என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "tag 95411"

    திருப்பத்தூரில் 250 கே.வி.ஏ. திறன் கொண்ட புதிய டிரான்ஸ்பார்மர் அமைச்சர் பெரியகருப்பன் தொடங்கி வைத்தார்.
    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் 250 கே.வி.ஏ. திறன் கொண்ட புதிய டிரான்ஸ்பார்மர், நாகப்பா மருதப்பா அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகில் தெற்கு ரத வீதியில் மின்வாரியத்தின் சார்பாக சுமார் 7 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ளது. 

    இதை ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் ரிப்பன் வெட்டி இயக்கி வைத்தார். அமைச்சரை பேரூராட்சி தலைவர் கோகிலாராணி நாராயணன், 12-வது வார்டு கவுன்சிலர் பிளாசா ராஜேஸ்வரி சேகர் ஆகியாேர் பொன்னாடை அணிவித்து வரவேற்றனர். 

    மின்வாரிய செயற்பொ றியாளர் செல்லத்துரை புதிய மின்மாற்றி பற்றி விளக்கினார்.இந்நிகழ்ச்சி யில் உதவி செயற்பொறியாளர் கணேசன், உதவி பொறியாளர் முத்தரசி மற்றும் திருப்பத்தூர் மின்சார வாரிய அனைத்து பணியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
    நடப்பாண்டில் மீனவர் குடும்பம் ஒன்றுக்கு தலா ரூ.5000- வீதம் மீன்பிடி தடைக்கால நிவாரணம் வழங்கப்படுகிறது.
    சென்னை:

    தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

    கடல் மீன்வளத்தைப் பேணிக்காத்திட, தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் கிழக்குக் கடற்கரை பகுதியில் ஏப்ரல் 15ஆம் நாளன்று தொடங்கி ஜுன் 14ஆம் நாள் வரையிலும், மேற்கு கடற்கரை பகுதியில் ஜுன் 1ம் நாளன்று தொடங்கி ஜுலை 31ஆம் நாள் வரையிலும் 61 நாட்களுக்கு மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்பட்டு வருகிறது.

    மீன்பிடி தடைக்காலத்தின் போது மீன்பிடி விசைப்படகுகள்/ இழுவலைப் படகுகளில் மீன்பிடிப்பு செய்யும் பணியாளர்கள் மற்றும் முழுநேர மீன்பிடிப்பினை சார்ந்த மீனவ குடும்பங்கள் முற்றிலுமாக தொழிலின்றி வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதால் மீனவர்கள் தங்களது குடும்பத்தினை சிரமமின்றி நடத்திச் செல்ல குடும்பம் ஒன்றுக்கு தலா ரூ.5000- வீதம் மீன்பிடி தடைக்கால நிவாரணம் வழங்கப்படுகிறது.

    நடப்பாண்டிற்கான மீன்பிடி தடைக்காலத்தில் தமிழகத்தில் உள்ள 14 கடலோர மாவட்டங்களில் உள்ள 1.90 லட்சம் கடல் மீனவ குடும்பங்களுக்கு மீன்பிடி தடைக்கால நிவாரணத் தொகை ரூ.5000- வீதம் ரூபாய் 95 கோடி வழங்கப்படும்.

    இத்திட்டத்தினை துவக்கி வைக்கும் விதமாக, சென்னை நந்தனத்தில் உள்ள மீனவர் நலத்துறை ஆணையர் அலுவலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில்,
    மீனவர் நலத்துறை அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் திருவள்ளுர், சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களை சேர்ந்த மீனவ குடும்பங்களுக்கு மீன்பிடி தடைக்கால நிவாரண தொகை பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக அனுப்பிடும் வகையிலான ஆணைகளை வழங்கினார்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


    கட்டுமான தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் பெரியகருப்பன் வழங்கினார்.
    சிவகங்கை

    சிவகங்கை தனியார் மண்டபத்தில்  ெதாழிலாளர் நலத்துறையின் சார்பில்   728 கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ரூ.12.6 லட்சம் மதிப்பீட்டிலான அரசின் நலத்திட்ட உதவிகள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கும் விழா நடந்தது. கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமை தாங்கினார்.

