என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "tag 96947"

    ஆசிரியர்கள் மன உளைச்சலின்றி விடைத்தாளை திருத்த ஏதுவாக பல சலுகைகளை அரசு தேர்வுகள் இயக்ககம் வழங்கி உள்ளது.
    சேலம்:

    தமிழகம் முழுவதும் 10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை மாணவ- மாணவிகள் உற்சாகமாக எழுதி வருகின்றனர். இதில் 12-ம் வகுப்பு மாணவர்களில் சில பாடப்பிரிவை சேர்ந்த மாணவர்களுக்கு தேர்வுகள் நிறைவு பெற்றுவிட்டன. மற்றவர்களுக்கு வருகிற 28-ந் தேதியுடன் தேர்வு முடிவடைகிறது. 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு வருகிற 31-ந் தேதியும், 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு வருகிற 30-ந் தேதியும் தேர்வு நிறைவடைய இருக்கிறது.

    இதில் 12-ம் வகுப்பு மாணவர்களின் விடைத்தாள் திருத்தும் பணிகள் அடுத்த மாதம் 2-ந் தேதி முதல் 8-ந் தேதி வரை நடக்கிறது. 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு அடுத்த மாதம் 1-ந் தேதி விடைத்தாள் திருத்தும் பணி தொடங்குகிறது. 11-ம் வகுப்பு மாணவர்களின் விடைத்தாள் திருத்தும் பணி அடுத்த மாதம் 10-ந் தேதி தொடங்கி 17-ந் தேதி வரையிலும் நடைபெறும்.

    இந்த நிலையில் ஆசிரியர்கள் மன உளைச்சலின்றி விடைத்தாளை திருத்த ஏதுவாக பல சலுகைகளை அரசு தேர்வுகள் இயக்ககம் வழங்கி உள்ளது. அதில் ஒன்று ஆசிரியர்கள் வசிக்கும் இடத்திற்கு அருகே உள்ள மையத்தில் விடைத்தாள் திருத்தலாம் என அறிவித்துள்ளது. இது ஆசிரியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
    சேலம், நாமக்கல் மாவட்டங்களில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்றுடன் நிறைவடைந்தது சமூக அறிவியல் தேர்வை மாணவர்கள் உற்சாகமாக எழுதினர்.
    சேலம் :

    தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக எஸ்.எஸ்.எல்.சி.,  பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடக்கவில்லை.

    நடப்பு  ஆண்டு கொரோனா தொற்று பரவல் கட்டுக்குள் வந்த நிலையில்,  எஸ்.எஸ்.எல்.சி.,  பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 பொதுத்தேர்வுகள்  நடத்தப்பட்டுள்ளன. இதில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு கடந்த 6-ந்தேதி (வெள்ளிக்கிழமை) தொடங்கியது.

    சேலம் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள  182    மையங்களிலும், நாமக்கல் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 80-க்கும் மேற்பட்ட  மையங்களிலும் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு நடைபெற்றது.

    தேர்வு முடிவடைந்தது இம்மையங்களில் அரசு பள்ளிகள், அரசு உதவிப்பெறும் பள்ளிகள், தனியார் சுயநிதிப்பள்ளிகளை சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவ- மாணவிகள் உற்சாகமாக தேர்வுகள் எழுதினர்.
     
    கடைசி நாளான இன்று (30-ந்தேதி) திங்கட்கிழமை  சமூக அறிவியல் பாடம் தேர்வு நடைபெற்றது. காலை  10.15 மணிக்கு தொடங்கி மதியம் 1.15 மணிக்கு தேர்வு முடிவடைந்தது. 

    வாழ்த்துக்கள்... தேர்வு  நிறைவடைந்ததை அடுத்து தேர்வு மையங்களில் இருந்து வெளியே வந்த மாணவ-மாணவிகள் தங்கள் வகுப்பில்  பயின்றவர்களை சந்தித்து,   ஒருவருக்கொருவர் வாழ்த்து தெரிவித்தனர்.

