என் மலர்
நீங்கள் தேடியது "ஜெயலலிதா பிறந்தநாள்"
- ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி 51 ஏழை எளிய மணமக்களுக்கு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திருமணத்தை நடத்தி வைக்கிறார்.
- இந்த தகவலை முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
மதுரை
ஜெயலலிதா பேரவை மற்றும் மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் டி.குன்னத்தூரில் உள்ள அம்மா கோவிலில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதய குமார் பேசியதாவது:-
வெள்ள தடுப்பு மற்றும் வெள்ளமீட்பு நடவடிக்கை களை தி.மு.க. அரசு எடுக்காத காரணத்தால், தற்போது தண்ணீரில் தமிழகம் தத்தளிக்கிறது. இதனால் மக்கள் கண்ணீரில் மிதக்கிறார்கள். அவர்களுக்கு எடப்பாடி பழனிசாமி ஆணைக்கிணங்க ஜெயலலிதா பேரவை சார்பிலும், மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பிலும் நிவாரணம் வழங்கப்படும்.
மேலும் பருவ மழை யால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.30ஆயிரம் இழப்பீடு தொகையை தி.மு.க. அரசு உடனடியாக வழங்க வேண்டும்.7 பேர் விடுதலைக்கு 2014-ம் ஆண்டு முதல் முதலாக விடுதலைக்கு வித்திட்டவர் ஜெயலலிதா. அதனை தொடர்ந்து 2018-ம் ஆண்டு எடப்பாடி பழனிசாமி தீர்மானத்தை நிறைவேற்றினார். 7 பேர் விடுதலைக்கு முக்கிய காரணமாக இருந்தவர்கள் இந்த இருவர் மட்டும் தான்.
எம்.ஜி.ஆரின் 106-வது பிறந்த நாளை முன்னிட்டும், ஜெயலலிதா வின் 75-வது பிறந்தநாளை முன்னிட்டும், அ.தி.மு.க.வின் 51-வது பொன்விழாவை முன்னிட்டும், ஜெயலலிதா பேரவை சார்பிலும், மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பிலும் பிப்ரவரி 23-ந் தேதி, டி. குன்னத்தூரில் உள்ள அம்மா கோவிலில் 51 ஏழை எளிய மணமக்களுக்கு, இடைக்கால பொதுச் செயலாளர், முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திருமணத்தை நடத்தி வைக்கிறார். இதில் முன்னாள் மூத்த அமைச்சர்கள், தலைமை கழக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் பங்கேற்கி றார்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
- எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா பிறந்தநாளை மக்கள் மத்தியில் அடையாளப்படுத்தும் வகையில் மிக பிரமாண்டமாக கொண்டாடுவது பற்றி விவாதிக்கப்பட்டது.
- திருமணங்களை இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நடத்தி வைக்கிறார்.
சென்னை:
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. அலுவலகத்தில் ஜெயலலிதா பேரவை நிர்வாகிகள் ஆலோசனை நடந்தது. பேரவை செயலாளர் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமை தாங்கினார். அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விசுவநாதன், திண்டுக்கல் சீனிவாசன், பா.வளர்மதி, தளவாய் சுந்தரம், கோகுல இந்திரா உள்பட பேரவை மாவட்ட செயலாளர்கள் கலந்துகொண்டனர்.
இந்த கூட்டத்தில் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா பிறந்தநாளை மக்கள் மத்தியில் அடையாளப்படுத்தும் வகையில் மிக பிரமாண்டமாக கொண்டாடுவது பற்றி விவாதிக்கப்பட்டது.
முதல்கட்டமாக ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி அடுத்த மாதம் (பிப்ரவரி) 23-ந்தேதி மதுரை குன்றத்தூரில் 51 ஜோடிகளுக்கு இலவச திருமணங்கள் நடத்த முடிவு செய்யப்பட்டது.
இந்த திருமணங்களை இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நடத்தி வைக்கிறார். இந்த ஜோடிகளில் ஆர்.பி.உதயகுமாரின் மகள் பிரியதர்ஷினி-முரளி ஜோடியும் ஒன்று. கூட்டத்தில் மேலும் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
மீண்டும் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அம்மா ஆட்சி மலர அயராது உழைத்திட உறுதி ஏற்போம். எடப்பாடியார் தலைமையில் அம்மா ஆட்சி மலர்கின்ற வரையில் களத்தில் மக்களுக்கான போராட்டத்தை தொடர்ந்து நடத்துவோம். புதிய வெற்றி வரலாற்றை உணர்த்திட ஒற்றுமையோடு தொடர்ந்து உழைப்போம் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
- ஏராளமான ஜெயலலிதாவின் விருப்பங்கள் நிறைவேற்றப்படாமல் நிலுவையில் இருக்கின்றன.
