என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "tag 94445"

    மாணவர்கள் மரக்கன்று நட தஞ்சை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அறிவுறுத்தி உள்ளார்.
    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் வீட்டுக்கொரு விருட்சம் ஓராண்டில் ஒரு லட்சம் மரக்கன்றுகள் வளர்க்கும் திட்டத்தினை உலக புவி தினத்தன்று தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் தொடக்கி வைத்தார். 

    இத்திட்டத்திற்கு கவின்மிகு தஞ்சை இயக்கம் பல்வேறு அமைப்புகளுடன் இணைந்து செயல்வடிவம் கொடுத்து வருகிறது.

     இத்திட்டத்தின் கீழ் ‌இதுவரை பல்வேறு கல்லூரிகள் மற்றும் பொது இடங்களில் சுமார் 5000 மரக்கன்றுகள் நட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.

     இதனில் தமிழகத்தில் முதல்முறையாக திருவையாறு அரசு இசைக் கல்லூரியில் இசை வனம் உருவாக்கப்பட்டுள்ளது சிறப்புக்குரியதாகும்.

     இதன் தொடர்ச்சியாக அன்னை வேளாங்கண்ணி கலை அறிவியல் கல்லூரியில் தேசிய மாணவர் படை, நாட்டு நலப்பணி திட்டம், இளைஞர் செஞ்சிலுவை சங்கம் மற்றும் செஞ்சுருள் சங்கம் சார்பில் “புஷ்பவனம்” எனும் பெயரில் 500 மரக்கன்றுகள் நட்டு பராமரிக்கும் பணியினை மாவட்ட கலெக்டர்  தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் மரக்கன்று நட்டு துவக்கி வைத்தார்.


     மேலும் அக்கல்லூரியில் தாவரவியல் துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள ஆரோக்கியா மூலிகைத் தோட்டத்தினையும் துவக்கி வைத்தார். 

    தொடர்ந்து மாணவர்களிடம் பேசிய மாவட்ட கலெக்டர்,  இக்கல்லூரியில் பயிலும் ஒவ்வொரு மாணவ -மாணவியரும் அவர்களது வீடுகளில் ஒரு மரத்தினை வளர்த்திட  வேண்டுமென அறிவுறுத்தினார்.
    மனுவை பெற்றுக்கொண்ட அதிகாரிகள், முதல்வர் அலுவலகத்தில் பேசி ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்தனர்.

    திருப்பூர்:

    திருப்பூர், கணபதிபாளையத்தை சேர்ந்தவர் மாரிமுத்து. இவரது மனைவி கொழஞ்சி. இருவரும் பனியன் தொழிலாளிகள். அரசு மேல்நிலைப்பள்ளியில் இவர்களது மூத்த மகள் பிரேமா 8-ம் வகுப்பும், இளைய மகள் உமா 6-ம்வகுப்பும் பயில்கின்றனர். இவர்கள் தங்கள் சேமிப்பு பணத்தை, அடிக்கடி மக்களுக்கு உதவியாக வழங்கி வருகின்றனர்.

    அவ்வகையில் சிறுசேமிப்பாக சேர்த்த, 3 ஆயிரம் ரூபாயை இலங்கை மக்களுக்கு நிவாரணமாக வழங்க முன்வந்துள்ளனர். இலங்கைக்கான நிவாரணமாக தமிழக முதல்வரிடம் நேரில் வழங்க விரும்புகிறோம். மாவட்ட நிர்வாகம் அதற்கு உதவ வேண்டுமென கோரிக்கை விடுத்தனர்.

    இதுகுறித்து சகோதரிகள் கூறியதாவது:-

    கடந்த 7 ஆண்டுகளாக சேமித்து வைக்கும் பணத்தை, பல்வேறு உதவிகளாக வழங்கி உள்ளோம். இதுவரை 50 ஆயிரம் ரூபாய் வரை வழங்கியுள்ளோம். ஒருமுறையாவது, நிவாரண உதவித்தொகையை முதல்வரிடம் வழங்க வேண்டும் என்று முயற்சித்தோம், இயலவில்லை. இம்முறையாவது, முதல்வரிடம் நேரில் வழங்க அனுமதி பெற்றுத்தர வேண்டும் என்றனர். மனுவை பெற்றுக்கொண்ட அதிகாரிகள், முதல்வர் அலுவலகத்தில் பேசி ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்தனர்.

    ஆசிரியர் தன் வகுப்பில் உள்ள அனைத்து மாணவர்களை பற்றிய புரிதலும், நம்பிக்கையும் கொண்டிருந்தால், அவர்களின் மனநிலையில் எந்த முரண்பாடும் வராது.
    ஒரு குழந்தையின் வளர்ச்சியில் காணப்படும் மாற்றங்களை சரியான நேரத்தில் கண்டுபிடித்து பயிற்சி அளித்தால் அதில் இருந்து அவர்களை பாதுகாக்க முடியும்.