    மேலும் புகைப்படம் எடுத்தும்,  சீருடைகளில் மாறி மாறி மை தெளித்தும், செல்போன் நம்பர் பரிமாறிக்கொண்டும்   மகிழ்ச்சியுடன் வீட்டுக்கு புறப்பட்டு சென்றனர்.
    சேலம், நாமக்கல் மாவட்டங்களில் பிளஸ்-1 பொதுத்தேர்வு இன்றுடன் நிறைவடைந்தது. மாணவ- மாணவிகள் உற்சாகமாக தேர்வு எழுதினர்.
    சேலம்:

    தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு கடந்த 5-ந்தேதி  தொடங்கி 28-ந்தேதியுடன் முடிவடைந்தது. எஸ்.எஸ்.எல்.சி. 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த 6-ந்தேதி தொடங்கி நேற்றுடன் (30-ந்தேதி) நிறைவடைந்தது.

    பிளஸ்-1 பொதுத் தேர்வு  கடந்த  10-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) தொடங்கியது. குறிப்பாக சேலம்  மாவட்டத்தில் 154 மையங்களிலும், நாமக்கல் மாவட்டத்தில் 82 மையங்களிலும் பிளஸ்-1 பொதுத்தேர்வு நடைபெற்றது.
    இம்மையங்களில் அரசு பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகள், தனியார் சுயநிதிப்பள்ளிகளை சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவ- மாணவிகள் உற்சாகமாக தேர்வுகள் எழுதினர். 

    கடைசி நாளான இன்று  (31-ந்தேதி) செவ்வாய்க்கிழமை  இயற்பியல், பொருளாதாரம், கம்ப்யூட்டர் தொழிற்நுட்பம் ஆகிய 3  பாடங்களுக்கு தேர்வு நடந்தது. காலை  10.15 மணிக்கு தொடங்கி மதியம் 1.15 மணிக்கு தேர்வு முடிவடைந்தது. இதனால் பிளஸ்-1 பொதுத்தேர்வு அனைத்தும் இன்றுடன்  நிறைவடைந்தன.

    தேர்வு  நிறைவடைந்ததை அடுத்து தேர்வு மையங்களில் இருந்து வெளியே வந்த மாணவ-மாணவிகள் முகம் மகிழ்ச்சியில் பூத்துக்குலுங்கியது. மாணவிகள் துள்ளிக்குதித்து மகிழ்ச்சி ஆரவாரத்தில் ஈடுபட்டனர். 

    தங்கள் வகுப்பில்  பயின்றவர்களை சந்தித்து,   ஒருவருக்ெகாருவர் வாழ்த்துக்கள்  ெதரிவித்தனர்.  மேலும் புகைப்படம் எடுத்தும்,  சீருடைகளில் மாறி மாறி மை தெளித்தும், வண்ணப்பொடிகள் தூவியும், செல்போன் நம்பர் பரிமாறிக்கொண்டும் மகிழ்ச்சியுடன் வீட்டுக்கு புறப்பட்டு சென்றனர்.

    பொதுத்தேர்வுகள் முடிவடைந்ததையடுத்து எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-1 மாணவர்களுக்கு  விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணி நாளை தொடங்குகிறது.
    தேர்வு எழுதாத மாணவர்களை மீண்டும் பள்ளிக்கு அழைத்து உடனடி தேர்வில் பங்கேற்க நடவடிக்கை எடுக்கும்படி அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
    தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 10-ம் வகுப்பு, 11-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு நடைபெற்றது. இதில், சுமார் 6.70 லட்சம்  மாணவர்கள் தேர்வு எழுதவில்லை. 10-ம் வகுப்பு தேர்வில் மட்டும் 2.25 லட்சம் மாணவர்கள் தேர்வில் பங்கேற்கவில்லை. இதனை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியும் உறுதிப்படுத்தினார்.

    இந்நிலையில், தேர்வு எழுதாத மாணவர்களை மீண்டும் பள்ளிக்கு அழைத்து உடனடி தேர்வில் பங்கேற்க நடவடிக்கை எடுக்கும்படி அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலகர்களும் பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளனர்.