- ஜெயலலிதாவால் அங்கீகாரம் பெற்று, கட்சியிலும், ஆட்சியிலும் பதவி பெற்றவர்கள், இன்றைக்கும் உயர்ந்த நிலையில் இருக்கிறார்கள்.
சமீபத்தில் ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன், சைதை துரைசாமி மூலம் ஒரு கல்வி அறக்கட்டளை தொடங்கும் முயற்சியில் ஜெயலலிதா இருந்தார் என்று முகநூலில் ஒரு பதிவு வெளியிட்டிருந்தார்.
இதுகுறித்து என்னிடம் பலரும் விசாரித்த நிலையில், ஜெயலலிதாவின் பிறந்தநாளன்று அவரது நிறைவேறாத கனவை அ.தி.மு.க. தலைவர்களுக்கும், பொறுப்பாளர்களுக்கும், தொண்டர்களுக்கும், பொதுமக்களுக்கும் தெரிவிக்க வேண்டியது என் கடமை என்றே கருதுகிறேன்.
நான் பெருநகர சென்னை மேயராக இருந்தபோது, என்னுடைய சொந்த நிதியில் நடத்திவரும் மனிதநேய இலவச ஐ.ஏ.எஸ். அறக்கட்டளை பணியை விரிவுபடுத்துவதற்காக அதிக நிதி தேவைப்பட்டது. எனவே, எனது குடும்ப உறுப்பினர்களுக்கு சொந்தமான ஒரு மதிப்புமிக்க சொத்தை விற்பனை செய்து, அதில் பெரும் தொகையை வைப்பு நிதியாக வைத்து, அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் மனிதநேய அறக்கட்டளையை நடத்துவதற்கு முடிவெடுத்தேன்.

ஜெயலலிதா முன்னிலையில் பெருநகர சென்னை மாநகராட்சி மேயராக சைதை துரைசாமி பொறுப்பேற்றுக்கொண்ட காட்சி.
நான் மேயராக இருந்ததால், சொத்து விற்பனை குறித்து, ஜெயலலிதாவிடம் அனுமதி பெறுவதற்காக, 2015-ம் ஆண்டு ஒரு கடிதம் கொடுத்தேன். என் கடிதத்தைப் பார்த்ததும் ஜெயலலிதா எனக்கு அழைப்பு விடுத்தார். நான் அவரை சந்தித்ததும், 'நீங்கள் மனிதநேய அறக்கட்டளையை யாருடைய உதவியும் இன்றி, சொந்த நிதியில், மிகச்சிறப்பாகவும், மிகத்திறமையாகவும் நடத்திவருவதைப் பார்த்து உண்மையிலே நான் பெருமைப்படுகிறேன். இப்போது சொத்தை விற்பனை செய்வதற்கு என்ன அவசியம்?' என்று கேட்டார்.
உடனே நான், 'அம்மா… நமது தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட 12,500-க்கும் மேற்பட்ட கிராம ஊராட்சி மன்றங்கள் உள்ளன. அத்தனை கிராமத்தைச் சேர்ந்த ஏழை மாணவர்கள் படிப்பதற்கும், பயிற்சி வகுப்புகளில் சேர்ந்து, போட்டித் தேர்வுகளில் பங்கெடுக்க வேண்டும். மனிதநேயம் தன்னால் இயன்ற உதவியை செய்ய வேண்டும் என்று விரும்புகிறேன்' என்றேன்.
உடனே நெகிழ்ந்து போன ஜெயலலிதா, "உங்கள் நோக்கம் மிகவும் சிறப்பானது. மனிதநேயம் அறக்கட்டளைக்காக எந்த ஒரு சொத்தையும் நீங்கள் விற்பனை செய்யக்கூடாது. அவை எல்லாம் உங்கள் மகன் வெற்றிக்குத்தான் சேர வேண்டும். தற்போது நீங்கள் செய்ய விரும்பும் விரிவாக்கப் பணிக்கான அனைத்து உதவிகளையும் நான் செய்து தருகிறேன்'' என்று கூறினார்.
