என் மலர்
நீங்கள் தேடியது "protest"
- கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்றாவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார்.
- மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மதுரை
அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மதுரையில் தென்பகுதி நுழைவாயிலாக திருமங்க லம் உள்ளது. குறிப்பாக எடப்பாடியார் திருமங்கலம் தொகுதிக்கு, பல்வேறு நலத்திட்டங்களை செய்தார். கள்ளிக்குடியில் புதிய வட்டம், திருமங்க லத்தில் புதிய கோட்டம், அதனைத் தொடர்ந்து திருமங்கலம் தொகுதியில் உள்ள 324 கிராமங்கள், 116 ஊராட்சிகள், திருமங்கலம் நகரில் உள்ள 27 வார்டுகள், இரண்டு பேரூராட்சியில் உள்ள 30 வார்டுகள் உள்ளிட்ட அனைத்து பகுதிகளுக்கும் சாலைகள், புதிய கிராம இணைப்பு சாலைகள் உள்ளிட்ட பல்வேறு திட்ட பணிகளை எடப்பாடியார் செய்து கொடுத்தார்.
மேலும் எடப்பாடியார் ஆட்சியில் தான் திருமங்கலம் யூனியன் சிறப்பாக செயல்பட்டு மத்திய அரசு விருது பெற்று இதற்காக 25 லட்சம் ரூபாயை பரிசாக பெற்றது. அதேபோல் கல்லுப்பட்டி பேரூராட்சியும் சிறப்பு விருதினை பெற்றது. திருமங்கலம் நகராட்சிக்கு புதிய கட்டிடங்கள், கல்லூரி களுக்கு புதிய கட்டிடங்கள் உருவாக்கி தரப்பட்டது.
அதேபோல் திருமங்க லத்தில் ரெயில்வே கேட் அருகே மேம்பாலம் அமைக்க அ.தி.மு.க. ஆட்சியில் நிதி ஒதுக்கப்பட்டு பூமி பூஜை செய்யப்பட்டது. அது கிடப்பில் போடப் பட்டுள்ளது. இதுகுறித்து பலமுறை சட்டமன்றத்தில் கவனத்துக்கு கொண்டு சென்றும் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை.
மேலும் மக்களின் பிரதானமாக கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்ற வேண்டுமென்ற கோரிக்கை உள்ளது. மத்திய அமைச்சர் நிதி கட்காரி 6 கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள சுங்க சாவடி அகற்றப்படும் எனக் கூறியுள்ளார். இதனை தொடர்ந்து கப்பலூர் சுங்க சாவடியை அகற்ற முதல்-அமைச்சர் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏற்கனவே நாங்கள் ஆட்சிக்கு வந்தால் கப்பலூர் சுங்க சாவடியை அகற்றுவோம் என்று முதல்-அமைச்சர் தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்தி ருந்தார்.
எடப்பாடியார் ஆட்சி காலத்தில் உள்ளூர் வானங்களை முறையாக கையாளும் வகையில் பல்வேறு சலுகைகள் பெற்று தரப்பட்டது. ஏற்கனவே உங்கள் தொகுதி முதல்-அமைச்சர் என்ற திட்டத்தில் 10 கோரிக்கையில் இதுவும் பிரதான கோரிக்கையாக நான் கொடுத்துள்ளேன்.
கப்பலூர் டோல்கேட் குறித்து நான் மக்களிடம் மனுககளை வாங்கும் பொழுது ஒரு நாள் முழுவதும் காவல்துறை கட்டுப்பாட்டில் வைத்து என் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது அந்த வழக்கும் நிலுவையில் தான் உள்ளது. தொடர்ந்து எதிர்கட்சி தொகுதிகளை பாராபட்சம் காட்டி வஞ்சிக்க கூடாது இது ஜனநாயகத்திற்கு அழகல்ல
கப்பலூர் சுங்கச்சாவடி அகற்ற நடவடிக்கை எடுக்க விட்டால் எடப்பாடியார் அனுமதியை பெற்று தமிழக அரசுக்கு எதிராக மக்களை திரட்டி போராட்டம் நடத்துவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- அவலத்தை கண்டித்து கண்டன ஆர்ப் பாட்டம் கம்மாபுரத்தில் நடைபெற்றது.