    கட்டுமானத் தொழி லாளர்கள் நலவாரியத்தின் தலைவர் பொன்.குமார் முன்னிலை வகித்தார். விழாவில் அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் கலந்து கொண்டு கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். 

    விழாவில் அவர் பேசுகையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம் என்ற அடிப்படையில், தமிழகத்தில் ஏழை எளிய அடித்தட்டு மக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களின் குறைகளை தீர்க்கும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்.குறிப்பாக தொழிலாளர் நலத்துறையின் சார்பில் தமிழ்நாடு உடலுழைப்பு தொழிலாளர்கள், சமூக பாதுகாப்பு மற்றும் நல வாரியம், அமைப்புசாரா தொழிலாளர்கள் நலவா ரியம் ஆகியவைகளில் பதிவு செய்யப்பட்ட தொழி லாளர்களின் நலன் கருதி, அவர்களை பயன்பெற செய்யும் வகையில் பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் வழங்கி வருகிறார்.

    சிவகங்கை மாவட்டத்தில் இதுவரை 1 லட்சத்து 37 ஆயிரத்து 139 கட்டுமானத் தொழிலாளர்கள் கட்டுமான நலவாரியத்தின் கீழ் பதிவு செய்துள்ளனர். கடந்த ஓராண்டில் மட்டும் 28 ஆயிரத்து 401 தொழிலாளர்கள் கட்டுமானம் மற்றும் அமைப்புச்சாரா நல வாரியத்தில் புதியதாக பதிவு செய்யப்பட்டுள்ளனர். மேலும், 13 ஆயிரத்து 402 பதிவு பெற்ற அமைப்புச்சாரா மற்றும் கட்டுமான தொழிலாளர்களுக்கு ரூ. 5 கோடியே 86 லட்சத்து 59 ஆயிரத்து 600 மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

    தமிழ்நாடு உடலுழைப்புத் தொழிலாளர்கள், சமூக பாதுகாப்பு மற்றும் நல வாரியத்தினை சார்ந்த தொழிலாளர்கள் ஆகியோர் தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு நலத்திட்டங்களை அறிந்து கொண்டு, அதன் மூலம் பயன்பெற்று, வாழ்வில் வளம் பெற வேண்டும் என்றார். 

    விழாவில் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி ரவிக்குமார், தொழிலாளர் இணை ஆணையர் சுப்பிரமணியன்,   ஆவின் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு ஒன்றிய தலைவர்  சேங்கைமாறன், ஊராட்சி ஒன்றியக் குழுத்தலைவர் மஞ்சுளா பாலசந்தர், சிவகங்கை நகர்மன்றத் தலைவர் துரைஆனந்த், ஒன்றியக்குழு உறுப்பினர் ஆரோக்கிய சாந்தாராணி, நகர்மன்ற துணைத்தலைவர் கார்கண்ணன், காஞ்சி ரங்கால் ஊராட்சி மன்றத்த லைவர் மணிமுத்து, தொழி லாளர் நலத்துறை உதவி ஆணையர்கள் கோட்டீ ஸ்வரி, ராஜ்குமார், நகர்மன்ற உறுப்பினர் சரவணன், சிவகங்கை வட்டாட்சியர் தங்கமணி  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 
    எதிர்கட்சி எம்.எல்.ஏ. வாக இருந்தாலும் மதுரைக்கு திட்டங்களை பெற்று தருவேன் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ அறிக்கை விடுத்துள்ளார்.
    மதுரை

    முன்னாள் அமைச்சரும், மதுரை மேற்கு சட்டமன்ற உறுப்பினருமான செல்லூர் ராஜூ எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
    மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதியில் 3-வது முறையாக மக்கள் என்னை தேர்வு செய்திருக்கிறார்கள். மக்களின் நம்பிக்கையை நிறைவேற்றுகின்ற வகை
    யில் மதுரை மேற்கு தொகுதி மதுரை மாவட்டத்தில் தொடர்ந்து முதன்மை தொகுதியாக உருவாகிடும் வகையில் கடந்த 10 ஆண்டுகளில் அ.தி.மு.க. ஆட்சியில் அமைச்சராக இருந்து பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி இருக்கிறேன். அதில் சிலவற்றை மட்டும் குறிப்பிட விரும்புகிறேன்.

