறது. அதிலும் வயதானால் தோல் சுருக்கம் ஏற்படுவது இயல்பு தான். அதுவே இளம் வயதிலேயே தோல் சுருங்குகிறது என்றால் வருத்தமாக தான் இருக்கும். இதற்கு காரணம் நாம் எடுத்து கொள்ளும் உணவு முறை, பழக்க வழக்கம் போன்றவை தான் இளமையிலே முதுமை தோற்றம் வருவதற்கு காரணமாக இருக்கிறது.

புற ஊதா கதிர்கள் தான் தோல் சுருங்குவதற்கு காரணமாக அமைகின்றன. இந்த புற ஊதாக்கதிர்கள் தோலில் உள்ள கொலாஜன் உற்பத்தியை குறைத்து தோலினை சுருங்கச்செய்கிறது.
நீங்கள் வீட்டில் இருந்தாலும் சரி, வெளியில் சென்று வந்தாலும் சரி, வெயிலில் இருந்து உங்களை பாதுகாத்துக்கொள்ள உடல் முழுவதையும் ஆடைகளால் மறைத்துக்கொள்வது நல்லது.
இளமையை தக்கவைத்துக்கொள்வதற்கு புகைப்பழக்கம் மற்றும் மது குடிப்பது போன்றவற்றை தவிர்த்துவிடுவது நல்லது. இது ரத்த ஓட்டத்தை குறைத்துவிடும். இதனால் தோல்கள் பலம் இல்லாமல் தொங்க ஆரம்பித்துவிடும்.

ஒரு மனிதன் மன அழுத்தத்தில் இருந்தாலும் கொலாஜன் உற்பத்தி பாதிக்கப்படும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். இதனாலேயும் தோல் சுருக்கம் ஏற்படும். எப்பொழுதாவது மன அழுத்தம் ஏற்பட்டால் பிரச்சினை இல்லை. இதனால் மன அழுத்தம் ஏற்படும் போதெல்லாம் உங்களுக்கு பிடித்தவற்றை செய்து மன அழுத்தத்தில் இருந்து வெளியே வருவதற்கு முயற்சி செய்ய வேண்டும்.
வறண்ட சருமம் கொண்டவர்களுக்கு கூட தோல் சுருக்கங்கள் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. இதனால் வறண்ட சருமம் கொண்டவர்கள் முகத்தை எப்பொழுதும் ஈரப்பதமாக வைத்திருக்க வேண்டும்.

சரியாக தூங்காமல் இருந்தாலும் பிஎச் அளவு மற்றும் ஈரப்பதம் இவை இரண்டும் குறைந்து தோலின் ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது. மேலும் கொலாஜன் உற்பத்தியையும் குறைத்துவிடுகிறது. அதனால் சரியான தூக்கம் என்பது மிகவும் அவசியம்.
உடலில் சத்துக்கள் குறைந்தாலும் தோல் சுருக்கம் மற்றும் தோல் வியாதிகள் ஏற்படும். இதனால் தினமும் ஜூஸ் அல்லது ஏ.பி.சி. ஜூஸ் குடித்து வரும் போது தோலில் உள்ள சுருக்கங்கள் மறைந்து தோற்றம் பொலிவுபெறும்.
புகைப்பிடிப்பவர்கள் எளிதில் கொரோனா நோய்த்தொற்று பாதிப்புக்கு ஆளாக வாய்ப்பிருப்பதாக ஆய்வுகளும் கூறுகின்றன. ஏனெனில் புகைப்பழக்கம் நுரையீரல் செயல்பாட்டை குறைத்துவிடும்.
புகைப்பழக்கம் அல்லது பிற புகையிலைப்பொருட்களை பயன்படுத்தும்போது வாய் வழியாக வைரஸ் பாதிப்புக்கு ஆளாகுவதற்கான வாய்ப்புகளும் அதிகம் இருக்கிறது.
