என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "talks"

    • கருத்தரங்கை பொள்ளாச்சி எம்.பி.சண்முகசுந்தரம் தொடங்கிவைத்தார்.
    • மண்ணின் தன்மையை அறிந்து பயிரிட்டால் விளைச்சல் அதிகரிக்கும்,

    பொள்ளாச்சி,

    வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை, பொள்ளாச்சி தொழில் வர்த்தக சபை சார்பில் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கான கருத்தரங்கு பொள்ளாச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்றது.

    கருத்தரங்கை பொள்ளாச்சி எம்.பி.சண்முகசுந்தரம் தொடங்கிவைத்தார். சப்-கலெக்டர் பிரியங்கா, வேளாண் வணிகத்துறை இயக்குநர் பெருமாள்சாமி, மாவட்ட தொழில்மைய பொது ேமலாளர் திருமுருகன், பொள்ளாச்சி தொழில் வர்த்தக சபைத் தலைவர் ஜி.டி. கோபாலகிருஷ்ணன், சக்தி குழுமங்களின் தலைவர் ம.மாணிக்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். விழாவில் கலெக்டர் கிராந்திகுமார் பாடி பேசியதாவது:-

    சிறுதானிய பொருள்களுக்கு சர்வதேச அளவில் வரவேற்பு உள்ளது. கோவையில் சிறுதானியங்களால் ஆன பொருள்களை விவசாயிகள் உற்பத்தி செய்யும் போது வர்த்தக ரீதியான பயன்கள் கிடைக்கும்.

    உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு என்று தனித்தன்மையினை உருவாக்குதல், சந்தைப்படுத்துதல், தொழில் நுட்பங்களை புகுத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள தேவையான உதவிகள் முதல் 3 ஆண்டுகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.

    சில விவசாயிகள் 40 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே நிலத்தில் ஒரே விதமான பயிரினை விளைவித்து வருகின்றனர். இதனால் மண்ணின் வளம் பாதிக்கப்படுவதுடன், போதுமான விளைச்சலும் இருக்காது.

    மண்ணின் தன்மையை அறிந்து பயிரிட்டால் விளைச்சல் அதிகரிக்கும், அதிகமான உற்பத்தி, சந்தைப்படுத்துதல் போன்றவற்றில் புதிய தொழில்நுட்பங்களை புகுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • இந்தியா கூட்டணிக்குப் பீகார் முதல்வர் நிதிஷ்குமாரின் ஜே.டி.யுவும், ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசமும் துருப்புச்சீட்டாக மாறியுள்ளது.
    • காங்கிரஸ் கட்சி, சந்திரபாபு நாயுடு மற்றும் நிதிஷ்குமார் ஆகிய இருவருக்கும் அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இந்தியாவின் அடுத்த பிரதமரை தேர்ந்தெடுப்பதற்கான நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடத்தப்பட்டு இன்று (ஜூன் 4) காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை துரித கதியில் நடந்து வருகிறது. கடந்த 2019 ஆம் ஆண்டு தேர்தலைப் போல் அறுதியிட்டுக் கூறிவிட முடியாதபடி முன்னிலை நிலவரம் தொடர்ச்சியாக மாறிக்கொண்டே வருகிறது.

    இந்த தேர்தலில் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்து காங்கிரஸ் அமைத்த 9இந்தியா கூட்டணி பாஜகவின் என்.டி.ஏ கூட்டணிக்குக் கடுமையான போட்டியைக் கொடுத்து வருகிறது. 1 மணி நிலவரப்படி மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் இந்தியா கூட்டணி 236 இடங்களிலும் என்.டி.ஏ கூட்டணி 289 இடங்களில் முன்னிலையில் உள்ளது. சுமார் 165 தொகுதிகளில் வாக்கு வித்தியாசம் 10,000 என்ற அளவிலேயே உள்ள நிலையில் நேரம் செல்ல செல்ல இரண்டு கூட்டணிக்கும் சாதக பாதகங்கள் மாறுபடும்.

