என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சமையல் எண்ணெய்"

    • மாட்டுக்கொழுப்பில் இருந்து தயாரிக்கப்பட்ட எண்ணெயை சமையல் எண்ணெயுடன் கலப்படம் செய்து பேரல்களில் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தது.
    • போலீசார் அங்கிருந்த கலப்பட எண்ணெய் மற்றும் மாட்டு தோல்களை பறிமுதல் செய்தனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் காக்கிநாடா மாவட்டம் துனி ராமகிருஷ்ணா நகரில் பசு மாடுகளை கொன்று அதன் கொழுப்பில் இருந்து எண்ணெய் தயாரித்து சமையல் எண்ணெயுடன் கலப்படம் செய்வதாக போலீசார் மற்றும் சமூக ஆர்வலர்களுக்கு புகார் வந்தது.

    இதையடுத்து போலீசார் மற்றும் சமூக ஆர்வலர்கள் அங்கு சென்று பார்த்தனர். அங்குள்ள கால்வாய்களில் ரத்தம் வழிந்து ஓடிய கறைகள் படிந்திருந்தது.

    மேலும் அப்பகுதியில் மாட்டு கழிவுகள் கொட்டப்பட்டு இருந்தது. அங்கு பயங்கரமாக துர்நாற்றம் வீசியது. போலீசார் வருவதைக் கண்டு அங்கிருந்த கும்பல் தப்பி சென்றனர். இதையடுத்து போலீசார் அதிரடியாக அங்குள்ள குடோனுக்குள் சென்று சோதனை நடத்தினர்.

    அங்கு மாட்டுக்கொழுப்பில் இருந்து தயாரிக்கப்பட்ட எண்ணெயை சமையல் எண்ணெயுடன் கலப்படம் செய்து பேரல்களில் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தது. இதனைப் பார்த்து போலீசார் அதிர்ச்சியடைந்தனர். இந்த கும்பல் மாடுகளை கொன்று எண்ணெய் தயாரித்து வந்தது தெரியவந்தது. போலீசார் அங்கிருந்த கலப்பட எண்ணெய் மற்றும் மாட்டு தோல்களை பறிமுதல் செய்தனர்.

    இந்த கும்பல் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
    • ரூ.3 கோடியே 20 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ளது

    வேங்கிக்கால்:

    திருவண்ணாமலை அடுத்த தெள்ளானந்தல் கிராமத்தில் வேளாண் விற்பனை மற்றும் வணிக வரித்துறை சார்பில் ரூ.3 கோடியே 20 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள சமையல் எண்ணெய் சந்தைப்படுத்துதல் மற்றும் ஊக்குவிப்பு மையத்தை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

    அதனை தொடர்ந்து துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி குத்து விளக்கேற்றி மையத்தின் செயல்பாடுகளை பார்வையிட்டார்.

    இந்த நிகழ்ச்சியில் துணை சபாநாயகர் கு,பிச்சாண்டி பேசியதாவது:-

    மணிலா உற்பத்தியில் இந்தியாவிலேயே திருவண்ணாமலை மாவட்டம் முதல் இடத்தில் உள்ளது. மணிலாவை எண்ணெய்யாக மாற்றி விற்பனை செய்தால் விவசாயிகளுக்கு அதிக லாபம் கிடைக்கும் என்பதற்காக இந்த மையம் அமைக்கப்பட்டுள்ளது.

    ஆண்டுக்கு ஒரு மாதம் மட்டுமே மழை பெய்யும் இஸ்ரேல் நாட்டில் மழை நீரை சேமித்து ஆப்பிள் மற்றும் மாதுளை பழங்களை விளைவித்து உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றனர்.

    விவசாயிகள் கூட்டாக இணைந்து செயல்பட்டால் அதிக விளைச்சலுடன் அதிக லாபத்தையும் ஈட்டலாம். திருவண்ணாமலையில் டான்காப் என்ற ஆலை ஆரம்பிக்கப்பட்டது. அது பல்வேறு காரணங்களுக்காக மூடப்பட்டது.

    தற்போது துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றியம் தெள்ளானந்தால் கிராமத்தில் சமையல் எண்ணெய் சந்தைப்படுத்துல் மற்றும் ஊக்குவிப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது.