    மாணவர்கள் அனைவருமே ஏதோ ஒரு திறன் கொண்டவர்கள் என்பதை ஆசிரியர்கள் உணர வேண்டும். எந்தச் சூழ்நிலையிலும் ஆசிரியரின் ஒத்துழைப்பால் மாணவர்கள் முன்னேற்றம் அடைய முடியும்.

    அவர்கள் அதிக நேரம் செலவிடுவது பள்ளியில் தான். ஆசிரியர் தன் வகுப்பில் உள்ள அனைத்து மாணவர்களை பற்றிய புரிதலும், நம்பிக்கையும் கொண்டிருந்தால், அவர்களின் மனநிலையில் எந்த முரண்பாடும் வராது.

    மாணவர்களின் கவனம் சிதற இப்போது பல வகையான வாய்ப்புகள் இருக்கின்றன. பெரியவர்களைப் பார்த்தே அவர்கள் கற்றுக்கொள்கிறார்கள். வீட்டில் உள்ள பெரியவர்கள், ஒரு நாள் தங்கள் மொபைல் பயன்பாட்டைக் குறைத்துக்கொண்டால், மாணவர்களின் நிலைப்பாட்டினை மாற்ற முடியும்.

    பிள்ளைகளின் வளர்ச்சியில், பெற்றோர்களின் பொறுப்பையும் அறிந்து கொள்ள வேண்டும். இதில் குழந்தைகள் கேட்கும் நியாயமான கோரிக்கைகளுக்குப் பெற்றோர்கள் செவி சாய்க்க வேண்டும்.

    அதற்கு உரிய நேரத்தில் பதிலளிப்பதன் மூலம், மாணவர்கள் மரியாதை கொண்டு தன்னிலை புரிந்து செயல்படுகிறார்கள் என்று ஆராய்ச்சிகள் நிரூபித்து உள்ளன. எனவே, மாணவர்களின் சிறப்பான எதிர்காலத்தில் ஆசிரியர்களுக்கும், பெற்றோருக்கும் சமமான பங்கு உள்ளது.
    மாணவர்கள் தன்னம்பிக்கையுடன் உழைத்து மனசாட்சியுடன் செயல்பட வேண்டும் என நீதிபதி பேசினார்.
    பரமக்குடி

    ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அரசு கலைக் கல்லூரியில் 25-வது ஆண்டு விழா நடந்தது. முதல்வர் குணசேகரன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக துறையூர் சார்பு நீதிமன்ற நீதிபதி ஜெய்சங்கர் கலந்து கொண்டார். அவர் கல்வியில் சிறந்த விளங்கும் மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி பேசியதாவது:-

    மாணவர்கள் தன்னம்பி க்கையுடன் உழைத்து, மனசாட்சியுடன் செயல்பட வேண்டும். சட்ட திட்டங்களை மதித்து சமூகத்தின் முன்னேற்றத்திற்கு பாடுபட வேண்டும். அரசுப்பணிகளுக்கு செல்ல படிக்கும் காலத்தில் இருந்தே கடினமான பயிற்சிகளை எடுத்துக்கொண்டால் வெற்றி நிச்சயம் கிடைக்கும்.  

    மாணவிகள் எதையும் துணிச்சலுடன் எதிர்கொள்ளும் திறமையை வளர்த்துக்கொள்ள வேண்டும். உங்கள் டைரியில் நீங்கள் என்ன வேலைக்கு செல்லவேண்டும் என்பதை குறித்து வைத்து தினமும் வாசித்து அதற்கு ஏற்ப உழைக்க வேண்டும். 


    பின்தங்கிய ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இருந்து டி.என்.பி.எஸ்.சி. மற்றும் காவலர் தேர்வுகளுக்கு அதிக மாணவர்களை அனுப்பிய பெருமையுடைய இந்த கல்லூரி மென்மேலும் சிறந்து விளங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார். 

    இந்த நிகழ்ச்சியில் நகர்மன்ற தலைவர் சேது.கருணாநிதி, நகர்மன்ற உறுப்பினர் ஜீவரத்தினம், வேந்தோணி, ஊராட்சி மன்ற தலைவர் குழந்தை ராணி துரைராஜ், துறைத்தலைவர்கள் ரேணுகாதேவி, அறிவழகன், கண்ணன், ஆயிஷா, மும்தாஜ் பேகம், விஜயகுமார் கிருஷ்ணவேணி, ஹரிநாராயணன், உடற்கல்வி இயக்குனர் பிரசாத் மற்றும் பேராசிரி யர்கள், அலுவலக பணியா ளர்கள், மாணவ- மாணவி கள் கலந்து கொண்டனர். 
    சிவகாசியில் மாணவர்களின் வாழ்க்கையை சீரழிக்கும் போதை கும்பல் போலீசார் நடவடிக்கை எடுப்பார்களா? என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
    விருதுநகர்

    தமிழகத்தில் புகையிலை, கஞ்சா ஆகியவற்றின் விற்பனையை தடுக்க தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. இது தொடர்பாக போதை பொருட்களை விற்கும் கும்பல் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். 