     

     

    இந்நிலையில் பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணிக்குப் பீகார் முதல்வர் நிதிஷ்குமாரின் ஜே.டி.யுவும், ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசமும் துருப்புச்சீட்டாக மாறியுள்ளது. நாடாளுமன்றத் தேர்தலோடு ஆந்திராவில் சட்டமன்றத் தேர்தலும் நடந்த நிலையில் தற்போதைய நிலவரப்படி, சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் வெல்ல அதிக வாய்ப்புள்ளது.

     

    நாடாளுமன்றத் தேர்தலிலும் தெலுங்கு தேசம் கணிசமான வாக்குகளைப் பெற்று மொத்தம் உள்ள 25 இடங்களில் 16 இடங்களில் முன்னிலையில் உள்ளது.பீகாரில் நிதிஷ்குமாரின் ஜே.டி .யு கட்சி மொத்தம் உள்ள 30 இடங்களில் 13 இடங்கள் முன்னிலையில் உள்ளது. 

     

    இந்த இரண்டு கட்சிகளும் பாஜகவுடன் கூட்டணியில் உள்ள நிலையில் காங்கிரஸ் கட்சி சந்திரபாபு நாயுடு மற்றும் நிதிஷ்குமார் ஆகிய இருவருக்கும் அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

     

    இந்நிலையில் தெலுங்கு தேசமும் ஜே.டி.யுவும் இந்தியா கூட்டணிக்கு ஆதரவு அளிக்கும் பட்சத்தில் ஆட்சியமைப்பதில் இந்தியா கூட்டணியின் கை ஓங்கும். இந்தியா கூட்டணி உருவாக முக்கிய காரணமாக இருந்த நிதிஷ்குமார் கடைசி நேரத்தில் பாஜகவுக்குத் தாவியது குறிப்பிடத்தக்கது. 

    • மோடி மக்களவைத் தேர்தலில் வென்று மீண்டும் பிரதமர் ஆனதற்கு வாழ்த்து தெரிவித்தார் புதின்
    • ரஷியா - உக்ரைன் போரின் பினன்ணியில் புதினிடம் 'இது போருக்கான சகாப்தம் அல்ல' என்று பேசியுள்ளதாகவும் தெரிகிறது

    ரஷிய தலைநகர் மாஸ்கோவில் வைத்து இன்று [ஜூலை 9] நடக்கும் 22 வது இந்தியா - ரஷியா வருடாந்திர உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக மோடி நேற்று ரஷியா சென்றார்.  விமான நிலையத்தில் அவருக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. அதிபர் புதினை சந்தித்து மோடி, இருநாட்டு பொருளாதார, வணிக மற்றும் ராஜ்ய உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். 

     

    அந்தவகையில் நேற்று மதியம் அதிபர் புதினின் இல்லமான நோகோ ஓகார்யோவோவில் வைத்து இரு தலைவர்களும் சந்தித்து தனிப்பட்ட முறையில் பலவேறு விஷயங்களை பற்றி பேசியுள்ளனர்.மோடி மக்களவைத் தேர்தலில் வென்று மீண்டும் பிரதமர் ஆனதற்கு வாழ்த்து தெரிவித்த புதின், 'நீங்கள் உங்களின் மொத்த வாழ்க்கையையும் இந்திய மக்களுக்காக உழைப்பதற்கு அர்ப்பணித்துள்ளீர்கள், மக்களும் அதை அறிவர்' என்று மோடியிடம் தெரிவித்தார்.

     

    இதற்கு பதிலளித்த மோடி, 'நீங்கள் சொல்வது சரி, எனக்கு ஒரே ஒரு இலக்கு தான் உள்ளது - அது என் நாடும், இந்திய மக்களுமே ஆவர்' என்று தெரிவித்தார். இந்த சந்திப்பின்போது மோடி, ரஷியா - உக்ரைன் போரின் பினன்ணியில் புதினிடம் 'இது போருக்கான சகாப்தம் அல்ல' என்று பேசியுள்ளதாகவும் மாஸ்கோ வாட்டரங்கள் தெரிவிக்கின்றன. 