    விவசாயிகள் மற்றும் விவசாய சங்கங்கள் இன்று திறக்கப்பட்டுள்ள மையம் குறித்து துண்டு பிரசுரம் அச்சிட்டு விநியோகித்தால் அதற்கு நல்ல பலன் கிடைக்கும்.

    இந்த மையத்தால் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 20 ஆயிரம் விவசாயிகள் பயன்பெறுவார்கள். விவசாயிகளின் உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்தவும் அதற்கு நல்ல விளை கிடைப்பதற்காகவும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் உருவாக்கப்பட்டுள்ளது என இவ்வாறு அவர் பேரினார்.

    இதில் கலெக்டர் பா.முருகேஷ், மாநில தடகள சங்க துணை தலைவர் டாக்டர் எ.வ.வே.கம்பன், பெ.சு.தி.சரவணன் எம்.எல்.ஏ, துரிஞ்சாபுரம் ஒன்றிய குழு தலைவர் தமயந்தி, வேளாண் இணை இயக்குநர் அரக்குமார், துணை இயக்குநர் சிவக்குமார், விற்பனை குழு செயலாளர் சந்திரசேகர், உழவர் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க தலைவர் செல்வராஜ், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் ஆராஞ்சி ஆறுமுகம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • எண்ணெய் இறக்குமதிக்கான வரி 25 சதவீதம் உயர்வு.
    • லிட்டருக்கு ரூ.30 வரை கூடியுள்ளது.

    சென்னை:

    எண்ணெய் இறக்குமதிக்கான வரியை மத்திய அரசு 25 சதவீதம் வரை உயர்த்தி உள்ளது. இதனால் எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

    பெட்ரோல், டீசல், தங்கம், வெள்ளியை போல எண்ணெய் விலையும் தினமும் நிர்ணயிக்கப்படுகிறது.

    அனைத்து சமையல் எண்ணெய், கடலை எண்ணெய், தீப எண்ணெய் வகைகள் திடீரென உயர்ந்துள்ளன. எண்ணெய் மார்க்கெட்டில் தினசரி நிர்ணயிக்கப்படும் விலை கடந்த 3 நாட்களாக அதிகரித்துள்ளது.


    பாமாயில் ஒரு லிட்டருக்கு ரூ.15 உயர்ந்துள்ளது. 90 ரூபாய்க்கு விற்கப்பட்ட பாமாயில் மளிகை கடைகளில் தற்போது ரூ.110 வரை விற்கப்படுகிறது.

    சுத்திகரிக்கப்பட்ட சமையல் எண்ணெய், கடலை எண்ணெய், நல்லெண்ணை போன்றவை லிட்டருக்கு ரூ.30 வரை கூடியுள்ளது. சில்லரை வியபாரிகள் மொத்த வியாபாரிகளிடம் எண்ணெய் ஆர்டர் கொடுக் கும் போது விலையேற்றத்தை கூறியதோடு மட்டுமின்றி இன்னும் விலை உயர வாய்ப்பு இருப்பதாக தெரி வித்தனர்.

    மளிகைக் கடைகளில் உயர்த்தப்பட்ட திடீர் எண்ணெய் விலையை கேட்டு பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுகுறித்து மளிகை கடை வியாபாரிகள் கூறும்போது, எல்லா எண்ணெய் வகைகளும் 3 நாட்களில் உயர்ந்து விட்டன. மத்திய அரசின் இறக்குமதி வரி உயர்வின் காரணமாக இந்த விலையேற்றம் ஏற்பட்டு உள்ளது. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்படு கிறார்கள்.