மேலும் அவர், "நான் உங்களுக்கு ஒரு மிகப்பெரிய வாய்ப்பும் பொறுப்பும் தருகிறேன். என் பெயரிலும் ஒரு அறக்கட்டளை தொடங்கி, நீங்கள் விரும்பும் வகையில் மாணவர்களுக்கு சேவை செய்யுங்கள். கடைசி மனிதன் இருக்கும் வரையில் என் பெயரிலான அறக்கட்டளை தொடர்ந்து இயங்க வேண்டும். அறக்கட்டளைக்கு தேவையான வைப்பு நிதியை நான் தருகிறேன். மேலும், சில சொத்துகளை அறக்கட்டளை பெயரில் எழுதி வைக்கிறேன். அந்த வருமானத்தில் இருந்து அறக்கட்டளை எல்லா காலமும் தொடர்ந்து இயங்க வேண்டும்'' என்று கேட்டார்.
பின்னர் என்னிடம், "நீங்கள் நேர்மையாகவும், திறமையாகவும் செயல்படுவதாலே, இந்த அறக்கட்டளை நடத்தும் பொறுப்பை உங்களிடம் ஒப்படைக்கிறேன். நீங்கள் பூங்குன்றனை உடன் இணைத்து அறக்கட்டளையை நடத்துங்கள். உங்கள் இருவர் மீதும் எனக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது. எனக்கு அம்மா உணவகம் மூலம் மக்களிடம் நல்ல பெயர் வாங்கிக் கொடுத்தீர்கள். அதேபோல், இந்த அறக்கட்டளைக்கும் மக்களிடம் எனக்கு நல்ல பெயர் கிடைக்க வேண்டும்'' என்று தனது அக்கறையை வெளிப்படுத்தினார்.
அதன் பிறகு, 2 முறை ஜெயலலிதாவிடம் இந்த இலவச கல்வி அறக்கட்டளை பற்றி நேரில் சந்தித்தபொழுது கேட்டேன். "விரைவில் உங்களை அழைக்கிறேன்'' என்று உறுதி அளித்தார். ஆனால், அதன்பிறகு ஜெயலலிதாவுக்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவு மற்றும் சில காரணங்களால், அவரது ஆசை அடுத்தகட்டத்துக்கு நகரவே இல்லை. ஜெயலலிதாவின் கனவு நிறைவேறவில்லை என்ற வருத்தத்தையே அவரது உதவியாளர் பூங்குன்றன் பதிவாக வெளியிட்டிருக்கிறார்.
இப்படி ஏராளமான ஜெயலலிதாவின் விருப்பங்கள் நிறைவேற்றப்படாமல் நிலுவையில் இருக்கின்றன.
இப்போதும், பூங்குன்றன் வெளிப்படையாக இதை சொன்னதால், இந்த உண்மையை பொதுவெளியில் வெளியிடுகிறேன்.
ஜெயலலிதாவால் அங்கீகாரம் பெற்று, கட்சியிலும், ஆட்சியிலும் பதவி பெற்றவர்கள், இன்றைக்கும் உயர்ந்த நிலையில் இருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து அல்லது தனித்தனியாக ஜெயலலிதா பெயரில் அறக்கட்டளை நிறுவி, அவருடைய லட்சியக் கனவை நிறைவேற்றுவதற்கு முயற்சி எடுக்க வேண்டும்.
1980-ம் ஆண்டு எம்.ஜி.ஆர். சொன்ன, "நீதான் அ.தி.மு.க.வின் முதல் மேயர்.." என்ற கனவை நனவாக்கி, 5.20 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறவும், பதவியேற்பு நிகழ்ச்சிக்கு நேரில் வந்தும் என்னை அங்கீகரித்தவர் ஜெயலலிதா. எனவே ஜெயலலிதாவுக்காக, எம்.ஜி.ஆர். தொண்டன் சைதை துரைசாமி, எதையும் செய்ய தயாராக இருக்கிறேன். ஜெயலலிதாவின் புகழ் காலத்தை வென்று வாழட்டும்.
- பெருநகர சென்னை மாநகராட்சி முன்னாள் மேயர் சைதை துரைசாமி
- உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு பின் முதல்முறையாக அதிமுக அலுவலகத்திற்கு ஈபிஎஸ் வருகை.
- ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவித்து எடப்பாடி பழனிசாமி மரியாதை.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 75வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் தீவிரமாக ஏற்பாடுகள் செய்யப்பட்டது.
இந்நிலையில், உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு பின் முதல்முறையாக அதிமுக அலுவலகத்திற்கு ஈபிஎஸ் வருகை தந்த எடப்பாடி பழனிசாமி, அங்குள்ள ஜெயலலிதாவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதற்கு முன்பாக, சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள தனது இல்லத்தில் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி ஜெயலலிதாவின் உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
- கண்டனூரில் ஜெயலலிதா பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடந்தது.
- முன்னாள் பேரூராட்சி தலைவர் ஆறுமுகம் தலைமை தாங்கினார்.
காரைக்குடி
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. சார்பில் ஜெயலலிதாவின் 75-வது பிறந்தநாள் பொதுக்கூட்டம் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆணைக்கிணங்க காரைக்குடி அருகே உள்ள கண்டனூரில் நடந்தது.
முன்னாள் பேரூராட்சி தலைவர் ஆறுமுகம் தலைமை தாங்கினார்.சாக்கோட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் செந்தில்நாதன், காரைக்குடி நகர செயலாளர் மெய்யப்பன், சாக்கோட்டை ஒன்றிய தலைவர் சரண்யா செந்தில்நாதன் முன்னிலை வகித்தனர்.கண்டனூர் பேரூராட்சி செயலாளர் சேகர் வரவேற்றார்.
மாவட்ட செயலா ளரும், சிவகங்கை தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான செந்தில்நாதன், முன்னாள் அமைச்சர் வைகை செல்வன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
வைகை செல்வன் பேசுகையில், மக்களுக்கு ஒரு பிரச்சினை என்றால் தட்டிக் கேட்கும் இயக்கம் அ.தி.மு.க.. இடைத்தேர்தலில் தோல்வி அடைந்த 3 நாட்களில் பீனிக்ஸ் பறவையாய் எழுச்சியோடு இங்கே கூடியுள்ளோம். தி.மு.க அரசு குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000, பழைய ஓய்வூதியத் திட்டம் உள்பட பல்வேறு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றி வருகிறது என்றார்.
முன்னாள் எம்.எல்.ஏ. கற்பகம் இளங்கோ, ஒன்றிய செயலாளர்கள் மாசான், சுப்பிரமணியன், தேவகோட்டை நகர்மன்ற தலைவர் சுந்தரலிங்கம், மாவட்ட பேரவை ஊரவயல் ராமு, எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் நருவிழி கிருஷ்ணன், துணை செயலாளர் சுரேஷ், மாவட்ட மகளிரணி துணை செயலாளர் சோபியா பிளாரன்ஸ், காரைக்குடி நகர்மன்ற கவுன்சிலர்கள் ராம்குமார், அமுதா, கனகவள்ளி, ராதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.நகர தலைவர் அருள்ஜோதி நன்றி கூறினார்.
- 11-ந்தேதி ஜெயலலிதா பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடக்கிறது.
- இதற்காக பிரமாண்ட மேடை அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
சிவகங்கை
சிவகங்கையில் வருகிற 11-ந்தேதி அ.தி.மு.க. சார்பில் ஜெயலலிதா பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இதில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்கிறார். இதற்காக சிவகங்கை-மதுரை 4 வழிச்சாலையில் பிரமாண்ட மேடை அமைக்கும் பணியை மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் எம்.எல்.ஏ. நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அருகில் முன்னாள் அமைச்சர் பாஸ்கரன், அ.தி.மு.க. நகர் செயலாளர் ராஜா, ஒன்றிய செயலாளர்கள் கருணாகரன், சேவியர்தாஸ், செல்வமணி, ஜெகன், கோபி, இலக்கிய அணி மாவட்ட செயலாளர் ராஜேந்திரன், தகவல் தொழில் நுட்ப பிரிவு இணைச்செயலாளர் தமிழ்செல்வன், மாவட்ட பாசறை இணைச்செய லாளர் மோசஸ், பாசறை மாவட்ட பொருளாளர் சரவணன் மற்றும் நிர்வாகிகள் உள்ளனர்.
- 700 க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
- கணபதிபாளையம் சந்தைப்பேட்டை கலையரங்கில் நடைபெற்றது.