    முன்னதாக, உக்ரைனின் இறையாண்மை குறித்து புதினிடம் மோடி வலியுறுத்த வேண்டும் என்று அமெரிக்கா கோரிக்கை விடுத்திருந்தது கவனிக்கத்தக்கது. தொடர்ந்து ரஷிய ராணுவத்தில் உள்ள இந்திய வீரர்களை பணியில் இருந்து சீக்கிரம்  விடுவிக்க வேண்டும் மோடி புதினிடம் வலியுறுத்தியுள்ளார்.

     

    புதின் இல்லத்தில் நடந்த சந்திப்புக்கு பின்னர் கோல்ப் வண்டியில் மோடிக்கு அப்பகுதியை புதின் சுற்றிக்காட்டினார். அதன்பின்னர் நடந்த இரவு விருந்தில் இருவரும் சேர்ந்து உணவருந்தினர். இன்று நடக்க உள்ள உச்சிமாநாட்டில் இந்தியா-ரஷியா இடையிலான பொருளாதார உறவுகள் குறித்த பல முக்கிய முடிவுகள் எட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

    • 5 முறை பேச்சுவார்த்தை நடத்தியும் தீர்வு எட்டப்படவில்லை.
    • தொழிலாளர்கள் பிரதிநிதிகளுடன் தொழிலாளர் நல அதிகாரிகள் பேச்சுவார்த்தை.

    சென்னை:

    ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள சுங்குவார் சத்திரத்தில் 'சாம்சங் இந்தியா' நிறுவனம் இயங்கி வருகிறது. இங்கு பிரிட்ஜ், டி.வி., வாஷிங்மெஷின் உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருட்கள் தயாரிக்கின்றனர்.

    இங்கு பணிபுரியும் தொழிலாளர்கள் சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தை தொடங்க அனுமதி கேட்டு வருகின்றனர். அது மட்டுமின்றி சம்பள உயர்வு, சம்பள ஏற்றத்தாழ்வு களைதல் ஆகியவை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் 5 முறை பேச்சுவார்த்தை நடத்தியும் இன்னும் தீர்வு எட்டப்படவில்லை.


    இந்த நிலையில் 'சாம்சங் இந்தியா' தொழிலாளர்களின் போராட்டத்திற்கு தீர்வு காண முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டதை தொடர்ந்து தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா நேற்று தலைமைச் செயலகத்தில், ஆலையின் நிர்வாகத்தினரை அழைத்து பேசினார். அப்போது நிர்வாகத்தினர் என்னென்ன கோரிக்கையை ஏற்பார்கள்? என்பதை கேட்டறிந்தார்.

    இதன் அடுத்த கட்டமாக இன்று காலையில் தொழிலாளர்களின் பிரதிநிதிகளுடன் தொழிலாளர் நல அதிகாரிகளும் ஆலை நிர்வாகத்தினரும் இருங்காட்டு கோட்டையில் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.


    இதைத்தொடர்ந்து தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள் டி.ஆர்.பி.ராஜா, தா.மோ.அன்பரசன், சி.வி.கணேசன் ஆகியோர் முன்னிலையில் இரு தரப்பினரும் பேச்சுவார்த்தையில் பங்கேற்க உள்ளனர்.

    இந்த பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு ஏற்படுமா? என்பது மாலையில் தெரிய வரும்.

    • 2024-ம் ஆண்டு 350 மீனவர்கள், 49 மீன்பிடி படகுகள் இலங்கை அரசால் கைது செய்யப்பட்டுள்ளது.
    • இந்திய மீனவர்களை விடுவிக்க வேண்டும்.

