என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆர்ப்பாட்டம்"

    • முத்துப்பேட்டை பேரூராட்சி அலுவலகம் முன்பு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • அரசு அனுமதியின்றி பழமையான கட்டங்களை இடித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    முத்துப்பேட்டை:

    திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை பேரூராட்சி அலுவலகம் முன்பு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    மாவட்ட பொருளாளர் வெற்றி தலைமை வகித்தார்.

    ஒன்றிய பொருளாளர் விடுதலை பாண்டி, ஒன்றிய துணை செயலாளர்கள் மாரிமுத்து, அம்பை முருகேஷ், ராஜவர்மன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஆர்ப்பாட்டத்தை விளக்கி மாவட்ட செயலாளர்செல்வன், ஒன்றிய செயலாளர் துரை.ஈழராஜா, நகரச் செயலாளர் குணா.கண்ணதாசன் ஆகியோர் பேசினார்கள்.

    ஆர்ப்பாட்டத்தில், கடந்த ஆட்சியின்போது மத்திய அரசின் வீடு கட்டும் திட்டம், கழிவறை கட்டும் திட்டம், உறிஞ்சிக் குழாய் அமைக்கும் திட்டம் ஆகியவற்றில் நடந்த முறைகேடுகள் குறித்து உரிய விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீதும், பழமையான அரசு கட்டிடங்களை அனுமதி இன்றி இடித்தவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • முக துவார மணல் திட்டுகளை முறையாக தூர்வாரப்படவில்லை என்று கூறப்படுகிறது.
    • 200-க்கும் மேற்பட்ட மீனவர்கள் திடீரென இன்று கடலுக்குள் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    பட்டுக்கோட்டை:

    தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை தாலுகா, ராஜாமடம் அருகே கீழத்தோட்டம் கிராமத்தில் 1000-க்கும் மேற்பட்ட மீனவர்கள் வசித்து வருகிறார்கள்.

    இவர்களுக்கு மீன்பிடி தொழிலே பிரதான தொழிலாகும்.

    இந்த கிராமத்தில் 210-க்கும் மேற்பட்ட பைபர், நாட்டு படகுகள் உள்ளது.

    கடற்கரையில் இருந்து கீழத்தோட்டம் கிராமத்திற்குள் படகுகள் வந்து செல்வதற்கான ஒரே வழி இந்த முக துவாரத்தில் உள்ள வாய்க்கால்கள் மட்டும் தான்.இந்நிலையில், சமீபத்தில் தமிழக அரசின் உத்தரவின் பெயரில், மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் மூலம் ரூ.8 கோடி மதிப்பீட்டில் மீன் இறங்குதளம் மற்றும் கடற்கரைக்குள் நீர்புகும் வாய்க்காலின் முக துவாரங்களை அடைத்து கிடக்கும் மணல்களை தூர்வாரும் பணிக்கு டெண்டர் விடப்பட்டு பணிகள் நடைபெற்றன.

    இந்த பணிகள் முடிவடைந்ததாக கூறப்படுகிறது.

    ஆனால், அந்த முக துவார மணல் திட்டுகளை முறையாக தூர்வாரப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதுகுறித்து பலமுறை ஊர் பஞ்சாயத்தா ர்கள் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    இதனால், ஆத்திரமடைந்த 200-க்கும் மேற்பட்ட மீனவர்கள் தங்கள் குடும்பத்தினருடன் திடீரென இன்று கடலுக்குள் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த பிரச்சினைக்கு மீன்வளத்துறை மற்றும் மாவட்ட கலெக்டர் உடனடியாக நடவடிக்கை எடுத்து தீர்வு காண வேண்டும். இல்லை என்றால் மீண்டும் போராட்டம் நடை பெறும் என்று கூறி அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • தஞ்சை கோர்ட் வளாகம் முன்பு பணிகளை புறக்கணித்து வக்கீல்கள் திரண்டனர்.
    • சட்டங்களில் இந்தி திணிப்பை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    தஞ்சாவூர்:

    இந்திய தண்டனை சட்டம், குற்றவியல் விசாரணை முறை சட்டம், இந்திய சாட்சிய சட்டம் ஆகிய சட்டங்களை இந்தி மொழியில் பெயர் மாற்றம் செய்து நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்ததை கண்டித்தும், அந்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தியும் இன்று 2-வது நாளாக தஞ்சை ஒருங்கிணைந்த கோர்ட் வளாகம் முன்பு பணிகளை புறக்கணித்து வக்கீல்கள் திரண்டனர்.

    பின்னர் கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கிருந்து பேரணியாக புறப்பட்டனர். அந்த பேரணி ராமநாதன் ரவுண்டானா வழியாக சென்று தஞ்சை ரெயில் நிலையம் முன்பு முடிவடைந்தது. பின்னர் அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதற்கு தஞ்சாவூர் வக்கீல்கள் சங்க தலைவர் தியாக .காமராஜ் தலைமை தாங்கினார். செயலாளர் சுந்தர்ராஜன், முன்னாள் தலைவர் கோ. அன்பரசன், தமிழ்நாடு பார் கவுன்சில் உறுப்பினர் சிவ சுப்பிரமணியம், முன்னாள் செயலாளர் நல்லத்துரை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஆர்ப்பாட்டத்தில் சட்டங்களில் இந்தி திணிப்பை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் ஏராளமான வக்கீல்கள் கலந்து கொண்டனர்.

    இதை கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை உண்ணாவிரதம் போராட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது.

    • பருவம் தவறிய மழையால் சாகுபடி கடுமையாக பாதிக்கப்பட்டது.
    • குத்தகை பாக்கி முழுவதையும் தள்ளுபடி செய்ய வேண்டும்.

    பூதலூர்:

    பூதலூர் அருகே உள்ள வெண்டையம்பட்டியில் அமைந்துள்ள தான்தோன்றீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான நிலங்களில் விவசாயிகள் ஆண்டாண்டு காலமாக விவசாயம் செய்து வருகின்றனர்.

    குத்தகையை இந்து சமய அறநிலை யத்துறைக்கு செலுத்தி வருகின்றனர்.

    இப்பகுதியில் உய்யக்கொண்டான் நீட்டிப்பு வாய்க்கால் மூலம் ஒருபோக சம்பா சாகுபடி மட்டுமே செய்யப்பட்டு வருகிறது.

    கடந்தாண்டு பருவம் தவறிய மழையால் சாகுபடி கடுமையாக பாதி க்கப்பட்டது.

    நடப்பாண்டும் இதுவரை தண்ணீர் வந்து சேரவில்லை.

    இச்சூழலை கருத்தில் கொண்டு தற்போது குத்தகை பாக்கியை செலுத்த வலியுறுத்தி அனுப்ப ப்பட்டுள்ள அறிவிப்பு நோட்டீஸை திரும்பப் பெருவதோடு, குத்தகை பாக்கி முழுவதையும் தள்ளுபடி செய்ய வலியுறுத்தியும் காலங்காலமாக இக்கோவிலின் நிலங்களில் குடியிருந்து வருபவர்களுக்கு குடிமனை பட்டா வழங்கிட வலியுறுத்தியும் வெண்டை யம்பட்டி தான்தோ ன்றீஸ்வரர் கோவில் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    தஞ்சை மாவட்ட தலைவர் ராமச்சந்திரன் தலைமை வகித்தார்.

    கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தஞ்சை மாவட்ட செயலாளர் முத்து. உத்திராபதி, மாவட்ட துணை செயலாளர் சக்திவேல், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் பாஸ்கர், பூதலூர் ஒன்றிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் முகில் ஆகியோர் பேசினர்.

    இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    ×