    அதன்படி தென் மண்ட ல ஐ.ஜி. அஸ்ராகார்க் ஆலோசனையின் பேரில் போதை பொருட்கள் விற்பனை செய்யும் கும்பலை கைது செய்ய போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.  கஞ்சா, புகையிலை விற்பவர்களின் வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் விருதுநகர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்களை குறி வைத்து கஞ்சா, புகையிலை பொருட்கள் விற்கப்பட்டு வருகிறது. இதில் ஒரு பள்ளி மாணவர் போதை பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளார். அதன் விவரம் வருமாறு:-

    சிவகாசி பகுதியைச் சேர்ந்த 16 வயதுடைய பள்ளி மாணவர் ஒருவர் அேத பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார். கடந்த சில மாதங்களாக மாணவரின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டது. பள்ளிக்கு சரிவர செல்லாமல் தெரு சந்திப்பில் மயக்கத்துடனேயே சுற்றித் திரிந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் விசாரித்த போது, மகன் கஞ்சா பழக்கத்திற்கு அடிமையாகி இருப்பது தெரியவந்தது.

    அதே பகுதியைச் சேர்ந்த சிலோன் ராஜா, சுருட்டை மாடசாமி, குருசாமி, பூமாரி, ஜெயராம்,  கருப்பசாமி, சிதம்பரம், சாந்தி ஆகிய 8 பேர், மாணவரை கஞ்சா பழக்கத்துக்கு அடிமையாக்கியுள்ளனர்.  மேலும் அந்த மாணவரை பயன்படுத்தி கஞ்சா விற்றதாக சிவகாசி டவுன் போலீசில் மாணவரின் தந்தை புகார் செய்துள்ளார்.  இதன் அடிப்படையில் 8 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

    வளர்ந்து வரும் சிவகாசி மாநகராட்சி பகுதியில் இதுபோன்ற சமூக விரோத கும்பல் பள்ளி-கல்லூரி மாணவர்களை குறி வைத்து கஞ்சா விற்று அவர்களை போதைக்கு அடிமையாக்கி அவர்களின் வாழ்க்கையை சீரழித்து வருகின்றன.

    எனவே இது தொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நேரடி விசாரணை நடத்தி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

    ஆசிரியர்களும், மாணவர்களை எதிர்பார்ப்பு என்னும் குறுகிய வட்டத்திற்குள் விலகி வைக்காமல் அவர்களின் திறமைகளை, தனித்தன்மைகளை வெளிகாட்ட வழிவகிக்கின்றனர்.
    நாம் பிறக்கையில் இந்த உலகிற்கு எதையும் கொண்டு வருவதில்லை. அதுபோல் போகும்போது எதையும் கொண்டு செல்வதில்லை. வாழும் வாழ்க்கையின் இடைப்பட்ட காலத்தில் கல்வி செல்வத்தை பெற்று பகுத்தறிவுடன் இன்புற்று வாழவேண்டும். மாணவர்களை தன்பிள்ளை என எண்ணி எப்போதும் கல்வி புகட்டுவதில் ஆர்வம் காட்டுபவர் ஆசிரியர்களே. அவர்கள் உறவு முக்கியமானது, முதன்மையானது. ஒவ்வொரு ஆசிரியரின் குறிக்கோள், மாணவர்கள் நல்லறிவுடனும், சமுதாயத்தில் வளமுடனும் சிறந்து விளங்க வேண்டும் என்பது தான். மாணவர்களின் வெற்றியே ஆசிரியரின் வெற்றி. இவர்களை விடவும் குழந்தைகள் மீது அக்கறைக் கொள்பவர் வேறு எவரும் இருக்க முடியாது. கடவுள் தன்னால் எல்லா இடத்திலும் இருந்து கவனிக்க முடியாது என்பதினால் தான் ஆசிரியரை படைத்தார் என்று கூறலாம்.

    மாதா, பிதா, குரு, தெய்வம் என்பர். ஆசிரியர் பணியே அறப்பணி, அதற்கு நீ அர்ப்பணி என்பன மனித வரலாற்றில் வழிவழி வந்த மணி மொழியாக போற்றி பாராட்டினர். குருவாகிய ஆசிரியர் தாயாகவும், தந்தையாகவும் விளங்கவேண்டும். அறிவையும், ஆற்றலையும் மாணவர்களுக்கு அளித்து தெய்வத்தை உணர வைப்பவர்கள் ஆசிரிய பெருமக்கள்.