    நாகர்கோவில்:

    தமிழக மீனவர்கள் இலங்கை அரசால் தாக்கப்படுவது மற்றும் கைது செய்வதை இந்தியா வந்துள்ள இலங்கை அதிபருடன் பேசி தீர்வு காணவேண்டும், இலங்கை சிறையிலுள்ள மீனவர்களை விடுவிக்க கோர வேண்டும்.

    இது குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க விஜய்வசந்த் எம்.பி. ஒத்திவைப்பு தீர்மானம் ஒன்றினை கொண்டு வந்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    கடலில் மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களை இலங்கை அரசு தொடர்ந்து தாக்கி வருகிறது. மேலும் அவர்களை சிறை பிடித்து அவர்களது உடைமைகளையும் கைப்பற்றி வருகிறது.

    2024-ம் ஆண்டு மட்டும் 350 மீனவர்கள் மற்றும் 49 மீன்பிடி படகுகள் இலங்கை அரசால் கைது செய்யப்பட்டுள்ளது. கடந்த 6 ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை மிக அதிகம். இலங்கை அரசின் அத்துமீறல் அதிகரித்து வருவதற்கு இதுவே சான்று.

    1974-ம் ஆண்டு இந்திய இலங்கை இடையே போடப்பட்ட ஒப்பந்தத்தை அடிப்படையாக கொண்டு இலங்கை அரசுடன் இந்திய அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். 2 அரசுகளும் இந்த பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் குழுக்கள் அமைத்து தீர்வு காண முன்வர வேண்டும்.

    இலங்கை அரசு உடனடியாக அங்கு கைது செய்யப்பட்டு வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களை விடுவிக்க வேண்டும். இதனை இலங்கை அதிபருக்கு இந்திய பிரதமர் மற்றும் இந்திய வெளியுறவு துறை அமைச்சர் எடுத்துரைக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • இந்த பேச்சுவார்த்தை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
    • இந்தியாவுக்கு சாதகமான நிலையை ஏற்படுத்தக்கூடும் என்று எதிர்பார்ப்பு.

    வாஷிங்டன்:

    பிரதமர் மோடி, பிரான்ஸ் மற்றும் அமெரிக்காவுக்கு அரசுமுறை பயணமாக கடந்த 10-ந்தேதி புறப்பட்டார்.

    முதலில் பிரான்சுக்கு சென்ற அவர் அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். பாரீசில் நடந்த செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாட்டுக்கு பிரான்ஸ் அதிபர் மெக்ரானுடன் மோடி தலைமை தாங்கி னார்.

    மாநாட்டுக்கு இடையே பல்வேறு நாட்டு தலை வர்களை சந்தித்து பேசி னார். 14-வது இந்தியா- பிரான்ஸ் தலைமை செயல் அதிகாரிகளின் மன்ற மாநாட்டில் பங்கேற்று பேசினார். பின்னர் பிரான்ஸ் அதிபர் மெக்ரானுடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார்.

    பின்னர் தனது 3 நாள் பிரான்ஸ் பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி அமெரிக்காவுக்கு புறப்பட்டார். அப்போது பிரான்ஸ் அதிபர் மெக்ரான் விமான நிலையத்துக்கு நேரில் சென்று மோடியை வழியனுப்பி வைத்தார்.

    அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்றதற்கு அவரை தொலைபேசியில் மோடி தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார். அப்போது மோடியை அமெரிக்காவுக்கு வருமாறு டிரம்ப் அழைப்பு விடுத்தார். இந்த அழைப்பை ஏற்று மோடி அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டார்.

    தனி விமானம் மூலம் அமெரிக்க தலைநகர் வாஷிங்டனுக்கு இந்திய நேரப்படி இன்று அதிகாலை மோடி சென்றடைந்தார். விமான நிலையத்தில் அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.

    பிரதமர் மோடியை அமெரிக்க உயர் அதிகாரிகள் வரவேற்றனர். பின்னர் வெள்ளை மாளிகைக்கு அருகில் உள்ள அதிபரின் விருந்தினர் மாளிகையான பிளேர் மாளிகைக்கு அழைத்து சென்றனர்.