- குற்றவாளிகளுக்கு உடனடி யாக தூக்கு தண்டனை வழங்க வேண்டும். கு
கடலூர்:
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மணிப் பூரில் பெண்களுக்கு ஏற்பட்ட அவலத்தை கண்டித்து கண்டன ஆர்ப் பாட்டம் கம்மாபுரத்தில் நடைபெற்றது. ஆர்ப்பாட் டத்திற்கு ஒன்றிய பொரு ளாளர் செல்வகுமார் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக கடலூர் மாநகராட்சி துணை மேயர் தாமரைச்செல்வன், மாவட்ட செயலாளர் பால.அறவாழி ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள். இதில் நிர்வாகிகள் குரு, நீதி வள்ளல், தன்ராஜ், ஜோதி பாசு, கண்ணன், வெங்கட், ராஜி, குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர். பின்னர் பெண்களை நிர்வாணப்படுத்தி பாலி யல் வன்கொடுமை செய்த குற்றவாளிகளுக்கு உடனடி யாக தூக்கு தண்டனை வழங்க வேண்டும். குற்ற செயலை தடுக்க இயலாத மணிப்பூர் அரசை உட னடியாக டிஸ்மிஸ் செய்து, முதலமைச்சர் உடனடியாக பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினார்கள்.
- மீன்பிடி துறைமுகத்தின் விரிவாக்கத்திற்கு ஒதுக்கப்பட்ட தொகையை கொண்டு உடனடியாக மீன்பிடி துறைமுகத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும்.
- மீனவர்களின் தடைக்கால நிதி, படகு பழுது பார்க்கும் நிதியை இரட்டிப்பாக்க வேண்டும்.
புதுச்சேரி:
காரைக்கால் மாவட்டத்தில் உள்ள 11 மீனவ கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் கூட்டம் நடத்தினர். கூட்டத்தின் முடிவில், மீன்பிடி துறைமுகத்தின் விரிவாக்கத்திற்கு ஒதுக்கப்பட்ட தொகையை கொண்டு உடனடியாக மீன்பிடி துறைமுகத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும். மீன்பிடி துறை முகத்தின் முகத்துவாரத்தை உடனே தூர்வார வேண்டும். மீனவர்கள் இட ஒதுக்கீட்டில் எம்.பி.சி -யில் இருந்து இ.பி.சி -க்கு மாற்றியதை மீண்டும் எம்.பி.சி -க்கு மாற்ற வேண்டும். டீசல் மானியத்தை உயர்த்தி வழங்க வேண்டும். மீனவர்களின் தடைக்கால நிதி, படகு பழுது பார்க்கும் நிதியை இரட்டிப்பாக்கவேண்டும்.
மேற்கண்ட கோரிக்கை களை வலியுறுத்தி, காரைக்கால் மாவட்டத்தில் உள்ள 11 மீனவ கிராமங்க ளைச் சேர்ந்த மீனவர்களும் வருகின்ற 18-ந் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவது, மத்திய மாநில அரசுகளை கண்டித்து போராட்டம் நடத்துவது என முடிவு செய்து, புதுச்சேரி அரசுக்கு கோரிக்கை மனுவை அனுப்பியுள்ளனர்.
- தண்ணீர் திறக்க இயலாது என அரசு அறிவித்திருப்பது ஏமாற்றத்திற்கு உள்ளாக்கி உள்ளது.
- விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்துள்ளது.
