என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தென்னங்கன்றுகள்"

    • 120 விவசாயிகளுக்கு 240 இலவச தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டது.
    • நிகழ்ச்சியில் யூனியன் சேர்மன் செல்லம்மாள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    கடையம்:

    கடையம் வட்டாரம் சேர்வைக்காரன்பட்டி ஊராட்சியில் வேளாண்மை -உழவர் நலத்துறை சார்பில் கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம்-அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் இலவச தென்னங்கன்றுகள் வழங்கும் விழா நடைபெற்றது.

    இதில் முதல் கட்டமாக 120 விவசாயிகளுக்கு 240 இலவச தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டது. கடையம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ஏஞ்சலின் பொன்ராணி தலைமை தாங்கினார். . யூனியன் சேர்மன் செல்லம்மாள், ஒன்றிய கவுன்சிலர் புளிகணேசன், ஊராட்சி மன்ற தலைவர் ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வேளாண்மை அலுவலர் அபிராமி தென்னங் கன்றுகளை நடவு செய்யும் முறை மற்றும் பராமரிப்பு முறைகள் பற்றி விவசாயிகளுக்கு விளக்கமாக கூறினார். இதில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ராசம்மாள், வார்டு உறுப்பினர் சந்தனரோஜா, வேளாண்மை உதவி அலுவலர்கள் கமல்ராஜன், கிருஷ்ணமூர்த்தி, ஊராட்சி மன்ற செயலாளர் கதிரேசன் , விவசாயிகள் உள்பட பலர் திரளாக கலந்து கொண்டனர் .மேலும் கடையம் வட்டாரத்தில் கலைஞர் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யபட்டுள்ள தெற்குகடையம், ரவணசமுத்திரம், வீரா சமுத்திரம், அடைச்சாணி ஊராட்சிகளிலும் முதல் கட்டமாக இலவச தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டது.

    • மலேசியன் ஆரஞ்சு குட்டை, பச்சை குட்டை ரக தென்னங்கன்றுகள் உற்பத்தி செய்து விற்பனைக்கு தயாராக உள்ளது.
    • சென்னை தென்னை வளர்ச்சி வாரிய மண்டல அலுவலகம் மூலமாக வரவு வைக்கப்படுகிறது.

    உடுமலை :

    உடுமலையை அடுத்த தளியில் உள்ள தென்னை மகத்துவ மையமானது விவசாயிகளுக்கு தரமான தென்னை நாற்றுகளை உற்பத்தி செய்து வினிேயாகம் செய்தல், பல்வேறு விதமான பயிற்சிகளை அளித்தல், விஞ்ஞான ரீதியாக தென்னை சாகுபடி முறைகளை செயல் விளக்கம் செய்து காண்பித்தல் மற்–றும் தென்னையில் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல் உள்ளிட்ட தென்னை சார்ந்த தொழில்கள் தொடங்க தொழில் முனைவோரை ஊக்குவித்தல் போன்ற நோக்கங்களுக்காக செயல்பட்டு வருகிறது.

    இந்த மையத்தின் செயல் விளக்க மற்றும் விதை உற்பத்தி பண்ணையில் 23 ஆயிரம் மேற்கு கடற்கரை நெட்டை மற்றும் ஆயிரத்து 300 மலேசியன் ஆரஞ்சு குட்டை, பச்சை குட்டை ரக தென்னங்கன்றுகள் உற்பத்தி செய்து விற்பனைக்கு தயாராக உள்ளது. ஒரு நெட்டை ரக தென்னங்கன்றின் விலை ரூ.80-க்கும், குட்டை ரக கன்றின் விலை ரூ.90 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    தென்னங்கன்றுகள் தேவைப்படும் விவசாயிகள் 04252-265430 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு அலுவலக வேலை நாட்களில் தென்னங்கன்றுகளை வாங்கிச்செல்லலாம். தென்னங்கன்றுகள் வாங்கிச் செல்லும் போதே பரப்பு விரிவாக்கத் திட்டத்தின் கீழ் மானியம் பெறுவதற்கான விண்ணப்ப படிவம் வினியோகிக்கப்படுகிறது. குறைந்தது 0.1 ஹெக்டர் முதல் அதிகபட்சமாக நான்கு ஹெக்டேர் வரை அதாவது 15 கன்றுகள் முதல் 700 தென்னங்கன்று வரை ஒரு விவசாயி பெற்று பயன் அடையலாம்.

    ஒரு ஹெக்டேர் குட்டை ரக கன்றுகளுக்கு ரூ.7ஆயிரத்து 500-ம் நெட்டை ரக கன்றுகளுக்கு ரூ.6 ஆயிரத்து 500-ம் இரண்டு தவணைகளாக பிரித்து விவசாயிகளுடைய வங்கி கணக்கில் நேரடியாக சென்னை தென்னை வளர்ச்சி வாரிய மண்டல அலுவலகம் மூலமாக வரவு வைக்கப்படுகிறது. இதனால் மானிய விலையில் தென்னங்கன்றுகளை பெற்று விவசாயிகள் பயனடையலாம் என்று தென்னை வளர்ச்சி வாரிய மேலாளர் ஜி.ரகோத்தமன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் பிராந்தகம், சுங்ககாரன்பட்டி, கூடச்சேரி, வீரணம்பாளை யம் ஆகிய கிராமங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளன.
    • குடும்பங்களுக்கும் தலா 2 தென்னங்கன்று கள் பரமத்தி வட்டார வேளாண்மை துறை சார்பில் வழங்கப்பட்டு வருகிறது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பரமத்தி வட்டாரத்தில் நடப்பு நிதியாண்டில் கலை ஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் பிராந்தகம், சுங்ககாரன்பட்டி, கூடச்சேரி, வீரணம்பாளை யம் ஆகிய கிராமங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளன.