    அப்போது அங்கு மோடியை வரவேற்க அமெரிக்க வாழ் இந்தியர்கள் ஏராளமானோர் திரண்டி ருந்தனர். அவர்கள் இந்திய-அமெரிக்க கொடிகளை அசைத்தபடி 'பாரத் மாதா கி ஜெய்', 'வந்தே மாதரம்' 'மோடி மோடி' என கோஷமிட்டு உற்சாகத்துடன் மோடியை வரவேற்றனர். அவர்களுடன் மோடி கைகுலுக்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

    இதுதொடர்பாக மோடி தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறும்போது, வாஷிங்டனுக்கு சென்றடைந்தேன். அதிபர் டிரம்பை சந்தித்து இந்தியா-அமெரிக்கா இடையே விரிவான உலகளாவிய கூட்டாண்மையை கட்டி எழுப்ப ஆவலுடன் காத்திருக்கிறேன்.

    நமது மக்களின் நலனுக்காகவும், நமது கிரகத்தின் சிறந்த எதிர்காலத்திற்காகவும் நமது நாடுகள் தொடர்ந்து நெருக்கமாகப் பணியாற்றும்.

    கடும் குளிர் இருந்த போதிலும், வாஷிங்டன் டி.சி.யில் உள்ள இந்திய புலம்பெயர்ந்தோர் எனக்கு மிகவும் சிறப்பான வரவேற்பை அளித்துள்ளனர். அவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்தார்.

    பின்னர் பிரதமர் மோடி, பிளேர் மாளிகையில் தங்க வைக்கப்பட்டார்.

    இன்று வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டிரம்பை மோடி சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்துகிறார். இந்த சந்திப்பு இந்திய நேரப்படி இன்று மாலை 4 மணிக்கு நடக்கிறது. இதில் முக்கிய விஷயங்கள் குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை நடத்துகிறார்கள்.

    அமெரிக்காவில் சட்ட விரோதமாக தங்கியுள்ள வெளிநாட்டினரை வெளி யேற்றும் நடவடிக்கையை டிரம்ப் எடுத்து வருகிறார். சமீபத்தில் 104 இந்தியர்கள், அமெரிக்க ராணுவ விமானத்தில் திருப்பி அனுப்பப்பட்டனர்.

    எனவே சட்டவிரோத குடியேற்றம் குறித்து விவா திக்க உள்ளனர். அதேபோல் எக்கு மற்றும் அலுமினிய இறக்குமதிகளுக்கு 25 சதவீத வரியை டிரம்ப் அறிவித்தார். அமெரிக்காவுக்கு இந்தியா அதிகளவில் எக்கு, அலுமினியம் ஏற்றுமதி செய்கிறது. இதையடுத்து அதன் மீதான வரி விதிப்பு குறித்தும் ஆலோசிக்கப்படும்.

    இந்தியா மீது வரி சலுகை அளிக்கவும் வலியுறுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இரு நாட்டு உறவை மேலும் வலுப்படுத்த இரு தலைவர்களும் ஆலோசனை நடத்த உள்ளனர். வர்த்தகம், முதலீடு, எரிசக்தி, பாதுகாப்பு, தொழில்நுட்பம் மற்றும் இந்தோ-பசிபிக், உக்ரைன்-ரஷியா போர், மேற்கு ஆசியா நிலைமை குறித்தும் விவாதிக்கிறார்கள்.

    மேலும் உலக பணக்காரரான எலான் மஸ்க்கை மோடி சந்திக்க உள்ளார். அதேபோல் பிரபல தொழில் அதிபர்களையும் சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


    பிரதமர் மோடி-அமெரிக்க அதிபர் டிரம்ப் இடையே நெருங்கிய நட்பு உள்ளது. பல சந்தர்ப்பங்களில் மோடியை டிரம்ப் வெகுவாக பாராட்டி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 2-வது முறையாக அதிபராக பதவியேற்ற டிரம்ப், பல நாடுகள் மீது வரிகளை விதித்து வருகிறார்.