நுரையீரலின் ஆரோக்கியத்தை பாதுகாப்பதற்கு புகைப்பழக்கத்தை தவிர்க்க வேண்டியது அவசியமானது. புகைப்பழக்கத்தை கைவிட முயற்சிப்பவர்கள் ஒருசில பழக்கவழக்கங்களை கடைப்பிடிப்பதன் மூலம் நல்ல மாற்றத்தை உணரலாம்.
புதினா: இது பல மருத்துவ குணங்களை கொண்டது. புகைப்பழக்கத்தால் உண்டாகும் மோசமான விளைவுகளை குறைக்கவும், நுரையீரலில் உள்ள நிக்கோட்டினை அழிக்கவும் இது உதவும். புற்றுநோய் செல்கள் உருவாகுவதை தடுக்கவும் உதவும். புதினாவில் தயாரான மிட்டாய்களை கைவசம் வைத் திருப்பது நல்லது. புகைப்பிடிக்கும் எண்ணம் தோன்றும்போதெல்லாம் அதனை வாயில் போட்டு மெல்லலாம். இது புகைப்பழக்கத்தை திசை திருப்ப உதவும்.
ஜின்செங்: இது மருத்துவ குணம் கொண்ட ஒருவகையான வேர் தாவரமாகும். இதன் வேர் பகுதியை பொடித்து டீ தயாரித்து பருகலாம். இது புகைப்பொருட்கள் மீதான ஈர்ப்பை குறைக்கவும் உதவும். புகைப் பழக்கத்தை விட்டொழிப்பதிலும் சிறப்பான பங்களிப்பை வழங்கு வதாக பல ஆராய்ச்சிகளும் குறிப்பிடுகின்றன.
வைட்டமின் சி: புகைப்பிடிக்கும் நபர்களுக்கு ஊட்டச்சத்து குறைபாடு பிரச்சினை தலைதூக்கும். ஏனெனில் புகைப்பழக்கம், வைட்டமின் சி உள்பட அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உடலில் உறிஞ்சப்படுவதை தடுத்துவிடும். ஆரஞ்சு, கிவி, திராட்சை மற்றும் குடைமிளகாய், ப்ரோக்கோலி போன்ற வைட்டமின் சி சத்து நிரம்பிய உணவுகளை சாப்பிட்டு வரலாம். இந்த உணவுகள் வைட்டமின் சி அளவை மீட்டெடுக்க உதவும்.
தவிர்க்க வேண்டிய உணவுகள்: காபி, தேநீர், ஆல்கஹால் போன்ற காபினேட் பானங்களை உட்கொள்வதை குறைக்க வேண்டும். புகைப்பிடிக்கும்போது காபி பருகுவது மோசமான விளைவுகளை ஏற் படுத்திவிடும். புகைப்பழக்கத்தை கைவிட முயற்சிப்பவர்கள் இறைச்சி, மீன் போன்ற அசைவ உணவுகளை தவிர்க்க வேண்டும். அவை புகைப்பிடிக்க வேண்டும் என்ற ஏக்கத்தை உண்டாக்கிவிடக்கூடியவை. அதுபோல் இனிப்பு, காரமான உணவுகளையும் தவிர்த்துவிட வேண்டும். இனிப்பை அதிகம் சேர்ப்பது வேறு பல நோய் பாதிப்புகளுக்கும் வழி வகுத்துவிடும்.