    இன்றைய காலக்கட்டத்தில் ஒரு நாட்டின் நம்பிக்கையாக மாணவர்கள் திகழ்கின்றனர். அதனால் ஆசிரியர்களும், மாணவர்களை எதிர்பார்ப்பு என்னும் குறுகிய வட்டத்திற்குள் விலகி வைக்காமல் அவர்களின் திறமைகளை, தனித்தன்மைகளை வெளிகாட்ட வழிவகிக்கின்றனர். இதற்கென கட்டுப்பாடுகளை தளர்த்தி சுதந்திர சுயசிந்தனையால் மாணவர்கள் வளர அவர்களுக்கு ஆசிரியர்கள் பாதை அமைத்து கொடுக்கின்றனர்.

    இதன் மூலம் மாணவர்கள் சுதந்திரமாக காற்றாடிபோல் வானுயர பறந்து வெற்றி சாதனை படைக்கலாம். கட்டுப்பாட்டிற்காக ஆசிரியர்களின் கையில் நூல் இருக்குமே தவிர அதுவே அவர்கள் விண்ணோட்டத்திற்கு தடையாக அமைந்திட கூடாது. தடைக்கல்லே உனக்கோர் படிக்கல் என்று ஊக்கத்தையும், தன்னம்பிக்கையும் ஆசிரியர்கள் ஊட்டுவதினாலேயே மாணவர்கள் சாதனையாளராக மாறுகின்றனர். ஒவ்வொரு சாதனைக்கு பின்னாலும் ஆசிரியர்களின் பங்கு ஏதோ விதத்தில் ஒளிந்திருக்கிறது.

    மாணவர்களின் திறமையை தக்க நேரத்தில் வெளிக்கொணர்ந்து வாய்ப்புகள் அளித்து மேம்படுத்தி காட்டுபவர் ஆசிரியர்கள் தான். மாணவர்களின் குணநலம், தன்னம்பிக்கை, அடிப்படை கடமைகள், நல்லொழுக்கம், தலைமை தகுதி, நாட்டுப்பற்று ஆகியவற்றை கற்பிக்க ஒரு உந்துதலாக ஆசிரியர்கள் விளங்குகின்றனர். ஒவ்வொரு மாணவர்களின் பலத்தையும், பலவீனத்தையும் கண்டறிந்து அடையாளப்படுத்துபவர்கள் ஆசிரியர்கள்.

    நாட்டின் கலாசாரம், பண்பாடு, பழக்கவழக்கம், மரபு, நாகரிகம் போன்ற அனைத்தையும் இந்த காலகட்டத்தில் குழிதோண்டி புதைக்கக்கூடிய அவலநிலைக்கு ஆளாகி இருக்கிறோம். இன்று குழந்தைகளுக்கு நல்லது, கெட்டது எடுத்துச்சொல்ல கூட்டுக் குடும்பங்கள் காணாமல் போய்விட்டன. இன்றைய பெருவாரியான மாணவர்கள் பலவீனமாக இருப்பதற்கு தைரியம் இல்லாமையே காரணம். மாணவிகளும் நன்கு படித்து நன்மதிப்பு பெற்றாலும் வாழ்க்கையில் ஏற்படும் சிக்கலை தீர்வு காணமுடியாமல் திணறுகின்றனர். இப்படிப்பட்டவர்களுக்கு தன்னம்பிக்கை, தைரியத்தையும் ஊட்டுபவர்களாக ஆசிரியர்கள் விளங்குகின்றனர்.

    மாணவர்கள் நாட்டை நிர்ணயிக்கும் சிற்பிகள். அவர்களுக்கு சரியான பயிற்சி அளிக்கவேண்டும். ஆசிரியர்களும் மாணவ-மாணவிகளிடம் நன்மதிப்பை பெறும் வகையில் நடந்து கொள்ளவேண்டும். மாணவர்களுக்கு சரியான வழிகாட்டுதல் அவசியம். ஆசிரியர் பணி என்பது தொழில் அல்ல. அது தொண்டு. மாணவர்களின் உடல் வளர்ச்சியோடு உள்ள வளர்ச்சியையும் ஆராயக் கூடியவர்கள். மற்ற துறையில் செய்யும் தவறுகள் அந்த துறையோடு நின்றுவிடும். ஆனால் கல்வித்துறையில் ஏற்படும் தவறுகள் எதிர்காலத்தையே சீரழித்துவிடும். சேவை எனக் கருதப்படும் பணிகள் பல இருந்தாலும் அவை அனைத்திலும் முதன்மையானதாகவும் சிறப்பித்து போற்றப்படுவதுமான ஆசிரிய பணியே மிகச்சிறந்த பணி.
    59.1 சதவீதம் பேர் திறந்தவெளி பொது இடங்களில் புகையிலையை தடை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.
    புதுச்சேரி:

    புதுச்சேரி மாநில புகையிலை கட்டுப்பாட்டு மையம், தேசிய புகையிலை கட்டுப்பாட்டு திட்டம் அரசு மார்பு நோய் நிலையம், ஜிப்மர் நோய் தடுப்பு மற்றும் சமூக மருத்துவ துறை சார்பில் உலக இளைஞர்கள் புகையிலை பயன்பாட்டு தகவல் இதழ் வெளியீட்டு நிகழ்ச்சி மற்றும் புகையிலை நிறுவனங்களில் குறுக்கீடு தொடர்பான பயிலரங்கு அக்கார்டு ஓட்டலில் நடந்தது.

    நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இளைஞர் புகையிலை கணக்கெடுப்பு தகவல் இதழை முதல்-அமைச்சர் ரங்கசாமி வெளியிட்டார். இதில் சுகாதாரத்துறை செயலாளர் உதயகுமார், இயக்குனர் ஸ்ரீராமுலு, மாநில புகையிலை கட்டுப்பாட்டு அதிகாரி மற்றும் மாநில காசநோய் கட்டுப்பாட்டு அதிகாரி கோவிந்தராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    உலக இளைஞர் புகையிலை பயன்பாடு கணக்கெடுப்பு தகவல் இதழை வெளியிட்ட புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி

    உலக இளைஞர்கள் புகையிலை பயன்பாட்டு கணக்கெடுப்பில் கிடைத்த தகவலின்படி, ‘புதுவையில் 13-15 வயதிற்குப்பட்ட மாணவர்களில் 4.3 சதவீதத்தினர் புகைக்கும் அல்லது மெல்லும் வகையிலான புகையிலையில் ஏதேனும் ஒன்றை பயன்படுத்தி வருகின்றனர். இது தேசிய சராசரியான 8.5 சதவீதத்தை ஒப்பிடும்போது பாதியளவு குறைவானது.

    புகையிலை இல்லா வழிகாட்டு நெறிமுறைகளை 63.6 சதவீதம் பள்ளிகள் பின்பற்றுகின்றன. 45.5 சதவீதம் பள்ளிகள் புகையிலை இல்லா பள்ளிக்கூடம் என்ற தகவல் பலகை வைக்க வேண்டும் என்ற நெறிமுறை பற்றி அறிந்துள்ளன. 52.6 சதவீதம் பேர் மூடப்பட்ட பொது இடங்களில் புகையிலையை தடை செய்ய வேண்டும் என்றும், 59.1 சதவீதம் பேர் திறந்தவெளி பொது இடங்களில் புகையிலையை தடை செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்’.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



    பள்ளிச்சூழலை மறந்து ஆன்லைன் வழியே வீட்டு கல்வி முறைக்கு பழகிவிட்ட மாணவர்களை பள்ளிச் சூழலுக்கு பழக்கப்படுத்தும் முயற்சியில் ஆசிரியர்கள் ஈடுபட்டு இருக்கிறார்கள்.
    கொரோனா தொற்று காரணமாக மூடப்பட்ட பள்ளிகள் சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு படிப்படியாக திறக்கப்பட்டு வருகின்றன. பள்ளிச்சூழலை மறந்து ஆன்லைன் வழியே வீட்டு கல்வி முறைக்கு பழகிவிட்ட மாணவர்களை பள்ளிச் சூழலுக்கு பழக்கப்படுத்தும் முயற்சியில் ஆசிரியர்கள் ஈடுபட்டு இருக்கிறார்கள். கேரளாவில் இருக்கும் பள்ளி ஒன்று மாணவர்களை ஈர்க்கும் நோக்கத்தில் ‘மகிழ்ச்சி’ பாடத்திட்டத்தை உருவாக்கி உள்ளது. மாணவர்களுக்கு வீட்டுச் சூழலை வழங்கு வதுதான் இந்த திட்டத்தின் நோக்கம்.

    இதுநாள் வரை படிப்பு, விளையாட்டு, பொழுதுபோக்கு என வீட்டிலேயே பிடித்தமான விஷயங்களை செய்வதற்கு பழகி விட்டதால் சட்டென்று அவர்களை பள்ளிச் சூழலுக்கு தயார்படுத்துவது சிரமமானது. அதனை கருத்தில் கொண்டே இந்த பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

    இதில் இசை, நடனம், கலை வேலைப்பாடுகள் மற்றும் கைவினை, திரைப்பட விமர்சனங்கள், புகைப்பட விளக்கக்காட்சிகள், தோட்டக்கலை, புத்தக வாசிப்பு என பல விஷயங்கள் சொல்லித்தரப்படுகின்றன.