பல்லடம் :
பல்லடம் தெற்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 75-வது பிறந்தநாள் விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் பொதுக்கூட்டம்.பல்லடம் அருகே உள்ள கணபதிபாளையம் சந்தைப்பேட்டை கலையரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பல்லடம் தெற்கு ஒன்றிய செயலாளர் சித்துராஜ் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ.,கே.பி.பரமசிவம்,எம்.கே.ஆறுமுகம்,ஜெயந்தி லோகநாதன், ஐ.டி. விங்க் கோகுல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டுறவு சங்க செயலாளர் சொக்கப்பன் வரவேற்றார்.
கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் உடுமலை ராதாகிருஷ்ணன்,எம்.எஸ்.எம். ஆனந்தன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி சுமார் 700 க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு சேலைகள்,இஸ்திரி பெட்டி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினர். கூட்டத்தில் தலைமைக் கழக பேச்சாளர் குலாப்ஜான்,மாவட்ட நிர்வாகிகள் சிவாச்சலம், அரிகோபால்,பல்லடம் நகர செயலாளர் ராமமூர்த்தி, கூட்டுறவு சங்கத்தலைவர் பானு பழனிசாமி ,தண்ணீர் பந்தல் நடராஜன்,பிரேமா , பழனிசாமி, ஐ.டி.விங்க் மிருதுளா நடராஜன் மற்றும் மாவட்ட, ஒன்றிய நகர நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், பொதுமக்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
- பொதுக்கூட்டங்கள் நடைபெற உள்ள இடங்கள்; அவற்றில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுவோர் விபரங்கள் அடங்கிய பட்டியல் இத்துடன் வெளியிடப்படுகிறது.
- கழக சட்டமன்ற உறுப்பினர்களும், கழக சார்பு அமைப்புகளின் துணை நிர்வாகிகளும், தாங்கள் சார்ந்த தொகுதிகளில் நடைபெற உள்ள பொதுக்கூட்டங்களில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுவார்கள்.
சென்னை :
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
புரட்சித் தலைவி ஜெயலலிதாவின் 76-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு 24.2.2024 முதல் 28.2.2024 வரை 5 நாட்கள், 'இதய தெய்வம் மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களின் 76-ஆவது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டங்கள்', கழக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் மாவட்டங்களுக்கு உட்பட்ட சட்டமன்றத் தொகுதிகளிலும், கழக அமைப்புகள் செயல்பட்டுக் கொண்டிருக்கும் பிற மாநிலங்களிலும் நடைபெற உள்ளன.
பொதுக்கூட்டங்கள் நடைபெற உள்ள இடங்கள்; அவற்றில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுவோர் விபரங்கள் அடங்கிய பட்டியல் இத்துடன் வெளியிடப்படுகிறது.
கழக சட்டமன்ற உறுப்பினர்களும், கழக சார்பு அமைப்புகளின் துணை நிர்வாகிகளும், தாங்கள் சார்ந்த தொகுதிகளில் நடைபெற உள்ள பொதுக்கூட்டங்களில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுவார்கள்.
மாவட்டக் கழகச் செயலாளர்கள், தங்கள் மாவட்டத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ள பொதுக்கூட்டங்களை, கழகம், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மன்றம், புரட்சித் தலைவி அம்மா பேரவை, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, அண்ணா தொழிற்சங்கம், வழக்கறிஞர் பிரிவு, சிறுபான்மையினர் நலப் பிரிவு, விவசாயப் பிரிவு, மீனவர் பிரிவு, மருத்துவ அணி, இலக்கிய அணி, அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி, இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை, தகவல் தொழில்நுட்பப் பிரிவு, வர்த்தக அணி மற்றும் கலைப் பிரிவு உட்பட கழகத்தின் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகளுடனும், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் முன்னாள் பிரதிநிதிகளுடனும் இணைந்து சிறப்புப் பேச்சாளர்களுடன் தொடர்புகொண்டு, இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் 76-ஆவது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டங்களை ஏற்பாடு செய்து சிறப்பாக நடத்தி, அதன் விபரங்களை தலைமைக் கழகத்திற்கும், "நமது புரட்சித் தலைவி அம்மா நாளிதழுக்கும்" அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
- பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை ஜெயலலிதாவை நினைவு கூர்ந்து எக்ஸ் தளத்தில் பதிவு.
- தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா அவர்களின் பிறந்த தினம் இன்று.
சென்னை :
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 76-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா அவர்களின் பிறந்த தினம் இன்று.