    மதுரை காளவாசல் அருகே போக்குவரத்து நெரிசலை குறைக்க உயர் மட்ட மேம்பாலம் கட்டப்பட்டு மக்கள் பயன்பாட்டில் உள்ளது. மேலும் மேற்கு தொகுதிக்கு உட்பட்ட அனைத்து கண்மாய்களும் தூர்வாரப்பட்டு தண்ணீர் தேக்கப்பட்டுள்ளன. மாடக்குளம், துவரிமான், கீழமாத்தூர் ஆகிய கண்மாய்களில் தண்ணீர் நிரம்ப வசதியாக கொடி மங்கலத்தில்வைகை ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்பட்டுள்ளது. ஊராட்சி பகுதிகளில் உள்ள கிராம சாலைகள் மற்றும் குடிநீர் வசதிகளையும் மேம்படுத்தி உள்ளேன்.

    மேலும் மேற்கு தொகுதிக்குட்பட்ட பகுதிகள் மட்டுமின்றி மதுரை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளிலும் வசிக்கும் அனைத்து மக்களும் பயன் பெறும் வகையில் மதுரையில் நிலவும் குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணுகின்ற வகையில் முல்லை பெரியாறு அணையில் இருந்து குழாய் மூலம் குடிநீர் கொண்டு வரும் திட்டப்பணிகள் நடைபெற்று வருகின்றன. 1,295 கோடி ரூபாய் மதிப்பிலான இந்த திட்டம் நிறைவேற்றப்படும் போது மதுரை மக்களுக்கு குடிநீர் பற்றாக்குறை என்ற பேச்சே இருக்காது. மேலும் சோலை அழகுபுரம் முதல் அம்பேத்கார் நகர் வரை 973 வீடுகளுக்கு வீட்டு வசதி வாரியம் மூலம் வீட்டுமனை பத்திரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு முடியும் தருவாயில் உள்ளது. 

    மாடக்குளம் முனியாண்டி புரத்தில் உள்ள மக்களுக்கு பாதாள சாக்கடை, தார்சாலை, பேவர் பிளாக், நியாயவிலைக்கடை, அங்கன்வாடி, சத்துணவு கூடம், ஆழ்குழாய்க் கிணறுகள் போன்ற அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. மாடக்குளம் அய்யனார் கோயில் அருகில் சமுதாயக் கூடம் கட்டப் பட்டுள்ளது. பரவை ஊர்மெச்சிக்குளத்தில் இருந்த அரசு தொடக்கப் பள்ளி தற்போது உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. சமயநல்லூரிலிருந்து துவரிமான் இணைக்கும் வகையில் வைகை ஆற்றின் குறுக்கே பாலம் கட்டப்பட்டுள்ளது. தொகுதி மேம்பாடு மட்டுமின்றி மதுரை நகரின் வளர்ச்சிக்காக ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சுமார் 1000 கோடிக்கு மேல் பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளது.சில பணிகள் நடந்து வருகிறது.

    மேலும் மதுரை நகரின் போக்குவரத்து நெரிசலை குறைக்க வைகையாற்றில் நவீன சாலை அமைக்கும் பணி முடியும் தருவாயில் உள்ளது. மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டு 345 கோடி ரூபாய் செலவில் புதிய கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. தெப்பக்குளத்தில் ஆண்டு முழுவதும் தண்ணீர் தேக்க வசதியாக ஏவி மேம்பாலம் அருகே தடுப்பணை கட்டப்பட்டு பனையூர் வாய்க்காலில் தண்ணீர் கொண்டு செல்லப்பட்டு தெப்பகுளம் கடல் போல் காட்சியளிக்கிறது.