    இந்த பாடத்திட்டம் பள்ளி நேரத்திற்கு அப்பால் நடைமுறைப்படுத்தப்படுகிறது. தங்களுக்கு பிடித்தமான பொழுதுபோக்கு அம்சங்களை கொண்டிருப்பதால் மாணவர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது.

    இந்த பள்ளிக்கூடம் ஆலுவாவில் உள்ள கீழ்மாட் என்ற கிராமத்தில் அமைந்திருக்கிறது. ‘‘எங்கள் பள்ளிக்கூடம் மலைப்பகுதியில் வசிக்கும் பழங்குடியின மாணவர்களின் நலனுக்காக இயங்குகிறது. இங்கு படிப்பவர்களில் சுமார் 90 சதவீதம் பேர் விடுதியில் தங்கி படிக்கிறார்கள். கொரோனா பரவலால் பள்ளிகள் மூடப்பட்டதால் நீண்ட நாட்களாக வீட்டிலேயே தங்கிவிட்டார்கள். மீண்டும் பள்ளிக்கு திரும்பும்போது வீட்டுச்சூழலை மறப்பது சற்று சிரமமானது. திடீரென்று குடும்பத்தில் இருந்து துண்டிக்கப்பட்டதைப்போல அவர்கள் உணருவதையும் நாங்கள் விரும்பவில்லை. மீண்டும் பள்ளி வாழ்க்கைக்கு திரும்புவதற்கு பழக்கப்படுத்தும் நோக்கத்தில் மகிழ்ச்சி பாடத்திட்டத்தை முன்னெடுத்திருக்கிறோம்.

    மகிழ்ச்சி பாடத்திட்டங்களை உருவாக்குவது தொடர்பான வழிகாட்டுதல்களை அரசாங்கம் வெளியிட்டிருக்கிறது. அதனை பின்பற்றி இரண்டு வாரங்களுக்கு இந்த பாடத்திட்டத்தை நடத்த இருக்கிறோம். மாணவர்கள் மீண்டும் கற்றல் சூழலுக்குத் திரும்ப உதவுவதற்கான சிறந்த வழியாக மகிழ்ச்சி பாடத்திட்டமும் அமைந்திருக்கிறது’’ என்கிறார்கள், ஆசிரியர்கள்.
    ஆதம்பாக்கத்தில் பெண்ணிடம் செல்போன் பறித்த 3 மாணவர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆலந்தூர்:

    ஆதம்பாக்கம், சாந்தி நகரை சேர்ந்தவர் லாவண்யா. தனியார் இணைய தள நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

    இவர், இரவு பணிக்கு செல்வதற்காக ஆதம்பாக்கம், மோகனபுரி தெருவில் காருக்காக காத்திருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 3 வாலிபர்கள் திடீரென லாவண்யா வைத்திருந்த செல்போனை பறித்து தப்பி சென்று விட்டனர்.

    இது குறித்து ஆதம்பாக்கம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சம்பவம் நடந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிரா காட்சிகளை வைத்து ஆய்வு செய்தனர்.

    இதில் லாவண்யாவிடம் செல்போன் பறித்தது ஆதம்பாக்கம் அம்பேத்கார் நகரை சேர்ந்த சஞ்சய், பாலாஜி, விக்னேஷ் என்பது தெரிய வந்தது.

    அவர்கள் 3 பேரையும் போலீசார் கைதுசெய்தனர். பிடிபட்டவர்களில் சஞ்சய் பிளஸ்-2 தேர்வில் தோல்வி அடைந்து உள்ளார்.

    பாலாஜி கிண்டியில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வருகிறார். விக்னேஷ் என்ஜினீயரிங் கவுன்சிலிங்கிற்காக காத்திருக்கிறார்.

    உல்லாச செலவு செய்ய அவர்கள் செல்போன் பறிப்பில் ஈடுபட்டது தெரிந்தது. இதே போல் அவர்கள் வேறு எந்த இடங்களிலும் கைவரிசை காட்டி உள்ளனரா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். கைதானவர்களிடம் இருந்து மோட்டார் சைக்கிள், செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.

    அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள தேர்ச்சி விகித பட்டியலில் 6 தனியார் என்ஜினீயரிங் கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட தேர்ச்சி பெறவில்லை.
    சென்னை:

    தமிழ்நாட்டில் 540-க்கும் மேற்பட்ட என்ஜினீயரிங் கல்லூரிகள் உள்ளன.

    அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் என்ஜினீயரிங் கல்லூரிகள், தனியார் சுயநிதி கல்லூரிகள் என இக்கல்லூரிகள் அனைத்தும் அண்ணா பல்கலைக்கழகத்தின் இணைப்பு அங்கீகாரம் பெற்று இயங்கி வருகின்றன.