தமிழக மக்கள் நலனுக்காகவும், சமூக நலனுக்காகவும், அவர் செயல்படுத்திய நலத்திட்டங்கள் என்றும் அவரது புகழைக் கூறும் என பதிவிட்டுள்ளார்.
தமிழக முன்னாள் முதலமைச்சர், செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்களின் பிறந்த தினம் இன்று.
— K.Annamalai (@annamalai_k) February 24, 2024
தமிழக மக்கள் நலனுக்காகவும், சமூக நலனுக்காகவும், அவர் செயல்படுத்திய நலத்திட்டங்கள், என்றும் அவரது புகழைக் கூறும். pic.twitter.com/z6ErV4gqbQ
- அதிமுக கட்சி அலுவலகத்தில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைகளுக்கு பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
- கட்சி கொடியை ஏற்றி, தொண்டர்களுக்கு எடப்பாடி பழனிசாமி இனிப்பு வழங்கினார்.
சென்னை:
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 76-வது பிறந்தநாள் விழாவினை அ.தி.மு.க.வினர் இன்று தமிழகம் முழுவதும் உற்சாகத்துடன் கொண்டாடினார்கள்.
இதையொட்டி சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழக அலுவலகம் விழாக்கோலம் பூண்டு இருந்தது. அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை தலைமை கழகத்துக்கு வந்தார். அப்போது அவருக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். வருங்கால முதல்வர் வாழ்க. எடப்பாடியார் வாழ்க என அவர்கள் கோஷமிட்டனர்.
தலைமை கழக வளாகத்தில் உள்ள ஜெயலலிதா மற்றும் எம்.ஜி.ஆர். சிலைகளுக்கு எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் அவர் 76-வது பிறந்தநாளை குறிக்கும் வகையில் 76 கிலோ எடையுள்ள கேக்கினை வெட்டி அதனை தொண்டர்களுக்கு வழங்கினார். லட்டும் கொடுக்கப்பட்டது.
ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி அங்கு ஏற்பாடு செய்திருந்த மருத்துவ முகாமை எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.
இந்த விழாவில் அ.தி.மு.க. அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன், பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன், துணைப்பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி. தம்பித்துரை எம்.பி. மற்றும் முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலு மணி, செங்கோட்டையன், ஜெயக்குமார், செல்லூர் ராஜூ, தளவாய் சுந்தரம், வளர்மதி, நத்தம் விசுவநாதன்,கோகுல இந்திரா, பெஞ்சமின், அமைப்பு செயலாளர் வாலாஜாபாத் கணேசன், மாவட்ட செயலாளர்கள் பாலகங்கா, விருகை வி.என்.ரவி, தி.நகர் சத்யா, ஆதிராஜாராம், ஆர்.எஸ்.ராஜேஷ், மாதவரம் மூர்த்தி, கே.பி.கந்தன், வெங்கடேஷ் பாபு, வக்கீல் பிரிவு மாநில செயலாளரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான இன்பதுரை, தி.நகர் பகுதி செயலாளர் ஆர்.எஸ். வேலு மணி, மாநில இளைஞர் அணி இணை செயலாளர் லட்சுமி நாராயணன், இலக்கிய அணி மாநில துணை செயலாளர் இ.சி. சேகர், முன்னாள் கவுன்சிலர் சின்னையன், பரங்கிமலை கிழக்கு ஒன்றிய செயலாளர் பெரும்பாக்கம் ராஜசேகர், மாணவரணி வக்கீல் பரணி, ஏ.எம்.காமராஜ், எம்.ஜி.ஆர். நகர் குட்டிவேல் ஆதித்தன், வேளச்சேரி மூர்த்தி, வேல் ஆதித்தன் உள்ளிட்ட ஏராளமான அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பல இடங்களில் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த ஜெயலலிதா உருவ படத்துக்கு அ.தி.மு.க.வினர் மலர்கள் தூவி மரியாதை செலுத்தினார்கள்.
- தமிழர் உரிமை மீட்போம், தமிழ்நாடு காப்போம் என்ற முதன்மை முழக்கத்தோடு அ.தி.மு.க. தேர்தல் பிரசாரத்தை தொடங்கி உள்ளது.
- அ.தி.மு.க.வின் வெற்றிக்காக அயராது உழைத்து பார் போற்றும் வெற்றியை உறுதி செய்வோம்.