தஞ்சாவூா்:
தஞ்சையில் இன்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் என்.வி. கண்ணன், மாவட்டத் தலைவர் செந்தில் ஆகியோர் கூட்டாக அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது :-
இந்த ஆண்டு குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணை ஜூன் 12-ந்தேதி திறக்கப்படும் என விவசாயிகள் எதிர்பார்த்தனர்.
ஆனால் அணையில் போதிய அளவு தண்ணீர் இல்லாததால் தண்ணீர் திறக்க இயலாது என அரசு அறிவித்திருப்பது ஏமாற்றத்திற்கு உள்ளாக்கி உள்ளது. காவிரி மேலாண்மை ஆணையம் கடந்த ஆண்டு காவிரியில் தமிழகத்திற்கு உரிய தண்ணீர், இந்த ஆண்டு தரவேண்டிய தண்ணீரை உடனடியாக தர உத்தரவிட்டும் தற்போது வரை கர்நாடக அரசு வழங்காதது கண்டிக்கத்தக்கது. உடனடியாக மத்திய அரசு தண்ணீர் பெற்று தர வேண்டும்.
மேலும் மேகதாதுவில் அணை கட்டுவதிலேயே கர்நாடக அரசு குறியாக உள்ளது. உடனடியாக இதனை தடுத்து நிறுத்த வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்ற 17-ந் தேதி டெல்டா மாவட்டம் முழுவதும் உள்ள தாலுகா அலுவலகங்கள் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் சாகுபடி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில் விவசாயிகள் வாங்கிய அனைத்து கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். ஆழ்துளை மூலம் சாகுபடி செய்யக்கூடிய விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும். விவசாயிகளுக்கான இடுபொருள், உரம் உள்ளிட்டவற்றை வழங்க வேண்டும் .
தமிழக அரசு குறுவை சாகுபடி செய்யக்கூடிய விவசாயிகள் அனைவருக்கும் குறுவை தொகுப்பு திட்டம் வழங்க வேண்டும். சாகுபடி செய்யக்கூடிய முழு பரப்பளவிற்கும் திட்டம் சென்றடையும் வகையில் வழங்க வேண்டும். தமிழகத்திற்கு உரிய தண்ணீரை பெற அனைத்து வகையிலும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- பாராளுமன்றத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை அரசமைப்பு சட்டம் மீது விவாதம் நடந்தது
- நுழைவுவாயில் பகுதியில் போராட்டம் நடத்திக் கொண்டிருந்த பா.ஜ.க. எம்.பி.க்களுடன் தள்ளுமுள்ளு வில் ஈடுபட நேரிட்டது.
பாராளுமன்றத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை அரசமைப்பு சட்டம் மீது விவாதம் நடந்தது. அப்போது பேசிய மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, "எதிர்க்கட்சிக ளுக்கு அம்பேத்கர் பெ யரை தொடர்ந்து பல முறை முழக்கம் இடுவது வாடிக்கையாக இருக்கி றது. அதற்கு பதிலாக கடவுளின் பெயரை இவ்வளவு முறை உச்ச ரித்தால் அவர்களுக்கு சொர்க்கத் தில் இடம் கிடைத்து இருக்கும்" என்று கூறினார்.
இதற்கு காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. அம்பேத்கரை அமித்ஷா அவமரியாதை செய்து விட்டதாக கூறி குற்றம் சாட்டினார்கள். இதற்காக அமித்ஷா மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அம்பேத்கரை காங்கிரஸ் கட்சிதான் இழிவுப்படுத்தி இருப்பதாக ஆவண ஆதா ரங்களுடன் பா.ஜ.க. தலைவர்கள் தகவல்களை வெளியிட்டனர். இதையடுத்து அம்பேத்கர் தொடர்பான பேச்சு மிகப்பெரிய சர்ச்சையாக மாறியது.