    என்ஜினீயரிங் கல்லூரிகள் வாரியாக மாணவர்களின் தேர்ச்சி விகித பட்டியலை அண்ணா பல்கலைக்கழகம் ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது.

    2018-ம் ஆண்டு நவம்பர்- டிசம்பர் மாதங்களில் நடைபெற்ற பல்கலைக் கழக செமஸ்டர் தேர்வுகளில் பி.இ., பி.டெக்., மாணவர்களின் தேர்ச்சி விகிதங்கள் இணைய தளத்தில் வெளியிடப்பட்டன.

    இதில் 481 இணைப்பு அங்கீகார கல்லூரிகளின் தேர்ச்சி விகித விவரங்களை கல்லூரிகள் வாரியாக உள்ளன. ஒவ்வொரு கல்லூரியிலும் எத்தனை மாணவர்கள் தேர்வு எழுதினர்? அவர்களில் எவ்வளவு பேர் தேர்ச்சி பெற்றனர்? தேர்ச்சி விகிதம் எவ்வளவு? ஆகிய விவரங்கள் இடம் பெற்றுள்ளன.



    தேர்ச்சி விகித பட்டியலின் படி 6 தனியார் என்ஜினீயரிங் கல்லூரிகளில் ஒரு மாணவர்கூட தேர்ச்சி பெறவில்லை. இந்த கல்லூரிகளில் இருந்து பி.இ., பி.டெக்., படிப்புகளுக்கு 682 மாணவர்கள் தேர்வு எழுதினர். இவர்கள் அனைவரும் தோல்வி அடைந்துள்ளனர்.

    59 கல்லூரிகளில் மட்டுமே 50 சதவீதத்துக்கும் அதிகமானவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். சிறந்த தேர்ச்சி விகிதத்தை கொண்ட கல்லூரியில் கூட 85.57 சதவீத மாணவர்கள்தான் தேர்ச்சி அடைந்துள்ளனர். மொத்தத்தில் 3 கல்லூரிகள் மட்டுமே 80 சதவீதத்துக்கும் அதிகமான தேர்ச்சி விகிதத்தை பெற்றுள்ளன.
    வேலை, சம்பளம் என்பதை மட்டும் அடிப்படையாக கொண்டு படிப்பை தேர்வு செய்து விடக்கூடாது. விருப்பமான துறைகளில் தங்களுக்கு உள்ள வாய்ப்புகளை அறிந்து படிக்க வேண்டும்.
    கல்விதான் ஒரு மனிதனை பண்பு உள்ளவனாக மாற்றுகிறது. கல்வி கற்ற சமுதாயம் தான் உயர்ந்த சமுதாயமாக கருதப்படுகிறது. எனவே அனைவரும் கட்டாயமாக கல்வி கற்க வேண்டும் என்பதற்காக மத்திய அரசு கட்டாய கல்வி உரிமை சட்டத்தை நிறைவேற்றியது. இதனால் 8-ம் வகுப்பு வரை மாணவ-மாணவிகள் கட்டாயமாக கல்வி கற்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. மேலும் இடைநிற்றல் வெகுவாக குறைந்ததால் கல்வியறிவு பெற்றவர்களின் எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து வருகிறது. இதற்காக மாணவ-மாணவிகளுக்கு தேவையான பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாநில அரசு தொடர்ந்து செய்து வருகிறது.

    பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு உள்ளன. இதையடுத்து மாணவ-மாணவிகள் உயர் கல்வியில் சேர்ந்து படிக்க வேண்டும். ஆனால் எந்த படிப்பை தேர்வு செய்வது என்பதில் அவர்களுக்கு பல்வேறு குழப்பங்கள் இருக்கும். ஆனால் ஒவ்வொருவரும் தாங்கள் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தங்களுக்கு விருப்ப மான பாடத்தை தேர்வு செய்து படிக்க வேண்டும். மேல்நிலை கல்வியுடன் படிப்பை விட்டு விடக் கூடாது. நாட்டில் உயர்கல்வி கற்றவர்களின் எண்ணிக்கை தற்போதும் குறைவாகவே உள்ளது. அதை உயர்த்த வேண்டியது அவசியம். இதற்கு கல்லூரி படிப்பு மற்றும் ஆராய்ச்சி படிப்பு என்று மாணவர்கள் தொடர்ந்து கல்வி கற்க வேண்டும். ஆராய்ச்சி நிலை வரை மாணவ- மாணவிகள் படித்தால் தான், அது அவர்களுக்கு மட்டுமின்றி நாட்டிற் கும் பயன் உள்ளதாக இருக்கும்.