    அதில், 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதாத மாணவர்களை கண்டறிந்து, ஜூலை மாதம் நடைபெறவிருக்கும் மறுதேர்வில் பங்கேற்க அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதன்மை கல்வி அலுவலர்கள் உத்தரவிட்டுள்ளனர். இதேபோல், 11-ம் மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதாத மாணவர்களும் மறுதேர்வு எழுத நடவடிக்கை எடுக்கும்படி அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

    இதையும் படியுங்கள்.. சட்டம், ஒழுங்கு குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம்
    10, பிளஸ்-1, பிளஸ்-2 பொதுத்தேர்வை மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கு பதிலாக மே மாதம் முதல் வாரத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகப் பள்ளிக் கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

    சென்னை:

    தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக சுமார் இரண்டு ஆண்டுகள் பள்ளிகளில் நேரடி வகுப்புகள் நடக்கவில்லை. ஆன்லைன் வகுப்புகள் மட்டுமே நடத்தப்பட்டன.

    இந்த நிலையில் 9-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வகுப்பு வரை கடந்த செப்டம்பர் 1-ந் தேதியும், 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை கடந்த 1-ந் தேதியும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடந்து வந்தன.

    தற்போது வடகிழக்கு பருவமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு தொடர்ச்சியாக வகுப்புகளை நடத்த இயலாததால், மாணவர்களுக்கு பாடங்களை முழுமையாக நடத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

    இந்த நிலையில் நிகழ் கல்வியாண்டுக்கான பொதுத்தேர்வுகளை மார்ச், ஏப்ரல், மாதங்களில் நடத்துவதற்கு தேவையான ஏற்பாடுகளை அரசு தேர்வுத்துறை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் மாணவர்களுக்கு உரிய பாடத்திட்டங்கள் நடத்தி முடிக்கப்போதுமான கால அவகாசம் இல்லை என கூறப்படுகிறது.

    எனவே மாணவர்கள் 10-ம் வகுப்பு, பிளஸ்-1, பிளஸ்-2 பொது தேர்வுக்கு தயாராவதற்கு வசதியாக 2 மாதங்கள் தள்ளிவைத்து பொதுத் தேர்வை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    பள்ளிக் கல்வித்துறை

    அதன்படி மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கு பதிலாக மே மாதம் முதல் வாரத்தில் பொதுத் தேர்வை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகப் பள்ளிக் கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. 

    இதையும் படியுங்கள்...வடகிழக்கு பருவமழை- தமிழகத்தில் 61 சதவீதம் இதுவரை கூடுதலாக பெய்துள்ளது

    மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தனி தேர்வர்கள் உரிய முதன்மை கல்வி அலுவலகத்துக்கு வருகிற 22, 23 ஆகிய நாட்களில் நேரில் சென்று கட்டணம் செலுத்தி பதிவு செய்து கொள்ள வேண்டும்
    சென்னை:

    தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த கல்வியாண்டில் பள்ளி மாணவர்களின் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு அனைவரும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது.

    அதே நேரத்தில் தனி தேர்வர்களுக்கு 10-ம் வகுப்பு தேர்வு நடத்தப்படும் என்று அரசு அறிவித்தது. அதன்படி 10-ம் வகுப்பு துணை தேர்வு செப்டம்பர் 16 முதல் 28-ந் தேதி வரை நடந்து முடிந்தது.

    இந்த தேர்வின் முடிவுகள் நாளை (19-ந் தேதி) காலை 11 மணிக்கு வெளியாகும் என்று அரசு தேர்வு துறை தெரிவித்துள்ளது. தேர்வர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதள முகவரியில் தற்காலி மதிப்பெண் சான்றிதழை பெற்றுக் கொள்ளலாம்.

    இந்த தேர்வுக்கான மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தனி தேர்வர்கள் உரிய முதன்மை கல்வி அலுவலகத்துக்கு வருகிற 22, 23 ஆகிய 2 நாட்களில் நேரில் சென்று கட்டணம் செலுத்தி பதிவு செய்து கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


    விடைத்தாள் திருத்துவதில் முறைகேடாக மதிப்பெண்கள் போடப்பட்டுள்ளதையடுத்து 300 ஆசிரியர்களுக்கு 17 பிரிவுகளின் கீழ் நோட்டீசு அனுப்பி ஆசிரியர் கல்வித் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
    சென்னை:

    ஆசிரியர் பயிற்சிக்கான முதல் மற்றும் 2-ம் ஆண்டு தேர்வுகள் கடந்த ஆண்டு ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் நடத்தப்பட்டது. 15 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்று தேர்வை எழுதினார்கள்.