    வாக்களித்த மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி தொடர்ந்து மக்கள் பணியை சிறப்பாக செய்ய வேண்டும் என்பது தான் எனது விருப்பம் ஆகும். தற்போது எதிர்க் கட்சி எம்.எல்.ஏ.வாக இருந்தாலும் மக்களுக்கு தேவையான அத்தியாவசிய திட்டங்களை தொடர்ந்து பெற்று வருகிறேன்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    சென்னை போன்ற பெருநகரங்களில் வாகனப்புகையே காற்று மாசடைவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

    சென்னை:

    தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய அலுவலர்களின் பயன்பாட்டிற்காக ரூ.3.42 கோடி மதிப்பீட்டிலான 25 மின் வாகனங்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    மேலும், உலக சுற்றுச்சூழல் தினம் நாளை கொண்டாடப்படுவதையொட்டி சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு சிறப்பான பங்களிப்பு ஆற்றியதற்காக மதுரை, விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர்களுக்கு பசுமை விருதும் மற்றும் ஐந்து தொழிற்சாலைகள், கல்வி நிறுவனங்கள், அரசு சாரா நிறுவனங்களைப் பாராட்டும் வகையில் ரூபாய் ஒரு லட்சம் பரிசுத் தொகையுடன் பசுமை முதன்மையாளர் விருதுகளையும் வழங்கினார்.

    மக்கள் நலமாகவும், வளமாகவும் வாழ்ந்திட தூய்மையான சுற்றுச்சூழல் மிகவும் அவசியமாகும். மக்கள் சார்ந்திருக்கும் நீர், காற்று மற்றும் நிலம் ஆகியவற்றை சீர்படுத்துவதிலும், தீவிர வானிலை மாற்ற நிகழ்வுகள் மற்றும் காலநிலை மாற்றத்திற்குரிய தாக்கங்களை குறைப்பதிலும் சூழல் அமைப்புகள் முக்கியமான அம்சங்களாக விளங்குகிறது. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த இயற்கை வளங்களையும், சுற்றுச்சூழல் பாதுகாப்பினையும் மேம்படுத்திட தமிழ்நாடு அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

    சென்னை போன்ற பெருநகரங்களில் வாகனப்புகையே காற்று மாசடைவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இக்காற்று மாசினை குறைக்கும் முயற்சியாகவும், புவி வெப்பமயமாதலை தடுக்க ஏதுவாகவும் மற்றும் கரியமில வாயு வெளியேற்றத்தினை குறைப்பதற்காகவும், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய அலுவலர்களின் பயன்பாட்டிற்காக ரூ.3.42 கோடி மதிப்பீட்டிலான 25 மின் வாகனங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

    மாவட்டத்தின் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக சிறப்பாக செயலாற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக 2021-ஆம் ஆண்டுக்கான பசுமை விருதினை மதுரை கலெக்டர் டாக்டர் எஸ். அனீஷ் சேகர், விழுப்புரம் கலெக்டர் த. மோகன் மற்றும் திருவண்ணாமலை கலெக்டர் பா.முருகேஷ் ஆகியோருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி சிறப்பித்தார்.

    மாசு தடுப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் சிறப்பாக செயலாற்றி விருதுக்கு தேர்வான 79 பல்வேறு அமைப்புகளில், ராணிப்பேட்டை டேனரி எஃப்ளுயன்ட் டிரீட்மென்ட் கம்பெனி லிமிடெட், பெருந்துறை-அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, திருப்பூர்-சுலோச்சனா காட்டன் ஸ்பின்னிங் மில்ஸ் பிரைவேட் லிமிடெட், நீலகிரி மாவட்டம்-கிளீன் குன்னூர் மற்றும் போரூர்-அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகியவற்றிற்கு 2021-ஆம் ஆண்டிற்கான பசுமை முதன்மையாளர் விருதுடன், பரிசுத்தொகையாக ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலைகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி சிறப்பித்தார்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    கரூர் கலெக்டர் அலுவலகத்தில் இன்று காலை தொழிலாளர் நலத்துறை சார்பில் ஆய்வுக்கூட்டம் மற்றும் கட்டுமான தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

    விழாவில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன் ஆகியோர் கலந்து கொண்டனர். முதலில் நடைபெற்ற ஆய்வுக்கூட்டம் முடிவடைந்ததும் அமைச்சர் செந்தில் பாலாஜி கோவை புறப்பட்டு சென்றார்.

    இதையடுத்து நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் கணேசன் கட்டுமான தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார். விழா நிறைவடைந்ததும் அமைச்சர் அங்கிருந்து புறப்பட்டார். பயனாளிகள் உள்ளிட்டோர் விழா நடைபெற்ற இரண்டாவது மாடியில் இருந்து லிப்ட் மூலம் கீழே இறங்குவதற்கான முயற்சியில் ஈடுபட்டிருந்தனர்.