நேற்று பாராளுமன்ற வளாகத்தில் பா.ஜ.க. எம்.பி.க்களும், இந்தியா கூட்டணி எம்.பி.க்களும் போட்டி போராட்டங்களில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தை முடித்து விட்டு இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் பாராளுமன்றத்துக்குள் செல்ல வந்தபோது அங்கு நுழைவுவாயில் பகுதியில் போராட்டம் நடத்திக் கொண்டிருந்த பா.ஜ.க. எம்.பி.க்களுடன் தள்ளுமுள்ளு வில் ஈடுபட நேரிட்டது.
இந்த மோதலில் பா.ஜ.க. எம்.பி.க்கள் 2 பேர் காயம் அடைந்தனர். இதையடுத்து தள்ளுமுள்ளுவுக்கு ராகுல்தான் காரணம் என்று பா.ஜ.க. தலைவர்கள் குற்றம் சாட்டினார்கள். இது தொடர்பாக பாராளுமன்ற வளாக போலீஸ் நிலையத் தில் ராகுல் மீது புகார் அளிக்கப்பட்டது.
#WATCH | Delhi | Union Minister Shivraj Singh Chouhan met injured BJP MP Pratap Sarangi at the RML Hospital pic.twitter.com/VlC3wkCarJ
— ANI (@ANI) December 20, 2024
அதன் பேரில் போலீசார் 5 பிரிவுகளில் ராகுல் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினரும் பாராளுமன்ற வளாக போலீசாரிடம் புகார் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் இன்றும் (வெள்ளிக்கிழமை) பாராளுமன்ற வளாகத்தில் பா.ஜ.க. எம்.பி.க்களும், இந்தியா கூட்டணி எம்.பி.க்களும் போராட்டத்தில் ஈடுபட்ட னர். பா.ஜ.க. எம்.பி.க்கள் காந்தி சிலை முன்பு நின்று ஆர்ப்பாட்டம் செய்தனர்.
#WATCH | Delhi: NDA MPs protest on Parliament premises alleging that the Congress party disrespected Dr BR Ambedkar.BJP leaders Anil Baluni, Arun Govil and others also present pic.twitter.com/cTj9AShJse
— ANI (@ANI) December 20, 2024
அவர்கள் ராகுல்காந்தியை கண்டித்து கோஷங்கள் எழுப்பினார்கள். ராகுல் காந்தியை பாராளுமன்றத்தில் இருந்து சஸ்பெண்டு செய்ய வேண்டும் என்றும் பா.ஜ.க. எம்.பி.க்கள் கோஷமிட்டனர்.
இதற்கிடையே இந்தியா கூட்டணி கட்சி எம்.பி.க்கள் விஜய் சவுக் பகுதியில் இருந்து பாராளுமன்ற வளாகத்தில் இருந்து ஊர்வலமாக வந்தனர். அவர்கள் அமித்ஷாவை கண்டித்து கோஷம் எழுப்பினார்கள். அமித்ஷா மத்திய மந்திரி பதவியில் இருந்து விலக வேண்டும் என்று முழக்க மிட்டனர்.
#WATCH | Delhi: Rajya Sabha LoP Mallikarjun Kharge, Congress MP Priyanka Gandhi Vadra and other INDIA Alliance MPs' protest over Union Home Minister Amit Shah's remark on Dr BR Ambedkar in Rajya Sabha. They are demanding his apology and resignation. Visuals as the march from… pic.twitter.com/M0OumpDye4
— ANI (@ANI) December 20, 2024
#WATCH | SP MP Dimple Yadav says, "...Only the BJP MPs are responsible for the stand-off we saw yesterday at Makar Dwar. We had never seen such stand-off." pic.twitter.com/KMldt0qX0k
— ANI (@ANI) December 20, 2024
#WATCH | Delhi: On MPs' face-off in Parliament yesterday, SP MP Jaya Bachchan says, "It was a man-made, created incident. They were stopping people from going up the steps. I am witness to it. They were stopping people...How can you be covering the steps? They were pushing and… pic.twitter.com/QeEIjwhSOt
— ANI (@ANI) December 20, 2024
இந்தியா கூட்டணி எம்.பி.க்களின் ஊர்வலத்துக்கு பிரியங்கா தலைமையேற்று நடத்தி வந்தார். 2-வது நாளாக பாராளுமன்ற வளாகத்தில் பாரதீய ஜனதா-இந்தியா கூட்டணி போட்டி போராட்டம் நடத்தியதால் இன்று காலை 10.30 மணியில் இருந்து பாராளுமன்ற வளாகத்தில் பரபரப்பான சூழ்நிலை காணப்பட்டது.