    இதில் 12 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்களின் விடைத்தாள்களில் அசல் மதிப்பெண்களுக்கு பதிலாக முறைகேடாக தேர்ச்சிக்குரிய 50 மதிப்பெண்கள் போடப்பட்டு இருந்ததை தேர்வுத்துறை கண்டுபிடித்தது. அதன்பிறகு விடைத்தாள்கள் முழுமையாக மீண்டும் மறு மதிப்பீடு செய்யப்பட்டு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.

    இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சித்துறைக்கு தேர்வுத்துறை பரிந்துரை செய்திருந்தது.

    இதன் அடிப்படையில் அரசு ஆசிரியர் பயிற்சி பள்ளிகளை சேர்ந்த 188 ஆசிரியர்கள், தனியார் ஆசிரியர் பயிற்சி பள்ளி ஆசிரியர்கள் 112 பேர் என 300 ஆசிரியர்களுக்கு 17 பிரிவுகளின் கீழ் நோட்டீசு அனுப்பி ஆசிரியர் கல்வித் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
    காஷ்மீர் மாநிலத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வில் மகன் தோல்வியடைந்த வேதனையில் ஒரு பெண் விஷம் குடித்து உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    ஜம்மு:

    ஜம்மு-காஷ்மீர் மாநிலம், சம்பா மாவட்டத்துக்குட்பட்ட டாலூர் கிராமத்தை சேர்ந்தவர் நீலம் தேவி. பன்னிரெண்டாம் வகுப்பில் படித்துவந்த இவரது மகன் ஆண்டிறுதி தேர்வில் தோல்வியடைந்ததால் நீலம் தேவி மிகுந்த வேதனையடைந்தார்.

    இந்நிலையில், வீட்டில் நேற்று மயங்கிய நிலையில் கிடந்த நீலம் தேவியை அருகாமையில் உள்ள மருத்துவமனைக்கு உறவினர்கள் தூக்கிச் சென்றனர். ஆனால், அவர் குடித்திருந்த விஷத்தின் வீரியத்தால் வரும் வழியிலேயே நீலம் தேவியின் உயிர் பிரிந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

    இச்சம்பவம் டாலூர் கிராம மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 2 மொழி பாடங்களுக்கு பதிலாக ஒரு மொழி பாடத்தை அமல்படுத்துவதற்கான பரிந்துரையை தமிழக அரசுக்கு, பள்ளி கல்வித்துறை அனுப்பியுள்ளது.
    சென்னை:

    பள்ளி கல்வித்துறை அமைச்சராக செங்கோட்டையன் பொறுப்பு ஏற்றது முதல் கல்வித்துறையில் பல அதிரடியான மாற்றங்களை புகுத்தி வருகிறார். 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்புகளை போன்று 11-ம் வகுப்புக்கும் பொதுத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பொதுத்தேர்வு முறையில் மீண்டும் மாற்றங்களை கொண்டு வருவதற்கு பள்ளி கல்வித்துறை முடிவு எடுத்துள்ளது.

    9 மற்றும் 10-ம் வகுப்புகளுக்கு மொழி பாடங்களான தமிழ் முதல் தாள், இரண்டாம் தாள் என்றும், ஆங்கிலம் முதல் தாள், இரண்டாம் தாள் என்றும் பிரிக்கப்பட்டு தற்போது தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. தமிழ் முதல் தாள், தமிழ் இரண்டாம் தாள் என்று இருப்பதை தமிழ் என்று ஒரே தேர்வாகவும், ஆங்கிலம் முதல் தாள் மற்றும் இரண்டாம் தாள் என்று இருப்பதை ஆங்கிலம் என்று ஒரே தேர்வாகவும் 9 மற்றும் 10-ம் வகுப்புகளுக்கு நடத்தவேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தன.

    இதேபோல 11-ம் வகுப்பு, 12-ம் வகுப்புகளில் மொழி பாடங்களாக தமிழ், ஆங்கிலம் என்று 2 பாடங்களும், 4 முக்கிய பாடங்களும் என மொத்தமாக 6 பாடங்களில் தலா 100 மதிப்பெண்கள் வீதம் 600 மதிப்பெண்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் 2 மொழி பாடங்களுக்கு பதிலாக ஏதாவது ஒரு பாடத்தை அமல்படுத்தலாம் என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி ஆங்கிலம் அல்லது தமிழ் ஆகியவற்றில் ஏதாவது ஒரு மொழி பாடத்தை மாணவர்கள் தேர்வு செய்யலாம் என்று ஆலோசிக்கப்பட்டுள்ளது.