    முக்கிய பிரமுகர்கள் பயன்படுத்தும் இந்த லிப்டில் 6 பெண்கள் உள்பட 10 பேர் ஏறினர். இரண்டாவது மாடியில் இருந்து தரை தளத்திற்கு வந்த லிப்ட் வேகமாக நின்றது. இதையடுத்து கதவை திறக்க முற்பட்டபோது அதனை திறக்கமுடியவில்லை.

    லிப்டுக்குள் இருந்தவர்கள் பல்வேறு முயற்சிகளை செய்தபோதும் லிப்ட் பழுதாகி செயலிழந்து போய் இருந்தது. நிமிடங்கள் செல்லச் செல்ல உள்ளே சிக்கியிருந்தவர்கள் அபய குரல் எழுப்பினர். தங்களை காப்பாற்றுமாறு கூச்சல் போட்டனர். உடனடியாக விழாவுக்கு வந்திருந்தவர்கள் மற்றும் கலெக்டர் அலுவலக ஊழியர்கள் திரண்டு வந்து லிப்டை திறக்க போராடினார்கள். ஆனால் அவர்களது முயற்சி பலனளிக்கவில்லை.

    இதற்கிடையே லிப்டுக்குள் இருந்தவர்கள் தங்களுக்கு மூச்சுத்திணறுவதாக கூறினர். வெளியே நின்றிருந்தவர்கள் அவர்களிடம் ஆறுதல் வார்த்தைகளை கூறி ஆசுவாசப்படுத்தினர்.

    இதற்கிடையே விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் அதிரடி நடவடிக்கையாக லிப்ட் கதவை உடைத்து உள்ளே இருந்த 10 பேரையும் பத்திரமாக மீட்டனர். சுமார் அரை மணி நேர போராட்டத்திற்கு பிறகு அதில் சிக்கியிருந்தவர்கள் வெளியே வந்து நிம்மதி பெருமூச்சுவிட்டனர்.

    இதற்கிடையே லிப்டில் இருந்த மூதாட்டி ஒருவர் மயக்கம் அடைந்தார். இதனால் அங்கு மீண்டும் பதற்றம் தொற்றிக்கொண்டது. கலெக்டர் அலுவலகத்தில் தயார் நிலையில் 108 ஆம்புலன்சு மூலம் அந்த மூதாட்டி கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். சிறிது ஓய்வுக்கு பிறகு அவர் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

    • குன்றத்தூர் நத்தம் பகுதியில் மிகவும் பழமை வாய்ந்த திருவாலீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது.
    • திருவாலீஸ்வரர் கோவிலில் அமைச்சர்கள் பி.கே.சேகர்பாபு, தா.மோ.அன்பரசன் ஆகியோர் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளுடன் சேர்ந்து ஆய்வு செய்தார்.

    பூந்தமல்லி:

    குன்றத்தூர் நத்தம் பகுதியில் மிகவும் பழமை வாய்ந்த திருவாலீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. மிகவும் சிதலமடைந்து காணப்பட்ட இந்த கோவிலை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்களும், பக்தர்களும் கோரிக்கை வைத்திருந்தனர்.

    இந்நிலையில் இன்று காலை அமைச்சர்கள் பி.கே.சேகர்பாபு, தா.மோ.அன்பரசன் ஆகியோர் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளுடன் சேர்ந்து கோவிலை ஆய்வு செய்தனர்.

    பின்னர் கோவிலை சீரமைப்பது குறித்தும் கோவிலுக்கு உரிய இடங்கள் எங்கெங்கு உள்ளது என்பது குறித்தும் பல்வேறு பணிகள் குறித்து அதிகாரியுடன் ஆலோசனை செய்தனர்.

    • 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆகம விதிப்படி ஒவ்வொரு கோவில்களுக்கும் குடமுழுக்கு நடத்தப்பட வேண்டும்.
    • 208 கோவில்களில் திருப்பணி நிறைவுற்று குடமுழுக்கு விழாக்கள் நடத்தப்பட்டுள்ளன.