இதற்கிடையே பாராளுமன்ற அலுவல்களை இன்று ஒத்திவைத்து விட்டு அம்பேத்கர் விவகாரம் பற்றி விவாதிக்க வேண்டும் என்று மேல்சபை துணை சபாநாயகரிடம் கடிதம் கொடுக்கப்பட்டு உள்ளது.
ஆனால் ஒரேநாடு ஒரே தேர்தல் மசோதாவை ஆய்வு குழுவுக்கு அனுப்புவது தொடர்பான தீர்மானத்தை இன்று பாராளுமன்றத்தில் நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
பாராளுமன்றம் கூட்டத் தொடர் இன்று நிறைவு பெறும் நிலையில் மீண்டும் இந்தியா கூட்டணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பாராளுமன்ற வளாகம் பரபரப்புடன் காணப் பட்டது.
- பாராளுமன்ற வளாகத்தில் பாரதீய ஜனதா-இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் இன்றும் ஆர்ப்பாட்டம்
- இறுதிநாளில் இரு சபைகளும் முடங்கின
புதுடெல்லி, டிச. 20-
பாராளுமன்றத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை அரசமைப்பு சட்டம் மீது விவாதம் நடந்தது. அப்போது பேசிய மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, "எதிர்க்கட்சிக ளுக்கு அம்பேத்கர் பெ யரை தொடர்ந்து பல முறை முழக்கம் இடுவது வாடிக்கையாக இருக்கி றது. அதற்கு பதிலாக கடவுளின் பெயரை இவ்வளவு முறை உச்ச ரித்தால் அவர்களுக்கு சொர்க்கத் தில் இடம் கிடைத்து இருக்கும்" என்று கூறினார்.
இதற்கு காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. அம்பேத்கரை அமித்ஷா அவமரியாதை செய்து விட்டதாக கூறி குற்றம் சாட்டினார்கள். இதற்காக அமித்ஷா மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அம்பேத்கரை காங்கிரஸ் கட்சிதான் இழிவுப்படுத்தி இருப்பதாக ஆவண ஆதா ரங்களுடன் பா.ஜ.க. தலை வர்கள் தகவல்களை வெளியிட்டனர். இதையடுத்து அம்பேத்கர் தொடர்பான பேச்சு மிகப்பெரிய சர்ச்சையாக மாறியது.
நேற்று பாராளுமன்ற வளாகத்தில் பா.ஜ.க. எம்.பி.க்களும், இந்தியா கூட்டணி எம்.பி.க்களும் போட்டி போராட்டங்களில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட் டத்தை முடித்து விட்டு இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் பாராளுமன்றத் துக்குள் செல்ல வந்தபோது அங்கு நுழைவுவாயில் பகுதியில் போராட்டம் நடத்திக் கொண்டிருந்த பா.ஜ.க. எம்.பி.க்களுடன் தள்ளுமுள்ளில் ஈடுபட நேரிட்டது.
இந்த மோதலில் பா.ஜ.க. எம்.பி.க்கள் 2 பேர் காயம் அடைந்தனர். இதையடுத்து தள்ளுமுள்ளுவுக்கு ராகுல்தான் காரணம் என்று பா.ஜ.க. தலைவர்கள் குற்றம் சாட்டினார்கள். இது தொடர்பாக பாராளுமன்ற வளாக போலீஸ் நிலையத் தில் ராகுல் மீது புகார் அளிக்கப்பட்டது.