    மேலும் மொழிப்பாடம் ஒன்று குறையும் பட்சத்தில் தேர்வுகளின் எண்ணிக்கை 5 ஆக குறையும். இவ்வாறு குறையும்போது 600 ஆக இருந்த மொத்த மதிப்பெண்கள் 500 ஆக குறையும். இந்த முடிவுகளை நன்கு பரிசீலித்த பள்ளி கல்வித்துறை இதற்கான பரிந்துரையை, தமிழக அரசின் ஒப்புதலுக்கு அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது. தமிழக அரசு அனுமதி கொடுத்தால் இந்த கல்வி ஆண்டு முதலே புதிய நடைமுறை அமல்படுத்தப்பட உள்ளது.



    1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை தற்போது தமிழ் மற்றும் ஆங்கில பாடத்துக்கு தலா ஒரு தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. 9 மற்றும் 10-ம் வகுப்புகளுக்கு தமிழ் மற்றும் ஆங்கிலத்துக்கு ஒரே தேர்வு நடத்தினால் 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை மொழி பாடங்களுக்கு ஒரு தேர்வு முறை என்பது அமலுக்கு வந்துவிடும். மொழி பாடங்களுக்கு தலா ஒரு தேர்வு நடந்தால், தேர்வு நடத்தப்படும் நாட்களின் எண்ணிக்கை குறையும். மேலும் விடைத்தாள் திருத்தும் பணியும் சற்று குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதுகுறித்து பள்ளி கல்வித்துறை இயக்குனர் ராமேஸ்வரமுருகனிடம் கேட்டபோது, பொதுத்தேர்வு முறையில் மாற்றம் கொண்டுவருவதற்கான திட்டம் அரசிடம் இருப்பதாகவும், இறுதி வடிவம் கொடுப்பது குறித்து அரசு தான் முடிவு செய்யும் என்றும் தெரிவித்தார்.
    தஞ்சை மாவட்ட பிளஸ்-1 தேர்வு முடிவுகளை, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சாந்தா வெளியிட்டார். தேர்ச்சி சதவீதம் 95.85 ஆகும். இது கடந்தை ஆண்டைவிட 4.82 சதவீதம் கூடுதலாகும். #Plus1Results
    தஞ்சாவூர்:

    தமிழகத்தில் பிளஸ் 2 , எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு போல் பிளஸ் 1 க்கும் பொதுத்தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த தேர்வானது கடந்த ஆண்டு முதல் முறையாக நடைபெற்றது. அதன்படி பிளஸ் 1 பொது தேர்வுகள் கடந்த மார்ச் 6ம் தேதி தொடங்கி 22ம் தேதி வரை நடைபெற்றது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பட்டுக்கோட்டை‌, தஞ்சாவூர், கும்பகோணம், ஒரத்தநாடு ஆகிய 4 கல்வி மாவட்டங்களிலும் மொத்தம் 27 ஆயிரத்து 386 மாணவ,மாணவிகள் தேர்வு எழுதினர். இதில் மாணவர்கள் 12 ஆயிரத்து 98 பேரும், மாணவிகள் 15 ஆயிரத்து 288 பேரும் தேர்வு எழுதினர். விடைத்தாள் திருத்தும் பணி கடந்த மார்ச் இறுதியில் தொடங்கி மும்முரமாக நடைபெற்று வந்தது. இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறையினர் அறிவித்தபடி பிளஸ் 1 தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது.

    தஞ்சை மாவட்ட பிளஸ்-1 தேர்வு முடிவுகளை, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சாந்தா வெளியிட்டார். அதன்படி தஞ்சை மாவட்டத்தில் மாணவர்கள் 11 ஆயிரத்து 378 பேரும், மாணவிகள் 14 ஆயிரத்து 872 பேர் என மொத்தம் 26 ஆயிரத்து 250 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 95.85 ஆகும். இது கடந்தை ஆண்டைவிட 4.82 சதவீதம் கூடுதலாகும். அதேபோல் மாநில அளவில் தஞ்சை மாவட்டம் கடந்த ஆண்டு 21 வது இடத்தை பிடித்துருந்தது. ஆனால் இந்த ஆண்டு 4 இடங்கள் முன்னேறி 17வது இடத்தை பிடித்துள்ளது.