    இந்த நிலையில் அவரை பிரதமர் மோடி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த சந்திப்பு இரு நாடுகள் இடையேயான உறவுகளை வலுப்படுத்துவதில் மேலும் ஒரு மைல்கல்லை அடையும் என்றும் இந்தியாவுக்கு சாதகமான நிலையை ஏற்படுத்தக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

    • மத்திய அமைச்சர்கள் சிவராஜ் சிங் சவுகான், பியூஷ் கோயல், பிரகலாத் ஜோஷி ஆகியோர் கலந்து கொண்டனர்.
    • பிப்ரவரி 24 கூட்டத்தொடரில் எங்கள் கோரிக்கைகளை ஆதரிக்கும் தீர்மானத்தை நிரைவேற்ற வேண்டும்.

    பஞ்சாப் மற்றும் அரியானா மாநிலங்களுக்கு இடையேயான ஷம்பு மற்றும் கனௌரி எல்லைகளில் விவசாயிகள் கடந்த பிப்ரவரி மாதம் முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை உள்ளிட்டவற்றை வலியுறுத்தும் அவர்களை தலைநகர் டெல்லிக்குள் நுழைய விடாமல் போலீசார் தடுத்து வருகின்றனர். 

    இந்நிலையில் பஞ்சாப்-அரியானா எல்லையில் போராடி வரும் விவசாயிகளுடன் மத்திய அமைச்சர்கள் நேற்று இரவு பேச்சுவார்த்தை நடத்தினர்.

    சண்டிகர் மகாத்மா காந்தி பொது நிர்வாக கட்டடத்தில் நடந்த இந்த பேச்சுவார்த்தையில் மத்திய அரசு சார்பில் மத்திய அமைச்சர்கள் சிவராஜ் சிங் சவுகான், பியூஷ் கோயல், பிரகலாத் ஜோஷி ஆகியோர்கலந்து கொண்டனர்.

    பஞ்சாப் அரசு சார்பில் மாநில அமைசர்கள் ஹர்பால் சிங் சீமா, குர்மீத் சிங் குத்தின் ஆகியோரும், போராடும் விவசாயிகள் சார்பில் ஜக்ஜித் சிங் தாலேவால், சர்வான் சிங் பாந்தர் உள்ளிட்ட பிரதிநிதிகளும் பங்கேற்றனர்.

     

    கடந்த 8 நாட்களில் நடக்கும் இரண்டாவது கூட்டம் இது. இந்த பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. இதோடு 6 பேச்சுவார்த்தைகள் இதுவரை தோல்வியில் முடிந்துள்ளன. இதனால் விவசாயிகள் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    பேச்சுவார்த்தைக்குப்பின் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய விவசாய துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், 'விவசாயிகளுடன் ஒரு சிறப்பான பேச்சுவார்த்தை நடந்தது. அடுத்த சுற்று பேச்சுவார்த்தை மார்ச் 19ஆம் தேதி சண்டிகரில் நடைபெறும்' என கூறினார்.

    இதுதொடர்பாக பேசிய விவசாய தலைவர் சர்வான் பாந்தர் "நாங்கள் குறைந்தபட்ச ஆதரவு விலையை சட்டப்பூர்வ உத்தரவாதமாகக் கோரினோம். அதற்கான செலவு குறித்த தரவுகளையும் வழங்கினோம். அதன் நன்மைகளை விளக்கினோம். அடைக்கப்பட்ட சாலைகளை மீண்டும் திறக்கவும் கேட்டோம்.