    சென்னை:

    இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது.:-

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டில் உள்ள புராதனமான மற்றும் தொன்மையான கோவில்களை தொன்மை மாறாமல் புதுப்பித்து திருப்பணிகள் முடிந்து குடமுழுக்கு நடத்த அறிவுரை வழங்கியுள்ளார்.

    12 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆகம விதிப்படி ஒவ்வொரு கோவில்களுக்கும் குடமுழுக்கு நடத்தப்பட வேண்டும். இதனடிப்படையில் கோவில்கள் கீழ்க்கண்டவாறு வகை செய்யப்பட்டு திருப்பணிகள் செய்து குடமுழுக்கு நடத்தப்படுகின்றன.

    கோவில்கள் மற்றும் கட்டிங்களின் கட்டுமானம், பழுதுபார்த்தல், பாதுகாத்தல், பேணிக்காத்தல், மீட்டெடுத்தல், மற்றும் புதுப்பித்தல் உள்ளிட்ட பணிகள் திருப்பணியில் அடங்குவனவாகும். வரலாற்றுச் சிறப்பும் தொன்மையும் கொண்டு ஆழ்வார்களாலும், நாயன்மார்களாலும் போற்றிப் பாடப்பட்ட கோவில்கள் மற்றும் கிராமப்புறங்களில் அமைந்துள்ள கோவில்களின் திருப்பணிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படுகின்றன.

    இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் திருப்பணிகள் நடத்த ஒப்புதல் அளிக்கப்பட்டு 07.05.2021 முதல் 17.06.2022 வரை 208 கோவில்களில் திருப்பணி நிறைவுற்று குடமுழுக்கு விழாக்கள் நடத்தப்பட்டுள்ளன.

    மேலும் 23-ந் தேதி முதல் ஜூலை 31-ந் தேதி வரையுள்ள வரும் காலத்தில் 30 கோவில்களுக்கு திருக்குடமுழுக்கு நடத்தப்பட உள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    மாவட்டத்தின் 645 மையங்களில் தடுப்பூசி செலுத்தப்பட்டது. 41 நடமாடும் முகாம்களும் அமைக்கப்பட்டு இருந்தது.
    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் 19 லட்சத்து 95 ஆயிரத்து 300 பேர் உள்ளனர். இதுவரை 17 லட்சத்து 11 ஆயிரத்து 226 பேருக்கு முதல் தவணையும், 7 லட்சத்து 79 ஆயிரத்து 542 பேருக்கு இரண்டாம் தவணையும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

    2 லட்சத்து 84 ஆயிரத்து 74 பேருக்கு முதல் தவணையும், 3 லட்சத்து 93 ஆயிரத்து 395 பேருக்கு இரண்டாம் தவணையும் தடுப்பூசி செலுத்த வேண்டியுள்ளது. இந்தநிலையில் 11-வது கட்டமாக திருப்பூர் மாவட்டத்தில் இன்று தடுப்பூசி முகாம் நடைபெற்றது. 

    மாவட்டத்தில் ஒரு நபர் கூட விடுபடாமல் கிராமங்களிலும், பேரூராட்சிகளிலும், நகராட்சி மற்றும் மாநகராட்சியிலும் தடுப்பூசி கிடைப்பதற்காக முகாம் அமைத்து விரிவான ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. மாவட்டத்தின் 645 மையங்களில் தடுப்பூசி செலுத்தப்பட்டது.  

    41 நடமாடும் முகாம்களும் அமைக்கப்பட்டு இருந்தது. இரவு 7 மணி வரை முகாம் நடக்கிறது. தடுப்பூசி செலுத்தும் பணியில் பல்வேறு துறைகளை சேர்ந்த, 2,580 பணியாளர் மற்றும் தன்னார்வலர்கள் ஈடுபட்டனர். 