    பிளஸ்-1 தேர்வு முடிவுகள் வெளியானவுடன் மாணவ-மாணவிகள் தாங்கள் படித்த பள்ளிகளில் கொடுத்துள்ள செல்போன் எண்ணுக்கு மதிப்பெண் விவரம் குறுஞ்செய்தியாக அனுப்பப்பட்டது. மேலும் அரசு இணையதளத்திலும் முடிவு வெளியிடப்பட்டது. தேர்வு முடிவை காண மாணவர்கள் அந்தந்த பள்ளி முன்பு காலையில் இருந்தே திரண்டனர். அங்கு நோட்டீஸ் பலகையில் ஒட்டப்பட்ட மதிப்பெண் விவரங்களை பார்த்தனர். #Plus1Results
    தமிழகம் முழுவதும் இன்று பிளஸ்-1 தேர்வு முடிவு வெளியானது. திருவள்ளூர் மாவட்டத்தில் தேர்ச்சி அதிகரித்துள்ளது. #Plus1result
    திருவள்ளூர்:

    பிளஸ்-1 தேர்வு முடிவு இன்று வெளியானது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 359 பள்ளிகளில் மொத்தம் 41 ஆயிரத்து 26 பேர் தேர்வு எழுதினர். இதில் மாணவர்கள் 17 ஆயிரத்து 614 பேரும், மாணவிகள் 20 ஆயிரத்து 110 பேரும் என மொத்தம் 38 ஆயிரத்து 724 பேர் தேர்ச்சி பெற்றனர்.

    இது 94.39 சதவீதம் தேர்ச்சி ஆகும். கடந்த ஆண்டை விட 3.54 சதவீதம் தேர்ச்சி அதிகரித்துள்ளது. மாவட்டத்தில் 102 அரசு பள்ளிகளில் 14 ஆயிரத்து 246 பேர் தேர்வு எழுதினர். இதில் 12 ஆயிரத்து 339 பேர் தேர்ச்சி பெற்றனர். #Plus1result
    தக்கலை அருகே எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் 2-வது முறையாக தோல்வி அடைந்த மாணவர் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
    தக்கலை:

    தக்கலை அருகே புதூர் ஆலுவிளை பகுதியை சேர்ந்தவர் பெஞ்சமின் வினோ. இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார்.

    இவருடைய மகன் வெர்ஜின் (வயது 16). தக்கலையை அடுத்த பறைக்கோடு பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் கடந்த ஆண்டு வெர்ஜின் எஸ்.எஸ்.எல்.சி. படித்து தேர்வு எழுதி தோல்வி அடைந்தார்.

    அதை தொடர்ந்து இந்த ஆண்டு மீண்டும் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதினார். இந்த தேர்வுக்கான முடிவு கடந்த சில நாட்களுக்கு முன் வெளியிடப்பட்டது.

    இந்த தடவையும் அவர் தேர்வில் தோல்வி அடைந்தார். இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான அவருக்கு தாயார் மற்றும் உறவினர்கள் ஆறுதல் கூறிவந்தனர்.

    இந்த நிலையில் வெர்ஜின், அப்பகுதியில் உள்ள நண்பனை பார்த்து விட்டு வருவதாக தாயாரிடம் கூறிவிட்டு சென்றார். ஆனால், வெகுநேரம் ஆகியும் அவர் வீடு திரும்பாததால் சந்தேகமடைந்த தாயார், அப்பகுதியில் உள்ள நண்பர்களின் வீடுகளில் தேடினார்.

    இதற்கிடையே வாளோடு பகுதியில் உள்ள தண்டவாளத்தில் படுகாயங்களுடன் அவர் பிணமாக கிடந்தார். இதனை கேள்விபட்ட வெர்ஜினின் தாயார் மற்றும் நண்பர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று வெர்ஜினின் உடலை பார்த்து கதறி அழுதனர்.

    நாகர்கோவில் ரெயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து வெர்ஜினின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தேர்வில் தோல்வி அடைந்த விரக்தியில் வெர்ஜின் ரெயில் முன்பாய்ந்து தற்கொலை செய்தது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×