சென்னை:
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழகத்தில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
இதையொட்டி பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தை தொடங்கும் வகையில் "தமிழர் உரிமை மீட்போம், தமிழ்நாடு காப்போம்" என்கிற முழக்கத்துடன் கூடிய இலச்சினை மற்றும் ஏ.ஐ. தொழில் நுட்பத்துடன் ஜெயலலிதா பேசிய பிரசார ஆடியோ இன்று வெளியிடப்பட்டது.
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனி சாமி அதனை வெளியிட்டார்.
பின்னர் அவர் பாராளுமன்ற தேர்தல் குறித்தும், கூட்டணி குறித்தும் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் தமிழர் உரிமை மீட்போம், தமிழ்நாடு காப்போம் என்ற முதன்மை முழக்கத்தோடு அ.தி.மு.க. தேர்தல் பிரசாரத்தை தொடங்கி உள்ளது.
தமிழக மக்களின் ஒருமித்த ஆதரவோடு வருகிற பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர்களும், கூட்டணி கட்சி வேட்பாளர்களும், நிச்சயம் எங்களை வெற்றி பெற செய்வார்கள்.
விரைவில் அ.தி.மு.க. தலைமையில் புதிய கூட்டணி அமைக்கப்படும். அதனை விரைவில் அறிவிப்போம்.
எங்களிடம் மத்திய அரசின் அதிகாரமோ, மாநில அரசின் அதிகாரமோ இல்லை. எங்கள் கட்சியின் இதய தெய்வங்களான எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் நல்லாசி உள்ளது. 2 கோடியே 6 லட்சம் தொண்டர்கள் எங்களுக்கு பலமாக உள்ளனர். தமிழக மக்களும் எங்களை ஆதரிக்க தயாராகி விட்டனர்.
இன்று தொடங்கி உள்ள பிரசாரத்தை அ.தி.மு.க. தொண்டர்களும், நிர்வாகிகளும் முன்னெடுத்து உள்ளனர். இரவு-பகல் பாராமல் அ.தி.மு.க.வின் வெற்றிக்காக அயராது உழைத்து பார் போற்றும் வெற்றியை உறுதி செய்வோம்.
கடந்த 2016-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரையிலும் அ.தி.மு.க. சார்பில் 37 பாராளுமன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு டெல்லி சென்றார்கள். எங்களது குரல் பாராளுமன்றத்துக்குள் வலுவாக ஒலித்தது. தமிழக நலனுக்காக எங்களது எம்.பி.க்கள் குரல் கொடுத்தார்கள்.
அப்போது 14,619 கேள்விகளை எங்கள் எம்.பி.க்கள் பாராளுமன்றத்துக்குள் எழுப்பி உள்ளனர். தற்போது தி.மு.க. சார்பில் உள்ள 38 எம்.பி.க்கள் 7 ஆயிரம் கேள்விகளை கேட்டு உள்ளனர். இதன் மூலம் எங்களது செயல்பாடும், அவர்களது செயல்பாடும் தெரியும்.
காவிரி பிரச்சனையில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து காவிரி மேலாண்மை ஆணையத்தை நாங்கள் தான் அமைத்தோம். தற்போது மேகதாது விவகாரம் விசுவரூபம் எடுத்துக்கொண்டு இருக்கிறது. அதுபற்றி தி.மு.க. எம்.பி.க்கள் கவலைப்படவில்லை.
காவிரி மேலாண்மை ஆணையத்திலும் அவர்களால் சிறப்பான வாதத்தை எடுத்து வைக்க தெரியவில்லை. ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வை ஒழிப்பேன் என்று வாக்குறுதி அளித்தனர். விளையாட்டு துறை அமைச்சராக இருக்கும் உதயநிதி ஸ்டாலின் நீட் தேர்வை ஒழிக்கும் ரகசியம் எங்களுக்கு தெரியும் என்று சொன்னார். ஆனால் நீட் தேர்வை ஒழிப்பதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
மத்திய அரசில் தி.மு.க. அங்கும் வகித்தபோதுதான் அவர்களது ஆட்சியில் நீட் தேர்வு கொண்டு வரப்பட்டது. தற்போது அதனை ஒழிக்கப் போவதாக தி.மு.க. நாடகமாடி வருகிறது.