    தற்போது பண்டிகை காலம் என்பதால் எண்ணெய் பயன்பாடு அதிகரித்து உள்ளது. ஓட்டல்களில், இனிப்பு, காரம் தயாரிப்பு களுக்கு பயன்படுத்தப்படும் பாமாயில் விலை உயர்வு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

    தீபாவளி பண்டு பிரித்து இருப்பவர்கள் தங்களது வாடிக்கையாளர்களுக்கு எண்ணெய், இனிப்பு வழங்கு வார்கள். இந்த விலை உயர்வு அவர்களையும் பாதித்துள்ளது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    சென்னையில் உள்ள எண்ணெய் உற்பத்தி நிறுவனம் தரப்பில் கூறும்போது, இறக்குமதி வரியின் காரணமாக எல்லா எண்ணெய் வகைகளும் உயந்துள்ளன. பாமாயில் விலை 10 பாக்கெட்டுகள் கொண்ட பெட்டிக்கு ரூ.100 உயர்ந்தது. தீப எண்ணெய் பெட்டி ரூ.1035-ல் இருந்து ரூ.1230 ஆக உயர்ந்தது என்றார்.


    கடலை பருப்பு

    இதே போல கடலை பருப்பு விலை கிலோவிற்கு 15 ரூபாய் கூடியுள்ளது. ரூ.90-க்கு விற்கப்பட்டது. தற்போது ரூ.105 ஆக கூடியுள்ளது. பச்சை பட்டாணி, வெள்ளை மூக்கடலை போன்றவற்றின் விலையும் உயர்ந்துள்ளது.

    • இந்தியாவில் சமையல் எண்ணெய்கள் அதிக அளவில் மலேசியா உள்பட வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது.
    • மத்திய அரசின் இறக்குமதி வரி உயர்வு மற்றும் சில நாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள போரால் மலேசியாவில் சமையல் எண்ணெய் விலை உயர்ந்துள்ளது.

    சேலம்:

    நமது அன்றாட சமையலில் சமையல் எண்ணெய் முக்கிய பங்கு வகிக்கிறது. வெவ்வெறு வகையான எண்ணெய்களை நம்முடைய அன்றாட உணவில் சேர்ப்பதன் மூலம் பல்வேறு பலன்கள் கிடைக்கிறது. சமையலுக்கு சரியான எண்ணெய் பயன்படுத்துவதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இதனால் சமையல் எண்ணெய் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.

    உணவுகளில் எண்ணெய் இல்லாத உணவுகளை எடுத்து கொண்டால் அதிக சோர்வு மற்றும் உடல் நிலை சரியில்லாமல் போவதற்கான வாய்ப்புகள் உள்ளன. எண்ணெயில் இருந்து கிடைக்கும் கொழுப்பு உடலுக்கு மிகவும் முக்கியம், அவை மூளை நரம்பு மண்டலங்களை சிறப்பாக இயங்க உதவி புரியும். மார்க்கெட்டுகளில் பல்வேறு விதமான சமையல் எண்ணெய்கள் விற்பனைக்கு குவிக்கப்பட்டாலும் தரமான எண்ணெய்களை நாம், தேடி தேர்வு செய்ய வேண்டும்.

    இந்தியாவில் சமையல் எண்ணெய்கள் அதிக அளவில் மலேசியா உள்பட வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. ஆனால் முக்கியத்துவம் வாய்ந்த இத்தகைய எண்ணெயின் விலை தற்போது அதிக அளவில் உயர்ந்துள்ளது. கடந்த செப்டம்பர் மாதத்தில் ஒரு லிட்டர் சமையல் எண்ணெய் 110 ரூபாய்க்கு விற்கப்பட்டது. பின்னர் மத்திய அரசு இறக்குமதி வரியை உயர்த்தியதால் தீபாவளி நேரத்தில் லிட்டருக்கு 20 ரூபாய் உயர்ந்தது.

    பின்னர் தீபாவளி பண்டிகை முடிந்ததும் விலை குறையும் என்று மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால் அதற்கு மாறாக லிட்டருக்கு மேலும் 20 ரூபாய் உயர்ந்தது. இதனால் பல்வேறு சமையல் எண்ணெய்கள் ஒரு லிட்டர் தற்போது 150-ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் கடந்த 2 மாதங்களில் மட்டும் சமையல் எண்ணெய் ஒரு லிட்டருக்கு 40 ரூபாய் வரை உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த திடீர் விலை உயர்வால் நடுத்தர மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    இந்த விலை உயர்வுக்கு காரணம் குறித்து சேலம் மாவட்ட எண்ணெய் வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் கூறுகையில் , மத்திய அரசின் இறக்குமதி வரி உயர்வு மற்றும் சில நாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள போரால் மலேசியாவில் சமையல் எண்ணெய் விலை உயர்ந்துள்ளது. மலேசியாவில் இருந்து அதிக அளவில் சமையல் எண்ணெய் மற்றும் எண்ணெய் வித்துகள் இந்தியா இறக்குமதி செய்வதால் இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு மேலும் சில மாதங்கள் நீடிக்கும். தற்போதைக்கு விலை குறைய வாய்ப்பில்லை இவ்வாறு அவர்கள் கூறினர் .