    திருப்பூர் மாநகராட்சியின் 17 நகர் நல மையங்களுக்கு உட்பட்ட 138 இடங்களில் முகாம் நடைபெற்றது. இன்று நடைபெறும் முகாமில் 1லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. 
    வாரிசுப்படி மு.க.அழகிரிதான் பொறுப்புக்கு வந்திருக்க வேண்டும் ஆனால் கொல்லைப்புறமாக பதவிக்கு வந்தவர் மு.க.ஸ்டாலின் என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசினார். #LokSabhaElections2019 #DindigulSreenivasan #MKStalin
    திண்டுக்கல்:

    திண்டுக்கல்லில் அ.தி.மு.க. கூட்டணி பிரசார கூட்டம் நடந்தது. கூட்டத்தில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியதாவது:-

    ஜெயலலிதா இறந்ததும் அ.தி.மு.க.வும், ஆட்சியும் என்னவாகுமோ என்று நினைத்தனர். ஒருபக்கம் ஆட்சியை பிடிக்க மு.க.ஸ்டாலினும், மறுபக்கம் கட்சி மற்றும் ஆட்சியை கைப்பற்ற டி.டி.வி.தினகரனும் முயன்றனர்.

    தெய்வத்தின் அருள் 100 சதவீதம் கிடைத்து எடப்பாடி பழனிசாமி ஒப்பற்ற முதல்-அமைச்சராக, 2½ ஆண்டுகளாக பணியாற்றி சிங்கமாக திகழ்கிறார். மக்களுக்கு அனைத்து நன்மைகளையும் செய்கிறார்.

    ஜெயலலிதா வழியில் அயராது உழைத்து மக்களுக்கு திட்டங்களை செயல்படுத்துகிறார். இவரை பார்த்து, மு.க.ஸ்டாலின் தரம்தாழ்ந்து பேசுகிறார். தமிழ்நாட்டில் 234 தொகுதிகளுக்கும் பல நன்மைகளை செய்து வருகிறார். அதன்படி திண்டுக்கல் தொகுதிக்கு மட்டும் சுமார் ரூ.1,000 கோடிக்கு மேல் நிதி ஒதுக்கி சாலை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்துள்ளார். திண்டுக்கல்லில் முன்பு 10 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வழங்கப்பட்டது.

    தற்போது காவிரியில் இருந்து குடிநீர் கொண்டு வரப்பட்டு தினமும் வழங்கப்படுகிறது. அதேபோல் அனைத்து தொகுதிகளிலும் கோடைகாலத்தில் குடிநீர் பிரச்சனை ஏற்படாமல் முதல்-அமைச்சர் நடவடிக்கை எடுத்துள்ளார். இவரை பார்த்து ஆள்வதற்கு தகுதி இருக்கிறதா? என்று மு.க.ஸ்டாலின் கூறுகிறார். சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்து படிப்படியாக உயர்ந்து முதல்-அமைச்சரானவர், எடப்பாடி பழனிசாமி.



    மு.க.ஸ்டாலினை பார்த்து நான் கேட்கிறேன். நீங்கள் யார்? உங்களுக்கும் தி.மு.க.வுக்கும் என்ன சம்பந்தம். வாரிசு அடிப்படையில் வரவேண்டும் என்றால் மு.க.அழகிரி தான் பதவிக்கு வந்திருக்க வேண்டும். ஆனால், கொல்லைப்புறம் வழியாக நீங்கள் வந்து இருக்கிறீர்கள். காங்கிரஸ், தி.மு.க.வும் ஆட்சியில் இருந்த போது தான் அனைத்து ஊழலும் நடந்துள்ளது. ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே ஆட்சி, கருணாநிதியின் ஆட்சி தான்.

    நரேந்திரமோடி தலைமையில் மத்தியில் நல்லாட்சி நடக்கிறது. அவரை அணுகி தமிழ்நாட்டுக்கு வேண்டிய அத்தனை நன்மைகளையும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெறுகிறார். எய்ம்ஸ் மருத்துவமனை மதுரைக்கு வந்ததற்கு, முதல்-அமைச்சரின் சாமர்த்தியமான அணுகுமுறையே காரணம். கூட்டணி கட்சிகளின் வெற்றி வாய்ப்பு உள்ள இடங்களை நமக்கு கொடுத்ததால், இரட்டை இலையின் கோட்டையான திண்டுக்கல்லை பா.ம.க.வுக்கு கொடுத்துள்ளோம்.