பால் பொருட்கள்: புகைப்பிடிக்கும் உணர்வை கட்டுப்படுத்தும் தன்மை பாலுக்கு உண்டு. குறைந்த கொழுப்பு கொண்ட பால் பருகி வரலாம். நிகோட்டின் மற்றும் புகையிலை சார்ந்த ஆராய்ச்சி கட்டுரை ஒன்றில், ‘புகைப்பிடிப்பவர்களில் பெரும்பாலானோர் பால் பருகும்போது வாயில் ஒருவித கசப்பான சுவையை உணர்வதாக கூறி உள்ளனர்’ என்று குறிப் பிடப்பட்டுள்ளது. நீங்கள் புகைப்பழக்கம் கொண்டவர் என்றால் உங்கள் உடலில் பல்வேறு குறைபாடுகள் உருவாகுவது தவிர்க்கமுடியாதது என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின்ஏ, டி, பி 12, ரைபோபிளேவின், புரதம், பொட்டாசியம், துத்தநாகம், கோலைன், மெக்னீசியம் மற்றும் செலினியம் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் பாலில் நிறைந்திருக்கிறது. புகைப்பழக்கத்தை விட்டுவிட முயற்சிப்பவர்களுக்கு பால் சிறந்த உணவாகவும் கருதப்படுகிறது.
சிற்றுண்டி: புகைப்பிடிப்பதை விட்டுவிட முயற்சிக்கும்போது, சிற்றுண்டிகள் மீது ஆர்வம் அதிகரிக்கும். சர்க்கரை கலந்த சிற்றுண்டிகளை தவிர்த்துவிட வேண்டும். அதற்கு பதிலாக நட்ஸ் வகைகள், பீன்ஸ், பழங்கள், வேகவைத்த கொண்டைக்கடலை, மக்காச்சோளம் போன்றவற்றை தேர்ந்தெடுக்கலாம். புகைபிடிப்பது உடலில் ஒமேகா -3 அளவை குறைத்துவிடும். ஆளிவிதை மற்றும் அக்ரூட் பருப்புகளை உட்கொள்வதன் மூலம் அதை மீட்டெடுக்கலாம்.
பழங்கள்:பசி உணர்வை கட்டுப்படுத்துவதோடு ஊட்டச்சத்து குறைபாட்டையும் போக்கும் தன்மை பழங் களுக்கு உண்டு. பழங்களில் நார்ச்சத்துகள், அத்தியாவசிய வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் எண்ணற்ற ஆன்டி-ஆக்ஸிடென்டுகள் இருக்கின்றன. புகைப்பழக்கத்தை கைவிடும்போது இனிமையாக பசி உணர்வை அனுபவிப்பார்கள். இனிப்பு பொருட்களின் மீது நாட்டம் கூடும். அந்த சமயத்தில் நிறைவுற்ற கொழுப்புகள் மற்றும் கலோரிகள் நிறைந்த இனிப்புகளை ருசிப்பதற்கு பதிலாக திராட்சை, மாம்பழம், வாழைப்பழம், பப்பாளி போன்றவற்றை சாப்பிடலாம்.
கலோரிகள்: புகைப்பழக்கத்திற்கும், உடல் எடை அதிகரிப்புக்கும் தொடர்பு உண்டு. அதனால் கலோரிகள் அதிகம் கொண்ட உணவுகளை உட்கொள்ளக் கூடாது. அவை பிற நோய்களுக்கான அபாயத்தையும் அதிகரிக்கச்செய்துவிடும். மருத்துவ நிபுணரை கலந்தாலோசித்து புகைப்பழக்கத்தை விட்டொழிக்கும் வழி முறைகளை பின்பற்றுவது நல்ல பலனை கொடுக்கும்.
நீர்ச்சத்து: உடலில் இருந்து நிகோட்டின் உள்ளிட்ட நச்சுக்களை வெளியேற்றுவதற்கு நீர் உதவும். புகைப்பழக்கத்தை கைவிட முயற்சிக்கும்போது உடலில் நீர்ச்சத்தை தக்க வைக்க வேண்டியது முக்கியமானது. அது ஒட்டுமொத்த உடல் நலத்திற்கும் நன்மை சேர்க்கும். தினமும் 7 முதல் 8 டம்ளர் நீர் பருகலாம். இது தவிர சர்க்கரை சேர்க்காமல் பழ ஜூஸ் மற்றும் காய்கறி ஜூஸ், இளநீர் போன்றவற்றையும் பருகலாம்.