    கல்லூரி படிப்பை தொடர கிராமப்புற மாணவர்கள், நகரங்களை தேடி செல்ல வேண்டிய நிலை தற்போதும் உள்ளது. அதற்காக அவர்கள் மனம் தளர்ந்து விடாமல் விருப்பமான படிப்பு மற்றும் கல்லூரியை தேர்வு செய்து படிக்க வேண்டும். எந்த படிப்பை தேர்வு செய்வது என்பதில் மாணவ- மாணவிகளுக்கு பெற்றோர்கள் உதவிகரமாக, வழிகாட்டிகளாக இருக்க வேண்டும். மாறாக மாணவ- மாணவிகளை நிர்பந்தம் செய்து, அவர்களின் விருப்பத்திற்கு எதிராக செயல்பட்டு விடக்கூடாது. எந்த அளவுக்கு முடியுமோ அந்த அளவுக்கு மாணவர்களின் கல்வி விருப்பத்தை நிறைவேற்ற பெற்றோர்கள் முயற்சி செய்வார்கள். அதை புரிந்து கொண்டு மாணவர்களும் செயல்பட வேண்டும்.

    வேலை, சம்பளம் என்பதை மட்டும் அடிப்படையாக கொண்டு படிப்பை தேர்வு செய்து விடக்கூடாது. விருப்பமான துறைகளில் தங்களுக்கு உள்ள வாய்ப்புகளை அறிந்து படிக்க வேண்டும். அந்த கல்வி தான் வாழ்க்கை முழுவதற்கும் நிறைவை தருவதாக இருக்கும். அப்படி இல்லாத நிலையில் வேலை, சம்பளம் மட்டும் மகிழ்ச்சி அளித்து விடாது. எனவே உயர் கல்வி கற்றுக் கொள்ள வேண்டும் என்பதில் மாணவ- மாணவிகள் உறுதியாக இருக்க வேண்டும். அது அவர்களை உயர்த்திக் கொள்ளவும், நாட்டை வளப்படுத்துவதற்கும் உதவும் என்பது நிச்சயம்.
    எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவு நாளை மறுதினம் வெளியிடப்படும் என்றும், மாணவர்களின் செல்போன் எண்ணுக்கு மதிப்பெண் குறுஞ்செய்தியாக வரும் என்றும் அரசு தேர்வுத்துறை தெரிவித்துள்ளது. #SSLCExam
    சென்னை:

    எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவு நாளை மறுதினம் வெளியிடப்படும் என்றும், மாணவர்களின் செல்போன் எண்ணுக்கு மதிப்பெண் குறுஞ்செய்தியாக வரும் என்றும் அரசு தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பாக அரசு தேர்வுகள் இயக்குனர் தண்.வசுந்தராதேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு கடந்த மாதம் நடந்தது. பள்ளி மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்கள் இந்த தேர்வை எழுதினார்கள். தேர்வு முடிவு 29-ந் தேதி (நாளை மறுதினம்) காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகிறது.

    தேர்வர்கள் www.tnr-esults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in என்ற இணையதளங்களில் சென்று தங்களுடைய பதிவு எண், பிறந்த தேதி, மாதம், வருடத்தை பதிவு செய்து தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம். மேலும் ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்களிலும், அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணமின்றி தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

    பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை அறியலாம். பள்ளி மாணவர்களுக்கு அவர்கள் பயின்ற பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழி படிவத்தில் குறிப்பிட்டு இருந்த செல்போன் எண்ணுக்கும், தனித்தேர்வர்களுக்கு ஆன்-லைனில் விண்ணப்பித்தபோது அவர்கள் வழங்கிய செல்போன் எண்ணுக்கும் குறுஞ்செய்தியாக மதிப்பெண் வரும்.

    பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளி தலைமை ஆசிரியர் வழியாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதிய தேர்வு மைய தலைமை ஆசிரியர் வழியாகவும் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை அடுத்த மாதம் (மே) 2-ந்தேதி பிற்பகல் முதல் பெற்றுக்கொள்ளலாம். அடுத்த மாதம் 6-ந்தேதி பிற்பகல் முதல் பள்ளி மாணவர்கள், தனித்தேர்வர்கள் www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில் பிறந்த தேதி மற்றும் பதிவு எண் குறிப்பிட்டு மதிப்பெண் சான்றிதழை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

    தேர்வு எழுதிய விடைத்தாள்களின் மதிப்பெண் மறுகூட்டலுக்கு அடுத்த மாதம் 2-ந்தேதி முதல் 4-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம். தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களும், தேர்வில் கலந்து கொள்ள முடியாதவர்களுக்கும் சிறப்பு துணை தேர்வு ஜூன் 14-ந்தேதி தொடங்கி 22-ந்தேதி வரை நடக்கிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #SSLCExam
    ×