    இவ்வாறு அவர் பேசினார். #LokSabhaElections2019 #DindigulSreenivasan #MKStalin
    அதிமுக கூட்டணியில் தேமுதிக இணைவது தொடர்பாக இன்று மாலைக்குள் உரிய பதில் கிடைக்கும் என்று அமைச்சர் தங்கமணி கூறியுள்ளார். #MinisterThangamani

    பள்ளிபாளையம்:

    நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் மின்துறை அமைச்சர் தங்கமணி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் கோடை காலத்தில் எவ்வளவு மின்சார தட்டுப்பாடு இருந்தாலும் அதனை சமாளிக்கும் வகையில் மின்சார வாரியம் தயாராக உள்ளது. இதுவரை இல்லாத அளவிற்கு 15 ஆயிரத்து 689 மெகாவாட் அளவிற்கு மின் நுகர்வு இருந்தது.

    இனி வரும் காலங்களில் 16 ஆயிரம் மெகா வாட் அளவிற்கு மின் நுகர்வு இருந்தாலும், அதனை சமாளிக்கும் வகையில் மின் உற்பத்தி திருப்திகரமாக  உள்ளது. அதனால் கோடைகாலத்திலும் மின்வெட்டு என்பதே வராது.

    தமிழகத்தில் மதுக்கடை திறந்திருக்கும் நேரத்தில் 2 மணி நேரம் குறைப்பு என்று கோர்ட்டு கூறியுள்ளது. அரசின் கொள்கை முடிவு என்பதால் அதற்கேற்ப நடவடிக்கை எடுக்கப்படும்.

    பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வின் கூட்டணியில் இதர கட்சிகள் (தே.மு.தி.க.) இணைவது தொடர்பாக இன்றுமாலைக்குள் உரிய பதில் கிடைத்துவிடும். மத்தியில் 37 பாராளுமன்ற உறுப்பினர்களும் தமிழகத்தில் நலன் கருதியே செயல்பட்டு வருகின்றனர்.

    இதுவரை இல்லாத அளவிற்கு தமிழகத்திற்கு வாழ்வாதாரம் பெற்றுத்தரும் வகையில் போராடி நிரந்தர தீர்வாக காவிரி ஆணையத்தை பெற்றுத் தந்துள்ளனர்.

    அதேபோல எய்ம்ஸ் மருத்துவமனை வந்துள்ளது. மேகதாதுவில் அணைக்கட்டுவதை தடுத்து நிறுத்தியது பாராளுமன்ற உறுப்பினர்கள் தான். அ.தி.மு.க. பாராளுமன்ற உறுப்பினர்கள் கடந்த 5 ஆண்டுகளில் சிறப்பாக பணியாற்றி உள்ளனர்.

    இவ்வாறு அமைச்சர் பி.தங்கமணி கூறினார். #MinisterThangamani

    அதிமுக கூட்டணிக்கு தேமுதிக வரும் என்ற நம்பிக்கை உள்ளது என்று அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறியுள்ளார். #MinisterKPAnbalagan #Parliamentelection

    கம்பைநல்லூர்:

    தருமபுரி மாவட்டம் பொம்மிடியில் உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் அம்மா வழியில், முதல்-அமைச்சர் மற்றும் துணை-முதல் அமைச்சர் இருவரும் சிறப்பாக ஆட்சி நடத்தி வருகின்றனர்.

    இதனை கண்டு அ.தி.மு.க.வில் இருந்து விலகி சென்றவர்கள், பாப்பிரெட்டிபட்டி பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்டோர் அம.மு.க.வில் இருந்து விலகி, மீண்டும் அ.தி.மு.க.வில் தங்களை இணைத்து கொண்டுள்ளனர்.

    வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தலைமையில் பா.ஜ.க., பா.ம.க. ஆகிய கட்சிகளோடு அ.தி.மு.க. மெகா கூட்டணி அமைத்துள்ளது.

    கடந்த பாராளுமன்ற தேர்தலை போலவே அ.தி.மு.க. கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும். கூட்டணி குறித்து இன்னும் ஒரு சில கட்சிகள் அ.தி.மு.க.வுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். கூட்டணியை பொருத்தவரை முதல்வரும், துணை முதல்வரும்தான் முடிவு எடுப்பார்கள்.

    தமிழகத்தில் மக்களுக்கு நல்லாட்சி தரும் அ.தி.மு.க.வுடன் தே.மு.தி.க. கூட்டணிக்கு வரும் என்ற நம்பிக்கை உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார். #MinisterKPAnbalagan #Parliamentelection

    ×