பாரதிய ஜனதா கூட்டணியில் இருந்து நாங்கள் வெளியேறிய பிறகும் எங்களை பற்றி தி.மு.க. அவதூறு பரப்பி வருகிறது. நாங்கள் ரகசிய உடன்பாடு செய்து உள்ளதாக குற்றம் சாட்டி வருகிறது.
ஆனால் பாரதிய ஜனதாவுடன் தி.மு.க.தான் ரகசிய உறவு வைத்துள்ளது. ஆட்சியில் இல்லாதபோது 'கோ பேக்' மோடி என்றார்கள். தற்போது 'வெல்கம் மோடி' என்கிறார்கள். இதன் மூலமே தெரியும் யார் ரகசிய உடன்பாடு வைத்துள்ளார்கள் என்பது.
தி.மு.க.வை பொறுத்தவரை வாக்களித்த மக்களுக்காக நன்மை எதுவும் செய்ய மாட்டார்கள். மக்களை பற்றி அவர்கள் கவலைப்படுவது இல்லை. எங்களுக்கு தற்போதைய காலத்தில் எதிரிகளே இல்லை. தேர்தலில் எங்களை வெற்றி பெற செய்வதற்கு மக்கள் தயாராகி விட்டனர்.
எத்தனை முனை போட்டி நிலவும் என்பதை பற்றி நான் இப்போது கூற முடியாது. இந்தியா கூட்டணியில் ஒவ்வொரு சக்கரமாக கழன்று கொண்டு இருக்கிறது. 4 சக்கரங்கள் ஒன்றாக இருந்தால்தான் காரை ஓட்ட முடியும். இந்தியா கூட்டணி தற்போது சக்கரம் இல்லாத கார் போல உள்ளது.
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.
- விழாவில் மாலை 4 மணி அளவில் வெற்றி நமதே என்ற கலைநிகழ்ச்சி நடக்கிறது.
- கலைப்பிரிவு செயலாளர் ரவிச்சந்திரன், எம்.ஜி.ஆர். மன்ற தலைவர் சேசரன் உள்பட பலர் கலந்து கொள்கின்றனர்.
சேலம்:
சேலம் மாநகர் மாவட்டம், கொண்டலாம்பட்டி பகுதி, சேலம் தெற்கு சட்டசபை தொகுதி சார்பில் ஜெயலலிதாவின் 76-வது பிறந்த நாள் விழா, அ.தி.மு.க. பொதுக்கூட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) சேலம் தாதகாப்பட்டி கேட்டில் மாலை 5 மணிக்கு நடக்கிறது. கொண்டலாம்பட்டி பகுதி-2 செயலாளர் கே.பி.பாண்டியன் தலைமை தாங்குகிறார்.
மாவட்ட பொருளாளர் பங்க் எஸ்.வெங்கடாசலம், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் சரவணன், பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் முத்து, மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் கனகராஜ், மாவட்ட விவசாய அணி செயலாளர் சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பாலசுப்பிரமணியம் எம்.எல்.ஏ., கொண்டலாம்பட்டி பகுதி-1 செயலாளர் சண்முகம் ஆகியோர் வரவேற்று பேசுகின்றனர்.
விழாவில் சிறப்பு அழைப்பாளராக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார். அப்போது 5 ஆயிரத்து 176 பேருக்கு நல உதவிகள் வழங்குகிறார்.
விழாவில் மாநகர் மாவட்ட செயலாளர் ஜி.வெங்கடாஜலம், மாவட்ட அவைத்தலைவர் பன்னீர்செல்வம், அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் எம்.கே.செல்வராஜூ, மாநகர் மாவட்ட துணை செயலாளர் எஸ்.சவுண்டப்பன், மாணவர் அணி செயலாளர் சக்திவேல், கலைப்பிரிவு செயலாளர் ரவிச்சந்திரன், எம்.ஜி.ஆர். மன்ற தலைவர் சேசரன் உள்பட பலர் கலந்து கொள்கின்றனர்.
விழாவில் மாலை 4 மணி அளவில் வெற்றி நமதே என்ற கலைநிகழ்ச்சி நடக்கிறது. முன்னதாக பொதுக்கூட்டத்துக்கு வருகை தரும் எடப்பாடி பழனிசாமிக்கு சேலம் மாநகர் மாவட்டம், கொண்டலாம்பட்டி பகுதி அ.தி.மு.க., சேலம் தெற்கு சட்டசபை தொகுதி சார்பில் பிரமாண்ட வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.