அதன் பேரில் போலீசார் 5 பிரிவுகளில் ராகுல் மீது வழக்குப்பதிவு செய்துள்ள னர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினரும் பாராளுமன்ற வளாக போலீசாரிடம் புகார் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் இன்றும் (வெள்ளிக்கிழமை) பாராளுமன்ற வளாகத்தில் பா.ஜ.க. எம்.பி.க்களும், இந்தியா கூட்டணி எம்.பி.க்களும் போராட்டத்தில் ஈடுபட்ட னர். பா.ஜ.க. எம்.பி.க்கள் காந்தி சிலை முன்பு நின்று ஆர்ப்பாட்டம் செய்தனர்.
அவர்கள் ராகுல்காந்தியை கண்டித்து கோஷங்கள் எழுப்பினார்கள். ராகுல் காந்தியை பாராளுமன்றத் தில் இருந்து சஸ்பெண்டு செய்ய வேண்டும் என்றும் பா.ஜ.க. எம்.பி.க்கள் கோஷமிட்டனர்.
இதற்கிடையே இந்தியா கூட்டணி கட்சி எம்.பி.க்கள் விஜய்சவுக் பகுதியில் இருந்து பாராளுமன்ற வளாகத்தில் இருந்து ஊர்வலமாக வந்தனர். அவர்கள் அமித்ஷாவை கண்டித்து கோஷம் எழுப்பினார்கள். அமித்ஷா மத்திய மந்திரி பதவியில் இருந்து விலக வேண்டும் என்று முழக்கமிட்டனர்.
இந்தியா கூட்டணி எம்.பி.க்களின் ஊர்வலத்துக்கு பிரியங்கா தலைமையேற்று நடத்தி வந்தார். 2-வது நாளாக பாராளுமன்ற வளாகத்தில் பாஜக-இந்தியா கூட்டணி போட்டி போராட்டம் நடத்தியதால் இன்று காலை 10.30 மணியில் இருந்து பாராளுமன்ற வளாகத்தில் பரபரப்பான சூழ்நிலை காணப்பட்டது.
இதற்கிடையே பாராளுமன்ற அலுவல்களை இன்று ஒத்திவைத்து விட்டு அம்பேத்கர் விவகாரம் பற்றி விவாதிக்க வேண்டும் என்று மேல்சபை துணை சபாநாயகரிடம் கடிதம் கொடுக்கப்பட்டது. ஆனால் ஒரேநாடு ஒரே தேர்தல் மசோதாவை ஆய்வு குழுவுக்கு அனுப்புவது தொடர்பான தீர்மானத்தை இன்று பாராளுமன்றத்தில் மத்திய அரசு நிறை வேற்றியது.
அந்த கூட்டுக்குழுவில் அனைத்துக்கட்சிகளைச் சேர்ந்த 39 எம்.பி.க்கள் இடம் பெற்று இருக்கிறார்கள். இந்த நிலையில் கூட்டத்தொடரின் இறுதி நாளான இன்று பாராளுமன்றத்தில் மக்களவையில் எம்பிக்கள் அமளியால் முதலில் மக்களவை காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அதேபோல, எதிர்க்கட்சிகளின் அமளியால் மாநிலங்களவையும் முடங்கியது. இதனால், அவை 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து, மாநிலங்களவை நண்பகல் 12 மணிக்கு மீண்டும் கூடியது. அப்போது எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டன. இதனால் தேதி குறிப்பிடாமல் அவை ஒத்திவைக்கப்படுவதாக அவைத் தலைவர் அறிவித்தார்.
இதனால் பாராளுமன்ற கூட்டத்தொடர் மறுதேதி குறிப்பிடப்படாமல் நிறைவு பெற்றது.