    இந்த கிராமங்களில் குடும்ப அட்டை வைத்துள்ள, தென்னை மரம் இல்லாத அனைத்து குடும்பங்களுக் கும் தலா 2 தென்னங்கன்று கள் பரமத்தி வட்டார வேளாண்மை துறை சார்பில் வழங்கப்பட்டு வருகிறது என பரமத்தி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் கோவிந்த சாமி தெரிவித்துள்ளார்.

    வேளாண் வளர்ச்சி திட்ட தொடக்க விழாவில் விவசாயிகளுக்கு தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டது.
    நீடாமங்கலம்:

    வலங்கைமான் வட்டாரத்தில் மேலவிடையல், மாணிக்கமங்கலம், அரவூர், ஏரிவேளூர்,மணலுர், மாளிகைதிடல், 83.ரெகுநாதபுரம், ஆகிய கிராமங்களில் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் தொடக்க விழா நடைபெற்றது.

    இதில் நடப்பாண்டிற்கான மானியத்தில் விவசாய பொருட்கள் வழங்கப்பட்டது.இந் நிகழ்வில் விவசாயி ஒருவருக்கு  3 தென்னங்கன்று ரூ.  150 மானியத்தில் வழங்கப்பட்டது.

    மேலும் வரப்பு உளுந்து 15ஹெக்டேருக்கு ஏக்கருக்கு ரூ.375மானியம்,கை தெளிப்பான் ரூ. 750 மானியத்தில் 5 நபர்களுக்கும், விசை தெளிப்பான் 5 நபர்களுக்கு ரூ.1500 மானியத்திலும், ஜீங் சல்பேட் 1 ஏக்கருக்கு 10 கிலோ வீதம் ரூ.300 மானியம், ஜுப்சம் 1 ஏக்கருக்கு 200 கிலோ வீதம் ரூ.300 மானியத்தில் வழ்ங்கப்பட்டது.

    மேலும் தோட்டகலை துறை சார்பில் 128 நபர்களுக்கு ரூ.45 மானியத்தில் காய்கறி விதைகள் வழங்கப்பட்டன.இந்நிகழ்ச்சியை வேளாண் துறை உதவி இயக்குநர் ஜெயசீலன் ஏற்பாடு செய்தார்.

    இதில் ஊராட்சி மன்ற தலைவர்கள், வேளாண் துறை,  பொறியியல் துறை, மகளிர் திட்டம், கால்நடை துறை, ஒன்றிய கவுன்சிலர் அன்பரசன் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்,பயனாளர்கள் கலந்து கொண்டனர்.

    வீட்டுக் காய்கறித் தோட்ட விதைகள் மற்றும் உரங்கள், உளுந்து விதைகள், ஸ்பிரேயர்கள் போன்றவை வழங்கப்பட்டன.

    அவினாசி:

    அவினாசியை அடுத்து ஆட்டையாம்பாளையத்தில் உள்ள ஒரு மண்டபத்தில், தமிழக முதலமைச்சர் சென்னை தலைமைச் செயலகத்தில் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டப் பணிகளை தொடங்கி வைத்த நிகழ்ச்சி கானொலி காட்சி மூலம் ஒளிபரப்பப்பட்டது.

    இதையடுத்து அவினாசி வட்டாரம் செம்பியநல்லூர்கிராம விவசாயிகளுக்கு வேளாண்மை துறை, தோட்டக்கலை துறை சார்பாக இலவசமாக தென்னங்கன்றுகள் ,வீட்டுக் காய்கறித் தோட்ட விதைகள் மற்றும் உரங்கள், உளுந்து விதைகள், ஸ்பிரேயர்கள் போன்றவை வழங்கப்பட்டன.

    நிகழ்ச்சியில் செம்பியநல்லூர் ஊராட்சிமன்ற தலைவர் வி.கே. சுதா, ஊராட்சி மன்ற துணைத் தலைவர் தனலட்சுமி, அவினாசி ஆத்மா தொழில்நுட்ப தலைவர் சின்னக்கண்ணன் என்கிற ஆறுமுகம், ரமேஷ் காந்திமதி உள்பட திரளான விவசாயிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைத்து விவசாயிகளுக்கு நல வாரிய திட்டத்தின் கீழ் அமைப்பு சாரா தொழிலாளர்களை பதிவு செய்வதற்கான முகாமும் நடைபெற்றது. மேலும் மக்களை தேடி மருத்துவம் அமைப்பின் கீழ், வந்திருந்த அனைவருக்கும் மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.

    ×