    பிப்ரவரி 24 அன்று சட்டமன்றக் கூட்டத்தொடரில் எங்கள் கோரிக்கைகளை ஆதரிக்கும் தீர்மானத்தை நிறைவேற்றுமாறு பஞ்சாப் அரசை நாங்கள் கேட்டுக் கொண்டுள்ளோம். மத்திய அரசு அறிமுகப்படுத்திய புதிய விவசாய கொள்கைகளை நிராகரிக்க வேண்டும் என்றும் பஞ்சாப் அரசை நாங்கள் கேட்டுக் கொண்டோம்" என்று கூறினார்.

    பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டப்பூர்வ உத்தரவாதம், விவசாயிகள் கடன் தள்ளுபடி, விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களுக்கான ஓய்வூதியம், மின்சாரக் கட்டண உயர்வு கூடாது, போலீஸ் வழக்குகளைத் திரும்பப் பெறுதல், 2021 லக்கிம்பூர் கேரி வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குதல் ஆகிய கோரிக்கைகளை விவசாய சங்க பிரதிநிதிகள் முன்வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

    பாகிஸ்தான் உடனான பேச்சுவார்த்தையை இந்தியா ரத்து செய்துள்ளதை விமர்சித்துள்ள அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான், “பெரிய பதவிகளில் சிறிய மனிதர்கள்” என பிரதமர் மோடியை மறைமுகமாக விமர்சித்துள்ளார். #IndPakTalks #PMModi #ImranKhan
    இஸ்லாமாபாத்:

    இந்தியா - பாகிஸ்தான் இடையே உள்ள பிரச்சனைகள் தொடர்பாக பேச்சுவார்த்தைக்கு தயாராக உள்ளதாக அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான், பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார். இதனை அடுத்து, அமெரிக்காவில் இரு நாட்டு வெளியுறவு மந்திரிகள் சந்தித்து பேச இந்தியா சம்மதித்தது.

    இதற்கிடையே, காஷ்மீரில் மூன்று போலீசார் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாத இயக்கத்தால் கடத்தி கொல்லப்பட்டனர். மேலும், சர்வதேச எல்லையில் பாதுகாப்பு படை வீரர் கொடூரமான முறையில் கொல்லப்பட்டுள்ளார். இந்த கொலை பாகிஸ்தான் ராணுவத்தால் நிகழ்த்தப்பட்டுள்ளதாக இந்தியா குற்றம் சாட்டியது.

    மேற்கண்ட இரு சம்பவத்தை அடுத்து, இந்தியா பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்த கூடாது என பல தரப்புகளில் இருந்து எதிர்ப்பு கிளம்பியது. இதனால், இந்திய அரசு பேச்சுவார்த்தையை ரத்து செய்தது. இது பாகிஸ்தானுக்கு கடும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

    இந்நிலையில், இந்தியாவின் நடவடிக்கை குறித்து கருத்து தெரிவித்துள்ள இம்ரான் கான், “இரு நாடுகளுக்கு இடையே அமைதி பேச்சுவார்த்தையை மீண்டும் முன்னெடுக்கும் எனது முயற்சிக்கு இந்தியா அளித்த அடாவடியான மற்றும் எதிர்மறை அணுகுமுறை ஏமாற்றம் அளிக்கிறது. இருப்பினும், பெரிய படத்தை பார்க்கும் பார்வையை பெறாத சிறிய மனிதர்கள், பெரிய அலுவலகத்தை ஆக்கிரமித்துள்ளதை எனது வாழ்க்கையில் பார்த்தே வந்துள்ளேன்” என ட்வீட் செய்துள்ளார்.



    இதில், “பெரிய அலுவலங்களை ஆக்கிரமித்து இருக்கும் சிறிய மனிதர்கள்” என்ற வார்த்தை பதம் மோடியை மறைமுகமாக தாக்குவதாக உள்ளது. 
    சீனாவில் இருந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு வரிவிதித்தால் வர்த்தக பலன்களை பெற முடியாது என அமெரிக்காவுக்கு, சீனா எச்சரிக்கை விடுத்து உள்ளது. #China #Warns
    பீஜிங்:

    உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடுகளான அமெரிக்காவும், சீனாவும் சமீப காலமாக வர்த்தக மோதலில் ஈடுபட்டு உள்ளன. இரு நாடுகளும் பரஸ்பரம் இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு 150 பில்லியன் டாலர் அளவுக்கு வரி விதிக்கப்போவதாக மிரட்டியதால் இந்த மோதல் உச்சக்கட்டத்தை அடைந்தது. இதனால் இருநாடுகளும் பரஸ்பர இறக்குமதியை குறைத்தன.இந்த வர்த்தக போரை முடிவுக்கு கொண்டு வர இரு நாடுகளும் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றன. இதில் கடைசியாக சீன வர்த்தகக்குழு ஒன்று கடந்த மாதம் வாஷிங்டன் பயணம் மேற்கொண்டு, டிரம்பின் பொருளாதார ஆலோசனைக்குழுவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது.

    இதில் உடன்பாடு எட்டப்பட்டதை தொடர்ந்து அடுத்தகட்ட பேச்சுவார்த்தைக்காக அமெரிக்க வர்த்தக மந்திரி வில்பர் ராஸ் நேற்று முன்தினம் பீஜிங் வந்தார். அவர் சீன துணை பிரதமர் லியு ஹியுடன் நேற்று வர்த்தக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். இதில் குறிப்பிடத்தக்க வகையிலான புதிய ஒப்பந்தம் எதுவும் கையெழுத்தானதா? என்பது குறித்த விவரம் வெளியிடப்படவில்லை.

    எனினும் அமெரிக்காவின் வரி விதிப்பு தொடர்ந்தால் அனைத்து ஒப்பந்தங்களும் செல்லுபடியாகாது என சீனா எச்சரிக்கை விடுத்து உள்ளது.

    இது குறித்து சீன அரசின் செய்தி நிறுவனம் கூறியிருப்பதாவது:-

    விவசாயம், எரிசக்தி, நேர்மறையான முடிவை எட்டுதல் மற்றும் உறுதியான வளர்ச்சி போன்ற துறைகள் தொடர்பாக வாஷிங்டனில் எட்டப்பட்ட உடன்பாட்டை செயல்படுத்துவது குறித்து இரு தரப்பும் நல்ல தொடர்பில் ஈடுபட்டு இருக்கின்றன. அமெரிக்கா உள்ளிட்ட அனைத்து நாடுகளில் இருந்தும் இறக்குமதி செய்வது என்ற சீனாவின் நடைமுறையில் மாற்றம் இல்லை.

    அமெரிக்கா மற்றும் சீனா தற்போது ஏற்படுத்தி இருக்கும் உடன்பாட்டை அடுத்தகட்டத்துக்கு எடுத்து செல்வது குறித்து இருதரப்பும் சந்தித்து பேச வேண்டும். மாறாக வர்த்தக போரில் ஈடுபடக்கூடாது.

    சீன பொருட்களுக்கு வரி விதிப்பு உள்ளிட்ட பொருளாதார தடைகளை அமெரிக்கா அறிமுகம் செய்தால், வர்த்தக பலன்கள் எதையும் பெற முடியாது. இது தொடர்பாக ஏற்படுத்தப்பட்டு இருக்கும் ஒப்பந்தங்கள் அனைத்தும் செயலற்றதாகி விடும்.

    இவ்வாறு அந்த செய்தி நிறுவனம் கூறியிருந்தது.

    முன்னதாக பீஜிங்கில் செய்தியாளர்களை சந்தித்த வில்பர் ராஸ் கூறுகையில், ‘எங்கள் சந்திப்புகள் இதுவரை நட்பு ரீதியாகவும், வெளிப்படையாகவும் அமைந்து இருக்கிறது. மேலும் குறிப்பிட்ட ஏற்றுமதி பொருட்கள் தொடர்பாக சில பயனுள்ள தலைப்புகளும் இதில் இடம்பெற்று இருந்தன’ என்று தெரிவித்தார்.  #China #Warns #Tamilnews
    ×