    • எண்ணெயின் பயன்பாட்டை 10 சதவீதம் குறைத்தாலே நோய்களிலிருந்து விடுபடலாம்.
    • தினமும் உடற்பயிற்சி மற்றும் சத்தான உணவில் கவனம் செலுத்த வேண்டும்

    புதுடெல்லி:

    புதுடெல்லியில் நடைபெற்ற 38-வது தேசிய விளையாட்டுப் போட்டியின் தொடக்க விழாவை பிரதமர் தொடங்கி வைத்தார். விளையாட்டு வீரர்கள் குழுமியிருந்த அக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:-

    மாறிவரும் வாழ்க்கை சூழல், உடற்பயிற்சி இன்மை, துரித உணவு பழக்கங்களால் நம் நாட்டில் உடன் பருமன் உள்ள நபர்கள் அதிகரித்து வருகின்றனர். சமையல் எண்ணெயை அதிகமாக உட்கொள்வது, உடல் பருமன் அதிகரிப்பதற்கு முக்கிய காரணியாக உள்ளது. முதியவர்கள் மட்டுமின்றி இளைஞர்களும் கூட இதனால் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    அன்றாட உணவில் சமையல் எண்ணெய் பயன்பாட்டை குறைத்துக் கொண்டாலே உடல் பருமன், நீரிழிவு மற்றும் இதய நோய்களிலிருந்து விடுபடலாம்.

    ரேஷனில் கிடைக்கும் 2 லிட்டர் எண்ணெயின் பயன்பாட்டை 10 சதவீதம் குறைத்தாலே போதும் நாம் பலவிதமான நோய்களிலிருந்து விடுபடலாம்.

    தினமும் உடற்பயிற்சி செய்வதோடு மட்டுமல்லாமல் சமச்சீரான மற்றும் சத்தான உணவில் கவனம் செலுத்த வேண்டும் எனவும் நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்தார்.

    கடுகு எண்ணெய் மற்றும் கடலை எண்ணெய்யை உடல் ஆரோக்கியத்திற்கு சிறந்தது என இந்திய தேசிய மருத்துவ ஆராய்ச்சி கழகம் மற்றும் தேசிய ஊட்டச்சத்து நிறுவனம் கூறியுள்ளது.

    கடுகு எண்ணெய், கடலை எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய், சோயா எண்ணெய் என்று ஒவ்வொரு முறையும் சுழற்சி முறையில் சமையலில் பயன்படுத்தினால் உடல் ஆரோக்கியம் மேம்படும் எனவும் தேசிய ஊட்டச்சத்து நிறுவனம் அறிவுறுத்தி உள்ளன.

    20 லட்சம் டன் சூரியகாந்தி, சோயா எண்ணெயை வரியின்றி இறக்குமதி செய்து கொள்ளலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
    சூரியகாந்தி, சோயா எண்ணெய் இறக்குமதி செய்வதற்கான வரியில் விலக்கு அளித்து மத்திய அரசு அறிவித்துள்ளது. சமையல் எண்ணெய்களின் விலை உயர்வை கட்டுப்படுத்தும் வகையில் வரி விலக்கு அளித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

    2024 மார்ச் வரை ஆண்டுக்கு 20 லட்சம் மெட்ரிக் டன் சமையல் எண்ணெய் இறக்குமதிக்கு செஸ் மற்றும் சுங்க வரி விலக்கு செய்துள்ளது. 20 லட்சம் டன் சூரியகாந்தி, சோயா எண்ணெயை வரியின்றி இறக்குமதி செய்து கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதையும் படியுங்கள்.. இந்தோ- பசிபிக் பகுதியில் அமைதியை உறுதி செய்த குவாட் அமைப்பு
    ×